Search This Blog

Showing posts with label Essay. Show all posts
Showing posts with label Essay. Show all posts

Monday, November 16, 2015

"குதிரை இல்லாத ராஜகுமாரன்" ராஜாஜி சிறப்பான ஆய்வுரை

ஈழத் தமிழன் தன் இருப்புகளைத் தொலைத்துவிட்டு இருப்பவற்றைக் கட்டிக்காப்பாற்றிக் கொள்ளத் தனக்கென்று ஓர் முகமூடியை அதுவும் அரை விலைக்கு வாங்கி அணிந்துகொண்டு உலகம் முழுக்க அங்கலாய்த்துக் கொண்டு திரியும் காலமிது. நாட்டை இழந்து, மொழியை மறந்து, உறவுகளைப் பிரிந்து இழக்க ஒன்றுமே இல்லாத நிலையில் வெளிநாட்டுத் தமிழர் தாம் வாழ்வை நினைக்காமல் வேரறுந்த விழுதுளாய் வாழத் தொடங்கிய புலம்பெயர் வாழ்வில் குன்றின் விளக்காய்ச் சில மனிதர்கள் .ராஜாஜி அவர்களைப்போல் வாழத்தான் செய்கின்றார்கள்.
.
தன்னைப் பலவீனப் படுத்தியாவது மற்றவர்களின் பலத்தை முன்னுக்குக் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் நண்பர் ராஜாஜி அவர்கள் என்பதனை அவரது எழுத்துகளில் மட்டும் அல்ல நேரடி வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதனைப் பலவடிவங்களில் பலரிடம் வெளிப்படுத்தி இருப்பதைப் பார்த்துள்ளேன். 40 வருட அவரது இலக்கிய வாழ்வில் 4 வருடங்களுக்குக்குறைவாகவே என்னுடன் அறிமுகமாகியவர் இந்த நூலாசிரியர். 
.
தனக்கே உரிய பாணியில் கதைகள் சொல்லுவது ஒரு வகை.. பிறருக்கு உகந்த பாணியில் சொலலுவது இன்னொரு வகை. ஆனால் இரண்டையும் குழைத்து இன்றைய உலகிற்கு ஏற்ற பாணியில் சொல்லி இருப்பது அனைத்தும் அவரது 7ம் அறிவியல் சார்ந்த அனுபவ உண்மைகள் ஆகும். . 
.
.மனம் திறத்தல், மனம் திருப்புதல் என்ற உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் அவரது ஆழ்மனது அவரிடமே தமிழ்ப் பிச்சைகேட்டுக் கேட்டு இந்த இராஜ குமாரனை வெளிக் கொண்டு வந்திருதுக்கின்றது. இவர் கடன்பட்டது தமிழிடம் என்றால் அந்தமொழி இவரிடம் தன்னை அழகு படுத்தியது இந்தச் சிறுகதைத் தொகுப்பில்தான். 
.
.மானுட மனத்தின் மற்றடற்ற விருப்புக்களைக் கட்டற்ற தேவைக்குள் ஈர்த்துககொண்ட நடைமுறைச் சமுதாயத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நுணுக்கமுறக் கண்டறிந்து ஆக்கமுற்று ஆர்ப்பரிக்கின்றது இந்த முத்து. காலத்தை இவர் எழுதி வரலாற்றை வாழவைபதைப்போலவே வரலாறும் தன் காலத்தில் இவரது எழுத்துக்களை நிட்சயமாக வாழவைக்கும். 
.
கடல் கடந்தான் தமிழன், கற்பூர தீபம் கண்டான் .இறைவன் என்பதுபோல விட்டகுறையையும், தொட்ட குறையையும் தொடர்ந்து தாம் வாழும் நாட்டில் கட்டிக்காப்பவர்கள் தமிழர்கள். அந்த வகையில் ஈழத்தில் விட்ட எழுத்தின் குறையைத் தான் வாழும் கனடிய நாட்டில் தொடரந்து செய்பவர். அப்பால் விடுபட்டுப்போன எழுத்து வடிவங்களையும், பேச்சு வடிவங்களையும் நடைமுறையில் அமைத்துக் காட்டி வாசிப்பவர்களை ஈழத்தின் அந்தந்த இடங்களில் உட்காரவைத்து விருந்து படைத்திருக்கும் இந்த எழுத்தாளன் பழமை பேணுவதற்குள் சென்று புதுமைகளை மெதுமையாகக் காதலி காதிற்குள் சொல்லும் இரகசியம்போல் இனிப்பாக்கியுள்ளார். அதனால் நூலைத் திறந்ததும் மூடமனமின்றி விரித்தபடி வைத்துவிட்டு, வந்துவந்து பார்த்தபடி வாசித்தும் பழக்கப்பட்டவன் நான். 
.
எதிரிகள் விடும் அம்புகளுக்காய் இவரும் எதிர்த்து அம்புகள் செய்வதில்லை. மாறாகக் கேடையங்களைச் செய்து தன்னையும் பாதுகாத்து எதிரிகள் இருந்தால் அவர்களையும் இன்முகம் காட்டி நண்ராக்குவதே இவரது பெருங்குணம். உள்ளங்களைக் கவர்ந்து நண்பர்களையும் , கலை, இலக்கிய அன்பர்களையும் தன்சிறையில் எப்பவும் பத்திமாக வைத்திருப்பவர். 
.
.இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறுகதைகளும் உலகியல் வாழவின் வழுமியங்களோடு தங்களை இணைத்துக்கொண்டு தடங்கலற்றுச் செல்கின்றன. கிராமம், சமூகம், உறவுகள் தத்துவங்கள் எனச் சமூக அங்கங்களைக் கிளைபிரித்துக் காடட்டி ஒவ்வொரு கிளைக்கும் மகுடம்சூட்டி மக்களை இனம்காண வைத்துள்ளார் இந்த எழுத்தாளர். 
.
.காதல் இரசனையை வள்ளுவர் அனிச்சத்திற்கு ஒப்பிட்டார். ஆனால் இந்த எழுத்தாளர் அதைவிட மென்மையாகப பல இடங்களி;ல பல பக்கங்களை எம்மைத் தன்னுடன் நகர்த்தியுள்ளார். தையல்போட நூல் கிடைக்காத வறுமையின் அடிமட்டத்தில் தன் கிழிந்த பாவாடைக்கு முடிச்சுப் போட்டுக் கிலுட்டு மூக்குத்தியைக் கடற்கரையில் தொலைத்துக் காதல் கொண்டவர்கள் இன்றும் அந்த மணணில் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றார்கள். 
.
.அடுப்படி ருசியும், அரிசிப்பல் சிரிப்பும் காட்டிக் காப்புக்கைச் சாப்பாடும், சங்கத் தமிழ் சொன்ன களவியற் பண்பிற்குச் சற்றும் மாறாது அகத்திணை ஒழுக்கங்களை அள்ளி வீசும் ஆற்றலை எழுதுவதில் இவரிடம் தோற்றவர்கள் ஏராளம். தன் முகவுரையில் காதலையும், செக்சையும் அள்ளி மெழுகிகிருப்பதாகப் பலர் பேசக்கூடும் என்று எழுதியிருக்கின்றார். என்னைப் பொறுத்த வரையில் அது சலனம் இன்றியே கதைகளில் பயணிக்கின்றன என்பதுவே உண்மையாகிறது. 
.
தன் அனுபவங்களைப் பெரிசுபடுத்திக் கொள்ளாமல் "குதிரை இல்லாத ராஜகுமாரன்" என்ற சிறுகதையில் ஒரு தலைமைப் பாத்திரத்தை அவன் என்று அழைக்கின்றார். இந்த அவன் யாராகஇருக்கும் என்று யோசித்துப் பாரத்தேன். அது இவராகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு......அதில் வரும் அவன் புகையிரதம் வெளிக்கிட்டதும் ஓடி வந்து ஏறுகிறான் என்று குறிப்பிட்டிருப்பார். அந்தக்காலத்தில் கொழும்பில் அப்படிப் பிசியாக இருந்தவர் இவராகத்தான் இருக்க முடியும். இதன் காரணங்கள் இவர்தான் அந்த ராஜகுமாரனோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. இன்னொரு கதையில் வரும் இவன் என்பதுவும் அவர்தானோ? 
.
.இந் நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கதைகளில் இருந்தும் சிலவற்றை உதாரணமாகக் கூறிக் காட்டுவது மற்றைய கதைகளின் தரத்தைக் குறைத்துவிடும் என்று வாசகர்கள் எண்ணிவிடலாம் என்பதற்காக முழு நூலின் பண்பையும் எனதுபோக்கில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். 
.
கங்கைமகன் என்பது ஒரு பல்கலைக் கழகமாக இருந்தால் ஒவ்வொரு கதைக்கும ஒவ்வொரு முனைவர் பட்டத்தைப் பெறும் தகுதியைத் திரு ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் பெற்றிருப்பார் என்பது வெள்ளிடை மலையாய் நிமிர்ந்து நிற்கின்றது. ஒரு மனிதனின் ஆக்கம் ஒருவனை மனிதன் ஆக்கும் என்ற எனது கருத்துப்படி இவரது கதைகள் பலரை மனிதர்கள் ஆக்கும் என்பதுவே எனது எண்ணமாகும். 
.
.இது எனது முடிந்த அளவிலான ஆய்வே தவிர முழுமையான ஆய்வு அல்ல என்பதனை எனது கருத்தாகவைத்து இவர் மேலும் பல நூல்களை வெளியிட்டுத் தரணியில் தனியிடம் பெறவேண்டும் என்பதுவே என் பேரவாவாகும். 
.
அன்புடன்
கங்கைமகன்

Saturday, November 14, 2015

ப. சிங்காரம்

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், திருபத்தூர் வட்டம், சிங்கம்புணரி என்னும் கிராமத்தில் நாடார் பேட்டையில் 1920_ஆம் ஆண்டு ஆகஸ்டு 12_ஆம் தேதி ப. சிங்காரம் பிறந்தார். தந்தை மூக்க நாடார் என்ற கு. பழநிவேல் நாடார் ; தாயார் பெயர் உண்ணாமலை அம்மாள். இவர்களுக்கு சிங்காரம் மூன்றாவது மகன். அப்போது, சிங்காரத்தின் தந்தை, அண்ணன்கள் ப. சுப்பிரமணியம், ப. பாஸ்கரன் மற்றும் அவரது தாத்தா ப. குமாரசாமி நாடார் ஆகியோர் சேர்ந்து சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.
சிங்காரம், சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், பின்னர் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பும் பயின்றார். 1938_ஆம் ஆண்டு செ.கா. சின்னமுத்துப்பிள்ளை என்கிற சிங்கம்புணரிக்காரர் இந்தோனேஷியாவில் மைடான் என்ற இடத்தில் நடத்தி வந்த வட்டிக் கடையில் வேலை செய்வதற்காக கப்பலில் சென்றார். 1940_ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பின்னர் மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கு மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். இச்சமயத்தில் தென்கிழக்காசிய யுத்தம் மூண்டது. யுத்தம் முடிந்ததும் இந்தோனேஷிய இராணுவ அரசின் அனுமதி பெற்று, பினாங்குக்குக் கப்பலில் சரக்குகள் அனுப்பும் வர்த்தகத்தைச் சில தமிழர்களுடன் சேர்ந்து செய்தார்.
யுத்த காலத்தில் இந்தோனேஷியாவை ஜப்பான் துருப்புகள் கைப்பற்றியபோது அங்கிருந்த நூலகம் சூறையாடப்பட்டு, புத்தகங்கள் தெருவில் வாரிக் கொட்டப்பட்டிருக்கின்றன. இச்சந்தர்பத்தில் நூலகத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவர் மூலம் சிங்காரத்துக்கு பல ஆங்கில நூல்கள் கிடைத்தன. அப்போது, குறிப்பாக ஆங்கில நாவல் வாசிப்பு சிங்காரத்துக்கு ஏற்பட்டது. அவரை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் ஹெமிங்வே.
இந்தானேஷியாவில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். தலைப்பிரசவத்தின் போது அவரது மனைவியும் பிறந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டனர்.
1946_ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பிய சிங்காரம் பின்னர் மீண்டும் இந்தோனேஷியா செல்ல திட்டமிட்டார். ஆனால் கடைசிவரை அங்கு செல்லாமல் மதுரையிலேயே தங்கிவிட்டார். 1947_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மதுரைச் செய்திப் பிரிவில் சேர்ந்தார். சொந்த ஊருக்கும், நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் செல்வதை தவிர்த்து மதுரை ஒய்.எம்.சி.ஏ.வில் தனியாக தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். 1987_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 1997_ஆம் ஆண்டு ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் அவரை நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியது. பிறகு மதுரை, விளக்குத்தூண் அருகிலுள்ள நாடார் மேன்சனில் வாடகை அறையெடுத்து தங்கியிருந்தார். கடைசி காலத்தில் அவரது வாழ்நாள் சேமிப்பான ரூபாய் ஏழு லட்சத்தை, மதுரை நாடார் மகாஜன சங்கம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகைத் திட்டத்திற்காக வழங்கினார். அப்போது தனது பெயரில் அறக்கட்டளை, புகைப்படம் திறப்பு போன்றன வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டாராம்.
நாடார் மேன்சனில் வாழ்ந்த கடைசி மூன்று மாதங்களிலும்கூட, எல்லோருடனும் சுமுகமாகப் பழகியபோதும், யாருக்கும் தொல்லை தரக்கூடாது என்று ஒதுங்கியே இருந்தார். சொந்த வாழ்க்கை பற்றியோ அந்தரங்க விஷயங்களையோ எப்போதும் அவர் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. இப்படி அவராக விரும்பி, தனியாக ஒதுங்கி வாழ்ந்ததற்கு, 25_வது வயதில் அவரது இளம் மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டது, வாழ்க்கைப் பற்றிய அவநம்பிக்கை-யையும் இறுக்கத்தையும் அவரிடம் ஏற்படுத்திவிட்டது-தான் காரணம் என்று கூறப்படுகிறது.
எழுத்துலகத்திலிருந்தும் குறிப்பாக நூல்களை பதிப்பிப்பதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகத் தொடர்ந்து எழுதாமல் ஒதுங்கிக் கொண்டார். 1950_ஆம் ஆண்டு ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினார். புலம் பெயர்ந்து அந்நியச் சூழலில் வாழும் தமிழர்கள் வாழ்வை களனாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இது. இதைப் பிரசுரம் செய்ய மதுரைக்கும் சென்னைக்குமாக பல தடவைகள் அலைந்தார். பின்னர் ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினார், திரும்பி வந்தது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1959_ஆம் ஆண்டு கலைமகள் நாவல் போட்டியில் ‘கடலுக்கு அப்பால்’ முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. 1962_ஆம் ஆண்டு ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அது பத்து ஆண்டுகளாக பல பிரசுரகர்த்தர்களின் கைமாறி, கடைசியில் மலர் மன்னன் (‘1/4’ இதழை நடத்தியவர்) எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக 1972_ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தால் பெரியதாகயிருக்கிறது என்கிற காரணம் சொல்லி எடிட் செய்யப்பட்டு, வெளியானது. ‘‘அதிகாரம், செல்வாக்கு, நட்பு, அரசியல் போன்ற பல குறிக்கீடுகளால் படைப்பு தீர்மானிக்கப்-படும் தமிழ்ச் சூழலில், எழுத்தாளனுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று ஒதுங்கியிருந்த சிங்காரம் பல காலமாகச் சற்றும் பொருட்படுத்தப்படாமல் அசட்டையாக ஒதுக்கப்பட்டிருந்தது ஆச்சர்யமில்லை’’ என்கிறார் விமர்சகரான சி. மோகன். ‘புதுயுகம் பிறக்கிறது’ பத்திரிகையில் வெளியான நாவல் பற்றிய கட்டுரையில் தொடங்கி தமிழ்ச் சூழலில் ப. சிங்காரத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் சி. மோகன் மட்டும்தான். சிங்காரத்தின் மறைவுக்குப் பின்னர் 1999_ஆம் ஆண்டு தமிழினி பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ இரண்டு நாவல்களையும், எடிட் செய்யப்படாத மூலப் பிரதியை தேடியெடுத்துப் பதிப்பித்தது.
ப. சிங்காரம், வாழ்வின் கடைசி 2 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 1997_ஆம் ஆண்டு டிசம்பர் 30_ஆம் நாள் விடாத வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மதுரை, கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே மருத்துவமனையிலிருந்து ஸ்கேன் எடுப்பதற்காக வெளியே சென்ற வழியில் ஆம்புலன்ஸிலேயே அவர் உயிர் பிரிந்தது. மதுரைக்கு அருகில் தத்தநேரி சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

