Search This Blog

Tuesday, November 5, 2013

Digestion in Human Beings


 Digestion is the process of changing food into a form that the body can absorb and use as energy or as the raw materials to repair and build new tissue. Digesting food is a two-part process that's half mechanical, half chemical.

  • Mechanical digestion begins in your mouth as your teeth tear and grind food into small bits and pieces you can swallow without choking. The muscular walls of your esophagus, stomach, and intestines continue mechanical digestion, pushing the food along, churning and breaking it into smaller particles.

  • Chemical digestion occurs at every point in the digestive system, beginning when you see or smell food. These sensory events set off nerve impulses from your eyes and nose that trigger the release of enzymes and other substances that will eventually break down food to release the nutrients inside. The body then burns these nutrients for energy or uses them to build new tissues and body parts.

How sight and smell relate to digestion

At first glance — or sniff — the digestive link between your eyes, nose, and stomach sounds a tad weird. But think about it: How many times has the sight or scent of something yummy like a simmering stew or baking bread set your tummy rumbling?
The sight of an appetizing dish or the aroma (actually scent molecules bouncing against the nasal tissues) sends signals to your brain: "Good stuff on the way." As a result, your brain — the quintessential message center — shoots out impulses that

  • Make your mouth water.

  • Make your stomach contract (hunger pangs).

  • Make intestinal glands start leaking digestive chemicals.
All that from a little look and sniff. Imagine what happens when you actually take a bite!

Tasting and chewing in the digestion process

You know that small bag of potato chips you have stashed way at the back of your desk drawer? Well, dig it out and take a chip.
As the chip hits your tongue, your mouth acts as though someone had thrown the "on" switch in a fun house.

  • Your teeth chew, breaking the chip into small manageable pieces.

  • Your salivary glands release a watery liquid (saliva) to compact the chip into a mushy bundle (a bolus in digestive-geek speak) that can slide easily down your throat on a stream of saliva.

  • Enzymes (which you can think of as digestive catalysts in this case) in the saliva begin to digest carbohydrates in the chip.

  • Your tongue lifts to push the whole ball of wax . . . no, bolus, back toward the pharynx, the opening from your mouth to your esophagus, and then through a muscular valve called the upper esophageal sphincter, which opens to allow the food through. In other words, you're about to swallow.

Swallowing food: The slide from esophagus to stomach

If you think about it, the human digestive system is a wonder. As food enters the esophagus, your salivary glands release a rush of saliva to help food slide more easily down the tube. Then your esophageal muscles swing into action.
Like the rest of your digestive tract, your esophagus is ringed with muscles that contract to produce wavelike motions — which you can refer to as peristalsis or (no surprise here) peristaltic contractions, if you're so inclined — pushing food down toward your stomach.

At the bottom of the esophagus — an area known as the gastroesophageal junction — a muscular valve called the lower esophageal sphincter (LES) opens to allow food through. Then the LES closes to prevent reflux, the flow of stomach contents back into the esophagus. A malfunctioning LES is public enemy No. 1 in the reflux world.

Digesting food in the stomach

Point to your stomach. Go ahead. Don't be shy. Odds are your finger is aimed somewhere around your belly button, an interesting site to be sure, but definitely not your stomach. Your stomach, a wide, pouchy part of the digestive tube, is located on the left side of your body above your waist and behind your ribs.
Like the walls of your esophagus, the walls of your stomach are strong and muscular. They contract with enough force to break food into ever smaller pieces as glands in the stomach walls release stomach juices — a highly technical term for a highly acidic blend of enzymes, hydrochloric acid (HCl), and mucus. The stomach juices begin the digestion of proteins and fats into their respective bodily building blocks — amino acids and fatty acids.
Churned by the stomach walls and degraded by the stomach juices, what started as food — apples, pears, potato chips, steak, cake, you name it — is now a thick, soupy mass called chyme (from chymos, the Greek word for juice). The stomach's wavelike contractions push this messy but still intact substance along to the small intestine where your body begins to pull out the nutrients it needs.

Pulling out nutrients in the small intestine

Here's an easy anatomy lesson to find your small intestine: Open your hand and put it flat slightly below your belly button, with your thumb pointing up and your pinky pointing down. Your hand is now covering most of the relatively small space into which your 20-foot-long small intestine is neatly coiled. Just like your esophagus and stomach, contracting muscles line your small intestines to push food along.
But your small intestine is nobody's copycat. This part of your digestive system has its own set of digestive juices including

  • Alkaline goop from the pancreas that powers special enzymes (called amylases) to digest carbs

  • Bile from the liver and gallbladder that acts as an emulsifier (a compound that enables fats to mix with water)

  • Pancreatic and intestinal enzymes that complete the separation of proteins into amino acids
More contractions shove the chyme along the intestines while specialized cells in the intestinal walls grab onto sugars, amino acids, fatty acids, vitamins, and minerals, which are then sent off into your body for energy or as building blocks for new tissue.
Then, after your small intestine has squeezed every last little bit of useful material (other than water) out of the food, the indigestible remainder (think dietary fiber) moves toward its inevitable end in your large intestine.

The end of the digestive line: Poo-poo

Your large intestine is also sometimes called the colon. Think of this area as a giant sponge and press whose only jobs are to absorb water from the mass you deliver to it and then squeeze the dry leftovers into compact bundles of waste — which you may know as feces and any 2-year-old as poo-poo (or poop, caca, whatever).
After resident colonies of friendly bacteria digest any amino acids remaining in the waste and excrete smelly nitrogen — in a process scientists call passing gas — muscular contractions in the rectum push the feces out of your body, and digestion is finally done.digestive system


The human digestive system is a complex series of organs and glands that processes food. In order to use the food we eat, our body has to break the food down into smaller molecules that it can process; it also has to excrete waste.
Most of the digestive organs (like the stomach and intestines) are tube-like and contain the food as it makes its way through the body. The digestive system is essentially a long, twisting tube that runs from the mouth to the anus, plus a few other organs (like the liver and pancreas) that produce or store digestive chemicals.
The Digestive Process: The start of the process - the mouth: The digestive process begins in the mouth. Food is partly broken down by the process of chewing and by the chemical action of salivary enzymes (these enzymes are produced by the salivary glands and break down starches into smaller molecules).
On the way to the stomach: the esophagus - After being chewed and swallowed, the food enters the esophagus. The esophagus is a long tube that runs from the mouth to the stomach. It uses rhythmic, wave-like muscle movements (called peristalsis) to force food from the throat into the stomach. This muscle movement gives us the ability to eat or drink even when we're upside-down.
In the stomach - The stomach is a large, sack-like organ that churns the food and bathes it in a very strong acid (gastric acid). Food in the stomach that is partly digested and mixed with stomach acids is called chyme.
In the small intestine - After being in the stomach, food enters the duodenum, the first part of the small intestine. It then enters the jejunum and then the ileum (the final part of the small intestine). In the small intestine, bile (produced in the liver and stored in the gall bladder), pancreatic enzymes, and other digestive enzymes produced by the inner wall of the small intestine help in the breakdown of food.
In the large intestine - After passing through the small intestine, food passes into the large intestine. In the large intestine, some of the water and electrolytes (chemicals like sodium) are removed from the food. Many microbes (bacteria like Bacteroides, Lactobacillus acidophilus, Escherichia coli, and Klebsiella) in the large intestine help in the digestion process. The first part of the large intestine is called the cecum (the appendix is connected to the cecum). Food then travels upward in the ascending colon. The food travels across the abdomen in the transverse colon, goes back down the other side of the body in the descending colon, and then through the sigmoid colon.
The end of the process - Solid waste is then stored in the rectum until it is excreted via the anus.
Digestive System Glossary: abdomen - the part of the body that contains the digestive organs. In human beings, this is between the diaphragm and the pelvis alimentary canal - the passage through which food passes, including the mouth, esophagus, stomach, intestines, and anus. anus - the opening at the end of the digestive system from which feces (waste) exits the body. appendix - a small sac located on the cecum. ascending colon - the part of the large intestine that run upwards; it is located after the cecum. bile - a digestive chemical that is produced in the liver, stored in the gall bladder, and secreted into the small intestine. cecum - the first part of the large intestine; the appendix is connected to the cecum. chyme - food in the stomach that is partly digested and mixed with stomach acids. Chyme goes on to the small intestine for further digestion. descending colon - the part of the large intestine that run downwards after the transverse colon and before the sigmoid colon. digestive system - (also called the gastrointestinal tract or GI tract) the system of the body that processes food and gets rid of waste. duodenum - the first part of the small intestine; it is C-shaped and runs from the stomach to the jejunum. epiglottis - the flap at the back of the tongue that keeps chewed food from going down the windpipe to the lungs. When you swallow, the epiglottis automatically closes. When you breathe, the epiglottis opens so that air can go in and out of the windpipe. esophagus - the long tube between the mouth and the stomach. It uses rhythmic muscle movements (called peristalsis) to force food from the throat into the stomach. gall bladder - a small, sac-like organ located by the duodenum. It stores and releases bile (a digestive chemical which is produced in the liver) into the small intestine. gastrointestinal tract - (also called the GI tract or digestive system) the system of the body that processes food and gets rid of waste. ileum - the last part of the small intestine before the large intestine begins. intestines - the part of the alimentary canal located between the stomach and the anus. jejunum - the long, coiled mid-section of the small intestine; it is between the duodenum and the ileum. liver - a large organ located above and in front of the stomach. It filters toxins from the blood, and makes bile (which breaks down fats) and some blood proteins. mouth - the first part of the digestive system, where food enters the body. Chewing and salivary enzymes in the mouth are the beginning of the digestive process (breaking down the food). pancreas - an enzyme-producing gland located below the stomach and above the intestines. Enzymes from the pancreas help in the digestion of carbohydrates, fats and proteins in the small intestine. peristalsis - rhythmic muscle movements that force food in the esophagus from the throat into the stomach. Peristalsis is involuntary - you cannot control it. It is also what allows you to eat and drink while upside-down. rectum - the lower part of the large intestine, where feces are stored before they are excreted. salivary glands - glands located in the mouth that produce saliva. Saliva contains enzymes that break down carbohydrates (starch) into smaller molecules. sigmoid colon - the part of the large intestine between the descending colon and the rectum. stomach - a sack-like, muscular organ that is attached to the esophagus. Both chemical and mechanical digestion takes place in the stomach. When food enters the stomach, it is churned in a bath of acids and enzymes. transverse colon - the part of the large intestine that runs horizontally across the abdomen.

