Search This Blog

Tuesday, May 3, 2011

குறத்தி மலைக் கள்வன்

குறத்தி மலைக் கள்வன்
-முனைவர். மா. தியாகராஜன்.
அது ஒரு மலைக் கிராமம்! சுற்றிலும் மலைகள்; அவற்றின் முகடுகளைச் சூழ்ந்து படரும் மேகக் கூட்டங்கள்; வளைந்து நெளிந்து ஓடும் வற்றாத ஆறுகள்; மணம் பரப்பும் மலர்கள் இனம் இனமாய்ப் பூத்துக் குலுங்கின்றன; வண்டினங்கள் அவற்றை வட்டமிட்டுப் பாடும் ரீங்கார ஓலி, வானத்தில் பறந்து திரியும் வகை வகையான பறவைகளின் பாட்டு ஒலி ஆகியன எங்கும் எதிரொலித்துக் கொண்டுள்ள வளமான கிராமம்! இயற்கைத் தேவதை இன்புற்று எழுந்தருளியிருக்கும் இனிய ஊர்!
மலர்விழி! அந்த மங்கையின் பெயர்!

அவள் ஒரு நாள் தினைப் புனம் காக்கச் சென்றாள் - உடன் தோழி தேன்மொழியும் சென்றாள். தினைகளைக் கொத்தித் தின்னத் திரண்டு வரும் குருவி இனங்களைக் கவண் மூலம் கல்லெறிந்து ஓட்டிப் புனத்தைக் காத்து நினறாள்.

அப்பொழுது அப்பக்கமாகக் காளை ஒருவன் வந்தான் - கண்ணன் அவன் பெயர். கன்னியைக் கண்டான் - நின்றான் - சிறிது நேரம் சேயிழையின் செயலைப் பார்த்து நின்றான். அதே சமயம் அவளும் அப்பக்கமாகத் திரும்பினாள் - காளையைக் கண்டாள். இருவரும் பார்த்தனர் - ஒருவர் கண்களை மற்றவர் கண்கள் கவ்வின - இதயங்கள் கலந்தன.
அது முதல் இருவருடைய சந்திப்புக்கும் அந்தத் தினைப் புனம் களம் ஆயிற்று.
பகல் எல்லாம் சந்திப்பு! இரவெல்லாம் பெருமூச்சு! இப்படியே நாள்கள் பல கழிந்தன!
ஒரு நாள்!
புனத்தை ஒட்டிப் புனல் ஓடை ஒன்று! மலர்விழியின் மடியிலே கண்ணன் - கண்ணனின் அணைப்பிலே மலர்விழி! - தினைப் புனமோ குருவிக் கூட்டங்களின் வேட்டைக்காடு!
இந்தச் சமயத்தில் தினைப்புனத்தைப் பார்க்கத் தந்தை அங்கே வந்தார்! தந்தை வருவதைத் தோழி குறிப்பாள் தெரிவித்தாள். மலர்விழியும் அதை உணர்ந்து ஓடையிலிருந்து ஓடோடி வந்தாள்!
ஆனால் அவளுடைய கலைந்த கூந்தல், கலைந்த ஆடை அகியவற்றைக் கண்டு ஓரளவு தந்தை ஊகித்துக் கொண்டார்.
மறுநாளிலிருந்து புனம் காக்கப் போக வேண்டாம் என்று தந்தை கட்டளையிட்டார். இதனால் பகல் பொழுதில் நடைபெற்ற சந்திப்பு நடைபெற்ற சந்திப்பு தடுக்கப்பட்டு விட்டது. ஆகவே தோழி தேன்மொழியின் துணையுடன் இரவு நேரங்களில் சந்திப்பு நடைபெற்றது.

மலர்விழியின் வீட்டிற்குப் பின்புறம் ஒரு தோட்டம்! அங்கே மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.

ஊரெல்லாம் உறங்கிய பிறகு கண்ணன் அங்கே மறைந்து மறைந்து வருவான். வீடெல்லாம் உறங்கிக் கிடக்க விழித்திருப்பாள் மலர்விழி மட்டும்.
தோட்டத்திற்குள்ளே வந்த கண்ணன் கல் ஒன்றை எடுப்பான் - மரம் ஒன்றின் மீது எறிவான் - கல்பட்ட உடனே கண் மூடி உறங்கிக் கொண்டிருக்கும் பறவையினங்கள் விழித்துக்கொள்ளும்; ஏதோ ஆபத்து என்று எண்ணி “கீச்கீச்” என்று அச்சத்தால் குரல் எழுப்பும். குருவிகளின் குரல் கேட்டு மலர்விழி, கண்ணன் அங்கே வந்துள்ளதை உணர்ந்து, மெல்ல எழுந்து, மெதுவாகக் கதவைத் திறந்து, பையவே அடி வைத்து நடந்து தோட்டத்திற்குச் செல்வாள். அங்கே அவர்கள் சந்திப்பு! விடியும் வரை சந்திப்பு! தோழி துணை புரிவாள்!
ஒரு நாள்!

கண்ணன் வந்தான் - கல்லை எடுத்தான் - கிணற்றிலே எறிந்தான் சப்தம்! கேட்டாள் மலர்விழி; கிளர்ந்து; எழுந்தாள்; வந்தாள்; கண்ணனின் அணைப்பிலே சாய்ந்தாள்.
அப்பொழுது...?
தற்செயலாக விழித்தார் தந்தை! கிணற்றடியில் சப்தம் கேட்டு வெளியே வந்தார்! தந்தை வெளியே வருவதைத் தோழி தெரிவிக்க, விரைந்து மலர்விழி வீட்டிற்குள்ளே வந்துவிட்டாள் - தந்தையிடம் ஏதோ சாக்குச் சொல்லிவிட்டு உள்ளே வந்துவிட்டாள்.
ஆனால், தந்தையோ அவள் நிலை கண்டு உண்மையை உணர்ந்து கொண்டார். மலர்விழி வீட்டை விட்டும் வெளியே செல்லக்கூடாது என்று கட்டளை பிறப்பித்தார் - கட்டுப்பாடு விதித்தார் - வீட்டிற்குள்ளேயே வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தார். அதனால் இரவுச் சந்திப்பும் தடுக்கப்பட்டு விட்டது - தலைவி இல்லத்திற்குள்ளே முடக்கி வைக்கப்பட்டாள் இற்செறிக்கப்பட்டாள்.

பகலிலும் இரவிலும் சந்திக்க முடியாதபடி தடுக்கப்பட்டாள். அதனால் துயரத்திலே தோய்ந்தாள்; உண்பது கிடையாது - உறங்குவது கிடையாது. அதன் காரணமாய் நாளுக்கு நாள் உடல் மெலிந்தாள்.

மலர்விழியின் மேனி மெலிவைக் கண்டனர் பெற்றோர். அதற்குக் காரணம் எதுவாக இருக்கும்? என்று பலவாறு சிந்தித்தனர்.

நோய் என்று கருதி, தேர்ந்த மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் செய்தனர். ஆனால் குணமாகவில்லை.

