Search This Blog

Showing posts with label OLD EVERGREEN TAMIL song MGR. Show all posts
Showing posts with label OLD EVERGREEN TAMIL song MGR. Show all posts

Friday, September 10, 2021

கவிஞர் புலமைப்பித்தன்

 பிரபல கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத்தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.

 
அதிமுக முன்னாள் அவைத்தலைவராக இருந்த கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  புலமைப்பித்தனின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 86.
 
கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர் புலமைப்பித்தன். இவரது இயற்பெயர் ராமசாமி. நுாற்பாலையில் பணிபுரிந்தபடியே தமிழ் புலவர் படிப்பை நிறைவு செய்தார். 1964-இல் திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற, 'நான் யார்' என்ற பாடல் வழியாக திரையுலகில் நுழைந்தார். அடிமைப் பெண் படத்தில் எழுதிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் மூலம், அனைவரின் கவனத்தையும் பெற்றார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய வரலாற்றுப் பின்னணிப் படங்களுக்கு இவர்தான் பாடல்களை எழுதினார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.

அவர் எழுதிய

உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என்ற பாடல் ரொம்பப் பிடித்தது. என்னவோ பாதுகாப்பான உறவுகளும்,உலகமும் ஒரு காலத்தில் இருந்ததைச் சொல்வது போல் இருக்கும்.
அமுதே,தமிழே,அழகிய மொழியே ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல்.அந்தப் பாடலுக்கு வயதாகாது எனத் தோன்றும்.Relevant forever.
எஸ்.வரலஷ்மியின் கம்பீரமான குரலும்,உச்சரிப்பும்,இசை அறிவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அதனாலேயே இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் பாடல் பிடிக்கும்.அந்த வரிகளும் ரொம்பப்பிடித்தவை.
சேலம் பக்கத்தில் ஒரு மலைக் கிராமம்.பல்வேறு கட்டுப்பாடுள்ள ஒரு கிராமத்திற்கு ரவிக்கை அணிந்து நவீனமாய் ஒரு பெண் மணமாகி வருகிறாள்.கிராமத்துக் கணவனோடு அவளால் ஒன்ற முடியவில்லை.அவளுக்கு இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு வருகிறது.இந்தத் தகவல் கணவன் காதுக்கு வந்த பின் அதை ஏற்க மனமில்லாமல் குமைந்து கொண்டு அவலச் சுவையோடு பாடும் உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி. தமிழில் இந்தச் சுவையில் பாடல்கள் இல்லைதான்.
ஒரு பன்னாட்டு மாநாடு. அவ்வப் போது ஒரு மாறுதலுக்கு இடை வேளையில் அவரவர் மொழியில் பாட்டுப் பாடுவோம்.நான் தமிழில் நான்கு வரி.பாடி விட்டு நிறுத்திக் கொண்டேன்.அங்கிருந்த பெண் நீங்கள் தமிழா என ஆங்கிலத்தில் கேட்டார். அவர் தமிழ் வம்சாவளி தென்னாப்பிரிக்கர்.தமிழ் நாட்டிற்கு வந்ததில்லை.தமிழ் பேசவும் தெரியவில்லை.ஆனால் சில பழைய தமிழ் பாடல்களை ஓரளவு பாடிக் காட்டினார்.அதில் ஒன்று இனியவளே என்று பாடி வந்தேன்.இனி அவள்தான் என்று ஆகி விட்டேன்.அதுவும் புலமைப் பித்தன் அவர்களின் பாடல். அப்பாடல் வரிகளை ஆங்கிலத்த்தில் மொழிபெயர்த்துச் சொன்னேன்.
கண்மணியே பேசு எல்லோரையும் போல் எனக்கும் பிடித்த பாடல்.அதில் வரும் அஞ்சுகம் என்ற சொல்லைக் கேட்டு விட்டு அதன் பொருள் கிளி என விளங்கிக் கொண்டேன்.
எல்லாராலும் கொண்டாடப் பட்ட ஆயிரம் நிலவே வா பாடலில் வரும் என் உயிரினிலே உன்னை எழுத பொன் மேனி தாராயோ வரியெல்லாம் ரொம்பவே நகாசு வேலை எனத் தோன்றும்.
எப்படி டி.எம்.எஸ்- சுசீலா,எஸ்.பி.பி - ஜானகிக்கென ஒரு தனி இடம் இருக்கிறதோ அதே போல் வாணி ஜெயராம்-யேசுதாசுக்கும் உண்டு.மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் எம் ஜி ஆரின் கடைசிப் படம்.அதில் வரும் தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன்,அமுதத் தமிழில் எழுதும் பாடல்களைக் கேளுங்கள்.இரண்டும் புலமைப் பித்தன் அவர்களின் வரிகள்.
சமீபத்தில் வெளி வந்த தெறி திரைப்படத்தின் தாய்மை வாழ்கென வரை பல பாடல்கள் பிடிக்கும்.
இன்னுமே நிறைய பாடல்கள் நினைவுக்கு வருகிறது.பதிவின் நீளம் கருதி நீளம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.

