Search This Blog

Showing posts with label General Knowledge. Show all posts
Showing posts with label General Knowledge. Show all posts

Tuesday, January 28, 2020

Human Coronavirus (கொரோனாவைரசு) What you need to know



Thanks, https://www.express.co.uk/
Coronaviruses are a large group of viruses that are common among animals. In rare cases, they are what scientists call zoonotic, meaning they can be transmitted from animals to humans, according to the US Centers for Disease Control and Prevention.























Figure 

Schematic diagram of the SARS coronavirus structure (reproduced from ref. 20).The viral surface proteins (spike, envelope and membrane) are embedded in a lipid bilayer envelope derived from the host cell. Unlike group 2 coronaviruses, SARS-CoV does not possess a hemagglutinin esterase glycoprotein. The single-stranded positive-sense viral RNA is associated with the nucleocapsid protein. 


History

Coronavirus disease was first described in 1931, with the first coronavirus (HCoV-229E) isolated from humans in 1965. Until the outbreak of severe acute respiratory syndrome in late 2002, only two human coronaviruses (HCoV) were known – HCoV-229E and HCoV-OC43. Once the SARS coronavirus (SARS-CoV) had been identified, two further human coronaviruses were identified. Three groups of coronaviruses exist: group 1 (HCoV-229E and HCoV-NL63), group 2 (HCoVOC43 and HCoV-HKU1), group 3 (no human CoVs as yet). SARS-CoV is an outlier to all three groups, although some place it in group 2.

Human Coronavirus Types

Coronaviruses are named for the crown-like spikes on their surface. There are four main sub-groupings of coronaviruses, known as alpha, beta, gamma, and delta.
Human coronaviruses were first identified in the mid-1960s. The seven coronaviruses that can infect people are:

Common human coronaviruses

  1. 229E (alpha coronavirus)
  2. NL63 (alpha coronavirus)
  3. OC43 (beta coronavirus)
  4. HKU1 (beta coronavirus)

Other human coronaviruses

  1. MERS-CoV (the beta coronavirus that causes Middle East Respiratory Syndrome, or MERS)
  2. SARS-CoV (the beta coronavirus that causes a severe acute respiratory syndrome, or SARS)
  3. 2019 Novel Coronavirus (2019-nCoV)
People around the world commonly get infected with human coronaviruses 229E, NL63, OC43, and HKU1.
Sometimes coronaviruses that infect animals can evolve and make people sick and become a new human coronavirus. Three recent examples of this are 2019-nCoV, SARS-CoV, and MERS-CoV.

2019 Novel Coronavirus (2019-nCoV)
On January 9, 2020, the World Health Organization reported that a novel (new) coronavirus was identified by Chinese authorities. The virus is associated with an outbreak of pneumonia in Wuhan City, Hubei Province, China.

SARS-CoV
Severe acute respiratory syndrome coronavirus (SARS-CoV) was first recognized in China in November 2002. It caused a worldwide outbreak in 2002-2003 with 8,098 probable cases including 774 deaths. Since 2004, there have not been any known cases of SARS-CoV infection reported anywhere in the world.

MERS-CoV
Middle East Respiratory Syndrome Coronavirus (MERS-CoV) was first reported in Saudi Arabia in 2012. It has since caused illness in people from dozens of other countries. All cases to date have been linked to countries in or near the Arabian Peninsula. CDC continues to closely monitor MERS globally and work with partners to better understand the risks of this virus, including the source, how it spreads, and how infections might be prevented.

What are the symptoms of the Novel Coronavirus?

The novel coronavirus is a new strain of coronavirus that has not been previously identified in humans but it shares symptoms with known strains.
The most common symptoms shared across the pathogen family include fever, coughing, shortness of breath and breathing problems.
In more severe cases, the symptoms can develop into kidney failure, pneumonia, severe acute respiratory syndrome and even death.
The WHO said: “There is no specific treatment for disease caused by a novel coronavirus.
“However, many of the symptoms can be treated and therefore treatment based on the patient’s clinical condition.”
"COVID-19 can lead to a broad range of neurologic complications including stroke, seizures, movement disorders, inflammatory diseases and more, even in moderate cases, according to a new study published in the December 9, 2020, online issue of Neurology Clinical Practice, an official journal of the American Academy of Neurology.
"We looked at people with neurologic symptoms and COVID at a racially and socioeconomically diverse hospital and found a wide range of neurologic complications—spanning inflammatory complications, stroke and other vascular conditions, metabolic problems, exacerbation of underlying neurologic conditions and more," said study author Pria Anand, M.D. of Boston University School of Medicine in Massachusetts and a member of the American Academy of Neurology. "Yet the majority of these people did not require critical care, suggesting that neurologic complications may be common in people with moderate COVID-19 as well as those with severe disease."

