Search This Blog

Thursday, August 2, 2012

'Georges Barbier' Paintings (1882 - 1932)



BIOGRAPHY

French art deco illustrator. 'Georges Barbier'.
Primarily a book illustrator, he also designed fabrics, wallpapers and posters and commercial wrappings, boxes and postcards. He designed costumes and settings for several theatrical productions and for Rudolph Valentino's movie Monsieur Beaucaire. A regular contributor toLa Gazette du Bon Ton, the Journal des Dames et des Modes, Fémina, Vogue, Comoedia Illustré and other journals, his illustrations were frequently reproduced in the pochoir process. His finest book illustrations were those interpreted in woodcuts by F. L. Schmied.


































































































































































































































































































































































Biography courtesy: 'Art Deco', Victor Arwas, Harry N. Abrams, 1992.

HOW ALCOHOL ATTACKS THE BRAIN

வருடங்களும் - விழாக்களும் அறியதகவல் பகிருங்கள்

Nuvvu Leka Anadalam song - Sri Shirdi Sai Baba Mahathyam movie songs - V...

Wednesday, August 1, 2012

கவியரசர் கவிதை

"நெருப்பினை ‘நிலவே’ என்பார்
நீசனைத் ‘தலைவா’ என்பார்
கருப்பினை ‘வெண்மை’ என்பார்
கழுதையை ‘யானை’ என்பார்
உருப்படா தவனை யெல்லாம் 
உயரத்தில் ஏற்றி வைப்பார்
செருப்பினை மதிக்கும் இந்தத் 
தேசத்தில் பிறந்தேன் பாவி! "
-கவியரசர்.

சொராஸ்டர்(பார்சீ) மதம் ஓர் பார்வை.!!!



நாம இறந்தா என்ன பண்ணுவாங்க,இந்துவா இருந்தா எரிப்பாங்க,கிறிஸ்த்துவனாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருந்தால் புதைப்பார்கள்,நாய் சாப்பிடவோ அல்லது பிணந்தின்னி கழுகுக்கோ போடுவாங்களா,கொஞ்சம் டெரரா இருக்கா ஜோரோஸ்ட்ரியன் எனப்படுகின்ற பார்சி சமூகத்தைப் பற்றி நமக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை,2020-ல் இவர்களது எண்ணிக்கை 23000 ஆக ஆகிவிடும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது .இவர்களது இறுதி சடங்கு முறை தான் கொஞ்சம் டெரர்,இறந்த பிறகு அந்த உடலில் இருந்து தலை முடி,நெகங்கள் இவைகளை நீக்கி விட்டு,அந்த உடலை பாலில் குளுப்பாட்டி,இவர்கள் டவர் ஆப்ஃ சைலன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற ஒரு குன்று போன்ற இடத்தில் வைத்துவிடுவார்கள்,அங்கே தயாராக இருக்கும் பிணந்திண்ணி கழுகுகள் கன நேரத்தில் உடலை தின்றுவிடுகின்றன,இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் நீர்,நெருப்பு,பூமி இவைகள் புனிதமான மூலங்களாக கருதப்படுவதால் மரணத்தின் மூலமாக அவைகள் கலங்கமுறக்கூடாது

மும்பை CST அருகில் உள்ள டவர் ஆப்ஃ சைலன்ஸ்,மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டு,முதல் அடுக்கில் ஆண்களும்,அதற்கு அடுத்த அடுக்கில் பெண்களும்,நடுவில் உள்ள அடுக்கில் சிறு குழந்தைகளையும் வைப்பார்கள்,கழுகுகள் தின்றது போக மீத உள்ளவைகள் மழை காரணமாக சுத்தம் செய்யப்பட்டு,இறுதியாக கடலில் கலக்கப்படுகின்றது, இங்கு நமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது,பார்சியில் இருந்து வேறு மதத்தில் திருமணம் ஆனவர்களுக்கும் இங்கு அனுமதி கிடையாது,

ஊருக்கு ஒதுக்கு புறமாகவே இவைகள் உருவாக்கப்பட்டு இருக்கும்,ஆனால் நகரங்கள் பெருகிக்கொண்டே வருகின்றகாரணத்தால்,காலப்போக்கில் இவைகள் மனிதர்கள் வசிக்கின்ற இடங்களுக்கு அருகிலே வந்துவிட்டன சமிபத்தில் இறந்த எஸ்.பி.கோத்ரெஜின் உடலைக்கூட இப்படி தான் டவர் ஆப்ஃ சைலன்ஸ்ல் வைத்துள்ளார்கள்,நம்ம ரத்தன் டாட்டா கூட பார்சி இனத்தை சேர்ந்தவரே இதனை நான் ஆதாரம் இல்லாமல் சொல்லுவதாக நினைக்க வேண்டாம் (02-02-2011) இந்தியா டுடே வாங்கி படித்து பாருங்கள், 

சரி நாம் இப்ப அவர்களுடைய வரலாற்றை பார்ப்போம் !!

