Search This Blog

Tuesday, October 9, 2012

எல்லா மருந்துகளுக்கும் மேற்பட்ட மருந்து, மருந்தீஸ்வரரின் திருநீறு


.
எல்லா மருத்துவர்களுக்கும் மேற்பட்ட மருத்துவர் மருந்தீசர்.
மருந்தீஸ்வரரை நம்பிக்கையோடு வழிபட்டால் நிறைவேறாத காரியமே இல்லை.
********************************
திருவான்மியூரில் உள்ளது சோழ மன்னர்களால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மருந்தீஸ்வரர் ஆலயம்
********************************
அன்னை திரிபுரசுந்தரி என்னும் திருப்பெயரோடு நின்ற கோலத்தில், மேலிரு கரங்களில் பாசம், அங்குசம்
கீழிரு கரங்களில் அபயமும், வரதமும் கொண்டு தெய்வீகக் காட்சி தருகிறாள்.
______________________________
"கல்லாலின் புடையமர்ந்து நான் மறை
ஆறங்க முதற்கற்ற கேள்வி கிறந்த
வல்லார்கள் நல்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய்
இருந்ததனை இருந்து காட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்"

என்னும் பரஞ்சோதி முனிவரின் துதிப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

World's most expensive book, Birds of America (உலகில் மிக விலையுயர்ந்த புத்தகம்.......)



ஜோன் ஜேம்ஸ் ஆடவொன் அவர்களின் கைவண்ணத்தில் உருவாகிய "Birds of America" ~ (அமெரிக்கப் பறவைகள்) என்கின்ற தலைப்பிலான புத்தகத்தின் முழுமையான அரிய பிரதியொன்று £7.3 மில்லியன் ($11.5 மில்லியன் ~ 126 கோடி இலங்கை ரூபாய்) பெறுமதிக்கு லண்டனில் ஏலத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் விற்பனையாகியுள்ளது. 19ம் நூற்றாண்டினைச் சேர்ந்த இந்த புத்தகத்தின் 119 பிரதிகளே உள்ளதாக அறியப்படுகின்றது. இவற்றில் 108 பிரதிகள் காட்சியகங்களுக்கும், நூலகங்களுக்கும் சொந்தமானதாகும்.

ஜோன் ஜேம்ஸ் ஆடவொன்((1785-1851) பறவைகள் தொடர்பான ஆராய்ச்சியாளர் மட்டுமன்றி சிறந்த ஓவியரும் ஆவார். ஜோனின் கைவண்ணத்தில் உருவாகிய பறவைகளின் ஓவியங்கள், "Birds of America" என்கின்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜோன் ஜேம்ஸ் ஆடவொன், பிரான்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியபோது தன்னை சுற்றியிருந்த சூழலில் பறவைகளின் வாழ்க்கை நடத்தையினை அவதானித்து அவற்றினை ஓவியமாகத் தீட்டினார். ஆரம்பத்தில் இவர் வரைந்த பறவைகளின் படங்களினை அமெரிக்கப் பதிப்பாளர் எவரும் பிரசுரிக்க முன்வரவில்லை.
கடைசியாக, அவர் வரைந்த ஓவியங்கள் "Birds of America" என்ற பெரியளவான தொகுப்பாக உருவாகியது.

இதற்கு முன்னர், 1989ம் ஆண்டு ஆடவொனின் ஒரு முழுமையான தொகுப்பு $3.96 மில்லியனுக்கு ஏலம் போனமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் நினைவாக ஆடவொன் கழகம் 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


A copy of the world's most expensive book, John James Audubon's 19th-century masterpiece Birds of America, is set for auction later this month and is expected to sell for up to $10m (£6.5m).



Only 120 complete sets of Audubon's 435 hand-coloured, life-sized engravings of America's birds are believed to exist today, with the majority (107) owned by institutions. The last full edition of The Birds of America, which went up for auction in 2010, sold for £7.3m at Sotheby's, breaking the world record for a single book. The new set was bought by the fourth Duke of Portland at some point after 1838 and is in "excellent" condition, said Christie's, through whom it is being sold.