Now, researchers from Cleveland Clinic's Department of Biomedical Engineering note in a recent review that infection with the coronavirus may also affect the central nervous system and cause corresponding neurological disorders, including ischemic stroke, encephalitis, encephalopathy and epileptic seizures."

How to protect yourself


Here are the CDC's and other healthcare experts' suggestions for how to protect yourself from the virus while travelling:
  • Try to avoid contact with people who display symptoms similar to those of pneumonia or the common cold, like coughing or a runny nose.
  • Don't touch your eyes, nose, or mouth with unwashed hands.
  • Wash your hands frequently with soap and water, and scrub for at least 20 seconds.
  • Use alcohol-based hand sanitizer when possible.
  • Avoid animals and animal markets.
The World Health Organisation is set to hold an emergency meeting on Wednesday on whether to declare the outbreak a global health emergency.
 Business Insider.
கொரோனா தீநுண்மி அல்லது கொரோனாவைரசு (Coronaviruse) பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு தீநுண்மி ஆகும், இவை பசுக்கள், பன்றிகளில் வயிற்றுப்போக்கையும், கோழிகளில் மேல் சுவாச நோயையும் உண்டாக்கும். இத்தீநுண்மிகள் மனிதர்களில் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இத்தொற்றுகள் பெரும்பாலும் மிதமானவையாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானவையாக உள்ளன. இந்நோய்க்கான தடுப்பு அல்லது சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது தீநுண்மி தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை.

கொரோனாவைரசுகள் நிடோவைரலசு வரிசையில், கொரோனவிரிடே குடும்பத்தில் ஆர்த்தோகொரோனவிரினே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இவை ஒரு நேர்மறை உணர்வு கொண்ட ஒற்றைத்-தனிமைப்படுத்தப்பட்ட ஆர்.என்.ஏ மரபணு மற்றும் திருகுசுருள் சமச்சீர்மை அதிநுண்ணுயிர் அமைப்பு (நியூக்ளியோகாப்சிட்) கொண்ட உறைசூழ் தீநுண்மிகள் ஆகும். இவற்றின் மரபணு அளவு சுமார் 26 முதல் 32 கிலோபேசுகள் வரை இருக்கும், இது ஆர்.என்.ஏ தீநுண்மி ஒன்றிற்கு மிகப்பெரியதாகும்.

"கொரோனாவைரசு" என்ற பெயர் இலத்தீன் corona, கிரேக்க κορώνη (கொரீனா, "மாலை, மாலை") என்பதிலிருந்து உருவானது, அதாவது கிரீடம் அல்லது ஒளிவட்டம் எனப் பொருள். இது இலத்திரன் நுண்ணோக்கி மூலம் முதிர்ந்த நச்சுயிரிகளின் (தீநுண்மிகளின் தொற்று வடிவம்) சிறப்பியல்புத் தோற்றத்தைக் குறிக்கிறது, இது பெரிய, குழிவான மேற்பரப்பு கணிப்புகளின் விளிம்பைக் கொண்டுள்ளது, இது ஒரு அரச கிரீடம் அல்லது சூரிய கொரோனாவை நினைவூட்டுகிறது.

அனைத்து கொரோனாவைரசுகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பிற்கு பங்களிக்கும் புரதங்கள்
ஸ்பைக் (S), 
உறை (E), 
சவ்வு (M) மற்றும் 
நியூக்ளியோகாப்சிட்  ஆகும்.