Friday, October 23, 2015

Writing an Editorial

CHARACTERISTICS OF EDITORIAL WRITING

An editorial is an article that presents the newspaper's opinion on an issue. It reflects the majority vote of the editorial board, the governing body of the newspaper made up of editors and business managers. It is usually unsigned. Much in the same manner of a lawyer, editorial writers build on an argument and try to persuade readers to think the same way they do. Editorials are meant to influence public opinion, promote critical thinking, and sometimes cause people to take action on an issue. In essence, an editorial is an opinionated news story.
Editorials have:

1. Introduction, body and conclusion like other news stories
2. An objective explanation of the issue, especially complex issues
3. A timely news angle
4. Opinions from the opposing viewpoint that refute directly the same issues the writer addresses
5. The opinions of the writer delivered in a professional manner. Good editorials engage issues, not personalities and refrain from name-calling or other petty tactics of persuasion.
6. Alternative solutions to the problem or issue being criticized. Anyone can gripe about a problem, but a good editorial should take a pro-active approach to making the situation better by using constructive criticism and giving solutions.
7. A solid and concise conclusion that powerfully summarizes the writer's opinion. Give it some punch.
Four Types of Editorials Will:

1. Explain or interpret: Editors often use these editorials to explain the way the newspaper covered a sensitive or controversial subject. School newspapers may explain new school rules or a particular student-body effort like a food drive.
2. Criticize: These editorials constructively criticize actions, decisions or situations while providing solutions to the problem identified. Immediate purpose is to get readers to see the problem, not the solution.
3. Persuade: Editorials of persuasion aim to immediately see the solution, not the problem. From the first paragraph, readers will be encouraged to take a specific, positive action. Political endorsements are good examples of editorials of persuasion.
4. Praise: These editorials commend people and organizations for something done well. They are not as common as the other three.
Writing an Editorial

1. Pick a significant topic that has a current news angle and would interest readers.
2. Collect information and facts; include objective reporting; do research
3. State your opinion briefly in the fashion of a thesis statement
4. Explain the issue objectively as a reporter would and tell why this situation is important
5. Give opposing viewpoint first with its quotations and facts
6. Refute (reject) the other side and develop your case using facts, details, figures, quotations. Pick apart the other side's logic.
7. Concede a point of the opposition — they must have some good points you can acknowledge that would make you look rational.
8. Repeat key phrases to reinforce an idea into the reader's minds.
9. Give a realistic solution(s) to the problem that goes beyond common knowledge. Encourage critical thinking and pro-active reaction.
10. Wrap it up in a concluding punch that restates your opening remark (thesis statement).
11. Keep it to 500 words; make every work count; never use "I"
A Sample Structure

I. Lead with an Objective Explanation of the Issue/Controversy.

Include the five W's and the H. (Members of Congress, in effort to reduce the budget, are looking to cut funding from public television. Hearings were held …)
  • Pull in facts and quotations from the sources which are relevant.
  • Additional research may be necessary.
II. Present Your Opposition First. 

As the writer you disagree with these viewpoints. Identify the people (specifically who oppose you. (Republicans feel that these cuts are necessary; other cable stations can pick them; only the rich watch public television.)
  • Use facts and quotations to state objectively their opinions.
  • Give a strong position of the opposition. You gain nothing in refuting a weak position.

III. Directly Refute The Opposition's Beliefs.
You can begin your article with transition. (Republicans believe public televison is a "sandbox for the rich." However, statistics show most people who watch public television make less than $40,000 per year.)
  • Pull in other facts and quotations from people who support your position.
  • Concede a valid point of the opposition which will make you appear rational, one who has considered all the options (fiscal times are tough, and we can cut some of the funding for the arts; however, …).
IV. Give Other, Original Reasons/Analogies
In defense of your position, give reasons from strong to strongest order. (Taking money away from public television is robbing children of their education …)
  • Use a literary or cultural allusion that lends to your credibility and perceived intelligence (We should render unto Caesar that which belongs to him …)
V. Conclude With Some Punch.
Give solutions to the problem or challenge the reader to be informed. (Congress should look to where real wastes exist — perhaps in defense and entitlements — to find ways to save money. Digging into public television's pocket hurts us all.)
  • A quotation can be effective, especially if from a respected source
  • A rhetorical question can be an effective concluder as well (If the government doesn't defend the interests of children, who will?)
Go to the library or any computer lab and complete the “webquest” located at

http://library.thinkquest.org/50084/index.shtml
http://library.thinkquest.org/50084/editorials/index.html

Another Tutorial by:Alan Weintraut
Annandale High School
Annandale, VA 22312
Atraut@aol.com

