Search This Blog

Showing posts with label World Cinema. Show all posts
Showing posts with label World Cinema. Show all posts

Monday, December 12, 2022

கொத்து ( Kothu)மலையாளப்படம்

 அரசியல் கொலைகளைப் பற்றிய கதை. குறிப்பாக இடது சாரி வலது சாரி கட்சிகளுக்கு இடையே நடக்கும் பழிக்குப் பழி வாங்கும் களத்தை மையமாக்கி கதை சொல்லி இருக்கிறார்கள்.

தங்கள் தோழரைக் கொன்றவனைக் கொல்ல திட்டம் தீட்டப்படுகிறது. மூன்று தோழர்களிடம் அந்த காரியம் ஒப்படைக்கப்படுகிறது. திட்டமிட்டபடி கொலை செய்கிறார்கள். அதில் ஒருவன் மட்டும் போலீஸில் பேருக்கு சர்ண்டர் செய்யப்படுகிறான். ஆனால் அரசியல் கொலைகளின் மீது ஆத்திரம் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியின் தலையீட்டால் நிலைமை தீவீரம் அடைகிறது. பிறகு என்ன ஆனது என்பது கதை.
கொலை செய்யப்பட்டவர்கள், கொலை செய்தவர்களின் குடும்பத்து மனிதர்களின் உணர்வுகளை காட்சிப்படுத்தி, வெளிச்சமற்ற அவர்களின் எதிர்காலத்தில் பார்வையாளர்களை உறைய வைக்கிறது.
“நீ ஒருநாளும் பத்திரிகை வாசித்ததைக் கூட நான் பார்த்ததில்லை. உலகத்தில் என்ன நடக்கிறது என்றே உனக்குத் தெரியாது. கொலை செய்யப்பட்டவன் மீது உனக்கு என்ன கோபம். என்ன வெறுப்பு. உன் கட்சியில் மேலே உள்ளவர் சொன்னதுக்காக கொலை செய்திருக்கிறாய். இது எப்படி சித்தாந்த ரீதியாக நீ செய்த கொலையாகும்?” என அந்த மூன்றில் ஒருவனை காதலித்து, திருமணம் செய்து, கர்ப்பிணியாய் இருக்கும் மனைவி கேட்பது உலுக்குகிறது.
என்ன அரசியல் காரணம், எதற்காக கொலை, என்ன பின்னணி, என சமூகத்தின் தாக்கங்கள் குறித்து இந்த படத்தில் எதுவும் பேசப்படவில்லை. தனி மனிதர்களின் வாழ்வில் இருக்கும் துயரங்களையும், வலிகளையும், வெறுமைகளையும் படம் பேசுகிறது. பார்வையாளர்களுக்கு இரண்டு அரசியலும் ஒரே மாதிரியாகவும், மக்களுக்கு விரோதமானதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
மக்களுக்காகவும், மாற்றங்களுக்காகவும் போராடுகிற இயக்கங்கள், இந்தப் படம் சொல்லாததை சொல்ல வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. (அமேசானில் பார்க்கலாம்.)

Saturday, December 10, 2022

The Tree of Life Movie

 

Acclaimed director Terrence Malick’s (The Thin Red Line, Days of Heaven, Badlands) two hour and twenty minute long coming of age story about two brothers growing up in 1950’s Texas and their difficult family relationships has only a cursory connection with what mystics and qabalists of the Jewish mystery schools would consider The Tree of Life.(Cinematographer: Emmanuel Lubezki)

It is instead a slow, meandering pseudo-art film realized with subtle, subjective cinematography from Emmanuel Lubezki (Gravity, The Revenant, Birdman) and spare, period production design from Jack Fisk (The Revenant, There Will be Blood and David Lynch’s Mulholland Drive) lending it a sense of mood, personal drama and a kind of nostalgic self-importance.

Despite having very little to do with anybody’s rendition of The Tree Of Life (as a religious or philosophical construct, at least), Malick delivers a genuinely sublime experience that includes deep forays into the characters’ imaginations and formative experiences. These include flashbacks and some epic sequences of cosmic and prehistoric events that give texture to the existential treatment of the narrative in a way that superficially appears to deliver meaning. Make no mistake, and this is an illusion.

The plot is an insipid invitation to stay well within your safety zone. The film does nothing truly experimental that has not been done before, better and more meaningfully in a short film or an actual art film. Hollywood congratulates itself while reinforcing the white, middle-class, mainstream status quo.

Touted as a drama/fantasy, this fairly mundane popular art film is low-key. Using its restrained, slow and somewhat naturalistic style, it tries to illicit feelings of childhood and convey a kind of innocence and honesty that has ‘Oscar bait’ written all over it. Purportedly biographical, the film is not especially clever, not incredibly insightful and not especially interesting. It is, however, undeniably beautiful and well-shot.

Apparently, it worked as intended, and in 2011 it scooped the Palme d’or at Cannes and then went on to be nominated for three Academy Awards: Best Picture, Best Director and Best Cinematography. The movie, The Tree of Life is beautiful for no reason other than charming and inoffensive.

 Thanks http://www.tasteofcinema.com/

Thursday, December 1, 2022

‘அப்பன்’ Appan Movie Review

 ஒரு கட்டில். அதைத் தொடுவது போல மேலிருந்து தொங்கும் ஒரு கயிறு. கால்களில் அசைவு வராத ஐம்பது வயதைக் கடந்த ஒரு மனிதன் படுத்திருக்கிறான். அவன் தான் இட்டியச்சன். கயிற்றைப் பிடித்து கொஞ்சம் நிமிர்ந்து, தலையணையில் சாய்ந்து உட்கார்ந்து கொள்ள முடியும். அவ்வளவுதான் அவனது இயக்கமும் உலகமும். மலை சார்ந்த பகுதியில் சுற்றிலும் ரப்பர் மரங்கள் சூழ்ந்த அந்த வீட்டில் அவனது மனைவி, மகன், மருமகள், பேரன் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அவர்களை எதிர்பார்த்துத்தான் இருக்கிறான் இட்டியச்சன். அந்த வீட்டைத் தாண்டி காமிரா வேறெங்கும் செல்லவில்லை.

“நான் இட்டியச்சன் சாவது போல ஒரு நல்ல கனவு கண்டேன்.” என இட்டியச்சனின் மனைவி விழிப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. இட்டியச்சன் சாவதோடு கதை முடிகிறது. பார்வையாளர்களுக்கு படமே ஒரு கெட்ட கனவாக இருக்கிறது. ஆணாதிக்கத்தில் ஊறிப் போன உயிரும் உடலும் கொண்ட இட்டியச்சன் அந்த வீட்டில் உள்ள அனைவரையும் படுத்தும் பாடு இருக்கிறதே அதுதான் கதை. அந்த வீடும், தோட்டமும் இட்டியச்சனின் பேரில் இருக்கிறது. வன்மம், வக்கிரம், சுயநலத்தின் மொத்த வடிவாய் இருந்து ஆட்டிப் படைக்கிறான். அதைக் காட்சிப்படுத்தி சொல்லியிருக்கும் விதத்தில் மலையாளப்படம் ‘அப்பன்’ ( Appan ) முக்கியமானது.
சிக்கல் மிகுந்த மனித உறவுகளை நுட்பமாகச் சொல்கிறது. இட்டியச்சனின் மகன், மருமகள், பேரன் அனைவரும் நம் முன்னே வாழ்ந்திருக்கிறார்கள். “அப்பாவை நீ நல்லா பார்த்துக் கொள்வாயா?’ என இட்டியச்சனின் மகன், தனது மகனிடம் கேட்கும்போது நெகிழ வைக்கிறது. ( சோனி லைவில் பார்க்கலாம்)
Thanks

Mathavaraj

Monday, November 28, 2022

All quiet on the western front review

 All Quiet on the Western Front ( மேற்கு முனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது) சினிமா 2022ல் மீண்டும் தயாரிக்கப்பட்டு Netflix-ல் காணமுடிகிறது. ஏற்கனவே 1930லும், 1979லும் தயாரிக்கப்பட்ட படம் இது.