Thanks Geetha Narayanan

Saturday, April 30, 2016

Thaaikku Pin Thaaram | Manusana Manusan | மனுஷன மனுஷன்





"ஹேய்"
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;
மானம் பொழியுது பூமி விளையுது தம்பிப் பயலே,
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே;
ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே;
ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே;
இது தகாதுன்னு எடுத்துச் சொல்லியும் புரியலே;
அதாலே;
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;
"ஹோய், ஹ, ஹ், ஹா, கிக், கிக்,"
என்னடா நெளிஞ்சுகிட்டு போற,
நேரா போடா டேய்;
தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு,
தன் குறையை மறந்து மேலே பாக்குது பதரு;
அது போல்,
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டுலே,
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே;
அதாலே;
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;
"ஹ, ஹாய், ஹா, கிக், கிக், பா "
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே,
எதுக்கும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே;
பூனையை புலியாய் எண்ணி விடாதே தம்பிப் பயலே,
உன்னை புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா தம்பிப் பயலே;
"டேய் "
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை..

திரைப்படம் : தாய்க்குப் பின் தாரம்,
பாடல் : அ.மருதகாசி அவர்கள்,
பாடியவர் : டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள்,
இசை : கே.வி.மஹாதேவன் அவர்கள்,
இயக்கம் : எம்.ஏ.திருமுகம் அவர்கள்,
வெளியான ஆண்டு : 1956.

Monday, November 9, 2015

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ NILAVU ORU PENNAAKI...... from Film: Ulagam Sutrum Vaaliban (1973)...


நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீர் அலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு களமாக போர்தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழிவிழுந்த கன்னத்தில் 
தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள்தானோ
பவளமென விரல்நகமும் பசும்தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கிவரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாகா வாய்மொழி தான் மலர்ந்தவளோ
செந்தழலின் ஒளிஎடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த பெண் உடலை என்னவென்பேன்
மடல் வாழை துடை இருக்க மச்சமொன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமையெல்லாம் முழுமைபெற்ற அழகியென்பேன்
நன்றி: வாலி

Tuesday, July 12, 2011

'Kungumapotin Mangalam...' song from 'Kudiyiruntha Koil'

M.G. Ramachandran in Moondru Yezhuthil Yen - Deivathai

M G R KOLGAI PADALGAL

Anggey Siripavargal (Rickshawkaran)

Manusanai Manusan - MGR Songs

Ethanai Kaalam Than - Malai Kallan------

OLD EVERGREEN TAMIL song ------- 14---------MGR

OLD EVERGREEN TAMIL song ------- 10---------MGR

OLD EVERGREEN TAMIL song ------- 9---------MGR

OLD EVERGREEN TAMIL song ------- 13---------MGR