Wednesday, September 30, 2015

வீட்டின் சிறகுகள் -எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்
மு.சுயம்புலிங்கம்
பூனைகளைபோல வெயில், யாருமற்ற வீடுகளில் ஏறியிறங்கி விளையாடும் கிராமங்களைத் தொடர்ந்து ஒவ்வொரு பயணத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். suyambuசுபாவத்தில், உடையில், பேச்சில் பழக்கவழக்கங்களில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக நாமே கவனமாகத் துடைத்து எறிந்துவிட்டு அடையாளமற்ற மனிதர்களாக வாழ்வதற்குப் பழகிவிட்டோம். 
சப்தமாகச் சிரிப்பதற்கும் வாய்விட்டு அழுவதற்கும்கூடக் கூச்சமாக இருக்கிறது. அடுத்தவர்கள் கவனிக்கிறார்களா என்று பார்த்துப் பார்த்துதான் உணவகங்களில் சாப்பிட வேண்டியிருக்கிறது. நண்பனின் தோளில் கைபோட்டுக் கொள்வது அநாகரிகமாகிவிட்டது. மூத்திரம் பெய்வதற்குக்கூட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எப்படியோ ஏதேதோ நகரங்களில் வேலைகள் செய்து குழந்தைகள் பெற்றுப் பிழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்று தெரியவில்லை.
கிராமம் உலர்ந்த நத்தைக்கூட்டைப் போல உயிர்ப்பற்றுப் போய்விட்டிருக் கிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் சாலைகளும் தெருவிளக்கு களும் வந்துவிட்டன. ஆனால், அமைதியும் பரஸ்பர அன்பும் வெளியேறிப்போய்விட்டன. ஊரைப் பிரிந்து வராமல் நாய்கள் மட்டுமே தெருவில் குழி பறித்துப் படுத்துக்கிடக்கின்றன. ஆனால், அவை குரைப்பதை நிறுத்திப் பல வருடங்களாகிவிட்டன. யாரைக் கண்டு குரைப்பது? சுபாவம் திரிந்து போனது ஊரும் மனிதர்களும் மட்டுமல்ல... இயற்கையும்தான்! 
தீபாவளிக்கு முதல்நாள் இரவு ஒரு ஆட்டோவில் ராயபுரத்திலிருந்து வந்து கொண்டிருந்தேன். டிரைவரைப் பார்த்ததுமே தெற்கிலிருந்து வந்தவர் என்று தெரிந்தது. எந்த ஊர் என்று விசாரித்தேன். கடம்பூர் என்றார். நட்பான குரலில் பேசியபடியே வந்து கொண்டிருந்தபோது, ‘சார் வழியிலே அஞ்சு நிமிஷம் ஒரு கடையில நிறுத் திட்டுப் போயிடலாமா?’ என்று கேட்டார். சரி என்றேன்.
ஆட்டோ, பிராட்வேயின் சந்துகளுக் குள் புகுந்து சௌகார்பேட்டையில் உள்ள ஒரு கடையில் நின்றது. மரப் படிகள் கொண்ட கட்டடம் அது. இருவருமாக படிகளில் ஏறிப்போனோம். மங்கிய லைட் எரிந்து கொண்டிருந்தது. உள்ளே வயதானவர் ஒருவர் பைஜாமா ஜிப்பா அணிந்து, பார்ப்பதற்கு குஜராத்தியைப்போல் இருந்தார். ஆட்டோ ஓட்டுநர் தன்னுடைய கையிலிருந்த சிறிய மஞ்சள் பையிலிருந்து ஊதா நிறத்திலிருந்த ஒரு பட்டுப்புடவையையும் துவைத்து மடித்திருந்த பட்டு வேஷ்டி ஒன்றையும் எடுத்து அவரிடம் நீட்டினார். ஏதோ அசூயையான பொருளைத் தொடுவது போன்ற முகபாவத்துடன் அந்தப் பொருள்களை மேஜையில் வைக்கச் சொல்லிவிட்டு வயதானவர் தனது கண்ணாடியை அணிந்து கொண்டார். புடவையின் கரையைப் பிரித்துப் புரட்டிவிட்டு அதிலிருந்து ஒரு நூலை உருவிப் பார்த்தார். மேஜையிலிருந்த பட்டு வேஷ்டி சரிந்து கீழே விழவே, டிரைவர் அவசரமாக எடுத்து மடித்தார். வேஷ்டியில் வெற்றிலைக் கறை படிந்து அழியாமல் இருந்தது.
எவ்விதமான உணர்ச்சியுமின்றி வயதானவர் மேஜை டிராயரிலிருந்து ஐந்நூறு ரூபாய் எடுத்து நீட்டினார். டிரைவர் சற்றே தயக்கத்துடன் ‘ஒரிஜினல் காஞ்சிபுரம் பட்டு... விலை நாலாயிரம். வேஷ்டி வேறு இருக்கு, பார்த்துக் கொடுங்க’ என்றார். கொச்சை யான தமிழில் குஜராத்திக்காரர் ‘இந்த வேஷ்டி சரியில்லை. கறையிருக்கு. அதுக்கு 50 ரூபாய் தான் தரமுடியும். நாங்க சேலை பார்டரை மட்டும்தான் கட் பண்ணி விக்கமுடியும். அதுக்கு மேலே பணம் தர முடியாது’ என்றார். பேரம் நீண்டு கொண்டே போய் முடிவில் எண்ணூறு ரூபாய் கிடைத்தது.
ஆட்டோ கடற்கரைசாலையில் வந்துகொண்டிருந்த போது, டிரைவர் தானாகவே சொன் னார்... ”நல்ல நாளுக்குத் துணி எடுக்க கையில் காசில்லை சார். வீட்ல மூணுபிள்ளைக இருக்கு. அவளுக்கு வேற சேலை எடுக்கணும். எங்க கல்யாணத்துக்கு எடுத்த பட்டுத்துணி... அதை வெச்சிருந்து என்ன செய்யப் போறேன். அதான் வித்துட்டேன். இப்பவே மணி பத்தாச்சு. உங்களை இறக்கி விட்டுட்டுத் திரும்பி வரும்போது பாண்டிபஜார்ல ஏதாவது புதுத்துணி வாங்கிட்டு வீட்டுக்கு போகணும் சார்.”
என்னால் பதில் பேச முடியவில்லை. ஆட்டோ இருண்ட சாலைகளில் ஓடிக் கொண்டிருந்தது. டிரைவர் பேசிக்கொண்டே இருந்தார். ”ஊர்ல வீடு, நிலம் எல்லாம் இருந்துச்சு சார். விவசாயம் பண்றதுக்கு லோன் போட்டோம். மழையில்லை. விளைஞ்சதுக்கு விலையில்லை. லோனைக் கட்ட முடியலை. பேங்க்காரன் கழுத்தைப் பிடிச்சான். எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு ராத்திரியோட ராத்திரியா கள்ளப்பயக மாதிரி தூங்குற பிள்ளைகளைத் தோள்ல தூக்கிப்போட்டுக் கிட்டு ரயிலேறி வந்துட்டோம். பிழைக்கணுமில்லையா...ஆட்டோ ஓட்டப் பழகிட்டேன்.”
வெடிச் சப்தங்கள் வழியெங்கும் கேட்டுக் கொண்டிருந்தன. சாலையில் எரிந்துகொண்டு இருக்கும் நியான் விளக்குகளின் வெளிச்சத்தையும் வழியெங்கும் மின்னும் விளம்பரப் பலகைகளின் வசீகரத்தையும் தாண்டி, கண்ணுக்குப் புலப் படாத இருள் ஊரெங்கும் வழிந்துகொண்டு இருக்கிறது. டிரைவர் மௌனமாகிவிட்டார். 
வீட்டின் முன்னால் ஆட்டோ வந்து திரும்பி நின்றது. அருகிலிருந்த மைதானத்திலிருந்து வெடித்த வாணவெடி ஒன்று ஆகாசத்தில் ஏழு நிறங்களில் ஒளித் துகள்களை வாரியிறைத்தது. குழந்தையைப்போல அதை வியப்போடு பார்த்தார் டிரைவர். எனக்குத்தான் வழியில் நடந்ததை நினைத்து நடுக்கமாக இருந்தது. அன்றிரவெல்லாம் குற்ற உணர்ச்சி ஒரு கம்பளிப்பூச்சியைப்போல உடம்பு முழுவதும் படர்ந்துகொண்டிருந்தது.
ஒவ்வொரு இரவும் ஏதோவொரு குடும்பம் ஊரைக் காலி செய்து மாநகரம் நோக்கி வந்து கொண்டுதானிருக்கிறது. இப்படி வந்தவர்களில் ஊர் திரும்பிப்போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? முதுகில் உள்ள மச்சத்தைப் போல, சொந்த ஊர் இனி அவர்களால் பார்க்கவே முடியாமல் போய்விடுமா? யோசிக்க யோசிக்க மனச்சோர்வும் பயமுமாக இருந்தது. பின்பு, அது உருமாறி ஆத்திரமாக வந்தது. ஏதாவது புத்தகம் படித்து மனதைத் திருப்பி விடலாம் என்று எனக்கு பிடித்த ஹெமிங்வேயின் சிறுகதைகளை வாசிக்க முயன்றேன். கண்கள் காகிதத்தில் படிய மறுத்து அலைந்தன. 
திடீரென யோசனை வந்ததுபோல மு.சுயம்பு லிங்கத்தின் ‘ஊர்க்கூட்டம்’ என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். முதல் பக்கத்தில் சுயம்பு, தான் மதுரையில் கண்ட ஒரு காட்சியை எழுதியிருக்கிறார்.
பெரிய சுத்துக்கெட்டு வீடு. ஏழு ஏர் சம்சாரி, எந்த நாடு தீய்ந்து போனாலும் அவர் வீட்டு தானியப்பட்டறையில் தவசம் குறையாது. அந்த வீட்டுப் பெண்கள் முகத்தில் உரசிப் பூசிய மஞ்சளும் அழியாத சிரிப்புமிருக்கும். அப்பேர்ப்பட்ட ஆள் விவசாயம் பொய்த்துப்போய் பிழைக்க வழியின்றி மதுரையின் டவுன்ஹால் ரோட்டில் குரங்குக்குட்டிக்கு சட்டை போட்டு தோள்மேல் உட்காரவைத்துக்கொண்டு கடை கடையாக காசு கேட்டு யாசகம் வாங்கிக்கொண்டு அலைகிறார். பூமி அதே இடத்தில்தான் இருக்கிறது. மனித வாழ்க்கைதான் பொய்த்துப் போய்விட்டது. 
வாசிக்க வாசிக்க நாக்கில் மண் ருசி தென்படத் துவங்கியது. நினைவுகள் காரை உதிர்வதுபோல பொறுக்குகளாக உதிரத் துவங்கின.
சுயம்புலிங்கத்தின் உலகம் அசலானது. வேப்பலோடை மனிதர்கள் மிகுந்த கோபக்காரர்கள். மழையற்றுப் போய் வறுமை பீடித்த ஊரில் வாழ்ந்துகொண்டு தன் ஊரைக் கடந்து செல்லும் மழை மேகங்கள் மீது கோபம்கொண்டு அவற்றைப் படிய வைப்பதற்காக விரட்டிப் போகிறவர்கள். திங்க பழம் தராத மரத்தின் மீதும், உட்கார நிழலற்ற பூமி மீதும் அவர்களது கோபம் பீறிடுகிறது. மண்ணோடு அவர்கள் கொண்டுள்ள பந்தம் மூர்க்கமானது. நினைவுகள் தான் அவர்களது ஒரே ஆறுதல். இதே ஊரில் மழை பெய்திருக்கிறது. நூறு நூறு பறவைகள் இலைக் கூட்டங்களில் விசிலடித்திருக்கின்றன. மேகத்தை வருடிச் செல்லும் மின்னல், இருட்டுக்கு உதை கொடுத்திருக்கிறது. பிறப்பும் சாவும் நடந்தேறியிருக்கின்றன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே வால் அறுந்த பல்லியைப்போல மூளியாகிவிட்டது ஊர். 
சுயம்புலிங்கத்தின் கதை களிலே எனக்கு ரொம்பவும் பிடித்தது ‘ஒரு திருணையின் பூர்விகம்’ என்ற ஒரு பக்கக் கதை. கிராமத்து வாழ்வின் உக்கிரமும் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளும் கொண்ட கதை. கதையென்று அதில் அதிகச் சம்பவமில்லை. இடிந்துபோன வீட்டின் திண்ணையைப் பற்றிய சிறு குறிப்புகள்.
திண்ணை என்பது வீட்டின் சிறகுகள் என்று சொல்லலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு சிறகுகள்போலத் திண்ணைகளிருந்தன. அங்கு எப்போதும் யாராவது ஒருவர் படுத்துக்கொண்டோ உட்கார்ந்துகொண்டோ இருப்பார்கள். பெரும்பாலும் அது வயதானவர்களின் வசிப்பிடம். சில வீடுகளில் வம்பு பேசும் சிற்றிடம். திண்ணையைப் பார்க்கும்போது அது வீட்டுக்கும் தெருவுக்கும் இடையில் ஒரு பாலத்தைப்போல இருப்பதாகவே தோன்றும். வெளியாட்கள் யார் வந்தாலும் திண்ணையில் தான் அமர்வார்கள். பேசிக்கொண்டிருப்பார் கள்.வெற்றிலை போடு வார்கள். திண்ணை ஒரு வகையில் சௌகரியம், மறுவகையில் தொல்லை.
சுயம்புலிங்கம் காட்டும் திண்ணைக்காட்சி வேறு விதமானது.
வீட்டுத் திண்ணையில் கண் தெரியாத பாட்டி பல காலம் கிடந்து இறந்திருக்கிறாள். அதே திண்ணையில் ஓடையில் வண்டி கவிழ்ந்து, எலும்பு முறிந்த தாத்தா படுக்கை யாகவே கிடந்திருக்கிறார். அதைவிடவும் அம்மாவின் இறந்தஉடலை வைத்திருந்தது இந்தத் திண்ணையில்தான். அம்மா மோட்டுவளையில் ஒரு துணி சுருக்கிட்டு தூக்கில் தொங்கினாள். காரணம் ஒன்றும் பெரிதானதில்லை. வறுமையின் காரணமாகக் கழுத்தில்கிடந்த சங்கிலியை அப்பா கழற்றி விற்றதை சகித்துக்கொண்ட அவளுக்கு, காதில் போட்டிருந்த கம்மலைக் கழற்றியதைத் தாங்கமுடியவில்லை. மூளிக் காதோடு எப்படி ஊருக்குள் நடமாடுவது என்று நாண்டு கொண்டுவிட்டாள். அந்த உடல் இதே திண்ணையில்தான் கிடத்தப்பட்டிருந்தது. பின்னொரு நாள் அப்பாவும் குளிர்காலத்தில் இதே திண்ணையில் பனி தாங்காமல் நடுங்கி விறைத்து செத்துப்போயிருந்தார். ஒரு மழையில் திண்ணை கரைந்து தரையோடு தரையாகிவிட்டது. ஆனால், அந்த நினைவுகள் இலைகளில் தேங்கிய மழைத் துளிகளைப்போல சொட்டிக்கொண்டே இருக்கின்றன.
இந்தக் கதையை எத்தனையோ முறை வாசித்துவிட்டேன். ஒவ்வொருமுறை வாசித்து முடிக்கும்போதும் உடல் முழுவதும் காமாலை பீடித்ததுபோல துக்கம் பரவிவிடுகிறது. கண்களின் வழியே கண்ணீர் வெளிப்படுகிறது. ஆனால், அது இதயத்திலிருந்துதான் ஊற்று எடுக்கின்றது என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது இந்தக் கதை.
‘கால் இல்லாமல், 
கை இல்லாமல் 
உறுப்புகள் கோரப்பட்டு 
மனுசங்க இருக்காங்க. 
வயிறு இல்லாத மனிதன் 
இல்லவே இல்லை’
என்று சுயம்புலிங்கத்தின் ஒரு கவிதை இருக்கிறது. இதைப் படித்த பிறகுதான் வயிற்றுப்பாடு என்பது எத்தனை போராட்டமிக்கது என்று எனக்குப் புரியத் துவங்கியது! 
மு.சுயம்புலிங்கம் கிராமத்து விவசாயி. தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கிராமம். Ôஊர்கூட்டம்Õ என்று ஒரேயரு புத்தகம் மட்டுமே எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகம் கரிசல்காட்டின் வெக் கையும் மணமும் நிறைந்தது. ஊரில் விவசாயியாக வாழ்வதற்கான சாத்தியங்கள் அற்றுப் போனதும், சென்னைக்கு இடம் மாறி காட்டாங்குளத்தூர் பகுதியில் சிறிய ஸ்வீட் ஸ்டால் நடத்திக்கொண்டிருக்கிறார். பசியும் போராட்டமும் அவரது இலக்கியக் கனவுகளை அரித்துத் தின்றுவிட்டன. ஆனால், அவரது படைப்புகளில் வேப்பலோடையின் நினைவுகள் களிமண்ணைப்போல ஈரமும் பிசுபிசுப்புமாக அப்படியே இருக்கின்றன.