இந்த நாவலை 1929ல் ரெமார்க்யூ எழுதினார். 1932ல் அவரது புத்தகம் தடை செய்யப்பட்டது. 'ஜெர்மனியே எழுந்திரு' என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டு ஹிட்லரின் வெறியர்கள் தெருக்களில் புத்தகத்தை தீ வைத்து எரித்தனர். அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அவரது படம் திரையிடப்பட்ட அரங்குகளுக்குள் எலிகளை பிடித்து விட்டனர். குண்டுகளை எறிந்தனர். ரெமார்க்யூ ஜெர்மனியிலிருந்து ஒரு அகதியாய் வெளியேற வேண்டியிருந்தது.
போருக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கும் என்ன உறவு என்று கேள்வி கேட்டு மனிதகுலத்தின் மீது ஒரு நீண்ட விசாரணையை இந்த நாவல் நடத்துகிறது. யார் வென்றாலும், யார் தோற்றாலும் எல்லாவற்றையும் இழக்கப் போவது இருதரப்பு மக்கள் என்பதை வெறுமை படர, படர உணர்த்தி விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் பருவங்கள் அதுபாட்டுக்கு வழக்கம்போல் மாறிக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி 'போர் இயற்கைக்கு விரோதமானது' என்பதை குறிப்பறிய வைக்கிறது.
முன்பின் தெரியாத இன்னொரு நாட்டின் ஒரு வீரனை எந்த சம்பந்தமுமில்லாமல் கொல்ல வேண்டியிருக்கிறது. பிறிதொரு நேரத்தில் கொன்றவனும், கொல்லப்படுகிறவனும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்திருக்கக்கூட முடியும் என்றெல்லாம் நாவல் நம்மிடம் உரையாடுகிறது. தேசம் என்றும், மண் என்றும் உருவேற்றி அதற்குள் தேசீயவாதம் என்னும் வெறியை ஊட்டி, வல்லரசு என்று இராணுவசக்தியை வளர்ப்பது யாருக்காக என்று அதிகாரத்தின் மீது கணைகளை இந்த நாவல் வீசியிருக்கிறது.
மிகச் சரியாக உணர முடிந்தால் இந்த நாவல் பகவத் கீதைக்கும் நேர் எதிரான கலகக்குரல். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்று அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ணனோடு இந்த நாவல் அனுபவத்தின் தளத்தில் நின்று எதிர்வாதம் செய்கிறது. இந்த அரசியலைப் புரிந்து கொண்டதால்தான் நாஜிக்கள் அந்த நாவலை தடை செய்திருந்தார்கள்.
மனித உயிர்களை ஒரு புழுவுக்கும் கூட மதிக்காமல், முன்வைக்கப்படும் தேசம் குறித்த பெருமிதம், தேசியம் பற்றிய கற்பிதங்கள், இராணுவ வீரன் குறித்த புளகாங்கிதங்கள் அனைத்தையும் இந்த நாவல் உடைக்கிறது.
1952ல் தடை நீங்கினாலும், நாவலில் வரும் பாமரின் கதாபாத்திரம் போல, ரெமார்க்யூ தனது சொந்த ஊருக்கு கடைசி வரை திரும்பவில்லை. 1970, செப்டம்பர் 25ல் ரிமார்க்யூ ரோமில் இறந்து போகிறார். அவர் பிறந்த ஜெர்மனியில் ஒரு வார இதழில் அஞ்சலி செலுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அவரது புகழ்பெற்ற இந்த நாவல் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அந்த நாவல் மட்டும் உலகம் முழுவதும் 80 லட்சம் பிரதிகள் இது வரை விற்பனையாகி இருக்கிறது.
"அவர்கள் உடல் ரீதியாக போர்களிலிருந்து தப்பியிருந்தாலும், உள்ளரீதியாக அழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இன்றைய சந்ததியிடம் இந்த நாவல் பேச முயற்சிக்கும்." இப்படித்தான் நாவலைப்பற்றிய ஒரு வரி முன்னுரையாக ரெமார்க்யூ குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய சந்ததியினருக்கும் கொண்டு செல்வதற்காக மீண்டும் படமாக்கப்பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பத்திலும், கதையை காட்சிப்படுத்துவதிலும் தேர்ந்து இப்போது படம் அழுத்தமாக வெளிவந்திருக்கிறது. கூடவே ஒரு நாவலை எப்படி சினிமாக்குவது என்னும் பாடமும் எடுக்கப்பட்டிருக்கிறது.
(பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாவல் குறித்து நான் ‘புத்தகம் பேசுது’ இதழில் எழுதிய கட்டுரையின் சுட்டி முதல் கமெண்ட்டில்…..)
Thanks mathavaraj_cinema_experience

Monday, March 29, 2021

Harakiri Movie (Ritual suicide by disembowelment with a sword)

பொதுவாக சாமுராய் வீரர்களது படங்கள் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் பறைசாற்றுபவையாகவே பெரும்பாலும் அமைகின்றபொழுதிலும் ஒரு சில படங்கள் மறுபுறம் அவர்களது வாழ்விலேற்படும் துன்பியல் நிகழ்வுகளையும் வெளியுலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆங்காங்கே நிகழ்கின்றது.

Ageing samurai Hanshiro Tsugumo (Tatsuya Nakadai) arrives at the home of Kageyu Saito (Rentarô Mikuni) and asks to commit a ritual suicide on the property, which Saito thinks is a ploy to gain pity and a job. Saito tells Tsugumo of another samurai, Motome Chijiiwa (Yoshio Inaba), who threatened suicide as a stratagem, only to be forced to follow through on the task. When Tsugumo reveals that Chijiiwa was his son-in-law, the disclosure sets off a fierce conflict.

அகிரோ குரோசாவின் 07 சாமுராய்கள் படத்தைத் தொடர்ந்து அவ்வாறான ஒரு துன்பியல் நிகழ்வை வெளிப்படுத்தும் ஒரு திரைப்படமாக 1962 களில் Masaki Kohayashi யினது இயக்கத்தில் Ginichi Kishimoto அவர்களது தயாரிப்பில் Tatsuya Nakadai மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில்
தனது குடும்ப வறுமை, மனைவி , பிள்ளை இருவரதும் மோசமான உடல்நிலையைக் கவனத்திற்கொண்ட சாமுராய் வீரனொருவன் உதவி பெறுவதற்காக ஒரு சாமுராய் தலைவரது இல்லத்தை நாடி தான் Harakiri எனும் சாமுராய் வீரர்கள் மாத்திரமே புரியும் தற்கொலையை புரிய உதவுமாறு கோருகிறான். அவன் தங்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக வந்துள்ளதாகக் கருதி அவனை உடன் தற்கொலை செய்ய அவ்வீட்டிலுள்ளவர்கள் நிர்ப்பந்தப்படுத்தி மிக மோசமாக அவனை தற்கொலைபுரிய வைக்கின்றனர். அவனது நிலையைப் புரிந்துகொள்ளாது நடந்த சாமுராய் வீரர்களை பழிவாங்குவதற்காக அவனது மாமனாகிய மற்றுமொரு சாமுராய் வீரன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே படத்தின் பிரதான கதைக்கருவாக அமைகின்றது.
இத்திரைப்படத்தின் கதையானது Yasuhika Tukiguchi யினது Ibunronin Ki எனும் நாவலை அடிப்படையாக கொண்டுள்ளது. 1619- 1630 வரையான அமைதி நிலவிய காலப்பகுதியில் ஜப்பானில் தங்களது பிரபுக்களை இழந்த சாமுராய் வீரர்களது கவனிப்பாரற்ற நிலை , வறுமை போன்ற விடயங்களை பொதுமக்கள் மாத்திரமன்றி சக சாமுராய் வீரர்களும் புரிய முயற்சிக்காமை, அவர்களது நிலையை அறிய முயற்சிக்காது அவர்களை ஏளனம் செய்தல், தற்கொலையை அங்கீகரித்தல் என்பவற்றினூடாக அவர்களது நிலை எவ்வளவு மோசமாக காணப்பட்டது என்பதை இத்திரைப்படம் தத்ரூபமாக சித்தரிக்கின்றது.
படத்தின் முடிவில் சாமுராய் வீரர்களும்.. ஏன் அனைத்து மனிதர்களும் நம்மைப் போல் இரத்தம் சதை நிரம்பியவர்களே அவர்களது நிலையை புரிய முயற்சிக்காவிட்டாலும் உபத்திரவம் புரியாது இருப்போம் அதுவே உயிர்களுக்குச் செய்யும் உதவி என்பதை இத்திரைப்படம் கோடிட்டுக் காட்டுகிறது.
இத்திரைப்படம் 08 விருதுகளைப் பெற்றதுடன் 2011 கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜப்பானிய திரைப்பட இயக்குனர் Takashi Miike ஆல் 3D திரைப்படமாக Harakiri- Death of a Samurai எனும் பெயரில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Pragash Sinnarajah