முருகன் பக்தி பாடல்கள் - Murugan Devotional Songs


ஓட்டுநரின் சோர்வை அளந்து அறிவுறுத்தும் கருவி!



திருவள்ளூர்: ஓட்டுநரின் சோர்வை அளந்து, தேவைக்கேற்ப குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கும் கருவி ஒன்றை எஸ். ஏ பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்து உள்ளனர். தூக்கமின்றி தொடர்ந்து வண்டியோட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க உதவும் வகையில் இந்தக் கருவி தொடர்ந்து உணர்வலை(சென்சார்) மூலம் ஓட்டுநரின் அசதி, சோர்வு ஆகியவற்றை மதிப்பிட்டு எச்சரிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

எஸ். ஏ பொறியியல் கல்லூரி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த வீரராகவபுரத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி மாணவர்களான எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில் குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் தம் விரிவுரையாளர் ஹெச். அன்வர் பாஷாவின் வழிகாட்டுதலின்படி, இந்த, கண்ணிமை மாறுபாடுகளைக் கொண்டு ஓட்டுனரின் விழிப்புநிலையைக் கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி ஓட்டுநரின் கண்ணிமை மாறுபாடுகளைக் கணக்கில் கொண்டு அசதியை அளவிடுகிறது. மேலும், அந்நிலை குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது, வாகனத்திற்குரிய வரின் எண்ணுக்கு குறுஞ்செய்தி யொன்றையும், ஓட்டுநரின் அப்போதைய காணொளி ஒன்றையும் அனுப்பி வைக்கிறது. மேலும் ஜீபீஎஸ் எனப்படும் இடமறிதல் நுட்பம் மூலம் வாகனம் இருக்கும் இடத்தையும் காண்பித்துத் தருகிறது. பின்வருங்காலங்களில் வண்டியின் நிலை, வானிலை, ஓட்டுநரின் உடல்நிலை உள்ளிட்ட மற்றக் காரணிகளும் இதில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் இந்த வடிவமைப்பைக் கல்லூரித்தலைவர் டி. துரைசாமி, முதல்வர் சுயம்பழகனார் ஆகியோர் பாராட்டினர்

ஆதி சங்கரர்.


 அத்வைதம் காட்டித் தந்த ஆதி சங்கரர்.

அத்வைதத்தின் அடிப்படையில் ‘அறுவகைச் சமய நெறி’களை சங்கரர்
அறிமுகப் படுத்தினார்.
அவையே, ‘சைவம், வைணவம், சாக்தம்,
கொமாரம், காணாபத்யம், சொரம்’
எனப்படுகின்றன. முறையே சிவ
பெருமான், திருமால், பராசக்தி,
முருகக் கடவுள், விநாயகர்,
சூரியன்
ஆகியோரை முழு முதற்கடவுளராக
அறுவகைச் சமயப் பிரிவுகள்
வரையறுக்கின்றன.

அந்த வகையில் ‘ஷண்மதம்’ எனப்படும்
ஆறு வித வழிபாட்டு நெறிகள்
மிகவும் அழகானவை.
ஒவ்வொருவரின் ரசனையும்
ஒவ்வொரு வகைப்படும். அதனால், ‘இவர்
மட்டுமே உனக்குக் கடவுள்’
என்று எந்தவொரு இநதுவையும்
கட்டாயப்படுத்தாமல், ‘இந்த
அறுவரில் எவர் உன் மனதைக்
கவர்கின்றாரோ,
அவரையே முழு முதற் கடவுளாக நீ
போற்றலாம்’
என்று வழி காட்டுகிறது அத்வைதம்.
அது மட்டுமின்றி, ‘உன்னுடைய இஷ்ட
தெய்வமே மற்ற கடவுளராகவும்
வடிவம் தாங்கி நிற்கின்றது என்ற
உண்மையையும் இந்தச் சித்தாந்தம்
சொல்லித் தருகிறது.
இதனால் ஒரே மதத்தில்
இருந்து கொண்டு, அதே மதத்திலுள்ள
இன்னொரு கடவுளை இழித்துரைக்கும்
பாவத்தையும் தடுக்கிறது.
ஆறு விதமான தெய்வ வழிபாடுகளைக்
காட்டித் தந்த ஆதி சங்கரர், அந்தந்தத்
தெய்வங்களைப் போற்றுவதற்கான
துதிகளையும் தானே இயற்றித்
தந்தார்.
அவர் பாடாத
கடவுளரே இல்லை எனலாம்.
-Subha Saravanakumar.

ஐம்பெருங் காப்பியங்கள்



முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு

மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.

குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி. .குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல்.

வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.

சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு
 

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்,


ஆதாரம் - MAY I PLEASE YOUR HONOUR என்ற ஆங்கில புத்தகம்.

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினார். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தார். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:-

ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்தி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினார்.

நண்பர்களே உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறலாம், நான் மேற்கோள் காட்டிய அனைத்தும் MAY I PLEASE YOUR HONOUR என்ற ஆங்கில புத்தகத்தை ஆதராமாகக் கொண்டது.


நன்றி - முகப்புத்தகம்
.

10 Corporations Control Almost Everything You Buy


Ten mega corporations control the output of almost everything you buy; from household products to pet food to jeans.
According to this chart via Reddit, called "The Illusion of Choice," these corporations create a chain that begins at one of 10 super companies. You've heard of the biggest names, but it's amazing to see what these giants own or influence.
(Note: The chart shows a mix of networks. Parent companies may own, own shares of, or may simply partner with their branch networks. For example, Coca-Cola does not own Monster, but distributes the energy drink. Another note: We are not sure how up-to-date the chart is. For example, it has not been updated to reflect P&G's sale of Pringles to Kellogg's in February.)
Here are just a few examples: Yum Brands owns KFC and Taco Bell. The company was a spin-off of Pepsi. All Yum Brands restaurants sell only Pepsi products because of a lifetime deal with the soda-maker.
$84 billion-company Proctor & Gamble — the largest advertiser in the U.S. — is paired with a number of diverse brands that produce everything from medicine to toothpaste to high-end fashion. All tallied, P&G reportedly serves a whopping 4.8 billion people around the world through this network.
$200 billion-corporation Nestle — famous for chocolate, but which is the biggest food company in the world — owns nearly 8,000 different brands worldwide, and takes stake in or is partnered with a swath of others. Included in this network is shampoo company L'Oreal, baby food giant Gerber, clothing brand Diesel, and pet food makers Purina and Friskies.
Unilever, of soap fame, reportedly serves 2 billion people around the world, controlling a network that produces everything from Q-tips to Skippy peanut butter.
And it's not just the products you buy and consume, either. In recent decades, the very news and information that you get has bundled together: 90% of the media is now controlled by just six companies, down from 50 in 1983, according to a Frugal Dad infographic from last year.
thanks  http://www.policymic.com/

Monday, November 4, 2013

ஃப்ரன்ஸ் காஃப்கா (1883 - 1924)





இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய படைப்பாளி காஃப்கா. பகட்டுகளற்ற, ஆனால் புதிர்கள் நிறைந்த மொழி இவருடையது.

1883- ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி செக்கோஸ்லோவாகியா நாட்டின் தலைநகரான ப்ராகில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். யூதர், தாய்மொழி ஜெர்மன். அவருடைய மொழி செக் நாட்டவரிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தியது. அவரின் இனமும் மதமும் ஜெர்மானியர்களிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தின. 'தனிமை', அவருடைய
படைப்புலக ஆதாரங்களில் ஒன்று.

ரகசியம், பயம், குழப்பம், அதிகாரம், குற்றம், தோல்வி, தனிமை, காதல் என தன் வாழ்வில் அனுபவித்த பிரத்யேக நிலைகளினூடாகவே தம் படைப்புலகை உருவாக்குகிறார். அதன் மூலம் தம் கால மனித வாழ்வில், அதிகமும் உணரப்படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களைப் படைப்பில் உறைய வைக்கிறார். இந்த முகங்களில் தெரியும்
தன்னுடைய சாயல்களை, அவருடைய படைப்புலகோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாய் உணர்கிறான்.

1917-ஆம் ஆண்டு அவரை பீடித்த எலும்புருக்கி நோய் காரணமாக, 1924 - ஜூன் 3-இல் இறந்தார். அவருடைய வாழ்நாளில் சிறிய படைப்புகள் மட்டுமே வெளிவந்திருந்தன. முற்றுப் பெறாத மூன்று நாவல்களும் அவரின் மரணத்திற்குப் பின்னரே வெளிவந்தன.