Wednesday, September 2, 2015

காடன் மலை- மா. அரங்கநாதன்,

‘‘ஐயா-மலையை வலப்புறமா சுத்தணுமா-இடப்புறமாவா.’’
‘‘எப்படி வேண்டுமானாலும் சுத்து - மலையைப் பாக்கணும் - அதுதான் முக்கியம்.’’
அந்த இடத்திற்கு விசேட நாளன்று அவன் சென்றிருக்கக் கூடாது. விசேடங்கள் இட விசேடத்தை மங்கச் செய்யும். பெரிய அரண்மனை போன்ற கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஒரு மூலையில் எங்கேயும் பார்க்காதவாறு உட்கார்ந்து கொண்டிருந்த தாடிக்காரிடம் ஏனோ பேச வேண்டும் போலத் தோன்றிற்று. கேட்ட கேள்விக்கு அவர்தான் இப்படிப் பதில் சொன்னார்.
காடன் மலையோடு அவனுக்குச் சொந்தம் உண்டென்று பல்லாண்டு காலமாக கருதிக் கொண்டுmaaranganaவந்திருக்கிறான். பள்ளி செல்லும் பருவம் முதற்கொண்டு மலை அவனிடம் பேசி வந்திருக்கிறது. எட்டாம் வகுப்பில் தோற்றுப்போன செய்தியோடு வீடு திரும்புகையில் மலையைப் பார்ப்பதைத் தவிர்த்தான். பார்த்திருந்தால் அது சிரித்திருக்காது - அவனுக்கு ‘வெவ்வெவ்வே’ காட்டியிருக்காது. மலையின் அனுதாபம் எப்படியேனும் வெளிப்பட்டிருக்கும். அது காடன் மலை.
மீண்டும் ‘ஐயா’ என்றான். தாடிக்காரர் அவனை இப்போது கவனிப்பதாக இல்லை. எனவே கோவிலின் மற்றப் பகுதிகளுக்குச் சென்றான். உட்பிரகாரங்கள் மனிதக் கும்பலால் அழகிழந்து காணப்பட்டன. வெளிச்சம் குறைவாக விழுந்த ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். நேரஞ் செல்லச் செல்ல, கும்பல் அவனிருந்த ப்கத்திலும் வந்து மோதி உட்கார்ந்தது. திடகாத்திரம் உள்ளவனாதலால் சமாளித்துக் கொண்டான்.
இரண்டு மணி நேரம் அவனும் அந்தக் கும்பலுமாக இருந்த இடத்திற்கு வருகை தந்தது, அவன் அதுவரை கேட்டிராத ஒரு முடிவின் ஓசையும் ஒரு கருவிய்ன பிளிறலும். இந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பவனான போதிலும், இந்த இடத்தையே சார்ந்தவன் என்று சொல்ல முடியாது. அதனால்தான் அவ்விசைக் கருவிகளைப் புதிதாகச் செவியுற்று அதிர்ந்தான்.
காடன் மலையில் பண்டாரங்கள் மிகுதி. திருவிழாவின்போது அவர்கள் கூட்டம் இன்னுமதிகம். சுற்று வட்டார ஊர்களிலிருந்து நேர்ந்து கொண்ட காணிக்கையைச் செலுத்த, கரும்புத் தொட்டிலிலே குழந்தையைக் கொண்டு வரும் பெற்றோரும் அதிகம். அவர்களில் சிலர் துணியால் வாயை மூடிக்கொண்டும் இருந்தனர். மாமியார்கள் இருக்க முடியாதென அவன் நினைத்தான்.
கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து கொண்டிருப்பதில் ஒரு லாபமும் இருந்தது. பக்கத்திலிருந்த இருவர் பேசிக்கொண்டிருந்த விஷயம். அவனுக்கு அது உதவியாக இருந்தது.
‘‘மூணு நாளா வெளிப் பிரகாரத்திலே அப்படியே உட்கார்ந்திருந்தாராம். பேச்சில்லை. மாமியாரு கொடுமையாலே சாமியாரா மாறிட்டாராம்.’’
சிரிப்புடன் கூடிய பேச்சு. அவனுக்கு அது போது மானதாக இருந்தது.
‘கோனாரே’ என்றழைத்தது, அந்தக் குரல். அதே தாடிப் பண்டாரம்தான். அவன் பேசுவதற்காக நின்றான். 
‘‘எதைத் தேடி நீங்க வந்தாப்பில - முத்துக்கறுப்பக் கோனாரையா.’’
காடன் மலை வரும்போது, வழியில் ஆறு ஒன்றில் இருவர் தவம் புரிந்து கொண்டிருப்பதை அவன் பேருந்தில் இருந்தவாறே பார்த்தான். அப்படியல்ல - அவர்கள் மீன்தான் பிடித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அருகே சென்றதும் கண்டு தெரிந்து கொண்டான். இந்தப் பண்டாரமும் அதுபோன்றே இருக்கலாம். மீன் பிடிப்பதும் மோட்டார் பழுது பார்ப்பதுங்கூட தவநிலைதான் என்று எங்கோ படித்ததும் அவன் ஞாபகத்தில் வந்தது.
‘‘ஐயா-எனக்கொண்ணும் புரியல்லே - எல்லாம் தெரிஞ்சவங்க நீங்க. நான் கோனாரைத் தேடித்தான் வந்தேன்.’’ 
‘‘தேடிப் பிரயோசனம் இருக்காது - தானா வரணும்.’’
அவன் எதுவும் பேசத் தெரியாது நின்றான். மாலை விழாவிற்கான கூட்டம் மோதிற்று. தூரத்தே காடன் மலையைத் திரும்பித் திரும்பிப் பார்த்து தவித்தனர். மந்திரி வரக்கூடும். பக்திப் பாடல்கள் ஒலித்தன. கடவுள் இல்லையென்று சொல்பவருக்குத் தகுந்த பாடங் கற்பிக்க வேண்டும் என்று பிரசங்கி வேண்டுகோள் விடுத்தார். பண்டாரம் முகத்தில் ஏளனம்.
ஓரே கூச்சல். காடன் மலையில் தீ எரிந்து கொண்டிருப்பதை வரவேற்ற மக்களின் குதூகலம். பண்டாரம் தாடியை நீவிக்கொண்டார்.
‘‘முத்துக்கறுப்பக் கோனார் என் தாய் மாமன். அவரைத் தேடித்தான் இங்க வந்தேன். பிரகாரத்திலிருக்கறப்ப சொன்னாங்க, ‘யாரோ மாமியார் கொடுமையாலே சாமியாரா மாறிட்டாரு’ அப்படின்னு - அது அவராயிருக்கும்.’’
‘‘நினைச்சேன் தம்பி. அந்த ஆளு முகச்சாயல் கொஞ்சம் ஒங்கிட்டேயிருக்கு-ஒம் பேரு என்ன?’’
‘‘சுப்பிரமணி.’’
‘‘வாய்யா கோனாரே’’ என்று சத்தமிட்டவாறே, தாடி தூரத்தில் ஒருவரை நையாண்டியுடன் வரவேற்றார். சுப்பிரமணி திரும்பிப் பார்த்தான். வந்துகொண்டிருந்தது இன்னொரு தாடி.
காடன் மலையில் சிறிது மழை தூறியது. தெருக்களில் நின்று பார்த்தால் மலையுச்சியில் மேகக் கூட்டம் கசிந்துருகி நீர் வடிப்பதை இங்கிருந்து துல்லியமாகப் பார்க்க முடியும். இந்த விழாவிற்கு மழையும் கட்டாயம் வரவேண்டும்.
பெரிய கோபுரத்திற்கு ஒரு பறவைக் கூட்டம் வந்திறங்கி, அங்கேயும் மனிதக் கும்பல் அடைத்துக் கொண்டுள்ளதைக் கண்டு தயங்கி சிறகடித்து நின்று, பின்னர் வேறு இடந்தேடிச் சென்றது. தலையைத் திருப்பி பண்டாரத்தைப் பார்த்தான் சுப்பிரமணி. இன்னொரு பண்டாரம் போய் விட்டிருந்தார்.
‘‘இன்னிக்கி நான் எதுவும் சாப்பிடல்லே. ராத்திரி ஒரு வீட்டிலே சாப்பிடக் கூப்பிட்டிருக்காங்க. போகணும். வேணும்னா இப்ப ஒரு காப்பி குடிக்கலாம்’’ என்றார் தாடி அவனைப் பார்த்து.
சுப்பிரமணி அவசரத்துடனும் வெட்கத்துடனும், ‘வாங்க ஐயா-சாப்பிடலாம்’ என்று அழைத்தான்.
‘‘எப்படி எப்படி - தமிழ்லே பேசி இரந்துண்டா அவன் பிச்சைக்காரன் - பண்டாரம் இல்லையா?’’ என்றார் நமட்டுச் சிரிப்போடு. சுப்பிரமணி எதுவும் பேசவில்லை.
‘‘இப்ப சொல்லு.’’
நுரை பொங்கி வழிந்த காப்பியை அப்படியே ஒரே முழுங்கில் குடித்துவிட்டு எழுந்தார் தாடி.
வெளியே மண்தெரிந்த இடத்திலெல்லாம் மனிதர்தாம். நடப்பது சௌகர்யமாக இருக்கவில்லை.
‘‘அவரா இஷ்டப்பட்டுத்தான் மாமா கல்யாணம் பண்ணிக் கிட்டாராம். வாத்தியார் வேலை சௌகரியமாத்தான் இருந்தது. ஒரே ஒரு பையன். என்னைவிடச் சின்னவன். வேலை கிடைக்கல்லே. சண்டை போடுவான் வீட்லே அடிக்கடி.’’
‘‘ஒனக்கு எப்படி வேலை கிடைச்சதோ?’’
‘‘அப்பாக்கு சர்க்கார் வேலை. அவரு செத்துப் போனதாலே அந்த வேலையை எனக்குக் கொடுத்தாங்க. பி.டபிள்யூ.டி.’’
‘‘அதுதான் கேட்டான்.’’
தாடி இதன்பிறகு கேள்வி எதையும் கேட்கவில்லை. ஆனால் நிறையப் பேசினார்.
திண்டிவனம் பக்கத்திலேயே தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்தவுடன் சமாதானமடைந்திருந்தான் முத்துக்கறுப்பன். அது அவன் சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிற இடம். அவள் கணவருக்கு அங்குதான் வேலை. எனவே எந்தச் சங்கடமும் இருக்கவில்லை. ஆசிரியர் வேலை மனதிற்கு இதமளித்திருந்தது. சக ஆசிரியர்கள் நன்கு பழகினர். மீதியுள்ள பணிக்காலம் முழுவதையுமே அவன் அங்கே கழித்து விடவும் தயாராக இருந்தான். ஒரு வகையில் அவ்வாறுதான் ஆயிற்று. அந்த ஊரிலேயே அவனுக்குத் திருமணம் நடந்தது. இஷ்டப்பட்டுத்தான் கல்யாணம். பெண் அந்த ஊர்தான். ஒரே ஒரு நிபந்தனையுடன்தான் நடந்தது என்று சொல்லலாம். பெண்ணின் தாயாரும் அவர்களோடுதான் இருப்பாள் - காப்பாற்ற வேண்டும். அது ஒன்றும் பெரிய விஷயமில்லையென்று முத்துக்கறுப்பன் நினைத்தான். அவன் சகோதரியும் எதுவும்சொல்லவில்லை. அவன் இஷ்டப்படியே எல்லாம் நடந்தன. பின்னாளில் சகோதரியின் கணவர் காலமானாலும், மகன் சுப்ரமணிக்கு அரசுத்துறையில் வேலைக் கிடைத்தபடியால் முத்துக்கறுப்பனுக்கு புதிய பொறுப்புகள் எதுவும் வந்து சேரவில்லை. தன் மகனுக்கு படிப்பு ஏறவில்லையே; வாத்தியார் மகன் மக்காக இருக்கிறானே என்ற கவலை மட்டுமே உண்டு. ஆனால் அந்த மகன் சாமர்த்தியசாலி - ஊரிலுள்ள அனைவரோடும் தொடர்புகொண்டு, ஏதாவது சம்பாதித்துக்கொண்டும் சேமித்துக்கொண்டும் தானிருந்தான் என்பதையோ மற்ற இளைஞரிடம் காணமுடியாத குணம் - பணத்தின் சக்தியை அறிந்த குணம் - அவனிடமிருந்ததையோ, முது;துக்கறுப்பன் அறியவில்லை.
பையனின் பாட்டியும் அம்மாவும் அவனுக்கு இன்னும் வேலை கிடைக்காதது பற்றி; பேச ஆரம்பித்திருந்தனர். வேலை கிடைக்கவில்லை. அதுவும் சுப்ரமணிக்கு வேலை எப்படிக் கிடைத்தது என்று தெரிந்த பிற்பாடு அந்தப் பையன் அமைதி குலைத்தவன் ஆனான். பாட்டியிடம் மட்டுமே மனம்விட்டுப் பேச முடிந்தது. அந்தப் பேச்சில் அவன்கேட்ட கேள்வி ஒன்று அந்தப் பாட்டியையே சிந்திக்க வைத்தது. வேண்டியது தானே. நாளைக்கு காப்பாற்றப் போகிறவன் கேட்ட கேள்வி. கேட்டதும் அத்தனை அறிவு கெட்ட கேள்வியல்ல. ‘‘அப்பா செத்துப்போனா, சர்க்காரில் வேலை தருவாங்க இல்லையா?’’ என்பதுதான் அது. சரி - சாவது இலேசான விஷயம் அல்ல. அதற்கும் அரசு ஆணைக் குறிப்பில் ஒரு விதிமுறை இருக்கிறதே. கேட்டறிந்து பையன் சொன்னான். ‘‘அரசு ஊழியர் காணாமல் போய்விட்டால் ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர், திரும்பி வராவிட்டால் அவர் இறந்துவிட்டதாகக் கருதி, அவர் பிள்ளைக்கு கருணை அடிப்படையில் Nவுலை தரலாம் - வழி இருக்கிறதே - எனக்கு இப்போ பதிடினட்டுத்தான் ஆகுது.’’
இந்தப் புத்திசாலித்தனத்திற்காகவே அரசு ஒரு வேலை அளித்திருக்க வேண்டும் அல்லவா? இதைத்தான் முத்துக்கறுப்பனிடம் அவர்கள் வெகுசகஜமாக எடுது;துச் சொல்லியிருக்க வேண்டும். அதாவது ‘செத்துப் போ அல்லது எங்காவது ஒழிந்து போ’ - அதுதானே அதற்கு அர்த்தம். இது ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நடந்த விஷயம். இதில் அவன் மனைவியின் பங்கு என்னவென்று ஊகிக்கத்தான் முடியும். திங்கட்கிழமை காலை வெளியே சென்ற முத்துக்கறுப்பன் இன்னமும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன கதை இதுதான்.
முத்துக்கறுப்பன் போளுர் வரை நடந்து சென்றதாகத் தெரிகிறது. அங்கு எப்போதோ தெரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அவனைக் கண்டு வீட்டிற்கழைத்து சாப்பாடு போட்டிருக்கிறார். திரும்பவும் புறப்பட்ட அவனிடம், ‘எங்கே’ என்று விசாரித்தபோது, மலையைச் சுட்டிக் காட்டியிருக்கிறான். எத்தனை பேரைத்தான் இந்த காடன் மலை தன்னிடம் அழைத்திருக்கிறதோ?
அவன் மலையைச் சுற்றவில்லை. ஊரைச் சுற்றி வந்தான். கோவில் வெளிப் பிரகாரத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான். வேட்டி மேலும் அழுக்காயிற்று. நெடிதுயர்ந்த ஒரு பண்டாரம் அவனிடம் பேசாது ஒரு துண்டை நீட்டினார்.
பண்டாரங்களிடம் பேசுவது எளிதாக இருக்காது என்று அவன் நினைத்திருக்கலாம். இரண்டு நாள் கழித்து போளுர் ஆசிரிய நண்பர் கோவிலுக்கு வந்து அவனிடம் சிறிது பேசிவிட்டு அகன்றார். அதன் பின்னரே அவன் எப்படியோ ஆரம்பித்து தனது கதையை அந்தப் பண்டாரத்திடம் சொல்ல முடிந்தது. முடித்துவிட்டு, கேள்வியாக இல்லாது வேறு எதுவாகவோ சொன்னான்.
‘‘மனிதரை எப்படி நம்புவது...’’
‘‘ஏன் மாடுகள் இல்லையா நம்புவதற்கு - இதோ பாரு - இந்த மலையில் ஒரு காடன் மனிதரைவிட ஆட்டையும், மாட்டையும்தான் நம்பினான்’’ என்று பண்டாரம் தெரிவித்தார்.
‘‘மலையைச் சுத்தலையா கோனாரே?’’
இருவரும் கோவில் பக்கமாக வந்துவிட்டனர். விழா முடிந்து விட்டதற்கான அறிகுறி தெரிந்தன. மலையைப் பார்த்துக்கொண்டே கூட்டம் கலைகிறது.
‘‘சுத்த வேண்டியதுதான் ஐயா - மீதி விவரமும் தெரிஞ்சா நல்லாயிருக்கும்.’’
‘‘மீதி என்ன மீதி - எப்போதுமே மீதி இருக்கும். முத்துக்கறுப்பக் கோனார் வேலையை ராசினாமா பண்ணியாச்சு. போளுர் நண்பர்தான் எல்லாம் முடிச்சுக் கொடுத்தாரு... ராசினாமா பண்ணிவிட்டதாலே மகனுக்கு வேலை கிடைக்காது.’’
‘‘எனக்கு மாமாவைப் பார்க்கணும் ஐயா.’’
‘‘மலையைச் சுத்து - பாக்கலாம். அந்தத் திருப்பத்திலே சேரி இருக்கும் - ராப் பள்ளிக்கூடம் அங்கே. அங்குள்ள பிள்ளைகளுக்குப் பாடம். தங்கல் அங்கேயேதான். நல்ல இடம் - வெளியே வந்தா மலை தெரியும்.’’
‘‘நல்லதையா - ஐயாவும் வந்தா நல்லாயிருக்கும். ஒரு வேளை சேரிப்பக்கம் வரமாட்டீங்களோ?’’
‘‘கோனாரே - பண்டாரம் பாத்த வேலையைத்தான் இப்ப முத்துக் கறுப்பக் கோனாரு பாக்காரு - நல்லாவே பாடம் சொல்லித் தாராருன்னு பிள்ளைங்க சொல்லுது - எனக்கு இங்கிலீசு வராது. இப்ப இந்தப் பாடமும் நல்லபடியா நடக்குதாம். சரி. போயிட்டு வா-நான் அந்தப் பக்க மூலையிலேதான் இருப்பேன். வசதியான இடம். அங்கிருந்து பாத்தாத்தான் மலை நல்லாத் தெரியும் - போயிட்டு வா.’’
*****
நன்றி: மா. அரங்கநாதன் தளம்