Monday, February 1, 2021

Gran Torino

ஒரு ரிடையர்ட் மிலிட்டரி மேன் (வால்ட்) தன்னோட மனைவி இறந்த பின் தன் பசங்களையும் உலகத்தையும் வெறுத்து தனியா வசிக்கிறவர்... எல்லோர் மேலேயும் பாரபட்சமில்லாமல் வெறுப்பை காண்பிப்பவர்... அவரிடம் ஒரு 1970' மாடல் மான்டேஜ் வகையறா Gran torino கார் இருக்கிறது... அனைவருக்கும் அதன் மீது ஒரு கண்.

அவர் குடியிருக்கிற ஏரியாவில ஹமாங் எனப்படும் ஒரு இனத்தவர் (வியட்னாம் போரில் கம்யூனிஸ்டுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பின்னாளில் நாட்டை விட்டு துரத்த பட்டு அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்கள்) அதிகமாக வசிக்கிறார்கள்... ஹமாங் இனத்தவர்கள் பழங்குடியினை போன்ற வாழ்க்கை முறை கொண்டவர்கள்.. அவர்களில் பெரும்பாலோனோர் குற்றவாளிகள்.

வால்ட்டின் வீட்டருகே வசிக்கும் ஒரு ஹமாங் சிறுவனை (தாவ்) Gran torino' காரை திருடும்படி ஒரு கும்பல் கட்டாயபடுத்துகிறது... திருட போகும் போது வால்ட்டுக்கும் தாவ்'க்கும் ஏற்படும் உறவு... அதன் பின் வால்ட் குடும்பத்துடன் தொடர்கிறது... நடுவில் ஆண் துணை இல்லாத அந்த குடும்பத்தை.. அங்கிருக்கும் பல கேங்குகள் துன்புறுத்த அவற்றிலிருந்து அந்த குடும்பத்தை காக்கும் பொறுப்பேற்கிறார்.. வால்ட்... எப்படி என்பதை படத்தில் பார்க்கவும்..

The Good the Bad the Ugly யில் இருக்கும் அதே charisma மற்றும் Style.... மிகவும் தளர்ந்த Clint Eastwood'யிடம் .. நிறைய இடத்தில் ரசித்தேன்... ஒரு மெலொடி ட்ராமா வகை திரைப்படம்.. முகத்தில் புன்னகையுடன் பார்க்க வைக்கும்... A don't miss movie.

Written by a newcomer, Nick Schenk, the story eases into gear with an act of desperation./Under violent threat from some Hmong gangbangers, the next-door neighbor’s teenage son, Thao (Bee Vang), tries and fails to steal Walt’s cherry 1972 Gran Torino, and in the bargain nearly loses his life to its angry, armed owner. Thao’s family, led by his mouthy, friendly sister, Sue (a very good Ahney Her), forces the teenager to do penance by working for Walt, an arrangement that pleases neither the man nor the boy. No one seems a more unlikely (or reluctant) father surrogate than Walt, a foulmouthed bigot with an unprintable epithet for every imaginable racial and ethnic group. Growling often literally, “Grr, grr”  he resists the family’s overtures like a man under siege, walled in by years of suspicion, prejudice and habit.

Wednesday, January 20, 2021

The Great Indian Kitchen

ஒரு சில திரைப்படங்களை பார்த்தவுடனே
நம்ம மட்டும் பார்த்தா போதாது...
நமக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரும் பார்க்கனும்...
அதனால எல்லார்கிட்டையும் அந்த படத்தை பற்றி பெருமையாக பேசுவோம்.
அப்படியான திரைப்படம் தான் the great indian kitchen.
எப்படி இந்த மாதிரியான கதைகளை உருவாக்குகிறார்கள், தொடர்ந்து மலையாள சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் புதிது புதிதாக யோசிப்பதும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை திரைப்படமாக எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்...



A slap on patriarchal society...
படம் ஆரம்பிக்கறதே Thanks Scienceனு தான்...thank godங்கற வழமையிலிருந்து விலகி நிற்கிறார் இயக்குனர் Jeo Baby.
*Spoiler alert*
//நிமிஷாவும் சுராஜும் புதுமணத் தம்பதியராய் ஆரம்பிக்கறது கதை. மாமியாரும் மருமகளும் சமைக்க ஆரம்பிக்க வீட்டு ஆண்கள் ரிலாக்ஸ்டாக இருப்பதும், டூத் ப்ரஷ் பேஸ்ட் மாமனாருக்கு மாமியார் கையில் கொண்டு வந்து தருவதுமென அந்த வீட்டின் இயல்பு காட்சிகளில் விரிகிறது.
நிமிஷா சுராஜுடன் அவர்கள் வீட்டு சமையலறையும் ஒரு கதாபாத்திமாக வாழ்ந்திருக்கிறது படத்தில். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை விட, காய் நறுக்குவதும் சமைப்பதும் பாத்திரம் கழுவுவதும் கூட்டுவதும் துடைப்பதும் துவைப்பதும் என அதிகமாய் வளையலிட்ட கைகள் ஆயிரம் கதை பேசுகிறது.
காலை சமையல் முடித்து ஆண்களுக்கு பரிமாறி, பாத்திரம் கழுவி மதியம் சமையலுக்கு காய்கறி வெட்டி சமைத்து பரிமாறி பாத்திரம் கழுவி...என திரும்ப திரும்ப இந்த காட்சிபடுத்தலில் பெண்கள் படும் அயர்ச்சியை அட்டகாசமாய் காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர். எடிட்டிங் அருமை.
இரவானால் உணர்வே இல்லாத புணர்ச்சி...ஃபோர்பிளே என்ற வார்த்தை தெரிந்ததற்கே ஏளனமாய் பேசும் கணவன்...
ஆண்கள் சாப்பிடும் பொழுது வேஸ்ட்லாம் வைக்கும் தட்டில் போடாமல் டேபிள் முழுக்க பரப்பி வைப்பதும், அதே பெண்கள் சாப்பிட்டு முடித்ததும் வேஸ்ட்லாம் அதற்குரிய தட்டில் இருப்பதும் அழகாய் காட்சிகளில் வசனமேயின்றி உணர்த்தப்படுகிறது. இதே ஹோட்டலில் சாப்பிடும்பொழுது கணவன் தனித்தட்டில் வேஸ்ட்லாம் எடுத்து வைப்பதை மனைவி சொல்லும் போது அவர் ஈகோவில் குத்தித் தைப்பதை சுராஜ் அருமையாய் வெளிப்படுத்துகிறார்.
அம்மிக்கல்லில் சட்னி, குக்கரில் வைக்காமல் விறகடுப்பில் வேக வைத்த சாப்பாடு, வாஷிங் மெஷினில் போடாமல் கைகளில் துவைக்கச்சொல்லும் மாமனாரின் தேவைகள்...ஒழுகும் கிச்சன் சின்க் சரி செய்ய கணவன் எந்த முனைப்பும் காட்டாதது...பீரியட்ஸ் வரும் நாளில் எதையும் தொடாமல் தனி ரூமில் பாயில் படுப்பதும்....என இயல்பாய் மருமகளின் தோளில் ஏறும் சுமைகளை திரைக்கதை இயல்பாய் எடுத்துச் செல்கிறது.
அத்தனை அழுத்தங்களும் சேர, சின்க் அடியில் சேர்ந்த அழுக்கு  நீரை கணவன் மாமனார் முகத்தில் தூக்கி எறியும் காட்சி மனதிற்கு மிகத் திருப்தியாய் இருந்தது.
கதாபாத்திரங்களுக்கு பெயரே இடப்படவில்லை என்பதே கதைப்போக்கில் தெரியவில்லை என்பது ஆச்சர்யம்.
கடைசிக் காட்சியில் அதகளமான இசையுடன் கூடிய நடனம் துவங்கும் போது உடல் சிலிர்த்துப் போகிறது...//
மனதிற்கு மிக நெருக்கமான கதைக்களம்...பெண்கள் மீதான வன்முறை எந்தவொரு அடிதடி காரசாரமான வார்த்தைகளின்றி, புன்னகையுடன் இயல்பாய் ஆண்கள் சிரித்துகொண்டே வன்முறையை பெண்கள் மேல் ஏற்றுவதை அட்டகாசமாய் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர். அதை நிமிஷா பரிபூரணமாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
Please do watch the movie... Thanks Hema Chandrasekar