உலகம் தோன்றிய காலத்திலிருந்து எத்தனையோ மதங்கள் பிறந்து வளர்ந்து மறைந்து இருக்கின்றன. அவைகளில் சில கருவிலேயே சிதைந்தும் இருக்கின்றன. சில மதங்கள் பிறந்து எழுந்து நடந்து ஓடி வல்லரசாக நிமிர்ந்து நின்று, பிறகு மறுபடியும் வீழ்ச்சியை நோக்கி வீழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் நாம் பார்க்கப்போகின்ற சொராஸ்டிரா மதமும் ஒன்று.

சொராஸ்டிரியம்(Zoroastriansim) எனப்படும் மதத்தை நிறுவிய ஈரானியத் தீர்க்கதரிசி. பண்டைய ஈரானிய மொழியில் சொராஸ்டர் (Zoroaster) என்ற இயர்பெயர் கொண்ட இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு .எனினும் இன்றைய வடக்கு ஈரானில் கி.மு.628ஆம் ஆண்டில்(கி.மு.628-கி.மு.551) இவர் பிறந்தாகத் தெரிகிறது .இவருடைய இளமைக் கால வாழ்வு பற்றியும் செய்திகள் இல்லை. வயது வந்ததும் இவர் தாம் உருவாக்கிய புதிய மதத்தை போதிக்க தொடங்கினார்.

சொராஸ்டர் (Zoroaster)

இவர்களின் போதனைப்படி, ஒருவனே தேவன். அவனை அவர் ‘அஹுரா மாஜ்டா’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘ஒர்மஜ்டு’) என்று அழைக்கின்றனார். ‘மெய்யறிவுப் பெருமான்’ (The wise Lord) என்று இதற்கு பொருள். அவன் நேர்மையினையும், வாய்மையினையும் ஊக்குவிக்கிறான். ஒரு தீயசக்தி இருப்பதாகவும் சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். இதனை அவர்கள் ‘அங்ரா மைன்யூ’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘அஹ்ரிமான்) என அழைக்கின்றார்கள்.இந்த சக்தி தீமையினையும் பொய்மையினையும் குறிக்கிறது.

இவர்களின் திருமறையாகிய “அவெஸ்தா”வின் மிக தொன்மையான பகுதியாகிய “காதஸ்” (Gathas) ஆங்கில மொழிபெயர்ப்பு.

அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா மதம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு,மணத்துறவு இரண்டையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. இந்த மதத்தை சொராஸ்டர் பரப்ப ஆரம்பித்தபோது முதலில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. எனினும் இவர் தமது 40 ஆம் வயதில், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னராகிய விஷ்டாஸ்பா (Vishtapa) என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார். 

அதன் பின்பு இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் இருந்து இந்த மத வளர்ச்சிக்கு பெரிது உதவி செய்தார்.ஆனாலும் பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் இந்த புதிதாக தோன்றிய மதத்தில் இருந்த போதிலும் அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் அவர் வாழ்ந்த மண்டலம்.(வடக்கு ஈரான்) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில் மகா சைரசினால் (Cyrus the Graat) பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்படது. 


அடுத்த 200 ஆண்டுகளின்போது, பாராசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினார்கள்.இந்த மதத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு. நான்காம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு சொராஸ்டரா மதத்திற்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில் பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்று மறுபடியும் சொராஸ்டரா மதம் தலைதூக்கியது. சஸ்ஸானிஸ்ட் அரசர்களின் (Sassanid Dynasty) ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா மதம் பாரசீகத்தின் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

சொராஸ்டரா மதம் மற்ற மதங்களின் இல்லாத பல விசித்திரமான மதச் சடங்குகளை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் சில சடங்குகள், நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை . எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் தீப்பிழம்பு சொராஸ்டரின் கோயில்களில் எப்போழுதும் எரிந்துக் கொண்டிருக்க செய்கிறார்கள். நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய வரலாற்றில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற ‘ஸல்மான் பாரிசீ (ரலி)’ அவர்கள் சிறுவயதில் இந்த தீப்பிழம்பை அணையாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுயிருக்கிறது. 

ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்பு பாரசீக மக்களில் (இன்றைய ஈரான்,ஈராக்) பெரும்பாலோர் படிபடிபபடியாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள் எஞ்சியிருந்த சொராஸ்டர்கள் ஒரு பகுதியினர் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்ததியினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறுகுடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர். 

மும்பையில் சொராஸ்டரா பார்சீகள் 

இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம் ஹிஜாப் அணிவார்கள், பெயர்கள் நூர்ன்னிஸா,பைரோஸ் இப்படி இருக்கும்.இவர்கள் பாரசீக மரபினர் என்பதால் பார்சீகள் (Parsees) என்று இந்தியர்கள் அழைத்தனர்.(சொராஸ்டிரா சமயமும் பார்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,50,000 பார்சிகள் வாழ்கிறார்கள்.


இவர்களில் பெரும்பாலும் மும்பாய் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசிக்கிறார்கள். பார்சிகள் ஓரளவுக்குச் செல்வச் செழிப்புமிக்க சமுதாயமாகத் திகழ்கின்றனர்.ஈரானிலும் சொராஸ்டிர சமயம் அடியோடு மறைந்து விடவில்லை.எனினும்,அங்கு இன்று சுமார் 40,000 சொராஸ்டர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்

உயிருக்கு போராடும் கவியரசர் கண்ணதாசன் (அரிய படம்)


சிக்காகோ மருத்துவமனை யில், நினைவிழந்த நிலையில் , உயிருக்கு போராடும் கவியரசர் கண்ணதாசன் . இந்தப் படம் எடுத்த ஒரு சில மணி நேரத்தில் உயிர் பிரிகிறது . அரிய படம் . கவியரசுக்கு மதுரை மீனாட்சி கோவில் குங்குமத்தை நெற்றியில் பூசுபவர் , கவிஞரின் நண்பர் வி.என்.சிதம்பரம் ! "

அஜீத்


தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத்.

இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர்,அவரை பற்றிய 41 துளிகள் இங்கே…

தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.
தமிழில் ‘அமராவதி’ என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.

தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு ‘ஆசை’ என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.1998ம் ஆண்டு வெளிவந்த ‘காதல் மன்னன்’ என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு ‘அனோஷ்கா’ என்ற குட்டி தேவதை.

தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண். அடுத்து சரண் இயக்கிய ‘அசல்’ படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் ‘தீனா’. படத்தில் ” தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. ” என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் ‘தல’ ஆனார் அஜீத்.அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.! ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.

மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற நிகழ்ச்சியில் ” ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. ” என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.

இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.
கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.
சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான். அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.
பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.

‘நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் ‘ராஜாவின் பார்வையிலே’. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். ‘மங்காத்தா’ படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் நடித்தது நெகட்டிவ் ரோலில் மட்டுமே.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே ” எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்” என்று எச்சரித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.

அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் ” மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!”

தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!
வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!

சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!
வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், ‘உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!’ எனப் பாசமாக வலியுறுத்துவார்!

உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!

சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!

ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். ‘கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!’ என்பார்!தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!
‘இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?’ என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!

பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த ‘ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!
அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!
உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!
எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!

படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது ‘கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை’ என்கிறார்!
மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!
அனோஷ்கா, தந்தையை ‘அஜீத் குமார்’ என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!

மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!
தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். ‘சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!’ என்பார்!

தங்களது படம் வெளியாகும்போது படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பல நடிகர்கள் ஊர் ஊராக செல்லும் நிலையில், ‘மங்காத்தா’ படத்திலிருந்து என் படம் குறித்து எதுவும் பேசக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்..” என படம் குறித்து பேச திடமாக மறுத்திருக்கிறார்.