'தீர்ப்பு' - காஃப்காவின் முழுமையான முதல் படைப்பு. இக்கதையை, 1912-ஆம் வருடம் செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிவரை ஒரே மூச்சி எழுதி முடித்தார். இது, அவருடைய படைப்புலகின் அடிப்படை அம்சங்களனைத்தும் ஒன்று திரண்டு அடர்த்தியாக உருக்கொண்ட கதை. மேலும் இக்கதையில் அவரின் படைப்புலகப் பிரச்சனைகளில் ஒன்றான "தந்தை - மகன் போராட்டம்' அதன் ஆழத்தைத் தொட்டிருக்கிறது.

காஃப்காவுக்கும் அவரின் தந்தைக்கும் இடையேயான நிஜ உலக உறவின் தன்மைகள் இப்புனைவில் இலக்கிய முகம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, காஃப்காவுக்கு மிகவும் பிடித்த கதை இது.

காஃப்காவின் மற்றொரு கதையான 'கிராம மருத்துவர்', நனவுலகும் கனவுலகும் முயங்கி முகிழ்த்த பிரத்யேகமான காஃப்கா உலகக் கதை. 1919-ஆண்டு எழுதப்பட்டது.

- சி.மோகன்

நூல்: கதையின் திசைகள் (10 உலகச் சிறுகதைகள்) - தமிழில் சி.மோகன்
நன்றி: தாவரம்

Sri Kantha sashdi Kavasam as E-book and Audio- MP3 ( download) - #கந்த #சஷ்டி கவசம் #மின்நூல் + ஒலிக் கோப்பு பதிவிறக்கம் செய்ய:-

 
Sri Kantha sashdi Kavasam as E-book and Audio- MP3 ( download) - #கந்த #சஷ்டி கவசம் #மின்நூல் + ஒலிக் கோப்பு பதிவிறக்கம் செய்ய:-
1) #ஒலிக்கோப்பு (MP3) :- http://veerakkeenikanthan.com/songs/murugan/1-Sree%20Skandha%20Sasti%20Kavacham.mp3

1) மின்நூல் (E-book - PDF):- https://docs.google.com/file/d/0B9gZkoT0tpwdN2U2ZTljNjMtMzEwZi00ZTVjLThlMjctZTEzNjdlYmNlNzY5/edit?usp=drive_web&urp=https%3A%2F%2Fwww.facebook.com%2F&pli=1&hl=en#

பழைய ஒரு சிறிய காதல் கதை - வைக்கம் முஹம்மது பஷீர்

வைக்கம் முஹம்மது பஷீர்
தமிழில் : சுரா
காதல்வயப்பட்டிருந்த கால  கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!
auguste-rodin-the-kiss-rodin-museum-paris
பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது… எல்லா வகைப்பட்ட பசியும்… எல்லா வகைப்பட்ட தாகமும்… அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்… சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி… கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன்… கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!
பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும்… நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.
நெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.
தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்… இரவும் பகலும் செயல்பாடுகள்…
என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை… நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.
பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.
இரண்டு வகைப்பட்ட உணர்ச் சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல.
இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண்… பெண்ணரசி!
முதல் பார்வை…
பிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை. அழகு தேவதையே, தேவீ, உன்னை நான் வழிபடுகி றேன்- மகாமாயே!
இப்படிப் பாடலைப் பாடிய வாறு நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வழிபாடுதான்… வழிபாடு!
இந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் என்னைப் பார்க்கவே இல்லை.
நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன். அவளைப் பார்த்துவிட்டேன்!
உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா? ஹோ! அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா? புண்ணிய பூமியின் பகுதி!
180px-VaikomMuhammadBasheer முழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து, கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை… சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.
என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும், அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.
அந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி… ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன- உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள்!
தெய்வமே!
அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்? என்னைப் பார்க்கவில்லையா? சொர்க்கத்தின் அழகியே, ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்?
நான் நின்று இருமினேன். ஒன்றல்ல, பத்தல்ல- இருமல்; இருமல்களின் சிறிய சிறிய மேக கர்ஜனைகள்!
அனைத்தும் வீணாகிவிட்டது. அந்த கனவுப் பேரழகி கேட்க வில்லை. ஏன் கேட்கவில்லை?
அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம்! அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது… அவள் அங்கு எங்காவது இருப்பாளா? திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும்! முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன்! ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன?
இப்படியே கவலை நிறைந்த ஒன்று, ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின், அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள்.
நான் வழிபடும் தெய்வம் ஒரு வேலைக்காரி. சர்வன்ட்!
அதனாலென்ன? காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன? காதல் நிரந்தரமானது. புனிதமானது.
ஆனால், அவள் என்னைப் பார்க்கவில்லை. அவளுடைய மன உலகத்தில் நான் தோன்றவே யில்லை.
ஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன். என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன. என்னுடைய உலகம் இருண்டது. இறந்துவிட்டால் என்ன?
ஆச்சரியம்! அவள் என்னைப் பார்த்துவிட்டாள்…! அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது. நான் பார்த்தேன். அவள் பார்த்தாள். நான் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா? எனினும், எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது! இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள். நான் சூனியமாக ஆனேன்.
கவலை நீங்கியது. செயல்களில் அதிகமான உற்சாகம் புரண்டு கொண்டிருந்தது. வாழ்க்கை அழகானதாகத் தோன்றியது.
தினமும் நாங்கள் பார்ப்போம். அவள் புன்னகைப்பாள். நானும் சற்று புன்னகைக்கக் கற்றுக் கொண்டேன்.
காதல் வயப்பட்ட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கவித் துவமான நாட்கள்.
அப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாலை நேரம் வந்தது. வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது. சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன். இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது. ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா?
நான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள். யாராவது வரும்போது “ஒன்றுக்கு’ போவதைப் போல நான் கீழே உட்காருவேன். அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது. திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால், அழகாக நிறைந்தது.
நான் முற்றிலும் சூடாகி விட்டேன். இதயம் தாங்க முடியாத அளவிற்கு… ஓ! வாயில் நீர் வற்றி விட்டது. அப்போது வசீகரமான, இனிய ஒரு குரல்!
“”ஏன் மழையில நனைஞ்சுகிட்டு இருக்கே?”
“”சும்மா…”
உணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன. எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது. தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது. இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது. காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன. அவள் கேட்டாள்:
“”போயாச்சா?”
“”இல்லை. நான் அங்கே வரட்டுமா?”
“”எதற்கு?”
“”சும்மா!”
“”வேண்டாம்!”
“”வேணும். நான் வருவேன்!”
“”நாய் இருக்கு!”
“”பரவாயில்லை!”
“”அவர்கள் இந்தப் பக்கம் சாப்பிடுவதற்கு இப்போ வருவார் கள்!”
“”பரவாயில்லை. நான் வருவேன்!”
“”அய்யோ… வேண்டாம்!”
நிறைந்து நின்றிருந்த வெள்ளை நிறம் போய்விட்டது. இடைவெளி முழுமையாகக் கறுத்தது.
நான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன். வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது- சுவரின் மேற் பகுதியிலும். நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன். கால்கள் எட்டவில்லை. கால்களை நீட்டி, கைப்பிடியை விட்டேன். ப்ளும்… முழங்கால் வரை சேறு. இடுப்பு வரை நீர். காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க, நான் முன்னோக்கி நகர்ந்தேன். வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன். வெளிச்சத்தில் நான் நன்கு தெரிய நின்றிருந்தேன். புரட்சிவாதி…! ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள்! முன் னோக்கி நகர வேண்டுமே! நான் முன்னோக்கி நகர்ந்தேன். நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன். நான் மேலே பார்த்தேன். அதிர்ச்சி யடைந்து விட்டேன்!
நீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது. என்ன செய்வது? எப்படி ஏறுவது? திரும்பிப் போவது என்றால்…? ச்சே… ஏறிவிட வேண்டும்! கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது.
அந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன். பிறகு நான் தெரிந்து கொண்டது- நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான்.
“ஹவ்’ என்று அவள் உண்டாக் கிய ஆச்சரியக் குரல் கேட்டது.
ஆனால், அதற்குப் பிறகும் தூரம் இருந்தது. கீழே குதிக்க முடியாது. தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது. அது சிறியதாக இருந்தது. பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன். மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன். அங்கு ஒரு தொழுவம் இருந்தது. அது வளைந்து போகும் போது “கிருகிரா’ என்று இலைகள் சத்தம் உண்டாக்கின. இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து… வைத்து… மிகவும் மெதுவாக வைத்து… அரைச்சுவரின் அருகில் சென்றேன்.
அவள் மெதுவாக அந்தப் பக்கம் வந்தாள்.
நான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன். மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை “பர்ர்ர்’ என்று கிழிந் தது. வெள்ளை நிற மார்பகங்கள்.
தொடர்ந்து என்னுடைய காதலின் கன்னத்தில் இரண்டு பலமான, மிகவும் பலமான அடிகள் கிடைத்தன!
எப்படி என்றால்… “”அய்யோ!… அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள். போ!” என்று கூறிய போது, மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது. என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது.
நான் சற்று விலகி நின்றேன். கொஞ்சம் சிறு சிறு குச்சிகள் ஒடிந்தன. ஒரு நாய் குரைத்தது.
“”போ…” என்று கூறி அவள் அங்கிருந்து சென்றாள்.
பிறகு நாய்கள் குரைக்கும் சத்தம்தான். இந்த அளவிற்கு அதிகமான நாய்களா?
நான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன். அங்கிருந்து பெரிய சுவரில். அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன். அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது.
வாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு. காற்று வீசும்போது இலை அகலும். நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன்!
அந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்?
என்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும்! அவர்களில் வயது குறைவான ஆள்- இளைஞன்- முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான். என்னைப் பிடிப்பதற்காக வருகிறான். பார்த்துவிடுவான். அவமானம்!
“நீ அங்கு இருட்டில் என்னடா செய்றே?’ என்று கேட்டவாறு என்னைப் பிடிப்பான்.
ஆட்கள் கூடுவார்கள். “ஓ… இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே! தலைவர்!’ ஆட்கள் கூடுவார்கள்.
தெய்வமே! என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு! இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன். சத்தியமா… அவன் என்னை பார்த்துவிடக்கூடாது!
நான் கத்தியைக் கையில் எடுத் தேன். அவன் கண்டுபிடித்து விட்டால்… கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும்! தெய்வமே! அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய்!’
கடவுளே!… என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள். தலைவரைத் தேடுகிறார்கள்! தெய்வமே! என்னை அவமானப் படுத்தி விடாதே.
அவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான்.
எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. எனக்குள் என்னவோ இல்லாமல் போயிருக்கிறது.
அதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை. வாய்க்காலுக்குள் குதித்த தையும், உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும், சேற்றில் புதைந்ததையும், சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்கிறேன்.
அவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள். காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை. தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு. கடவுளே!
நான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி, தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன்.
இறுதியில் அவர்கள் கூறினார் கள்:
“”இப்போதே நாம் இந்த இடத்தை மாற்ற வேண்டும்!”
மாறினோம். கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம். அந்த வகை யில்… அந்த வகையில்… அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற- காதல் நிறைந்த- தாகம் கொண்ட- மிக உயர்ந்த- கவலை நிறைந்த கால கட்டமே, உனக்கு வணக்கம்!
மங்களம்.

