Search This Blog

Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Wednesday, February 12, 2020

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எதற்காக ஏன் உருவாக்கபட்டது?


இரு தசாப்த காலமாக கூட்டமைப்பு சரியாக செயல்பட்டதா? ஒற்றுமை என்ற வார்த்தைக்கு மதிப்பளித்து இவர்களுடன் இனைந்த சக கட்சி தலைமைகளின் ஆதங்கங்கள் வேண்டுதல்கள் கோரிக்கைகள் எப்போதாவது உள்வாங்கப்பட்டதா?
பெயரில் மட்டுமே கூட்டமைப்பு முடிவுகள் அனைத்தும் தமிழரசுக் கட்சியின் பின்கதவால் நுழைந்த ஐ தே க ஏஜேன்டால் தான் எடுக்கப்பட்டன. கிஞ்சித்தும் சக கட்சி தலைமைகளின் ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளவில்லை. அனைத்தும் ஏதோச்சதிகாரமாக புறக்கணிக்கபட்டன.
கட்சிகளை புறம்தள்ளியதை விட்டு விடுவோம். மக்களின் மன ஆதங்கத்துக்கு மதிக்களிக்ப்பட்டதா? கிடையவே கிடையாது. சகலதும் அறளை பேர்ந்த முதியவருடன் இனைந்து தனி ஒருவரால் எடுக்கபட்டது.
இவற்றை ஒற்றுமைக்கு ஊறு விழைவிக்க கூடதேன எண்ணிய சுரேஷ் தலைமையிலான அணியினர் உள்ளிருந்தவாறே நீண்ட காலமாகவே கூட்டமைப்பை நிறுவனபடுத்தி கல்விமான்களையும் புலம் பெயர் சமூகத்தையும் இனைத்து பயணிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.
ஏற்றுக் கொள்ளப்பட்டதா?
செவிடன் காதில் ஊதிய சங்காவே போனது.
கடந்த நாலரைவருட கால நல்லாட்சியில் அரசில் அங்கம் வகித்து இவர்கள் பெற்றுத்தந்த நன்மைகளை பட்டியல் இட்டால் வெறும் வார்த்தை ஜாலங்களையே இவர்கள் பெற்று தந்தனர் ?
நாம் இவர்களை உரிமைசார்ந்த பிரச்சனையை பேசவே பாராளுமன்றம் அனுப்பினோம்.
இவர்கள் அதை செவ்வன செய்தனரா? அரசில் அங்கம் வகித்த சமயத்தில் அரசாங்க வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்தனரா?

பெரும்பாண்மை சகோதரர்கள் வடக்கில் இன்று மின்சார சபையிலும் வைத்தியசாலையிலும் பிற துறைகளில் வேலைவாய்பை பெற்றுள்ளனர் அதை தடுக்கமுடிந்ததா? அந்த வேலைவாய்ப்பை ஊரில் உங்களுக்கு குப்பை கொட்டியவர்களுக்கு பெற்றுக் கொடுதீர்களா?
இல்லவே இல்லை. உங்கள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வாயை மூட அவர்களின் பிள்ளைகளுக்கு மங்கள சமரவீரவுடன் பேசி வேலைவாய்பை பெற்றுக் கொடுத்தீர்கள்.
இவர்கள் ஒற்றுமையை குலைக்காதீர்கள் என கூக்குரல் இடுவது தமது பிளைப்புக்கு பங்கம் என கருதியே. மக்கள் நலன் கருதியல்ல. கடந்த காலங்களில் பெரும்பாண்மை மக்கள் கோவித்து கொள்வார்கள் எனக் கூறி தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவியதை மக்கள் அறிவர்.
பல அபிவிருத்தி திட்டங்கள் வெறும் வாய் வார்த்தைகளுடன் நின்றுவிட்டன.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முற்றாக இதிலிருந்து மாறுபட்டது.
மக்களின் உரிமை சார்ந்த விடயம் மட்டுமே பிரதான செயல்பாடாக அமையும் குறிப்பாக கூட்டணிக்குள் உட்கட்சி ஜனநாயகம் பேணப்படும். கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும்.

குறிப்பாக கூட்டமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்த்தோமோ அதை விட சிறப்பாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயல்படும்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.

Monday, February 3, 2020

கோணங்கி தமிழ் எழுத்தாளர்.

கோணங்கி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் இளங்கோ.
1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர்.
1980-களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர். கவிஞர் பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழில் புதிதாக எழுதத் தொடங்கியவர். புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், ந. முத்துச்சாமி, கி. ராஜநாராயணன், எஸ். சம்பத், ஜி. நாகராஜன் போன்ற தமிழ் எழுத்தாளர்களை வாசிப்பவர். தமக்கென்று தனித்த நடையை உருவாக்கியிருப்பவர். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர் இவர். தமிழ் எழுத்தாளர் நகுலன், ருஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்து ஸ்பானிஷ் மொழியில் எழுதும் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோருக்கு கல்குதிரை சிறப்பிதழ் கொணர்ந்தவர். பெரும்பத்திரிகைகள் மற்றும், வணிக இதழ்களில் இவர் எழுதுவதில்லை. ஓரிடத்தில் நில்லாது நிலையற்ற நிலையில் வாழ்பவர்; இலக்கியவாதிகளின் நண்பர். பாழிபிதிரா, என்ற இவருடைய மூன்று நாவல்களும் புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு கவனம் பெற்றவை. இவரைப் பற்றி விமர்சகர்கள் நாகார்ஜுனன், எஸ். சண்முகம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இவருடைய முதல் ஐந்து சிறுகதை நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டுள்ளன.
நிறைய அலையும் மனப்பாங்கு கொண்டவர். தமிழின் நவீன ஃபாஹியான். ஓரிடத்தில் நில்லாது நிலையற்ற நிலையில் வாழ்பவர். இலக்கியவாதிகளின் நண்பர். இவருடைய மூத்த சகோதரர், சிறுகதை ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வன். இளைய சகோதரர், நாடக ஆசிரியர், ச. முருகபூபதி.

 பாழி, பிதிரா என்ற இவருடைய இரண்டு நாவல்களும் தமிழ்-நாவலுக்கென்ற மரபான தளங்களைத் தவிர்த்து, புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு மிகுந்த கவனம் பெற்றவை. இவர் பற்றி விமர்சகர்கள் நாகார்ஜுனன், எஸ். சண்முகம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.  இவருடைய முதல் ஐந்து சிறுகதை நூல்கள் யாவும் தொகுக்கப்பெற்று ஒன்றாக வெளியாகியுள்ளன.

நூல்கள்

  • மதினிமார்கள் கதை (சிறுகதைத்தொகுப்பு, 1986)
  • கொல்லனின் ஆறு பெண் மக்கள் (சிறுகதைத்தொகுப்பு, 1989)
  • பொம்மைகள் உடைபடும் நகரம் (சிறுகதைத்தொகுப்பு, 1992)
  • பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் (சிறுகதைத்தொகுப்பு, 1994)
  • உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை (சிறுகதைத்தொகுப்பு, 1997)
  • பாழி (நாவல், 2000)
  • பிதிரா (நாவல், 2004)
  • இருள்வ மௌத்திகம் (கதைத்தொகுப்பு, 2007)
  • சலூன் நாற்காலியின் சுழன்றபடி (சிறுகதைத் தொகுப்பு, 2008) - மேற்கண்ட முதல் ஐந்து நூல்களில் உள்ள சிறுகதைகள் யாவும் அடங்கியது.
  •  (நாவல், 2014)

Thursday, January 30, 2020

''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்'' பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.

*''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும் ''எனும் தலைப்பில் ''சைவ சித்தாந்தம் '' இணையபக்கத்தில் அன்பர் பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய கட்டுரையினை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.*
''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்''
பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.
நாற்பத்து இரண்டே ஆண்டுகள் வாழ்ந்தாலும் தமிழுக்கும், தமிழ் நாடகவியலுக்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அளித்த கொடை அளப்பரியது. அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியரல்லர். தத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மலையாள மண்ணின் மைந்தனாகப் பிறந்திருந்தாலும், அவரின் தமிழ்ப் பற்றுக்கு நிகர் அவரே.
மனோன்மணியம் நூலுக்கு அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கியவர்கள், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் இரண்டாம் பத்தியின் அனைத்து வரிகளையும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு கடைசி வரியை மட்டும் வெட்டியெடுத்து, முதல் பத்தியோடு ஒட்ட வைத்துப் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கினர். இப்போது அந்த இரு பத்திகளையும் காண்போம்:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்ட அவ்வரிகள் சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழுணர்வையும், மெய்யுணர்வையும் பறைசாற்றுபவை.
“பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்”

என்ற இரண்டு வரிகள் தரும் பொருள்: அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவைகளைத் தன்னுள் ஒடுக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல, என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளைமையோடு நிலைத்திருப்பாள் என்பதாகும்.
இந்த இரண்டு வரிகள் சொல்லும் செய்திகள் மிகமுக்கியமானவைகள்; ஒன்று, சுந்தரம்பிள்ளையவர்கள் இறைக்கொள்கை உடையவர் என்பது; இரண்டு, தமிழ்மொழியும் இறைவனைப் போல் என்றும் மாறாத இளமையுடன் இருக்கின்றது என்பது.
தமிழன்னையின் பெருமை சாற்றும் இந்த இரண்டு வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
இந்த வரிகளில் ‘உயர்வு நவிற்சி’யாக தமிழன்னை என்றுமுள்ள பரம்பொருளுக்கு இணையாக உயர்த்திப் புகழப்பட்டாள்; இவை பெருமைக்குரியவை அல்லவா? எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! பின் ஏன் நீக்கினார்கள்?
உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? குழம்பத் தேவையில்லை! நீக்காவிட்டால், கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழக அரசு, பரம்பொருளாம் ‘இறைவனின்’ இருப்பை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ? தமிழக சூழலில் secular என்றால் ‘இறைமறுப்பு’ என்பதாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
கவியுள்ளத்தைப் புறம்தள்ளி வசதிக்காக வரிகளை நீக்கியது அறமற்ற செயல்.
தமிழ்த்தாய் வாழ்த்து நாம் அரசு விழாக்களில் பாடுவோம் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடவில்லை. அவரின் ஒப்பற்ற காவியத்தில் தமிழைப் போற்றித் தொடங்கவே பாடினார். அவரின் பாடலின் கருத்துப் பிடிக்கவில்லையா? விட்டுவிட வேண்டியதுதானே!
அதை விடுத்துக் கவியுள்ளத்துக்குப் புறம்பாக வெட்டி-ஒட்டுவது அறச்செயலுக்கு மாறானது.
அக்காலச் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாறு போன்ற உணர்வுகளை உள்ளடக்கிப் பாடியுள்ள கவிஞரின் கருத்துக்கு மாறாக, போற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பிக் கவிதையைச் சிதைப்பது எவ்விதத்தில் அறமாகும்?
திராவிடக் கொள்கைகளுக்கு வலுவூட்டும் பின்னுள்ள மூன்று வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
திராவிடம் திராவிடம் என்று ஒட்டுமொத்த தமிழர்களுமே திராவிடக் கருத்தியலை தங்கள் பண்பாடு என்று ஏற்கும்படிக்கு மூளைச்சலவை செய்தவர்களுக்கு, “தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்
“கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்”
என்ற வரிகள் தேனினைப் போல அல்லவா இனித்திருக்க வேண்டும்? பின் என் நீக்கினார்கள்?

