Search This Blog

Showing posts with label World Literature. Show all posts
Showing posts with label World Literature. Show all posts

Monday, December 11, 2023

சுந்தர ராமசாமி

"இந்தப் பதினைந்து வருடங்களில் என்ன சாதித்தேன் என இப்போதெல்லாம் அடிக்கடி என்னையே கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கேள்வி பிறந்த மாத்திரத்தில் சோர்வு தட்டுகிறது. எழுதாமல் வீணாகிப்போன காலங்களின் சுமை நெஞ்சை அழுத்துகிறது. ‘நாளையிலிருந்து அதி தீவிர எழுத்து வேலை ஆரம்பமாகிறது"
சுந்தர ராமசாமி

(மே 30, 1931 - அக்டோபர் 14, ) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.

இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார்.[2] தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

Sunday, December 11, 2022

Iron John A Book About Men

 


ஆணுக்குத் தனியாக சில குணாதிசயங்கள் உள்ளன. பொறுப்புகளும் உள்ளன. அவன் ஒரு நல்ல ஆணாக இருக்க வேண்டும். ஆனால் பெண்களை மதிக்கிறேன் என்று பெண்ணாகிவிடக் கூடாது. அப்படி ஆகிறவனை பெண்களே மதிப்பதில்லை.

அதாவது இந்தப் பெண்ணிய அலைகளில் அள்ளுப்பட்டு வந்த பெண்களின் லட்சியம் என்னவெனில் ஒரு சிங்கத்தைப் பிடித்துப் பட்டினி போட்டு காதை முறுக்கி வாலைத் திருகி எப்படியாவது மியாவ்! என்று சொல்லவைத்துவிடுவது. அது அப்படிச் சொன்னதும் "போ பூச்சே!" என்று தூக்கி எறிந்துவிட்டு யாராவது சூரனின் பின்னால் போய்விடுவது!
- ராபர்ட் ப்ளை
Today's sensitized male may be in touch with his ``feminine'' side, but, writes poet Bly, this ``soft male'' possesses little vitality and is hobbled by grief and anguish. To achieve real masculinity, Bly argues, men must cultivate a fierce tenderness to be found neither in the macho/John Wayne model nor in the ``interior feminine.'' Taking as his starting point the Grimm fairy tale ``Iron John,'' the author sets forth an eight-stage initiatory path whose steps include remembering one's psychic wounds, communion with a mentor or ``inner King,'' becoming a lover, reviving one's inner warriors and receiving a ``second heart.'' Bly avoids cant as he ransacks Jung, Freud and Reich; referents include Greek, Egyptian and Celtic myths, the Parsifal legend, Blake and Amerindian ritual. A wise and healing book full of fresh insights, Bly's odyssey will help men grapple with identity, fatherhood, relationships and such crises as addiction and divorce.
Thanks

Thirunavukkarasu Senthan

Tuesday, November 22, 2022

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை படித்ததில் பிடித்தது!

 மகாவித்வான் மீனாட்சி

சுந்தரம்பிள்ளைக்கு பிற்காலக்
கம்பர் என்றே பெயர். தமிழ்
நூல்களை இவர் தேடித் தேடி
வெளிக்கொண்டு வந்த ஆர்வம்தான் பின்னாளில் உ.வே.சாவிற்கு ஓலைச்சுவடி தேடத் தூண்டுகோலாக இருந்தது என்றால் மிகையாகாது. தெருத் தெருவாக பிச்சையெடுத்து உண்ணும் ஒருவருக்குத் தண்டியலங்காரம் என்னும் நூலறிவு உண்டு என்பது
அறிந்து அவர் பின்னால் சென்று தண்டியலங்காரம் கற்றார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.
மகாவித்வான் மீனாட்சி
சுந்தரம்பிள்ளையின்
மாணாக்கர்கள் யாரென்று பட்டியல் தருகிறேன். பாருங்கள்.
1)மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) உ.வே.சுவாமிநாத ஐயர்
3) பூவாளூர் தியாகராசச்
செட்டியார்
4) சவுரிராயுலு பிள்ளை
5) வல்லூர் தேவராசப்பிள்ளை
(இவர்தான் நாம் குறிப்பிடும்
தேவராயசுவாமிகள்)
இப்படிப் பலப்பல ஆல மரங்களை உருவாக்கிய தாய் ஆலமரம்தான் தமிழ் பெரிய பாட்டனாரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.
இவரும் ஆறுமுக நாவலரும்
ஒருகாலத்தவர் என்பர்.
ஒருமார்கழியில் விடியற்காலையில்
வைகையாற்றில் இருவரும்
நீராடினார்களாம். அப்போது
மார்கழிக் குளிரைக் குறித்து
“பனிக்காலம் கொடியது”
என்றாராம் ஆறுமுக நாவலர்.
அதற்கு நாவலரின் கருத்தை
ஒட்டியே “பனிக்காலம் மிகவும்
நல்லது” என்றாராம் மீனாட்சி
சுந்தரம்பிள்ளை.
புரியவில்லையா?
பனிக்காலம் = பனிக்கு + ஆலம்
ஆலம் என்றால் நஞ்சு.
பனிக்கு நஞ்சு மிகவும் நல்லது. அதாவது கொடிய பனியை விட நஞ்சு நல்லது என்று பொருள்.
இது செவிவழிச் செய்திதான்
என்றாலும் நினைவு
கொள்வதற்குத் தக்க சுவையான செய்தி.
இங்கனம் புகழ் மிகுந்த தன்னுடைய ஆசிரியரான மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளையின்
சரித்திரத்தை நூலாகவே எழுதி
வெளியிட்டிருக்கிறார்
தமிழ்த்தாத்தா உ.வே.சா.
பெங்களூரிலிருந்த தமிழன்பர்கள் அழைப்பின் பேரில் அங்கு சென்றார் தமிழ் பெரிய பாட்டனார்.
அவரைத் தன்னுடனேயே தங்க
வைத்து விருந்துவகை செய்தார் தேவராயன்.
கற்றுக் கொடுப்பதற்கு நல்ல
ஆசானும் கற்றுக்கொள்வதற்கு
நல்ல மாணவனும் இருந்தால்
அவ்விடத்தில் சிறந்த அறிவு
வேள்வி நடக்கும். அதுதான்
நடந்தது.