Australia Awards Fellowships


Australia Awards Fellowships aim to develop leadership, address priority regional development issues, and build partnerships and links between Australian organisations and their partner organisations in developing countries in the Asia-Pacific region, Latin America, the Caribbean, Africa and the Middle East.
Australia Awards Fellowships engage with a wide cross-section of the Australian community on aid delivery issues and priorities for development. Through Australia Awards Fellowships, Australian organisations have the opportunity to build and strengthen links with organisations in developing countries by offering professional development opportunities in Australia.
The goal of Australia Awards Fellowships is to develop appropriately trained current and aspiring leaders in priority areas, who, in the short to medium term, will be in a position to advance key regional policy objectives and increase institutional capacity of partner countries. Australia Awards Fellowships are designed to complement individual bilateral country programs by offering flexible learning opportunities that address current and emerging needs at the country, sub-regional and regional levels.
Australia Awards Fellowships do not lead to academic qualifications. Instead, they are designed to provide short term opportunities for study, research and professional attachment programs in Australia, delivered by Australian organisations, to nominated fellows from eligible countries.
Through Australia Awards Fellowships, Australian organisations can apply for funding to support a range of professional development activities that will build expertise and leadership capacity in eligible countries.
Applications are accepted from Australian organisations only; individuals are not eligible to apply.

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?



இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம். அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது. மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

* காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

* அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

* இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.

* நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

* இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்

. * இரவில் கார்போஹைட்ரேட் கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனல் அவை இரவில் ஜீரணமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம். வேறு ஏதாவது வழிகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Stress

Shirdi : Saibaba mandir Lakshmi poojan


அதிவேக மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி


நவம்பர் 4: அதிவேக மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம் இன்று அப்பாவைப் பார்த்து மேஜிக் ஆர்வம் இவருக்கு தொற்றிக்கொண்டது. ''அப்பா, எனக்கும் ஏதாச்சும் சொல்லித்தா!' என்றாள். அட்டைகளில் மேஜிக் சொல்லித் தந்தார் அப்பா. கொஞ்ச நேரம்தான், எல்லா அட்டைகளையும் மனப்பாடமாக ஒப்பித்தாள் தேவி. அப்போது அவள் வயது 3. 'இனி சர்க்கஸ் வேண்டாம்’ என முடிவுசெய்த அப்பா, மகளைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவளின் அதிவேகக் கணக்குப் போடும் ஆற்றலைக் காட்டினார். ''சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு செக் பண்ணிடலாம்'' எனப் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தன. வீட்டின் வறுமையைப் போக்க, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்து, பின் அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு. இப்போது தேவிக்கு வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா? 91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்கமூலத்தைக் கேட்டார்கள். கணினி 13,000 கட்டளைகளுக்குப் பிறகு, ஒரு நிமிடத்தில் பதிலைச் சொல்லத் தயாரானபோது, 546372891 என 10 நொடிகள் முன்னமே தேவி சொல்லி விட்டார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் நீண்ட கரவொலி எழுப்பினர். லண்டன் மாநகரில் 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொன்னார்கள். 28 நொடிகளில் விடையைச் சொல்லி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். அவர்தான் சகுந்தலா தேவி. தான் பள்ளிக்கல்வி பெறாவிட்டாலும் சுட்டிகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் பல நூல்களை எழுதினார். ''கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், விளையாட்டு என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித் தர வேண்டும். கணிதத்தைக் கதை போலச் சொல்லித் தர வேண்டும்'' என்ற சகுந்தலா தேவி, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார். உலகின் அதிவேக மனிதக் கணினியை அன்போடு நினைவுகூர்வோம். -பூ.கொ.சரவணன்

Wednesday, October 30, 2013

வெண்மையில் எத்தனை நிறங்கள் - கே.என்.சிவராமன்

தினகரன் தீபாவளி மலர் சிறுகதை - வெண்மையில் எத்தனை நிறங்கள் - கே.என்.சிவராமன்


செல்போன் அதிர்ந்ததுமே புரிந்தது. ராதாதான்.

‘‘சொல்லும்மா...’’

‘‘நீதான்பா சொல்லணும்...’’ குரல் ஒடுங்கியிருந்தது. எதிர்பார்த்ததுதான். தவிப்பை கட்டுப்படுத்த கீழ் உதட்டை கடித்துக் கொண்டிருப்பாள். ரத்தம் பூக்காமல் இருக்க வேண்டும். நிச்சயம் மொட்டை மாடியின் ஓரத்தில் கைப்பிடி சுவரை பிடித்தபடிதான் நின்று கொண்டிருப்பாள். தன் அறையிலிருந்து இப்படி பேச வாய்ப்பில்லை. துவளும் கால்களுக்கு பிடிப்புத் தர எந்தக் காலையாவது அழுத்தமாக ஊன்றியிருப்பாள். மறு கால் குழைந்து நெகிழ்ந்திருக்கும். சுருட்டை முடி பறக்க தென்னங்கீற்றை ஊடுருவும் அதிகாலை சூரியனை வெறித்துக் கொண்டிருப்பாள். செல்போனை ஏந்தியிருப்பது வலது கையா இடது கையா? அது ஊன்றி நிற்கும் காலை பொறுத்தது. ஆனால், கைப்பேசி இல்லாத கை நிச்சயம் இடுப்பை பிடித்துக் கொண்டிருக்கும்.

வலித்தது. தனக்குள் சுருங்கும் வழக்கம் அனுவுக்கு இல்லை. தப்பு. அனுராதாவை எந்தக் காரணம் கொண்டும் ‘அனு’ என சுருக்கக் கூடாது. குண்டு கண்களை அகலமாக விரித்து நொடியில் எரித்து விடுவாள். தாங்க முடியாது.

‘‘லைன்லதானப்பா இருக்க..?’’

‘பா?’ ஆமாம். ‘பா’ என்றுதான் அழைக்கிறாள். உடலும் மனமும் ஒருசேர அதிர்ந்தது. இன்னும் எத்தனை நேரம் தாக்குப் பிடிக்க முடியுமென்று தெரியவில்லை.

‘‘என்னிக்கி உன் அழைப்பை கட் பண்ணியிருக்கேன் சொல்லு..?’’

‘‘க்ருஷ் ப்ளீஸ்...’’

மவுனமாக இருந்தேன்.

‘‘என்ன முடிவுபா எடுத்திருக்க..?’’

‘‘...’’

‘‘உன்னதாம்பா மலைபோல நம்பியிருக்கேன். என் வாழ்க்கையே உன் முடிவுலதான் இருக்கு...’’

சுலபமாக பாரத்தை இறக்கிவிட்டாள். சுமக்கத்தான் முடியவில்லை.

‘‘அனு... அனு...’’ யாரோ அழைக்கும் குரல் மங்கலாக கேட்டது. ‘‘க்ருஷ்... அம்மா வர்றாங்க.  அப்புறம் கூப்பிடறேன்...’’

ஒலியும், ஒளியும் மெல்ல மெல்ல அணையும் தருணத்தை செல்ஃபோனில் தரிசித்துக் கொண்டிருந்தேன். இதே போன்ற மொபைல்தான் அவளிடமும் இருக்கிறது. ராயப்பேட்டை அஜந்தா ஹோட்டலுக்கு எதிரிலிருந்த கடையில் ஒரே நேரத்தில் இருவருமாக வாங்கியது. கிரெடிட் கார்டில் தேய்த்தது நான்தான்.

‘‘எதுக்காக எனக்கு இப்ப போன் வாங்கித் தர்ற?’’ கடை வாசலில் புருவத்தை உயர்த்தியபடி கேட்ட ராதாவின் உருவம் இப்போதும் நினைவில் இருக்கிறது.