தமிழின் பெயராலும், அடுக்கு மொழிச் சொற்களாலும் ஆட்சிக்கட்டிலைப் பிடித்தோர்களில் பெரும்பான்மையினர் தமிழரல்லர் என்பதால் அவர்களுக்கு இவ்வரிகளால் தமிழுக்குப் பெருமை சேர்வதை ஏற்றுக் கொள்ள இயலவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து”
தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள்? தமிழரல்லாத அவர்களின் உள்ளீடான ஆரியப்பற்று இவ்வரி சொல்லும் செய்தியின் உண்மையைப் பொறுத்துக் கொள்ள விடவில்லையோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை..

பேசாப் பொருளைப் பேச . . .
முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்ற அணி அமைப்புகள், உட்பொருள்கள், நயங்கள், செம்மைகள் அனைவரையும் வியப்படையச் செய்பவை. இதுவரை முழுவதுமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை உள்வாங்கிச் சுவைக்க வாய்ப்புக் கிட்டாத தமிழன்பர்களுக்காகவும், தமிழ்த்தாய் வாழ்த்தின் ‘கண்’ பற்றியும் ‘காது’ பற்றியும் மட்டும் சிந்தித்துவிட்டு, சுந்தரனார் ‘உணர்த்த விழைந்த’ செய்தியைப் பேசாமல் போவது முழுமையான பார்வையாகாது என்பதாலும், தமிழன்னையை வணங்கி இதுவரை யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிகின்றேன்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், இவ்விரண்டு பத்திகளுக்குப் பின்வருபவை எல்லாம், தமிழ்த்தாயின் பெருமையை, இரண்டு அடிகளில் ஒருபொருள் குறித்து பாடப்பட்ட பன்னிரண்டு பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன.
கடலும் தமிழ்த்தாய்க்கு ஒப்பாகாது--
கடல் குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே!
“முன்னர் ஒரு காலம் பெருங்கடலையே குடித்துத் தன் வயிற்றில் அடக்கிய குறுமுனி அகத்தியர் தமிழ்மொழியின் கரை காண்பதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்பதால், என் தாயே! தமிழே!! தொடுகடலை உவமையாகச் சொல்லுவதுவும் உனக்குப் புகழ் ஆகாது!!!” என்று பாடிப் பரவசமடைகின்றார் கவிஞர். என்னே சுந்தரனாரின் தமிழ்ப் பெருமை! வியந்தல்லாவா போகிறோம் நாம்?

தமிழ் இலக்கணம் எம் இறைவனுக்கே எட்டாதது!--
ஒரு பிழைக்கா அரனார் முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.

பாண்டிய மன்னனின் ஐயத்தைத் தீர்க்குமாறும், வறுமையில் வாடும் தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தருவதற்காகவும் இறையனாரே பாடல் இயற்றிக் கொடுக்க, அப்பாடலில் ஒரு பொருட்பிழை நேர்ந்தது. அப்பிழையை தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவன் நக்கீரன் சுட்டிக்காட்ட இறைவன் பேச்சற்றுத் விழித்தார் (சிலேடையாக-தன் நெற்றிக்கண்ணை விழித்து நின்றதாக) என்று கூறப்படும் புராணக் கதையை உயர்வு நவிற்சிகொண்டு உவமித்து, தமிழின் இலக்கணத்தின் அருமை பெருமையைப் பறைசாற்றுகின்றார் சுந்தரனார்.
தமிழ்மொழி உலகின்மொழி! தோற்ற–நாசம் அற்ற முதுமொழி!!
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

நம் இந்தியத் துணைக் கண்டத்துள் ஆரிய நான்மறை சாற்றும் வடமொழி ஆரியம் நுழைவதற்கு முன்பு வரை தமிழே பேச்சு மொழியாக எங்கும் இருந்தமையால், தொன்மொழியாகிய தமிழைத் ‘தோற்ற-நாசம்’ அற்றது என்று சொல்வது ஒன்றும் வியப்புக்குரியதல்ல என்கின்றார் சுந்தரனார். வடமொழியாம் ஆரியம் இங்கு வந்தேறிய மொழி என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.
காலத்தை வென்றவள் எம்தமிழன்னை!
வைகைநதி வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கடந்த தமிழேடு சொல்லும் செய்தி காலநதியால் தமிழுக்கு ஒரு அழிவும் நேராது என்பதே!!
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.

தமிழ்ஞானசம்பந்தப் பெருமானைப் ‘புனல்வாதம்’ என்னும் போருக்கு அழைத்த ‘வடமொழி விற்பன்னர்’களாம் சமணர்களின் “अश्थि नाश्थि – அஸ்தி நாஸ்தி” என்று எழுதப்பட்ட வடமொழி ஓலைச்சுவடி வைகைநதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது;
அஸ்தி என்றால் உண்டு என்று பொருள். கடவுள் உண்டு என்று சொல்பவர்களை ஆஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது. நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள். கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது.

இந்த அத்தி நாத்தி எழுதிய ஏட்டைத்தான் சமணர்கள் மதுரையில் சம்பந்தருடன் செய்த புனல் வாதத்தில் வைகை ஆற்றில் விட்டார்கள். சமணர்களின் ‘அத்தி நாத்தி’ ஏடு வைகை ஆற்றின் போக்குடன் அடித்துச் செல்லப்பட்டது.
சம்பந்தர் ” வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டார். சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றில் எதிரேறி கரையையும் அடைந்தது. இவ்வாறு ஏடு எதிரேறிக் கரையை அடைந்த தலமே சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் ஆகும்.
சம்பந்தப் பெருமானால் எழுதப்பட்ட இறைவனைப்புகழும் ஏடு – திருஏடு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்திக்கரையேறி அடைந்த அகம் என்ற காரணப்பெயரால் திருவேடகம் எனப்பட்டது. இது மதுரையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த ” வாழ்க அந்தணர்” என்ற திருப்பாசுரத்துக்கு பல தனிச்சிறப்புகள் உள்ளன.
இது ஒன்றே பன்னிரண்டு பாடல்களை உடையது. மற்றைய பதிகங்கள் எல்லாம் பதினொரு பாடல்கள் கொண்டவை.

இந்தப் பாசுரத்தை சம்பந்தர் தன் கையாலேயே எழுதினார். சம்பந்தரின் மற்றைய பாடல்களை ஏட்டில் எழுதி வந்தவர் அவருடைய தாய்மாமன் சம்பந்த சரணாலயர்.
சைவத்தின் கொள்கை விளக்கம் செய்த பாடலும், சைவ சமயத்தை மெய்ச்சமயம் என்று நிறுவிய பதிகமும் இதுவே.
இவ்வொரு பதிகத்துக்கு மட்டுமே சேக்கிழார் 22 பாடல்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
முதல் ஒன்பது பாடல்களின் யாப்பு வேறு; கடைசி மூன்று பாடல்களின் யாப்பு வேறு.

அஸ்தி நாஸ்தி அல்லது அத்தி நாத்தி என்பது சமண மதக்கொள்கை. அருகனை முதல்வனாக ஏற்ற சமணரின் ஆருகத மத மந்திரம் ” அத்தி நாத்தி”. ஒரே முடிவு என்றில்லாது பல முடிவாகக் கூறுதல். உண்டாம்-இல்லையாம், உண்டு-இல்லையாம், உண்டாம்-ஆயின் சொல்ல இயலாதாம், இல்லை-ஆயின் சொல்ல இயலாதாம், உண்டும்-இல்லையுமாம் ஆயின் சொல்ல இயலாதாம் என்பது போன்ற ஏழு பகுதிகள் உள்ளன. அதனால் இதை ஸப்த பங்கி வாதம் என்பர். ஸப்த என்றால் ஏழு. இது சமற்கிருதமொழி அல்ல; அர்த்த மகத மொழி என்னும் வடமொழி. மகதம் என்பது இன்றைய இந்தியாவின் பீகார் மாநிலம். சமணமும் வடமொழியும் இங்கிருந்துதான் வந்தது. பல திராவிடவாதிகள் சமணம் திராவிட மதம் என்றும், திருவள்ளுவர் சமணர் என்றும், சமணம்தான் தமிழை வளர்த்தது என்று எண்ணியும், எழுதியும், பேசியும் வருவது வேறு கதை.
மெய்யுணர்வினும் ஓங்கிநிற்கும் தமிழுணர்வு!
ஆனால், தமிழ்ஞானசம்பந்தப் பெருமானால் தமிழில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி வைகை நதியின் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரை சேர்ந்தது என்பது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில் வரும் தொன்மம். அத் தொன்மத்தையே சான்று காட்டி, காலமாகிய நதியின் ஓட்டம் தமிழுக்கு ஒருக்காலும் ஊறு விளைவிக்க இயலாது என்பதற்கான அறிகுறியே அந்நிகழ்வு என்கின்றார் சுந்தரனார். இதுவல்லவா மனோன்மணியம் சுந்தரனாரின் மெய்யுணர்வினும் ஓங்கி நிற்கும் தமிழுணர்வு! வார்த்தை வணிகர்களுக்குப் புரியாத நுண்நுண்ணுணர்வு!
இறைவனே தன் கைப்படத் தமிழன்னையின் திருவாசகத்தின் படி எடுத்து எழுதிவாங்கிக்கொண்டது இறைவனின் கடையூழிக் காலத் தனிமையைக் கழிப்பதற்கே! எம் மொழிக்கும் கிட்டாத மேன்மை! ஆயின், தமிழன்றோ இறைமொழி?
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே.
‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது தமிழ்ப் பழமொழி. நம்மை யெல்லாம் உருக்கும் திருவாசகம், அன்புருவாம் இறைவனை உருக்காதிருக்குமா? திருவாசகத்தில் உருகிய இறைவன் அவ் வாசகத்தைத் தன் திருக்கரங்களால் படி-எடுக்க விரும்பினான்; ஒரு வயோதிக அடியவரின் உருவில் தோன்றி, மணிவாசகரிடம் திருவாசகத்தை மீண்டும் சொல்லுமாறு வேண்டித் தன் கைப்படவே படியெடுத்துக் கொண்டான் சிற்றம்பலமுடையான்.