The auction house has given the edition a guide price of $7m-$10m, leaving experts to wonder if it will break 2010's record when it opens to bids on 20 January in New York.



"Birds of America is most significant for its sheer beauty. It's a masterpiece of illustration," said Richard Davies of rare and used book specialist AbeBooks. "Aside from being famous in the rare book world, Birds of America has also immense historical and ornithological importance. Some of the birds John James Audubon painted are extinct and he also discovered new species."



Davies said that while the estimated value of the Duke of Portland set is "sky high ... [it] is in excellent condition [and] if the record does fall, then no one should be overly surprised because a rare book like this is recession-proof".

Sign up for the Bookmarks email

Read more



Measuring over three feet in height and running to four volumes, The Birds of America was created by Audubon between 1827 and 1838. The illegitimate son of a French sea captain and his creole mistress, Audubon was an itinerant artist who travelled America's wilderness drawing the birds he loved. He was insistent that The Birds of America was made up of life-size illustrations, and that it showed all the known species of north America, making the finished volume "the greatest of all bird books, [and] arguably the highest achievement of ornithological art", said Christie's.



Whatever Birds of America is, said rare book dealer and author Rick Gekoski, "it isn't a book, not in any normal sense of the term". In fact, the volumes consist of "a large number of works of art – original hand-coloured engravings – bound together for ease of storage and reference," he said. "The format was chosen not out of any grandiosity but because it was Audubon's remarkable desire – and ability – to produce life-sized engravings of each bird. Thus the finches and cardinals have plenty of space in which to flit about, while the flamingo and trumpeter swan tilt their necks graciously inward and arrange themselves with some care. The effect of this is just terrific."



Picking up a copy of the "book" is a two-person job, said the dealer, who examined an edition at Sotheby's once prior to an auction. "The (very nervous) resident expert and I (gingerly) turned the pages together, him at the top and me at the bottom, and peeled them back (respectfully) into just the right conjunction with the rest of the plates," said Gekoski. "You have to be careful how you handle a gargantuan book worth more than 10 million dollars."

FIVE FACES OF SHIVA



This is part V of Shiva the Supreme. Lord Shiva has five faces called Ishana, Tatpurusha, Aghora, Vamadeva and Sadyojatha. These five faces of Shiva represent the five basic elements viz. Akash, air, fire, water and earth. In fact these faces can be called five forms of Shiva. Any creation has to be made out of these five gross elements. The first form or face, called Ishana, is the first physical form of Shiva. This form gives us pleasure that is enjoyed by our physical body. This is represented in the form of organs of hearing and speech in our body and in the form of subtle sound and the celestial sphere or Akash. It may be recalled that ancient rishis only heard the sound of Vedas from Akash. The second form or face is called Tatpurusha, the second physical form of the Lord. This form is identified with prakrti or the source of objectivity. This is the home of Atman. This form is represented by organs of touch, and organs of action, and is the subtle form of air. The third form is Aghora is the third physical form of Shiva. This is identified with cosmic intellect.