படத்தில் உள்ளது
மீனாட்சி சுந்தரம் பிள்ளை (இடது)
முத்துக்குமரப்பிள்ளை(வலது)
தமிழ் பெரிய பாட்டனாரிடம் மொழியின் வளமும்
இலக்கணமும் கற்றார் தேவராயன். கடினமான யாப்பருங்கல காரிகை
கற்பதை விடப் பேரிகை கொட்டிப் பிழைப்பு நடத்தலாம் என்று ஒரு சொலவடை உண்டு.
ஆனால் தேவராயன் மிக எளிதாக
யாப்பருங்கல காரிகை என்னும் செய்யுள் இலக்கண நூலைக் கற்றார்.
கற்றதனால் ஆய பயனாக சிறந்த செய்யுட்களையும் இயற்றினார். அந்தச் செய்யுட்களில் மீனாட்சி
சுந்தரம்பிள்ளையின் கருத்துப்படி திருத்தங்களும் செய்தார்.
மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு
உழைக்கத் தெரிந்த அளவுக்குப் பிழைக்கத் தெரிந்திருக்கவில்லை.
அவரை அப்படிப் படைத்த
பிழைக்குத் திருத்தம் செய்ய
முருகன் விரும்பியதாலோ
என்னவோ தேவராயனை அவருக்கு மாணாக்கராக்கினார்.
பெங்களூர் ு:் பெரிய பாட்டனார்
திருச்சீராப்பள்ளி திரும்பும்
நாளும் வந்தது. கல்விக் கொடை தந்த ஆசானுக்குச் செல்வக் கொடை அளிக்க விரும்பினார் தேவராயன்.
ஐயாயிரம் வெள்ளைப் பொற்காசுகளும்
அழகான பட்டாடைகளும் தந்து
ஆசானை வணங்கினார்.
கணக்குப்பிள்ளை தொழிலை
மறந்து தமிழ்த்தொண்டில்
ஆழ்ந்திருந்த மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு
இந்தப் பரிசு மிகப்பெரிய பரிசு.
இன்றைக்கும் இந்த அளவு பரிசு மிகப் பெரிய பரிசுதான்.
தன்னுடைய மாணவனை உளமார வாழ்த்தினார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. பேரும் புகழும் பெற அவர் வாழ்த்திய வாழ்த்துதான்
இன்றும் நாம் தேவராய சுவாமிகளை நினைவில் வைத்துப் பார்க்கும்
பெருமையைக் கொடுத்தது
என்று சொல்வதும் சரியே.
ஆசான் கிளம்பிச் சென்ற பின்னர் பெங்களூரில் கணக்குப்பிள்ளை தொழிலையும் தமிழ்த் தொண்டையும் தொடர்ந்து
செய்தார் தேவராயன்.
பெங்களூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று இருக்கிறதா என்று
தெரியவில்லை. பெங்களூர்
தமிழ்ச்சங்கத்தில் யாருக்கேனும்
தெரிந்திருக்கலாம்.
பெங்களூர் நண்பர்கள் இதுகுறித்து விசாரித்து விவரம் தந்தால் நன்று.
இளம் வயதிலேயே கல்வியும்
செல்வமும் அள்ளக் குறையாமல் சேர்ந்தவருக்கு வயிற்றில் வலியும் சேர்ந்தது.
பெங்களூரின் மிக நல்ல
மருத்துவமனையில் சிறப்பான
மருத்துவர்களின் சிகிச்சை
எடுத்துக் கொண்டாலும் வயிற்றுவலி தீரவேயில்லை.
செல்வத்தை அள்ளியள்ளிக்
கொட்டினாலும் வயிறு சொன்ன பேச்சு கேட்கவில்லை. வலியும் குறையவில்லை.
தன்னுடைய திறமை வேலை
செய்யாத பொழுது ஆண்டவனை நினைத்துப் பார்ப்பதுதானே நமது செயல்!
அப்பரும்
பகழிக்கூத்தரும் ஆதிசங்கரரும்
கொண்ட வயிற்றுவலியை
நினைத்துப் பார்த்தார்.
அப்பேர்ப்பட்ட பெரியவர்களுக்கு
ஆண்டவன் இறங்கி வந்து அருள்வது உண்டு. ஆனால் தம்மைப் போன்றவர்களுக்கு இறைவன் உதவுவானா என்று ஒரு ஐயம். வலிக்கும் சந்தேகத்துக்கும்இடையில் தவித்த தேவராயனது
மனது ஒரு முடிவுக்கு வந்தது.
ஆம். இனிமேலும் வலியினால்
உண்டாகும் வேதனையோடு
வாழ்வதில் பயனில்லை என்று
முடிவு கட்டி தன்னுயிரை
மாய்க்க எண்ணினார்.
இருபதுகளில் ஒருவருக்கு
வரவேண்டிய எண்ணமா இது!
அந்தோ! தேவராயனுக்கு வந்தது. தமிழ்க் கடவுளான முருகன் குடிகொண்ட திருச்செந்தூர்க் கடலில் மூழ்கி இறக்கத் திட்டம் கொண்டு பெங்களூரிலிருந்து
கிளம்பினார் தேவராயன்.
ஆனால் இறைவன் எண்ணம்
வேறுவிதமாக இருந்தது.
திருச்செந்தூருக்குச் சாவைத்
தேடிச் சென்ற தேவராயனை சஷ்டி வரவேற்றது. சஷ்டித்
திருவிழாவைக் கொண்டாடி
விட்டு உயிரை விடலாம் என்று
தற்கொலையை ஆறு
நாட்களுக்குத் தள்ளிப் போட்டார் தேவராயன்.
அப்படித் தள்ளிப் போட்டதுதான்
செந்தூர் முருகனின்
அருட்கொடையை நமக்கு அள்ளிப் போட்டது.