‘மாணிக்கவாசகன் சொல்ல, அழகிய சிற்றம்பலம் உடையான் கைப்பட எழுதியது’ என்ற அழகிய சிற்றம்பலம் உடையானின் திருவாசகப் பிரதியைச் சிற்றம்பலப் படியில் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள், மாணிக்கவாசகரிடம் சென்று, திருவாசகத்தின் பொருள் கூறுமாறு விண்ணப்பித்தனர்; ‘திருவாசகத்தின் பொருள் அம்பலக்கூத்தனே’ என்று கூறிவிட்டு, மணிவாசகர் இறைவனுடன் கலந்தார் என்பது தொன்மம்.
இங்கும் மெய்யுணர்வினும் ஓங்கியது தமிழுணர்வல்லவா?
இத்தொன்மத்தின் அடியாகப் பிறந்தது இவ்விரண்டு வாழ்த்து வரிகள்; என்ன அற்புதமான உயர்வு நவிற்சி!
கடையூழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்க, இறைவன் மட்டுமே தனித்திருப்பான்; அவன் மீளவும் இப் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்பு, ஒரு சிறிய இடைவேளை, ‘Small Break” வருமல்லவா? அப்போது, எம் தமிழன்னையின் திருவாசகத்தின் துணைகொண்டே அத் தனிமையை இறைவன் போக்கிக் கொள்வான்; அத்துணை பெருமை கொண்டது எம்தமிழ் என்று இறுமாக்கின்றார் சுந்தரனார்; இவ் வுணர்வெல்லாம் மெய்யுணர்வினும் ஓங்கிய தமிழுணர்வல்லவா?
சங்கப் பலகை – தமிழின் உண்மை வரலாற்றுக்குச் சான்று .
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.

தகுதியுடைய நூலுக்கே மதுரைச் தமிழ்ச்சங்கப் பலகை விரிந்து இடம் கொடுக்கும் என்பது மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம் என்று தமிழ் மொழியின் மெய்ச் சரிதத்தை வியந்து போற்றுகின்றார் கவிஞர். இங்கு “வியஞ்சனம்” என்ற சொல் “குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்” என்ற பொருளாகும்.
வடமொழி உயர்வென்றும் தமிழ் மொழி அன்றென்றும் கூறுவோர் மதியிலாரே.
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

ஆரியமொழியே உயர்வென்ற, மனோன்மணியம் சுந்தரனாரின் காலத்திலிருந்த மக்களின் மனநிலையை மேற்கண்ட பாடல்கள் பதிவிட்டிருக்கின்றது. தமிழ்மொழியின் மேன்மை அறியாதவரே நிறைந்திருந்த காலம் என்பதை உணர்த்தும் பாடல்கள் இவை. சுந்தரம் பிள்ளையவர்களின் பின் கா.சு.பிள்ளை, மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் போன்றோரின் அரும்பணிகளால் தமிழன்னையின் பெருமை மீட்டெடுக்கப் பட்டது எனினும், இன்னும் அச்சப்பாடுகள் முற்றிலும் நீங்கிவிடவில்லை.
பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் – ஒருகுலத்துக்கு ஒரு நீதி : குறள் நீதியும் மநுநீதியும்
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி
அனைத்து உயிர்களும் பிறப்பினால் ஒருவரே!

அவரவர் செய்யும் தொழில் காரணமாகவே சிறப்புகள் வேறு வேராகக் காணப்படுகின்றன என்னும் குறள் கூறும் அறநெறியையும், நீதியையும் உணர்ந்தோர்கள் குலப் பிறப்பின் காரணமாகவே அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்று மனிதகுலத்திற்குள் வேற்றுமை பாராட்டும் மநுநீதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நீதியாம் குறள்நீதியின் மேன்மையையும், வடமொழி நீதிநூலாம் மநுநீதியின் மானுடத்திற்குப் புறம்பான தீமையையும் தமிழர்களுக்கு இனம் காட்டுகின்றார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்.
திருவாசகத்தில் கரைந்தோர்கள் பிறவொன்றையும் கருதார்
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று பழமொழி கண்டவர் தமிழர். மனித மனங்களைக் கரைத்து, மனமாசுகளை நீக்கும் திருவாசகத்தில் கரைந்துபோனவர்கள் வேறு எந்த மந்திர உருவேற்றும் கண்மூடிக் கதறும் வழிபாடுகளை இயற்றமாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றார். திருவாசகத்தில் கரைந்துபோன அனுபவத்தையல்லவோ மேலை ஆரியரும் உணரும் வண்ணம் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உணர்த்துகின்றது. தமிழ்த் திருவாசகம் போலன்றி, ஆரியமொழி ஆரவார மந்திரங்கள் சடங்குகளே அன்றி உள்ளம் ஒன்றி வழிபாடியற்ற துணைபுரியா என்பது இங்கு தமிழின் மேன்மை குறித்து வலியுறுத்தப் பெறுகின்றது.
இறுதியாக,
மலையாள மண்ணில் ஆலப்புழை என்ற ஊரில் பிறந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ் மொழியையே தாயாகப் பாவித்து வந்தவர்; அவரல்லவோ உண்மையான தமிழர்?

இச்செய்தியைப் பறைசாற்றும் அவர்தம் தமிழ்த்தாய் வாழ்த்தின் நிறைவுப் பகுதி இதோ:
நிற்புகழ்ந்து ஏத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின் பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்
ஆயினும் நீயே தாய் எனும் தன்மையின்
மேய பேராசை என் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதி என்று இழைத்த இந் நாடகம்
வெள்ளியது எனினும் விளங்கு நின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறு விரல் அணியாக்
கொள் மதியன்பே குறியெனக் குறித்தே.
-மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை

நிறைவாக,
யாம் பெற்ற இன்பமாம் இவ்வுணர்வரிய தமிழ்த்தாய் வாழ்த்தின்பத்தை தமிழர் அனைவரும் பெற்று, எம் ஊன் பற்றி நின்ற தமிழ் உணர்வது ஓங்கி, அன்பால் அனைவரும் இன்புறப் பணிசெய்து, நிலமிசை தமிழால் இசைபட வாழ்ந்து, மறைத்தமிழ் கொண்டு வான் பற்றி நின்ற மறைப்பொருளோடு இரண்டறக் கலந்து இன்புற்று வாழ்க. (இந்நிறைவுரை, திருமூலதேவ நாயனாரின் திருமந்திரத்தில் உள்ள
‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே.’ என்ற ஊன் கலந்த பாடலால் நிறைந்தவை)

பெறர்க்கரிய இத் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழராம் யாம் அனைவரும் பெற்றின்பமுறத் தந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நன்றி கூற இவ்வொரு பிறவி போதுமா? நும் தமிழ் நுகர, நும் தமிழ் வாழ்த்த, யாம் பல்லாயிரம் மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே! தமிழ்த்தாய்க்கும், நுமக்கும் யாம் கூறுதும் பல்லாண்டு!!
தமிழால் இணைவோம்! தமிழாய் வாழ்வோம்!!
நன்றி ~ சிவம்

Sunday, January 5, 2020

தமிழ்த்தேசியம் (பாமரத்தனமாக எதிர்பார்ப்பு)

எல்லாத் தரப்பும் எல்லா மனிதர்களும் தாம் சரியானவர்கள் என்றே நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால், நாம் மட்டுமே சரி என்று முறுக்கிக் கொண்டு நிற்பது ஒருபோதும் பிரச்சினை தீரப் போதுமானதில்லை. மற்றவர்களின் சரி என்ன என்பது பற்றிய கவனிப்பும் கணிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது.
அநியாயங்கள், அடங்காப் போர்கள், பஞ்சங்கள், பாதகங்களினாலும் மனித உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலகில், எவரும் நாம் முழுக்க முழுக்கச் சரியாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அப்படி நெஞ்சை நிமிர்த்திக் கொள்பவர்களையே மேலும் ஆபத்தானவர்களாய்க் கருத வேண்டியிருக்கிறது.
எதிர்த்தரப்பின் சந்தேகங்களைப் புறக்கணித்துவிட்டு எமது தீர்வை நாம் கோர முடியாது, பெற்றுவிடவும் முடியாது. மக்களிடமும் மனிதத்திடமும் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் எவரிடமும் பேச நமக்குத் தடை இல்லை. எல்லாத் தரப்புடனும் எல்லாச் சமூகங்களுடனும் நாம் பேச முடியும். நம்மிடம் மட்டுமே முழுச் சரியும் இருப்பதாக நினைத்துக் கொள்வதால்தான் இணக்கத்தைப் புறந்தள்ளும் இறுமாப்பு வெல்கிறது. வாழ்வு தோற்றுப் போகிறது.
இந்த நாட்டில் நமது தமிழ்த்தேசியம் போலவே, மறுதரப்பான சிங்கள தேசியத்தையும் கடந்த கால நடவடிக்கைகள் மூலம் வெகு தீவிரத்தன்மையுடன் வளர அனுமதித்து விட்டிருக்கின்றோம்.

அந்தச் சிங்கள தேசியத்தை மறந்துவிட்டு அல்லது அதை இல்லாதது போல் முற்றாக விலக்கி வைத்துக்கொண்டு நமது தமிழ்த் தேசிய கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருந்தால், எந்த வெளி சக்திகளாலும் அதற்கு உதவ முடியாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