கொரோனா வைரசு 1960களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோழிகளில் தொற்று மூச்சுக்குழாய் அழற்சித் தீநுண்மி மற்றும் மனித நோயாளிகளின் நாசிக் குழிகளில் இருந்து பொதுவான சளியைக் கொண்ட இரண்டு தீநுண்மிகள் முதன்முதலாகக் கன்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இவை பின்னர் மனித கொரோனாவைரசு 229E (human coronavirus 229E), மனித கொரோனாவைரசு OC43 என பெயரிடப்பட்டன. இந்த நச்சுயிரிக் குடும்பத்தின் பிற தீநுண்மிகள் 2003 இல் SARS-CoV, 2004 இல் HCoV NL63, 2005 இல் HKU1, 2012 இல் MERS-CoV, 2019 இல் 2019-nCoV உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை கடுமையான சுவாசக்குழாய் தொற்றுநோய்களில் ஈடுபட்டவை ஆகும்.

31 டிசம்பர் 2019 அன்று, உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2019-nCoV என்ற கொரோனாவைரசின் ஒரு புதிய திரிபு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2020 சனவரி 24 இற்குள் 25 இறப்புகள் பதிவாகின, 547 பேர் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. வுகான் தீநுண்மம் 2பி குழுவின் SARS-CoV தீநுண்மியுடன் கிட்டத்தட்ட 70% மரபணு ஒற்றுமையுடன் பீட்டாகொரோனா தீநுண்மியின் புதிய திரிபு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தீநுண்மிகள் பாம்புகளில் இருந்து தோன்றியதாக சந்தேகிக்கப்பட்டது,ஆனால் பல முன்னணி ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு உடன்படவில்லை.

Saturday, May 18, 2019

ராபியா அல் அதாவிய்யா(Rabia Al-Adawiyya) பெண் சூஃபி ஞானி

ராபியா அல் அதாவிய்யா(Rabia Al-Adawiyya) எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் சூஃபி ஞானி.பொது ஆண்டு 714-718 இற்கு இடையில் பிறந்து பொது ஆண்டு 801இல் மறைந்தார் என்கிறார்கள்.
ஒருமுறை ராபியா பஸ்ரா(ஈராக்) நகரின் வீதிகளில் ஒரு கையில் தீயெரியும் பானையுடனும் மறுகையில் நீர் நிறைந்த வாளியுடனும் ஓடிக்கொண்டிருந்தாராம்.
என்ன செய்கிறீர்கள் என்று அவரை பஸ்ராவாசிகள் கேட்டபோது,
நான் நரகத்தின் நெருப்பை அணைக்கவும், சொர்க்கத்தின் இன்பங்களை எரிக்கவும் விரும்புகிறேன்.அவை அல்லாஹ்வுக்கான பாதையை தடைசெய்கின்றன.
நான் நரகத்தின் தண்டனை குறித்த அச்சத்தினாலோ, சொர்க்கத்தின் இன்பங்கள் மீதான ஆசையினாலோ இறைவனை வழிபட விரும்பவில்லை.அல்லாஹ்வின் மீதான அன்பின் மிகுதியாலேயே அவனை வழிபட விரும்புகிறேன் என்றாராம்.
அவர் பிரார்த்தனை இப்படி இருந்தது,
"O Lord, if I worship You because of Fear of Hell,
then burn me in Hell;
If I worship You because I desire Paradise,
then exclude me from Paradise;
But if I worship You for Yourself alone,
then deny me not your Eternal Beauty.
இதை நான் இப்படி எழுதிக்கொள்கிறேன்.
'இறைவா,நான் நரகத்திற்கு அஞ்சி உன்னை வழிபட்டால் என்னை நரக நெருப்பில் இடு
சொர்க்கத்திற்கு ஆசைப்பட்டு வழிபட்டால்
என்னை அதிலிருந்து புறத்தாக்கி விடு
உனக்காக மட்டுமே உன்னை வழிபட்டால் உன் திகட்டாத பேரழகை மறைத்துவிடாதே'
இஸ்லாமிய போதகர் முகமது மறைந்து(பொது ஆண்டு 632) நூறு வருடங்களுக்குள் ராபியா பிறந்துவிட்டார்.
அவர் இஸ்லாத்திலிருந்து தனக்குரியதை உருவாக்கிக்கொண்டார்.
ஆனால் 1400 ஆண்டுகளுக்குப் பின்னரும் சிலர் சொர்க்கத்தின் பொருளை உணராமல் 72 நடமாடும் நித்திய பாலியல் பொருள்களுக்காக தாமும் செத்து மற்றவர்களையும் சாகடிக்கிறார்கள்.


Tuesday, February 26, 2019

Underground cathedral , Monolithic Church of Saint-Jean of Aubeterre Aubeterre-sur-dronne , france.

