Search This Blog

Showing posts with label Tamil Kavithaikal. Show all posts
Showing posts with label Tamil Kavithaikal. Show all posts

Sunday, January 5, 2020

மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகள் 11 புத்தகங்கள்

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு:மார்ச் 151968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், தமிழின் மிக முக்கிய கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.




“மனுஷ்யபுத்திரன் கவிதைகள் இயல்பாக அமைவதற்குக் காரணம் அவரது உரையாடல் தன்மைதான் என்று எனக்குப் படுகிறது. அந்த முன்னிலை அவருக்கு தன்னைத் தொகுத்துக் கொள்ளவும் தெளிவாக அடுக்கி முன்வைக்கவும் உதவும் மையமாக உள்ளது. அவர் கவிதைகளின் தனித்தன்மையும் சிறப்பும் இதுவாகும்.”


 ஜெயமோகன்
அளித்தலும் ஏற்றலும்
.......
'இந்த நேரத்தில் உங்களுக்கு
ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்' என்றான் தயங்கித் தயங்கி
நான் இருமலைக் கட்டுப்படுத்திக்கொண்டு

மெல்ல எழுந்து உட்கார்ந்தேன்

அவனது கண்கள் அன்பினால்

தளும்பிக்கொண்டிருந்தன.

இனம் புரியாத குற்ற உணர்வினால்

தவித்துக்கொண்டிருந்தான்



எனக்கு மிகப்பெரிய உதவிகள்

தேவையாக இருந்தன

எனக்கு எதுவுமே

தேவையில்லாமலும் இருந்தன

அவனோ மிக எளிய மனிதன்

அவனுக்கே உதவிகள் தேவைப்படலாம்

ஆனால் அவன் பிடிவாதமாக கேட்டுக்கொண்டே இருந்தான்
" சொல்லுங்கள் உங்களுக்கு ஏதாவது செய்ய
என்னை அனுமதியுங்கள்" என்றான்

மறுக்க விரும்பினேன்
ஏதோ ஒன்றை செய்வதைக் காட்டிலும்
உடனிருப்பதற்கு சிறந்த வழிகள் இருக்கின்றன
என்பதைச் சொல்ல விரும்பினேன்
என் மறுப்பின் வழியே
அவனது இயலாமை எதையும் காயப்படுத்திவிடலாகாது என அஞ்சினேன்
நான் அந்தியின் மஞ்சள் ஒளியையையே
மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்

நீண்ட யோசனைக்குப் பிறகு
இந்த உலகிலேயே மிகச்சிறிய ஒன்றை
அவனிடம் கேட்டேன்
அது எனக்கு தேவையாக இருந்த ஒன்றுகூட அல்ல
ஆனால் அது அவனை நம்பவைக்க போதுமானதாக இருந்தது
அது ஒரு பறவையிடம்
ஒரு சிறிய இலையைக் கொண்டுவரும்படி
கேட்பதுபோன்றது

அவன் என்னைப் பார்த்துக்கொண்டதற்கான
நிம்மதியை அடைந்தான்
எப்போது வேண்டுமானாலும்
எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்றான்
பரவசத்துடன்

அளித்தலுக்கும்
ஏற்றலுக்கும் நடுவே
நடுங்குகின்றன
அன்பின் ஆயிரம் சுடர்கள்

காலை 6.05
5.1.2020
மனுஷ்ய புத்திரன்
நம் காலத்தைப் பிளந்து அதனுடைய குருதியைப் பருகத்தந்து கொண்டேயிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

நம்முடைய இந்தக் காலம் சாதாரணமானதல்ல. மிகக் கொடூரமானது. வலி நிரம்பியது. தந்திரங்களாலும் கீழ்மைகளாலும் உருக்குலைக்கப்பட்டது. கண்ணியமற்றது. பொய்மைகளில் திளைத்தது. இப்படியே இந்தக் காலத்தைச் சிதைத்து வைத்திருக்கின்றன நம்மைச்சுற்றியும் நம்முள் ஊடுருவியுமுள்ள ஒவ்வொரு தரப்பும். ஆனாலும் இதை ஒப்புக்கொள்ள மறுத்து மினுக்கம் காட்டுவதற்கே அவை தொடர்ந்தும் முயற்கின்றன. இதற்காகவே நீதி பற்றிய போதனைகளிலும் நியாயங்களைப் பற்றிய கற்பிதங்களிலும் தொடர்ந்தும் இவை ஈடுபடுகின்றன.

இந்தக் காலத்தின் மேன்மையான தருணங்கள் என்பது கணப்பொழுது மின்னலைப்போன்றவை. அல்லது வானவில்லைப்போல சில மணித்துளிகளோடு கரைந்து போகின்றவையாகி விட்டன. இது அறிவின் யுகம், நீதியின் காலம், உரிமைகள் பகிரப்படும் உலகம் என்றெல்லாம் நம்ப வைக்கப்படுகிறோம். ஆனால், இவற்றுக்கு நேர் கீழாகவே நடைமுறைகள் உள்ளன. இதைப் புரிந்து கொண்டாலும் எளிதில் இவற்றை நம்மால் முறியடித்து விட முடிவதில்லை. ஆனாலும் எதிர்ப்புக்குரல்கள் அங்கங்கே எழுந்து கொண்டேயிருக்கின்றன. இது ஒன்றே நமக்கான ஆறுதலும் திருப்தியும்.

எனினும் இதையும் கடந்து அதிகாரத்தின் குரூரம் மிக நுண்ணிய முறையில் பிரயோகிக்கப்படுகிறது. அந்தளவுக்கு நமது சூழலிலுள்ள இன்னொரு தரப்பின் அறிவு அதிகாரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாம் நம்பிக் கொண்டிருக்கும் அறமும் பண்பாடும் சட்டங்களும் ஆட்சியும் மரபும் சமூகமும் எப்படிச் செயற்படுகின்றன? என்ற எண்ணற்ற புதிர் மூட்டங்களில் இதையெல்லாம் ஒரு கலைமனம் எப்படி அணுகுகிறது? இதில் ஒரு கவிமனதின் கொந்தளிப்பு எப்படியானது? என்பதை மிகச் சிறப்பாகக் காட்டுகின்றன மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். அவரளவுக்கு நம் காலத்தைக் கவிதைகளில் திறந்து காட்டியவர் வேறு யாருமில்லை. இந்தப் பத்தாண்டுகளில் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றும் இதற்கு நல்ல சாட்சி.

தத்தளிப்பாக, எதிர்ப்புக்குரலாக, காலச்சாட்சியமாக, விமர்சனமாக, வரலாற்றுப் பதிவாக எனப் பல நிலைகளில் இந்தக் கவிதைகளைத் தந்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன். ஆனால் எந்தக் கவிதையிலும் இயலாமையின் நிழலை அவர் படியவிட்டதில்லை. கழிவிரக்கத்தின் சாயல் தென்பட்டதில்லை. இது அவருடைய இயக்கத்தின் இயல்பென்றே தோன்றுகிறது. அந்த வகையில் மனுஷ்ய புத்திரன் இந்தக் காலமுகத்தையுடையராகி இருக்கிறார்.

இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சிறிய நிகழ்வும் கூட மனுஷ்ய புத்திரனைத் தீண்டுகின்றன. அதை அவர் உணரும் விதம் மிக ஆச்சரியமூட்டுவது. இதனால்தான் அவரால் எதையும் கவிதையாக எழுதி விட முடிகிறது. இந்தக் காலத்தில் நிகழ்த்தப்படும் அபத்த நாடகங்கள் தருகின்ற அதிர்ச்சியை விடப் பயங்கரமானது அவற்றின் திரைகளை விலக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைச் செயல். இவ்வளவு அநீதிகளின் மத்தியில், இவ்வளவு அபாயங்களின் நடுவில்தான் நாம் உள்ளோம் என்ற உண்மையை உணர்த்துவதன் மூலம் இந்த அதிர்ச்சியை உருவாக்குகிறார் மனுஷ்ய புத்தரன். உறைந்து போயிருக்கும் நம் அசண்டையீனத்தின் மீதும் இயலாமை உருவாக்கியிருக்கும் மௌனத்தின் மீதும் இந்த அதிர்ச்சி சலனங்களை உருவாக்க முனைகிறது. தினமும் பொதுவெளியில் சக மனிதர்களுக்காகவும் பாதுகாப்பானதொரு எதிர்காலத்துக்காகவும் எழுத்தாளனாகத் தொடுக்கின்ற அறத்துக்கான வழக்குகளாக இந்தக் கவிதைகளைக் கொள்ள முடியும்.

சமானியர்கள் தொடக்கம் சமூகத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் மனுஷ்ய புத்திரன் ஊட்டுகின்ற ஒளி பெரியது. விழிப்புணர்ச்சியும் அகத்தூண்டலும் மிக வலியன. குறிப்பாகப் பெண்களின் பிரச்சினைகளை உணர்ந்து பேசிக் கௌரப்படுத்தியவை மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். நகரத்துக்கு வரும் பெண்கள் சிறுநீர் கழிப்பதற்கான இடங்களில் அவஸ்தைப்படுவதிலிருந்து... நம் சமூகச் சூழலில் பெண்கள் படுகின்ற சிரமங்கள், அசௌகரியங்கள், சங்கடங்கள், அவர்களின் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள், கொடுமைகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் நுணுக்கமான முறையில் கவிதைகளில் அவதானிப்புச் செய்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.
அவர்களுடைய ஒவ்வொரு உத்தரிப்புகளையும் மன அவசங்களையும் பற்றிச் சிந்தித்திருக்கிறார். அந்தளவுக்கு பெண்களை, அவர்களின் வாழ்நிலையைப்பற்றி விதவிதமாக பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கிறார். இந்த வகையில் நவீன தமிழ்க்கவிஞரில் முக்கியமானவராகவும் உள்ளார் மனுஷ்ய புத்திரன். .

இவ்வாறு 1000 கவிதைகளோடு 11 புத்தகங்கள் வருவதென்பது பெரிய விசயமே. வாழ்த்துகள். 
Karunakaran Sivarasa






எனக்கு நானே அளித்துகொண்ட மலர்
.............................
நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். இன்று ஏனோ மனம் சற்றே உணர்ச்சிவசப்படுகிறது. ஒரு வேளை நான் இல்லாமலேயே கூட இந்தக் கூட்டம் நடந்திருக்கலாம். வாழ்வின் பெரும் கருணை இன்னும் எங்கோ மிஞ்சியிருக்கிறது. வாழ்வதற்காக எப்போதும் போராடி வந்திருப்பவர்கள் களத்தைவிட்டு அவ்வளவு எளிதில் அகன்றுவிடமாட்டார்கள். எந்த சரிவிலும் பற்றிக்கொள்ள ஒரு பிடி மண் கிடைக்கும்.

இந்த நாட்களில் எவ்வளவு அன்பு கிடைத்ததோ அதை சற்றே சமன் செய்ய வெறுப்பும் வன்மங்களும் கிடைத்தன. அந்த வெறுப்பிற்குப் பின்னே எந்த இலக்கிய சமூக மதிப்பீடுகளும் இல்லை. பொறாமையிலிருந்தும் ஆற்றாமையிலிருந்தும் பெருகும் கசப்பு அது. நான் செய்யும் வேலைகளும், எனக்குக் கிடைத்த சிறிய அடையாளங்களும் என்னை நானே அழித்துக்கொண்டு எனக்கென்று எந்த தனிப்பட்ட வாழ்க்கையும் இல்லாமல் உருவாக்கிகொண்டவை..



கடந்த ஓராண்டில் 1150 கவிதைகளை 1700 பக்கங்களில் எழுதிய பிறகும் இதோ இன்று அதிகாலைநான்கு மணியிலிருந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். இந்தப் பைத்திய நிலைக்காக கொடுத்தவிலைகள் கொஞ்சமல்ல. சொந்த வாழ்க்கையிலும் சமூக இலக்கிய வாழ்க்கையிலும் எவ்வளவு அவமானங்கள், இழப்புகள். ஆனால் நான் சாகும்வரை இதைத்தான் செய்வேன். இன்னும் கொஞ்சம் இதற்காக் என்னை எரித்துக்கொள்வேன். ஒவ்வொரு கவிதையையும் யாரோ ஒரு வாசகனோ வாசகியோ ’இது என் இதயத்தின் ரகசியம்’ என கண்ணீர் மல்க சொல்லும்போது நான் செய்யும் வேலைக்கான அர்த்தம் கிடைக்கிறது.

பொதுவாக என் புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. அன்றைக்கு என ஏதாவது ஒரு துயரம் என்னைத் துரத்தும். மனம் வாடிப்போவேன். ஆனால் இன்று நான் பிடிவாதமாக உற்சாகமாக் இருக்க விரும்புகிறேன். நான் ஒரு பெரிய வேலை செய்தேன் என்ற நிறைவின் நிமித்தமாக. எனக்கு நானே ஒரு சிறிய மலரை அளித்துக்கொள்கிறேன்.
என்மீது யாருகேனும் ஏதேனும் வருத்தங்கள் இருக்கலாம். சொற்களின் பைத்திய நிலையில் வாழ்பவன் என்பதால் மன்னிக்கலாம்தானே . எழுதுகிறவனுக்கு கிடைப்பது ஒன்றுமில்லை. இந்தப் பெருந்தனிமை உணர்ச்சியைத் தவிர
என் நேசத்திற்குரியவர்கள் இந்த நாளில் என்னோடு இருப்பது நான் இன்னும் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை எனக்குத் தருகிறது

மனுஷ்ய புத்திரன்
5.1.2020

Thursday, August 15, 2019

வேசங்கள் தரித்தலின்றி சாத்தியமற்றது வாழ்வு



வேசங்கள் தரித்தபடிதான்
நமக்கு வாய்க்கப்பட்ட இவ்வாழ்வினை
நகர்த்தித் தொலைய வேண்டியிருக்கிறது
அன்றி நிர்ப்பந்தத்திற்குள்ளாகிறோம்
நம்மை கடந்து செல்பவர்களை
அல்லது நாம் கடந்து செல்பவர்களை
நிறைய சமாளிக்க வேண்டி நேரிடுகிறது
சில சமயம் மழுப்பவும் தோணூகிறது
அவர்கள் என்ன நினைத்து விடுவார்களென்றே
பாதி வாழ்க்கை ஐயத்துடனும்
மீதி வாழ்க்கை பதட்டத்துடனும் கழிகிறது
மிக நெருக்கடியான தருணங்களில்
தப்பித்துச் செல்வதற்காக
கள்ளச் சாட்டுகளை முன் வைக்கிறோம்
இரத்த உறவுகளுடன் அடிக்கடி ஊடாடும்
தேவைகள் இருப்பதனால்
புதிது புதிதாக முகங்களை
மாற்றி மாற்றி அணிந்து கொள்கிறோம்
சில தருணங்களில்
அவர்களை வசப்படுத்தவென
நேசம் மீந்த வார்த்தைகளை கையாள்கிறோம்
மெருகூட்டிப் பேசுகிறோம்
இயன்றளவு செதுக்கிச் செப்பனிட்டாலும்
கைசேதப்பட்டு நிற்கையில்
காலை வாரிவிட நினைத்தலினிடை
வாழ்தலில் அறமென்பது சாத்தியமற்றதாகிறது
எதிரும் புதிருமான இவ்வாழ்வினை
வேசங்கள் தரிக்காமல் வேறெப்படி
கொண்டு செல்ல முடியுமென கருதுகிறீர்கள்
0
ஜமீல்