எங்களுக்குத்தான் பிரச்சினை. எனவே சிங்கள மக்களைப் பொருட்படுத்தாது இலங்கை அரசைச் சர்வதேசம் அழுத்தவேண்டும் - அழுத்தும் என்று பாமரத்தனமாக எதிர்பார்க்கின்றோம். இதை அவர்கள் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்றபடி நம்முடைய தீர்வுக்கு, நாம் அரசாங்கத்துடன் பேசவேண்டும் என்பதையே பாந்தமாகவும் பலபடியாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை நாம் புரிந்துகொள்ள - ஒப்புக்கொள்ள விரும்பாததுதான் பிரச்சினையாகத் தெரிகிறது.
இலங்கை அரசுடனான பேச்சில் வெற்றி என்பது, சிங்கள மக்களிடமும் நம் கோரிக்கைகளின் நியாயத்தன்மை உணரப்படுவதனூடாகவே சாத்தியம். மோதல் போக்குடனான பேச்சுக்கள் மூலம் சிங்கள தேசியத்தை உசுப்பித் தீவிரப்படுத்தி விட்டுக்கொண்டு, இந்த நாட்டிற்குள் ஒரு தீர்வை நாம் கண்டுவிட முடியாது என்பதே யதார்த்தம்.
தமிழ்த் தேசிய உணர்வில் மட்டுமே நியாயம் இருக்கிறது என்று கருதிக்கொண்டு சிங்கள தேசியத்தைப் புறக்கணித்துப் பொங்குவது என்பது தனிநாட்டுக்கான பொருதலாகத்தான் இருக்கும். அது சாத்தியம் என்று நம்மில் எத்தனை பேர் இன்னும் கருதுகின்றார்கள் என்று கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.
சிங்கள தேசியத்துடன் உரையாடி அதை விரோதமற்ற நிலையில் வைத்திருக்கவேண்டும் என்பது எதிரிகளிடம் போய் கெஞ்சுவதா என்ற ரோசத்தையே நமக்கு உண்டாக்கும் என்றால், நாம் மனிதர்களாக வாழும் நம்பிக்கை அற்றவர்கள் என்பதே பொருள்!
ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் அரசொன்றை எப்படி எதிர்கொள்வது என்பதைக் குறித்து தமிழ் அரசியல் தரப்பினரிடத்திலே எந்த விதமான சிந்தனையும் செயற்திட்டமும் இல்லை. 1960, 70 களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் முறைமைகளையே இவை இன்று கைக்கொள்கின்றன. அதாவது நாற்பதாண்டுகளுக்கு முந்திய அரசியல் சிந்தனையையும் வழிமுறையையும்.
அந்தக் கால வழிமுறைகள் தவறு. தீர்வுக்குப் போதாது என்று இதற்குப் பிறகு எவ்வளவோ மாற்றங்கள் வெளிப்பரப்பில் நிகழ்ந்துள்ளன. ஆனால், நாம் இதையெல்லாம் புறக்கணித்து விட்டு நாற்பதாண்டுகள் பின்னோக்கிச் சென்று சக்குப் பிடித்த, காலாவதியாகிப்போன அரசியலை எடுத்து மேசையில் வைத்திருக்கிறோம். இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?


இன்று எந்தத் தமிழ்க் கட்சியும் நிகழ்கால - எதிர்காலத்துக்கான அரசியற் கொள்கை, செயற்திட்டங்கள், வழிமுறை, அணுகுமுறை எவற்றையும் கொண்டிருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்காலத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய அரசியற் செயற்றிட்டங்கள் எதுவும் எந்தக் கட்சியின் இதயத்திலும் இல்லை. மூளையிலும் இல்லை.
இதனால்தான் இந்தக் கட்சிகளுக்கு இதயமும் இல்லை. மூளையும் இல்லை என்கிறேன். அப்படி இருந்திருந்தால் நிகழ்காலத்தை இப்படிச் சீரழிய விட்டிருக்க முடியாதல்லவா!
ஆகவே இதற்கான அரசியற் திடசித்தம் எந்தக் கட்சியிடத்திலுமில்லை. அரசியற் தரப்பினரிடத்தில் மட்டுமல்ல, தமிழ்ச்சமூகத்தின் இயங்கு சக்திகளாக இருக்கின்ற புத்திஜீவிகள், அரசியல் அறிஞர்கள், ஊடகத்துறையினர், பொது அமைப்புகளைச் சேர்ந்தோர் எனப் பிற தரப்பினரிடத்திலும் இவை இல்லை.
வேண்டுமென்றால் நாற்பதாண்டுகளுக்கு முன்பு வந்த பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளையும் இன்று வருகின்ற பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளையும் ஒரு தடவை எடுத்து ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது புரியும் இந்தச் சமூகம் எவ்வளவு தூரம் பின்னடைந்திருக்கிறது, மாற்றங்களைக் காணாதிருக்கிறது, அப்படியே இருக்கிறது என்று.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அரசியலமைப்புத் தொடர்பான உண்மை நிலவரத்தை மனோ கணேசன் வெளிப்படுத்தியபோது கூட்டமைப்புக்குச் சங்கடம் ஏற்பட்டது. அரசியலமைப்புத் தொடர்பாக தமிழ்ச்சமூகத்துக்கு பல விதமான கற்பனைகளை உருவாக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மனோ கணேசனின் உள்வீட்டுத் தகவல்கள் நெருக்கடியை உண்டாக்கி, உண்மையை அம்பலப்படுத்தின. இதனையடுத்து கூட்டமைப்புக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசனுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
பின்னர் இது தொடர் விவாதங்களாக மாறியது. மனோ கணேசன் தன்னியல்பான அவருடைய வெளிப்படுத்தல்களின் மூலம் அரசாங்கத்தின் போக்கையும் தமிழ்ச்சமூகத்தின் நிலையையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். இதுவும் கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றுக்கும் மௌனம் காப்பதும் எந்தக் கேள்வியும் இல்லாமல் எல்லாவற்றையும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதும் தவறு என்று நேரடியாகவே விமர்சித்தார். இது நேரடியான மோதல் என்ற நிலையைத் தோற்றுவித்தது.
இதற்கெல்லாம் இன்னுமொரு உட்காரணமும் இருந்தது. கடந்த அரசாங்கத்தில் ரணிலுக்கு நெருக்கமாக யார் நிற்பது, யார் செல்வாக்கைப் பெறுவது என்ற போட்டி கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரனுக்கும் மனோ கணேசனுக்குமிடையில் நிலவியது. இது ஒரு பெரும் பனிப்போராகவே தொடர்ந்து கொண்டிருந்தது. மகிந்த – மைத்திரி கூட்டணி 2018 இல் ஆட்சிக்கவிழ்ப்பைச் செய்தபோது அதற்கெதிராக இந்த இருவரும் முன்னணிப்போராளிகளாக நின்று சமராடியது காட்சிகள் இந்தக் கணத்தில் உங்களுக்கு நினைவில் எழும்.
சுமந்திரன் நீதிமன்றத்தின் மூலம் போராடினார். மனோ கணேசன் கட்சிகளை ஒருங்கிணைத்து, எதிர்த்தரப்பின் முயற்சிகளை எல்லாம் முறியடிப்பதில் முன்னின்றுழைத்தார்.
ஆக மொத்தத்தில் தமக்குச் சாத்தியமான வழிகளில் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். இது வெளிப்பரப்பில் செல்வாக்குப் பெறுவது வரையில் போட்டி நிலையை உருவாக்கியது. முக்கியமான வெளிநாட்டுத்தூதுவரங்கள் வரையில். மனோ கணேசன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற வகையிலும் சுமந்திரன், கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகையிலும் இந்த முக்கியத்துவப் போட்டி நிலவியது. ஆகவே பல முனைகளில் இந்த இருவரும் தம்மை நிறுவுவதற்கும் மேலெழுவதற்கும் முயற்சித்தனர். இதனால் கூட்டமைப்புக்கும் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் உரசல்கள் தீவிரமடைந்தன.
இதன் விளைவாக ஒரு கட்டத்தில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வடக்குக் கிழக்கிலும் போட்டியிடும் என்ற அறிவிப்பை விடுத்தது. முற்போக்குக் கூட்டணியின் அறிவிப்பு கூட்டமைப்புக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. இதற்குப் பதிலடியாக உடனே “அப்படியென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்குக்கு வெளியேயும் போட்டியிடும் என்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்தார்.
இருந்தாலும் முற்போக்குக் கூட்டணியின் அறிவிப்பு உண்டாக்கிய கலக்கம் கூட்டமைப்பை நிம்மதியாக இருக்க விடவில்லை. ஏற்கனவே வன்னி – கிளிநொச்சிக் களத்தில் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மற்றும் வவுனியாவில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகியவற்றின் நெருக்கடிகள் ஒருபுறமிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வன்னியில் களமிறங்கினால் அது பெரிய நெருக்கடியாகி விடும் என்று பதறுகிறது கூட்டமைப்பு. இதன் விளைவாகவே வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மலையக மக்களுக்கான பிரதிநிதித்துவத்துக்கு ஒரு ஆசனத்தை ஒதுக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Thanks 
Karunakaran Sivarasa,Tharunyan Ravi

Wednesday, November 6, 2019

*தொல்காப்பியரின் பேச்சு வகைகள்:*


பேசு( speak)
பகர்( speak with data)

செப்பு(speak with answer)
கூறு ( speak categorically)
உரை ( speak meaningfuly)
நவில்( speak rhymingly)
இயம்பு( speak musically)
பறை ( speak to reveal)
சாற்று ( speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது ( speak to recite)
கழறு( speak with censure)
கரை( speak with calling)
விளம்பு( speak with a message)
தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்.
எந்த மொழிகளில் இந்த சொல்லாக்கம் உண்டு!

Thursday, August 8, 2019

கூட்டணி அல்லது கூட்டமைப்பு என்பது


Karunakaran Sivarasa
கூட்டணி அல்லது கூட்டமைப்பு என்பது பல தரப்புகளின் பங்கேற்பு அல்லது கூட்டுச் செயற்பாட்டுக்கான களமாகும்.
இதை அதற்குரிய அர்த்தத்துடன், பெறுமானங்களோடு அணுகுவதற்குப் பதிலாக, நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, இது ஏதோ தமக்கு வழங்கப்பட்ட தயவு, வாய்ப்பு, கொடை, ஆதரவு, சலுகை என்கிற மாதிரியே பல கட்சிகளும் (தலைவர்களும்) செயற்படுவதைக் காண்கிறோம்.
இதனால்தான் ரெலோவும் புளொட்டும் தமிழரசுக் கட்சிக்கு முன்னால் தம்முடைய சுயத்தையும் ஆற்றலையும் இழந்து கைகட்டிக் கொண்டு நிற்கின்றன.
இவ்வாறே ஐக்கிய தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற – அதற்கு ஆதரவளிக்கின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய, இலங்கை மக்கள் கட்சி போன்றவை எல்லாம் ரணில் – ஐ.தே.கவின் முன்னால் பவ்வியம் கொள்கின்றன.
இப்படிக் கையைக் கட்டி, வாயைப் பொத்திப் பவ்வியம் கொள்வதற்கு ஏன் தனிக்கட்சி என்ற அடையாளங்கள்? கட்சித் தலைமை என்ற சலுகைகளைப் பெறுவதற்கு மட்டும்தானா?
தனி அடையாளம் என்பது ஒரு அரசியற் கட்சிக்கும் தலைமைக்கும் முக்கியமானது. தொடர்ந்தும் தனித்துவத்துக்கு இடமின்றி உள்ளடங்கியிருக்க முடியாதென்பதால்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் (சுரேஸ்) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் (கஜேந்திரகுமார்) கூட்டமைப்பிலிருந்து வெளியேறின என்பது கவனத்திற்குரியது..

Monday, August 5, 2019

சுமந்திரன் சட்டத்தரணியா? or அரசியல் பிரதிநிதியா?