Tuesday, September 1, 2015

ஜி. நாகராஜனின் படைப்புலகம்-மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்
(1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
தமிழின் நவீன இலக்கிய வெளியில் மத்தியதர வாழ்வின் ஆசாபாசங்களும் பெருமூச்சுகளும் மதிப்பீடுகளும் நம்மை மிகவும் ஆயாசமடைய வைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாழ்க்கையின் பரப்பு சின்னஞ்சிறியது; சில உயர் இடைநிலை சாதிகளின் _ வர்க்கங்களின் அனுபவத்திலிருந்தும், கண்ணோட்டத்திலிருந்தும் உருவாக்கப்பட்டது. மத்தியதர வாழ்வின் அறவியல் அழகியல் பிரச்சனைகள் தமிழ் இலக்கியத்தின் பிரச்சனைகளாக இருந்து வந்துள்ளன. வரலாற்றின் ஏற்றத்தாழ்வுகள் வழியே கலை இலக்கியத்தை அவற்றின் நவீன வடிவங்களிலும் ஊடகங்களிலும் கையாளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் தம்முடைய வாழ்வின் நியதிகளையும் தர்மங்களையும் ஒட்டு மொத்த வாழ்விற்கான நியதிகளாக சித்தரித்தனர். இந்த நியதிகளுக்கு வெளியே இருந்த சமூக அடுக்குகளில் வாழ்வு எண்ணற்ற முரண்களோடு தனக்கான மொழியையும் குரலையும் தேடி காலத்தின் மௌனங்களுக்குள் விம்மிக் கொண்டிருந்தது.
இந்த நூற்றாண்டில் நமது அரசியல் பண்பாட்டு நீரோட்டத்தை ஒழுங்குபடுத்திய இரண்டு சக்திகள் காந்தீயமும் மார்க்ஸீயமும் ஆகும். மதங்கள், சாதிகள், வர்க்கங்கள், சமூக உறவுகள், மதீப்பீடுகள், ஒழுங்குகள் தர்க்கங்கள் என சகல பண்பாட்டுக் கூறுகளுக்கும் மறுவிளக்கங்கள் அளித்து ஒரு பொதுவான வாழ்க்கைக் கண்ணோட்டத்தை உருவாக்க முயன்றன. இந்த இரண்டு தத்துவங்களும் சமூகத்தை, வாழ்க்கையை, மனித உறவுகளை அவர்களது உடலை அவர்களது ஹிருதயத்தைப் பற்றித் திட்டவட்டமான முடிவுகளையும் இலட்சியங்களையும் கொண்டிருந்தன. அவை அதிகாரத்திற்கான வேட்கையோடு இணைந்திருந்ததால் புரிந்து கொள்வதைவிட மாற்றியமைப்பதில் தீவிரங்காட்டின. மனித இயல்புகள் அவற்றின் மேல் செலுத்தப்படும் வரையறைகள் பற்றி காந்தீயமும் மார்க்ஸீயமும் கொண்டிருந்த தவறான கற்பிதங்களால் அவை நம் கண்ணெதிரேயே சிதறிவிட்டன.
பெரும்பாலான தமிழ்ப்படைப்பாளிகள் காந்தீயத்தாலும் மார்க்ஸீயத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவற்றின் நம்பிக்கைகளையும் வரையறைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுக் கொண்டவர்கள். இதன் மூலம் உருவான இலக்கியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வின் முரண்களை எதிர்கொண்டனர். இந்த இலட்சியவாதக் கண்ணோட்டம் கூர்மையாக அம்முரண்களை வெளிப்படுத்துவதற்குப் பதில் மழுங்கடித்தது. அசௌகரியமான உண்மைகளை மூடிமறைத்தது. பொய்யான சமாதானங்களை வழங்கியது. இந்தப் பின்னணியைச் சேர்ந்த படைப்பாளிகள் தம்முடைய சாதீய வர்க்க இருப்பிற்கு வெளியே இருந்த விவசாயிகள், தொழிலாளர்கள், இழிந்த சாதிகள், வேசிகள், பொறுக்கிகள் பற்றி எழுதவே செய்தனர். ஆனால் நமது காலத்தில் மிகவும் அருவருக்கத்தக்க ஓன்றாகிவிட்ட மனிதநேயம் அல்லது சமூக அக்கறை என்ற மேலிருந்த குற்றவுணர்வுப் பார்வையிலிருந்து கடைப்பட்டோர் பற்றிய சித்திரங்கள் உருவாக்கப்பட்டதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பொதுக்கருத்தியலுக்குள் அவர்களுக்கான அசலான இருப்பை இழந்திருந்த கடைப்பட்டோர் தமக்கான வாழ்வியலையும் அறவியலையும் வெளிப்படுத்தும்போது அவை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன, ஜி. நாகராஜனின் படைப்புலகம் ஒரு மத்தியதர வாசகனுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி இத்தகையதுதான். அவனது எல்லா அடிப்படை தார்மீக நியதிகளையும் அது நிராகரித்து விடுகிறது.
ஜி. நாகராஜனின் உலகம் முழுக்க முழுக்க பாலுணர்ச்சியும் குற்றமும் சம்பந்தப்பட்டது. ஆனால் அது பாலுணர்வு மற்றும் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை விவரிக்கும் ஒரு புனைவு அளிக்கக்கூடிய எந்தக் கிளுகிளுப்பையும் சுவாரசியத்தையும் தருவதில்லை. பாலுணர்ச்சியிலும் குற்றத்திலும் படிந்திருக்கும் கனவையும் சாகசத்தையும் நாகராஜன் இரக்கமில்லாமல் அழித்து விடுகிறார். சில சமயம் குரூரமான, சிலசமயம் வேடிக்கையான சில சமயம் அர்த்தமற்ற, சிலசமயம் நெகிழ்ச்சி மிகுந்த ரூபங்களைக் கொல்லும் பாலுணர்ச்சியும் குற்றமும் வாழ்வின் விசித்திரங்களை கண்டடைவதற்கான ஒரு பாதையே தவிர அவையே இலக்குகள் அல்ல பாலுணர்ச்சியும் வன்முறையும் முழுமையாக கட்டவிழும் நாகராஜனின் படைப்புக்களனில் மனிதன் அடையக்கூடிய அவமானங்கள் இம்சைகள், நம்பிக்கைக்கும் மீட்சிக்குமான தத்தளிப்புகள் மீட்சியற்றுப் போகையில் வாழ்வதற்கான சமாதானங்கள் என எண்ணற்ற தளங்கள் விரிகின்றன. நாகராஜனுக்கு மனிதனைப் பற்றியோ வாழ்க்கையைப் பற்றியோ கற்பிதங்கள் இல்லாததால் நிகழ்வுகளை அதன் ரத்தமும் தசையுமான வடிவில் மீட்டெடுக்கிறார். நடைமுறைத் தேவைகளும் வாழ்வதற்கான போராட்டமும் மனிதனின் இரகசிய ஆசைகளுமே வாழ்வின் திசைவழியை; தீர்மானிக்கின்றன; இலட்சியங்களும் மதிப்பீடுகளும் அல்ல என்பதை நாகராஜனின் குரூரமான யதார்தத் தளம் வெளிப்படுத்துகிறது.
ஜி. நாகராஜனையும் அவரது படைப்புகளையும் எப்படி வகைப்படுத்துவது? குறத்தி முடுக்கில் இவ்வாறு எழுதுகிறார்: `தங்களது கொள்கையாலும் நடத்தையாலும் சமூதாயத்திலிருந்து தங்களைத் தாங்களே பகீஷ்கரித்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன்’. இந்த சுயபகிஷ்காரத்தால் சமூகத்தின் ஒழுங்குகளை ஏற்றுக்கொண்டவர்களும் அந்த ஒழுங்குகள் குலைந்து விடாமல் அவற்றை இரகசியமாக மீறுகிறவர்களும் அடைகிற அடிப்படை பாதுகாப்பை இழந்தவர்கள் ஜி. நாகராஜனும் அவரது கதாபாத்திரங்களும். பொதுப் பண்பாட்டினால் குற்ற உலகினர் எனக் கருதப்படும் நாகராஜனின் பாத்திரங்கள் எளிமையும் பரிதவிப்பும் கனவுகளும் கழிவிரக்கமும் குற்ற உணர்ச்சியும் கொண்டவர்கள். `நாளை மற்றொரு நாளே’ யில் மிரட்டிப் பணம் பறிக்கும் கந்தன்தான் தன் குழந்தை இறந்து போனதற்கு அதன் பலூனை சிகரெட்டால் சுட்டு உடைத்ததுதான் காரணம் என நினைத்து மருகுகிறான்; மீனா புணர்ச்சி இன்பத்தின் முடிவில் காணாமல் போன மகளை நினைத்து அழுகிறாள். கந்தன் மீனாவை தன் வாழ்வின் நிச்சயமின்மை காரணமாக ஒரு நல்ல இடத்தில் சேர்ப்பித்துவிட வேண்டுமென்று நினைக்கிறான். ஒரு தந்தை அல்லது தாய், ஒரு சகோதரன் அல்லது பாதுகாவலன் வகிக்கக்கூடிய இடத்தை ஒரு விபச்சாரியின் காதலன் எவ்வாறு மேற்கொள்கிறான், அவர்களுக்கிடையிலான உறவின் இழைகளை எவை தீர்மானிக்கின்றன என்பதை பொதுவான மதிப்பீடுகளின் வழியே அறிய முடியாது. மனிதர்கள் தமக்கிடையே சுயமாக ஏற்படுத்திக் கொள்கிற உறவுகளின் அழங்காண முடியாத பந்தங்களிலிருந்து இத்தகைய தார்மீகப் பொறுப்புகள் எழுகின்றன. குறத்தி முடுக்கில் தங்கம் அவளை நேசிக்கிறவனுக்குப் பதில் அவளைக் கூட்டிக் கொடுத்த கணவனைத் தேடிப் போகிறாள். திருமணம் என்ற உறவிற்கான எல்லா நியமங்களும் அழிந்துவிட்ட ஒரு சூழலுக்குள் வந்த பிறகும் அவளது திருமண உறவிற்கும் பாலியல் தொழில் சார்ந்த பிற உறவுகளுக்கும் நடுவே ஒரு தீர்க்கமான இடைவெளி இருக்கிறது. (இந்த இடைவெளி தங்கத்திற்கும் அவளது உடலுக்குமான இடைவெளியா அல்லது பொதுப் பண்பாட்டிற்கும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்குமான இடைவெளியா அல்லது அறுபடாத உறவா எனும் கேள்விகள் எழுகின்றன.) `துக்க விசாரணை’ எனும் கதையில் ஒருவன் ரோகிணி என்ற விபச்சாரியின் மரணத்திற்குத் துக்கம் கேட்கப் போகிறான். பால்வினை நோயைக் கொடுத்ததற்காக ஒரு வாடிக்கையாளனிடம் செருப்படி வாங்கியதன் அவமானத்தால் ரோகிணி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அறிகிறான். ரோகிணியின் சாயல் கொண்ட துக்கம் விசாரித்தவளிடமே உறவு கொள்கிறான். இதுபோன்ற எளிதில் புரிந்து கொள்ள முடியாத விளக்கமளிக்க இயலாத ஏராளமான சம்பவங்கள் ஜி.நாகராஜனின் படைப்புகள் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஜி. நாகராஜனின் மனிதர்கள் பாதுகாப்பின்மைக்குள் ஒரு பாதுகாப்பையும் உறவின்மைக்குள் ஒரு உறவையும் அவமானத்திற்குள் ஒரு தன்மானத்தையும் நெறியின்மைக்குள் ஒரு நெறியையும் உருவாக்கிக் கொள்ள எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜி. நாகராஜனின் படைப்புகள் மையமான பாத்திரங்களைக் கொண்டவையல்ல. ஒரு சூழலின் குறுக்கும் நெடுக்கமான எண்ணற்ற கோடுகளால் அவரது பாத்திரங்கள் அமைந்துள்ளன. அவை விசேஷமான இயல்புகள் மேல் கட்டப்படுவதில்லை. கந்தன், மீனா, தங்கம் போன்ற பாத்திரங்கள் கூட அவை தம் சூழலோடு கொள்ளும் உறவின் கூர்மை காரணமாக அழுத்தம் பெறுகின்றனவேயன்றி அவற்றின் தனித்துவங்களால் அல்ல. ‘நாளை மற்றொரு நாளே’, ‘குறத்தி முடுக்கு’ அவரது சிறுகதைகள் எல்லாவற்றிலும் அநேக பாத்திரங்கள் ஒரு மின்னலைப் போல கடந்து சென்று கொண்டேயிருக்கின்றன. அதே சமயம் அவை எதுவும் மங்கலானவை அல்ல. நாகராஜன் எதையும் விவரிப்பதோ அழுத்தம் கொடுப்பதோ இல்லை. அவரது பார்வையில் எதுவும் அவ்வளவு முக்கியமானதும் அல்ல. வாழ்வும் எழுத்தும் என்ற கதையில் கேட் அடைக்கப்பட்டுள்ள ரயில்வே கிராஸிங்கில் காத்துக் கிடக்கும் நாகராஜனின் சித்திரம் இது.