Thursday, December 31, 2020

ROOBHA கனேடியத் தமிழ்ச் சினிமா

Karunakaran Sivarasa
திரைஅழகியலின் உச்சத்தில் எரியும்
திருநங்கை வாழ்வின் பயணவெளி
----------------------------------------------
A GUN & A RING, 1999 என கவனத்திற்குரிய திரைப்படங்களைத் தந்த லெனின் M சிவத்தின் மற்றொரு படம் ROOBHA. அவருடைய வழமையைப்போல, சவால் மிக்க மேலும் கடினமான, கவனத்திற்குரியதொரு பரப்பைத் தேர்ந்திருக்கிறார் M சிவம்.
A GUN & A RING போல இதுவும் ஒருவகையில் கனேடியத் தமிழ்ச் சினிமாவே. கனேடியத் தமிழ்ச்சினிமா என்று ஏன் விசேடமாக குறிப்படுகிறதென்றால், கனடாவில் வாழ்கின்ற தமிழ்ச் சமூகப்பரப்பின் உள்ளடக்குகளைப் பெரும்பாலும் இந்தப்படமும் திறக்க முற்படுகிறது என்பதால். ஆனால், தனியே கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்குள் இது மட்டுப்படுவதில்லை. அப்படி மட்டுப்படுத்தப்படுவதுமில்லை. பதிலாக கனடியச் சூழலின் (Multicultural social environment) யதார்த்தத்தோடு தமிழ் வாழ்வின் உள்ளடக்குகள் காண்பிக்கப்படுகின்றன.
M சிவத்தின் பார்வையே அதுதான். தன்னுள் குறுகிக் கொள்ளாமல், விரிந்து நோக்குவது. அப்படி விரிந்து நோக்கும்போது அவருடைய படங்களில் தமிழ்ப்பரப்பையும் மேவிய கனேடிய அடையாளம் உருவாகிறது. A GUN & A RING, ROOBHA உள்ளிட்ட M சிவத்தின் படங்களின் பொதுக்குணம் இதுவே. இதனால் தமிழ்ப்பரப்பிற்கு வெளியே அல்லது அப்பால் அவருடைய படங்கள் (சினிமா) எழுந்து நிற்கின்றன. இதனால்தான் M சிவம் முக்கியமான கலை ஆளுமையாகவும் கவனத்திற்குரிய இயக்குநராகவும் கணிக்கப்படுகிறார். அவர் வெற்றி பெற்றுச் செல்லும் அடிப்படைகளில் இதுவும் ஒன்று.
ROOBHA வில் M சிவத்துடன் இணைந்து செயற்பட்டிருக்கிறார் எழுத்தாளர் ஷோபசக்தி. ஷோபாசக்தியின் பங்களிப்புகள் கதை, திரைக்கதை உருவாக்கத்திலும் மையப்பாத்திரமொன்றுக்கான நடிப்பிலுமாக உள்ளன. அதோடு இந்தப்படத்தின் தமிழ்ப்பாடலையும் ஷோபாசக்தியே எழுதியிருக்கிறார்.
புனைவெழுத்துகளின் வழியாகச் சாதனைப் பரப்புகளில் உலவிக் கொண்டிருக்கும் முதன்மை எழுத்தாளர் ஷோபாசக்தி. சமகால ஈழத் தமிழ் வாழ்வின், அதனுடைய போராட்டத்தின்  அல்லாடல்களின் உட்பரப்பையும் அது சந்திக்கும் நெருக்கடிகளையும் துணிச்சலோடும் அமர்க்களமான கேலிப்படுத்தலோடும் எழுதும் கலைஞர். அதேவேளை M சிவத்தைப்போல அவரும் தமிழ்ப்பரப்பிற்கு வெளியேயும் தன்னுடைய புனைவெல்லையை விரித்துச் செயற்படும்  ஆளுமை. தன்னடையாளத்தைப் புனைவுகளின் வழியாக வெளியுலகில் ஏற்றியிருப்பவர். கூடவே புனைவுகளோடு அண்மைய ஆண்டுகளில் சினிமாவிலும் ஷோபாசக்தியின் பங்கேற்பு வியப்பூட்டும் வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. THEEPAN ஐத் தொடர்ந்து ROOBHA இவற்றுக்கு இன்னொரு அடையாளம், ஆதாரம்.
ஆகவே லெனின் M சிவம், ஷோபாசக்தி என்ற இரு ஆளுமைகளின் கூட்டு விளைவே ROOBHA. கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்க் குடும்பமொன்றைச் சேர்ந்த இளம்பருவத் தமிழ்த் திருநங்கை ஒருவரின் வாழ்க்கைச்  சிக்கல்களையும் சவால்களையும் திரையில் வடிவமைத்து நம்மிடையே பரப்பி விடுகின்றனர் இருவரும்.
தமிழ்க் குடும்பங்களிலும் அதனுடைய சமூக வெளியிலும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வாழும்போது எதிர்கொள்கிற சிக்கல்களும் சவால்களும் கூட ஏராளமானவை. இதில்  வளரிளம் பருவத்துச் சவால்களும் நெருக்கடிகளும் இன்னும் அழுத்தமானவை. இதற்கப்பால் Transgender (திருநங்கை) ஆக இருப்பதென்பதும் வாழ முற்படுதலென்பதும் நினைத்துப் பார்க்கவே முடியாத கடுமைகளைக் கொண்டது.  அந்தளவுக்கு கொடுமையும் ஆய்க்கினையும் நிரம்பிய ஆழத்துயர்குழி  அது. இது ஈழத்திலோ இந்தியாவிலோ என்றில்லை, தமிழ் மனதோடு புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழ்ந்தாலும் எந்த வேறுபாட்டையும் கொள்வதில்லை. இதையே பேசுகிறது ROOBHA.
கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்க்குடும்பத்தின் மூத்த மகன் கோகுல். (அப்படித்தான்  ROOBHA வின் அறிமுகம் நிகழ்கிறது). ஆனால், கோகுல் அப்படியிருக்கவில்லை. அப்படியிருக்க முடியாமல் தத்தளிக்கிறார். அவரோ  தன்னியல்பின்படி ROOBHA வாக, Transgender என்றாக  விரும்புகிறார். அதற்கு வீட்டில் (குடும்பத்தில்) இடமில்லை. முக்கியமாக அவருடைய தந்தையால் இது வலிமையாக மறுக்கப்படுகிறது. தந்தையை மீறி வேறு யாரும் குடும்பத்தில் எதையும் தீர்மானிக்க முடியாது. சராசரித் தமிழ்க்குடும்பங்களின் மனநிலையும் வழமைகளும் இப்படித்தான் மரபு அல்லது பாரம்பரியம் என்ற சமூகச் சூத்தரத்தில் கட்டுண்டு இறுகிக் கிடப்பது என்பதால், ரூபா என்ற புதிய முளைக்கு அங்கே இடமில்லாமல் போகிறது.
பிள்ளையின் விருப்பத்தையும் அதன் நிலைமையையும் விட ‘வெளியுலகம்’ என்ற தம்மைச் சுற்றிய “சமூக மனநிலை“யே குடும்பத்தினருக்கு, குறிப்பாகத் தந்தைக்கு  முக்கியமாகத் தோன்றுகிறது.
இதனால் வீட்டுக்கு அப்பாலான வெளியைக் கோகுல் - ROOBHA தெரிகிறார். ஆனால், வீட்டின், குடும்பத்தின் இறுக்கமில்லையே தவிர, வீட்டை விட்டு வெளியே வந்தாலும் வெளிச் சூழலும் அத்தனை எளிதாகவும் உவப்பாகவும் இருப்பதில்லை Transgender களுக்கு.  இந்த நிலையில் இந்த வெளிப்பரப்பில் ROOBHA எதிர்கொள்கின்ற நெருக்கடிகள், வாய்ப்புகள், சவால்கள் எப்படியாக இருக்கின்றன? என்று காணவும் காண்பிக்கவும் முயற்சிக்கிறது ROOBHA.
வெளிப்பரப்பில் ROOBHA  சந்திக்கும் பல்வேறு ஆண்களில் அன்ரனியுடன் கூடுதல் நெருக்கம் ஏற்படுகிறது. அன்ரனியும் ஒரு ஈழத்தமிழ்க் குடும்பத்தவரே. இரண்டு பெண் பிள்ளைகளின் மத்திய வயதை நெருங்கும் தந்தை. காதலித்து திருமணம் முடித்த மனைவி. அவருடைய குடும்பம்  இறுக்கமான மரபுச் சிக்கல்களுக்குள் அலைக்கழிந்து கொண்டிருப்பதில்லை என்றாலும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை அது நெகிழ்வுத் தன்மையுடன் அனுசரிப்பது.
அன்ரனிக்கும் ROOBHA வுக்கும் இடையில் அவருடைய Pub இல்  நிகழ்கின்ற அறிமுகம் ஈர்ப்பாகி, பால் வேட்கையாக பரிணமிக்கிறது. ஆனால், எதிர்பார்த்தமாதிரி ROOBHA பெண்ணாக இல்லை என்ற ஏமாற்றம், அன்ரனியைத் தடுமாற வைக்கிறது.  ROOBHA வைத் தாக்கி விட்டு அந்த உறவை மறுத்து வெளியேறுகிறார். ஆனாலும் பின்னர் அது ஏதென்றறியாத விதியைப்போல வேறுவிதமாகித் தொடர்கிறது.