The lower part of the village the Underground Church of St Jean, also known as the Monolithic church, Eglise Monolithique, or the troglodyte church is outstanding. The church has been carved out of the rock and inside is enormous. The height reaches to 20 meters at its highest - taller than that of St Emillion. Indeed the Monolithic church of Aubeterre sur Dronne is the tallest in the world. (St Emillion's, though not as tall, is the largest in Europe).
The church was hidden for years by a large rock fall and only rediscovered in the 1950s.

Monday, February 25, 2019

குடிமல்லம்" பழமையான "சிவன்" கோயில்

*"குடிமல்லம்" பழமையான "சிவன்" கோயில்.*
எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.
லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.
எனவே அக்காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் (இந்தியாவின் பிற பகுதிகளிலும்) " இக்கோவில் கலை காணப்படுகிறது.
பழமையான சிவலிங்கம் :-
உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் 'ஹரப்பா' வில் உள்ளது.
அதற்கு அடுத்த பழமையான சிவலிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. 'குடிமல்லம்' என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர்.
இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI (Archaeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.

உலகில் சிவலிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவலிங்கம்.
ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம். 

உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும் பழமையான லிங்கங்கள் என்பது

1. ஆந்திரா குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கமும்
2. “பிடா” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள பஞ்சமுக லிங்கம் ஆகும்.
 நாம் முதலில் குடிமல்லம் லிங்கம் பற்றி விரிவாகக் காண்போம்.   ஆந்திர மாநிலத்தில் குடிமல்லம் என்ற ஊரில் உள்ள பரசுராமேசுவரர் கோவிலில் வழிபடப் பெறுகிறது. இவ்வூர் சென்னைக்கு அருகே காளஹஸ்தியிலிருந்து 21 கி.மீ., தொலைவிலும், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு தென் கிழக்கே 11 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சற்று தொலைவில் சுவர்ணமுகி ஆறு ஓடுகிறது.
 
குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் போற்றி பாதுகாக்கப்படுகிறது. `குடி’ என்றால் தெலுங்கில் `கோவில்’ என்பது பொருள். இக்கோவிலை 1903ம் ஆண்டு கல்வெட்டு அறிஞர் வெங்கய்யா ஆய்வு செய்து இதன் சிறப்பினை எடுத்துக் கூறினார். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளின் வரலாற்றுச் சிறப்பினை தொல்பொருள் ஆய்வு அறிஞர் கோபிநாதராவ் எடுத்துரைத்தார்.
 தொன்மைச் சிறப்புமிக்க பரசுராமேசுவரர் கோவில், குடிமல்லம் சிவபெருமானை லிங்க வடிவிலே கண்டு போற்றி வழிபடுகிறோம். மிகவும் தொன்மையான அற்புத வடிவம் கொண்ட சிவலிங்கம், இக்கோவிலில் 1973ம் ஆண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருட்கள், கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்தன. இக்கோவிலின் தொன்மைச் சிறப்பினை ஆய்வாளர் ஐ.கே.சர்மா என்பவர் தமது `சைவ சமய கட்டடக்கலை வளர்ச்சி’ என்ற ஆங்கில நூலில் ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். இனி இக்கோவிலை காண்போம்!
கிழக்கு நோக்கிய திருக்கோவில். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது. தொண்டை நாட்டுப் பகுதிக்கே உரிய தூங்கானை வடிவில் (கஜபிருஷ்டம்) கருவறை அமைந்துள்ளது. கருவறையின் பின்பகுதி வட்டவடிவமாக அமைந்திருக்கும். கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தட்சிணாமூர்த்தி வடிவம் சிறப்பானது. தமது மேலிரு கரங்களில் அட்சமாலையும், கெண்டியையும் தாங்கியிருக்கிறார். இடதுமேற்கரத்தில் கெண்டியைத் (கமண்டலம்) தாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 கோவிலில் நுழைந்து செல்லும்போது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஒன்றுக்கொன்று சற்று பள்ளமாக அமைந்திருப்பதால் `குடிபள்ளம்’ எனவும் இப்பகுதியில் அழைக்கின்றனர். கோவிலில் அம்மன் `ஆனந்தவல்லி’ என்ற பெயருடன் தனிச்சன்னிதியில் அங்குசம் – பாசம், அபய – வரத கரங்களுடன் கருணை பொங்கும் முகப்பொலிவுடன் அருள்மழை பொழிகிறாள். திருச்சுற்றில் பரிவார கோவில்கள் உள்ளன. இவற்றில் வடகிழக்கில் காணப்படும் சூரியன் திருமேனி தொன்மையானதாகும். நுழைவு வாயிலில், மேல் கோபுரம் இல்லாமல் தட்டையாக உள்ளது.
 இக்கோவிலில் 25க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பிற்கால பல்லவ மன்னர்கள், பான அரசர்கள் சோழமன்னர்கள், யாதவராயர்கள் இக்கோவிலைப் போற்றி சிறப்பான வழிபாட்டிற்கு தானமளித்ததைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். கல்வெட்டுகளில் இவ்வூர் திருவிப்பிரம்பேடு பேரம்பேடு என அழைக்கப்படுகிறது.
மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும்.
இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை. ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர்.
அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
*ஓம் சர்வம் சிவார்ப்பணம்*