This form is represented by eyes, feet and dharma. This is identified with rupa or physical structure and the subtle form of fire. The fourth form is Vamadeva, the fourth physical form of Shiva and exists in man in the form of ego, tongue, rectum and subtle form of water. The next form Sadyojatha is the fifth physical form of the Lord and exists in the form of mind, organs of smell, organs of generation, and the subtle form of earth. Shiva created these five gross elements and his only other creation is Shakthi, the Marsha form or the kinetic energy. The five faces Shiva should not be taken in literal sense and these faces represent five basic elements, five organs of action, five organs of knowledge and pancha tanmatras. These twenty tatwas along with anthakkaranam (mind, intellect, knowledge and ego) are the cause for creation. In other words, these 24 tatwas are the cause for creation. We have discussed in detail about these fatwas in the ‘finding god’ series. Everybody is attached to his creator. As already discussed you need both static and kinetic energy for creation. In other words you need two to create a third.
When Shakthi is creating, She has Shiva as her creator. Therefore, Shakthi is always attached to Shiva. When a baby is born, only the mother introduces the baby to its father. This universe is mothered by Shakthi and fathered by Shiva. Without the help of Shakthi, no one can have darshan of Shiva. Only Shakthi alone can take us to Shiva. That is why She is called Shivajnanapradyini (LS 727) meaning She imparts the knowledge of Shiva to those who seek Him. Shiva is cit, and Shakthi is citi. Shiva is the core of every living being. There is no difference between Shiva the Supreme, whom we manifest out of ignorance, as different from our own physical form and the Shiva as atman within our own self. As seen above, our physical body is made up of pancha bhuthas. After the physical body, there is sukshma sarira or the subtle body. While the physical body is made up of five gross elements, the subtle body is made up of five tanmatras derived from the five gross elements.

These five tanmatras like sound, touch etc are the perception of five pancha bhuthas. These five tanmatras, mind, intellect and ego (anthakkaranam) form the subtle body. In this subtle body the jiva with karmas embedded in it is placed. This jiva leaves the physical body at the time of death. Death happens when Shakthi or vimarsha decides to withdraw the prana supplied to the body for its sustenance. Though we say that prana is supplied by Shakthi, the origin of prana is from Shiva. That is why it is said sarvam ishwara mayam jagat, meaning that entire universe is Ishwara. — with Su San.

பட்டுக்கோட்டையார் பற்றி அவரின் துணைவியார் :



=====================================
“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும் ‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ’அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக. ‘உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம். அப்போ வீட்டுல வந்து எழுதுனதுதான், ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ பாட்டு. இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் ஆடைகட்டி வந்த நிலவு” என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.

Shirdi Sai Baba - Mandala - Heilart

Monday, October 8, 2012

டூத் பேஸ்ட் பலன்கள் பற்றி முழுமையா ஆராய்ச்சி செய்தவங்க நம்ம ஆளுங்க தான்..



நம்ம ஆளுங்க ஒரு பொருளை எதற்காக பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தாமல் வேறு என்னென்ன வகையில் இதனை பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள்.
 இதற்கு பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்கின்ற விஷயம் நம்மைப் போன்றவர்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்த டூத்பேஸ்ட்டைக் கொண்டு என்னவெல்லாம் செய்து கொள்ளலாம் என்று பட்டியிலிடுகின்றனர் ஒரு சிலர்.. படித்துப் பாருங்களேன்..
என்னமாதிரியான ஆராய்ச்சி? அடேங்கப்பா!! உலகத்துல வேற எந்த நாட்டுக்காரனாச்சும் இது போல செய்ய முடியுமா என்ன?

1. பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.

2. சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.

3. முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.

4.பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.

5. பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.

6. துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.

7. குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து விடும்.

8. வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

9. சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.

10. குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.

11. வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.

12. நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.


via Udhai Kumar

இந்து மத கடவுள்களை ஆயிரம் கைகள் கொண்டவர்களாக வரைகிறார்களே... அப்படி ஒருவர் இருக்க முடியுமா என்ன?"




"அகந்தையே இன்றி பல நற்காரியங்களைச் செய்த பெரியவர்கள் யாரையாவது நீங்கள் நேரில் பார்த்துப் பழகியது உண்டா? இவ்வளவு பெரிய சாதனையை நீங்கள் எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதுண்டா? அப்படிக் கேட்டால், இப்படி ஒரு அற்புதமான பதில் வரும்...