இதனால் அன்ரனியின் குடும்பம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், ROOBHA க்கும் அன்ரனிக்கும் இடையிலான நெருக்கம், இருவருக்குமிடையிலான பாலுறவின் ஈடுபாடுகள், உருவாகும் அன்பு, அதன் வழியாக உருப்பெறும் மாறாத காதல், அன்ரனியின் மனைவிக்கும்  ROOBHA இடையில் நிகழும் நிலைமைகள் என படம் பலவிதமான கோலங்களாலும் இழைகளாலும் நிறைந்துள்ளது.
இரண்டு தமிழ்க்குடும்பங்களின் பிரதிநிதிகளே படத்தின் (கதையின்) மையப்பாத்திரங்கள். ஆனால் ROOBHA வே பிரதான மையம். ஏனைய பாத்திரங்கள் கனடிய பல்லினச் சூழலின் ஊடாட்டமாக நிகழ்வன.
படத்தில் பெண்களே முதற்கவனத்தை ஈர்க்கின்றனர். கோகுலின் (ROOBHA வின்) தங்கை, அவருடைய அம்மா, அன்ரனியின் மனைவி, ROOBHA வைச் சந்திக்கும் ஏனைய பெண்கள் மற்றும் அவருடைய சக Transgender கள் எல்லோரும் யதார்த்த நிலைகளைப் புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர். அன்பும் புரிந்துணர்வும் இரக்கமும் நேசிப்பும் இவர்களிடமே மேலோங்கித் தொழிற்படுகிறது. கோகுலை Transgender ஆக, ROOBHA வாக அனுசரிப்பதற்கு அவருடைய தாய் புரிந்துணர்வுடனிருக்கிறார். “ROOBHA  வாக மாற முடியாது. அப்படி மாறுவதாக இருந்தால் இந்த வீட்டில் இருக்க முடியாது” என்று தந்தை கூறும்போது “அப்பிடியென்றால், அவன்(?) எங்க போறது?” என்று தாய் கேட்குமிடம் தனியே தாய் என்பதற்கும் அப்பால், பெண்ணின் இயல்பான வெளிப்பாடே.  ஏனென்றால் இந்த மாதிரி (Transgender) நிலைமையில் உள்ளேயே (வீட்டிலேயே) இடமில்லாமல் போகும்போது வெளியே என்ன நடக்கும், எப்படியெல்லாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடம் என்பதை பெண் நிலையின் வழியாக அவர் அறிவார் என்பதன் வெளிப்பாடிது.
அப்படித்தான் தங்கையும். கோகுலுக்குப் பிரியமான சட்டையை கொடுப்பதும் நேசமுடன் அணுக்கமாக ஆறுதலாக இருப்பதும். இதே மாதிரியே தன்னுடைய கணவரை காதல் வயப்படுத்தியிருக்கிறார் ROOBHA என்று தெரிந்த பிறகும் – கணவர் அன்பையும் காதலையும் செக்ஸையும் வேறோரிடத்தில் பெறுகிறார் என்ற நிலையிலும் ஒரு  கட்டத்தில் ROOBHA வைப் புரிந்து கொண்டு இடமளிக்கிற – அதை மதிக்கிற அன்ரனியின் மனைவி.
ஆனால், குடும்பத்தில் ஆண்களின் தீர்மானமும் சமூகத்தில் ஆண்மையச் சிந்தனையும் இவற்றுக்கு நேர்மாறாக உள்ளன. இதையே கோகுலின் தந்தையும் அன்ரனியின் நண்பர்களும் மைத்துனரும் காண்பிக்கின்றனர். ஏன் தொடக்க நிலையில் அன்ரனியிடமும் இதுவே மேலோங்கியிருக்கிறது. அதனால்தான் அவர் தன்னுடைய ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ROOBHA வை அடித்து விடுகிறார்.
இலங்கை, இந்தியா போன்ற பின்னிலை எண்ணப் பண்பாட்டுளவியற் சூழலில் மட்டுமல்ல, வெவ்வேறு கலவைகளைக் கொண்ட  (Multicultural social environment) கனேடியச் சூழலிலும் ROOBHA போன்ற Transgender களின் வாழ்க்கை இலகுவானதாக இல்லை. அங்கும் பாலியல் சுரண்டலும் பாலியல் சார்ந்துமே இவர்களின் வாழ்க்கை இருப்பதாகச் சொல்கிறது ROOBHA.  லெனின் M சிவத்தின் அல்லது ROOBHA வின் இத்தகைய வாசிப்புக் குறித்து எதிர்வாசிப்புகள் இருக்கக் கூடும். ஆனாலும் தன் பார்வையில் செறிவையும் அழுத்தத்தையும் அதற்குரிய கலை நேர்த்தியையும் சிவம் கொடுத்திருக்கிறார்.
இந்தப்படம் தமிழ்ச் சூழலில் உண்டாக்கும் விளைவுகளைக் குறித்து ஒரு பார்வையையும் தமிழல்லாத பிற மொழிப் பண்பாட்டுச் சூழலில் இன்னொரு பார்வையையும் பெறும். அப்படி அது கொள்ளும் என்றே நினைக்கிறேன். இரண்டு சூழல்களும் இதை வெவ்வேறு விதமாகவே உணர்ந்து கொள்ளும். தமிழ்ச் சூழலிலும் திருநங்கைகளைக் குறித்த புரிதல்களோடிருப்போரின் பார்வைக்கும் ROOBHA மறுக்கும் தந்தை போன்றோரின் பார்வைக்குமிடையில் வேறுபாடுகளுண்டு. அவர்கள் இதனை வரவேற்பர். இன்று தமிழ்ப்பரப்பில் ஏற்பட்டு வரும் Transgender  குறித்த உரையாடல்களுக்கும் கவனத்துக்கும் இது உதவும், மேலும் வாய்ப்புகளை உருவாக்கும். Transgender  களுக்கு  இது மதிப்பை ஏற்படுத்தும் என்பது போன்ற காரணங்கள் இவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஏனையோர் சிலவேளை இதைக் கசந்த நிலையில் பார்க்கவும் வாய்ப்புண்டு. அவர்களுடைய பார்வையில் “இது பண்பாட்டு மீறல் அல்லது சிதைவு, வணிகக் கவர்ச்சிக்கான மிகைப்படுத்தல் அல்லது Transgender ஐப் பற்றிய மிகை மதிப்பீடு எனத் தோன்றலாம். ஆனாலும் சமூக வளர்ச்சியையும் அதற்கான மீறல்களையும் யாராலும் கட்டுப்படுத்தி வைத்திருக்கவே முடியாது. ROOBHA வும் அப்படித்தான். படத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதைப்போல அடக்கும் பண்பாட்டை விட்டும் மீறிச் சிறகை விரிப்பாள்.
படத்தின் ஒளிப்பதிவு, அதன் தரத்தை மேலும் உயர்த்துகிறது. மென்னிருளும் மங்கிய ஒளியும் மென்னிலையிலான கலப்பு வண்ணங்களுமாக திரை அழகொளிர் பரப்பாக விரிக்கப்படுகிறது. ROOBHA க்குக் கொடுக்கும் முத்தத்தில் பாதி ஒளிப்பதிவாளர் Arsenij Gusev க்கும். இதற்கிணையாக கலை இயக்குநரின் (Bettina Katya Lange) உணர்வும் பங்களிப்புமுள்ளது. இசையும் எடிற்றிங்கும் கூட அப்படித்தான், ஒன்றில் ஒன்று பொருந்திக் கலந்திணையும்போதே சிறப்பான சினிமாவொன்று உருவாகும் என்றவாறாக. ஆனால், எடிற்றிங்கில் இன்னும் சற்றுக் கவனமெடுத்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அல்லது சில காட்சிகளில் வேறு தன்மைகளை உருவாக்கியிருக்கலாம். படத்தின் தொடக்கமும் முடிவும் வேறு விதமாக அமைந்திருக்கலாமோ என்றும் படுகிறது.
பாத்திரங்களில்  Amrit Sandhu, ஷோபாசக்தி, தேனுகா கந்தராஜா மற்றும் வைரமுத்து சொர்ணலிங்கம் ஆகியோர் கவனத்தில் நிற்கின்றனர். இருந்தாலும் அம்ரித் சந்து கூடுதல் அழுத்தம் பெறுகிறார். எல்லா விதமான ரூபங்களிலும் அவர் தாவிச் செல்லும் அழகு வியப்பூட்டுவது. அவருடைய தோற்றமும் விரியும் ஆற்றலும் சிறப்பு. இணையாகச் சென்று கொண்டிருக்கிறார் ஷோபாசக்தியும்.
இந்தப் படத்தைத் துணிச்சலாகத் தயாரித்த Warren Sinnathambyக்கு பாராட்டுகளும் நன்றியும்.  இந்த மாதிரி சர்ச்சைக்குரிய - மாற்றான - விடயங்களைப் பற்றிப் பேசும் சினிமாவிற்குப் பங்களிக்க எல்லோரும் முன்வர மாட்டார்கள். அதுவும் நம்முடைய தமிழ்ச்சூழலில். Warren Sinnathamby மாற்றுச் சினிமாவையும் அதை முன்னெடுப்போரையும் ஆதரித்து ஊக்கமளிப்பதற்கே Next Productions, ஐ உருவாக்கியிருக்கிறார். அதனுடைய பங்களிப்பின் எல்லைகள் மேலும் விரியும் என எதிர்பார்க்கிறேன்.
காமத்தில் தொடங்கிக் காதலில் முடியும்  வாழ்வு என்று ROOBHA  வைச் சாராம்சப்படுத்திச் சொல்லலாம்.  வழமைகளை மீறிய Transgender லின் அழகும் அம்சமும் அச்சம் தவிர்க்கக் கோருவன.
ROOBHA நம் பிரியங்களிலும் நேசிப்பிலுமான ஒருத்தி.