சாமி இறங்கி ஆடும் அருளாளனை - வெறியாடும் வேலனை அழைத்தார்கள்; வெறியாடச் செய்தார்கள். வெறியாடிய வேலனும் பல்வகைக் காரணங்களையும் கூறினான். அவன் சொன்னபடி அனைத்தையும் செய்தனர். பலன் தான் ஒன்றும் இல்லை.

இறுதியாகக் கட்டுவச்சி என்பவளை அழைத்தனர். கட்டுவச்சி என்பவள் மலையில் வாழும் குறத்தி ஆவாள் - குறி சொல்பவள் - குறி பார்த்துப் பலன் சொல்பவள் ஆவாள்.

கட்டுவச்சி வந்தாள் - அமர்ந்தாள். அவள் முன்னே மலர்விழியை அழைத்து வந்து அமர்ந்தனர்.

“அம்மா! நன்றாய்க் குறி பார்த்துச் சொல்ல வேண்டும்! இவள் நோய்க்கான காரணம் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்!” என்று கேட்டனர் பெற்றோர்.

இதைப் பார்த்த தோழி தேன்மொழி பரிதாபத்தோடு அவர்களை. உண்மை நோய் புரியாமல் இப்படி மயங்குகிறார்களே என இரக்கத்தோடு பார்த்தாள் - ஏதேதோ செய்கிறார்களே என்று கருணையோடு பார்த்தாள்.

கட்டுவச்சியை நோக்கிய பெற்றோர்கள் தொடர்ந்து “அம்மா! அவளுடைய எதிர்காலத்தைப் பற்றியும் நன்றாகச் சொல்! அவளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்! மாப்பிள்ளை எப்படி இருப்பான்? நாங்கள் நினைக்கும் பையனுக்கு மணம் முடித்துக் கொடுக்கலாமா?” என்று கேட்டனர்.

இதைக் கேட்ட தோழி சற்றுப் பதறினாள். மலர்விழியை வேறொரு மாப்பிள்ளைக்கு மணம் முடித்துக் கொடுக்க தீர்மானித்து விட்டார்களே என்று மயங்கினாள் - ஒருவேளை மலர்விழியினுடைய காதல் தோல்வி அடைந்துவிடுமோ என்று கலங்கினாள் - “இனியும் காலம் தாழ்த்துதல் கூடாது; உண்மையை உணர்த்திவிட வேண்டும்!” என்று முடிவு செய்தாள். அடுத்த நொடி..? எப்படி உணர்த்துவது? என்று அறியாது திகைத்தாள். தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள்.
கட்டுவச்சியைப் பார்த்தாள் - அவளோ முதியவள்!
அவளுடைய கூந்தலைப் பார்த்தாள் - அடர்ந்து இருந்தது; அலை அலையாய்ச் சுருண்டு கிடந்தது; வெண்மையான சங்குகளைக் கோர்த்தால் எப்படி இருக்குமோ அதைப்போல் நரைத்து இருந்தது.
அவள் குறி சொல்லத் தொடங்கினாள். ஒரு கட்டுவச்சி குறி சொல்லத் தொடங்கும் முன் அவளுடைய மலையின் பெயரைக் கூறி, அதன் வளத்தைப் பாடி முடித்த பின்னரே குறி சொல்வது வழக்கம்.

அதைப் போலவே, இங்கு குறி சொல்ல அந்தக் கட்டுவச்சியும் தன் மலையின் பெயரைச் சொன்னாள்.

தோழி அப்பெயரைக் கேட்டாள்; துள்ளிக் குதித்து எழுந்தாள்; கட்டுவச்சியைக் களிப்புடன் பார்த்தாள்; முகம் மலர்ந்தாள்; புன்னகை பூத்தாள்.

“குறத்தி மகளே! குறத்தி மகளே! குறி சொல்லும் குறத்தி மகளே! குறவர் குலக் கொழுந்தே! உன் குலத் தெய்வங்களை உரக்கக் கூவி அழைக்கும் குறத்தியே! அவர்களிடம் கேட்டுக் குறி சொல்லும் அகவன் மகளே! குறி கேட்பவர்களின் குலதெய்வங்களையும் கூவி அழைத்துக் குறி சொல்லும் அகவன் மகளே! அகவன் மகளே!
கூறு! இன்னொரு முறை கூறு! இப்பொழுது கூறினாயே ஒரு மலையின் பெயரை - அந்தப் பெயரை இன்றும் ஒரு முறை கூறு! அப்பெயரைக் கேட்கக் கேட்க இதயம் எல்லாம் இனிக்கிறதே! எங்கே கூறு! அப்பெயர் எனக்கு இன்பத்தைத் தருகிறது. என் தலைவியாகிய இவளுக்கும் இனிமையைத் தருகிறது. எனவே, அந்த இனிய மலையின் பெயரை இன்னும் ஒரு முறை கூறு! கூறு! கூறிக் கொண்டே இரு!” என்று மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிக் கரை புரண்டு ஓடக் கூறிக் குதித்தாள் களிப்பால்.

தோழியின் உரையையும் உவகையையும் பெற்றோரும் சுற்றி இருந்த மற்றோரும் புரிந்து கொண்டனர் - தலைவியின் நோய்க்கான காரணத்தைத் தெரிந்து கொண்டனர் - குறத்தி குறித்த குன்றத்தில் வாழும் காளை ஒருவனே அவள் காதலன் என்பதை உணர்ந்து கொண்டனர் - அக்காதலே மலர்விழியின் நோய்க்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டனர். 
“அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்றும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!”
 (குறுந்தொகை 23 - ஒளவை)

Prokon

Prokon

Primavera Project Planner

Primavera Project Planner

Facebook photo downloader - Pick&Zip

Facebook photo downloader - Pick&Zip

கொழுப்பு அதிகரித்தால் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம்




வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதால் காரனேரி எனப்படும் இதயத்திற்கு ரத்தம் அனுப்பும் குழாய்களிலும், இதயத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ஆர்ட்ரி குழாய்களிலும் அடைப்பு ஏற்படுகிறது.இதனால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மயோ கிளினிக் ஆய்வாளர்கள் 15 ஆயிரத்து 923 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் போது இந்த உண்மை தெரியவந்தது. சாதாரண உடல் பருமன் அடர்த்தி உள்ளவர்களும் இடுப்பு கொழுப்பு அதிகரிப்பால் இதய நோய்களை சந்திக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தங்களது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்க இதயவியல் கல்லூரி இதழில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகையில்,"இதய நோய்த் தாக்கம் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளது. மயோ கிளினிக் ஆய்வாளர்கள் இடுப்பு வயிற்றுப் பகுதியை ஆய்வு செய்தனர்.
சாதாரண வயிற்றுப் பகுதியை விட அதிக பருமன் உள்ள வயிற்றுப் பகுதி பெருத்தவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் 75 சதவீதம் கூடுதலாக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண உடல் எடை கொண்டவர்களாக இருந்த போதும் வயிற்றுப் பகுதி பருத்தவர்கள் கொழுப்பு கூடுதல் காரணமாக இதய நோய்களை சந்திக்க வேண்டி உள்ளது. இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காணப்படும் அளவீடுகளை டொக்டர்கள் ஆய்வு செய்து இதய நோய்களை தவிர்க்க நோயாளிகளுக்கு உரிய அறிவுரை தர வேண்டும் என கூறுகின்றனர்.

மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி




மக்களிடையே தொடர்புக்கு மிகவும் அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது.அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்க அவசியமாகிறது. குறைந்தபட்சமாக தாய்மொழி, தேசியமொழி, உலகப்பொதுமொழி ஆகியவற்றையாவது அறிந்திருக்க வேண்டும்.
சிலர் பொது இடங்களில் பலமொழிகளை பேசி அசர வைப்பார்கள். பலர் தாய்மொழியைத் தவிர மற்றமொழி தெரியாமல் விழி பிதுங்க நிற்பார்கள். படித்த சிலர்கூட பொது இடங்களில் இருக்கும் அறிவிப்புகள் வேறு மொழியில் இருந்தால் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற மொழிப் பாடங்கள் சிரமமாக இருக்கும்.
இவர்களுக்கு உதவும் வகையில் மொழிபெயர்க்கும் கண்ணாடி வந்திருக்கிறது. இந்த மூக்குக்கண்ணாடியுடன் இணைந்து ஒரு டிரான்ஸ்லேட்டர்(மொழிபெயர்க்கும்) கருவி இருக்கும். இது ஒரு கமெராவும், மைக்ரோ போனும் இணைந்த கருவியாகும்.
இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு நீங்கள் வாசிக்கும் போது மைக்ரோபோன் வேலை செய்து அதை மெமரி கருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத் தெரியும் படியாக காட்டப்படும்.
இதனால் நீங்கள் எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்து அறிந்து கொள்ள முடியும். இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது.
ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவே இதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை

மருத்துவ செய்தி


கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். திராட்சைப் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.
இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.
கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும். இதற்கு திராட்சைச் சாறு அருமருந்தாகிறது.
ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பலச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிர்க்கு திராட்சை சிறந்த மருந்து.
சிறிய அளவில் எடுத்துக் கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு. திராட்சைப் பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள்.
அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாத உடம்புக்குள்ளானவர்களும் அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

உங்களது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள




ஆங்கிலத்தில் நன்கு படித்து முதன்மையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசவராமால் பலர் இருக்கின்றனர்.இவர்களுக்கு ஆங்கில மொழியை அசத்தலாக தினமும் வீடியோவுடன் சொல்லி கொடுக்க ஒரு தளம் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் அவர்களுக்கு தனியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது. இப்படி ஆங்கிலம் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ள அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
ஆங்கிலத்தை சொல்லி கொடுக்க பல இணையதளங்கள் இருக்கிறதே இத்தளத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று எண்ணும் அனைவருக்கும் பதிலாக இத்தளம் ஆங்கிலத்தை வேடிக்கையாக தினமும் வீடியோவுடன் சொல்லி நம்மை அசத்துகிறது.
இந்த வீடியோக்களை தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்தாலே போதும். சில வாரங்களில் நாமும் ஆங்கிலத்தை எந்தப்பிழையும், எந்த தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக பேசலாம். ஒவ்வொரு ஆங்கில வார்த்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் தொடங்கி ஒவ்வொருத் துறை சம்பந்தப்பட்ட வீடியோ கோப்புகளை காட்டி நம் ஆங்கில அறிவை வளர்க்கிறது.
ஆங்கிலம் கற்றுகொள்ள விரும்பும் நபர்கள் முதல் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச விரும்பும் அனைவருக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
http://funeasyenglish.com/

Gaddafi's son joins Libyan protesters REVOLUTION 2011.mp4

Gaddafi Son Arming People - Saif Gheddafi Arma La Folla

SHIRDI KE SAIBABA Deepavali manaai suhani. Hi Res

பேஸ்புக் ஊடாக தொடர்பை ஏற்படுத்தி சமூகவிரோத செயல்- 200இளம்பராயத்தினர் கொழும்பில் கைது!

பேஸ்புக் ஊடாக தொடர்பை ஏற்படுத்தி சமூகவிரோத செயல்- 200இளம்பராயத்தினர் கொழும்பில் கைது!

மட்டக்களப்பில் கிணற்றுக்குள் டெங்கு நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பில் கிணற்றுக்குள் டெங்கு நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Jehovah's Witnesses in Alabama Tornado Birmingham, AL tornado April 27, ...

Gaddafi's youngest son 'killed in NATO air strike'

Human Cloning - Frankenstein Science

Human cloning - part two - why investors don't like cloning

Human cloning - part one - who is doing human cloning. Future of human ...

Part 1 - Cloning the first Human - BBC Horizon

Stem Cells and Human Cloning

Human Cloning

Monday, May 2, 2011

How they cloned Dolly the sheep.

What is cloning - CBC Archives.rm

Osama Bin Laden Dead: Mastermind of 9/11 Attacks

ஒரிசாவில் 7 பேர் எரித்துக் கொலை!

ஒரிசாவில் 7 பேர் எரித்துக் கொலை!

திருச்சியில் ரஜனி ரசிகர்கள் நடிகர் வடிவேலுவை கண்டித்துள்ளனர்!

திருச்சியில் ரஜனி ரசிகர்கள் நடிகர் வடிவேலுவை கண்டித்துள்ளனர்!

உலங்குவானூர்தியுடன் காணாமல் போன அருணாசல பிரதேச முதல்வர் கண்டு பிடிக்கப்படவில்லை!

உலங்குவானூர்தியுடன் காணாமல் போன அருணாசல பிரதேச முதல்வர் கண்டு பிடிக்கப்படவில்லை!

கடாபியின் இளைய மகனும் பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்!

கடாபியின் இளைய மகனும் பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்!

முபாரக்கிற்கு மரண தண்டனை கிடைக்கலாம் – நீதித்துறை அமைச்சர்!

முபாரக்கிற்கு மரண தண்டனை கிடைக்கலாம் – நீதித்துறை அமைச்சர்!

சீனாவின் மக்கள் தொகை 134 கோடியாக உயர்ந்தது!

சீனாவின் மக்கள் தொகை 134 கோடியாக உயர்ந்தது!

ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்- அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு!

ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்- அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு!

Double Arch, Arches National Park, in 3D

Double Arch, Arches National Park, in 3D

Payson Canyon - 360 Degree Interactive Panorama

Payson Canyon - 360 Degree Interactive Panorama

Canyonlands National Park 360 Degree Interactive Panorama

Canyonlands National Park 360 Degree Interactive Panorama

Sulphur Creek in Capitol Reef National Park, Interactive VR Panorama

Sulphur Creek in Capitol Reef National Park, Interactive VR Panorama

SL TEAM @PRESIDENT'S HOUSE


http://groups.yahoo.com/group/babes_in_blue/                http://groups.yahoo.com/group/babes_in_blue/


http://groups.yahoo.com/group/babes_in_blue/               

http://groups.yahoo.com/group/babes_in_blue/


http://groups.yahoo.com/group/babes_in_blue/                https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilKBKZV2Wm2NjplIAV1DaxgVnv55jamvf_uTllG6Klu0bqacAigEQVU3Z5SF-D8zSwd7G_RGgZWKlgxHui5doaBj2NaDYhWXhZJ-qzkPxq922ozN2BMN4rTY8y1XwPd0BTWwGddqXaLCY/s1600/622x.jpg

 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNMnaQN7OoMBnIoBQBNq1gTF_kJ9pvvfl1TRTm4Gsyrh1s4yI0JEsIEVkk59DUXrdLgzJ5tPSSQJTQM11460nH2lG2jFJAhGuAjiX-5yXGMvBZIXXI1H9mlB5SEgDYjnsO9NXKu12f3Lk/s1600/623x.jpg               

http://groups.yahoo.com/group/babes_in_blue/
 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmIMhBb3rKQ03HRTWpcThNabziluviwkmvSoJHK1oUDJiquvIvRt_vk8DLtbbuTnDfJGTGWbVCrUSz9t-wA2I2eJNid6QEKP2YNDimd0xd2eIRIAd1e-HfCs3_hMIRu9BFfpa4ZdHRP14/s1600/617x.jpg

Safety First!

Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails
Join 
smilingsmilers for Innovative Mails

நாம் வாழும் உலகம்

பச்சை வயல்வெளி, நீலவானம், மஞ்சள் வெயில் மாலை, வெண்ணிற அலைதவழும் கடற்கரை, மணம்வீசும் மலர்கள் பூத்துக்குலுங்கும் சோலைகள், மேகம் முட்டும் மலை முகடுகள், சில்லென்ற பனிக்காற்று, தலை நனைக்கும் மழைத்துளிகள், குதித்தோடும் அருவிகள், இரவு நேர விண்மீன்கள்...நம்மை சூழ்ந்து நிற்கும் இயற்கையழகை சொல்லிக்கொண்டே போகலாம். நினைக்கும்போதே மனதிற்குள் புத்துணர்ச்சி ஏற்படும் இந்த இயற்கை வனப்புகளை ரசித்து மகிழ நமக்குத்தான் நேரமில்லாமல் போய்விட்டது. அன்றாட வாழ்க்கை ஓட அதிகாலை விழித்து அலுவலகத்துக்கு செல்வதற்கு தயாராகி, போக்குவரத்து நெரிசலில் மீண்டு களைப்போடு அலுவலகம் சென்று அன்றைய பணிகளை முடித்து மீண்டும் ஒருவழியாக களைப்போடு வீடு திரும்பும் நமக்கு எங்கே இயற்கையழகை ரசிக்க வாய்ப்புள்ளது என்பது நம்மில் பலரது கேள்வியாக இருக்கும். ஆனாலும் நமக்குள் இயற்கையின் கவின்மிகு காட்சிகளை கண்டுகளிக்கும் ஆவல் இருப்பதை மறுக்கமுடியாது. நான் கிராமத்தில்தான் வாழ்கிறேன், வாழ்கையே இயற்கையோடுதான் என்பவர்கள் கூட கடற்கரையில் அலையில் கால்நனைக்கவோ, கடலலையை எதிர்த்து நீந்தி மகிழவோ ஆசைப்படாமல் இருக்கமுடியாது. நகரமோ, கிராமமோ, கடலோரப்பகுதியோ நாம் வசிக்கும் இடம் எதுவாக இருந்தாலும், இயற்கையழகை ரசித்து மகிழும் ஆவல் நம் அனைவருக்கும் உண்டு என்பது உண்மை.

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்று கேட்கும் அன்பர்களுக்கு இனி நான் சொல்லப்போகும் தகவல்கள் விடையளிக்கக்கூடும். நாம் வாழும் உலகம் அழகானது. அழகான இந்த உலகத்தை பற்றிய சில தகவல்கள் இப்போது உங்களுக்காக:

*பூமி வளமிழந்து வருகிறது. முன்பு போல் விவசாயம் பலன் தருவதில்லை என்பவர்களுக்கு ஒரு தகவல். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கடந்த ஆண்டும் 200 கோடி டன்னுக்கு மேலான தானியங்களை உலகம் உற்பத்தி செய்துள்ளது. இது வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதும் செய்யப்படாத உற்பத்தியளவாகும். அதேவேளை கடந்த 2004ம் ஆண்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஏற்றுமதி 1590 கோடி அமெரிக்க டாலாராக பதிவானது. 1961ம் ஆண்டில் ஒரு ஹெக்டேருக்கு 0.49 கிலொவாக இருந்த பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு 2004ம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2 கிலோவாக உயர்ந்துள்ளது. அதாவது 4 மடங்காகியுள்ளது.

*அதேவேளை மீன்பிடித் தொழிலின் மொத்த உற்பத்தி அல்லது மொத்த மீன் பிடியளவு 1997ம் ஆண்டு முதல் 13 விடுக்காடு குறைந்துள்ளது, என்றாலும் மொத்த மீன் உற்பத்தி மீன்பண்ணை தொழில்துறையின் வேகமான வளர்ச்சியால் 2003ம் ஆண்டில் 132.5 மில்லியன் டன்னாக பதிவாகியுள்ளது.

*அலுமினியம் உற்பத்தியும் 31.2 மில்லியன் டன் என்ற புதிய உச்ச அளவை எட்டியது. எஃகு உற்பத்தி 1129 மில்லியன் டன்னாக புதிய சாதனை படைத்தது.

விவசாயம் சரியில்லை, நகரத்துக்கு சென்றால் ஏதாவது வேலை தேடி பிழைப்பு நடத்தலாம் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக மக்களிடையில் உள்ளது. வளரும் நாடுகள் பலவற்றில் இந்த எண்ணம் பரவலாக காணப்படுகிறது. வசதி, வாய்ப்புகள் அதிகம் என்பதால் மாநகரங்களுக்கு வேலை தேடி செல்லும் வழமை வளர்ச்சியடைந்த நாடுகளிலும் உள்ளது. இந்த எண்ணம் நகரமயமாக்கல் எனும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, நகரங்களில் அடிப்படை வசதிகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இல்லாத வசிப்பிடங்களில் பெரும்பகுதி மக்கள் வாழும் நிலை ஏற்படுகிறது. நகரங்கள், மாநகரங்களில் விண்ணுயர்ந்த கோபுரங்களுக்கு கீழே குடிசைப்பகுதிகள் நெருக்கமாக அமைந்துள்ள நிலைக்கு இந்த நகரமயமாக்கல் என்பதே காரணம். *ஒரு புள்ளி விபரத்தின்படி 100 கோடி மக்கள் அல்லது 3ல் ஒரு நகரவாசி இத்தகைய குடிசைப்பகுதியில் வாழ்பவர். 2002ம் ஆண்டின் நிலைப்படி 110 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதியில்லா நிலையில் வாழ்கின்றனர், 260 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளற்றவர்களாக உள்ளனர்.

*மறுபுறத்தில் வாகன தயாரிப்பில் புதிய உச்ச அளவாக கடந்த 2005ம் ஆண்டில் 64.1 மில்லியன் கார்களும், இலகு ரக சரக்கேற்றி வாகனங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

*வான் போக்குவரத்து அல்லது விமான போக்குவரத்தும் 2004ம் ஆண்டில் புதிய சாதனை அளவாக மொத்தத்தில் 190 கோடி மக்கள், 34000 கோடி கிமீ தூர பயணம் மேற்கொண்டதாக பதிவாகியது. ஆனாலும் உலகின் 5 விழுக்காட்டு மக்கள் மட்டுமே தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது விமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். ஆச்சரியாமாக உள்ளதா, ஆனால் அதுதான் உண்மை. அதாவது உலகின் 95 விழுக்காட்டினர் இதுவரை விமான பயணத்தை மேற்கொண்டதேயில்லை.