நன்றி: யாவருக்கும் பிலாக்

சந்திரசேகரபாரதி கணிக்கும் இலவச மாத ராசிபலன்:


Photo: சந்திரசேகரபாரதி கணிக்கும் 
இலவச மாத ராசிபலன்:

2012 ஆகஸ்ட் 1 முதல் 31 வரை

சிம்மம், கன்னி, துலாம் ,விருச்சிகம்,

சிம்மம் :

சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் மட்டுமே கோசாரப்படி அனுகூலமாக இருப்பதால் எதிலும் விசேடமான  நன்மைகளை எதிர்பார்க்க இயலாமல் போகும். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகம் இருக்கும். சிக்கன  நடவடிக்கை அவசியம் தேவை. வீடு மாற்றம், தொழில் மாற்றம் ஆகியவை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால்  தொல்லைகள் சூழும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப நலனில் அக்கறை அதிகம் தேவை. 

குடும்பத்தில் சலசலப்புக்கள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். 

அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். மக்களால் அதிகம் அனுகூலமிராது. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள்,  வங்கிப்பணியாளர்கள், இயந்திரப்பணியாளர்கள், இஞ்சினீயர்கள் ஆகியோருக்கெல்லாம் பிரச்னைகள் சூழும். 

அரசியல்வாதிகளும் அரசுப்பணியாளர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும், இரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்களும்  மாத முன்பகுதியில் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள்  படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது.  விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும். 


4-ஆம் தேதி முதல் சனி 3-ஆமிடம் மாறி, வலுப்பெறுவதால் மனத்துணிவு கூடும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு  உண்டாகும். தொழிலாளர்களது நிலை உயரும். 14-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறுவதால் போட்டிப்  பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

இயந்திரப்பணிகள் லாபம் தரும். சொத்துக்கள் சேரும். 16-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறி  வலுப்பெறுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உயர்பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் மாதம்  முழுவதுமே சிறப்பாக அமையும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். 

மகம், உத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகமாகும். 

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 12, 13, 15, 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.  

எண்கள்: 6, 7.  
.............

கன்னி: 


சூரியன், புதன், குரு, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும்.  புத்திசாலித்தனம் கூடும். முக்கியமான காரியங்கள் எளிதில் நிறைவேறும். முக்கியஸ்தர்கள் உங்களுக்குப் பக்கபலமாக  இருப்பார்கள். அரசுப்பணிகள் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். 

புதிய வியாபார முன்னேற்றத்திட்டங்கள் கைகூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு சம்பந்தப்பட்ட  துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

புதிய சொத்துக்கள், பொருட்கள் சேரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பயணத்தால் அனுகூலம்  உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். 

அறப்பணிகளில் ஈடுபாடு கூடும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி  பெறுவார்கள். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்களுக்குச்  செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 

ஜன்ம ராசியில் செவ்வாயும் சனியும் உலவுவதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றாலும் ராசியைக் குருபார்ப்பதால்  சரியாகும். எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடவும். 4-ஆம் தேதி முதல் சனி 2-ஆமிடம் மாறுவதால்  உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். கடனாகப் பணம் கிடைக்கும். 14-ஆம் தேதி முதல்  செவ்வாய் 2-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலனில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் அவசியமாகும். உணவுப்  பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத்  தேவை. 16-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. உஷ்ணாதிக்கம் கூடும். தந்தையாலும் 


அரசாங்கத்தாராலும் செலவுகள் ஏற்படும். கண், வாய், பல், கால் பாதம் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். 28 -ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. வியாபாரத்தில் முழுக்கவனம் செலுத்தவும். சிலருக்கு  தொழிலில் ஒரு மாற்றம் உண்டாகும். 

உத்திரம். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 6, 12, 13, 15, 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு. 

எண்: 1, 3, 4, 5, 6. 

............
துலாம்: 


சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் செயல்திறமை வெளிப்படும். 


அறிவாற்றல் கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய துறைகளில் ஈடுபடவும் வாய்ப்புக் கூடிவரும்.  அரசாங்கப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். உங்களைக்  காட்டிலும் வயதில் மூத்தவர்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம்  ஏற்படும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். 

மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். புனிதமான  காரியங்களில் பங்கு கொள்வீர்கள். 2-ல் ராகுவும் 8-ல் குரு, கேது ஆகியோரும் இருப்பதால் பொருள்  கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். 12-ல் செவ்வாயும் சனியும்  சஞ்சரிப்பதால் சுகம் குறையும். தூக்கம் கெடும். வீண் செலவுகளும் இழப்புகளும் உண்டாகும். கண், கால் சம்பந்தமான  உபாதைகள் ஏற்படும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரும். கைப்பொருள் காணாமல் போகக் கூடும் 

என்பதால் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. 

4-ஆம் தேதி முதல் சனி ஜன்ம ராசிக்கு இடம் மாறினாலும் அவர் உங்கள் ராசிக்கு யோக காரகன் என்பதால் நலமே  புரிவார். மதிப்பு உயரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 14-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு  இடம் மாறுவது சிறப்பாகாது. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியமாகும். 16-ஆம் தேதி முதல்  சூரியன் 11-ஆமிடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத்திறமை கூடும். 28-ஆம் தேதி முதல் புதன் 11 -ஆமிடம் மாறுவதால் தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். தந்தையால் நலம் பெருகும். தொலைதூரத் தொடர்பு  பயன்படும். 

சுவாதி, விசாக நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும். 

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 6, 13, 15, 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 5, 6.  
...........

விருச்சிகம்: 


செவ்வாய், குரு, சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் சுயபலம் கூடும். செயல்திறமை  வெளிப்படும். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும்.  இயந்திரப்பணியாளர்களும் இஞ்சினீயர்களும் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும்.  பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். தெய்வப் பணிகள் ஈடேறும்.  திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். 

குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். விருந்து,உபசாரங்களில் ஈடுபாடு கூடும். பேச்சில் இனிமை நிறைந்திருக்கும்.  தனவந்தர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  ஜன்ம ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் உலவுவதால் அலைச்சல் கூடும். கணவன் மனைவியிடையே சிறுசிறு 

சலசலப்புக்கள் ஏற்படும். 9-ல் சூரியனும் புதனும் உலவுவதால் செய்து வரும் தொழிலில் கவனம் தேவை. 4-ஆம் தேதி முதல் சனி 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும்.  14-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறி, சனியுடன் கூடுவதால் பிரச்னைகள் அதிகமாகும். சகோதர நலம் பாதிக்கும். வீண் செலவுகள், இழப்புகள் ஆகியவை ஏற்படும். கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உடல்நலனில்  கவனம் தேவை. 16-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். 

வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு,  இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். 28-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதும்  குறிப்பிடத்தக்கது. வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். மாணவர்களது நிலை உயரும். தொழில் நுட்பத்திறமை 

பளிச்சிடும். முக்கியப் பொறுப்புகளைப் பெறுவீர்கள். 

விசாகம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது. 

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 6, 12, 15 (பிற்பகல்), 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: கிழக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு. 

எண்கள்: 1, 3, 6, 9. 
.........

சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம்


சிவாஜி 25

சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...

* சத்ரபதி சிவாஜி வேடத்த
ில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!

* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!

* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

- மானா பாஸ்கரன்

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....




எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்க
ளே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.
 

DESIGN



Design, as defined by Richard Seymour
“making things better for people”
–but is that too broad?  mailmen and sanitation workers make things better for people…
design, from London’s Design Council:
design as translation: “an activity that translates an idea into a blueprint for something useful”
–ah, that word ‘utility’…
design, according to the Danish Design Centre:
“design = aesthetics + added value”
–interesting that the DDC views design as a ‘result of deliberate and creative work on an idea, a problem or a desire for change’ — do they see design as an end product, instead of a process?
design, as grudgingly defined by John Heskett:
‘the human capacity to shape and make our environment in ways without precedent in nature, to serve our needs and give meaning to our lives’
Despite its growing importance in today’s world, design continues to be misunderstood. When we hear the word “design”, many of us still think about the shape and color of objects, or flashy aesthetics, or items of luxury. But this view diminishes the importance of design and is just plain wrong. True, style is the most recognizable part of a design, with the substance of it often hidden away as a more intangible asset. But it’s really only a matter of perception.
Aesthetics are just the surface of a very layered process; they are the visible synthesis of a complex study that includes: research, vision, planning, problem solving, ergonomics, lifestyle, culture, technology, psychology, and sometimes, even sociology.
The point is: design has a higher purpose that goes well beyond creating something that is pretty to look at. When it comes to interiors, for example, design is about adapting the environment to our functional, emotional, psychological, and social needs. It is what contributes to making our living spaces more enjoyable, to creating atmospheres that give us energy and make us feel good while simplifying our lives…even if we can’t quite figure out why and how. Design can help us come together; as a family, as a group, as a community, as a society. In doing so, it enhances thesignificance of a place, or even an object.
At its highest level, design seems to be something that can only be practiced by few, with the rest of us left to experience and enjoy it, but not contribute to it. Yet, at its core, design is something that any of us can do because, when stripped to its essence, design is about adopting a holistic mentality and applying it to our lives. It’s about figuring out how disparate things can be brought together in new ways; it’s the ability to think about creative, unexpected solutions to our problems, in order to continue improving the quality of our lives, in every aspect. When we look at it this way, says Frank Nuovo, one of the world’s leading industrial designers, “design is something that everyone does every day”.
So, if we want to make our lives better, we should look to design for inspiration and believe we can all be problem-solvers and agents of change by using a design approach to everyday matters.