இது முதன் முறையல்ல



அவர்கள் ஏலவே திட்டமிட்டபடி
தனித்தனியாகப் பிரிந்தும்
கூட்டம் கூட்டமாகவும்
பலமற்ற விலங்குகளை பிடித்துண்ணும்
கழுதைப் புலிகள் போன்று
எங்கள் பூர்வீக நிலங்களுக்குள்
இருளின் புதரி்ல் பதுங்கியபடி ஊடுருவினர்
முதலில் எங்களது வணக்கஸ்தலங்களை
அடித்து நொறுக்கினர்
புனித நூல்கள் மீதும்
தொழுகை விரி்ப்புகள் மீதும்
காலைக் கிளப்பி மூத்திரம் அடித்தனர்
பின்னர் குடியிருப்புகளுக்குள்ளும்
கடைத் தொகுதிகளுக்குள்ளும்
பரவசத்துடன் நுழைந்தனர்
அங்கு அவர்கள் என்ன அளிச்சாட்டியம்
புரிந்திரிப்பார்களென்று
விபரிக்கத் தேவையில்லையென கருதுகிறேன்
அதற்கான அவகாசமும் என்னிடமில்லை
இவ்வாறு அவர்கள் அத்து மீறி வருவது
இது முதன் முறையல்ல
இதற்கு முன்னரும்
நிறையத் தடவைகள் வந்திருக்கின்றனர்
அவர்கள் வழமைபோல்
எங்களை நெருங்கும்போது
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது
ஊரடங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தன
துப்பாக்கிகளை வெளியே நீட்டியபடி
கவச வாகனங்கள் அணியணாயாய் நின்றன
எல்லாவற்றையும் கடந்து
சிப்பாய்களின் தோழ்களில் அமர்ந்தபடி
மிக இலகுவாக தங்களது தாகத்தை
தீர்த்துச் சென்றனர்
அவர்கள் திரும்பிச் செல்லும்போது
அவர்களது கரங்களில்
எங்களது ரத்தம் படிந்திருந்தது
மாறாக அவர்களிடத்தில்
மனசாட்சி இருந்திருக்கவில்லை
நேயம் இருந்திக்கவில்லை
எங்களது வாழ்வை தீக்கிரையாக்கிச் செல்லும்
ஒவ்வொரு தடவையும்
நாங்கள் நிராயுதபாணிகளாகவே நின்றிருந்தோம்
தவிரவும் அன்பை மட்டுமே போதிக்கும்
புத்தனின் சீடர்களுக்கெதிராக
வேறு என்ன செய்யலாமென கருதுகிறீர்கள்
0
ஜமீல்

Monday, August 5, 2019

அந்தரங்கத்தின் முகம்

Karunakaran Sivarasa

அந்தரங்கத்தின் முகத்தை இன்று,
இப்பொழுது,
இதோ இந்தக் கணத்தில் காண்கிறேன்
தலையைச் சற்றுக் குனிந்து
புருவத்தை உயர்த்திப் பார்க்கிறது நம்மை
நமுட்டுச் சிரிப்போடு
அந்தப் பார்வையும் அந்தச் சிரிப்பும்
என்னைத் திறக்கிறது பலவாக
என்னை ஊடுருவுகிறது ஆழத்தில்

இதுவரை எடுத்த எல்லா எக்ஸ்ரேக்களையும் விட
எல்லா ஸ்கான்களையும் விட
இந்த அந்தரங்கத்தின் ஊடுருவல் வலியது...

அந்தரங்கம் மெல்ல உடைக்கிறது ஒவ்வொன்றையும்.
அப்போது நாறி மணப்பதென்ன?
மின்னலாகப் பளிச்சிடுவதென்ன?
ஜில்லெனக் குளிர்வதென்ன?
நெருப்பாகச் சுடுவதென்ன?

எல்லாமே நானே சேகரித்ததா?
அவளுடைய நினைவுகளும் சிரிப்பும்
அந்தக் குதூகலங்களும்...
அந்த இரண்டு பேரையும் கொன்று புதைத்ததும்
முதிராப் பெண்ணைக் கையளைந்த போது
அவள் கண்ணீர்த்துளிகளைக் கண்டு அதிர்ந்ததும்
ஏடன் தோட்டத்தில் யாருமறியாது
பழம் பறித்துப் புசித்ததும்
.........
ஓ...
புலன்களை அடைக்க முற்படுகிறேன்
ஏதோ வாடை தலைக்குள் ஏறுகிறது
கண்களைக் கூசச் செய்யும்
அந்தரங்க ஒளியின் முன்னே நிலையிழக்கிறேன்.

Thursday, August 1, 2019

.தற்கொலை செய்து கொண்ட காஃபிடே உரிமையாளர் சித்தார்தா குறித்து மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை

படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா.இரவி.

ஒரு பிரபலமான உணவகத்தை
உருவாக்கிய மனிதன்
தண்டனைக்கைதியாக
மரணமடைந்த நாளில்
பல்லாயிரக்கணக்கானோர்
அந்த உணவகங்களின் தோசைகளை
ருசித்து உண்டுகொண்டிருந்தார்கள்

ஒரு பிரலமான காஃபி ஷாப்பை
உருவாக்கிய மனிதன்
காரை ஒரு பாலத்தின்மேல் நிறுத்திவிட்டு
ஆற்றில் தலைக்குப்புற பாய்ந்த நாளில்
பல்லாயிரக்கணக்கானோர்
அந்த காஃபி ஷாப்களின்
தம் காதலருடனோ நண்பருடனோ
கிசுசுத்த குரலில்
அந்தரங்கமாக உரையாடிக்கொண்டிருந்தார்கள்

ஒரு பிரபலமான பியரை
உருவாக்கிய மனிதன்
நாட்டை விட்டு தலைமறைவாக ஓடிக்கொண்டிருந்தபோது
பல்லாயிரக்கணக்கானோர்
அந்த பியரை நுரைபொங்கத் திறந்து
கிறங்கும் கண்களுடன் அருந்திக்கொண்டிருந்தார்கள்

யாரோ ஒரு பிரபல துணிக்கடை முதலாளின் சொத்துகள்
ஜப்தி செய்யப்படும்போது
பல்லாயிரக்கணக்கானோர்
ஆனந்தமாக அங்கே பண்டிகைக்கு துணிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள்

யாரோ ஒரு வைரவியபாரி
திவாலானதற்கான மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும்போது
அவன் விற்ற வைரங்கள்
பல்லாயிரக்கணக்கானோர்
முக்கில் ஒளிமங்காமல் மின்னிக்கொண்டிருக்கின்றன

