Search This Blog

Showing posts with label Jobs. Show all posts
Showing posts with label Jobs. Show all posts

Monday, July 22, 2019

SLAS பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்....

Thevanesan Vannamani

SLAS பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்.... எனும் தலைப்பில் சகோதரி Emalini Philip இன் பயனுள்ள பதிவினை நன்றியுடன் இங்கு பகிர்கின்றேன்.
நன்றி சகோதரி Emalini Philip (SLAS).
SLAS பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்....
கடந்த வாரம் இப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
முகப்புத்தகத்தைத் திறந்தால் முழுக்க இப்பரீட்சைக்கான விசேட வகுப்புகளுக்கான விளம்பரங்கள்....
இதில் ஒரு சிலர் தங்கள் விளம்பரங்களில் என் பெயரையும் இணைத்து, நான் அவர்கள் வகுப்பில் கற்றுத் தான் நிருவாக சேவைக்குத் தெரிவாகியதாக புரளி கிளப்புகிறார்கள்.
பலர் இது தொடர்பாக என்னிடம் தொலைபேசியில் விசாரித்து விட்டார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால் நான் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றினேன். சிங்கள வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நானே அமைத்துக் கொண்ட பாடதிட்டத்திற்கேற்ப சுயமாக கற்றே பரீட்சையில் தேறினேன். ஆக அந்த என் யுக்திகளையும், பயன் படுத்திய வளங்களையும் இங்கு பகிரப் போகிறேன்.
விடுமுறை நாட்களை முற்று முழுதாக விசேட வகுப்புக்களுக்கு ஒதுக்க நேரம் இல்லாத, ஆயிரக்கணக்கில் தண்ணீராக காசைச் செலவழிக்க வழி இல்லாத, சவால்களை எதிர் கொள்ள விரும்பும் என்னைப் போன்றவர்கள் வாசித்துப் பயன் பெறலாம்.
பயன்படுத்திய மூல வளங்கள்
தாபன விதிக்கோவை 1,11
நிதி ஒழுங்குகள்
ஆணைக்குழுவின் விதிகள் (ps procedure)
செயல்முறைத் தொழில்நுட்பத் திறன்கள் - தரம் 7 முதல்(pts)
வரலாறு- தரம் 6 முதல்
3 மாதங்களுக்குள்ளான பத்திரிகைகள்
நுண்ணறிவு தொடர்பான பழைய இத்துப் போன புத்தகங்கள்
கிரகித்தற் கட்டுரைகள்

பொதுவாக நம்மில் பலர் விடும் தவறு மூல ஏடுகளை ஆதாரமாகக் கொண்டு யாரோ எழுதும் புத்தகங்களையும் வினாவிடைகளையும் அடிப்படையாகக் கொண்டு பரீட்சைகளுக்குத் தயாராகுவதாகும். ஆனால் நான் என்றுமே யாரும் எழுதிய புத்தகங்கள் , வினா விடைகள், மீட்டல் பயிற்சிகள் என்பவற்றைப் பயன்படுத்தவில்லை.
மாறாக மூல ஏடுகளையே (AR,FR,PS pro) வாசித்தேன்.