What is Design?


Design as a Shared Activity

The nature of design is equally as complex as that of technology. Archer wrote that:
“Design is that area of human experience, skill and knowledge which is concerned with man’s ability to mould his environment to suit his material and spiritual needs.” 1
Design is essentially a rational, logical, sequential process intended to solve problems or, as Jones put it:
“initiate change in man-made things” 2
For the term “design process,” we can also read “problem-solving process”, which in all but its abstract forms works by consultation and consensus. The process begins with the identification and analysis of a problem or need and proceeds through a structured sequence in which information is researched and ideas explored and evaluated until the optimum solution to the problem or need is devised.
Yet, design has not always been a rational process; up until the Great War design was often a chaotic affair in that consultation and consensus were barely evident. Design was not a total process. The work of participants in the process was often compartmentalised, each having little if any input in matters which fell outside the boundaries of their specific expertise. Thus, participants explored their ideas unilaterally, with one or another participant, through virtue of their “expertise”, imposing constraints upon all others. In this way, the craftsman has a veto on matters to do with skill or availability of materials, the engineer had a veto on technological considerations, and the patron alone could impose considerations of taste and finance.
During the inter-war years the Bauhaus movement attempted to knit the design process into a coherent whole in that students were encouraged to study design in a way that was both total and detailed. That is, designers were expected to balance all the considerations that came to bear upon the design of particular artefacts, systems and environments. In this way, though, design quickly evolved into a closed activity - an activity in which all but the designers themselves has little if any valid input to make on questions of materials, taste . . . and so on. Designers came to exist within a social bubble, consulting no-one but other designers. The result was that many designs conceived particularly during the immediate post-Second World War period did little to satisfy the needs of users. Such designs were exemplified by the disastrous housing policies adopted by many local authorities in the UK who built residential tower block after residential tower block. These were essentially realisations of dreamy design concepts rather than solutions to the social, cultural and environmental needs of the local populations.
Recent years have marked a sharp reaction against the design movement, which has perhaps been personified by Prince Charles and has crusade against architectural “carbuncles”. Likewise, individuals within society have sought to express their own tastes, their own individuality, personal style and personal self-image through what they use and purchase. Thus it is that design is not an activity solely for engineers and designers but is a shared activity between those who design artefacts, systems and environments, those who make them and those who use them.


Design is everywhere - and that's why looking for a definition may
not help you grasp what it is.
Design is everywhere. It's what drew you to the last piece of
furniture you bought and it's what made online banking possible.
It's made London taxi cabs easier to get in and out of and it made
Stella McCartney's name. It's driving whole business cultures and
making sure environments from hospitals to airports are easier to
navigate.
The single word 'design' encompasses an awful lot, and that's why
the understandable search for a single definition leads to lengthy
debate to say the least.
There are broad definitions and specific ones - both have
drawbacks. Either they're too general to be meaningful or they
exclude too much.
One definition, aired by designer Richard Seymour during the
Design Council's Design in Business Week 2002, is 'making things
better for people'. It emphasises that design activity is focused first
and foremost on human behaviour and quality of life, not factors
like distributor preferences. But nurses or road sweepers could say
they, too, 'make things better for people'.
Meanwhile, a definition focused on products or 3D realisations of
ideas excludes the work of graphic designers, service designers
and many other disciplines. There may be no absolute definitions
of design that will please everyone, but attempting to find one can
at least help us pin down the unique set of skills that designers
bring to bear.
Translation
Design could be viewed as an activity that translates an idea into a
blueprint for something useful, whether it's a car, a building, a
graphic, a service or a process. The important part is the
translation of the idea, though design's ability to spark the idea in
the first place shouldn't be overlooked.
Scientists can invent technologies, manufacturers can make
products, engineers can make them function and marketers can
sell them, but only designers can combine insight into all these
things and turn a concept into something that's desirable, viable,
commercially successful and adds value to people's lives.
There are many misconceptions about design. Sunday 
supplements and glossy magazines often use 'design' as a