யாரோ ஒரு நடிகை
மனம் கசந்து நாற்பது தூக்க மாத்திரைகளை
விழுங்கிக்கொண்டிருந்த அந்தியில்
பல்லாயிரக்கணக்கானோர்
திரையில் அவள் ஆடை சற்றே விலகுவதற்காக
பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர்

எவ்வளவு நிம்மதியானது
ஒரு தோசை சாப்பிடுபவனாக மட்டும் இருப்பது
ஒரு காஃபி அருந்துபவளாக மட்டும் இருப்பது
ஒரு பியர் குடிப்பவனாக மட்டும் இருப்பது
ஒரு வைர மூக்குத்தி அணிபவளாக மட்டும் இருப்பது
ஒரு சட்டை வாங்குபவனாக மட்டும் இருப்பது
திரையங்கில் வெறும் பார்வையளார்களாக மட்டும் இருப்பது

சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கியவர்கள்
அழியும்போது
சாம்ராஜ்ஜியங்கள் அழிவதில்லை
அப்போது அது உருவாக்கியவர்களிடமிருந்து
ஒரு தனித்த உயிரியாக பிரிகிறது
தன்னை உருவாக்கியவர்களை
அது தாட்சண்யமற்று கைவிடுகிறது

நீங்கள் மலையடிவாரங்களில்
உங்கள் ஆடுகளை மேய்க்கும்போது
நிம்மதியாக சற்றே கண்ணயர்கிறீர்கள்

மலைகளை
சுமந்து நடப்பவர்களை
மலைகள் மெல்ல
பூமிக்குள் அழுத்துகின்றன

அருமை... ஹைக்கூ...

R Ravi Ravi

Thursday, January 3, 2019

கதிமாறி ஆடும் ஊசலோ காலம்


காத்திருந்தபோது
காலி அறையில் மாட்டியிருந்த
பழைய
கடிகாரத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்..

சாவி கொடுக்க மறந்தது போல
நேரம் நகரவேயில்லை

சந்தித்தபோது
நிமிர்ந்து பார்க்கவும்
தோன்றவில்லை
பரவசத்தில்
படபடக்கும் மனத்தை
நிதானம்
நிதானமென
சமாதானப்படுத்துகிறது
மணிக்கட்டு
நாடித் துடிப்பு
நினைவிற்கும்
மறதிக்கும் நடுவே
கதிமாறி
ஆடும் ஊசலோ
காலம்

 Sakthi Jothi

Tuesday, October 9, 2018

விசம்...........


அலங்கரிக்கப்பட்ட
கழிவுகளை
கவர்ந்திழுக்க்கிறது
கண்கள்.

தேவையானவை
தேவையற்றுப்போக
தேவையற்றவை
தேவையாகிப்போனது
எனக்கு.
என்
உயிரணுக்கள்
ஒவ்வொன்றுக்குள்ளும்
ஒளித்து வைக்கப்படுகிறது
விசம் .
காலை
அருந்தும்
தேநீருடன்
ஆரம்பிக்கிறது
என்
அழிவு.
நஞ்சுகளை
தின்று தின்றே
நகர்கின்றன
என்
நாட்கள்
விசத்தையும்
கொடுத்து
விசம் முறிக்க
மருந்தையும்
கொடுத்து
என்னிடம்
வெற்றிகொள்கிறது
வியாபாரம்.
என்
கடைசி
மூச்சைக்கூட
முதலாளிகள்தானே
முடிவு செய்கின்றனர்
பஞ்ச
பூதங்களையும்
பாழாக்கிவிட்டு
நஞ்சை
வேளாண்மை
செய்கிறது
விஞ்ஞானம்.
இயற்கையின்
கதவுகளை
மூடிவிட்டு
இரசாயனங்களுக்குள்
இழுக்கப்படுகிறேன்
நான்.
முப்பாட்டன்
காலத்து
முறைகளையெல்லாம்
மூட்டிகட்டிவிட்டு
கண்ட கண்ட
கன்றாவிகளுக்குள்
கரைந்துவிடுகின்றேன்
நாளும்.
எழுபது
வயதில்
வரவேண்டியவை
எல்லாம்
ஏழு வயதிலேயே
வர
நாற்பது
வயதுக்குள்ளாகவே
நரகத்துள்
விழுகிறேன்.
வீதிக்கொரு
வைத்தியசாலை
வீட்டுக்கொரு
மருந்தகம்....
அனுபவிக்கப்போகிறது
அடுத்த
தலைமுறை.
ஆரோக்கியவான்களை
இனி
அகராதியில்
மட்டுமே
பார்க்கலாம்.....
Sivaratnam Navatharan

Monday, October 8, 2018

கவிதையியல் அல்லது அழகியல் செயல்பாடு

ஒரு மொழிதலில் இருக்கும் ஆறு அம்சங்களில் மேலாதிக்கம் செலுத்தும் ஒன்று வேறுபட்ட மொழியியல் செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக யாக்கப்சனின் மொழியியல் தகவல்தொடர்பு மாதிரியில் விளக்கப்படுகிறது. மொழிதல்களில் கவிதையியல் செயல்பாடு மேலாதிக்கம் செலுத்தினால்(உதாரணமாக இலக்கியப் பிரதிகள்), மொழி அதிகம் ‘இருண்மை’ மிக்கதாகவும் குறிப்பான் மற்றும் ஊடகத்தை(மற்றும் அதன் பொருளாம்சாம் உட்பட) அல்லது வடிவம், பாணி அல்லது சங்கேதம் போன்றவற்றில் குறைந்தபட்சம் குறிப்பீடு, உள்ளடக்கம், ‘தகவல்’ அல்லது குறிப்பால் உணர்த்தும் பொருள் போன்றவற்றை வலியறுத்துவதாகவும் மரபுரீதியான உரையாக இல்லாமலும் இருக்கும்.
அது போன்ற பிரதிகள் வெளிப்பாட்டின் வடிவம் மற்றும் வினையை முன்வைப்பதாகவும் ‘இயற்கையான’ அல்லது ‘ஊடுருவத்தக்க’ உறவாக குறிப்பான் மற்றும் அதன் குறிப்புப் பொருளைக் குறைத்துக் காட்டுவதாகவும் இருக்கும். இந்தப் பொருளில், கவிதையியல் செயல்பாடு மேலாதிக்கம் செலுத்தும் பிரதி சுய-குறிப்புப் பொருளாக உள்ளது: வடிவமே உள்ளடக்கம் மற்றும் ‘ஊடகமே(அல்லது மொழியே) அதன் தகவல்’.
யாக்கப்சனின் மாதிரியை முன் வைத்து பின்னர் வளர்க்கப்பட்ட மாதிரிகளில் கவிதையியல் செயல்பாடு முறையான செயல்பாடாகக் கொள்ளப்பட்டது. கவிதையியல் செயல்பாடு ஆகுபெயராக அல்லாமல் அதிமான உருவகமாகவும் புறப்பொருளைச் சுட்டாமல் அதிகமான அகப்பொருளைக் கொண்டும் இருக்கும்.
பல்பொருள்:பிரதியியல் நியமனவாதத்தை(உதாரணமாக பின்அமைப்பியல்வாதிகள்) மறுப்பவர்கள், பிரதிகளின் ‘பல்பொருள்’ இயல்பை வலியுறுத்துகிறார்கள்-பன்மை பொருள்களைக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.
பல்குரல்கள்:ஒற்றைக் குரலுக்கு மாற்றாக ஒரு பிரதியின் கதையாடலில் இருக்கும் பல்குரல்கள் ஒரு விருப்பப்பட்ட வாசிப்பு அல்லாமல் பல்வேறு வகைப்பட்ட வாசிப்புகளை ஊக்குவிக்கின்றன.
பின்நவீனத்துவம்:இந்த வழுக்கும் சொல், நவீன காலத்திற்குப் பிந்தையதாகவும் பின்அமைப்பியலுடன் இயைந்து வந்த தத்துவமாகவும், கட்டுடைப்பு, முற்போக்கு ஐயமுறு வாதம், உறவுவாதம் போன்றவற்றுடன் முரண் அடிப்படை நிலைப்பாட்டைப் பகிர்வதுமான ஒன்றாகவே கொள்ளப்படுகிறது. விளக்கத்தை எதிர்க்கும் விளக்கமாகவே பின்நவீனத்துவம் இருப்பது அவலம்.
ஓர் ஒற்றை ‘கோட்பாட்டை’க் கொண்டதாக பின்நவீனத்துவத்தைக் கூறமுடியாது(குறித்தலுக்கு வெளியே எந்த ஓர் உண்மையும் இருப்பதாக எந்த ஒரு பின்நவீனத்துவக் கோட்பாட்டாளரும் கூறவில்லை). ‘பின்நவீனத்துவ’ அழகியல் ‘இயக்கம்’ எதுவும் இல்லை. பின்நவீனத்துவம் அதிகமான முறிவுகளைக் கொண்டதாகவும் பன்முகம் கொண்டதாகவும் உள்ளதாகும். இருந்தாலும், பின்நவீனத்துவ பிரதிகள் மற்றும் நடைமுறைகளின் பண்பில் உள்ள அம்சங்கள் அவலம் மற்றும் அதிகப்படியான உட்பிரதியியலைப் பிரதிபலிப்பவையாக இருப்பதாகும்-பிரதிகளுக்கு, வகைமைகளுக்கு, ஊடகங்களுக்கு இடையே உள்ள எல்லைகள் மங்கி பிரதியின் கட்டமைப்பு மற்றும் கட்டமைக்கப்பட்டச் செயல்பாடு மீது மட்டும் கவனத்தைக் குவிப்பவையாக உள்ளன.
வெகுஜன கலாச்சாரத்தையும் ‘தீய ரசனையை’ உள்ளிழுப்பதாகவும் இருப்பதால் நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவம் வேறுபடுகிறது. லியோடார்ட் 1979ல் எழுதிய ‘பின்நவீனத்துவ நிலை’ என்ற நூலிலிருந்து அதன் காலம் கணக்கிடப்படுவதாகவும் சில சமயங்களில் தோன்றுகிறது. அதிலிருந்து ‘மீமெய் கதையாடல்களின் மீதான அவநம்பிக்கையை’க் காட்டுவதாக பின்நவீனத்துவ கோட்பாடு கொள்ளப்படுகிறது.