எதையும் பாடமாக்கவில்லை. நுணுக்கமாக வாசிக்க மட்டுமே செய்தேன். அதுவும் ஒரு தடவையல்ல. கதை போல சொல்லும் அளவுக்கு வாசித்தேன்.
ஏனென்றால் எதையும் பாடமாக்க வேண்டிய அவசியம் இல்லை. கேள்விகள் கட்டமைப்பான விடைகளையே எதிர்பார்த்துக் கேட்கப்படும். தரப்பட்ட இடைவெளிகளிலேயே பதில் எழுதப்பட வேண்டும். ஆக பந்தி பந்தியாக எழுத வேண்டியதில்லை. விடய அறிவே சோதிக்கப்படும்.ஆக நுணுக்கமாக விளங்கி வாசித்தலே போதுமானது.
அடுத்து நுண்ணறிவு தொடர்பாக நான் பயன்படுத்தியது நூலகத்தில் இருந்த பழைய புத்தகங்கள். ஏனென்றால் அவற்றில் தான் ஒவ்வொரு விதமாக பயிற்சிகளையும் அணுகும் முறை பற்றிய விளக்கம் உள்ளது. புதிய புத்தகங்களில் வினா விடை மட்டுமே உள்ளன. செய்முறை விளக்கங்கள், தெளிவாக்கங்கள் இல்லை. ஒவ்வொரு வகைக்கும் குறைந்தது 50 பயிற்சிகள் செய்யுங்கள். (இலக்கம், படம்) மீண்டும் மீண்டும் அதையே திருப்பிச் செய்யுங்கள். வேறு வேறு பயிற்சிகள் மாற்ற வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை அறியாமலேயே மனதில் நுட்பம் பதிந்து விடும். கண்களும் அதற்குப் பழகி விடும். அத்தோடு வேகமும் கூடும்.
அடுத்து கிரகித்தற் பயிற்சிக்காக நிறைய வாசியுங்கள். எளிமையான கட்டுரைகள் தொடங்கி சிக்கலான நீண்ட வாக்கியங்கள் கொண்ட கட்டுரைகள் வரை வேகமாக வாசியுங்கள். வாசிக்கும் போதே ஒவ்வொரு பந்தியின் கரு என்னவென்று அருகில் சிவப்பு மையில் எழுதுங்கள். ஒரே கட்டுரையை பல தடவைகள் வாசித்து நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிக்க முயலுங்கள். கட்டுரைகளை வாசிக்கத் தொடங்க முன்னர் கொடுக்கப்பட்ட கேள்விகளை இரண்டு முறை நன்றாக வாசியுங்கள்.
சாரம்சம் எழுதும் போது தரப்பட்ட பந்தியில் உள்ள வர்ணனைகள், உதாரணங்கள்,புள்ளி விபரங்கள் என்பவற்றைத் தவிர்த்து உங்கள் சொந்த நடையில் எழுதுங்கள். தரப்பட்ட பந்தியையே திருப்பி எழுத வேண்டாம்.
அடுத்து பொது அறிவு...
இந்த வினாத் தாள் மட்டும் தான் நாம் இஷ்டப்பட்ட படி வரையறை இல்லாமல் தரப்பட்ட தலைப்புக்களில் தாராளமாக எழுதக் கூடியது. இது இலங்கை மற்றும் உலக விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக அரசியல், சமய விடயங்கள் கேட்கப்பட மாட்டா. ஆனால் சமூக, சூழல், பொருளாதார விடயங்கள் ஆராயப்படும்.
இதற்காக நான் பயன்படுத்தியது பழைய பத்திரிகைகள் பாடசாலைப் பாடப்புத்தகங்கள். வாசித்தல் மட்டும் போதுமானது.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது புத்துணர்வான மனநிலையில் கற்றல் ஆகும்.
உழைத்துக் களைத்த நேரங்களில் புத்தகங்களைக் கையில் தொட வேண்டாம்.
நன்றாக உறங்கி எழுந்த பின்னர் வயிறு நிறைய சாப்பிட்டு, குளித்து வீட்டில் வேலைகள் எல்லாம் முடித்து,நிம்மதியான மன நிலையுடன், தூய்மையான ,காற்றோட்டமான, வெளிச்சமான இடத்தில் இருந்து விருப்பத்துடனும் தூய்மையான எண்ணத்துடனும் கற்றல் வேண்டும்.
ஒரு நாளைக்கு இவ்வளவு என இலக்கு வைத்துப் படியுங்கள்.
ஊரில் உள்ள எல்லோரும் எழுதிய புத்தகங்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். மற்றவர் படிப்பதை எட்டிப் பார்க்கவும் வேண்டாம். இவை வேண்டாத தலை வலிகள். அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் மனப்பாரம் கூடும்.
நான் கடைப்பிடித்த முறைகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன்.
இதற்கு மேலும் விளக்கங்கள் யாருக்கேனும் தேவைப்பட்டால் என்னை அணுகலாம். மெஸஞ்சரில் அல்ல.
என் மின்னஞ்சல் முகவரி
malialfred1978@gmail.com

Tuesday, July 2, 2019

சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவருக்கு மிக முக்கியமான ஆலோசனை என்ன“?!