இத்தகைய சமமற்ற சமுதாயத்தில் வாழ்கிறோமா என்பதை நினைக்கையில் "பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே, நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

*நுகர்வு திறனின் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் கடந்த ஆண்டில் உச்ச நிலையாக, மொத்த உலக உற்பத்தியளவு 596000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பு என பதிவானது. இதை வாங்கினால் அது இலவசம், பளிச்சிடும் பற்களுக்கு இந்த வகை பற்பசையை பயன்படுத்துங்கள் என்று விளம்பரப்படுத்த தொழில் நிறுவங்கள் கடந்த ஆண்டில் செலவழித்து தொகை 2.4 விழுக்காடு அதிகரித்து 57000 கோடி அமெரிக்க டாலர் தொகையை எட்டியது. இதில் பாதியளவு விளம்பர செலவினம் அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

*மக்களின் சுகாதாரம் மற்றும் சமுதாய ரீதியிலான கண்ணோட்டத்தில், கடந்த ஆண்டில் உலக மக்கள் தொகையில் 7கோடியே 40 லட்சம் பேர் அதிகரித்து மொத்த உலக மக்கள் தொகை 645 கோடியானதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. 2005ம் ஆண்டில் மட்டும் 50 லட்சம் பேர் எச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர், 30லட்சம் பேர் எய்ட்ஸ் தொடர்பான நோய்களுக்கு பலியாகினர்.

ஆறுதலான செய்தி எதுவுமில்லையா என்றால், இருக்கிறது. இளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் 7 விழுக்காடு குறைந்துள்ளது. 1995 முதல் 2000ம் ஆண்டு வரையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 61.5 பேர் பலியான நிலை மாறி 2000 முதல் 2005 வரையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 57 பேர் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

*மொழி என்பது கலாச்சாரத்தின் ஆணிவேர் போன்றது. ஒரு மனிதனின் சிந்தனை, செயல்பாடு, தொடர்பு முறை எல்லாவற்றிலும் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இன்றைக்கு உலகின் 7000 மொழிகள் அழியக்குடிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நாம் அறிவோமா. அவ்வளவு ஏன் ஏறக்குறைய 500 மொழிகள் விளிம்பில் இருக்கின்றதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. அதாவது இத்தகைய மொழி என்ற ஒன்று இருந்தது என்று வரலாற்று பாடத்தில் பின்வரும் சந்ததியினர் படிக்கும் நிலைக்கு இந்த மொழிகள் தள்ளப்பட்டுள்ளன.

*எரிபொருள் எண்ணெய் பயன்பாடு கடந்த ஆண்டில் 1.3 விழுக்காடு அதிகரித்து 38000 கோடி டன்னாகியது. காற்று மண்டலத்திலான கரியமில வாயுவின் தீவிரம், பரும அளவு அல்லது கன அளவை பொறுத்தவரை 2004ம் ஆண்டில் அதிகபட்ச உயர்வாக 0.6 விழுக்காடு அதிகரித்து லட்சத்தில் 37.96 பகுதியாக உயர்ந்தது.

*2005ம் ஆண்டில் சராசரி உலக வெப்பநிலை 14.6 டிகிரி சென்டிகிரேட், பூமியின் பரப்பில் இதுவரையில் மிக அதிகமாக பதிவான வெப்பநிலை இதுவாகும்.அதாவது பூமியில் இதுவரையில் மிக அதிகபட்ச வெப்பமான ஆண்டாக 2005ம் ஆண்டு பதிவாகியுள்ளது. 1880ம் ஆண்டில் இந்த உலக வெப்பநிலை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டபின் இதுவரை 5 முறை பதிவான உயர்ந்த வெப்பநிலை ஆண்டுகள் எல்லாம் 1998க்கு பிறகே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய தகவலாகும்.

*பருவநிலை தொடர்பான இடர்பாடுகள், சீரழிவுகளால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் கடந்த ஆண்டில் மட்டும் 204 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் ஆகும். இதற்கு முன்பாக அதிகபட்சமான இழப்பாக பதிவான 112 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் என்ற 1998ம் ஆண்டின் இழப்பைக்காட்டிலும் இது ஏறக்குறைய இரண்டு மடங்காகும்.

 *2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உலக அளவிலான வனப்பகுதி 36 மில்லியன் ஹெக்டேர் அளவு குறைந்தது. கடந்த 25 ஆண்டுகளில் 20 விழுக்காட்டு சதுப்புநிலக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2005 ஆண்டின்படி 12 விழுக்காட்டு பறவையினங்கள் அழியும் தருவாயில் உள்ளன என்ற வகையில் இணைக்கப்பட்டுள்ளன. 3 விழுக்காட்டு தாவர இனங்கள் அழிந்துவிடும் நிலையில் உள்ளன.

நன்றி:-
tamilcirlce.net

என் இதயத்தில்...

 
சாம்பல் நிற இரவு

சோம்பலாய் கண்மூடி
கிடந்தாலும் மனம்
தாயின் அரவணைப்பைத்தேடும்
குழந்தையாய்....
என் ஞாபகக் கல்லறையில்
உன் வண்ண நினைவுகள்
கண்துயில மறுக்கின்றன!
உறக்கமில்லா இரவில்
என் கண்கள் அழுவதை
என்னால் கூட
அறியமுடியவில்லை!
ஆனாலும் ஏனோ கண்ணீர்
கசிந்தபடி....
காதலின் விரல் நகங்கள்
குத்திக் கிழிக்கின்றன
என் இதயத்தில்...
அன்பு காட்டியது குற்றமா?
அன்பு கேட்டது குற்றமா?
இன்னும் புரியவில்லை...
தொலைதூர சுகத்தை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
எமாற்ற ஏக்கங்களே
மிச்சமாகின்றன!
உள்ளிருக்கும் கவலையுடன்
உன் கவலையும் இப்போது
ஒட்டிக்கொண்டது!
ஒவ்வொரு கணமும்
இறந்த காலம்
நினைத்து நினைத்தே
நிகழ்காலம்
நிஜமிழந்து நிற்கின்றது
எதிர்காலம்
சூனியமாய் சுற்றுகின்றது!
என் மனத் தடாகத்தில்
தொடர்ந்து
உன்னைத்தவிர யாரும்
சங்கமிக்க முடியாது!
உன்னைப் போன்றதொரு
பாதுகாப்பான
சரணாலயம் வேறென்ன
இருக்கிறது எனக்கு?
மேகத்தில் மறந்திருக்கும்
மழைநீரைப் போல்
எனக்குள்
நிறைந்திருக்கும்
உன்னை
இறக்கிவிடத் துணியவில்லை..!
காலங்கள் இறந்தாலும்
என் காதல்
ஒருபோதும் இறப்பதில்லையடா...!

''எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை!'