''இந்தக் காரியத்தைத் தொடங்கும்போது, கையில காசே கிடையாது. 'எந்த நம்பிக்கையில தொடங்கறே'னு பலபேர் கேட்டாங்க. ஆனாலும் கடவுள் மேல பாரத்தைப் போட்டு ஆரம்பிச்சோம். யார் யாரோ உதவி செஞ்சாங்க. எங்கெங்கெல்லாமோ இருந்து பணம் வந்துச்சு. அவங்களுக்கு எல்லாம் இதைப் பத்தி யாரு சொன்னாங்கன்னு கூட எங்களுக்குத் தெரியாது. ஆனால், உதவி கிடைச்சுகிட்டே இருந்தது'' என்பர்.

மிக உயர்ந்த நல்ல காரியங்களை அகந்தையின்றி நடத்துவோரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்கலாம். உதாரணம்... கல்கத்தாவில் உருவான ராமகிருஷ்ண மடம், அன்னை தெரசாவின் சேவை நிறுவனம், இன்னும் பல கும்பாபிஷேகங்கள் மற்றும் அன்னதானங்கள்.

இப்படி, ஒப்பற்ற நல்ல காரியங்களுக்காக எங்கெங் கிருந்தோ உதவிக் கரங்கள் நீளுகின்றனவே... அவை யாவும் கடவுளின் கரங்களே என்பதுதான் அந்த ஓவியத்தின் அர்த்தம்.

2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!


இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு பற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும்.

அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)

தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Olmec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

கடலில் மூழ்கிய தமிழர்களின் வாணிகக் கப்பல்:

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.





The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.


மாயன் காலண்டர்

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி.12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archaeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே. (ஆஸ்திரேலியாவில் தமிழர்களை ஒத்த பழங்குடியினரின் புகைப்படம் கீழே)

நல்லவேளை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி: மகேந்திரன் ஆறுமுகம் & தமிழால் இணைவோம்

ஆஸ்திரேலியா பழங்குடியினர் :




ஆஸ்திரேலியாவை சேர்ந்த பழங்குடி மக்களின் புகைப்படம். இதை உங்கள் வீட்டில் காட்டினால் யாருடைய தாத்தா என்றுதான் கேள்வி வரும். இவர்களின் மொழிகூட தமிழை ஒத்துள்ளது.

நன்றி: தேடல்

இவற்றையெல்லாம் நம்பாதவர்களுக்கு மேலும் சில ஆதாரங்கள்:
http://www.nilapennukku.com/2012/09/tamiltradebefore2500yearrs.html
 

Puratasi Shani – Saturday in Tamil Month Puratassi**




Saturdays in the Tamil month of Puratasi (September – October) is considered highly auspicious and special prayers are offered to Lord Balaji, Navagrahas and Lord Shani or Sani Bhagvan. The popular belief is that Lord Venkateswara made his divine presence on the earth in this month and returned to Vaikunata also in the month. There is also a legend that Shani Dev loses his powers in Puratassi month and therefore cannot create any trouble.

Sage Narada, or Narad Muni, wanted to know how people can worship Lord Ventakeshwara after his departure to Vaikunta. Lord advised Sage Narada that he will bless devotees who fast on Puratasi Saturdays and pray to Him. He will also relieve hardship caused by Lord Shani during Puratasi month. In 2012, Puratasi month begins on September 17 and ends on October 16


Since Saturdays are free from the evil influences of Lord Shani Bhagvan, it is easy to please him on this day. It is also believed that Sani Dev loses his powers in Puratasi month and therefore he will not come in the way of prayers dedicated to Lord Balaji. Thus it is easy to get blessings from Lord Venkateswara in this month. People offer Ghee Lamp or Ellu Lamp to Lord Shani in this month.


Lord Shani creating trouble is mainly believed by people who give importance to astrology.

Lord Venkateswara devotees take only a single meal on Puratasi Saturdays. There are also devotees who observe complete fast on the day. On Saturdays, Naamum, the two feet symbol of Lord Vishnu’s feet, is drawn on the forehead by males and women opt for a red dot. Hymns dedicated to Lord Vishnu are chanted on Saturdays.