பலர் என்னிடம் கேட்கும் கேள்வி „சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவருக்கு நீங்கள் கூறும் மிக முக்கியமான ஆலோசனை என்ன“?!
இந்தக் கேள்விக்கான மறுமொழியை பல வழிகளில் கூறலாம்…
சொந்தமாக தொழில் என்றவுடன் எம் கண்ணுக்கு வருவது ஒரு பலசரக்கு கடை அல்லது வீட்டில் வைத்து செய்யும் ஏதேனும் ஒரு தயாரிப்பு…
ஆனால் இன்றைய உலகில் சொந்த தொழில் என்பது மிகவும் பரந்த பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.
ஒரு நூலில் நான் படித்தது ஆனால் மிகவும் சரி என்று எனக்கு பட்டது, நான் படித்திருந்தது உங்களுக்கு உதவலாம்..
அந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களும் தொழிலின் தோல்வியைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.. இந்த உலகில் மனிதன் தொடங்கும் ஒவ்வொரு தொழிலும் தோல்வியிலேயே முடிகிறது என்று அந்த நூல் சொல்கிறது… எவ்வளவு நாட்கள் கழித்து அந்த தொழில் தோல்வியில் முடிகிறது என்பதே அந்த தொழிலின் வெற்றியாகும்..
சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் அளித்த பேட்டி ஒன்றை நான் காண நேரிட்டது.. அதில் அவர் உறுதியாகச் சொல்கிறார் அமேசான் ஒரு நாளில் தோல்வியில் முடியும் என்று!! இதன் போது என் கண்முன்னே வந்துபோன காட்சி Ceylinco House(Ceylinco Consolidated) நிறுவனமும் அதன் உரிமையாளர் Lalith Kotelawala அவர்களும்தான்.
இதிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் கற்றுக்கொண்ட ஒரு செய்தி என்னவென்றால் நான் செய்யப்போகும் எந்த ஒரு தொழிலும் இறுதியில் தோல்வியில் முடியப்போகிறது. அதை ஏன் மிகப்பெரிய தொழிலாக செய்து என்றோ ஒரு நாள் பெரிய தோல்வியை நோக்கி என் தொழிலை நடத்த கூடாது.….
________________________________________________
ஒரு இடத்தில் சின்ன பெட்டிக்கடை வைக்க முயற்சி/ முடிவு செய்துவிட்டால் ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டும் வைக்காதீர்கள். குறைந்தபட்சம் 5 அல்லது 6 பெட்டிக்கடைகளை ஒரே வரிசையில் வையுங்கள்.. ஒரு பெட்டிக் கடைக்கு தான் விளம்பரம் என்றும் ஒரே இடத்தில் 5 பெட்டிகடைகள் இருந்தால் மக்கள் தன்னை அறியாமல் அந்த இடத்தை நோக்கி நகர்வார்கள். .

எடுத்துக்காட்டாக BBK, BDP, RENO, MobiFlip மற்றும் OPPO ஒரே நிறுவனத்தின்(Oppo Electronics) அலைபேசி..
Lenova, Medion Motorola, BLADE, ShenQi, Quantum மற்றும் Stoneware ஒரே நிறுவனத்தின் தலைமை நிறுவனமாக கொண்டவை.
நீங்கள் WhatsUp பயன்படுத்தினாலும் அல்லது பேஸ்புக்கின் Messangerரை பயன்படுத்தினாலும் நீங்கள் சுற்றி சுற்றி ஒரே நிறுவனத்தின் பொருளையே பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்தப்படுகிறீர்கள்.
_____________________________________________
வேறுபட்ட ஒரு தொழிலை தேர்ந்தெடுங்கள். இந்தத் தொழில் மக்களுக்கு இருக்கும் ஏதேனும் ஒரு சிக்கலைத் தீர்க்க இருக்க வேண்டும்..