Tuesday, December 29, 2020

நடிகை சௌந்தர்யா Dweepa (Kannada: The Island)

நடிகை சௌந்தர்யா 1992ஆம் ஆண்டு தமிழ்ப்படமான பொன்னுமணி திரைப்படம் மூலமாகத்தான் அறிமுகம் ஆகிறார்.இவருக்கு ஜோடியாக கார்த்திக்.இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் .படமும் Super hit.அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் busy ஆனார்.

 2002ஆம் ஆண்டு Dweepa எனும் கன்னடப் படத்தை தயாரித்து நடிக்கிறார்.படம் பல உலகத்திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கிறது.இரண்டு தேசிய விருதுகளைப் பெறுகிறது.நான்கு மாநில விருதுகளைப் பெறுகிறது.

இப்போ நான் கேட்பது இதுதான்.திரையுலகில் நுழைந்து வெறும் பத்து ஆண்டுகளுக்குள் சமூகக் கண்ணோட்டத்தோடு ஒரு படத்தை தயாரிக்க வேண்டுமென அந்தப் பெண்ணுக்கு தோன்றுகிறது.32வயதிற்குள் இப்படியொரு படத்தை தயாரித்து சினிமாவின் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறை ஏற்படுகிறது.

Dweepa (Kannada: The Island) is a 2002 Indian Kannada language film by Girish Kasaravalli, based on the novel of the same name by Na D'Souza, and starring Soundarya and Avinash in lead roles. Dweepa deals with the raging issue of building dams and the displacement of natives.it won 2 National Film Awards, 4 Karnataka State Film Awards & 3 Filmfare Awards South.


Story
Located in the backwaters of a dam, Sita Parvata is an island slowly submerging due to the rains. The government succeeds in evacuating the residents by giving them compensation for the properties they own. The village temple priest Duggajja, his son Ganapa, and his daughter-in-law Nagi find it impossible to leave their homeland and make a living with the meagre compensation given by the government. They have but a small hut, which earns them a compensation of 25,000. In Ganapa's own words, the compensation can give them food and shelter, but cannot compensate for the love and respect of their people. On the island, they are important people, but outside, they would be one among hundreds of families struggling to make a living. Centered on this complex theme, the film narrates the struggles of the family and how ultimately in the end they manage to continue life on the island.

Sunday, December 13, 2020

Kim Ki-Duk South Korean Director. கிம் கி-டக் உலகின் மிகச் சிறந்த சினிமா இயக்குநர்


"என்னுடைய வளர்ச்சியையும், மாற்றத்தையும் என் படங்களின் மூலமாகவே தெரிந்துக்கொள்கிறேன்.
கஷ்டமான சிக்கல்கள் ஒருவர் வாழ்வில் தொடர்ந்தபடி இருந்தால், மாய கற்பனைகளால் ஆன உலகில் வாழ்வது என்பது சிறிதளவாவது ஆறுதல் தரும்."
- Kim Ki Duk
கிம் கி-டக் தென் கொரியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவார். இவருடைய திரைப்பட பாணி வித்தியாசமானதாகவும், கலைநுட்பமானதாகவும் இருப்பதால், ஆசியா அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். திரைப்பட இயக்குநர் கிம் கி டக். 1960-ம் ஆண்டு பிறந்த அவர், 1996-ம் ஆண்டு க்ரோகடைல் என்ற படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார்.
 