தற்பெருமை தலைதூக்க கூடாது




சிறந்த வில்வித்தை காரனாக தன்னை கருதிக் கொண்ட அர்ஜுனன், அதன் காரணமாக இறுமாப்புடன் இருந்தான். யமுனை நதியின் ஓடும் தண்ணீரில், தன்னால் ஒரு அம்புப் பாலத்தையே கூட அமைக்க முடியும் என்று பெருமையாக சொன்னான்.
கிருஷ்ணர் அவன் மனதில் தற்பெருமை தலைதூக்குவதை கண்டுகொண்டார். அவனிடம் அர்ஜுனா உனக்குள்ளாகவே ஏதேதோ பேசிக்கொண்டே சிரிக்கிறாய் போல் தெரிகிறது என்று கிருஷ்ணர் கேட்டார். அதற்கு அர்ஜுனன் நான் சிரித்தது உண்மைதான் . ராமன் இலங்கைக்கு போகும் போது கடல் மீது பாலம் கட்ட குரங்கு கூட்டத்தை அமர்த்திக்கொண்டார். நான் மட்டும் அங்கு இருந்திருந்தால் அம்புகளாலேயே கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு பாலம் அமைத்திருப்பேன்.
இதை நினைத்துதான் சிரித்தேன் என்று பெருமையோடு சொன்னான்.
அர்ஜுனனின் அகந்தையை அடக்க கிருஷ்ணர் உறுதிக்கொண்டார். அர்ஜுனா இந்த யமுனை நதியில் உன் அம்புகளால் ஒரு பாலத்தை அமை. ராமாயண காலத்தில் இருந்த ஒரே ஒரு குரங்கு இப்போதும் இந்த பூமியில் இருக்கிறது. அது அந்த பாலத்தின் வலிமையை சோதிக்கட்டும். உன் பாலம் பலமானது என அது சொன்னால் உன் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார் கிருஷ்ணர்.
அர்ஜுனன் மிகுந்த ஆர்வத்துடன் யமுனையின் மீது அம்புகளை பாய்ச்சினான். மிகச்சிறப்பான பாலம் ஒன்று அமைந்தது. கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைந்தவராய், ஹே! ஹனுமான் வா! என அழைத்தார். அப்போது ஒரு குரங்கு வந்து கிருஷ்ணரை வணங்கியது. கிருஷ்ணர் அந்த குரங்கை அம்புப் பாலத்தின் மீது நடக்கச் சொன்னார். குரங்கின் கால் பட்டது தான் தாமதம். அடுத்த காலை உயர்த்தும் முன்னரே பெரும் சப்தத்துடன் முழு பாலமும் நொறுங்கி விழுந்தது.
அர்ஜுனனை பார்த்து கிருஷ்ணர் சிரித்தார். அர்ஜுனன் அவமானத்தால் குன்றிப்போய் வில்லையும் அம்பையும் வீசி எறிந்துவிட்டு கிருஷ்ணரது திருவடிகளில் விழுந்தான். கிருஷ்ணர் அவனுக்கு அறிவுரை வழங்கினார். அர்ஜுனா வலிமை மிக்க இந்த குரங்குகளை தாங்கும் வகையில் ராமரால் கூட அம்புகளால் பாலம் அமைக்க முடியவில்லை. அவராலேயே முடியது என்ற நிலை இருக்க, உன்னால் பாலம் அமைக்க இயலாமல் போனதற்காக நீ அவமானப்பட்டதாக கருத முடியாது. ஆனால், எப்போதும் ஒரு பாடத்தை நினைவில் வைத்துக்கொள்.
தற்பெருமையையும் அகந்தையையும் உன் மனதை எப்போதும் நெருங்க விடாதே. ஒரு வீரனுக்கு தவறாது வீழ்ச்சியைத் தரக்கூடிய மிக மோசமான எதிரிகள் இவை என்றார். கிருஷ்ணரது அறிவுரையை அர்ஜுனன் ஏற்றுக்கொண்டான்.