அதாவது இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் நீங்கள் காட்டாத வரை மக்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்களுக்கே தெரியாது.
எனவே கூடுமானவரை இதுவரை அங்கு கிடைக்காத பொருளை அங்கு விற்கவே படாத பொருளை விற்க முயற்சி செய்யுங்கள் அது உறுதியாக விற்கும்.. ஏனென்றால் மக்கள் ஏற்கனவே கிடைக்கும் பொருளை பார்த்து வெறுப்படைந்து விட்டார்கள்..
எவ்வளவுதான் இட்லியும் தோசையும் சத்துள்ள உணவு என்றாலும் அதன் மீதும் ஒரு நாள் நமக்கு வெறுப்பை வரவே செய்கிறது
இப்படி மேலைநாடுகளில் அவர்களின் உணவுப் பழக்கத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு புதிதாக உணவு முறைகளை கண்டு பிடிக்கச் செய்தது… அப்படி வந்ததுதான் இந்த Pizza, Burger, Cock, Fanta மற்றும் பல…
_________________________________________
நீங்கள் வலிமை உள்ளவராக மாறுவதற்கான ஒரே வழி அடுத்தவருக்கு உதவி செய்வது மட்டுமே ஆகும்…இதுதான் எனது வளர்ச்சியின் சூத்திரம்!!

உங்களைப் போன்றே தொழில் செய்ய முயலும் உங்கள் பகுதியில் உள்ள சிறு-குறு சேவை வழங்குபவர்களை ஒன்று சேர்க்க முயலுங்கள்…
உதாரணமாக விவசாயம், ஏற்றுமதி தொழிலில் விளங்கும் தொழிலாளர்களை ஒரு செயலி கொண்டு வந்து அதன் மூலம் அவர்களுக்கு அதிகமான தொழிலை பெற உதவுங்கள்..
இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இதுபோன்று ஒவ்வொரு தொழிலும் உங்களால் ஒருங்கிணைக்கப்பட்டு பலரும் பலன்களை பெறலாம்…
________________________

வேலையை அனுபவித்து அதற்கு இலக்கு வைத்து செயல்படுங்கள் என்பதுதான் தொழில்முனைவோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது.
வேலையை ஈடுபாட்டுடன் செயல்பட்டால், பணம் புகழ் என அனைத்தும் கிடைத்துவிடும். ஆனால் பணத்தை இலக்காக கொண்டு செயல்பட தொடங்கினால், நீங்கள் நினைத்த பணம் கிடைத்த பிறகு உங்களுக்கு அந்த தொழில் மீது ஆர்வம், நம்பிக்கை, மரியாதை குறைந்துவிடும்.
புலோலியூரான்/யோகீசன்

Wednesday, November 28, 2018

Job oppertunities in Saudi Aramco

This is to announce that Saudi Aramco - SMP employment Project Management Team (PMT) advise to recruit/ hires Indian nationals in the India to hires around 200 open positions all disciplines as per below requirements:
Engineer – Mechanical, Electrical, Civil, Piping, Control & Instrumentation, Process, Structural, Architectural, Communication, Mechanical + Piping, Rotating Equipment, Construction Specialist, Safety/Field Compliance Officers, Environmental Coordinator, Cost Engineer, Scheduling Engineer, Estimating Engineer, Estimating Engineer, Planning Analyst, Quantity Surveyor, Quality Control and Materials Specialist.
Please take note:
1) Interview location is in Chennai - Velachery at Hotel Westin.
Interview Dates: December 2-6, 2018.

2) Interested candidates should be available for personal interview in India / Chennai during the period as mentioned above.
All positions requires minimum of 15 years' experience for Bachelor's degree holders and having SOLID in Oil, Gas, & Petrochemical Constructions business and professional experiences.
All resumes to be submitted to JATCO should have the following information to be visible on the TOP MOST LEFT:
Name of the candidate :
Position Applied :
Current Location :
Total Years of Experience :
Passport Number :
Saudi Aramco Badge # : (if candidates having Aramco experience)
Looking forward to hearing from you ASAP.
E-mail Address: smpemployee@jatco.com.sa
SUCCESS
Isn't about how much money we make.
It's about the difference we make in people's lives.

Monday, September 24, 2018

Enterprise Sri Lanka program government approved several loans with low interest and no interest


Under Enterprise Srilanka program government approved several loans with low interest and no interest for developing the individual & country.

People can request particular loans from banks for business, self-employment, farming, tourism, fisheries, solar penal installation, graduate loans, high studies,...

Please talk to nearest banks and get loans than getting high-interest loans from finance institutions & banks.

I hope many of our people not aware of this program.

Saturday, July 7, 2018

URGENT Vacancies- please mail me the CV's

 
Multiple positions are available.