நாகராஜனைப் பொறுத்தவரை அடைக்கப்பட்டுள்ள கேட்டுகள் முன் திறப்பிற்காக பொறுமையிழந்து காத்திருப்பதுதான் வாழ்க்கை. திறப்பிற்கான அந்த முட்டி மோதல்களுக்கு மேல் அதற்கு எந்த அர்த்தமோ அழகோ இல்லை.
வாழ்வதற்கான போராட்டத்தில் சிதிலமடைந்துபோன அரசியல், அறிவியல், ஒழுக்கவியல் கற்பிதங்களை எதிர்கொண்ட நாகராஜனின் மொழி மனவறட்சியின் கூர்மையான அங்கத்துடன் உருவெடுக்கிறது. அரசியல் இயக்கங்கள் மனித நடத்தைகள் ஆசைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் இடையிலான நாடகங்கள் மேல் நாகராஜனின் எள்ளல் தீவிரமாக வெளிப்படுகிறது. புதுமைப் பித்தனுக்குப் பிறகு இவ்வளவு விமர்சன பூர்வமான மூர்க்கம் கொண்ட எள்ளலை நாகராஜனிடம் காணமுடிகிறது.
ஜி. நாகராஜனின் கதைகளில் காணப்படும் யதார்த்தவாத சித்திரிப்பு ஒரு தோற்றம் மட்டுமே. ஒரு அப்பாவி வாசகனை எளிதில் ஏமாற்றிவிடக்கூடிய தோற்றம் இது. பௌதீக உலகிற்கும் அக உலகிற்கும் இடையே அவரது மொழி மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்கிறது. இறந்தகாலமும் நிகழ்காலமும் நிஜமும் கனவும் பல இடங்களில் ஒன்றொடொன்று குழம்பி விழுகின்றன. வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்ட சம்பவங்களால் ஆனதல்ல நாகராஜனின் படைப்பு மொழி. உதாரணமாக டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் எனும் சிறுகதை அதன் உத்தியாலும் மொழியாலும் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் மிக அபூர்வமான ஒரு படைப்பாக இருக்கிறது. ஜி. நாகராஜனின் படைப்புகளில் மிகச் சிறப்பான இயல்பு, அவர் உரையாடல்களை அமைக்கும் விதம். இரண்டு மனிதர்கள் கதையை நகர்த்துவதற்காக ஒரு செய்தியை பரிமாறிக்கொள்வது என்ற நோக்கில் அந்த உரையாடல்கள் அமைந்திருப்பதில்லை. அந்தக் கதைகளுக்கு வெளியேயும் ஒரு வாழ்க்கை முறையின் குரலாக அவை அமைந்திருக்கின்றன. இந்த உரையாடல்களில் மனிதர்களுக்கிடையேயான பேரங்களும் ஏமாற்றுகளும் பாசாங்குகளும் அவலத்தின் முடிவற்ற வெறுமையும் மிகச் சூட்சுமான குறியீடுகளுடன் அமைந்துள்ளன. அபாயமும், நிச்சயமின்மையும் சூழ்ச்சியும் நிறைந்த ஒரு விளையாட்டுக்களனில் சாதுர்யத்துடன் காய்களை நகர்த்துகிற விதமாக இந்த உரையாடல்கள் நிகழ்கின்றன. இந்தப் பேச்சுகளுக்கு விரிந்து கிடக்கும் இடைவெளிகளும் மௌனங்களும் நாகராஜன் தேர்ந்தெடுக்கிற இயல்பான துல்லியமான சொற்களின் மூலம் நம் மனங்களை அதிர்வடையச் செய்கின்றன.
ஜி. நாகராஜனின் படைப்புகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை ஆழமாக அறியவும் மதிப்பீடு செய்யவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ள நாகராஜனின் தீவிர வாசகன் என்ற வகையில் இரண்டு கேள்விகள் என்னை அலைக்கழிக்கின்றன.
1. ஜி. நாகராஜனின் பிம்பத்திற்கும் அவரது வாசகனுக்குமான உறவு.
2. படைப்புச் சுதந்தரம் பற்றிய பிரச்சனைகள்.
ஜி. நாகராஜன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைமுறை தொடர்ந்து விவாதத்திற்குள்ளாயிருக்கிறது. அதை ஒழுங்கீனத்தின் அராஜகத்தின் சீரழிவின் வெளிப்பாடாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். தனி மனிதன் மேல் சமூகமும் பண்பாடும் சுமத்துகிற ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கலகமாக விடுதலைக்கான யத்தனிப்பாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த இரண்டு பார்வைகளுமே நமது ஒழுக்கவியல் எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம். ஆனால், நாகராஜன் மனிதர்கள் மேல் இத்தகைய விமர்சனத்தையோ புனைவையோ சுமத்துவதில்லை. அவரைப் பொறுத்தவரை அவர் வாழ்ந்த அவர் எழுதிய சூழல் ஒரு வாழ்க்கை முறை. மற்ற வாழ்க்கை முறைகளைப் போலவே அங்கும் சில சந்தோஷங்களும் துயரங்களும் உள்ளன. அதற்கென சில நியாயங்களும் அநியாயங்களும் இருக்கின்றன. அதனளவில் அது நல்லதோ கெட்டதோ அல்ல. எதற்கும் அது மாற்றோ, முன்னுதாரணமோ இல்லை. அங்கு விடுதலையும் ஒடுக்குமுறையும் வேறு அர்த்தங்களில் நிலவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு இளம் படைப்பாளியைப் பற்றி எனக்குக் கடிதம் எழுதிய நண்பர் ஒருவர் அவர் ஜி. நாகராஜனைப் போல வாழ்ந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த இளைஞரின் வாழ்விற்குப் மரணத்திற்கும் அளிக்கப்பட்டிருந்த இந்த நற்சான்றிதழில் ஒட்டியிருந்த பெருமிதம் சங்கடம் தருவதாக இருந்தது. பாதுகாப்பிற்கும் உத்திரவாதத்திற்குமான சமூகத்தின் எல்லா வழிமுறைகளையும் தந்திரங்களையும் பின் பற்றுகிறவர்கள். அந்தப் பாதுகாப்புகள் இல்லாமல் போனவர்களை ஒன்று இலட்சிய புருஷர்களாக்குகிறார்கள் அல்லது தமது அழுகிப் போன நெறிமுறைகளின் பேரால் சீரழிந்தவர்களாக சித்தரிக்கின்றார்கள். இவையெல்லாம் மத்தியதர வர்க்கத்தினது இயலாமையின் வெளிப்பாடுகள். ஜி. நாகராஜனின் வாழ்வுப் படைப்பும் இந்த இயலாமைக்கு அப்பால் இருக்கின்றன. நாகராஜனின் படைப்புகளை அவரைப் பற்றிய பிம்பங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.
இரண்டாவதாக ஜி. நாகராஜனின் படைப்புகளை அணுகக்கூடிய எந்த ஒரு வாசகனுக்கும் முதலில் தோன்றக்கூடிய மனப்பதிவு அவர் ஒரு துணிச்சலானக் கலைஞன் என்பதே. இந்த துணிச்சலுக்கு நாகராஜன் கொடுக்க வேண்டியிருந்த விலை சமூகத்திலிருந்து கொள்கையாலும் நடத்தையாலும் சுயபகீஷ்காரம் செய்து கொண்டதுதான். இருந்தும் குறத்திமுடுக்கின் முன்னுரையாக எழுதிய குறிப்பில் இவ்வாறு சொல்கிறார்.
தலைப்பு : என் வருத்தம். படைப்பாளிக்கு ஏன் சொல்லமுடியாத குறை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது? சொல்வதையே தொழிலாகக் கொண்டவனுக்கு சொல்ல முடியாததன் துக்கம் இயற்கையானதுதான். அவனைப் பொறுத்தவரை படைப்புச் சுதந்தரம் என்ற கோஷமே அர்த்தமற்றது படைப்பியக்கத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டை உணரும் கலைஞன் படைப்புச் சுதந்தரம் என்ற கோஷத்தை முழங்க கூசிப் போவான். ஏனெனில் அவனது வெளிப்பாடு அவனது படைப்புத்திறனால் ; அவனது படைப்புத்திறன் அவனது மொழியால் ; அவனது மொழி அவனது மன இயக்கத்தால் ; அவனது மன இயக்கம் அவனது அனுபவங்களால் ; அவனது அனுபவம் அவனது சூழலால்; அவனது சூழல் அவனது சமுத்திரத்தால் கட்டுண்டு கிடக்கிறது.
படைப்பியக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு நேர் வரிசையில் நிகழாமல் இருக்கலாம். நான் சொல்ல விழும்புவது என்னவென்றால் படைப்பியக்கம் சுதந்தரம் பற்றிய பிரக்ஞையை அல்ல சுதந்தரமின்மை பற்றிய பிரக்ஞையே கொண்டு வருகிறது என்பதுதான். படைப்பாளியின் உள்ளார்ந்த வெளி எப்போதும் அவனுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது என்றால் அவனது புறவெளி வேறு வகையான நிர்ப்பந்தங்களை உண்டாக்குகிறது. கலையையோ இலக்கியத்தையோ அதற்குரிய தர்க்க நியாயங்களுடன் உணர்ந்து கொள்ளப் பக்குவப் பெறாத இந்தப் புறவெளி படைப்பாளியின் குரல் வளையில் நேரடியாக கத்தியை வைக்கிறது. உதாரணமாக வேசிகளைப் பற்றி கதை எழுதுகிற ஒருவனிடம், வேசிகளிடம் போய் விட்டு வந்த ஒருவனிடம் என்ன மொழியில் உரையாட முடியுமோ அதே மொழியில்தான் நமது சூழல் பேசுகிறது. அத்தகைய கதை ஓன்றை எழுதிய என் நண்பன் ஒருவனிடம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளி ஒருவர் `பி.மி.க்ஷி. பரிசோதனை செய்து கொண்டீர்களா’ என்று கேட்டார். ஒருவன் தன்னுடைய மனஇயக்கம் மற்றும் அனுபவங்களுக்கும் அவனது படைப்புகளுக்குமாக இடைவெளியை எந்த அளவிற்கு குறைக்கிறானோ அல்லது வரையறுக்கப்பட்ட அனுபவ எல்லைகளை எந்த அளவு மீறிச்செல்கிறானோ அந்த அளவு அவனது இருத்தல் அபாயங்களுக்குள்ளாகிறது. தமிழ் இலக்கியவாதிகள் பலர் இந்த அபாயத்தை எதிர்கொள்ள முடியாமல் தம் ஆமையோடுகளுக்குள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இந்தப் புறநெருக்கடியினை எதிர்கொள்ள திறன் மிகுந்த கலைஞன் தன் அனுபவங்களை வெவ்வேறு தளமாற்றங்களுக்குக் கொண்டு செல்கிறான். புதிய படைப்பு மொழியையும் வடிவத்தையும் உருவாக்குகிறான்.
வாழ்வின் அறியப்படாத பிரதேசங்களை நோக்கி பயணம் செய்ய விரும்பும் ஒரு இளம் படைப்பாளிக்கு ஜி. நாகராஜனின் படைப்புகள் அளிக்கும் திறப்பும் உத்வேகவும் அளப்பரியவை. வாழ்வை நிழலும் புகையுமில்லாமல் எதிர்கொள்வதற்கு ஜி. நாகராஜனின் எழுத்துக்கள் வெளிச்சம் தருகின்றன. வெளிப்பாட்டிற்கான அகவெளியையும் புறவெளியையும் எப்படி விஸ்தரிப்பது என்ற பிரச்சனையை எதிர்கொள்ளும் விதத்தில் எனக்குப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