Mubeen Sadhika

Monday, September 17, 2018

முதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டகவிதை

முதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, காதலின் முழுமையும் வசீகரமும் நிறைந்த கவிதை

Sappho seemingly penned these lines to a female lover in the seventh century BC, becoming one of the first notable lesbian poets in the process. In fact, the word "lesbian" derives from the name of her home: the island of Lesbos. Since Sappho's time, many famous lesbian poets have followed in her spiritual footsteps.



அவன் ஒரு கதாநாயகனை விட மேலானவன்
என்னுடைய கண்களில் அவன் ஒரு கடவுள்
உன்னருகில் உட்கார அனுமதிக்கப்படும் அந்த ஆள்
தூண்டும் உன்னுடைய குரலின்
இனிமையான முணுமுணுப்புகளை நெருக்கமாக
கேட்டுக்கொண்டிருக்கிறானே
சிரிப்பு என்னுடைய இதயத்துடிப்பையே
வேகமாக்குகிறது
உன்னைத் திடீரென்று சந்தித்தால்
என்னால் பேச முடியாது
என்னுடைய நாக்கு உடைந்திருக்கிறது
மெல்லிய தீக்கொழுந்து என்னுடைய
சருமத்தின் அடியில் பாய்கிறது
எதையுமே என்னால் பார்க்கமுடியவில்லை
என்னுடைய செவிப்பறைகள் தாளமிடுவதையே
கேட்கிறேன்
நான் வியர்வை வடிய நிற்கிறேன்
நடுக்கம் என்னுடைய உடலை அசைக்கிறது
உலர்ந்த புல்லை வெளுப்பாக மாற்றுகிறது
அது மாதிரியான நேரங்களில்
மரணம் என்னிலிருந்து தூரத்தில் இல்லை.
Kutti Revathi

கவிதைகளை எழுதுவது கவிதையாகாது

ஒரு நாட்டுப்பாடல்
~ ஜிபிக்னியூ ஹெர்பெர்ட்
மொழியாக்கம்: வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
உழவனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
விதைத்து அறுப்பது
என்றான் உழவன்.
தையல்காரனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கிழியாத, வெதுவெதுப்பான ஆடைகளைத் தயாரிப்பது
என்றான் தையல்காரன்
தளபதியின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கொரில்லாவுக்கு எதிராக பூர்ஷ்வா வர்க்கத்தின்
இராணுவத்தை
வழிநடத்திச் செல்வது என்றான் தளபதி
கவிஞனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
எனக்குத் தெரியாது என்றான் கவிஞன் -
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதையாகாது மகனே!
Kutti Revathi