‘‘நல்ல ஆஃபர்... சான்ஸை மிஸ் பண்ண விரும்பலை...’’

‘‘எந்த சான்ஸ்?’’ நீல ஜீன்சுக்கு மேல் அணிந்திருந்த ப்ரவுன் ஜிப்பாவின் கைகளை மடித்தபடியே கேட்டாள்.

கேள்வி புரிந்தது. ‘‘புரியல...’’ என்றேன்.

‘‘என்னை இம்ப்ரஸ் பண்றியா?’’

‘‘அனு...’’

‘‘கால் மீ அனுராதா ஆர் ராதா...’’

‘‘ஓ.கே. தப்பா பேசாத ராதா...’’

‘‘என்னது... நான் கேட்டது தப்பா?’’ தலையை சிலிப்பியபடி சிரித்தாள். கண்களில் சீற்றம் தெறித்தது. காதுடன் ஒட்டியிருந்த வெள்ளை நிற ஸ்டட் அதிர்ந்தது. ‘‘அப்ப சரியான விடையை நீ சொல்லேன்...’’

‘‘உன்னோட போன் ரொம்ப பழசா இருக்கு...’’

‘‘ம்ஹும்...’’

‘‘டிஸ்ப்ளே சரியா இல்ல...’’

‘‘ம்ஹும்...’’

‘‘அதனால வாங்கிக் கொடுத்தேன்...’’

‘‘நான் கேட்டனா?’’

‘‘என்ன இப்படி கேள்வி மேல கேள்வி கேட்கற? ஒரு ஃபிரெண்டுக்கு வாங்கிக் கொடுத்தேன். தட்ஸ் ஆல்...’’

‘‘ஃபிரெண்ட்?’’ ஜிப்பாவின் காலரை கடித்தபடி தன்னை அடக்கினாள். ‘‘அப்ப மதனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே? அவன் போன் இதைவிட கண்றாவியா இருக்கு...’’ என்று தன் பழைய மொபைலை என் முகத்துக்கு நேராக தூக்கிப் பிடித்தாள்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நின்று கவனிக்க ஆரம்பித்தார்கள். திருவான்மியூர் செல்லும் பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள்.

‘‘எல்லாரும் பார்க்கிறாங்க ராதா...’’

‘‘இதை நான் யூஸ் பண்ணினா ஆபீஸே என்னை கேவலமா பார்க்கும். பரவாயில்லையா?’’

ஒரே அலுவலகம். பக்கத்து பக்கத்து இருக்கை. ஒரே மாதிரியான செல்போனை அதுவும் ஒரே நேரத்தில் பயன்படுத்த ஆரம்பித்தால் பேச்சு எழும் என்று பயப்படுகிறாளா?

‘‘ரெண்டு பேரும் தனித்தனியா வாங்கினதா சொல்லலாம்...’’

‘‘அது மத்தவங்களுக்கான பதில். நான் கேட்டது அதில்லை...’’ பற்களை கடித்தாள். விட்டால் சட்டையை பிடித்து உலுக்குவாள் போலிருந்தது.

‘‘இப்ப உனக்கு என்ன வேணும்?’’

‘‘எதுக்காக எனக்கு மொபைல் வாங்கிக் கொடுத்த?’’

‘‘தப்புத்தான். வேணும்னா பணத்தை கொடுத்துடு...’’

‘‘என்கிட்ட அவ்வளவு பணமில்லனு உனக்குத் தெரியும்...’’

‘‘அதனாலத்தான் வாங்கிக் கொடுத்தேன்...’’ சட்டென்று வெளிப்பட்ட பதிலை சிரமப்பட்டு மென்று விழுங்கினேன்.

‘‘ஏன் பேசாம இருக்க?’’

‘‘லுக் ராதா... என் மனசுல தப்பான எந்த எண்ணமும் இல்ல. விருப்பம் இருந்தா யூஸ் பண்ணு...’’

‘‘இல்லைனா?’’

‘‘தூக்கிப் போடு... அதான் ஏற்கனவே இப்படி செய்திருக்கோமே...’’ என்று முகத்தை திருப்பிக் கொண்டேன்.

‘‘சரியான லூசு... வண்டியை எடு...’’ என்று அதட்டினாள்.

இருவரின் கண் முன்னாலும் ஒரே காட்சிதான் விரிந்தது. அது கடந்த தீபாவளி அன்று நடந்தது. நோன்பு, சனி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை வந்ததால் தீபாவளிக்கு முந்தைய நாள் இடுப்பு ஒடியும் அளவுக்கு வேலை. ஒருவழியாக அனைத்தையும் முடித்தபோது மணி இரவு பத்து.

இருவருக்குமே அகோர பசி. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை ஒட்டியிருந்த சரவணபவனில் டிபன் சாப்பிட்டுவிட்டு புறப்பட்ட போது ஸ்வீட் வாங்கலாம் என்று தோன்றியது. ராதாவுக்கு பிடித்த மைசூர்பாகு. விரும்பி சாப்பிடுவாள். அவளுக்கு மட்டும் பேக் செய்யச் சொன்னால் புரட்டி எடுத்து விடுவாள். எனவே இருவர் வீட்டுக்கும் தனித்தனியாக வாங்கினேன். நல்லவேளை குதர்க்கமாக எதுவும் சொல்லவில்லை.

பைக்கை ஸ்டார்ட் செய்தேன். ஒரு பக்கமாக ஏறி அமர்ந்தாள். இரு பக்கம் கால் போட்டு அமர்வது அப்போது அவள் அகராதியிலேயே கிடையாது. கே.கே.நகரை நோக்கி வண்டியை திருப்பினேன்.

‘‘எங்க போற?’’

‘‘உன்னை டிராப் பண்ண...’’

‘‘வேண்டாம்... மடிப்பாக்கத்துல என்னை இறக்கிடு...’’

‘‘என்னது..?’’

‘‘ச்சூ. சொன்னதை செய். கேசவ் எனக்காக காத்திருக்கான்...’’

‘‘இந்த நேரத்துலயா?’’

‘‘ஏன் பத்தரைதானே ஆகுது? அவன் கூட பேசிட்டு கிளம்பறேன். அவன் என்னை டிராப் பண்ணிடுவான்...’’

‘‘வீட்ல தேட மாட்டாங்களா?’’

‘‘நைட் ஷிப்ட் தொடருதுனு சொல்லிட்டேன்...’’

காரணமில்லாமல் கோபம் வந்தது. அதை பைக்கில் காட்டினேன்.

‘‘பார்த்து... பார்த்து... கேசவ் என்னை பார்க்கிறப்ப நான் முழுசா இருக்கணும்...’’ சிரித்தபடி சொன்னாள். அவளது சுருட்டை முடி காற்றில் பறந்து முகத்தை மூடியது. ஒதுக்கினேன். போக்குவரத்தை கடந்து வேளச்சேரியை அடைந்தபோது வண்டியை நிறுத்தச் சொன்னாள்.

‘‘இதுக்கு மேல ஆட்டோல போயிக்கறேன்...’’

சலனமில்லாமல் அவளைப் பார்த்தேன். பிடிவாதமாக பார்வையை எதிர் கொண்டாள். பெருமூச்சுடன் வண்டியின் பாக்சை திறந்து ஸ்வீட் பாக்சை எடுத்தேன்.

‘‘இப்ப வேண்டாம்...’’

‘‘பின்ன?’’

‘‘நாளைக்கு வீட்ல வந்து கொடு...’’

‘‘அம்மாவோட வெளில போறேன்...’’

‘‘எங்க பொண்ணு பார்க்கவா?’’

சிரிப்பு வந்தது. ‘‘இல்ல. காஞ்சிபுரம் கோயிலுக்கு...’’

‘‘சரி, அப்ப நாளை மறுநாள் வீட்டுக்கு வா...’’

‘‘ஏன் இப்ப இதை வாங்கிட்டு போனா என்ன?’’

‘‘கேசவ்க்கு பிடிக்காது...’’

பற்றிக் கொண்டு வந்தது. ‘‘அதனாலதான் இங்கயே இறங்கினியா?’’

‘‘உனக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை...’’

‘‘ரைட். இப்ப இந்த ஸ்வீட்டை வாங்கிப்பியா மாட்டியா?’’

‘‘பைத்தியமா உனக்கு? அதான் நாளை மறுநாள் கொடுனு சொல்றேன்ல...’’

கோபம் வந்தது. அவளுக்கும், எனக்குமாக வாங்கிய இரு ஸ்வீட் பாக்சையும் வீசி எறிந்தேன். ‘தொப்’ என்று அவைகள் சாக்கடையில் போய் விழுந்தன.

‘‘க்ருஷ்...’’ அவள் அழைக்க அழைக்க திரும்பிப் பார்க்காமல் பைக்கில் பறந்தேன்.

அந்த நினைவுகளை எப்போது அசை போட்டாலும் மனம் நடுங்கும். அன்றும் அதிர்ந்தது.

‘‘இத்துப் போன ரீலுல ப்ளாஷ்பேக் ஓட்டி முட்டிசுட்டியா?’’ செல்போன் பாக்சை தன் ஹேண்ட்பேக்கில் வைத்தபடியே கேட்டாள். கண்ணோரம் அவள் சிரிப்பது அப்பட்டமாக தெரிந்தது. ‘‘அதே விஷூவலை நானும் பார்த்து முடிச்சிட்டேன். இப்ப திருப்திதானே?’’

‘‘ராட்சஷி... இதுக்கு நீ பேசாம நான் கொடுத்ததும் செல்போனை வாங்கியிருக்கலாமே...’’