Monday, April 13, 2015

Why I Refuse to be Silent


"Wow I thought black people are supposed to be scary." This honest and uncensored statement that a little girl recanted as I recited my biographical speech on Florence Nightingale clothed in the white sheets that represented Ms. Nightingale's pure heart tore down my dignity and self-esteem to shreds like a machete chopping off the foundation of a plant. Nevertheless, these words instilled a spark in me to relentlessly stand up for others that are unjustly judged.
Many years later, I was prompted to act when my friend grumbled about how the Day of Silence for LGBTQ individuals that I and some members of the diversity club initiated was garbage. At first I ignored him, but then as I overheard him tell his likeminded friend that he would "never have a college roommate who was gay," that very spark in me was lit and I felt morally obligated to challenge this prejudiced line of thinking.
I began to ask him if he would really refuse to have a roommate who was gay. As our conversation escalated, his face turned red, my heart beat faster, and our voices grew louder. My friend felt that one couldn't be a devout Catholic like myself and yet support gay marriage. I countered by attacking his Biblical argument that gay marriage is a moral abomination with my belief that Christianity should be about love and acceptance of others. After a drawn-out argument in which I constantly refuted my friends points, I remembered that inner beat-down I had suffered many years ago that had really triggered my confrontational stance. This was about a whole lot more than a logical or ethical argument, this was about an attack on my human rights.
I don't know what it feels like to be gay, bisexual, or transgender, but I do know what it is like to have a facade of inferiority hang over me because I look "scary." I know how worthless it is to pat the victim on the back or assure him in times of privacy that "it doesn't matter what she thinks." This applies even in the most intimate of settings as I find my friend is not the only one I must confront on such issues but also my own personal heroes. "But granny regardless of what the bible says isn't the struggle for gay rights just like the struggle for racial equality?" I know that it may seem wrong to challenge those that have unconditionally loved and taken care of you, but I must do so in order to ensure that others can feel this same love from all people.
I speak up because when one sees an injustice and just shrugs one's shoulder it is just like promoting it. We live in a society of interdependence in which we must be allies for each other in all social spheres for the continual progress of society as a whole. If one analyzes any prolonged societal injustice against any social group in history, one will see that a critical component in its persistence was the silent approval of the unaffected. I will admit that it can be very confusing at times to stand up for others, especially when it involves challenging ideal systems I've always considered absolute or people I look up to. But in order to reap the vast benefits of the great diversity around us we must take to heart the sorrows of our fellow human-being and make them our own.