Sunday, November 19, 2017

ஜமீலின் நதியில் ஒரு மீன் குஞ்சாக நீந்திப் பாரத்தல்


வடிந்து கொண்டிருக்கும் பெருமழையைப் பையிலிட்டு அடைத்தபின் அதற்கான பலவர்ணங்களைத் தீட்டி மகிழ்கிறான் ஒருவன். அவன் அணிவித்த நிறங்களத்தனையும் ஒவ்வொரு சாயலாக இடம்பெயர்ந்து செல்கின்றன.
முதலில் ஒரு குழந்தையின் மனதாக...
அதன்பின்னர் முதிர்ந்த காலத்தைக் கூறும் பாத்திரமாக அடுத்து கனவுகளுக்குள் வாழும் உணர்வாக,
இப்படியாக மாறும் உணர்வுகளை மழையின் நிறங்களாகக் காட்டியிருக்கிறார் கவிஞர் ஜமீல்.
ஈழத்தின் கவிதைப்பரப்பில் பின்நவீனச் சாயலானது இவரது படைப்புக்கள்.
ஒரு குழந்தையின் மனமாகவே இவர் பேசுகிறார்.குழத்தையின் உள்மனதிலிருந்து பட்டாம்பூச்சியாகிப்பறக்கும் அவர்களது கனவுகள் வரைக்கும் இவரது தொகுதியில் சிறகடித்துப்பறக்கின்றன.
குழந்தை மனதிற்கு அப்பாலும் இவரது கவிதை வெளி பரத்திருக்கின்றது. அது காதலாகவோ நிலையில்லா அரசியலாகவோ சமூகத்தின் உடைந்த குரல்களாகவோ அது இருக்கின்றது.
பின்நவீனத்தின் ஒப்புவித்தல்களை எளிய வடிவில் இலாவகமாக ரசணைக்குறிப்புகளோடு விளங்கிக் கொள்ள முடிவது இவரது எழுத்துக்களின் வெற்றியே.
'அவன் பையில் ஒழுகும் நதி' பல இன்சுவைகளோடும் குழத்தைகளின் நிறக்கனவுகளோடும் மகிழ்விக்கின்றன.
இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள பல கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் நிலையினை எம்முள் கொணர்ந்து விடுகின்றன.
அட்டைப்படத்தின் நிறங்களோடு மகிழ்விக்கும் இந்நிலை கடைசிப்பக்கம் வரை நீண்டு கொண்டே செல்கின்றதெனலாம்.
இடைவிடாது சிறகடித்துக்கொண்டிருக்கும் கடலின் உட்புறத்தை இவர் அறிகிறார். இக்கடலை பறக்கச் செய்தல் எவ்வாறு என தனது எழுத்துக்களில் வர்ணிக்கிறார்.
மீண்டும் 'பனியில் உறையும் ஒளி'யில் அவதியுறும் நிலவொளிக்கு ஆடைபோர்த்தித் தவழ விடுவது கூடுதல் அழகு சேர்க்கிறது.
கனவுகளால் பாரிக்கும் சிறுவனின் புத்தகப்பை அவனது கனவுகளுக்கே ஆபத்தாகி விடுவதை கவிஞர் சமூகத்திற்கே ஓர் அறிவுரையாகச் சொல்கிறார்.
இரவு விடிவதற்குள் உடைமாற்றித்தயாராகும் குழந்தையின் உள்ளத்தில் விடியலென்றாலே சிறைக்கூண்டு தானே என்ற எண்ணங்களை உருவாக்கும் இச்சமூகம் பொல்லாத பாவியெனச் சொல்லத்தோன்றுகின்றது.
பட்டாப்பூச்சியை இரசிக்கும் மனங்களை அதன் மெலிந்த சிறகாகவே நினைத்து விடுகின்றனர். அது காற்றில் தூக்கி வீசப்பட்டு அங்குமிங்கும் அலைந்தலைந்து கடைசியில் மண்ணாகவே உக்கிவிடுகிறது.
இதிலிருந்து விடுவிக்கப்படுதல் தான் சுதந்திரம். இக்கவிதைகள் பலவற்றின் கருத்துக்கள் இவ்வாறே காணப்படுகின்றன.
அலைதலுக்காகவே வாழ்தல் என்பது போலாகிவிட்ட நம் வாழ்க்கை இரசிப்பதற்காக உருவாக்கப்படவேண்டும்.
அவை எமக்காகப் பங்கிடப்படவேண்டுமெனச் சொல்லும் சில கவிதைகளை இங்கு காணலாம்.
தனிமையில் பெருகும் எண்ணவோட்டங்கள் பெரும் சொற்குவியல்களாகி நீத்திக்கொண்டிருக்கின்றன. அவைகள் நாம் உறங்கும் அறையெங்கும் முத்தங்களைப் பொழித்து ஒரு துணையாக இருந்துவிடுகின்றது.
பின்பொரு நாளில் எம்மைப் பிரமிக்கவும் வைக்கிறது.
இது தான் கவிஞர் ஜமீலின் இத்தொகுப்பு.
மனங்களையும் மனது செல்லும் இடங்களையும் அவர் நன்கறிகிறார்.
நடுநிசி வீதியும் அங்கு உலாவுகின்ற முலையூட்டிகளும் அவர் எழுத்துக்களுக்கு நண்பர்களாகி விடுகின்றன. அவர்வாழும் நெய்தல்,மருதம் அவருக்குள் எண்ணங்களை உசுப்பிவிட்டு தானும் எழுந்து கொள்கின்றன.
வாழ்வியலையும் குழந்தைமனதையும்
சமூகத்தின் இரசணைகளோடு ஒப்புவிக்கும் இத்தொகுப்பு அவரது ஏனைய தொகுப்புக்களைப் போன்று சிறப்பாகவே இருக்கிறது.
*****
றஹ்மதுல்லாஹ்.

இருளின் வெளிச்சம்


வெளிச்சத்தைவிட
இருளே
எனக்கு விருப்பம்.

விதை வளர்கிறது
மண்ணறை இருட்டில்.
குழந்தை வளர்கிறது
கருவறை இருட்டில்.

ஆக்கங்கள் யாவும்
அழகான இருளில்தான்.

வெளிச்ச முத்தத்திலோ
விளம்பர முத்தத்திலோ உண்டா
இருட்டு முத்தத்தின் இன்பம்?

மோதல் தளர்வதும்
காதல் வளர்வதும்
இருட்டில்தான்.

கருவறையிலும்
கல்லறையிலும்
கூடவே இருப்பது
இருட்டுதான்.

வெளிச்சங்கள் யாவும்
வந்து போகலாம்
இருட்டின் நட்பு
நிரந்தரமானது.

வெளிச்ச வண்ணங்கள்
பூசிக்கொள்ளாத
இருட்டை நம்பலாம்
எந்த நாளும்.’

Nagore Rumi

Sunday, November 12, 2017

நிராகரித்தலென்பது


இரக்கமற்ற ஓர் சொல்லின்
விதையிலிருந்து அரும்புகிறது ...
நமது நிராகரிப்புகளின் பச்சை

ஒரு குழந்தை
தாயின் முத்தத்தை மறுப்பதிலிருந்து
துவங்குகிறது அதன் முதல் வலி

அதனை ஏற்பதென்பது
அத்துனை சுலபமான விடயமல்ல
தவிரவும் யாரும் விரும்பி ஏற்பதுமில்லை

ஒருத்தர் மீதான நம்பிக்கையும்
அதீதமான பிரியமும் உடைகிற போது
நிராகரிப்புகளும் உடன் நிகழ்ந்து விடுகிறது
அது தவிர்க்க முடியாதுமாகும்

நிராகரிக்கப் படாமல்
இங்கு யார்தான் ஜீவிக்கிறார்கள்
அதிலிருந்து யாருமே தப்ப மடியாது

ஆயினும் இன் நிராகரிப்புகள்
எதுவுமே நிரந்தரமானதல்ல

காலம் நம்மை
எப்போது நிராகரிக்குமென்று
யாராலூம் கணித்து சொல்ல முடியாது

அத்துயர்மிகு கணம் வரை
வாழ்ந்து தொலைய வேண்டியதுதான்

0
ஜமீல்

Wednesday, November 8, 2017

நீலக் குறிஞ்சி



மலையெல்லாம் நீலக்குறிஞ்சிகள்
பூத்த வருடம் நான் பிறந்ததாக
பாட்டி சொன்னாள்
...
இளமை தளிர் கொண்ட காலத்தில்
மலைவெளியில் அப்பூக்கள்
மீண்டும் பூத்தபோது மழையின் நிறம் நீலம்
எனக் கண்டுணர்ந்தேன்
குறிச்சிப் பூக்களின் நீலவெளிச்சம்
தொடுவானில் பிரதிபலிப்பதை தரிசிக்கையில்
காத்திருப்பின் கனியும் அந்நிறத்தில்
தான் இருந்தது
கித்தார் மரத்துப் பூக்களின் வாசனை
கண்டடையாத காதலனின் உருவத்தை
ஆழ் மனதில் வரையத் துவங்கியது
வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்
நீர்க் கடம்ப மரத்தின் தாகத்தை
சிற்றோடைகள் அறியும் சமயம்
வேர்கள் சர்ப்பநடனமிடும்
காட்டுவாசியின் இசை
வெறுமையின் துல்லிய உண்டியலில்
சேர்க்கப்படுவதை அறிவேன்
பூம்பாறைப் பூக்களின் ஆகிருதியை
தாங்கயியலாது மனம்
பனிப் பாறைகளில் சறுக்கும்
காத்திருப்பு தனிமையில் இடறுவது
பள்ளத்தாக்கிலிருந்து குறிஞ்சிப் பூஞ்சருகுகள் வீழ்வது
நீலத்தின் நிவறுதல் நிலைமொழியாய்
வானத்திற்கு ஏகியதும் இங்ஙனமே
காட்டில்தான் நீலக்குறிஞ்சி பூக்கும்
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும்
நாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்
Composed By - Thenmozhi Das