‘‘எதுக்கு? அநாவசியமான கற்பனைக்கு வழி வகுக்கவா?’’

‘‘நாக்குக்கு பதிலா சாட்டைத்தான் இருக்கு... எப்படி விளாசற..?’’

‘‘சந்தோஷம். காயத்துக்கு மருந்து போட கூப்பிடாத...’’ என்றபடி ஏறி அமர்ந்தாள். ம்ஹும். ஒரு பக்கமாக அல்ல. இரு பக்கமும் கால்களை போட்டு என் முதுகைப் பிடித்தபடி அமர்ந்தாள்.

இப்படி அவள் அமரக் காரணம் ரேகாதான். அனுரேகா. ராதாவின் அக்கா. இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். ஹோம் எக்ஸிபீஷன் நடப்பதாக அறிந்ததை அடுத்து ஒருமுறை நந்தம்பாக்கம் டிரேட் சென்டருக்கு சென்றிருந்தோம். சொந்த வீடு வாங்கும் கனவு பொங்கி வழிந்த நேரம் அது. கேசவனின் பைக்கில் ராதா அமர, ரேகா என் வண்டியில் ஏறினாள். சொல்லப் போனால் ரேகா முதன் முதலில் என் வண்டியில் ஏறியது அப்போதுதான். ஒரு பக்கமாக அமர்வாள் என்று எதிர்பார்க்க இரண்டு பக்கமும் கால்களை போட்டு அமர்ந்தாள்.

என்னை விட ராதாவுக்குத்தான் இதில் வியப்பு அதிகம். ‘‘ரேகா அப்படி உட்காருவான்னு நினைச்சுக் கூட பார்க்கல... ஆனா, சந்தோஷமா இருக்கு...’’ என்றபடி மறுநாள் முதல் ராதாவும் என் வண்டியில் அமரும்போது இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர ஆரம்பித்தாள்.

சொந்த வீடு வாங்கும் கனவு கடைசியில் எனக்கு குரோம்பேட்டையில்தான் நிறைவேறியது. கேசவன், மடிப்பாக்கத்தில் வீடு வாங்கினான். ‘‘அதான் நீயும் கேசவனும் வீடு வாங்கிட்டீங்கல... அதுபோதும்...’’ என ராதா கண்ணடித்தாள்.

இந்த வாக்கியத்தை இடம் சுட்டி எப்படி பொருள் கொள்வது என்று தெரியாமல் எப்போதும்போல் அன்றும் விழித்தேன். சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் முடியாது. வார்த்தைகளால் சுளுக்கெடுத்து விடுவாள்.

அலுவலகத்துக்கு வந்து தன் நாற்காலியில் அமர்ந்ததும் என்னைப் போலவே பழைய செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து புதிய போனில் செருகினாள். சார்ஜ் ஏற்றினாள். அலுவலகத்தில் இருந்தவர்கள் எங்கள் இருவரின் கைகளிலும் இருந்த கைப்பேசியை மாறி மாறி பார்த்தார்கள். புருவத்தை உயர்த்தினார்கள். நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

இன்டர்கேம் ஒலித்தது. ராதாதான். ‘‘இப்ப சந்தோஷமா? இதுக்குத்தான ஆசைப்பட்ட..? முட்டாள்...’’ என்று குதறியபோதும் புதிய செல்போனைத்தான் அதன் பிறகு பயன்படுத்தினாள்.

கேசவன் முன்னால் என்ன செய்வாள் என்று ஏனோ மனம் பரபரத்தது. அதற்கான விடையும் மறுநாளே கிடைத்தது.

பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் கேசவன் பணிபுரிகிறான். பொது நண்பர்கள் மூலமாக பொதுவாக ராதாவுக்கு பழக்கமாகி அவள் மூலமாக எனக்கு அறிமுகமானவன். தன் அக்கா பையனின் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்திருந்தான். என்னையல்ல. ராதாவை. ஆனால், எனக்கும் அழைப்பு இருப்பதாகச் சொல்லி வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்றாள். இருவரின் கைகளிலும் ஒரே மாதிரியாக இருந்த போனை பார்த்த கேசவனின் கண்கள் சுருங்கின.

‘‘கேசவ்கிட்ட என்ன சொன்னே?’’ திரும்பும்போது கேட்டேன்.

‘‘என்ன விஷயமா?’’

‘‘செல்போன் விஷயமா...’’

‘‘அது கேசவுக்கு நான் சொன்ன பதில். அதை தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போறே?’’ குண்டு கண்களை இன்னும் குண்டாக விரித்தாள்.

இந்த குண்டு கண்கள்தான் என்னை ஈர்த்ததா அல்லது எந்த கண்டிஷனர் ஷாம்பூவுக்கும் அடங்காமல் புஸ் என்று எந்நேரமும் பறந்துக் கொண்டிருக்கும் சுருட்டை முடியா? தெரியவில்லை. ஆனால், ஐந்தரை அடி உயரத்தில் ஜீன்ஸ் அணிந்தால் சணல் கயிற்றால் இறுக்கிக் கட்டிய மூட்டைப் போன்ற உடல்வாகும், சுடிதார் அணிந்தால் சற்றே தளர்வாக தெரியக் கூடிய தோற்றமுமாக முதல் பார்வையிலேயே ராதா முழுவதுமாக வசீகரித்தது உண்மை.

டிரெய்னிங் முடித்திருந்த அவளை எனது டீமில்தான் இணைத்தார்கள்.
‘‘உங்க டீம் லீடர்... கிருஷ்ணன்...’’ என்று எச்.ஆர்., அறிமுகப்படுத்தியபோது தயக்கமின்றி ‘‘ஹலோ க்ருஷ்...’’ என்றாள். கிட்டத்தட்ட பன்னிரெண்டு வயது மூத்தவன். ‘‘சார்...’’ என்ற அழைப்பைத்தான் எதிர்பார்த்தேன். ஒருவேளை முதல் சந்திப்பிலேயே பெயர் சொல்லி கூப்பிட்டது கூட சிநேகத்தை வளர்த்திருக்கலாம். காரணம் தெரியாதபோதும் நட்பு வளர்ந்தது உண்மை. பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் பிதுங்கி வருபவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

‘‘டூ வீலர் வாங்கிக்கலாமே?’’

‘‘இப்போதைக்கு சாத்தியமில்ல...’’ என்றவளை அதன் பிறகு துருவவில்லை. வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஜீவன். அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை. அக்கா டிகிரி முடித்துவிட்டு வீட்டை பார்த்துக் கொள்கிறாள். தம்பி அப்போதுதான் ப்ளஸ் டூ. சம்பளமும் அவ்வளவு ஒன்றும் அதிகமில்லை.

எனவே இயல்பாகவே ராதாவுக்கு டிரைவர் ஆனேன். அலுவலகத்தில் மற்ற ஆண்களின் பைக்கில் அவள் ஏறி பார்த்ததில்லை. நான் அல்லது கேசவன். இருவரைத் தவிர வேறு சாரதி அவளுக்கில்லை. எங்கு போவதென்றாலும் பெரும்பாலும் என்னைத்தான் அழைப்பாள்.

அப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை செல்லில் கூப்பிட்டாள். பயிற்சிக் காலத்தில் அவளுக்கு பழக்கமான இஸ்மாயிலுக்கு குழந்தை பிறந்திருந்தது.

‘‘எண்ணூர் போகணும்...’’

‘‘கீழ இறங்கி வா...’’

‘‘வாட்?’’

‘‘உன் வீட்டு வாசல்லதான் இருக்கேன்...’’

கரும்பச்சை நிற நைட்டியுடன் எட்டிப் பார்த்தவள் தன்னையும் அறியாமல் ‘‘அடப்பாவி...’’ என்றாள்.

‘‘நேத்து இஸ்மாயில் உனக்கு தகவல் சொன்னப்பவே நீ கூப்பிடுவேன்னு எதிர்பார்த்தேன்...’’

‘‘ஒட்டு கேட்டியா?’’

‘‘இல்ல. நீ பேசினது காதுல விழுந்தது...’’

‘‘பத்தே நிமிஷம்...’’

சொன்னபடி அடுத்த அறுநூறாவது நொடியில் வந்தாள். உச்சி வெயிலில் கே.கே.நகரில் இருந்து எண்ணூர் செல்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. மருத்துவமனையில் இஸ்மாயிலின் குழந்தையை தூக்கவே ராதா அஞ்சினாள். ‘‘ஏம்மா, நாளைக்கே உனக்கு குழந்தை பிறந்தா என்ன செய்வ?’’ என்று நர்ஸ் கிண்டலடித்தபோது ராதாவின் முகம் சிவந்தது. உதடுகள் அதிர சிரித்து சமாளித்தவள், ‘‘பாரு கிருஷ் இந்த நர்ஸ் சொல்றதை...’’ என்று காதில் முணுமுணுத்தாள்.

குப்பென்று வியர்த்தது. இருப்புக் கொள்ளாமல் நாற்காலியில் அசைந்தேன். தயக்கத்துடன் குழந்தையின் அருகில் சென்ற ராதா, முதலில் அதன் சருமத்தை தொட்டுப் பார்த்தாள். எப்படி தூக்க வேண்டும் என்று இஸ்மாயிலின் அப்பா கற்றுத் தர அதை அப்படியே கடைப்பிடித்தாள். அதன் பிறகு கிளம்பும் வரை குழந்தையை தன் மடியை விட்டு ராதா இறக்கவேயில்லை.மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது அவள் செல் ஒலித்தது. இனம் புரியாத உணர்வு மனதை ஆக்கிரமிக்க வண்டியை ஸ்டார்ட் செய்தேன். இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தவள், என் காதுக்கருகில் குனிந்தாள்.