சிங்கங்கள் புலிகள் மிகவும் அருகிவருகின்றன


ஆபிரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரை மில்லியன் அளவில் அதாவது 450,000 ஆக காணப்பட்ட சிங்கங்கள் இன்று 16000-23000க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலேயே மிஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை யானைகள், சிங்கங்கள் உட்பட அதிகளவான உயிரினங்கள் சர்வதேச ரீதியாக குறிப்பிட்ட சில காரணங்களினால் பாதுகாப்பின்மைகளை எதிர் நோக்கியுள்ளன.

புலிகளும் பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளன. புலிகளின் எண்ணிக்கை 3000க்கும் குறைவாகவே காணப்படுகின்றனவாம். புலிகள் மிகவும் அருகிவருகின்றன. புலிகளின் எலும்புகள் கிழக்குலகில் மருத்துவ தேவைகளுக்காகவும், ஆயுர்வேத முறையில் வியாதிகளினைக் குணமாக்குவதற்கும் பயன்படுத்துவதனலால் இதற்கான கேள்வி அதிகமாகக் காணப்படுகின்றதாம். வளர்ச்சியடைந்த கேள்வி, அத்துடன் சுருங்குகின்ற விநியோகம் இந்த அபாயத்துக்கான சூத்திரமாகும்.

இதன் காரணமாக புலிகளின் எலும்புகளிலிருந்து, சிங்கங்களின் என்புகளுக்கு மாற்றீடு பெற்றுள்ளது. இவை புலிகளின் எலும்புகளுக்குப் பதிலாக இலகுவாக விற்கப்படுகின்றதாம்.
சிங்கங்கள் ஆபிரிக்காவில் மிகவும் பிரபலமான விலங்காகும். அதேவேளை உலகிலும் பிரபலமானது எனலாம். கடந்த 20ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறைவடைந்துள்ளனவாம்.

இவை பெரியளவிலான அச்சுறுத்தல்களை வேட்டைக்காரர்களிடமிருந்தும், சட்டவிரோத கும்பல்களிடமிருந்தும் எதிர் நோக்குகின்றன. கொலைகாரர்கள் மிருகங்களினைக் கொல்ல பூச்சிகொல்லிகளையும் பயன்படுத்துகின்றார்களாம்.

அழிவு அல்லது கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக 2020ம் ஆண்டுக்குப் பின்னர் வேட்டையாடுவதற்கோ அல்லது பாதுகாப்பதற்காகவோ சிங்கங்களே காணப்படமாட்டாதாம் என அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 15 வருடங்களில் காண்டா மிருகங்கள் வேட்டையாடப்படும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் காண்டா மிருகங்களின் வேட்டை அதிகரித்துள்ளனவாம். இதற்கான காரணம் காண்டா மிருகக் கொம்புகளுக்கு நிலவும் அதிகரித்த கேள்வியாகும். ஏனெனில் இவை அதிகமான மருத்துவக் குணங்கள் பொருந்தியதாகக் காணப்படுவதேயாகும். முழு ஆபிரிக்காவிலும் 18000 காண்டா மிருகங்கள் உள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதிகரித்த வேகத்தில் இவை கொல்லப்படுவதன் காரணமாக இவற்றின் குடித்தொகை வெகுவாகக் குறைய காரணியாகி விடும் என அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

வேட்டைக்காரர்களிடமிருந்தும், சட்டவிரோத கும்பல்களிடமிருந்தும் உயிரினங்களினை பாதுகாக்க நாம் தவறிவிட்டோம் அத்துடன் அதிக காலம் தாமதித்துவிட்டோம்.
விஞ்ஞானிகள், சுற்றாடல் பாதுகாவலர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் தற்சமயம் உணரப்படுகின்றமை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

Some Awesome Quotes...!!!