சிவாயநம

Ilango Krishnan

Friday, September 3, 2021

சுந்தர ராமசாமி, (1931 - 2005)

வாழ்வில் எழுத்தால் அனைவரையும் வியக்க வைத்த வித்தகர்..

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.
இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார்.
பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்.
மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கியது இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்).
இடைபட்ட காலத்தில் புத்தியலின் பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் திளைத்துள்ளார்..
தன் இளைய பருவத்தில், தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார்.
பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.
1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்து..
இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார்.
மேலும் மலையாள இலக்கியச்
சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான
ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது.
சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள்
இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார்.
குமரன் ஆசான் நினைவு விருது
இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார்.
கதா சூடாமணி விருது (2004
படைப்புகள்
நாவல்
ஒரு புளியமரத்தின் கதை (1966)
ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)
சிறுகதைகள்
சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)
விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை
ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
காற்றில் கரைந்த பேரோசை
விரிவும் ஆழமும் தேடி
தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
இறந்த காலம் பெற்ற உயிர்
இதம் தந்த வரிகள் (2002)
இவை என் உரைகள் (2003)
வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
வாழ்க சந்தேகங்கள் (2004)
புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
மூன்று நாடகங்கள் (2006)
வாழும் கணங்கள் (2005)
கவிதை
சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)
மொழிபெயர்ப்பு
செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)
தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)
தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)
நினைவோடைகள்
க.நா.சுப்ரமண்யம் (2003)
சி.சு. செல்லப்பா (2003)
கிருஷ்ணன் நம்பி (2003)
ஜீவா (2003)
பிரமிள் (2005)
ஜி.நாகராஜன் (2006)
தி.ஜானகிராமன் (2006)
கு.அழகிரிசாமி.
சிறுகதைகள் பட்டியல்
1.முதலும் முடிவும்
2.தண்ணீர்
3.அக்கரை சீமையில்
4.பொறுக்கி வர்க்கம்
5.உணவும் உணர்வும்
6.கோவில் காளையும் உழவு மாடும்
7.கைக்குழந்தை
8.அகம்
9.அடைக்கலம்
10.செங்கமலமும் ஒரு சோப்பும்
11.பிரசாதம்
12.சன்னல்
13.லவ்வு
14.ஸ்டாம்பு ஆல்பம்
15.கிடாரி
16.சீதைமார்க் சீயக்காய்த்தூள்
17.ஒன்றும் புரியவில்லை
18.வாழ்வும் வசந்தமும்
19.ரயில் தண்டவாளத்தில் ஓடும்
20.மெய்க்காதல்
21.மெய்+பொய்=மெய்
22.எங்கள் டீச்சர்
23.பக்த துளசி
24.ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு
25.தயக்கம்
26.லீலை
27.தற்கொலை
28.முட்டைக்காரி
29.திரைகள் ஆயிரம்
30.இல்லாத ஒன்று
31.காலிப்பெட்டி
32.அழைப்பு
33.போதை
34.பல்லக்குத் தூக்கிகள்
35.வாசனை
36.அலைகள்
37.ரத்னாபாயின் ஆங்கிலம்
38.குரங்குகள்
39.ஓவியம்
40.பள்ளம்
41.கொந்தளிப்பு
42.ஆத்மாராம் சோயித்ராம்
43.மீறல்
44.இரண்டு முகங்கள்
45.வழி
46.கோலம்
47.பக்கத்தில் வந்த அப்பா
48.எதிர்கொள்ளல்
49.காணாமல் போனது
50.விகாசம்
51.காகங்கள்
52.மேல்பார்வை
53.பட்டுவாடா
54.நாடார் சார்
55.நெருக்கடி
56.இருக்கைகள்
57.டால்ஸ்டாய் தாத்தாவின் கதை
58.மயில்
59.பையை வைத்துவிட்டு போன மாமி
60.தனுவும் நிஷாவும்
61.களிப்பு
62.நண்பர் ஜி.எம்
63.ஒரு ஸ்டோரியின் கதை
64.கூடி வந்த கணங்கள்
65.கதவுகளும் ஜன்னல்களும்
66.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
67.அந்த ஐந்து நிமிடங்கள்
68.ஈசல்கள்
69.கிட்னி
70.பிள்ளை கெடுத்தாள் விளை
71.கொசு, மூட்டை, பேன்
72.ஜகதி
Thanks