‘‘இப்படிக் கூட அப்பா இருப்பாங்களா?’’

அமைதியாக இருந்தேன்.

‘‘அன்பான அப்பா கிடைச்சவங்க பாக்கியசாலிங்க இல்லையா?’’

நதியின் ஆழம் முகத்தில் அறைந்தது.

‘‘பீச் போயிட்டு போகலாமா?’’

வண்டியை பேலன்ஸ் செய்தேன். இல்லாவிட்டால் இருவருமே விழுந்திருப்போம்.

‘‘மெரீனா வேண்டாம். எலியட்ஸ் போகலாம்...’’ என்றபடி தன் முடியை கொத்தாகப் பிடித்து ரப்பர் பேண்ட்டை மாட்டினாள்.

நம்ப முடியவில்லை. சென்னை முழுக்க என்னுடன் நகர்வலம் வருபவள், ஒருபோதும் கடற்கரைக்கு வந்ததில்லை. சீக்கிரமே வேலை முடிந்த ஒருநாள் ‘‘பீச்’’ போகலாமா என்று கேட்டதற்கு, ‘‘எதுக்கு? இருட்டுல தடவ திட்டம் போட்டிருக்கியா?’’ என்று கொதிக்கும் தணலை தலையில் கவிழ்த்திருக்கிறாள்.

பெசன்ட்நகர் பீச்சை அடைந்தபோது மாலை சூரியன் குளிர்ச்சியை தூவிக் கொண்டிருந்தான்.
வண்டியை ஸ்டாண்ட் போட்டேன்.

‘‘க்ருஷ்...’’ சீட்டை நோண்டியபடியே பார்த்தாள்.

‘‘சொல்லு...’’

‘‘நீ கிளம்பிடு...’’ என்றபடி பார்வையை திருப்பினாள். பெரிதாக எழுந்த அலை ஆர்ப்பாட்டத்துடன் கரையை தொட்டது.

‘‘கேசவ் வர்றான்... அவன் என்னை டிராப் பண்ணிடுவான்...’’ பதிலை எதிர்பார்க்காமல் மணலில் நடக்க ஆரம்பித்தாள்.

மறுநாள் அலுவலகத்துக்கு செல்லவில்லை. ‘டிரைவருக்காக காத்திருக்க வேண்டாம்’ என ராதாவுக்கு மெசேஜ் அனுப்பினேன். மதியம் போல் வீட்டு காலிங்பெல் ஒலித்தது. ராதாதான்.

‘‘அம்மா இல்ல?’’

‘‘ஊருக்கு போயிருக்காங்க...’’

ஹால் சுவரில் மாலையுடன் காட்சித் தந்த அப்பாவின் புகைப்படத்தை கொஞ்ச நேரம் பார்த்தாள்.

‘‘சாப்பாடு?’’

‘‘சமைச்சிருக்கேன்...’’

நேராக சமையல் அறைக்கு சென்று மூடியைத் திறந்து பார்த்தாள்.

‘‘பட்டினி கிடப்பேன்னு நினைச்சியா?’’ அவளைப் பார்த்தபடி கேட்டேன்.

‘‘உன் வயிறு. உன் பசி. எப்படியிருந்தா எனக்கென்ன?’’ வழக்கம்போல் புருவம் உயர வார்த்தைகளை விட்டவள், அங்கிருந்த தட்டை எடுத்தாள்.

‘‘உன்னோட தட்டா?’’ பதிலை எதிர்பார்க்காமல் அதில் சோற்றை போட்டாள். சாம்பாரை ஊற்றினாள். ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தாள்.

‘‘ரேகா போலவே நல்லா சமைக்கிற...’’ சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டை கழுவினாள். ஃபிரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தாள்.

‘‘எதுக்காக இன்னிக்கி லீவ்?’’

பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன். அழுத்தக்காரி. பார்வையை விலக்காமல் எதிர்கொண்டாள். கடைசியில் நான்தான் கண்களை விலக்கும்படி ஆயிற்று.

‘‘நைட்டெல்லாம் தூங்கல.... கண்  எரியுது. கொஞ்சம் நேரம் படுக்கறேன்...’’ என்றபடி பெட்ரூம் சென்றாள்.

அறைய வேண்டும் போல் தோன்றியது. ஒன்று, இரண்டு, மூன்று... என நூறு வரை எண்ணினேன். சோபாவை விட்டு எழுந்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன். முடியவில்லை. சட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்தேன். ஏசியின் உறுமல் சீராக ஒலிக்க எனக்கு முதுகை காட்டியபடி கட்டிலில் கால்களை குறுக்கி படுத்திருந்தாள். கதவை மூடிவிட்டு அவளையே பார்த்தேன். திரும்பவேயில்லை. மெல்ல நடந்து அருகில் சென்றேன். அசைவில்லை. போர்வையை எடுத்துப் போர்த்தினேன்.

‘‘டீசண்ட்டா பிஹேவ் பண்ணறதா நினைப்பா?’’ திரும்பாமல் கேட்டாள்.

‘‘அப்படி நீ நினைச்சா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது...’’

‘‘என்ன பழிக்குப் பழியா?’’ சீறலுடன் திரும்பியவளின் கண்கள் கலங்கியிருந்தன.

‘‘அனு...’’

‘‘ஷட் அப். கால் மீ ராதா...’’ கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைக்காமல் வெறித்தாள்.
‘‘தூங்கும்போது மாரைத் தொட மாட்டியே?’’

‘‘என்னது..?’’ பூமி பிளந்தது.

‘‘அப்படினா சரி. கதவை மூடிட்டு போ. கொஞ்ச நேரம் நான் தூங்கணும்...’’ என்றவள் போர்வையை தலைவரை போர்த்திக் கொண்டாள்.

அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. ஹாலுக்கு வந்தேன். டிவி பார்த்தேன். புத்தகம் படித்தேன். பாட்டு கேட்டேன். பால்கனியின் நின்றபடி சிகரெட் பிடித்தேன். உள்ளம் மட்டும் கொதித்துக் கொண்டேயிருந்தது.

மூன்று மணிநேரங்களுக்குப் பின் படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். ‘‘காபி குடிச்சியா?’’ பதிலை எதிர்பார்க்காமல் சமையலறைக்கு சென்றாள். ‘‘பாலை காய்ச்சலை?’’ கேட்டவள் ஃபிரிட்ஜை திறந்து பால் பாக்கெட்டை எடுத்தாள். பாத்திரத்தில் ஊற்றி கேஸை பற்ற வைத்தாள். ஹாலுக்கு வந்தவள் எதுவும் பேசாமல் சோபாவில் என்னருகில் அமர்ந்தாள். அவள் பக்கம் திரும்பாமலேயே இருந்தேன். சட்டென்று என் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள்.

‘‘ராதா...’’

‘‘சரியா தூங்கி ஏழு வருஷமாகுது க்ருஷ்...’’

‘‘...’’

‘‘எங்க என்னை மீறி தூங்கும்போது யாராவது மாரை பிடிச்சிடுவாங்களோன்னு பயம்...’’

‘‘ராதா...’’

‘‘எங்க சித்தப்பா அப்படித்தான் செஞ்சாரு க்ருஷ்... அப்ப எனக்கு வயசு பதிமூணு...’’

நரம்புகளை சுண்டியது போல் தவித்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. மெல்ல அவள் முதுகை தட்டிக் கொடுத்தேன்.

‘‘உங்க சித்தப்பா உன்னை ‘அனு’னு கூப்பிடுவாரா?’’

‘‘ம்... ஏன் கேட்கற?’’

‘‘ஒண்ணுமில்ல... மேல சொல்லு...’’

‘‘அப்பா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? பல கஷ்டங்களை பொறுத்துகிட்ட அம்மாவால எனக்கு நடந்த கொடுமையை தாங்கிக்க முடியல. சித்தப்பா வீட்டை விட்டு வெளில வந்தோம். படிச்சுகிட்டே வேலை பார்த்தேன். அக்காவுக்கு விவரம் பத்தாது. தம்பி ரொம்ப சின்னப் பையன். ஒவ்வொரு நாள் நைட்டும் சாஞ்சுக்க தோள் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிப்பேன்...’’ தன் போக்கில் தொடர்ந்து பேசினாள்.

‘‘ரிலாக்ஸ் ராதா...’’

‘‘பால் பொங்கப் போகுதுனு நினைக்கறேன்...’’ கொண்டை போட்டபடியே சமையலறைக்கு சென்றாள். ஐந்து நிமிடங்களுக்கு பின் இரு டம்ளர்களில் காபியுடன் வந்தாள். ஒன்றை என் கையில் திணித்துவிட்டு என்னருகிலேயே அமர்ந்தாள். இது போல் இதற்கு முன்பு அவள் நெகிழ்ந்ததுமில்லை. ஈஷிக் கொண்டு அமர்ந்ததுமில்லை. ஆதரவாக தலையை தடவினேன்.

‘‘தொடாத...’’ சீறினாள். ‘‘இடத்தை கொடுத்தா மடத்தை பிடிப்பீங்களே...’’ குண்டு கண்களால் எரித்தாள். பழைய ராதா. வாய்விட்டு சிரித்தேன். பதிலுக்கு அழுது கொண்டே சிரித்தாள்.

‘‘ரொம்ப வருஷங்களுக்கு பிறகு இன்னிக்கிதான் என்னை மறந்து தூங்கியிருக்கேன். அதுவும் பகல்ல... ரொம்ப தேங்க்ஸ்...’’ என்றவள் குடித்த காபி கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு செருப்பை மாட்டினாள். படீரென்று கதவை திறந்துக் கொண்டு வெளியேறினாள்.