Senior Lead
Senior Business Analyst
Senior Software Engineer
QA Engineer
Software Engineer
Account Manager
Business Analyst
service desk engineer
BI Engineer
Associate Technical consultant
Associate system Administrator
Junior Social Media Executive

Saturday, June 3, 2017

East-West Center Master Degree and PhD Fellowship in USA (Fully Funded)

The East-West Center Graduate Degree Fellowship provides master and doctoral funding for graduate students. So, are you planning in pursuing next degree soon? Check out this fellowship application now if you please.
Where: University of Hawai‘i at Mānoa, Hawaii
Nationality: This application are available for applicants from Asia, the Pacific, and the United States only
Award for the scholarship: the scholarship will cover the cost of tuition and fees, books, housing in an East-West Center dormitory, and funding toward meals, health insurance, and incidental expenses.
Applicants from Asia, the Pacific, and the United States
  • Be able to attend a full-time graduate degree in the University
  • Have graduated a four years bachelor program abroad
  • Applicant must have a minimum grade point average of 3.0 (4.0=A scale) 
  • How to apply: you ought to apply for both the University of Hawai‘i and East-West Center. For more information regarding applying, please go to
    Deadline: 1 November 2017
    Click here to go to official website

    Tuesday, June 28, 2016

    Low-cut dresses dramatically boost women's job application chances

    "Wearing a low-cut dress in a job application photograph dramatically increases a woman's chances of receiving an interview, new research has suggested.

    A study due to be unveiled at a world-leading conference starting in London tomorrow (Tuesday June 28) showed female applicants were 19 times more successful in securing job interviews when pictured in revealing clothing rather than more conservative dress.
    The research carried out in Paris found that women stood a much greater chance of earning job interviews for both sales and accounting roles."

    Monday, May 16, 2016

    உங்கள் ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் சிறப்பா இருக்கும் தெரியுமா?

    நட்சத்திரங்களின் நிலைப்பாட்டை வைத்து குறிக்கப்படும் ஒருவரது இராசி நட்சத்திரத்தை வைத்து அவரது வாழ்க்கை, உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் குறித்த தகவல்களை அறிய முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
    மேஷம் :
    மேஷ ராசிக்காரர்கள் இலட்சியம், உறுதி, இயக்க நிலை மற்றும் வெளிப்படையாக பேசுதல் போன்றவற்றில் சிறந்து காணப்படுவார்கள். வெளியிடங்களுக்கு சென்று வருதல், ஆக்டிவாக இருப்பது போன்றவற்றில் துடிப்புடன் இருக்கும் இவர்கள் காவல், ஊடகம் போன்ற துறையில் சிறந்து
    ரிஷபம் :
    ரிஷப ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கும் மனோபாவம் கொண்டுள்ளவர்கள். மேலும் நிலையான வாழ்க்கையை விரும்பும் குணம் கொண்டவர்கள். பொறியியல், கணக்காளர், கணினி சார்ந்த வேலைகள், வழக்கறிஞர், மருத்துவம் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
    மிதுனம்:
    இவர்கள் ஒரே இடத்தில் அன்றாடம் செய்யும் சலிப்பான வேலைகளை செய்வதில் நாட்டம் காண்பிக்கமாட்டார்கள். வெளியிடங்களுக்கு சென்று சுற்றி சுற்றி செய்யும் வேலைகளே இவர்கள் விரும்புவர்கள். டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டட வடிவமைப்பாளர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
    கடகம் :
    கடக ராசிக்காரர்கள் இயற்கையை விரும்பும் நபர்கள். சந்தோசமான சூழலுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள். கால்நடைமருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், மனித வள ஆர்வலர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
    சிம்மம் :
    தலைமை குணம் மற்றும் எளிதாக மற்றவரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். தனியாக எதையும் செய்து முடிக்க முனையும் பக்குவம் கொண்டவர்கள்.
    மற்றவர்கள் இவர்களை ஆள விரும்பமாட்டார்கள். முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுய தொழில், அரசியல் போன்றவற்றில் இவர்கள் சிறந்து செயல்படுவார்கள்.
    கன்னி:
    குழுவாக வேலை செய்ய விரும்பும் நபர்கள் கன்னி ராசிக்காரர்கள். எதையும் கட்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என எண்ணுவார்கள். எழுத்தாளர், ஆசிரியர், கணக்காளர், விமர்சகர், தரவு ஆய்வாளர் போன்ற வேலைகளில் இவர்கள் சிறந்து காணப்படுவார்கள்.
    துலாம்:
    ராசிக்காரர்கள் துடிப்பானவர்கள். மக்களை டீல் செய்வதில் வல்லவர்கள். வாடிக்கையாளர் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு, மேலாண்மை போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
    விருச்சிகம் :
    இவர்களிடம் உள்ளுணர்வு மற்றும் படைப்புத்திறன் அதிகமாக இருக்கும். எதையும் சொந்தமாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மருத்துவம், விஞ்ஞானி, துப்பறியும் துறை, வழக்கறிஞர், ஆராய்ச்சி, ஊடகம் போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாக செயலாற்றுவார்கள்.
    தனுசு :
    தீர்கமான முடிவுகளை எடுப்பதில் தனுசு ராசிக்காரர்கள் சிறந்து செயல்படுவார்கள். நல்ல எண்ணத்தை தன்னை சுற்றி இருக்கும் இடங்களில் பரப்ப செய்வார்கள். மக்கள் தொடர்பு, திரைப்படம் / தொலைக்காட்சி, ஆசிரியர், போன்ற பணிகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
    மகரம் :
    நேரம் கடைபிடிப்பது, பணத்தை சரியாக முதலீடு செய்வது போன்றவற்றில் மகர ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். இவர்களுக்கு ஏற்ற பணிகள், மேலாளர்கள், ஆசிரியர், வங்கி, அரசு வேலைகள், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் போன்றவை ஆகும்.
    கும்பம்:
    புதிய ஐடியாக்களை வெளிப்படுத்துவது, எதிர்கால நோக்கத்துடன் செயல்படுவதில் இவர்கள் வல்லவர்கள். ஒரே வேலையில் ஈடுபட விரும்பமாட்டார்கள். தொழில் புரிவது, கலை, கண்டிபிடிப்பு போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
    மீனம் :
    கற்பனை மற்றும் படைப்பு திறன் கொண்டவர்கள் மீனம் ராசிக்காரர்கள். மக்கள் தொடர்பு சார்ந்த வேலைகளில் சிறந்து செயல்படுவார்கள். உளவியல், மக்கள் மேலாண்மை, கலை போன்றவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்.
    - See more at: http://www.lankatamil.com/3411.html#sthash.8QoxJd15.pd3U1pwQ.dpuf