 
Karunakaran Sivarasa
அரசியல் ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பல விடயங்களைச் செய்யாமல் விட்டுவிட்டு அந்தத் தவறுகளை மறைப்பதற்காக நீதி மன்றில் வழக்காடி வென்றதாகப் படம் காட்டுவது தமிழர்களை படு முட்டாளாக்கும் செயற்பாடே...
அரசியல் தீர்மானங்களைச் சரியாக எடுத்திருந்தால் அல்லது தீர்மானங்களை எடுப்பதற்கு முயற்சித்திருந்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும். இப்படி நீதிமன்றப்படிகளில் ஏறி இடைக்காலத் தடை உத்தரவு என்ற சில்லறைத் தீர்வுகளைப் பெற வேண்டி வராது...
இதைத்தான் முன்னரும் தமிழ்த் தலைவர்கள் செய்தனர். தங்களுடைய அரசியல் பணிகளைச் செய்யாமல் அவர்கள் பிரபல சட்டத்தரணிகளாகவே புகழ் பெற்றனர்...
அரசியற் தலைவர்களாகச் செயற்பட்டிருந்தால் பல விடயங்களில் முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட்டிருக்கும்.
ஏனென்றால் அரசியல் என்பது வித்தை அல்ல. அது ஒரு விளைவு.
ஆகவே தமிழ்ச்சனங்களின் காதுகளில் பூவைப்பதை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக - அரசியல் ரீதியாகச் செயற்பட்டு தீர்வைக் காண முயற்சியுங்கள். 
  அரசியலில் சுமந்திரன் கீழிறங்குவதையும் மனோ கணேசன் மேலுயர்வதையும் பார்க்கிறோம். இருவரும் ஆட்சியிலுள்ள ஐ.தே.க அரசாங்கத்தையே ஆதரிக்கின்றனர். மனோ கணேசன் வெளிப்படையாக ஆதரிக்கிறார். சுமந்திரன் மறைத்துச் சுழித்து விளையாட முற்படுகிறார். ஆனால் மனோ அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிக்கிறார். எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கிறார். நெருக்கடியைக் கொடுக்க வேண்டிய இடத்தில் நெருக்கடியைக் கொடுக்கிறார். இதுதான் சாணக்கிய அரசியல். அவரே சொல்வதைப்போல தேவைக்கேற்ப ஆதரவாளராகவும் எதிர்த்தரப்பு ஆளாகவும் செயற்படுகிறார்.

ஆனால், சுமந்திரனோ எப்போதும் ரணிலையும் அவருடைய அரசாங்கத்தையும் பாதுகாப்பதையே குறியாகக் கொண்டிருக்கிறார். ரணிலுக்குத் தலையிடி என்றால் பதறிப்போய் பனடோலும் தண்ணீருமாக ரணலின் காலடியில் நிற்கிறார். இதுதான் சனங்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இதை மறைப்பதற்கே அவர் நீதி மன்றத்தின் மூலமாகப் போராடுவதாகக் காட்டுகிறார். இதில் இரண்டு வகையான உத்திகளைச் சுமந்திரன் கையாள முற்படுகிறார்.

1. மனோ கணேசன் போன்றவர்கள் ஏற்படுத்துகின்ற நெருக்கடியிலிருந்து ரணிலைக் காப்பாற்றுவது. அதாவது, தமிழர்களுக்குச் சாதகமான அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என சிங்கள மக்களிடம் கேள்வி எழுந்தால், அப்படியெல்லாம் இல்லை. இது நீதி மன்ற நடவடிக்கையே தவிர, அரசியல் ரீதியானதல்ல என்று காட்டுவதற்கு.

2. அரசியல் தீர்மானமாக இவற்றை மாற்ற முடியாதவாறு நீதி மன்ற விவகாரமாக முடக்கி வைத்திருப்பது.

ஆக மொத்தத்தில் தானும் செய்யாமல் மற்றவர்களையும் உருப்படியான காரியங்களைச் செய்ய விடாமல் தடுக்கும் வேலை இது.


ஆனால், இதைச் சனங்கள் உணராத விதமாக தான் இலவசமாக வழக்குப் பேசுவதாகக் காண்பிக்கிறார் சுமந்திரன்.

நஞ்சை இலவசமாகக் குடிக்கக் கொடுப்பதைப் போன்ற காரியம் இது.

இல்லையென்றால் தமிழர்கள் எல்லாம் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்குச் சம்மதம் என்று சொல்லியிருப்பாரா? அதுவும் பாராளுமன்றத்தில்....

இதற்குப் பிறகும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக்கட்சியும் ஈழத்தமிழருடைய அரசியலின் விடிவெள்ளியாகச் செயற்படும் என்று யாராவது கனவு கண்டால் அதை விட முட்டாள் தனம் வேறில்லை.