மறுநாளில் இருந்து வழக்கம்போல் சாரதி பணியை தொடர்ந்தேன். மேற்கொண்டு அவள் வாழ்க்கை குறித்து நானும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. ஆனால், சாட்டையின் நுனியை மட்டும் தினமும் சாணம் தீட்டினாள். வார்த்தைகளால் சுண்டி சுண்டி அடித்தாள்.

இதற்கெல்லாம் சிகரம் நேற்றிரவு நடந்தது. அலுவலகத்தில் எதுவும் சொல்லாதவள், ‘‘மண்டைக்குள்ள என்னவோ குடையறா மாதிரி இருக்கே...’’ என்று கேட்டபோதும் வாயே திறக்காதவள், தன் வீட்டு வாசலில் இறங்கிய பிறகு அந்த விஷயத்தை சொன்னாள்.

‘‘எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கறியா க்ருஷ்?’’

‘‘விளையாடறதுக்கு ஒரு அளவிருக்கு ராதா...’’

‘‘நான் சீரியஸா கேட்கறேன்...’’

‘‘அதனாலத்தான் கண்றாவியா இருக்கு...’’

‘‘உளறாத...’’

‘‘முட்டாள்தனமா பேசறது நீதான்... நான் எப்படி உங்கக்காவை கல்யாணம் செஞ்சுக்க முடியும்?’’

‘‘ஏன் முடியாது..?’’

‘‘பிகாஸ் ஐ லவ் யூ... அது உனக்கே தெரியும்...’’

‘‘ப்ளீஸ் க்ருஷ்...’’ பெருமூச்சுகளால் தன்னை சமன்படுத்திக் கொண்டவள், ‘‘அந்த ஆசையை விட்டுடு...’’ என்றாள்.

‘‘ஏன்?’’

‘‘ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு...’’

‘‘வாட்..?’’

‘‘ரிஜிஸ்டர் மேரேஜ். போன தீபாவளி எனக்கு தலை தீபாவளி. நடுரோட்ல பதினொரு மணிக்கு வெறும் வாழ்த்து சொல்லிட்டு பிரிஞ்சோம்...’’

‘‘கேசவனா?’’

‘‘ஆமா. தினமும் வெந்து வெந்து சாம்பலாகறேன் க்ருஷ்... எங்கக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தராம என்னால எப்படி வாழ முடியும் சொல்லு...’’

‘‘ராதா... அதுக்காக...’’

‘‘என் வீடு தவிர என்னால நிம்மதியா உன் ரூம்லதான் தூங்க முடியும். எங்கக்காவை நீ கட்டிகிட்டா  ‘மாமா வீடு’னு உரிமையோட நான் வருவேன்... தங்குவேன்...’’

‘‘ராதா...’’

‘‘அம்மா வர்றாங்க...மார்னிங் கால் பண்ணறேன்...’’

சொன்னபடியே காலையில் அழைத்து விட்டாள். மீண்டும் அழைக்கவும் போகிறாள்.

தட்டுப்பட்ட நதியின் ஆழத்தில் யோசனையுடன் நடந்தபோது ஒலியுடன் செல்போன் ஒளிர்ந்தது. ராதாதான்.

‘‘என்ன முடிவுபா எடுத்திருக்க..?’’

பதிலை சொன்னேன்.

----------

ஓவியம்: ராஜா

The Divine Lotus Flower




Native to eastern Asia and Australia, the lotus is widely cultivated for its fragrant pink or white flowers. It is sometimes called the Indian lotus or the sacred lotus, and it is also known in Egypt and in Africa as the white lotus, the Egyptian water lily and the white lily.

Throughout many cultures over time, the lotus has been a powerful image and a spiritual symbol. In Hindu, Buddhist and Egyptian religions, the lotus is considered a sacred flower.

Among its many meanings and significance, the lotus is a symbol of "spontaneous" generation, and so it also represents divine birth, spiritual development and creation itself.

The bud of the lotus symbolizes potential, specifically of a spiritual nature.

Because the lotus rises from unclean water to blossom as a pure, uncontaminated flower, it is a symbol of purity and resurrection.

In the same way the lotus flower goes through much in its growth before emerging from dirty water to become a beautiful flower, the individual consciousness does the same on its path to enlightenment as the so-called impurities of unenlightened thinking gradually fade.

The Mahayana sect of Buddhism maintains that all souls emerge from a lotus.

According to ancient scriptural text which details the life of Gautama Buddha, "the spirit of the best of men is spotless, like the new lotus in the [murky] water which does not adhere to it." As the lotus is pure in the water, so the soul is also pure.

The lotus is one of the eight auspicious signs of Buddhism and Hinduism, and the eight-petaled lotus seen in Buddhist mandalas means cosmic harmony. (Mandalas are geometric patterns used as symbolic or metaphysical representations of the universe, the spiritual path, etc.; mandalas are often used as a object of focus to aid in meditation.)

The eight petals of the white lotus correspond to the Noble Eightfold Path of the Good Law. This lotus is found at the heart of the Garbhadhatu Mandala, regarded as the womb or embryo of the world.

The thousand-petaled lotus signifies spiritual illumination. In this case, each opening of the petal is the gradual unfolding of the consciousness on the path of enlightenment.

The specific yogic teaching that addresses energy centers within the human being, known as the chakra system, uses a lotus with varied numbers of petals to represent each particular chakra. The crown chakra is the thousand-petaled lotus, and so its blossoming indicates enlightenment.

The Buddhist mantra "Om mani padme hum" refers to the "jewel in the lotus," which represents enlightenment. It is claimed that this mantra has great mystical power, with transcendental truth in its words.

In buddhist and hindu writings, it is explained that "Om mani padme hum" [O Jewel in the Lotus Flower] "signifies not only the jewel of man's divinity living within the lotus (the cosmos), but also the jewel of cosmic divinity living within the lotus (man). In other words, the mantra is saying, "I am in You and You are in me," thereby stating the unity and brotherhood of all beings, as well as their inner divine potential. This is one way of expressing the principle of "As above, so below."

In spiritual literature from many sources, the lotus is a symbol for the macrocosm and the microcosm, the universe and man. The jewel in the lotus represents the divinity of the cosmos as well as the divinity of man.

In ancient Egypt, spiritual teachings held that the lotus represented the sun, and therefore, creation and rebirth. This stemmed from the way the lotus flower closes its petals at night and sinks underwater, to rise and open the petals again at dawn. So it was said that the lotus gave birth to the sun.

In certain Eastern teachings, the inner awareness — also called the inner heart or the inner mind — is symbolized by the lotus, and is found in the center of the heart. This is also called the lotus flower within.

The heart-lotus or "lotus of heart" is the center of the infinite, omnipresent consciousness which connects with the consciousness of the universe. Through the intuition, one of man's divine gifts, the spiritual student can see the infinite, omnipresent consciousness as the lotus flower within himself.

In esoteric Buddhism, the heart of beings is like an unopened lotus. When the Buddha nature (spiritual nature) develops on the inner, the lotus unfolds and blossoms. This is why the Buddha is depicted sitting on a blooming lotus.

The lotus is seen extensively in Buddhist art, where Buddha images are typically positioned on a lotus — usually a double lotus — with petals facing both up and down. The protrusion sometimes found on the Buddha's head is also portrayed as a lotus.

As a holy symbol in Indian culture and a sacred symbol of Hinduism, the lotus is found throughout the Hindu scriptures. Lord Brahma, the creator of the universe in these scriptures, and Lord Vishnu, the preserver of the universe in these scriptures, are depicted sitting in a lotus.

Lord Brahma is said to have been born from the lotus that was growing out of the navel of Lord Vishnu.

In Vedic scripture, the body of Lord Krishna, an incarnation of Lord Vishnu, is described as being like a bluish new-grown lotus flower.

One of the eight auspicious symbols of Indian classical art, the Purankalsa Purnakalasa symbolizes abundance and creativity, and depicts overflowing foliage consisting of lotus buds, lotus flowers and lotus leaves. The motifs of Purankalsa are found inside the legendary Taj Mahal, which some believe to be an ancient hindu Temple rebuild by the Muslims, where the lotus is the prominent motif.

In many spiritual traditions, lotus flowers are especially sacred as an offering to the divine.

The lotus also represents purity and non-attachment, and is a symbol of Bhakti or love for God. Most people let their love flow towards the mundan world. But a devotee redirects his love only towards God, who resides with in one’s heart. Though God is present everywhere, it is in the heart, our spiritual centre, that He manifests as Param-Atma or the Supersoul. The heart of the devotee is the ‘Lord’s temple room.
Thus, the Lotus represents the heart. It is not the physical heart but the spiritual heart that the lotus represents. Mahanarayana Upanishad says, ‘In the citadel of the body, there is the small sinless and pure lotus of the heart which is the residence of the Supreme.

It is stated by the Lord in the Vedas: “Oh, Human! This village [life] of yours is balanced on the lotus leaf and your lifespan is just alike a drop of water running down that leaf, which may fall any minute.”

Throughout history, Eastern poets, sages, saints, masters and gurus have associated the lotus also as a metaphor for the divine feet of the gods and other exalted spiritual beings. This is where the phrase "lotus feet" found in many Eastern teachings, originates.

Pervading Eastern philosophy and religion for thousands of years, the lotus-feet is a metaphor for the divine feet of the gods, saints and other exalted spiritual beings. Figurative language, analogies and mystic descriptions are used in spiritual instruction throughout many teachings.

Main Source: Adapted from Article by Laurel Fishman