Pathmanathan Mahadevah

Tuesday, August 31, 2021

Magical Realism மாய யதார்த்தவாதம்

Magic realism (also known as magical realism or marvelous realism) is a 20th- century style of fiction and literary genre influenced by an eponymous German painting style in the 1920s. As a literary fiction style, magic realism paints a realistic view of the modern world while also adding magical elements, often dealing with the blurring of the lines between fantasy and reality.

The term “magischer realismus,” which translates to “magic realism,” was first used in 1925 by German art critic Franz Roh in his book Nach ExpressionismusMagischer Realismus (After Expressionism: Magical Realism). He used the term to describe the “Neue Sachlichkeit,” or New Objectivity, a style of painting that was popular in Germany at the time that was an alternative to the romanticism of expressionism.

Roh used the term “magischer realismus” to emphasize how magical, fantastic, and strange normal objects can appear in the real world when you stop and look at them.

The genre was growing in popularity in South America when Nach Expressionismus: Magischer Realismus was translated into Spanish in 1927. During a stay in Paris, French-Russian Cuban writer Alejo Carpentier was influenced by magic realism. He further developed Roh’s concept into what he called “marvelous realism,” a distinction he felt applied to Latin America as a whole.

நவீன இலக்கியம் உருவாகிவந்தபோது ‘உள்ளது உள்ளபடி’ சொல்லும் கதைப்பாணி மேலோங்கியது. இதையே நாம் யதார்த்தவாதம் மற்றும் இயல்புவாதம் என்கிறோம். இந்தப் பாணி உருவானதற்குக் காரணம் மேலைநாட்டில் உருவாகி வந்த பகுத்தறிவு நோக்கு மற்றும் நிரூபணவாத அறிவியல் நோக்கு. இன்றைய இலக்கியத்தில் மைய ஓட்டம் இதுவே. யதார்த்தவாதம் பலவகை வேறுபாடுகளுடன் மையச்சரடாக இருப்பது இயல்பானதுமாகும்.


மாய யதார்த்தம் அல்லது மாய யதார்த்தம் என்பது அன்றாட வாழ்வில் கற்பனை மற்றும் புராணத்தைத் தழுவி நிற்கும் இலக்கியம். உண்மையான என்ன? கற்பனை என்ன? மாயாஜால யதார்த்தத்தின் உலகில், அசாதாரணமானது அசாதாரணமானது, மாயாஜாலமானது பொதுவானது.

"வியக்கத்தக்க யதார்த்தம்" அல்லது "அற்புதமான யதார்த்தவாதம்" என்று அழைக்கப்படும் மாயாஜால யதார்த்தம் உண்மையில் ஒரு தன்மை அல்லது ஒரு வகையல்ல.