Monday, July 22, 2019

இலங்கைத்தீவின் இன்றைய அரசியல் சூழல் ஷோபாசக்தி

Karunakaran Sivarasa

ஞானம் விளைந்தது
-------------------------------
சில நாட்களுக்கு முன்பு இணையத் தளமொன்றுக்கான நேர்காணலுக்காக எழுத்தாளர் ஷோபாசக்தியிடம் சில கேள்விகளை எழுப்பினேன். நான் எழுப்பியிருந்த கேள்விகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்சினை, இலங்கைத்தீவின் இன்றைய அரசியல் சூழல், இனப்பகை அல்லது இன முரணைத்தீர்ப்பதற்கான வழிமுறைகள், பொறுப்புகள் பற்றியவையாக இருந்தன. கூடவே இலங்கையில் இடையீடு செய்யும் வெளிச்சக்திகளைப் பயன்படுத்திக்கொள்வது, புலம்பெயர்ந்திருக்கும் இலங்கைச் சமூகங்களின் பொறுப்பும் பணிகளும் என்பதைப் பற்றியும்.
என்னுடைய கேள்விகளுக்கு மிகச் சுருக்கமாகவே பதிலளித்திருந்தார் ஷோபாசக்தி. ஆனால் அவருடைய பதில் வேறு விதமாக இருந்தது. “உங்களுடைய கேள்விகளில் பத்துக்கு எட்டுக் கேள்விகள் புராதனத்தன்மை வாய்ந்தவை. உண்மையில் இந்தக் கேள்விகளுக்கு இன்றைய சூழலில் கடவுளைத் தவிர வேறு யாராலும் பதிலளிக்க முடியாது. அப்படிப் பதில் இருப்பதாக யாராவது சொன்னால் அது மனமறிந்து சொல்லும் பொய்” என்று.
அத்துடன், “யாருக்கும் அரசியல் புத்திமதியோ ஆலோசனையோ கூறும் நிலையில் நானில்லை. வேண்டுமானால் என்னைப்பற்றி, என்னுடைய செயற்பாடுகளைப் பற்றிக் கேளுங்கள். தாராளமாகப் பதிலளிக்கிறேன்” எனவும்.
அவருடைய இந்தக் கண்ணியமான பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்டது என்றாலும் இங்கே அதைத் துணிந்து நான் பகிரங்கமாக எடுத்தாள்வதற்குக் காரணம், அதில் உள்ள நேர்மைத்தன்மையும் உண்மையுமாகும். மட்டுமல்ல அது ஒரு பரந்துபட்ட விழிப்பூட்டலைச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்பதாலும்.
ஷோபாசக்தி இன்று உலகளவில் அறியப்பட்ட எழுத்தாளர். திரைக்கலைஞர். நாடகர். ஷோபசக்தியின் எழுத்துகளும் பிற கலைச் செயற்பாடுகளும் அவரே சொல்வதைப்போல “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” என அரசியல் மயப்பட்டவையே. அதுவும் வெளிவெளியான அரசியல்.
இப்படி அரசியல் முதன்மைப்பாட்டுடன் தன்னுடைய எழுத்துகளையும் கலை வெளிப்பாடுகளையும் முன்வைத்து வரும் ஷோபாசக்தி, நான் எழுப்பியிருந்த அரசியல் ரீதியான கேள்விகளைக் குறித்துச் சொன்ன பதிலிலுள்ள நியாயங்களும் உண்மையும் அவருடைய நிலைப்பாடும் மிகுந்த கவனத்திற்கும் பரிசீலனைக்குமுரியவை. அதாவது தன்னுடைய எழுத்துகளையும் வாழ்வொழுங்கையும் அரசியல் சிந்தனையின் பாற்பட்டு மேற்கொண்டு வரும் ஒரு முன்னணிக் கலைஞர், இந்த அரசியல் குறித்துப் பேச ஆர்வம் கொள்ளவில்லை எனில் அந்த அரசியல் செல்லுபடியற்றது - பொருளற்றிருக்கிறது என்பதே அர்த்தமாகும்.
இதற்குப் பிரதான காரணம் ஷோபாசக்தி எழுத்தாளராகவும் கலைஞராகவும் இருக்கிறார் என்பதாகும். அவர் அரசியல்வாதியல்ல. அரசியல் லாபத்தின்பாற்பட்ட எழுத்துத்துறையைச் சேர்ந்தவரும் இல்லை. அவர் புனைவை எழுதினாலும் புனைவியக்கத்தில் செயற்பட்டாலும் அவற்றில் வலியுறுத்தப்படும் விடயங்கள் எதுவும் புனைவற்றவை. அவை உண்மைக்குரியவை. சத்தியமானவை. நியாயத்தின் அடியொலிப்பான்கள். உண்மைக்குரியவற்றையும் சத்தியமானவற்றையும் எழுதும் ஒருவர் பொய்மைகளால் கட்டமைக்கப்பட்டவற்றின் வழி நின்றியங்க முடியாது.
ஷோபாசக்தியினுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி அரசியல் சார்ந்த எண்ணப்பாடுகளால் வழிநடத்தப்பட்டதே. ஆனாலும் அடிப்படையில் அவர் எழுத்தாளர், கலைஞர். ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகளுக்கு மேல் அவர் முற்று முழுதாக எழுத்தாளராகவும் கலைஞராகவுமே இயங்கிக் கொண்டிருக்கிறார். புறச் சூழலில் மட்டுமல்ல, அவருடைய அகமும் அவ்வாறே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஷேபாசக்தி மட்டுமல்ல, இலக்கியம் மற்றும் கலை வெளிப்பாடு போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபடும் எவரும் இன்றைய இலங்கையின் அரசியல் பற்றிப் பேச விரும்பமாட்டார். அது பயனற்றது என்பதே பலரும் உணர்ந்திருக்கும் உண்மை.
ஏற்கனவே பலர் பெரிய நம்பிக்கைகளோடு இன ஐக்கியத்துக்காகவும் சமாதானத்துக்காகவும் செயற்பட்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாமே பூஜ்ஜியத்தில்தான் முடிந்திருக்கின்றன. அவர்களால் அந்த நம்பிக்கைப் பெரு வீதியில் ஒரு அடி கூட முன்னேற முடியவில்லை. இதனால் இந்த மாதிரித் துறைசார்ந்து இயங்குவோர் மட்டுமல்ல, வேறு எவரும் கூட இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் எனக்கு எழுதியிருந்த மிகச் சுருக்கமான – கண்ணியமான பதிலிலிருந்து நானும் கற்றுக்கொண்டேன்.
ஏனென்றால் இலங்கையின் வெகுஜன அரசியல் முற்றிலும் பொய்மையின் மீதும் அநீதியின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்தம் எனப் புனிதப்படுத்தப்பட்ட மேலாதிக்கத்தின் மீது சிங்கள அரசியலும் 'முஸ்லிம் தனித்துவம்' என்ற புனிதத்தின் மேல் முஸ்லிம் அரசியலும் தமிழ்த்தேசியம் என்ற 'மகிமை'யின்கீழ் தமிழர்களுடைய அரசியலும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கட்டமைப்பாக்கம் செய்யப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்படும் அரசியலில் ஏற்கனவே பல தடவை பலராலும் பேசப்பட்டுப் பேசப்பட்டுப் பேசப்பட்டுக் காலாவதியாகிப்போனவற்றைப் பற்றிப் பேசுவதால் பயனென்ன? எப்போதும் புதியதை, புதுமையை, மாற்றை, வளர்ச்சியை, முன்னகர்வை விரும்பும் வலியுறுத்தும் எழுத்தாளர் பேசவேண்டிய அவசியமென்ன என்பதே ஷோபாசக்தியின் கேள்வி. இந்தக் கேள்வி ஏராளமான உண்மைகளை உணர்த்தி மெய்நிலைப்பாட்டைப் புரிய வைக்கிறது. இந்த நிலையில்தான் என்னுடைய கேள்விகளை அவர் புராதனத்தன்மையானவை என்கிறார்.
இந்த அரசியலைப்பற்றி நான் கூடத் தொடர்ந்து எழுதி வருகிறேன். நாளொன்றுக்கு ஏறக்குறைய எழுநூறு தொடக்கம் ஆயிரம் சொற்கள் வரையில் எழுதுகிறேன். என்னைப்போலப் பலரும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஊடகப்பரப்பும் இணைய வெளியும் சமூக வலைத்தளங்களும் அரசியற் கருத்தாடல்களால் நிறைந்து கிடக்கின்றன.
ஆனாலும் பயனென்ன? நிகழ்ந்த மாற்றங்களென்ன?
ஷோபாசக்தியின் பதில் என்னிடம் எழுப்புகின்ற ஏராளம் கேள்விகளும் இவற்றைத் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. நான் அவரிடம் எழுப்பிய கேள்விகளை விட அவருடைய பதில் என்னிடத்திலும் பிறரிடத்திலும் எழுப்பும் கேள்விகள் அதிகம்.
என்பதால் மெய்யாகவே நாம் சிலதை அவதானிக்க வேண்டியுள்ளது.
நமது சூழலில் மிகத்தீவிரமாக அரசியல் விவாதங்கள் நடக்குமளவுக்கும் அரசியல் பேசப்படும் அளவுக்கும் முன்னகர்வுகளோ மாற்றங்களோ நிகழவில்லை. அதற்கான சாத்தியங்களே தென்படவில்லை. புதிய சிந்தனை எங்கும் முளைக்கவில்லை. நற்சாத்தியங்கள் எங்குமே வேர்விட்டதாகத் தெரியவில்லை. மீள் பரிசீலனைகளும் மதிப்பீடுகளும் நடக்கவில்லை. சுயவிமர்சனத்துக்கு யாரும் தயாரில்லை.
மேலும் மேலும் சரிவுகளும் கீழிறக்கங்களுமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இன ஒற்றுமையைப் பற்றியும் பகை மறப்பைப் பற்றியும் பேசியதை விட நடைமுறையில் இனப்பகையும் இனமுரணும் வலுவாக்கம் பெறுவதே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமாதானத்தை வலியுறுத்துவதை விட அமைதிக்கெதிரான பதற்றமே உருவாக்கப்படுகிறது. தீர்வுக்குப் பதிலாக தீர்வுகளின்மையே எதார்த்தமாகிறது. ஆக எழுத்துக்கும் பேச்சுக்கும் மாறாகவே நிலைமை வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.
இதற்குக் காரணம் இதனைச் சரியாக முன்னெடுத்திருக்க வேண்டிய, முன்னெடுக்க வேண்டிய தரப்புகள் அவற்றை எதிர்நிலையில் கொண்டு செல்வதேயாகும். இந்தத் தரப்புகளில் பலவும் மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தம்மிடம் வைத்திருப்பதால் நடைமுறையில் அவற்றின் நடவடிக்கைகளே வலுவானதாக அமைகின்றன. அவை தவறாக இருப்பதால் பிழைகளும் அதிகமாகி விடுகின்றன. இதையிட்ட கவலையோ கேள்விகளோ இல்லாமல் சனங்களும் இவற்றின் பின்னால் இழுபட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
இதனால்தான் இந்த அரசியலைப்பற்றி மேலும் மேலும் பேசுவது கலைஞர்களின் எழுத்தாளரின் பணி இல்லை என்றாகிறது. அவர்கள் இதை அதற்குரிய வகையில் வெளிப்படுத்தினால் போதும் என்று எண்ணுகிறார்கள்.
ஷோபாசக்தியின் “மிக உள்ளக விசாரணை” என்ற சிறுகதை இதற்குச் சிறந்த உதாரணம். அவர் என்னுடைய பத்துக் கேள்விகளுக்கும் அளிக்கக் கூடிய பதிலை அந்த ஒரு கதையில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி விட்டார். என்னுடைய கேள்விக்கான பதிலாக மட்டுமல்ல, ஐ.நாவின் அணுகுமுறைக்கு, அமெரிக்காவின் அறிக்கைகள் பலவற்றுக்கு, சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக்கு, இலங்கை அரசின் நியாயங்களுக்கு, சிங்கள பௌத்த உளவியலுக்கு, விடுதலை அரசியல் பற்றிய தடுமாற்றங்களோடு இருப்போருக்கு இன்னும் இந்த மாதிரியான எல்லாவற்றுக்கும் எல்லாத் தரப்புகளுக்கும் அவர் மிகச் சிறந்த பதிலாக அந்தக் கதையை எழுதி விட்டார்.
எழுத்தாளரின் பணியும் அடையாளமும் இதுதான். இதற்குமேல் எதையும் பேச வேண்டிய அவசியமில்லை. அவசியமிருந்தால் பேசிக் கொள்ளலாம். கட்டாயமொன்றுமில்லை. ஏனெனில் லாப நோக்கோடு இயங்கும் அரசியல்வாதியல்ல எழுத்தாளரும் கலைஞரும். அவர்கள் அதற்கு எதிரானவர்கள், அதிலிருந்து விலகி, வேறுபட்டவர்கள், உண்மையின் வழியில், அறத்தின் ஒளியில் நடப்பவர்கள் என்பதேயாகும்.
இலங்கையின் இன்றைய அரசியல் சூழல் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு இப்படியே சீரிழிவும் மோசமானதாகவுமே இருக்கப்போகிறது என்பதற்கு சான்றுகளோ விளக்கங்களோ தேவையில்லை. சரியானவர்களும் பொருத்தமானவர்களும் அரசியலில் முன்னிலை அரங்கில் இல்லை. அவர்கள் அதிகாரத்தைப் பெறக் கூடிய சூழலும் தென்படவில்லை. அவ்வாறான தரப்பினரை இனங்கண்டு முன்னிலைப்படுத்துவதற்கான சக்திகளும் ஊடகங்களும் பொதுவெளியில் இல்லை.
மாற்று அரசியல் பண்பாடு, மாற்று அரசியல் சிந்தனை, மாற்று அரசியல் போன்றவற்றைப்பற்றியே சிந்திக்காத அளவில்தான் மக்களும் புத்திஜீவிகளும் உள்ளனர். அவர்கள் திரும்பத்திரும்ப தம்முடைய கூடையில் உள்ள கூழ்முட்டைகளே மிகச் சிறந்த குஞ்சுகளைப் பொரிக்கும் என்று நம்புகிறார்கள். கனவு காண்கிறார்கள்.
இதனால்தான் இன்று அரசியலை வெறும் பார்வையாளராக நோக்கும் போக்கு பல மட்டங்களிலும் வளர்ந்துள்ளது. அரசியலில் ஈடுபடுவதை தொழிலாக, வாணிபமாக, அதிகாரத்தின் ருஸியாகக் கொள்வோரைத் தவிர ஏனையவர்கள் அதில் வெல்ல முடியாதவர்களாக இருப்பதற்கான காரணம் இதுவே.
வானம் இப்போதைக்கு வெளிக்கும் என்றில்லை. ஆனால் நமக்கு ஞானம் வசப்பட்டிருக்கிறது. ஷோபாசக்தி எனும் ஞானக் கலைஞருக்கு நன்றி

Sunday, February 10, 2019

குறியீடு என்பது

குறிப்பான் குறிப்பீட்டைப் பிரதிபலிக்காததாகவும் இடுகுறித் தன்மையோடும் அல்லது முழுமையான மரபுசார்ந்ததாகவும் இருப்பதன் உறவை அறியக்கூடிய ஒன்றாக இருக்கும் நிலை இது.(உதாரணம் தேசியக் கொடி, ஓர் எண், போக்குவரத்து விளக்குகள், ‘நில்’ என்ற சொல்)
குறியீட்டு முதலீடு:பியர் போர்தியு பல்வேறு வகையான ‘முதலீடு’களைக் குறித்து கூறுகிறார்-பொருளாதார, கலாச்சார, சமூக, குறியீட்டு முதலீடுகள் என்று அவற்றை வகைப்படுத்துகிறார். ’குறியீட்டு முதலீடு’ என்பது தனிப்பட்ட நபர் அல்லது குழுவின் பரிமாற்றத் திறமையாகவும் அது கல்விப் புலத்தோடு உறவுகொண்டதாகவும் இருக்கும். குறியியல் சொற்களில் சொன்னால், சில சங்கேதங்களை அணுகும் வகைமையையும் பயன்பாட்டையும் குறிப்பதாகவும் குறியீட்டு முதலீடு உள்ளது.
குறியீட்டு வரிசை: ‘குறியீடு’ என்பது லக்கானின் சொல். சொல் மொழியில் குழந்தை தேர்ச்சிப் பெறும் பொதுப் புலத்தைக் குறிக்கும் கட்டத்தை இந்தச் சொல் குறிக்கிறது. தனித்துவத்தின் ஒரு வரிசையும் தன்னாட்சியும் மொழியியல் மரபுகளின் தடைகளிடம் புகலிடம் அடைந்து சுயம் நீர்த்துப் போய் நிலையான உறவார்ந்த அலகாக இல்லாமல் தெளிவற்ற உறவுடைய குறிப்பானாக இருப்பதாகும். அமைப்பியலாளர்கள் மொழியைத் தீர்மானமான தன்னிலையாகக் கொண்டு கற்பனை மீது அல்லாமல் குறியீட்டின் மீது கவனம் செலுத்தினார்கள்.
கிடைக்கோட்டு ஆய்வு: ஓர் அனுபவ நிகழ்வை ஒரு குறிப்பிட்ட காலத்தில் உறைந்துவிட்டது போல் கொண்டு செய்யும் ஆய்வு கிடைக்கோட்டு ஆய்வாகும்(உதாரணமாக சங்கேதம்). அமைப்பியல் குறியியல் குத்துக் கோட்டு ஆய்வு அல்லாமல் கிடைக்கோட்டு ஆய்வின் மீது கவனம் செலுத்துவதால் அது வரலாற்று ஆதாரங்களை அது விட்டுவிடுவதாக விமர்சிக்கப்படுகிறது.
கிடைக்கோட்டு தொடர்புறுத்தம்: கிடைக்கோட்டு தொடர்புறுத்தத்தில் அதில் பங்கெடுப்பவர்கள் ‘இயல்பான நேரத்தில்’ தொடர்கொள்ள முடியும். அதில் குறிப்பிடத்த தாமதங்கள் இருக்காது. இந்த அம்சம் பிரதியின் படைப்பாளர்களுடைய இருப்பு அல்லது இன்மையை ஊடகத்தின் தொழில்நுட்ப அம்சங்களோடு இணைக்கிறது. கிடைக்கோட்டு தொடர்புறுத்தம் தனிநபர்களுக்கு இடையிலான தொடர்புறுத்தமாக இருக்கிறது.
ஆகுபெயர்:பேச்சின் அணியாக இருப்பது. முழுமையைக் குறிக்கும் பகுதியாக பதிலீடாவது. ஓர் இனத்தைக் குறிக்கும் வகைமை அல்லது வகைமையைக் குறிக்கும் இனம் என்பதாக வருவது. இதனை உருவகத்திலிருந்து சில கோட்பாட்டாளர்கள் வேறுபடுத்துவதில்லை.