buzzword denoting style and fashion. While the toaster or
corkscrew being featured may be well designed, the result is to
feed the belief of would-be design clients that design is restricted
to the surface of things and how they look, and that it's best
employed at the end of the product development process.
But good design isn't simply about the surface. Aesthetics are
important, but only a part of a bigger picture.
Design is fundamental. People often need reminding that
everything around us is designed and that design decisions impact
on nearly every part of our lives, be it the environments we work in,
the way we book holidays, or the way we go about getting get the
lid off the jam jar. When those things work, it's taken for granted,
but, as Bill Moggridge, founder of international consultancy IDEO,
says: 'A lot of trial and error goes into making things look
effortless.'
Design and the user
Good design begins with the needs of the user. No design, no
matter how beautiful and ingenious, is any good if it doesn't fulfil a
user need. This may sound obvious but many products and
services, such as the Sinclair C5, Wap mobile phone services, and
a great many dot com businesses failed because the people
behind them didn't grasp this.
Finding out what the customer wants is the first stage of what
designers do. The designer then builds on the results of that
inquiry with a mixture of creativity and commercial insight.
Although gut instinct is part of the designer's arsenal, there are
more scientific ways of making sure the design hits the mark.
Different designers use different methods - combining market
research, user testing, prototyping and trend analysis.
Any product launch is ultimately a gamble, but these methods help
decrease the risk of failure, a fact that often comes as a surprise to
clients.
Creativity
A design doesn't have to be new, different or impressive to be
successful in the marketplace, as long as it's fulfilling a need, but
design methods do lead to innovative products and serivces.
Designers learn that ideas that may seem strange are worth
exploring and that the 'common-sense' solution is not always the
right one. Designers often hit on counter-intuitive concepts through 
methods such as drawing, prototyping, brainstorming and user


testing. Watching users in real-world situations especially gives
insights into their behaviour that lead to ideas that wouldn't have
formed had the designer simply thought about the situation, or
relied on generalised market research.
Design and business
Designers, unlike artists, can't simply follow their creative
impulses. They work in a commercial environment which means
there is a huge number of considerations that coming to bear on
the design process.
Designers have to ask themselves questions such as: is the
product they're creating really wanted? How is it different from
everything else on the market? Does it fulfil a need? Will it cost too
much to manufacture? Is it safe?
Emphasis on the customer makes design a formidable weapon for
any business. Companies have often designed their way out of
failure by creating a product that serves the customer's needs
better than its rivals'. Design delivered the operating-system
market to Microsoft, rescued Apple Computer and made Sony an
electronics giant. A Design Council study has shown that
design-led businesses on the FTSE 100 out-performed the index
by 25%.
Putting an emphasis on design brings creativity into an
organisation and increases the chance of producing
market-leading, mould-breaking products. As the sophistication of
the consumer and global competition increases, this becomes
more and more valuable.
Businesses are finding that they can no longer compete just by
slashing prices or upping the marketing budget. Innovation in the
form of design is the key to success.
Design and public services
Billions are poured into public services every year but, despite the
UK being home to a huge variety of top design talent, our best
designers are rarely involved in public sector work.
Design can help public services in a number of ways, from making
sure products and services meet the needs of users to increasing
innovation within organisations and bringing new perspectives to
issues such as procurement.
design-as-john-heskett2


Refernces:
1. Archer, B (1973) “The Need for Design Education.” Royal College of Art
2. Jones, J.C. (1970) “Design Methods and Technology: Seeds of Human Futures”

Milti Hai Sai Naam-Latest Devotional Hindi Sai Baba Special New Bhajan O...

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!

 

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்...

பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். ஆகவே இதனை டயர் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.

கீரைகள்: காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.

இரும்புச்சத்து: இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.

பாதாம்: இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

பழங்கள்: அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம்.