இவரது பல திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளன. 
அவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் நாடு எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் சென்றடைந்தது. அவருடைய படங்களில் சமாரிட்டம் கேர்ள், 3 அயர்ன், அரிரேங், பியிடா, ஒன் ஆன் ஒன் ஆகிய படங்கள் சினிமா ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் படமாக இருந்துவருகிறது. தென் கொரிய இயக்குநர்களிலேயே கிம் கி டக் மட்டும்தான், உலகின் மிகப் பெரிய விருதுகளான கேன்ஸ், வெனிஸ், பெர்லின் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
உலகமே கடவுளைத் திறந்து காட்டிக் கொண்டிருந்த போது கடவுளுள் இருக்கும் சாத்தானை திறந்து காட்டி இதுவும் நிஜம் தான் என்று பொதுவெளியில்... எல்லாம் வல்ல மானுட மனத்தின் இருட்காலத்தை வெளிச்சமேற்றிய கலைஞன்.
"கிம் கி டுக்"ன் படங்களைக் காண்பது என்பது... தனித்து மலையேறுவது......அல்லது தனித்து மலை இறங்குவது......அல்லது தனித்த மலையாவது.
"கிம் கி டுக்"கின் கதை மாந்தர்கள்......அதிகமாய் பேசுவதில்லை. அவர்கள் எப்போதும் தனித்தே இருக்கிறார்கள்......அல்லது தவித்தே இருக்கிறார்கள்.....அல்லது தவிர்த்தே இருக்கிறார்கள். பெரும்பாலான படங்களில் பேச ஒன்றும் இருப்பதில்லை. இரண்டு பக்கம் வசனம் பேச வேண்டிய காட்சியை ஒரே ஒரு பிரேமில் காட்டி விடுகிறார். கரை கண்ட திரை சதுரம் வால் ஆட்டாத நாய்க்குட்டி தான் அவருக்கு. காட்சி மொழியில் அவர் திரை கனக்கச்சிதமாக கதை சொல்கிறது. அருகிலும் தூரத்திலும்.... ஒற்றை இறகை பறக்க விட்டு..... பார்த்துக் கொண்டே இருக்கும்... தூரத்து கடல் அலையின் ஆர்ப்பரிப்பு நம்மை சுற்றிலும் இயங்கிக் கொண்டே இருக்க செய்வது.... சித்து வேலை அல்ல. சித்தன் வேலை.
இருக்கும் என்பது இல்லாமலும் தான்....என்பதாகட்டும்...(3 iron) முகம் மாற்றித் திரியும்....அன்பின் புறக்கணிப்பாகட்டும்......(Time). அறுக்கப்பட்ட மகனின் உறுப்புக்காக பரிதவிக்கும்....தந்தையாகட்டும்........(Mobeus) சிறையில் இருக்கும் காதலனை காண சென்று ஒரு சிறுமியாக ஆடி களிப்பூட்டும் காதலாகட்டும்.....(breath) அசைந்தாடும் பிரிவும் அகம் தீண்டும் சோகமும் நேர்த்தியோடு மிக மெல்லிய இசையாகி விடுகிறது...அவர் சினிமாக்களில்.
"இந்த உலகத்தில் நாம் வாழ்வது என்பது நிஜமா கற்பனையா என்பதை அத்தனை எளிதில் சொல்லி விட முடியாது...." எனும் தத்துவார்த்த ஊடறுப்பு சதா நிகழ்ந்து கொண்டே இருக்கும்.. கதைக்களங்கள் இவருடையன. காட்சிக்கு காட்சி 'ரா'வான ரத்தின சுருக்கம்... திரைக்கதையாகி இருப்பது... தனி வடிவம். படத்தில்... படகில் தனக்கு தானே தண்டனை கொடுக்கும் பெண்ணின் தூண்டிலில்.... உலகமே கதறும் ஒரு காட்சி.... நிஜத்தை நேருக்கு நேர் காணுகையில்... நெஞ்சத்தில் நெருப்பூரும் என்பது.(the isle) எடுத்த இடத்தில் கிடைக்கும் தொலைத்தல்... தொலைந்த பிறகும் எடுக்கும் காலத்தின் ஜோடித் தத்துவம்.. நட்பெனவும் கொள்க. (samirtan girl) நினைத்த நாட்டுக்கு செல்ல கிடைத்த வழி... உடல் விற்பனை. உடலும் உடலும் சொல்லும் தத்துவத்தில்... என்னானது....பயணம். அலற வைக்கும்.... அரூப நடை அவருடையது.
(bow) ம் (bad guy) ம் நெருங்க முடியாத நிர்பந்தம். நெற்றியில் விலகும் நேர் கோட்டு சித்திரம். நீருக்குள் நிகழும் நின் கடன் மானுடம் சேர்ப்பது (crocodile). வன்முறையே நம்மை வழி நடத்துகிறது. அதற்கு தான் மாற்று பெயர்களை சுமந்து கொண்டு அலைகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த புரிதலில் அளவு வேண்டுமானால் மாறலாம். ஆனால் ஆழம் மாறாது. கொரியாக்களின் சண்டையை (the Net) தன் வலையை நகர்த்திக் கொண்டு காட்டியது. மானுட குயுக்தி வெளி வந்தது (human space time & Human) தினம் ஓர் உடல்... தினம்... தான் ஒரு கடல். என மறுபக்கத்தை போட்டுடைக்கும் கிம் கி டுக்.... அதிரூபன் இல்லை.... ஆனால்.... அந்நியனும் இல்லை.
இந்த மானுடத்தின் சாபமும்.. வரமும்.. அன்பு மட்டுமே. (pieta) அது இருக்கும் ஆயுதத்துக்கெல்லாம் உயர்ந்த ஆயுதம். அதைக் கொண்டு... எதிராளியின் மனதுக்குள் கூர் கத்தி ஒன்றை செய்து உள் நோக்கி மரணத்தை திருப்பி விட்டு விட முடியும். அடித்துக் கொண்டேயிருப்பது வன்முறை என்றால்.. அடி வாங்கிக் கொண்டே மீண்டும் மீண்டும் அடி என்று கூறுவது வன்முறையின் உச்சம். உச்சத்தின் முனையில் நின்று உலகுக்கு மௌனமாய் எடுத்து சொல்வது... அத்தனையும் இந்த மானுட வாழ்வின் ஆதி பரியந்தம் தான். வேதாளம் இடம் மாறும் நுட்பத்தைத் தான் மனிதன் கடவுளுக்கு பிரார்த்திக்கிறான்.
எதிர் வினையில் நின்ற வினைக்குள் எட்டிப் பார்க்கும் பொருளுக்கு பொருளற்று சேர்ந்து கொள்ளும்.... பொருள் ஒன்றில்...சொல்லப் படும் நிர்பந்தங்களைத்தான் இந்த மனித மனம் விரும்புகிறது. அந்த மனம் முழுக்க... அவனின் துயரத்தின் சுவடுகள்... மீள் பயத்தின் மிச்சமென...அவனால் விரும்பப் படுவது தனிமையின் இருள் சேர்ந்த சில காலங்களின் சாபங்கள் தான். வினோதம் மூச்சடைத்து சாவும் மணித்துளிகளை மனம் மீன் தொட்டியில் ரசித்துக் கொண்டிருக்கும். ஒழுக்கம் என்பது ஊர்களை பொருத்தது என்று ஒரு பாடல் வரி உண்டு. அதையும் தாண்டி... ஒழுக்கம் என்பது உள்ளத்தை பொறுத்தது என்று கூட யோசிக்க வைக்கும்.
உள்ளார்ந்த கசடு நிறைந்த மனித மிருகத்தின் மிச்சத்தை எடுத்துக் காட்டிய கலைஞன். அவர் ஊரில் பெரிதாக வெறுக்கப்பட்ட அதே நேரம் உலகலாவில் பெரிதாக விரும்பப்பட்ட... கதைக்க சொல்லி கிம் கி டுக் ஓர் உக்கிர தூதுவன்.
வலிமைக்கு வலிமை எளியவையும் ஆகும். அது மிகச் சாதாரணமாக கதவைத் தட்டி விட்டு கடந்து விடும். திறக்கையில் அன்போடு சிறகு முளைத்த தேவதை ஒருத்தி எந்த வயதிலும் நிற்கலாம்....ஒரு கூடை அன்பை சுமந்தோ...அல்லது ஒரே ஒரு காரணம் சுமந்தோ. அன்பை விட கொடிய ஆயுதம் ஒன்று உண்டோ....! என்று ஒவ்வொரு கதையிலும்... ஒவ்வொரு வடிவம் கொண்டு இருத்தல்......அழிக்கும் ஆக்கம்....திகைக்கும் பிரமிப்பு என்பதைத் தாண்டி தனி மனித சுத்திகரிப்பு... எனலாம்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவரும் அவரவருக்கான செய்தியை சுமந்தலைவது விதி. இந்த தேகத்தின் வரம்பறியா நிலையில்.. மலைமீது புத்தனை சுமந்து செல்லும் சுய திருப்தி...(spring summer fall winter & spring) சுயம் அழித்தல்... அல்லது சுயம் மீட்டல்....என்று ஆன்மீக துவாரம் அதே அளவில் நீண்டு கொண்டு போவதை பேரன்பின் மௌனத்தோடு உணர்ந்திருக்கிறேன். "கிம் கி டுக்"கின் சினிமா எல்லாருக்கும் நெருக்கமான வாழ்வின் ஜன்னலை திறந்தே வைத்திருக்கிறது. அதன் வழியே ஒரு பெரும் வாழ்வின் திரை பதட்டத்தோடே விலகுகிறது.
தன்னை திறந்து திறந்து திறந்து கொண்டே சென்ற கலைஞன் சட்டென கண் மூடிக் கொண்டதை திரை தாண்டியும் வருத்தத்தோடு உணர்கிறேன். இசைக்க தெரியாத போது சத்தமிட்டு அழுது விட தோன்றும் சில நொடி பிதற்றல்களை "கிம் கி டுக்" என்ற மகா கலைஞனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மனிதன் தான் சாவான். கலைஞன் இல்லை.
கவிஜி
Kim Ki Duk க்கிட்ட வியந்த விஷயங்கள்.
Cinema is Visual Medium னு ஆழமா நம்புன ஒரு ஆள். பார்க்குற ஒவ்வொரு காட்சியும், கவிதையும், ஓவியமுமா இருந்துச்சு.
Sounding.
ஒரு படத்துல Sounding எப்படி Use பண்ணப்பட்டுருக்கு என்பதை பொருத்து தான், அவர் எப்பேர்ப்பட்ட Director னு நிர்ணயிப்பாங்கனு சொல்வாங்க.
Kim Ki Duk அதுல கில்லாடி.
வன்முறை, காமம், குரோதம்னு எல்லாத்தையும் படம்பிடிச்சிட்டு, அதோட உச்சபட்சத்தை Sounding ல சொல்லி இருப்பாரு.
சொல்லப்போன உட்சபட்ச எல்லா Emotions அயும், அவரு Sounding ல படம் பிடிச்சார்னு தான் சொல்லணும்.
அடுத்து Writing.
அவரோட எழுத்துக்கள் யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும், உணர்ச்சிகளோட உச்சமாகவும், இயல்பாகவும் இருக்கும்.
நிச்சயம் நம்ம நினைச்சுக் கூட பார்க்காத Emotions அ எழுத்துக்கள்ல கொண்டு வந்துருப்பாரு.
வாழ்க்கையைப் பற்றிய புரிதல்.
காலநிலைகள் தொடர்ந்து மாறிக்கிட்டே இருந்தாலும், அது இயல்பாகவே நடக்கக்கூடிய, மாற்ற முடியாத இயற்கைக்கொத்த விஷயங்கள் தான்னு சொல்லி இருப்பாரு. (Spring, Summer, Fall, Winter and Spring).
நடைமுறைல இருக்குற எல்லா மனுஷங்களோட Rules அ Use பண்ணி, அதை Fail பண்ணி, Break பண்ணி, கற்பனைக்கெட்டாத மாய தோற்றங்களையும், உலகத்தையும் உருவாக்கி இருப்பாரு.
பலதரப்பட்ட, பல்வேறு உணர்ச்சிகளுடைய மனுஷங்களால நிறைஞ்சது தான் உலகம். அப்படிப்பட்ட உலகம், அவங்களாலயே அழிஞ்சு, புது உலகம் உருவானாலும், அதே வகைப்பட்ட வெவ்வேறு உணர்ச்சிகளுடைய மனுஷன் தான் உருவாகுவான் என்பதைக் காட்சிப்படுத்தி இருப்பாரு.
ஒரு தாய் மக்கள் நாம் என்பதை அவருக்கே உரிய Style ல வண்முறையோடயும், காமத்தோடயும், அழகியலோடயும் காட்சிப்படுத்தி இருப்பாரு.
இது எல்லாத்தையும் தாண்டி, வாழ்க்கை ஒரு மலையைப் போன்றது. Ups and Downs இருந்துகிட்டே தான் இருக்கும். அது தான், Life அ Balance ஆ வைக்கும்னு நம்புற ஒரு ஆள்.
Arirang (2011).
இது Kim Ki Duk உடைய Self Documentary. படத்தளத்துல (Dreams) ஏற்பட்ட விபத்துக் காரணமா 2008 - 2011 ல எதுவுமே செய்யாம வெறும் குடி, வாழ்க்கைனு ஓட்டிக்கிட்டு இருந்த Kim Ki Duk தன்னைத் தானே, Interview பண்ணி, Roast பண்ணி, மீளுருவாக்கம் பண்ணின Video.
என்னால படம் எடுக்க முடியாது. ஆனா, படம் இயக்கியே தீருவேன்னு தன்னை தானே Shoot பண்ண Video.
Filmmaking அ Passion ஆ வச்சுருக்குற அனைவரும் பார்க்க வேண்டிய Documentary.