சிவபெருமானால் முடிசூடிக் கொள்ளும் ராஜேந்திர சோழன்

இடம்:கங்கை கொண்ட சோழபுரம்.

மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் குமாரன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாத அளவுக்குப் புகழ்பெற்ற அரசன். தந்தை ராஜராஜன் 1014இல் காலமான பிறகு சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டவன் ராஜேந்திரன். ஆனால் வரலாற்று ஏடுகளில் ராஜராஜனுக்குக் கிடைத்த அளவுக்கு இந்த ராஜேந்திரனுடைய புகழ் வெளிவரவில்லையே ஏன்?

ராஜேந்திரசோழனுடைய காலத்தில் சோழ நாட்டின் எல்லை வடக்கே கங்கைக் கரை வரை பரந்து விரிந்து கிடந்தது. கடல் கடந்தும் இந்த மாமன்னனுடைய ஆட்சியின் அதிகாரம் பரவியிருந்தது. இப்படிச் சொன்னால் மட்டும் போதுமா? எதுவரையில் இவனுடைய ஆட்சியின் எல்லை விரிந்து கிடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஆம்! தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். சோழ சாம்ராஜ்யம் பர்மா அதாவது இப்போதைய மியன்மார் கடற்கரை வரையிலும் பரவியிருந்தது. அந்தமான் நிக்கோபார் தீவுகளும் அவன் ஆட்சியின் கீழ் இருந்தன. லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் இவைகளும் இவனது ஆட்சியின் கீழ் இருந்தன. அது மட்டுமா? ஸ்ரீவிஜய ராஜ்யங்களான சுமத்ரா, ஜாவா, மலேயா தீபகர்ப்பம் தவிர தூரக்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் இவனது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. இவை தவிர சோழ கடற்படை வென்றெடுத்த நாடுகளும் பலப்பல. வங்கதேசம், இப்போதைய பிகார் மன்னன் மகிபாலனை வென்று அங்கும் தனது ஆட்சியை நிலைநாட்டினான் ராஜேந்திரன்.

ராஜராஜனின் மைந்தன் ராஜேந்திர சோழன். இவன் கி.பி.1012 முதல் 1044 வரை அரசாட்சியை நிர்வகித்து வந்தான். இவன் காலத்தில் சோழ் சாம்ராஜ்யம் பாரத வர்ஷம் முழுவதும், கடல் கடந்தும் பரவி நின்றது. இவனுக்குப் பரகேசரி எனும் பட்டப்பெயர் உண்டு. இவன் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம். இவனது ராணிமார்கள் திருபுவன மாதேவியார், முக்கோகிலம், பங்கவன் மாதேவியார், வீரமாதேவி ஆகியோர். பிள்ளைகள் முதலாம் ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், பெண்கள் அருண்மொழிநங்கையார், அம்மங்காதேவியார்.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒரு புதிய தலைநகரை உருவாக்கினான். அந்த தலைநகரம்தான் கங்கைகொண்ட சோழபுரம். அவன் வாழ்ந்த காலத்தில் கீழை ஆசிய கண்டத்தில் புகழ்வாய்ந்த சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது சோழ சாம்ராஜ்யமே. மாமன்னன் ராஜேந்திரனின் தமிழ்ப் படை பல நாடுகளிடமிருந்தும் கப்பம் வசூலித்தது. அவை இப்போதைய தாய்லாந்து, கம்போடியா ஆகியவைகளும் அடங்கும்.

ராஜேந்திர சோழனின் மகிமை - பாலகுமாரன்

தஞ்சை இனியும் தலைநகராக இருப்பதற்குண்டான தகுதியுடையதாக இல்லை. தெற்கே பாண்டியர்கள், சேரர்கள் அமைதியாக உட்கார்ந்து விட்டார்கள். அந்த இடத்தை ராஜேந்திர சோழனின் மகன்கள் மன்னராக பதவியேற்று ஆட்சி செய்கிறார்கள். வடக்கே கீழை சாளுக்கியம் என்று அழைக்கப்படுகின்ற ஆந்திர மாநிலம் மிக இணக்கமாக இருக்கிறது. ஆனால் வடமேற்கே இருக்கின்ற இப்பொழுது கர்நாடகம் என்று அழைக்கப்படுகின்ற மேலை சாளுக்கியம் இடையறாது தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காவிரிக்கு நடுவே தடுப்பணை ஏற்படுத்த அவர்கள் முற்படுகிறார்கள். அல்லது படையெடுத்து வந்து திருவொற்றியூர் வழியாக மயிலை திருவல்லிக்கேணியை தாக்குகிறார்கள். தொண்டை நாடு அவதிப்படுகிறது. தொண்டை நாட்டிற்கு கீழே உள்ள நடுநாடு விரைவில் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எனவே ராஜேந்திர சோழன் தன்னுடைய தலைநகரை மாற்ற விரும்புகின்றான். இடையே இருக்கின்ற காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, ஆறு போன்றவைகளை தாண்டி படைகள் வரவேண்டியிருப்பதால் அவைகளையெல்லாம் கடந்து ஒரு மிகப்பெரிய புல்வெளியை தேர்ந்தெடுத்து அதிலே தன் தலைநகரை நிறுத்த விரும்புகின்றான்.

அந்த இடம் மேடாக இருக்கிறது. அதற்கு அருகே ஜெயங்கொண்டம் என்ற ஊர் இருக்கிறது. கிழக்கே உடையார்குடி என்கிற சோழர்களின் பரம்பரை ஊர் இருக்கிறது. கொள்ளிடம் அருகே இருக்கிறது. எனவே அந்த இடமே சிறந்த இடம் என்று தேர்ந்தெடுத்து தந்தையைப் போலவே மிகச் சிறப்பாக தன் வழிபாட்டுக்கென்று ஒரு கோவில் எழுப்பி பெருவுடையார் என்று தஞ்சையிலுள்ள பிரகதீஸ்வரரை அழைக்கிறோமே, உண்மையிலேயே தஞ்சையில் இருப்பதைவிட மிகப்பெரிய ஒரு சிவலிங்கம் அமைத்து, அப்பாவின் கோவிலைவிட மிக அழகான சிற்பங்கள் வைத்து, தன்தந்தையான ராஜராஜனைவிட சிறப்பாக தான் இருப்பதை பறைசாற்றிக்கொள்ள விரும்பி அற்புதமான ஒரு நகரை அமைக்கிறான். அதற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்று பிற்பாடு பெயரிடுகிறான்.

பெரிய மதில்கள், அதற்குள்ளே ஊர். ஆறேழு மாளிகைகள். காவலர்களுக்கான குடியிருப்புகள். பணியாளர்களுக்குண்டான இடங்கள். பல தெருக்கள் கொண்ட நகரையே அங்கு ஸ்தாபிக்கிறான். நித்த வினோத பெருந்தச்சனான ரவி என்பவனுடைய தலைமையில் அந்த கோவில் உருவாகிறது. சதுரம், எண்கோணம், வட்டம் என்கிற விதத்தில் கோவில் விமானம் அமைகிறது. அது நெளிந்து நெளிந்து இருப்பதாக காட்சியளிக்கிறது. தஞ்சை விமானம் ஒரு குத்தாக நெடிய உருவமாக காட்சியளிக்கிறபோது இந்த விமானம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

உள்ளே சண்டேஸ்வர நாயனாருக்கு உண்டான சிற்பம். யார் சண்டேஸ்வர நாயனார். தான் சிவலிங்கம் வைத்து பூஜை செய்தபோது, மாடுகள் மேய்வதை கண்டுகொள்ளாதபோது தன் தந்தை வந்து தன்னை அடிக்க, அதைப்பற்றி கவலைப்படாது பூஜை செய்ய, தான் பூஜை செய்த சிவலிங்கத்தை உதைக்க முற்பட கையில் இருந்த கோலால் தந்தையின் காலை உடைத்தவர் சண்டேஸ்வர நாயனார். அவர் பக்தியை மெச்சி சிவபெருமான் அவருக்கு பட்டம் சூட்டினார். அந்தச் சிலை கோவிலில் மிகச்சிறப்பாக இருக்கிறது. பெரிய வண்ணப் பூமாலையை கொண்டு சண்டேஸ்வர நாயனார் தலையில் சிவபெருமானே சூட்டுகிறார். அருகே உமைதேவி அதை கனிவுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். மிக பய பக்தியுடன் சண்டேஸ்வர நாயனார் அதை வாங்கிக் கொள்கிறார். பரதகண்டத்திலேயே மிக அழகிய சிற்பம் இது. இந்த சண்டேஸ்வர நாயனார் ராஜேந்திர சோழரின் சாயலில் இருப்பதாக பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ராஜேந்திர சோழனை அழகன் என்றும், காமவேள் என்றும் குறிக்கிறார்கள். எப்படிப்பட்ட காமவேள் சிவனின் முக்கண் தொடாத காமவேள் மிக அழகன் என்று வர்ணிக்கிறார்கள். அவன் அழகன் மட்டுமல்ல. மிகுந்த திறமை மிக்கவன்.