Tuesday, December 4, 2018

Wireless Warfare How to protect your family


“The greatest act of domestic terrorism in the history of the USA is currently in process and the culprits are the energy, electrical, electronics and wireless radiation industries.”

Steven Magee


Cell Phones & the Wireless Age are causing
major health challenges!

Picture
Most people today carry a cell phone and wouldn't be without one in their day to day businesses. But knowing what the dangers are and what you can do to protect yourself and /or your loved ones can prevent  major illnesses, pain and suffering.
Cell phones are more toxic and more carcinogenic than tobacco. Cell phones emit 3 types of radiation

    - Antenna emits radio frequencies and microwaves
   - Circuitry and battery emits extremely low frequencies
Approximately 20-80% of the radiation from the antennae penetrates up to 2 inches into the brain. Cell phones carried in belts expose other areas of the body to harmful EMF’s. Children are extremely vulnerable- 50% more radiation is absorbed by a 10 year old than an adult due to their thin skulls, smaller heads and developing nervous systems. 

Cell Phone Radiation 

Picture
In Japan, legislation is being introduced to ban their use in restaurants. There are 203 million Americans using cell phones and over 2.13 billion worldwide users – and each year the numbers rise-  it’s the most popular item known to man.

It’s a multi-billion dollar wireless communications industry. Never have we seen a technology grow so rapidly and so profoundly in transforming the global village. By 2010- 90% of the world’s population will have mobile phones and wireless internet.

Cell phones can create microwave like effects on the human body when used in a train or an elevator as in a metal box.   The microwaves bounce off, in around and through the train, like food being cooked in a microwave oven.  You are bombarded with the phone off and worse when the phone is on.

Dr. George Carlo, an epidemiologist, lawyer, chief scientist  who headed the world’s largest research effort into wireless safety, also co-author with journalist Martin Schram of "Cell Phones: Invisible Hazards in the Wireless Age" pointed out 4 major findings in his research:

1. cell phones interfere with pacemakers,
2. developing skulls of children are penetrated deeply by the energy emitted from a cell phone,
3. the blood brain barrier which prevents invasion of the brain by toxins can be compromised by the cell phone radiation, and most startling,
4. radio frequency radiation creates micronuclei in human blood cells, a type of genetic damage known to be a diagnostic marker for cancer.” Found in cell phone users!!

Electromagnetic Pollution

Picture
In totalling all of our modern day exposures - We are exposed to 200,000,000 times more EM fields in our environment today than our ancestors. This is WAY more than our circuits can handle. EMF is classified as a Group 2B carcinogen under standards established by the World Health Organization’s Agency for Cancer Research. The chemicals DDT and lead are also Group 2B carcinogens. ( Source: National Institute for Environmental Health Sciences)

It's become a mounting problem...

EMF's or Electro-Smog is the # 1 Pollutant- They are invisible, silent and  ubiquitous.
In fact, more studies exist showing the adverse effects of EMF's (electromagnetic fields) than there are studies showing risks for cancer by smokers.  In May 2006, the London Observer reported the growing concern about what it called the 'invisible smog' that has been created by the 'electricity that powers our civilization'. 
Scientific evidence showed that this was: 

  • 'giving children cancer
  • causing miscarriages
  • suicides
  • making some people allergic to modern life‘.