Saturday, October 28, 2017

ஜாதிக்காய் பிஞ்செனக் காமம்



மயிலின் முன்கழுத்தென நீலமேறி
வளைந்து ஓடும் ஓடையென வெட்கம்
முத்தம் விலக்க மறுகுகிறது
நீரின் நிழல் அருந்தும்
தவளைக்குஞ்சின்
வயிற்றில் கண்ணாடி வளையல்
சுழல்வதென உடலுக்குள் ஆசை
சூல் கொள்கிறது
காட்டுப்புறாவின் மேனியில்
விளையும்
கந்தகப் பொன்பச்சை நிறத்தை
உருகுமென் கண்கள் அணிகின்றன
காலின் பெருவிரல்
அருகில் இருக்கும் சிறுவிரலை
உரசிக் கொளுத்தும் தீ
மூளையில் மேகமென விரைகிறது
நீ அருகில் வருகையில்
காந்த மலையின்
சுனையின் சுற்றுச் சூழலில்
காற்றின் கலவரம்
என்னைத் தொலைக்கிறது
ஜாதிக்காய் பிஞ்சென காமம் காய்க்கையில்
நாற்பது விரல்களில்
நாயனச் சூத்திரமும்
காந்தள் இதழ் சுவைக்க
கசியும் நன்னீர் ஊற்றும் நம்மை
கற்பகக் காடாய்ப் படைக்கிறது
உனது
கற்கடகக் கைகளில்
வெளிமானெனத் துள்ளும்
உடலுக்குள் உருகும் மனதில்
முத்த நரம்புகள் பூக்கத் துவங்குவதை ரசிக்கிறாய்
ஊறும் உன் அணுக்கள்
நெத்திலிகளாய் நீச்சலடிப்பதையும்
உனது உதடுகள் பறக்கும் அணிலென
எனது ஸ்தனங்களில் இடறத் துடிப்பதையும்
பொன்துகள்களாய் செவிப்பறையில் பூசுகிறாய்
புருவ மத்தியில் இழந்த
புத்தியின் கொடியில்
பூனைக்காலிப் பூக்கள்
பூத்துக் கறுக்கத் துவங்கிவிட்டன
கால்கள் சர்ப்பங்களாகையில்
காமம் களவென விளைந்த கனவுகளை வெல்கின்றன
வெள்ளி நிலவின் உட்கருவில்
பனி ஊறுகையில்
தாகத்தின் நிறம் வெள்ளை எனவும்
தாமரையில் சுடரும் ஒளி
உயிரின் தண்டில் ஊடுருவுவதையும்
உன்னிடம் எப்படிச் சொல்வேன்
Composed by - Thenmozhi Das
10.5.2016
Thanks to - Mega Aruna Chalam

Tuesday, September 19, 2017

என் நடுங்கங்களில் நீ...

Iyyappa Madhavan
பனிக்கால அந்தியில் விழித்த கதவினுள் வந்தாய்
தேகத்தினுள் நிசப்தமாய் விரவினாய்
என் நடுக்கங்களில் நீ உறைந்தவேளை ...
நிர்வாண நினைவில் ஏங்கி எரிந்தேன்
அதீத சீதளத்தில் உன் வேட்கையில் புதைய
மாய பிம்பமாய்ப் புலுனுற்றேன்
என் பசலை நிலை கண்டு
பரிதிகளாய் வந்திருந்து மோதிய வேளை
பெரும்காடெனப் பற்றிக்கொண்டேன்

நீயோ பனிச்சாம்பலிலிருந்து உயிர்ப்பித்தாய்
புனைந்த அழகில் கிறங்கிக் கிடந்தவனை
உன் வாஞ்சையாக மாற்றிக்கொண்டாய்
கை வளையல்களும் காற்கொலுசும் மீட்டியபோது
இசையாய்க் கரைந்துபோனேன்
உன் பித்தில் நீயாகவே இருந்தேன்

மந்த மாருதம் காதல் மென்னுணர்வுகள் இசைத்தன
உன் தோளில் நான் சாய்ந்தேன்
என் தோளில் நீ சாய்ந்தாய்
மலர்களாயின தூறிய சாரல்கள்
நறுமணம் தோய்ந்து உருகிக் மறைந்தோம்

அந்தி முடிய இருளின் வருகையில்
விண்மீன்களாய் ஒளிர்ந்தது நாணம்
நிலவொளியில் அந்தகாரம் தேய்ந்து சுருங்க
சயனத்திலிருப்பது போல் விழித்திருந்தோம்

இமைகள் மூடாதிருந்தது நீண்ட கனவு.

Saturday, September 16, 2017

அன்னா அக்மதோவா கவிதைகள்

மொழியாக்கம்: வ.கீதா, எஸ்.வி. ராஜதுரை
ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்....
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று.
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரை விட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும் கடவுளர் மனிதரைக்
கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள்
இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ.

நான் உன்னைப் பார்க்கவில்லையெனில்

மொழியாக்கம்: தி.இரா.மீனா

நான் உன்னைப் பார்க்கவில்லையெனில் –...
நிமிடங்களை நூற்றாண்டுகளாக முடிவற்றவைகளாக உணர்வேன்
ஒரு முறை உன்னைப் பார்த்திருந்தால் —
மீண்டும் இரக்கமற்ற வகையில் நெஞ்சுக் காயத்தோடு.
நான் உன்னைப் பார்க்கவில்லையெனில் -
இருட்டிலும் உறைபனியிலும் காற்றாய்க் கிடப்பேன்
ஒரு முறை உன்னைப் பார்த்து விட்டால் —
ஏதோ ஒன்றால் கருக்கப்பட்டு சுருங்குவேன்

நான் உன்னைப் பார்க்க விரும்பினால் —
தேவதைகளின் கரங்கள் சொர்க்கத்திற்கு என்னை அனுப்பும்
நான் ஒருமுறை உன்னை பார்த்திருந்தால் -
நரகத்தின் கொடுமைகள் தரப்பட்டிருக்கும்
என் அமைதிக்குத்தான் இழப்பு
உன்னுடனோ அல்லது நீயில்லாமலோ —அது சிதைவுதான்
எனக்கு பூமி கிடைக்கவில்லை

நான் சொர்க்கத்திலிருந்து விலக்கப்பட்டவள்.

வெள்ளை இரவு

மொழியாக்கம்: தி.இரா.மீனா
நான் கதவைப் பூட்டவில்லை
...
மெழுவர்த்திகளையும் ஏற்றவில்லை,
நீ அறியவும் மாட்டாய், கவலையுமில்லை
தூங்கப் போகுமளவுக்கு
எனக்கு பலமில்லை
வயல்வெளிகள் நிறமிழந்தன
சூரியாஸ்தமனம் பைன்மரங்களை இருளாக்கியது
எல்லாம் இழந்த நிலைதான்
இந்த வாழ்க்கை சாபமான நரகம்தான்
கதவருகில் உன்குரல் கேட்டு போதையாகிறேன்.
நீ வருவாயென நிச்சயம் தெரியும்

அந்த எதிரொலி

மொழியாக்கம்: தி.இரா.மீனா

கடந்த காலத்திற்கான பாதைகள் என்றோ மூடப்பட்டுவிட்டன...
நான் இறந்த காலத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்யமுடியும்?
அதில் என்ன இருக்கிறது?இரத்தத்தால் உரசப்பட்ட கற்கள்
அல்லது சுவறான கதவுச்சிறை
அல்லது எதிரொலி, அதுதான் என்னை எப்போதும் வருத்துகிறது
அமைதி, உறுதி என்று நான் பிரார்த்தனை செய்தபோதும்
எதிரொலி ஒரு பழங்கதையாகவே இருக்கிறது.