சமீபத்தில் நான், விகடனில் ஒரு செய்தி படித்தேன். மிஸ் சென்னை 99 போட்டியின் கடைசிச் சுற்றில் ஒரு கேள்வி கேட்டார்கள்.
'மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?’
இந்தக் கேள்விக்கு, 'நேர்மை’ என்று பதில் அளித்து, த்ரிஷா என்கிற பெண் கிரீடத்தைத் தட்டிக் கொண்டு போனாள். இதில் என்னை ஆச்சர்யப்படவைத்த விஷயம் என்ன என்றால், இளைய தலைமுறையினர்கூட, நேர்மையான குணத்தை மெச்சுகிறார்கள் என்பதுதான். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

பக்கத்து வீட்டுப் பெண் குழந்தை கதை சொல்ல வந்திருந்தாள். நாலு வயது இருக்கும்.
'ஒரு ஊர்ல ஒரு கௌவி இருந்தா. அவ வடை சுட்டப்போ, ஒரு காக்கா வந்து வடையைப் பறிச்சுண்டு போய், ஒரு மரத்துல உக்காந்துச்சு. அந்தப் பக்கத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு வடையைப் பார்த்ததும் வாயில எச்சில் ஊறிச்சாம். அது காக்காவப் பார்த்து, 'காக்கா... காக்கா... நீ நல்ல அழகா இருக்க... உன் குரல் இன்னும் அழகா இருக்கு. ஒரு பாட்டுப் பாடு’ன்னுச்சாம். காக்கா, 'கா... கா...’ன்னு கத்த, வடை கீழே விழுந்துச்சாம். நரி எடுத்துண்டு ஓடிச்சாம்!’
நரியும் காகமும், வடையும் காகமும், கிழவியும் வடையும், நரியும் வடையும் என்று பலவிதத் தலைப்புகளைக்கொண்ட இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, சிறுமி போய்விட்டாள்.

அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்த ஒரு சிறு பெண்ணிடம், இந்தக் கதையின் போதனை என்ன என்று ஒரு முறை கேட்டேன். அந்தப் பெண் கொஞ்சமும் தயங்காமல், 'வாய்க்குள் சாப்பாடு வைத்துக்கொண்டு பேசக் கூடாது!’ என்றாள். அமெரிக்காவில் உணவை வாயில் வைத்துக்கொன்டு பேசுவது மிகவும் பாவமான செயல் என்பது புரிந்தது.
இன்னொரு சிறுவன் சொன்னான், 'ஏமாற்றினால் நீயும் ஏமாற்றப்படுவாய்’ என்று. ஒரு சிறுமி மாத்திரம் 'முகஸ்துதிக்கு மயங்கக் கூடாது’ என்றாள்.
உண்மையில், இந்தக் கதையில் நாயகன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. கிழவியா, நரியா, காகமா அல்லது வடையா? வடைதான் ஊடுசரடாகக் கதை முழுக்க வியாபித்து இருக்கிறது என்று கூறுவார்கள்.

அந்தப் பெண் குழந்தை, கதையின் கடைசி வரியைச் சொல்லும்போது, இரண்டு கால் பெருவிரல்களையும் நிலத்தில் ஊன்றி எம்பி நின்று 'நரி எடுத்துண்டு ஓடிச்சாம்’ என்று சொன்னபோது, அதன் முகத்தில்தான் எத்தனை பரவசம். காகம் ஏமாந்ததில் அத்தனை சந்தோஷம்! பாடம்: ஏமாற்றினால் பிழைக்கலாம்.

இன்னும் ஒரு பரம்பரைக் கதை சிறுவர் மத்தியில் உலவுகிறது. ஏழை விறகுவெட்டியின் கோடரி ஒருநாள் ஆற்றில் விழுந்துவிட்டது. ஒரு தேவதூதன் தோன்றி, ஆற்றில் குதித்து ஒரு தங்கக் கோடரியைக் கொண்டுவந்தான். விறகுவெட்டி, அது தன்னுடையது இல்லை என்றதும் இன்னொரு முறை மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியைக் கொண்டு வந்தான். விறகுவெட்டி அதையும் மறுக்க, கடைசியில் தேவ தூதன் அவன் உண்மையாகத் தொலைத்த இரும்புக் கோடரியைக் கொண்டுவந்து கொடுத்தான். விறகுவெட்டி, அதுதான் தன்னுடையது என்று ஏற்றுக்கொண்டான். கதை இங்கே முடிந்திருக்க வேண்டும். ஆனால், தேவதூதன் என்ன செய்தான்? விறகுவெட்டியின் நேர்மையை மெச்சி தங்கக் கோடரி, வெள்ளிக் கோடரி இரண்டையும் பரிசாகக் கொடுத்தானாம்.
இது போதிக்கும் பாடம் என்ன?
கடைப்பிடித்தால், இறுதியில் செல்வம் இருக்கும். இதுவும் ஒரு தப்பான போதனைதான்! நேர்மைக்கும் செல்வத்துக்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை. உண்மையில் பார்த்தால், நேர்மையாக இருப்பவர்கள் செல்வம் சேர்ப்பது அரிதான காரியம்.

திருக்குறிப்பு நாயனார் என்று ஒருவர். இவருக்கு வேலை, அடியார்களின் ஆடைகளை இலவசமாகச் சலவை செய்து தருவது. அப்படி ஒருநாள் ஒரு தொண்டரின் கந்தையைத் துவைத்து, உலர்த்தித் தருவதாக வாக்கு கொடுக்கிறார். தோய்த்துவிட்டார். உலர்த்துவதற்கு இடையில் மழை வந்துவிட்டது. வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. என்ன செய்திருக்க வேண்டும்? 'போய்யா... உலர்த்து வதற்கு இடையில் மழை வந்து விட்டது. என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?’ என்று கேட்டிருக்க வேண்டாமோ? மாறாக, மன்னிப்புக் கேட்டு தண்டனையாகக் கல்லில் தன்  தலையை முட்டிக்கொண்டாராம். மனசாட்சி என்பது இதுதான்!

நம்மில் பலர் நேர்மையாக இருப்பதற்குப் பின்விளைவுகளின் பயம்தான் காரணம். பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் நேர்மையாக இருப்பது, அப்பா பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் சிகரெட் பிடிக்காமல் விடுவது, ஆசிரியரிடம் அகப் பட்டுவிடுவோம் என்ற பயத்தில் மாணவன் பரீட்சை பேப்பரை யோக்கியமாக எழுதுவது, மனைவியிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கணவன் ஒழுக்கமாக நடந்துகொள்வது... இவை எல்லாம் உண்மையில் 'நேர்மை’ என்ற பதத்தில் அடங்கும் என்று கூற முடியாது.

அந்த ஆப்பிரிக்கன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக் கஷ்டம். ஒரு வெள்ளைத் தாளில், சம்பள முன் பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான். இவனுக்கு ஆறு குழந்தைகள். கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள். நிறுவனத்தில், குழந்தைகளுக்கான படிப் பணம் உண்டு. மாதா மாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.

ஒருநாள் இவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம், இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்கொண்டு கடிதம் எழுதியதுதான்!

என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை. இந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. இவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது. எப்போதும் கஷ்டத்தில் உழலும் இவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?