Dr. Jack Kruse:·
Radiation from wireless technology affects the blood, the heart, and the autonomic nervous system, your breasts, ovaries and sperm cells. RF/microwave radiation affects your germline and ruins mitochondrial DNA because it ruins calcium/calmodulin second messenger system of signaling in cells. You do not need nuclear DNA or RNA damage to cause widespread organ dysfunction via the IONIZING part of the spectrum of light. Even RF radiation, on the low energy end of the spectrum of light, causes is as the NTP study just laid out.
Exposure to electrosmog generated by electric, electronic, and wireless technology is accelerating to the point that a portion of the population is experiencing adverse reactions when they are exposed. The symptoms of electrohypersensitivity (EHS), best described as rapid aging syndrome, germline disorders, mitochondrial energy deficits that are more prominently experienced by children than adults and resemble symptoms experienced by radar operators in the 1940s to the 1960s and are well described in the literature and in Robert O. Becker and Dr. Andrew Marino's books.

An increasingly common response includes clumping (rouleau formation) of the red blood cells, heart palpitations, pain or pressure in the chest accompanied by anxiety, and an upregulation of the sympathetic nervous system coincident with a downregulation of the parasympathetic nervous system typical of the "fight-or-flight" response. The patient becomes chronically dehydrated because of poor water creation due to poor mitochondrial function and blood sugar and blood pressure rises in these cases to varying degrees. Provocation studies have demonstrated that the response to electrosmog is physiologic and not psychosomatic.
Those who experience prolonged and severe chronic electromagnetic exposure may develop physiologic and psychologic problems as a consequence of their inability to work, become fertile, their limited ability to travel in our highly technologic environment, and the social stigma that their symptoms are imagined rather than real. This is what American communication network is doing to the American public's cells and tissues 24/7 now.
5G will ELEVATE THESE RISKS BECAUSE JUMP CONDUCTION IS A FEATURE OF THE ENGINEERING OF THESE WAVEFORMS BETWEEN 6-90 GHz now live in a city near you. The NTP study release of 11/1/2018 was your last official warning. It is time to protect yourself because no one else is going to do it for you. You will soon see unusual human behavior and sickness all around you that shows acute mitochondrial failure from rather innocuous stimuli. The official word on these reports will be lies and obfuscation to control the narrative and maintain control while the profiteers of the internet of things keep harvesting $$$$ from your wallets as you become even more addicted to what is harming you.
Here is my warning: Never underestimate the ability of others to PURPOSELY hide knowledge about disease etiology beneath a carefully curated façade of the illusion of knowledge called settled science.

Monday, December 3, 2018

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !


1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.
3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.
4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.
5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.
6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )
8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.
12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.
13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.
14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.
16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.
18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.
19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.
20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.
23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.
25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.
26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.
32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
33 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.
34 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
35 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.
36 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

Saturday, November 10, 2018

1970 க்குப் பிறகு 60% மிருகங்கள் அழிந்துள்ளன..!"- அதிர்ச்சித் தரும் WWF அறிக்கை.