மேலை சாளுக்கியம் என்கிற கர்நாடகத்திலிருந்து தாக்குதல் வராமல் இருக்க கீழை சாளுக்கியத்தில் மணவினை முடித்துக்கொள்கிறான். தன் மகள் அம்மங்காவை அந்த ஊர் மன்னன் ராஜராஜ நரேந்திரனுக்கு மண
முடிக்கிறான். ராஜராஜ நரேந்திரனின் தந்தை விமலாதித்தன். அவன் ராஜேந்திர சோழனின் தங்கையை மணமுடித்திருக்கிறான். தங்கை மகனுக்கு தன் மகளை மணமுடித்து அரசியல் உறுதி செய்து கொள்கிறான். அங்கு தன் படையை நிறுவுகிறான். மேலை சாளுக்கியத்திலிருந்து அதாவது மேற்கே இருந்து மட்டும் தொந்தரவு வரவில்லை. வடக்கே இருந்தும் கலிங்கத்திலிருந்தும் தொந்தரவு வருகிறது. அப்படியா, படைகளை கலிங்கத்திற்கு அனுப்பு. கலிங்க மன்னன் விழுகிறான். அதற்கு மேல் உள்ள ஒட்ட தேசமும் விழுகிறது. அதற்கு மேல் உள்ள தட்சிணலாடமும் நாசமடைகிறது. வங்கத்தில் உள்ள பால அரசர்கள் அடிபடுகிறார்கள். அவ்வளவு தொலைவு தன் படைகளை அரசியலுக்காக அனுப்பி, அதே சமயம் தந்தை செய்யாத ஒரு பெரிய செயலையும் செய்யவேண்டும் என்று தீர்மானித்து பெரும் தவலைகளில் கங்கை நீரை எடுத்து வருகிறான்.

கங்கை நீரை மட்டுமல்ல, தெய்வத்திரு உருவங்களும் பிடுங்கிக் கொண்டு வரப்படுகின்றன. பெண்டிர் பண்டாரமும் அள்ளிக் கொண்டு வருகிறான். சோழ தேசம் செழிப்பாகியது. எப்பொழுது ஊர் என்று வந்து விட்டதோ நீர் வரவேண்டும். தன்னுடைய வீரர்களாலும், தான் பிடித்து வந்த சேர தேசத்து, பாண்டிய தேசத்து வீரர்களாலும் மிகப்பெரிய ஏரி வெட்டுகிறான். அந்த ஏரிக்கு நடுவே சாரம் அமைத்து பெரும் தவலைகளை அங்கு கொண்டு போய் உயரே வைத்து அந்த நீரை தூண்போல விழச் செய்கிறான். கங்கை நீர் அந்த ஏரியில் கலக்கிறது. அதற்கு கங்கை கொண்ட சோழப் பேரேரி என்று பெயர் வருகிறது. இப்பொழுது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

யானைகளாலும், பசுமாடுகளாலும், அடிமை வீரர்களாலும் கங்கை கொண்ட சோழபுரம் நிரம்பி வருகிறது. அதற்கு அந்த பேரேரி வசதியாக வாழ மிகவும் உதவுகிறது.

இரட்டைச்சுவர் கொண்ட அரண்மனைகள் எழுப்பப்படுகின்றன. இரண்டு விதமான மதில் சுவர்கள் இருக்கின்றன. எந்த எதிரியும் ஒருபொழுதும் தாக்காதவாறு மிக உறுதியாக பத்திரமாக அந்த ஊர் இருக்கிறது. அந்த ஊரிலிருந்து எடுக்கப்பட்ட பரவையின் சிலை இப்பொழுது சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது. மிக அற்புதமான சிலை அது. சுந்தரமூர்த்தி நாயனாரின் துணைவியார் பரவை நாச்சியாரின் சிற்பமாக இருக்கலாம். அதற்கு பரவை என்கிற ராஜேந்திர சோழரின் அனுக்கி மாதிரியாக நின்றிருக்கலாம். மிக அழகான பெண் உருவம். அலங்காரமான நகைகள். மிக ஒயிலாக முடிக்கப்பட்ட தலை அலங்காரம். சிறிய சிரிப்பு. குறுகிய இடை. வளமான உடல் என்று கண்ணை கவருகிறது.

யார் அந்த பரவை. ராஜேந்திர சோழருக்கு என்ன முக்கியம். திருவாரூரில் அவள் தேவரடியார் கூட்டத்தைச் சேர்ந்தவள். அவளை கோவில் வாசலில் சந்திக்கிறான். வியக்கிறான். பேசுகிறான். காதல் வயப்படுகிறான்.

‘‘மன்னா, நான் தேவரடியாள். தாசி. நீங்கள் சொடுக்கினால் வரவேண்டியவள். என்னைப்போய் மனைவி என்கிறீர்களே.’’

‘‘ஆமாம். நீ தேவரடியார் அல்ல. நீ என் மனைவி. பலர் பார்க்க திருமணம் செய்வேன். நீ ராஜேந்திர சோழனை கணவன் என்று கூறலாம்.’’ அவளை தேர் ஏற்றி ஊர் முழுவதும் வலம் வந்து, உனக்கு என்ன வேண்டும் சொல் என்று கேட்க, எனக்கு எதுவும் வேண்டாம். இது செங்கல் கோவிலாக இருக்கிறது. இதை கற்றளியாக மாற்ற முடியுமா என்று திருவாரூர் கோவிலை கேட்கிறார்கள். இரண்டே வருடங்களில் அந்த கோவில் கற்றளியாக மாறுகிறது. அவள் பத்தாயிரம் கழஞ்சுக்கு மேல் செலவழித்து கருவறை சுவற்றையும், முன் மாடத்தையும் தங்கத்தால் இழைக்கிறாள். வேறு சில இடங்களை செப்புத்தகடால் அலங்கரிக்கிறாள். திருவாரூர் புகழ் பெறுகிறது. அவள் உயரத்திற்கு ஒரு விளக்கு செய்வித்து, அந்த விளக்கை கருவறையில் வைத்து ஏற்றி தியாகேஸ்வரரை ராஜேந்திரன் வணங்குகிறான். அது மட்டுமா பரவையின் பெருமை? இல்லை. ராஜேந்திர சோழனின் மகன் அவர்கள் இருவரின் சிலைகளைச் செய்து திருவாரூர் கோவிலில் ஒரு தனி சன்னதி ஏற்படுத்தி வழிபாட்டிற்குரிய இடமாகச் செய்கிறான். தந்தையின் பட்டமகிஷி அல்ல. மனைவி அல்ல. கூத்தி அல்ல. அனுக்கி. கேர்ள் பிரெண்ட் என்று அழைக்கப்படுகின்ற அந்த பெண்மணிக்கு அத்தனை மரியாதை கிடைத்திருக்கிறது. அத்தனை மரியாதைக்குரிய பெண்ணாக அவள் திகழ்ந்திருக்கிறாள்.

பராந்தகன் காலத்தில் சோழர்கள், பாண்டியர்களை ஜெயிக்கிறார்கள். ஆனால் பாண்டிய மன்னனின் மணி முடியையும், செங்கோலையும் பறிக்க முடியவில்லை. அவை ஈழம் என்கிற ஸ்ரீலங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. அங்கு அடைக்கலமாக வைக்கப்பட்டன. அடுத்து அடுத்து வந்த மன்னர்களும் அதைப் பெற போராடுகிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. ராஜராஜர் முழு முயற்சி செய்கிறார். முடியவில்லை. ஆனால் ராஜராஜரின் மகன் ராஜேந்திர சோழன் ஸ்ரீலங்காவின் மீது படையெடுத்து நாற்புறமும் வளைத்துக்கொண்டு, காடுகளை அழித்து உள்ளே புகுந்து அந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுகிறார். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. கொடுத்துவிடு என்று கேட்டு வாங்குகிறார். அதை கொடுத்த பிறகு ஸ்ரீலங்கா மன்னனின் மணிமுடியையும், அவன் மனைவியின் அழகிய முடியையும் பறித்துக் கொள்கிறார். அவனை கொண்டு வந்து சோழ தேசத்தில் சிறை வைக்கிறார். அவன் உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லை. அவன் சோழ தேசத்திலேயே செத்துப்போகிறான். தமிழருக்கும், சிங்களவருக்கும் உண்டான பகைமை இன்று நேற்றல்ல. அது ஆயிரம் வருஷத்து பகைமை.

கங்கை கொண்ட அந்த ராஜேந்திரன் பட்டமேற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. அதை மிகப்பெரிய விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கின்ற ராஜாராம் கோமகன் என்ற ஒரு பொறியியல் வல்லுனர் பெரிதாகக் கொண்டாடுகிறார். விளக்குகளால் கங்கை கொண்ட சோழபுரத்தை அலங்கரிக்கிறார். இந்த ஜூலை இருபத்திநாலு, இருபத்தைந்து தேதிகளில் கற்றறிந்த பல அறிஞர்கள் கூடுகின்ற விழாவாக பெரும் ஊர்வலமாக ராஜேந்திர சோழனை போற்றும் வண்ணம் நடைபெற இருக்கிறது. பரதகண்டத்திலேயே ராஜேந்திர சோழன் ஒருவன்தான் தடுத்து போர் செய்யாது, மற்றவரை அடித்து அடித்து போர் செய்தவன். கிழக்கே வணிகர்களுக்கு தொந்தரவு இருப்பதால் அங்குள்ள ஸ்ரீவிஜயம், இலங்காசோகம், கடாரம், காம்போஜம் எல்லாவற்றையும் அடித்து பிடுங்கியவன். பெரும் பொருள் கொண்டு வந்து சோழ தேசத்தை நிரப்பியவன். இன்றைய ஜாவா, சுமித்ரா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா எல்லாம் அவனால் தாக்கப்பட்டவை. அங்கிருந்து தோரணங்களும், யானைகளும், பெரும் நிதிக்குவியல்களும் சோழ தேசம் வந்து சேர்ந்தன. அப்படிப்பட்ட ஒரு தமிழ் மன்னனை, தமிழரின் சிற்பத்திறனை உயர்த்தியவனை நாம் கொண்டாட வேண்டும். அவனை வணங்க வேண்டும். தமிழின் சிறப்பை உலகறியச் செய்த அவனை வாழ்த்த வேண்டும். எனவே, ஜூலை இருபத்தி நாலு, இருபத்தைந்து கங்கை கொண்ட சோழபுரம் வாருங்கள். அந்த கோவிலை பாருங்கள். உங்கள் குழந்தைகளை கூட்டிவந்து காட்டுங்கள். தமிழ் மக்களின் பெருமையைச் சொல்லுங்கள். அவசியம் வாருங்கள்.------dinathanthi