நிர்வாகம் கண்டுபிடித்துவிடும் என்ற பயமாக இருக்கலாம். உரிமை இல்லாத பணத்தைப் பெறுவதில் உள்ள குற்ற உணர்வாக இருக்கலாம். இல்லாவிடில், இறந்துபோன அருமைக் குழந்தைகளின் சம்பாத்தியத்தில் சீவிப்பது அவனுக்கு மன வருத்தத்தைத் தந்திருக்கலாம்.

எதுவோ, படிப்பறிவு சொட்டும் இல்லாத இந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். இவனுடைய நடத்தைக்கான காரணத்தை நான் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேர்மையின் தரம்... தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரை மணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்கு அர்த்தம். மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?

எல்லாக் கேள்விகளுக்கும் விடை திருவள்ளுவரிடத்தில் இருக்கும். அவர் என்ன சொல்கிறார்? மனிதனுடைய நற்பண்புகளுக்கு எல்லாம் ஆதாரம்... வாய்மை. அதாவது உண்மைத் தன்மை. நேர்மைக்கு வேர் வாய்மை. அது இல்லாமல் நேர்மையாக இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Transparency  துலாம்பரத் தன்மை அல்லது ஒளிவு மறைவற்ற தன்மை என்றும், Accountability  கணக்கு காட்டும் அல்லது பதில் கூறும் தன்மை என்று சொல்வதும் இதைத்தான். உதாரணத்துக்கு, ஒரு பெரிய டெண்டரைப் பகிரங்கமாக, ஒளிவுமறைவின்றிச் செயல்படுத்தும்போது, அங்கே பொய்க்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. கள்ளம் கரைந்து போகிறது!

அன்று முதல் இன்று வரை நேர்மையானவர்களால்தான் உலகம் இயங்குகிறது. அயோக்கியர்களோடு ஒப்பிடும்போது இந்த உலகத்தில் நேர்மையானவர்கள் மிகச் சிலரே. ஒரு கோலியாத்துக்கு ஒரு சிறுவன் டேவிட் போதும். நூறு கௌரவர்களை ஐந்து பாண்டவர்கள் சமன் செய்துவிடுவார்கள்.

'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.’

ஒரு சிலரின் உழைப்பில்தான் உலகம் உய்க்கிறது. சாரதி சிலர், பயணிகள் பலர். மூன்று போக விதை நெல்லைக் கண்டுபிடித்தவர் சிலர், அனுபவிக்கும் விவசாயிகள் அநேகர். கம்ப்யூட்டரையும் இணையத்தையும் உண்டாக்கியவர் சிலர். அதன் பயனை அனுபவிப்போரோ கோடிக்கணக்கில்!

பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது. அதுதான் உண்மையான நேர்மை!

மிஸ் சென்னை 99 மிகவும் சரியாகச் சொன்னதுபோல், மனிதனுக்கு அவசியமான, உன்னதமான பண்பு இது. நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மன சாந்திக்காக, நம் சந்ததியிரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு இது சாத்தியமாக இருந்தது. நமக்கும் சாத்தியமாகும்!

Sun Lo Sai Baba Vinti ( Lata Mangeshkar)

Coconuts

Maybe this is why it is such an important item used in Hindu rituals for thousands of years.

 
Did You Know...

. . . that coconuts are one of the wonder foods on earth that amply provides for all human needs?  They can even save your life!

   Few people (even fewer doctors) understand how important the coconut is to stabilizing blood sugar; lowering cholesterol; healing; hydration; and even replacing blood plasma in an emergency.


   Referred to as kalpa vriksha (Sanskrit for "the tree that supplies all that is needed to live") in ancient India, the coconut palm has been recognized as a top immune booster, antifungal, antibiotic, antiviral and antibacterial remedy for thousands of years all over the world.  Yet, it has only been recently that modern researchers have begun to fully discover the massive health benefits this amazing fruit seed offers.

   To give just one example of coconuts' live-saving properties, they were used extensively in the Pacific during World War II.  Since blood plasma supplies were scarce, it was very common for medics to siphon pure coconut water from young coconuts to be used as emergency plasma transfusions for soldiers who were injured.  Since coconut water is nearly identical to human blood, it was suitable for people of all blood types..

   Because of its strong antioxidant properties, the coconut can be used to:
 
==> Lower cholesterol
==> Improve digestion
==> Ward off wrinkles
==> Stabilize glucose levels
==> Fight off viruses
==> Build cells
==> Regulate hormones
==> Increase thyroid production
==> Lose weight
==> Increase metabolism
==> Fight infections
==> Stave off memory loss
==> Kill bacteria
==> And more!


    Considered one of the most treasured foods of all time, coconut products -- including coconut flesh, coconut water, coconut oil, and coconut cream -- each deliver superb health benefits.
 
   Coconut oil, for instance, is considered the best and safest oil to use for cooking -- even superior to extra virgin olive oil when it comes to giving the body what it needs for optimum health.  Unlike other fats and oils that we  typically use for cooking and baking, coconut oil does not form polymerized oils or dangerous trans fatty acids in our bodies, which can raise our cholesterol levels; clog our arteries and even make our skin sag and wrinkle.  Plus, this ultra-safe oil can give your body important antioxidants that can help build stronger cells and improve your overall health and well being.

   Here are a few ways that you can use coconut products to stave off disease and to recapture the look and feeling of youth:

Coconut Water
- The coconut is a natural water filter.  It takes almost 9 months for a coconut to filter every quart of water stored within its shell.  This makes the resulting coconut water completely pure and sterile, which is one reason why it can be used for blood transfusions.

   Another benefit of coconut water is the fact that it has the highest concentration of electrolytes than anything else found in nature. This makes it an excellent source of hydration.


cid:_1_06E8ACE006E88444001111FF482577CE
Coconut Oil - In addition to being superior for cooking and baking, coconut oil also makes a superb topical oil that can help to naturally rid the skin of dangerous toxins.  It also gives the skin the perfect mix of hydration and antioxidants that it needs to stay healthy, smooth and younger-looking longer.

   Another great benefit of coconut oil is in protecting your teeth from the bacteria that can cause cavities and disease.  Simply rubbing a little fresh coconut oil on your gums and teeth can keep them stronger and healthier than virtually any other dental treatment.

   Most people don't realize that coconut oil can actually help you lose weight!  Yes, simply changing your cooking oil from the unsaturated fat variety to coconut oil can help you lose those extra pounds.  Here's why:  Unsaturated fats found in canola, corn and other vegetables oils, as well as margarine  suppress the metabolism, which makes it harder to lose weight -- and easier to gain it.  Over time, this metabolism suppression may result in 20-30 pounds of excess weight that your body cannot get rid of.  Coconut oil, on the other hand, helps to increase thyroid function and boost your metabolism -- 2 important components to shedding unwanted pounds.

Coconut Cream
- The best skin treatment product one can use to achieve flawless skin may quite possibly be coconut cream.  Unlike traditional skin creams which can actually introduce fats and oils to the skin that will break it down over time, making it look older, creams derived from the coconut can actually replenish the skin, giving it a more youthful and healthy glow than most other skin care products on the market.