சுமார் 50 வருடகாலத்தில் மற்ற நாடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் அழிந்து இந்தியா, சீனா மற்றும் சுற்றியுள்ள சின்னஞ்சிறிய நாடுகளில் மட்டுமே மனிதர்கள் பிழைத்திருக்கும் நிலை வந்தால் என்ன ஒரு பதற்றமும், பயமும் இருக்கும். ஆனால், எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் அதுதான் நமது துணை இனங்களான மிருகங்களுக்குக் கடந்த 50 வருடங்களில் நடந்துள்ளது என்கிறது 2018 க்கான WWF (World Wide Fund for Nature) அமைப்பின் `Living Planet' ஆய்வறிக்கை. அதன்படி 1970-ம் ஆண்டுக்குப் பிறகு முதுகெலும்பு இனங்களில் சுமார் 60% மனித நடவடிக்கைகளாலும், ஆதிக்கத்தாலும் நடந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. இது பாலூட்டிகள், பறவைகள் என அனைத்தையும் உள்ளடக்கியது.
நாம் எந்த அளவு அழுத்தத்தை மிருகங்களுக்கும் இயற்கைக்கும் தந்துள்ளோம் என்பதை நினைவுபடுத்தும் அபாயமணி இது என்பதை அணிந்துரையில் கூறுகிறார் இதன் நிர்வாக இயக்குநர் மார்கோ லம்பர்டினி. மொத்தமாகப் பூமியில் நடந்துள்ள மாற்றத்தைக் கண்காணித்துள்ள இந்த 75 பக்க அறிக்கையைப் பார்வையிட்டதில் முக்கிய அச்சுறுத்தும் தகவல்களை மட்டும் இங்குப் பட்டியலிடுகிறேன்.
நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை சமீபத்தில் உலகம் மாறியுள்ளது, இயற்கை நமக்கு ஏன் தேவை, பல்லுயிர்களைக் காப்பது ஏன் மிகமுக்கியம் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது. தூய்மையான காற்று, நீர் தொடங்கி வணிகவளங்கள் வரை இயற்கைதான் நமக்கு வாழ்வளித்து வருகிறது. வருடம் 125 ட்ரில்லியன் டாலர்கள் வரை இயற்கையின் வழியாக மட்டும் நாம் வருமானம் ஈட்டுகிறோம். உலகமயமாக்கலுக்குப் பின் கடகடவென வளர்ந்துள்ள நாமும், நம் வணிகமும் இயற்கையை அப்படியே மறந்துவிட்டோம். கடைசி பனியுகத்துக்குப் பிறகு சுமார் 11,700 ஆண்டுகளாகச் சமநிலையில் இருக்கிறது பூமி. இது இன்னும் 50,000 ஆண்டுகள் தொடரும் என்பது கணிப்பு. ஆனால் நடந்துவரும் அதிவேக மாற்றங்களால் அவ்வளவு காலம் தொடர வாய்ப்பில்லை. இந்த யுகமே `Anthropocene' என்றுதான் அழைக்கப்படுகிறது. இதற்கு மனிதர்கள் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்திய காலம் என்று பொருள்.
1500 க்குப் பிறகு அழிந்த மிருக இனங்களில் 75% அதிகமானவற்றுக்கு மனித நடவடிக்கைகள்தாம் காரணமாக இருந்துள்ளனவாம். இதில் விவசாயத்துக்காக அழிக்கப்பட்ட காடுகளும் ஒரு முக்கியக் காரணம். இன்றும் வாழ்வினங்களுக்கு அதே வேட்டையாடுதல், அளவுக்கு அதிகமான மீன்பிடித்தல், காடுகளை அழித்தல் போன்ற நடவடிக்கைகள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
நிலச் சீரழிவால் நிலம் சார்ந்த சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இது 300 கோடிக்கும் மேலான மனிதர்களையே நேரடியாகப் பாதிக்கிறது. தற்போது உலகில் வெறும் கால் பங்கு நிலம்தான் மனித பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் இருந்துவருகிறது. 2050-ம் ஆண்டை எட்டும்போது இது பத்தில் ஒரு பங்காகிவிடும். இந்த நிலச் சீரழிவால் மகரந்த சேவை செய்யும் தேனீக்கள், பூச்சிகள் தொடங்கி பெரிய மிருகங்கள் வரை பாதிப்புகளைச் சந்திக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைவது மிகவும் மோசமான நிலையைப் பூமியில் உண்டாக்கும். உலகின் 75% பயிர்கள் இந்த மகரந்தம் இல்லையென்றால் உயிர்பெறமுடியாது. இந்தப் பயிர்களும் மற்ற காய்கனிகளும்தாம் மனிதனின் முக்கிய உணவாக அன்று முதல் இன்றுவரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றம் தொடங்கி நகரமயமாக்கல் வரை நாம்தாம் இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கு பெரிய காரணமாக இருந்துவருகிறோம். இந்த மகரந்த சேவகர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டியது நமது கடமை.