புத்தகங்கள், கதைகள், கவிதைகள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள், உண்மை கதை மற்றும் தொலைதூர கற்பனை ஆகியவை சமுதாய மற்றும் மனித இயல்பு பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்துவதற்கு இணைகின்றன. "மாய யதார்த்தவாதம்" என்பது யதார்த்தமான மற்றும் figurative கலைப்படைப்புகள் - ஓவியங்கள், வரைபடங்கள் மற்றும் சிற்பம் ஆகியவற்றோடு தொடர்புடையது - மறைக்கப்பட்ட அர்த்தங்களைக் குறிக்கும். மேலே காட்டப்பட்டுள்ள ஃப்ரீடா கஹ்லோ உருவப்படம் போன்ற உயிர்நாடி படங்கள், மர்மம் மற்றும் மாயவித்தை காற்றில் பறக்கின்றன.

வரலாறு

இல்லையெனில் சாதாரண மக்கள் பற்றி கதைகள் மீது strangeness infusing பற்றி புதிய எதுவும் இல்லை. எமிலி ப்ரெண்ட்டின் உணர்ச்சி, பேராசையுள்ள ஹெய்டிளிஃப் ( வதர்சிங் ஹைட்ஸ் , 1848) மற்றும் ஃபிரான்ஸ் காஃப்காவின் துரதிருஷ்டவசமான கிரிகோர் உள்ள மந்திர யதார்த்தத்தின் கூறுகளை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள், அவர் ஒரு பெரிய பூச்சி ( தி மெட்டமோர்ஃபோஸ் , 1915 ) மாறும். இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய குறிப்பிட்ட கலை மற்றும் இலக்கிய இயக்கங்களின் வெளிப்பாடாக "மாயாஜால யதார்த்தவாதம்" வளர்ந்தது.

1925 ஆம் ஆண்டில், விமர்சகர் ஃபிரான்ஸ் ரோ (1890-1965), மேக்சிஷர் ரியலிமஸ் (மேஜிக் ரியலிசம்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

1940 கள் மற்றும் 1950 களில், விமர்சகர்கள் மற்றும் அறிஞர்கள் பலவகையான மரபுகளிலிருந்து கலைக்கு முத்திரை குத்தப்பட்டனர். ஃப்ரிடா கஹ்லோ (1907-1954) மற்றும் எட்வர்ட் ஹாப்பர் (1882-1967) ஆகியோரின் நகர்ப்புற காட்சிகளை ஜோர்ஜியா ஓ'கீஃபி (1887-1986) .

இலக்கியத்தில், மாயாஜால யதார்த்தம் ஒரு தனித்துவமான இயக்கமாக உருவானது, காட்சி கலைஞர்களின் அமைதியான மர்மமான யதார்த்த யதார்த்தத்தைத் தவிர. கியூப எழுத்தாளர் அலேஜோ கார்பெண்டியர் (1904-1980) " உண்மையான ஸ்பெயின் " ("அற்புதமான உண்மையான") என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். அவர் 1949 ம் ஆண்டு ஸ்பானிஷ் அமெரிக்காவின் மாபெரும் ரியல் இல் வெளியிட்ட கட்டுரையை வெளியிட்டார். வியத்தகு வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை உலகின் கண்களுக்கு அழகாக அமைந்தன.1955 இல், இலக்கிய விமர்சகர் ஏஞ்சல் ஃப்ளோரர்ஸ் (1900-1992) லத்தீன் அமெரிக்கன் எழுத்துக்களை விவரிக்க மந்திர யதார்த்தத்தை ( மாய யதார்த்தத்தை எதிர்த்தது) "பொது மற்றும் அன்றாட வாழ்த்துக்கள் மற்றும் உண்மையற்றவையாக மாற்றும் ஆசிரியர்கள்."

தமிழில் மிக ஆரம்பகாலத்தில் கிருஷ்ணன்நம்பி அங்கதமாக எழுதிய ‘நகரம்‘ மாந்திரிக யதார்த்தச் சாயல் கொண்ட கதை. தமிழவன் [‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ நாவல் மற்றும் தமிழவன் சிறுகதைகள்], கோணங்கி [‘பாழி‘ நாவல் மற்றும் பொம்மைகள் உடைபடும் நகரம் போன்ற கதைகள்], எஸ்.ராமகிருஷ்ணன் [காட்டின் உருவம், தாவரங்களின் உரையாடல் போன்ற கதைகள்] ஆகியோரின் பல கதைகள் மாய யதார்த்ததைக் கையாண்டவை.

தமிழ்ச் சூழலில் மாய யதார்த்தவாத (Magical Realism) எழுத்தில் தன் படைப்புகளை முன்வைத்த முதன்மையான ஆளுமைகளில் ஒருவர் கோணங்கி. புதிர்த்தன்மையே கோணங்கியின் எழுத்துகளுடைய சாரம். அந்தப் புதிர்த்தன்மையே நம்மைப் பல தளங்களுக்குக் கொண்டு செல்வது.

https://www.masterclass.com/
https://ta.eferrit.com/
https://www.jeyamohan.in/

Friday, March 26, 2021

மட்டக்களப்பின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை

ஈழத்தில் தமிழுக்கும் பெரும் பங்களிப்புச் செய்துள்ள மரபு வழித் தமிழ் புலமையாளர்களில் முக்கியமான ஒருவராகக் கொள்ளப்படவேண்டியவர் கிழக்கிலங்களையின் மட்டக்களப்பு மண்ணின் மைந்தரான புலவர்மணி பெரிய தம்பிப் பிள்ளை.