   When it comes to buying coconut products, coconuts are not all created equal.  Wild coconuts are always best, but can be hard to obtain if you don't live in a tropical country.  Whether you are using this wonder food to boost your immune system; increase your metabolism or fight wrinkles, using products from young coconuts will help you reap the most benefit.


   Young coconuts contain the purest unsaturated fat, compared to the fat found in the more mature varieties.  This is why they offer the most rejuvenation properties for the body's tissues.  But how can you tell how old a coconut is?  Young coconuts are usually green in colour and oddly shaped.  The brown hairy ones are mature coconuts, and while they offer a lot of healthy benefits, they aren't nearly as good for you as younger varieties.

   The best place to find young fresh coconuts is, of course, in the markets of the tropics, so be sure to seek them out if you travel to those areas.  Coconut-producing regions export coconuts all over the world, however, so it's relatively easy to find coconuts at your local health food store or Asian grocer.

ARTICLE - ALUMINUM POISONING

ARTICLE - ALUMINUM POISONING





As the metal aluminum is present in our food, water supply, and soil, most people suffer from some degree of aluminum toxicity. After years of accumulated exposure and storage of it in body tissues, this poison can have results ranging from brain degeneration to skeletal deformities.

Dangers of Aluminum Toxicity

Sources of Aluminum

Nutritional Support

While the first step in ridding your body of this poison is to avoid aluminum intake as much as possible. The next is to provide your body with nutritional support to give it the strength it needs to detoxify this metal. There are several supplements that can assist in this process. They are Core Level C, Core Level Health Reserve and Core Level Liver.

Detoxification Symptoms

When aluminum comes out of its stored locations in your body it can act as an irritant. For example it has a tendency to irritate nerve endings which can irritate muscles. Therefore, when someone is detoxifying aluminum, there can be discomfort involved. And, since the kidneys are the organs that handle this detoxification, there may be pain in the back, over the kidneys, also.
Because aluminum tends to concentrate itself in the brain, the detoxification process can be accompanied by mental confusion.
It can also cause flu-like symptoms with fever, chills and mucous discharge. The detoxification will run its course and the symptoms will go away. Because any nasal discharge will be toxic, spit it out instead of swallowing it.

Reducing Aluminum Exposure

Over to You

While your body can tolerate low levels of aluminum, you must be sure that the level stays low and does not build up. This requires care and continued monitoring. There are tests such as hair/urine/blood analysis that can be done to help you monitor the aluminum levels in your system. Let us know if you need any assistance in getting these done.
 Sanjana 

Saturday, April 30, 2011

Women & Their Power

Many believe that women and big politics are not compatible, but history shows that this is not true. We present you a brief overview of the most important female figures in Policy 20 and 21 centuries from the online version of the magazine TIME.



Indira Gandhi, India
.

SilentFun The Best Group Join It


She was a true daughter of the country, brought up and his people and his father, who was the first Prime Minister of India after years of British rule.. Cover of TIME magazine soon after its election in January of 1966 reads: "The poor of India in women's hands." These hand held India in the next decades through many tests: an economic downturn, famine, India's first test of an atomic bomb, civil war in neighboring Pakistan, and education (with Indira), a new state - Bangaladesh.


Margaret Thatcher, United Kingdom.

SilentFun The Best Group Join It




Also known Iron Lady, Margaret Thatcher was a woman of high principles, short patience and a fan of whiskey. A housewife from the outskirts into one of the most influential women in the world, and ruled the country from 1979 to 1990, Thatcher became the first woman prime minister in Europe, and the first British permerom, elected for three consecutive terms. During his 11 years in power it has increased the share of private capital and led to the grave the Soviet Union. Thatcher is as for their personal qualities, and for the achievements in the state field, the most popular British politician after Winston Churchill.



Shirimavo Bandaranaike, Sri Lanka.

SilentFun The Best Group Join It


Fifty years ago Shirimavo Bandaranaike became the first woman in the foreseeable history - the head of government. Her victory is so overwhelmed by all that no one knew how to correctly call. "We need to invent a new word" - wrote the London Evening News the next day after Shirimavo elected Prime Minister of Ceylon (then called Sri Lanka). "What's her name? - Regent? "Bandaranaike led the party after the death of her husband, who was slain by a Buddhist monk in 1959 after winning her party in 1960, she took the reins in his hands and rules until 1965. After that she became prime minister twice - from 1970 to 1977 and from 1994 to 2000. Her daughter was the first-ever woman president in 1994, she appointed her mother prime minister for the last time (it should be noted that this appointment was rather a tribute of respect). Shirimavo resigned in April 2000 and died in the same year.


Corazon Aquino, Philippines
SilentFun The Best Group Join It



After the death of her charismatic husband, pious Catholic widow Corazon Aquino won the people's love and overthrew the dictatorial regime, who was involved in the murder of her husband. Millions of people took to the streets, and in February 1986 Aquino became president. After crushing the attempts of several military coups, Aquino saved democracy in the country - something for which killed her husband. In 1986, Corazon Aquino, was named "Man of the Year" by magazine TIME - the first woman after the Queen Elizabeth 2, has suffered such an honor.


Benazir Bhutto, Pakistan.

SilentFun The Best Group Join It



Descendant of an influential Pakistani dynasty, Benazir Bhutto went into politics after his father, and died. Young and beautiful, she clearly stood out from the male Pakistani political establishment. Benazir led the country as prime minister from 1988 to 1990 and from 1993 to 1996, and both times was dismissed from office by the President because of corruption charges which she vehemently denied. Benazir was assassinated in 2007, when the country was ruled by a military junta. The current President of Pakistan is her husband, who was also accused of fraud.


Angela Merkel, Germany's Angela.

SilentFun The Best Group Join It


Merkel - an exceptional phenomenon in German politics: the first female chancellor, also grew up in communist East Germany, as well as the youngest chancellor in history. Its underrated on the continuation of decades, but it is not broken. "I myself have never underestimated himself" - she said in an interview with TIME in January 2010 "There is nothing wrong with ambition, and ambition." She took office in late 2005, and 100 days after the poll showed that it is the most popular chancellor of all German history.

Ellen Johnson-Sirleaf, Liberia

SilentFun The Best Group Join It



In April 2006, First Lady Laura Bush America responded to Ellen as "a woman who did not stop working for the good of their country." "Her courage and dedication inspires me and women around the world," said Mrs. Bush magazine TIME. Johnson-Sirleaf, started her career with the membership of the Council of Ministers in 1970, then in the 90's became a senior administrator of the UN, and in 2006 was elected president of Liberia - the first woman president in Africa. She had to sum up years of civil war in the country. Allen vowed to fight corruption and build a brighter future of the country. George W. Bush presented her with a 2007 Presidential Medal of Freedom. Laura Bush said: "Johnson-Sirleaf - a good example of what can happen if the girls get a good education."



Golda Meir, Israel


Called acute languages "the only guy in the Cabinet" Golda Meir was a formidable and odious figure in Israeli politics. Tall, lean, sharp and decisive, it has become for the world's epitome of the Jewish stubbornness. "There are a variety of women - she said once - that did not allow husbands to overshadow much of the horizon". After a brilliant political career, including as Minister of Labour and Minister of Foreign Affairs and several other senior positions, she went to bed, but had returned to politics in the age of 70 years and led the country as prime minister from 1969 to 1974.