அதையும் என்நெஞ்சில் மட்டுமே சுமக்கிறேன்.

இதுவரை பாடப்பட்டப் பாடல்களிலேயே இனிதானது"

மொழியாக்கம்: ஆழி செந்தில்நாதன்
ஆழமாய்ப் படிந்த பனியின் ...
கடினமான மேற்பரப்பினூடே,
உன் ரகசியமான வெள்ளை இல்லம் நோக்கி,
அமைதியாய், நாசூக்காய்
நாம் இருவரும் நடைபயில்கிறோம்,
பாதி இழந்த நிசப்தத்தில்.
இதுவரை பாடப்பட்ட எல்லாப் பாடல்களினும்
இனியதாக இருக்கிறது
இந்தக் கனவு நனவாகும் நிகழ்வு,
ஆம் என்று சொல்லி அசைகின்றன
பின்னிய கிளைகள்.

  1. Thanks Kutti Revathi


Tuesday, July 18, 2017

குவைத் பெண் கவிஞர் ஸுஆத் ஸுபாஹ் கவிதைகள்!


~~~~~~~~~~~~~~~~~~~~~~
"நான் குவைத்தின் மகள்...
மணலுக்கு மேல் தூங்கும்
இந்தக் கரையின் மகள்
அழகிய மான் போல...
என் கண்களில்
இரவின் நட்சத்திரங்கள் வெளியாகி
சந்திக்கின்றன

பேரீச்ச மரங்களும்..
இங்கிருந்து தான்...

என் பாட்டன்மார்கள் அனைவரும்
கடலுக்குப் போனார்கள்...
அசாத்தியமானவற்றைச் சுமந்து
திரும்பி வந்தார்கள்

நான் குவைத்தின் மகள்...
என் உள்ளம் காய்ந்ததாயிருப்பது
சாத்தியமானது தானா..

மரத்தினாலான குதிரை போல?...
உணர்ச்சியற்று...
மரத்தினாலான குதிரை போல?

என் வளர்ச்சியை அழித்து விடுவது
அரபியருக்கு சாத்தியமானதா?

அரபிக்கடலிலிருந்து குடித்த
பேரீச்சமரம் என் உடல்...
என் சுயத்தின் பக்கத்தின் மீது
வடிவம் கொண்டது

எல்லாத் தவறுகளும்
கவலைகளும்
அரபியரின் நம்பிக்கைகளும்"
(...)

"என் நண்பனாகி விடு...
என் நண்பனாகி விடு...
அமைதியின் துறைமுகத்திடம்
தேவையானவள் நான்

காதல் கதைகளாலும்
வேதனைச் செய்திகளாலும்
சோர்வடைந்தவள் நான்...

பெண்ணை கொலுமண்டபத்தின்
சிலையெனக் கருதும் இந்தக் காலத்தினால்
சோர்வடைந்தவள் நான்...

எனவே என்னைச் சந்திக்கும் போது நீ பேசு...
என்னைச் சந்திக்கும் போது நீ பேசு...

கீழைத்தேய ஆண்
ஒரு பெண்ணைச் சந்திக்கும் போது
ஏன் பாதிப் பேச்சை மறந்து விடுகிறான்?

அல்வாத் துண்டையோ புறாக்குஞ்சுகளையோ தவிர
அவளிடம் வேறெதையும்
ஏன் பார்க்க மறுக்கிறான்?

அவளின் மரங்களில்
ஆப்பிளைப் பறித்து விட்டு
ஏன் தூங்கிப் போகிறான்?"
(...)
"என் கவிதையால்
கண்ணியத்தின் சுவற்றை
உடைத்து விட்டேன் என்று கூறுகிறார்கள்...
ஆண்கள் தான் கவிஞர்கள்

இந்தக் கூட்டத்தில் இனி எப்படி
கவிதாயினி தோன்றுவாள்?!...
சிரிக்கவும் செய்கிறேன்...
சிரிக்கவும் செய்கிறேன்

அர்த்தமற்ற இந்த அனைத்தையும்...
நட்சத்திரங்களின் போர்க்காலத்தில்
பெண்களை உயிரோடு புதைக்க
விரும்பிக் கொண்டிருப்போரை
கேலி செய்கிறேன்

என் சுயத்தைக் கேட்கிறேன்...
ஆண்களின் பாடல் ஹலால்
ஆவது எதற்காக

பெண்களின் குரல்
கீழ்த்தரமானதாகி விட்டதா?

ஆச்சரியமான இந்தச் சுவர்களை
ஏன் நிறுத்தி வைக்கிறார்கள்...
வயல்களுக்கும் மரத்திற்குமிடையில்...
மேகங்களுக்கும் மழைக்குமிடையில்

பெண்மானுக்கும் ஆணுக்குமிடையில்
இருப்பது தான் என்ன?"

மொழியாக்கம்: Musthafa Qasimil
"إنني بنت الكويت ... بنت هذا الشاطئ النائم فوق الرمل
كالظبي الجميل ... في عيوني تتلاقى أنجم الليل
وأشجار النخيل .. من هنا...
أبحر أجدادي جميعاً ... ثم عادوا يحملون المستحيل
إنني بنت الكويت ... هل من الممكن أن يصبح قلبي يابساً ..
مثل حصان من خشب ؟ ... بارداً... مثل حصان من خشب ؟
هل من الممكن إلغاء انتمائي للعرب ؟
إن جسمي نخلة تشرب من بحر العرب ... و على صفحة نفسي ارتسمت
كل أخطاء ، و أحزان ، و آمـال العرب."
(...)
"كن صديقي... كن صديقي ... فأنا محتاجةٌ جداً لميناء سلام
وأنا متعبةٌ... من قصص العشق وأخبار الغرام
وأنا متعبةٌ... من ذلك العصر الذي يعتبر المرأة تمثال رخام
فتكلم حين تلقاني... تكلم حين تلقاني...
لماذا الرجل الشرقي ينسى حين يلقى امرأة نصف الكلام؟
ولماذا لا يرى فيها سوى قطعة حلوى وزغاليل حمام؟
ولماذا يقطف التفاح من أشجارها ثم ينام؟"
(...)
"يقولون أني كسرت بشعري جدار الفضيلة ... وأن الرجال هم الشعراء
فكيف ستولد شاعرة في القبيلة؟! ... وأضحك... وأضحك
من كل هذا الهراء ... وأسخر ممن يريدون في عصر حرب الكواكب، وأد النساء!
وأسأل نفسي... لماذا يكون غناء الذكور حلالاً
ويصبح صوت النساء رذيلة؟
لماذا يقيمون هذا الجدار الخرافي ... بين الحقول وبين الشجر ... وبين الغيوم وبين المطر
وما بين أنثى الغزال وبين الذكر؟"

Thanks 
Kutti Revathi

Saturday, July 1, 2017

வண்ணத்துப் பூச்சியும் கடலும் ~ பிரமிள்


சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.