 

முத்தமிழ் வித்தகர் என்று போற்றப்பட்டவரும் “யாழ் நூல்” தந்த பெருமைக்குரியவரும், பல்கலைக்கழக நிலையில் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலானந்தரிடம் கல்விபயின்ற பெருமையும் இவருக்கு உண்டு. 

ஈழத்தில் இலக்கியரசனையை விரிவடையச் செய்தவர்களுள் முக்கியமானவரும் யாழ்ப்பாணத்தில் பண்டிதர்களுக்குப் பணடிதராகவும்: அதேவேளை நவீன உரைநடை இலக்கியத்தின் உரைகல்லாகவும் திகழ்ந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களுடனிணைந்து நாவலர் காவிய பாடசாலையில் கல்விபயின்று கவிஞராய் மேலெழுந்த சிறப்பும் இந்த புலவர் மணிக்குண்டு. 

மட்டக்களப்பின் மண்டூரில் 1899ஜனவரிமாதம் 8ஆம் திகதி பிறந்தவர் இவர். (08.01.1899) மண்டூர் வெஸ்லியன் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பத் தமிழ்க் கல்வியையும், கல்முனை வெஸ்லி மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்பஆங்கிலக் கல்வியும் பெற்ற இவருக்கு “யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தமிழ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

நாவலர் காவியப் பாடசாலை ஒரு தனித்தன்மை வாய்ந்த நிறுவனம்! அரசினால் வழங்கப்படுகின்ற நன் கொடையைப் பெறும் இப்பாடசாலை இதில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு நன் கொடைவழங்குவது வழக்கமாக இருந்தது. 

சுன்னாகம் அ. குமாரசாமிபுலவர், த.கைலாசப்பிள்ளை, பண்டிதர் மகாலிங்கசிவம், பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதியார், சாவகச்சேரி புலவர் பொன்னம்பலப்பிள்ளை, பண்டிதர் சோமசுந்தரம் என்று யாழ்ப்பாண அறிஞர் பலரின் நட்பும் தொடர்பும் ஆசிரியத்துவமும் இவரது கல்வியை உயர்த்தியுள்ளது. 

தமிழ் கல்விக்காக இவர் மட்டுநகரில் இருந்து யாழ் கூட்டிவந்த நண்பர் இவரை குருநகருக்கருகேயுள்ள மரகதமடம் என்ற இல்லத்துக்கு கூட்டிச் சென்றார். அங்கிருந்த இளைஞர் இவரை வரவேற்று உபசரித்துள்ளார். அந்த இளைஞர் வேறுயாருமில்லை! பண்டிதர் மயில்வாகனம் என்று பெயர் கொண்ட பிற்காலமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரே தான். 

இந்த முதல் சந்திப்பை தன்னுடைய பிற்கால உள்ளதும் நல்லதும் என்ற நூலில் புலவர் மணி பதிவு செய்கின்றார். 

“யாழ்ப்பாணத்தில் வைத்து என் மீது அரும்பிய பண்டிதர் மயில் வாகனனாரின் அன்பு அவர் துறவியான பின்பு அருளாக மலர்ந்துள்ளதை நினைத்து நினைத்து நெஞ்சம் உருகி நின்றேன்.’ 

இந்த முதல் சந்திப்பின் பிறகு அவரைத் தேடிச் சென்று பலவிஷயங்களைக் கற்றுக் கொண்டார். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணக் கோவில்கள் அனைத்திலும் பண்டிதர் மயில் வாகனனாரின் பிரசங்கம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். புலவர் மணியும் விடாமல் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு லயித்துக் கிடப்பார். அப்படி லயித்து லயித்தே நானும் பேசக்கற்றுக் கொண்டேன் பேச்சாளன் ஆனேன் என்றும் குறிக்கின்றார் இவர். 

விபுலானந்தரூடாகவே யோகர் ஸ்வாமியின் பழக்கமும் தொடர்பும் அருளாசியும் இவருக்குக் கிடைக்கிறது. 

பண்டிதர் மயில்வாகனனார் விவேகானந்த சபையின் நிரந்தரமாகிவிட்ட காலத்தில் புலவர்மணியும் நாவலர் பாடசாலையை விட்டு விலகி விவேகானந்த சபையுடன் இணைகின்றார். மாலைவேளைகளில் நல்லூர் கந்தசாமி கோவிலில் யோகர்ஸ்வாமியும் ஸ்வாமி விபுலானந்தரும் இவரும் திருப்புகழ் படிப்பதுண்டு. 