2000-ம் ஆண்டு கிம் இயக்கிய த இஸ்லே படம் 2001-ம் ஆண்டு டோரென்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது, கிம் படங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. 2017-ம் ஆண்டு கிம் மீது அவருடைய படத்தில் நடித்த நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அது மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லட்வியாவுக்குச் சென்றார். அங்கே சென்ற அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 
அதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Kim Ki-duk (Korean: 김기덕 [kimɡidʌk]; 20 December 1960 – 11 December 2020) was a South Korean film director, noted for his idiosyncratic art-house cinematic works. His films have received many distinctions in the festival circuit, rendering him one of the most important contemporary Asian film directors. His major festival awards include the Golden Lion at 69th Venice International Film Festival for Pietà, a Silver Lion for Best Director at 61st Venice International Film Festival for 3-Iron, a Silver bear for Best Director at 54th Berlin International Film Festival for Samaritan Girl, and the Un Certain Regard prize at 2011 Cannes Film Festival for Arirang. 

His most widely known feature is Spring, Summer, Fall, Winter... and Spring (2003), included in film critic Roger Ebert's Great Movies. Two of his films served as official submissions for the Academy Award for Best International Feature Film as South Korean entries. He gave scripts to several of his former assistant directors including Juhn Jai-hong (Beautiful and Poongsan) and Jang Hoon.

Kim was known as the bad boy of Asian art-house cinema and made his name with a series of visually stunning but extremely violent films, including The Isle (2000) and Bad Guy (2001). The Isle, which features gruesome scenes involving fish-hooks, was sanctioned by authorities in Britain for animal cruelty.  


Kim Ki-Duk Dies Of Covid-19: South Korean Director Won Prizes At Venice, Cannes, Berlin Was 59