    Monday, January 11, 2016

    சம்பளம் வாங்கும் அடிமைகளுக்கான அறிகுறிகள்:


    - "என்ன செய்கிறீர்கள்?" என்று யாராவது கேட்டால் உங்களது பதில் வேலை பற்றியதாக இருக்கிறது.
    - ஓய்வு நாட்களிலும் வேலைக்கு செல்லும் அதே நேரத்திற்கு எழுந்திருக்கிறீர்கள்.
    - சுகயீனம் இல்லாத நேரத்திலும் விடுப்பு எடுப்பதில் குற்றவுணர்ச்சியை உணர்கிறீர்கள்.
    - வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் வாழ்வில் முக்கியமான கொண்டாட்டங்களை இழக்கிறீர்கள்.
    - வேலை செய்யுமிடத்தில் நீங்கள் ஓர் அவசியமான ஆள் என்று நம்புகிறீர்கள்.
    - வேலை இல்லாத நேரங்களிலும் உங்களது உரையாடல் வேலை பற்றியே இருக்கின்றது.
    - சக வேலையாட்கள் மட்டுமே உங்களது நண்பர்கள்.
    - வேலையற்ற மக்களை தரக் குறைவாக பார்க்கிறீர்கள். சோம்பேறிகள் மட்டுமே வேலையில்லாமல் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
    - நீங்கள் அதிக நேரம் வேலை செய்வதால் குறைந்த நேரம் செய்பவரை விட சிறந்தவராக தற்பெருமை கொள்கிறீர்கள்.
    - சம்பள உயர்வு கிடைக்கும் முன்னரே எந்த நுகர்வுப் பொருளை வாங்கலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.
    - வேலையில்லாத நாட்களில் சலிப்படைகிறீர்கள். பொழுதுபோக்கு எதுவுமின்றி டிவி பார்க்கிறீர்கள்.