இவர் சாவகச்சேரி இந்து மகா சபையில் இருந்த போது இவரைத் தேடி சபைக்குவரும் அனைவருடனும் நட்புடனும் சமமாகவும் பழகினார். சாதிவெறி உச்சமடைந்திருந்த காலம் அது. 

இங்குவரும் பள்ளர் பறையருக்கெல்லாம் கதிரை கொடுத்து உபசரிக்கின்றீராமே? இந்த புரட்சிகள் எல்லாம் இங்கே வேண்டாம் என அவர்கள் கடிய பதிலுக்கு இவரும் கடிய, இவரை சபை விலக்கி வெளியேற்றுகிறது. இதனால் வேதனையும் விரக்தியுமுற்றுத் திரிந்த புலவர் மணியை ஆறுதல் வார்த்தைகள் கூறி ஆற்றுப்படுத்தியவர்கள் ஐசக் ‘தம்பையா,  எட்வர்ட் மேதர் போன்ற அமெரிக்கன் மிஷன் கிறிஸ்தவப் போதகர்கள்.‘இங்கே எங்களிடம் பள்ளரும் இல்லை பறையரும் இல்லை! மனிதர்கள் எல்லாரும் சமமானவர்கள். உங்கள் நோக்கம் நிறைவேற நீங்கள் எங்களுடன் இணைந்து செயற்படுங்கள்’ என்று கூறினர். 

புலவர்மணியும் மதம் மாறி கிறிஸ்துவரானார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் ஆசிரியர் பதவியை விட்டு விலகி சாவகச்சேரி மிஷன் கல்லூரியில் தமிழ்பண்டிதராகப்பதவி ஏற்றார். கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த இவரை வேதசாஸ்திர கல்லூரியில் இரண்டு வருடப் படிப்பிற்காக இந்தியாவிலுள்ள பசுமலைக்கு அனுப்பிவைத்தார்கள். அமெரிக்க மிஷனின் அரண்போன்றது பசுமலை. 

‘கிறிஸ்து திருவவதார கீதங்கள்’ என்னும் சிறுபிரந்தம். ‘கிறிஸ்தவ சமய துயிலுணர்ச்சி’ என்னும் சிறு நூல், ‘இந்தியநோக்கில் கிறிஸ்தவ வேத வியாக்கியானம்’ என்னும் கட்டுரை போன்றவை பசுமலை காலத்தில் எழுதியவை. கிறிஸ்தவ சமயப் பிரசங்கியாக, பசுமலை. கோவை, சென்னை எனப் பிரபல்யம் கொண்டார். பசுமலை வேதசாஸ்திர கலாசாலை விடுதி மேற்பார்வையாளராகவும் செயற்பட்டார். ஆனாலும் கிறிஸ்தவமதமும் திருச்சபையும் ஒன்றாக செயற்படவில்லை என்ற உணர்வும், கிறிஸ்தவ சமூகத்தின் மேல்நாட்டு ஏகாதிபத்தியத்தைக் களைய வேண்டும் என்னும் வெறியு், கிறிஸ்தவ மேலைநாடுகளின் நோக்கங்கள் மீதான எதிர்ப்பும் இவரை அலைக்கழித்தன. பசுமலை பயிற்சி முடிந்து யாழ் திரும்பும்போது யாழ்ப்பாணத்தின் திருச்சபை செயலாளர் பதவி இவருக்காக ஒதுக்கப்பட்டுக் காத்திருந்தது. 

பசுமலையில் புலவர்மணி சமயப் பிரசங்கியாக செல்வாக்குடனிருந்த காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் விபுலானந்தர் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். தன்னைக் கண்டு மனமுருகிநின்ற புலவர் மணியிடம் ‘மட்டக்களப்பில் அதிகம்வேலையுள்ளது. ஆட்கள் தேவை’ என்று கூறினாராம் விபுலானந்தர். 

இது நடந்தது 1925ல். பசுமலை கலாசாலைப் பதவிகள் தனக்கிருந்த செல்வாக்கு, யாழில் தனக்கென ஒதுக்கப்பட்டுக்காத்திருந்த உயர்பதவி அனைத்தையும் உதறிவிட்டு 1926ல் தனது தாயகமான மட்டக்களப்புக்கு வந்தார். 

திருகோணமலை, மட்டக்களப்பு என ஆசிரியப் பதவி வகித்து நல்மாணவர்களை உருவாக்கினார். 

ஈழநாட்டில் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த புலவரும் தமிழ் அறிஞரும் சீர்த்திருத்த சிந்தனாவாதியுமான புலவர்மணி சிறியனவும் பெரியனவுமாக 15க்கும் கூடுதலான நூல்களை வெளியிட்டுள்ளார். 

முக்கியமாக பகவத்கீதைவெண்பா 1962 

புலவர் மணி கவிதைகள் 1980 

உள்ளதும் நல்லதும் 1982 

கருமயோகம் : பக்தியோகம் , ஞானயோகம், பாலைக்கலி, விபுலானந்தர் மீட்சிபத்து, புலவர்மணி கட்டுரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. 

புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் தனது 79ஆவது வயதில் 02.11.1978ல் மரணம் அடைந்தார். 

தெளிவத்தை ஜோசப்

http://www.vaaramanjari.lk/




 மட்டக்களப்பின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களைக் கௌரவிப்பதற்காக, 1994 மே மாதம் 22 ஆம் தேதியன்று இலங்கை தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தபால் தலை! எனது சேகரிப்புகளில் ஒன்று... பழையவற்றைப் புரட்டியபோது இன்று கண்ணில் பட்டது!

Pathmanathan Mahadevah


Friday, January 29, 2021

டொமினிக் ஜீவா எனும் பேராளுமை

டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.

இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் டொமினிக் என்பதாகும். பெற்றோர்கள் சிகை அலங்கார தொழிலாளர் பரம்பரையை சேர்ந்தவர்களாவர். அதன் காரணமாக இவர் பல சமூக குறைபாடுகளை எதிர் கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

இளமைப் பருவத்தில் இவர் யாழ். சென். மேரிஸ் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் இவரைப் பார்த்து சாதியின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதால் மனம் நொந்து ஐந்தாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சாலியானார்.

அவ்வாறு வெளியேறியவர் தான் இன்று உலக அரங்கில் அனைவராலும் அங்கீகரிக்கப்படும் ஒரு இலக்கிய கர்த்தாவாக மாறியிருந்தார்



"ஈழத்து இலக்கிய உலகின் எழுத்துப் போராளியாய் இறுதி மூச்சு வரை சமரசமில்லா முற்போக்கு முகம் கொண்ட மல்லிகை மன்னனாய் எல்லோராலும் கொண்டாடப் பட்ட மல்லிகை ஜீவா தன் வாழ்வுப் பயணத்தை முடித்துக் கொண்டார் என்ற செய்தி துயரத்தை சுமந்து நிற்கிறது.
யாருக்கும் தலை வணங்கா எங்கும் தன் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்த சமத்துவ சகோதரன் அவர்.
1977ஆம் ஆண்டு யாழ் பல்கலைக் கழகத்தில் ஒரு புத்தகப் பையோடு சந்தித்த அதே ஜீவாவை நான் அதே கோலத்திலெயே கடைசியாகவும் சந்தித்தேன் தன்னிலை மாறா கொள்கையாளன் 
ஈழத்து இலக்கிய உலகம் இனி இவர் போல் ஒருவரை காண முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே சரியான பதில்.ஓர்மம் மிக்க படைப்பாளி.
யாழ் பல்கலைக்கழகம் அவருக்கு முறைப்படி இலக்கிய கலாநிதி பட்டம் கொடுத்திருக்க வேண்டும் அப்படி இருக்க பேருக்கு ஏதோ ஒரு உப்புச் சப்பு இல்லாத பட்டத்தை கொடுக்கப்  பரிந்துரைத்த போது அதனை மிகத் துணிச்சலுடன் நிராகரித்து தன் மதிப்பை மேலும் உயர்த்திக் கொண்டு சரித்திரத்தில் இடம் பிடித்த சமூக நீதிக் குரலாய் ஒலித்த சோசலிச யதார்த்தவாதி ஜீவா.
ஜீவா எனும் பெயரை ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்திலிருந்து நீக்கிப் பார்த்தால் அது வறுமைப் பட்டுப் போகும் .
மல்லிகை அவர் நடமாடும் வரை நடமாடிய இலக்கியத் தொடர் அது ஒரு முற்போக்கு சுடர் அணையாத சுடர் வருங்காலம் முழுவதுக்குமான வரலாறாய் நம்முள்.
என்றும் வாழும் ஜீவா
என் செவ்வணக்கத்துடனான அஞ்சலிகள்" Balasingam Sugumar

Thursday, January 21, 2021

பெண்களுக்கென்று தனியான ஒரு ரகசிய எழுத்து மொழி : ' 'நுஷு'. nüshu, a script that is only used by women in China

Nüshu is considered to be the world’s only writing system that is created and used exclusively by women. Originating in China’s Jiangyong county in the nineteenth century, it gave rise, over time, to a traditional female culture, which is endangered today. The country’s local and national authorities are working to revive it.

By Chen Xiaorong





Indran Rajendran



சீனாவில் பெண்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பதை ஆண்கள் மறுத்தார்கள். இந்த இழிநிலையை சீனத்துப் பெண்கள் புதுவழியில் மீறினார்கள்.ஆண்களுக்குத் தெரியாத ரகசிய எழுத்து வரிவடிவம் ஒன்றைக் கண்டு பிடித்தார்கள். பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு எழுத்தை உருவாக்கினார்கள்.அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள்.
நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.
இதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.. 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடும் கிறுக்கியது போல் இருக்கும். விசிறிகளிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள். பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள். ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.
தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று. யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண். பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.