பூமியில் மண்ணில் இருக்கும் வளங்களும் பெரும் அளவில் சுரண்டப்பட்டு வருகின்றன. உலகின் கால்வாசி உயிரினங்கள் நம் காலின் கீழ் தான் இருக்கின்றன. இதில் இருக்கும் நுண்ணுயிர்கள்தாம் மண்ணின் தன்மையை நிர்ணயிக்கின்றன. கிட்டத்தட்ட மனிதர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் மண்ணுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்துகொண்டேதாம் இருக்கின்றன. மண்ணுக்கு மிகவும் ஆபத்தான சூழல் இருக்கும் பரப்புகளில் இந்தியாவும் இடம்பெறுகிறது.
Soil அறிக்கை:
இந்த வருடங்களில் அடுத்த மிகப்பெரிய பாதிப்புகளை கண்டது காடுகள்தாம். இதற்கென்றே `Living Forests' என்ற சிறப்பு ஆய்வறிக்கையை வெளியிடுகிறது WWF. கால்நடை பராமரிப்பு, அதிக அளவிலான வேளாண்மை, காட்டுத்தீ, சுரங்க வேலைகள், நீர் மின் நிலையங்கள், அதிக அளவில் வெட்டப்படும் மரங்கள் ஆகியவைதாம் காடுகளுக்கு முக்கியப் பாதிப்புகளுக்குக் காரணிகளாகப் பார்க்கப்படுகிறது. அதிக அழிவை 2010 தொடங்கி 2030 வரை சந்திக்கவுள்ள இடங்களும் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அமேசான் போன்ற முக்கியக் காடுகள் பெரும் அழிவைச் சந்திக்கின்றன.
Forest அறிக்கை:
நிலம் மட்டுமல்லாமல் நீர்நிலைகளும் மனித பாதிப்புகளிலிருந்து தப்பிக்கவில்லை. பவளப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள்தாம் மிகவும் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன. 20 கோடிக்கும் மேலான மக்கள் பவளப்பாறைகளை நம்பிதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அது அவர்களுக்கே தெரியாது. அவர்களை பெரும் அலைகளிலிருந்தும், புயல்களிலிருந்தும் பாதுகாப்பது அவைதாம். இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் பாதிக்குள் 90% பவளப்பாறைகள் காணாமல் போக வாய்ப்புண்டு. மேலும் வளர்த்துவரும் சாட்டிலைட், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக மீன்பிடித்தல் எந்த அளவு மீன் இனங்களை அழித்துவருகிறது எனவும் தெரியவந்துள்ளது. பிடிக்கப்படும் 1500 மீன் இனங்களில் 10 மட்டும்தான் மீண்டும் பிடிக்கப்படும் எண்ணிக்கையை அடைகிறது. இது மட்டுமல்லாமல் கடல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக்தான். கோடிக்கணக்கான டன்களில் பிளாஸ்டிக் கடல்களில் வருடாவருடம் கொட்டப்படுகிறது. இவை மக்காமல் பல வருடங்கள் கடலிலையே தங்குகின்றன. இவை பலவும் உயிரினங்களின் உணவு சங்கிலிக்குள் நுழைந்துவிடுகின்றன. 90% கடல் பறவைகளின் வயிற்றில் ஏதேனும் பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இந்த நிலை வரும் வருடங்களில் இன்னும் மோசமடையும். கடல் என்றில்லாமல் நல்லநீர் நிலையங்களான நதிகளும், குளங்களும் கூட சமீபத்தில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பாதிப்புகள் அனைத்தும் உயிரினங்கள் அழியக் காரணமாக உள்ளன. முக்கியமாக `Neotropical' என அழைக்கப்படும் தென்அமெரிக்கா கண்டத்தில் கடந்த 50 வருடத்தில் எண்ணிக்கையில் உயிரினங்கள் கிட்டத்தட்ட 90% குறைந்துள்ளன. அடுத்து அதிக எண்ணிக்கை குறைந்துள்ளது இந்தியாவை உள்ளடக்கிய 'Indo-Pacific' பகுதியில்தான்.
இது பானையின் ஒரு சோற்றுப்பருக்கைதான். மேலும் பல பாதிப்புகள் இந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றமும், அழிவும் மனிதம் ஏற்படுத்தியதாகக் கூறுகிறது இவ்வறிக்கை. ஆனால் உண்மையில் மனிதம் என்றில்லாமல் நமது பேராசைகளும் அதைச் சுருண்டும் உலக வணிகமும்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறது ஒரு தரப்பு. அவர்கள் பெரும் வணிக முதலாளிகளிருந்து தான் மாற்றம் தொடங்கவேண்டும் என்கின்றனர். ஆனால் அதற்காக இதில் சாமானியனின் பங்கு இல்லவே இல்லை என்று மறுத்துவிடவும் முடியாது. நாம் தொடங்கிய இதை மாற்றுவதற்கான முயற்சி நம்மிடமும் தொடங்கவேண்டும். 
Source_Vikatan.