Read more: http://www.businessinsider.com/

Wednesday, October 29, 2014

கரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா

கடவுள் விடுகிற மூச்சைப் போல காற்று வீசும் கரிசல்வெளி
வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம்
கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்
                                                                                                               - தேவதச்சன்
கரிசல் நிலத்தைப் பற்றிய துல்லியமான சித்திரத்தை தேவதச்சனின் இந்தக் கவிதை நமக்குத் தருகிறது.
முள்வேலிக்குள் சிக்கிக் கொண்ட கிழிந்த துணியெனப் படபடத்த படியே ஆகாசத்தின் ஒரே kee.ra.11 இடத்தில் நின்று கொண்டிருக்கும் சூரியனும், ஆட்டுஉரல்களில்கூட நிரம்பி வழியும் வெயிலும், குடிநீருக்காக அலைந்து திரியும் பெண்களும், கசப்பேறிய வேம்பும், கானலைத் துரத்தியலையும் ஆடுகளும், தாகமும் பசியும் அடங்காத காட்டு தெய்வங்களும் கொண்டதுதான் கரிசல் வெளி.
கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும்  தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்.
ஆடுமாடுகளை எப்பாடுபட்டாவது நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற மனஉறுதிகொண்டவர்கள். வெயிலோடு வந்து சேர்பவர்களுக்குக் கருப்பட்டியும் செம்பு நிறைய தண்ணீரும் தந்து தாகசாந்தி செய்பவர்கள். ஆண் பெண் என்று பேதமில்லாத  உழைப்பாளிகள்.  வெள்ளந்தி  மனிதர்கள்.  விடாத நம்பிக்கை கொண்டவர்கள். நடந்து அலைந்து பழகிய கால்களும்,  கஷ்டங்களைக்  கண்டு கலங்கி விடாத நெஞ்சுரமும்  கொண்ட  இந்த  மக்களின் வாழ்க்கை அடுத்த  நூற்றாண்டை  நோக்கி அதி நவீன இந்தியா வளர்ந்து செல்லும் போதுகூட கவனிக்கப்படாமலே தானிருக்கிறது.
இன்று எல்லா கிராமங்களையும் வியாபித்துள்ள டிவியும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளும், ரியல் எஸ்டேட்டும்தான் இந்த ஊர்களுக்கும் புதிய வருகை. நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமங்கள் யாவும் சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டு விட்டன. ஒதுங்கிய கிராமங்களில் உள்ளவர்கள் ஊரை சபித்தபடியே இதில் மனுசன் குடியிருப்பானா என்று அருகாமை நகரங்களை நோக்கி நகரத்துவங்கிவிட்டார்கள்.
இருபது வருசங்களுக்கு முன்பு தீப்பெட்டித் தொழிற்சாலைகள் கரிசல் பூமியின்  தலைவிதியைப் புரட்டிப் போட்டது. இன்று அதுவும் சுவடழிந்து போய்விட்டது. படிப்பு, வேலை, என்று வெளியேறத் துவங்கி விட்ட அடுத்த தலைமுறையோடு நிலங்களை விற்று காசாக்கி வங்கியில் இட்டு அதிலிருந்து வாழ்வது என்ற நடைமுறை மெல்லப் பரவி வருகிறது.
கரிசல் கிராமங்களைக் கடந்து போகும்போது கண்ணில் படும் காட்சிகள் துயரமானவை. இங்கே உழவுமாடுகளைக் காண்பது அரிதாகி விட்டது. ஊரில் விவசாயம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிருக்கிறது. திண்ணை உள்ள வீடுகள் கண்ணில் படவேயில்லை. கிணறுகள் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. அதில் சிறார்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.
மாட்டுவண்டிகள் அச்சாணி முறிந்து கிடக்கின்றன. வண்டி செய்யும் ஆசாரிகள் தொழிலை விட்டே  போய்விட்டார்கள். நகரத்தில் நடைபெறும் கட்டட வேலைகளுக்காக மொத்த மொத்தமாக ஆள் கூட்டிப் போகப்படுகிறார்கள். குடும்பமே கூலிக்காக நகரங்களை நோக்கிக் கிளம்புகிறது. திரும்பி வருவார்களா என்று தெரியாது. ஆனால் இந்தக் கிராமங்களைக் கடந்து செல்லும் சூரியனும் காற்றும் உலர்ந்த மேகங்களும் அப்படியே இருக்கின்றன. வாழ்க்கை மட்டும் புரண்டு கிடக்கிறது
இந்தச் சூழலில் கரிசல் வாழ்வின் நுட்பங்களையும், அதன் கடந்தகாலக் கதைகளையும் இந்தக் கிராமங்களில் வாழ்ந்து மறைந்த மனிதர்களைப் பற்றிய நினைவுகளையும் அறிந்து கொள்வதற்கு இலக்கியப் பதிவுகளே துணை செய்கின்றன.
அப்படி கரிசலைத் தன் எழுத்தின் வழியே ஆவணப்படுத்திய உன்னதக் கதை சொல்லி கி. ராஜநாராயணன். தனி ஒரு ஆளாக அவர் செய்த பங்களிப்பில் இருந்தே கரிசல் எழுத்தாளர்கள் என்று ஒரு மரபு உருவானது.
பூமணி, பா.ஜெயபிரகாசம் கோணங்கி, தமிழ்ச்செல்வன், தேவதச்சன், சோ. தர்மன். முத்தானந்தம், உதயசங்கர், காசிராஜன், கௌரி சங்கர், சாரதி, ஜோதி விநாயகம், மேலாண்மை பொன்னுசாமி, அப்பண்ணசாமி பாரததேவி, என நீளும் கரிசல் எழுத்தாளர்கள் பட்டியல் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது.
இந்தியாவில் வேறு ஏதாவது ஒரு மொழியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஒன்றாக எழுத்தாளர்கள் ஆனதும் இரு வருமே குறிப்பிடத்தக்க வகையில்  இலக்கியத்தை வளப்படுத்தி சாகித்ய அகாதமி பெற்றதும் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ் இத்தகைய பெருமைக்குரியது.
தூத்துக்குடி மாவட்டத்தின் இடைசெவல் கிராமத்தில் பிறந்த கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனனும்  தமிழின் இரண்டு முக்கிய படைப்பாளிகள். இருவரும் பால்யகாலம் முதல் நண்பர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். இருவருமே  எழுத்தாளர்களாகி சாகித்ய அகாதமி பெற்றிருக்கிறார்கள்.
முறையான பேருந்து வசதி கூட இல்லாத கிராமம் அது. கோவில்பட்டி - திருநெல்வேலி பிரதான சாலையில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது. நாளைக்கு ஆயிரம்கார்கள்,  பேருந்துகள்  பிரதான  சாலையில் கடந்து போகின்றன. ஆனால் இலக்கியவாதிகள்  பிறந்த ஊர் கவனம் கொள்ளப் படாமலே கிடக்கிறது.
கு. அழகரிசாமி இடைசெவல் மனிதர்களைத் தன் எழுத்தில் பதிவு நுட்பமாகச் செய்திருக்கிறார். ஆனால் அவர்கள் மொழியில் பதிவு செய்யவில்லை. கிராவின் முக்கிய பங்களிப்பு மக்கள் தமிழில் கதைகளை எழுதியதே. அது பேச்சிற்கும் எழுத்திற்குமான இடைவெளியை வெகுவாகக் குறைத்தது.  நம் எதிரில் ஒருவர் அமர்ந்து கதை சொல்வது போன்ற நெருக்கத்தை உருவாக்கியது.
வட்டார வழக்கு என்று இதை நான் சொல்லமாட்டேன். மாறாக இது ஒரு மரபு. இரண்டாயிர வருட தமிழ் இலக்கியத்தில் நிலம் சார்ந்து உருவாக்கப்பட்ட இலக்கிய மரபின் தொடர்ச்சியிது. தமிழின் நீண்ட கதை சொல்லும் மரபில் இது கரிசல் மரபு என்று அடையாளப்படுத்தலாம்.
கரிசல் எழுத்தின் பீஷ்மராக கி.ராவைச் சொல்ல வேண்டும். சொந்த மண்ணையும் மக்களையும் அவர்களின் வேர்மூலங்களையும் பதிவு செய்த கிராவின் எழுத்து தமிழ் நவீன இலக்கியத்தில் புதிய வாசலைத் திறந்துவிட்டது. ஆப்பிரிக்க இலக்கியம் இன்று என்ன காரணங்களுக்காக உலக அரங்கில் பேசப்படுகின்றதோ அதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே கரிசல் எழுத்தின் வழி தமிழில் துவக்கி வைத்தவர் கிரா.
kee.ra.9 வோலே சோயிங்கா, சினுவா அச்சுபே, என்று ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்குக் கிடைத்துள்ள உலக அங்கீகாரம் இன்றுவரை கிராவிற்குக் கிடைக்கவில்லை. அதைச் செய்ய வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமை.
1992இல் கிராவிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது என்ற தகவல் தெரிய வந்தவுடன் நானும் கோணங்கியும் கோவில்பட்டியில் இருந்து அவரைக் காண்பதற்காக பாண்டிச்சேரி புறப்பட்டோம். வழி முழுவதும்  கிராவைப் பற்றியே பேச்சு. குடும்பத்து மனிதர் ஒருவர் கௌரவிக்கப்படுகிறார் என்பது போன்ற கூடுதல் சந்தோஷம்.
கோணங்கியை கிரா மிகச் செல்லமாக அழைப்பார். உரிமையோடு பேசுவார். ஒருமுறை நானும்  கோணங்கியும் அவரைச் சந்திக்க இடை செவல் சென்றபோது கோணங்கி கதையைப் பற்றி வியந்து வியந்து சொல்லிக் கொண்டிருந்தார் கிரா.
அவர் படித்து ரசித்த கதைகளைப் பற்றிச் சொல்வதைக் கேட்பது ரசமான அனுபவம். அப்படி ஒரு எழுத்தாளன் எழுதும் போதுகூட அனுபவித்திருப்பானா  என்று  தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக  பலாப்பழத்தைச் சுளை சுளையாக எடுத்துக் கையில் தருவது போல விளக்கிச் சொல்வார்.
பாண்டிச்சேரிக்குப் போய் இறங்கி கிரா வீட்டினைத் தேடிச் சென்றோம். இடைசெவலில் இருந்த அவர் புதுவைப் பல்கலைக் கழகத்தின் நாட்டார் வழக்காற்றியல் துறையின் வருகைதரு பேராசிரியராகப் புது அவதாரம் எடுத்திருந்தார். புதுவை வாசம் அவரது தன்னியல் பிறகு மெருகேற்றியிருந்தது. பிரெஞ்சு இலக்கியவாதிகளைப் போல நைனாவும் வாக்கிங் போகிற அழகு பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது என்று கோவில்பட்டியில் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள்
ஊரில் இருந்த நாட்களில் கிராவைப் பார்த்திருக்கிறேன். கோவில்பட்டியிலிருந்து இடைசெவல் போகின்ற டவுன்பஸ்ஸிற்காக கோபாலன் கம்பெனி முன்னால் உள்ள புளிய மரத்தடியில் நின்று கொண்டிருப்பார். அவரோடு காத்திருப்பவர்கள் அத்தனை பேரும் விவசாயிகள். அவரும் ஒரு விவசாயியே. ஒரே சிறப்பு, கதை எழுதத்தெரிந்த விவசாயி.
கோவில்பட்டியின் புழுதியை தாங்கிக் கொண்டு பஸ் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருப் பதைக் கண்டிருக்கிறேன். சில நாட்கள் தேவதச்சன் கடையில் வந்து நின்று அவரோடு பேசிக் கொண்டிருப்பார். கையில் எப்போதும் ஒரு மஞ்சள் பையிருக்கும். தெரிந்த முகத்தைப் பார்த்தவுடன் முகத்தில் சிரிப்பு மலரும். இணக்கமாகப் பேசத் துவங்குவார்.
கிரா விவசாய சங்கத்தில் தீவிரமாக இருந்த நாட்கள் அது. அதைப் பற்றி தேவதச்சனுடன் விவாதம் செய்தபடியே இருப்பார். தொலைவில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருப்பேன்.
அன்றைக்கு பாண்டிச்சேரியில் அவர் வீட்டிற்குப் போன போது இம்புட்டு தொலைவிலிருந்து வந்திருக்கிறார்களே என்று எங்களுக்கு ஒரே உபசாரம். கிரா வீடு உபசரிப்பிற்குப் பெயர் போனது. அதிலும் கணவதி அம்மாவின் அன்பு அளப்பறியது. விருந்தாளிகளைக் கவனிப்பதற்கு என்று தனியே படித்திருப்பார்கள் போலும். அப்படிப் பார்த்துப் பார்த்துக் கவனிப்பார்கள்.
சாகித்ய அகாதமி விருது கிடைத்ததை ஒட்டி நிறைய பேர் வருவதும் பாராட்டுவதுமாக இருந்தார்கள். நாங்கள் அவரைத் தொந்தரவு படுத்த வேண்டாம் என்று கிளம்பி அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பினோம். வழியிலும் கிரா பற்றிய பேச்சு நீண்டது. நைனா அப்படியே இருக்காரு என்று கோணங்கி வியந்தபடியே வந்தார்.
நான் கிராவை முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் என்ற ஊரில் நடை பெற்ற இலக்கிய முகாமில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன்.
அந்த முகாம் ஒரு டூரிங் தியேட்டரில் நடைபெற்றது. பகலில் காட்சிகள் கிடையாது என்பதால் இலக்கிய முகாம் நடத்த இடம் தந்திருந்தார்கள். முப்பது நாற்பதுபேர் வந்திருப்பார்கள். கிரா கரிசல்கதைகள் பற்றி உரையாற்றினார். கந்தர்வன் முற்போக்கு இலக்கியம் பற்றிப் பேசினார். தோழர் எஸ்.ஏ.பெருமாள் மாக்சிம் கார்க்கி பற்றிப் பேசினார். இப்படி பகல் முழுவதும் நடந்தது. அந்தப் பயிற்சி முகாமிற்குப் போகும் முன்பு என் அண்ணன் அங்கே நடப்பதைக் குறிப்பெடுத்து வர வேண்டும் என்று சொல்லியிருந்தான்.
ஆகவே நான் முதல்வரிசையில் அமர்ந்தபடியே ஒரு நோட்டில் மிகக் கவனமாகக் குறிப்புகளை எழுதிக் கொண்டேயிருந்தேன். கிரா என்னை ஏதோ ஒரு பத்திரிகையின் செய்தியாளர் என்று நினைத்திருக்க  வேண்டும். மதிய உணவின் போது எந்தப் பத்திரிகை என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு அவரே விளக்கிச் சொன்னார். நான் கல்லூரியில் படிக்கின்றவன் என்று சொன்னதும், அப்படியா, நான் தப்பா நினைச்சிட்டேன் என்றபடியே இதை என்ன செய்வீங்க என்று கேட்டார். நான் தெரியலை என்றேன். அவருக்குச் சிரிப்பு வந்தது. பிறகு எதுக்கு இந்த சள்ளை பிடிச்ச வேலை என்று கேட்டார்.
மதியம் நான் குறிப்பு எடுக்கவேயில்லை. அதை அவர் கவனித்து  சிரித்துக் கொண்டார். சில எழுத்தாளர்களைச் சந்திக்கும்போது நாம் விரும்பாமலே வேறு ஒரு பிம்பம் நம்மைப் பற்றி உண்டாகிவிடும். அப்படிப் பலமுறை எனக்கு நடந் திருக்கிறது என்று சொன்னேன். கோணங்கியும் சிரித்துக் கொண்டார்
இதற்கு முன்பாக நான் கிராவைப் படிக்கத் துவங்கிய விதமும் திருகு தாளமாகவே நடந்தேறியது.
ஆல்பெர் காம்யூ, காப்கா, சார்த்தர், ஹெஸ்ஸே என்று தேடி வாசித்துக் கொண்டிருந்த நாட்களில் கிராவின் கதைகள் எனக்கு அறிமுகமானது. அவரைப் படிக்கப் படிக்க யாரோ தெரிந்த மனிதர் தான் சந்தித்த  விஷயங்களை நேரிடையாகச் சொல்கிறாரோ என்று தோன்றியது. இது ஒன்றும் பெரிய s விஷயமில்லையே இதை எதற்குக் கொண்டாடுகிறார்கள் என்றும் மனதில்பட்டது.
சிறுகதைகள் என்றால் வடிவ நேர்த்தியும் கவித்துவமான மொழியும் பன்முகத்தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தேன். அப்படி இல்லாத கதைகளை யார் எழுதியிருந்தாலும் உடனே நிராகரிக்க வேண்டும் என்றும் பழகியிருந்தேன்.
இதனால் கிராவின் சிறுகதைகளைப் படித்தவுடன் ஒரு தபால் அட்டையில் இவை எல்லாம் என்ன கதைகள் என்பது போல கடுமையாக விமர்சனம் செய்து அனுப்பி நீங்கள் காம்யூ, சார்த்தர், ம்யூசில் ஹெஸ்ஸே எல்லாம் படிக்க வேண்டும் என்று நீண்ட பட்டியலை எழுதியிருந்தேன். சில நாட்களில் அவரிடமிருந்து பதில் வந்தது. நீங்கள் நிறைய படிக்கிறீர்கள். இது ஜீரணமாக கொஞ்ச நாள் ஆகும். அப்புறம் என்னைப் படித்துப் பாருங்கள் என்று எளிமையாக எழுதியிருந்தார். அது உண்மை என்று புரிந்தது.
ஆரம்பகால இலக்கியவாசகன் எப்போதுமே பரபரப்பும் எடுத்தெறியும் விமர்சனங்களும் கொண்டிருப்பான். அப்படித்தான் நானும் இருந்தேன். ஆனால் தொடர்ந்த வாசிப்பும் எழுத்தும் பார்வையை விசாலப்படுத்தியது. பல விஷயங்களைப் புரிய வைத்தது.
மண்ணையும் மனிதர்களையும் எழுதுவது அத்தனை எளிதல்ல என்பதைப் புரிந்து கொள்ளத் துவங்கிய பிறகு அவரது கதைகளைப் படிக்கத் துவங்கினேன். கதைகளில் சம்பவங்கள் மட்டுமின்றி பறவைகள், மிருகங்கள், மனித நம்பிக்கைகள், சடங்குகள், வெயில், மழை, காற்று, மண் என்று நுட்பமாக விரிந்து கொண்டே போனதோடு தனித்துவமான கிராமத்துச் சொற்கள், அசலான கேலி, பாலியல் சார்ந்த பதிவுகள் என்று கதையுலகம் வளர்ந்து கொண்டே போனது.
கிரா ஒரு கதைக்களஞ்சியம் போலிருந்தார். முதன்முறையாக என்னைச் சுற்றிய உலகை நான் பார்த்துக் கொள்ளத் துவங்கினேன். மஞ்சனத்திச் செடியும் தும்பையும் நெருஞ்சியும் அவர் கதைகளில் வந்தது போல ஏன் என் எழுத்திற்குள் வரவேயில்லை என்று கேட்டுக் கொண்டேன். தவிட்டுக் குருவிகள், தைலான், செம்போத்து, நாரை, கௌதாரி போன்ற பறவைகள் ஏன் நவீனக் கதைகளை விட்டு விலகிப் பறந்து போகின்றன. கார்க்கியின் கிழவி இஸர்கீலை ரசிக்கத் தெரிந்த எனக்கு ஏன் கிராவின் பப்பு தாத்தா சாதாரணமாகத் தெரிந்தார் என்று குற்றவுணர்ச்சி கொள்ளத் துவங்கினேன்.
தத்துவமும் மெய்யியலும் மட்டுமே வாழ்வின் தரிசனங்களை உருவாக்குபவை என்று நினைத்துக் கொண்டிருந்தது மாறி வாழ்வின் அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து பெறும் அகதரிசனம் தத்துவம் தரும் உன்னத நிலைகளைவிடவும் வலிமையானது என்று புரிந்தது.
கிராவைத் தேடித் தேடி வாசித்தேன்.  அவரது  படைப்புலகில்  எனக்கு மிக  விருப்பமானது கோபல்ல கிராமம் நாவல். அது இலக்கியப்பதிவு மட்டுமில்லை. ஒரு சமூகம் எப்படி நம்மண்ணில் வேர் ஊன்றியது என்ற சரித்திர ஆவணம். நாட்டார் மரபு எப்படி நிலம் கடந்து தொடர்கின்றன என்று ஆய்வதற்கான  சான்றுப் பொருள். நினைவுகள் எவ்வளவு வலிமையானவை என்பதை நிரூ பணம் செய்யும் சாட்சி. மானுடவியல் நோக்கில் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் ஆய்வுப்படைப்பு. இப்படி அது பன்முக நிலைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நாவலது.
கிராவின் சிறுகதைகள் சொல்மரபிலிருந்து உருவானவை. அவை கதைகளின் வழியே மனித வாழ்வின் துயர்களை, சந்தோஷங்களை, அகச்சிக்கல்களைப் பேசுகின்றன. அவர் அலங்காரமாகக் கதை சொல்வதில்லை. ஆனால் உயிரோட்டமாகக் கதை சொல்கிறார். கடலைச் செடியை மண்ணிலிருந்து பிடுங்கினால் எப்படி வேரில் ஒட்டிய மண்ணோடு சேர்ந்து வருமோ அப்படியான படைப்பது. எளிய கிராமத்து மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை அவர் அளவு உன்னிப்பாக எழுதியவர் வேறு எவருமில்லை.
விஞ்ஞானத்தின் வருகை கிராமத்து வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டது என்பதைப் பற்றிய பதிவுகள் தமிழில் அதிகம் இல்லை. கிரா அதைக் கவனமாகப் பதிவு செய்திருக்கிறார். டீ தயாரிக்கும் கம்பெனிகள் எப்படி இலவசமாக தேயிலைகளை வீடு வீடாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்பதில் துவங்கி, கடிகாரம் வந்தது ரயில் வந்தது என்று நீண்டு விஞ்ஞானம் கிராமத்தில் நுழையும் போது ஏற்படும் அதிர்ச்சிகளை அசலாகப் பதிவு செய்திருக்கிறார். அது போலவே சுதந்திரப் போராட்ட நாட்களில் தமிழ்க் கிராமங்கள் எப்படியிருந்தன என்பதற்கும் அவரது கதைகளே நேர் சாட்சிகள்.
திருடனை எப்படிக் கழுவேற்றினார்கள் என்பதை அவரது கதையில்தான் முதன்முறையாக வாசித்துத் தெரிந்து கொண்டேன். சமணர்களைக் கழுவேற்றிய சரித்திர உண்மைகளைப் படித்து அறிந்திருந்த போதும் கழுமரம் எப்படியிருக்கும் அது என்னவிதமான தண்டனை என்பதை அவரே முதன்முதலில் விரிவாக விளக்கி எழுதியிருந்தார்.
ஒரு முறை நகுலனைச் சந்திக்கச் சென்றபோது அவர் தன்னுடைய அம்மா கிராவின் கதை ஒன்றை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். கரிசல்காட்டில் ஒரு சம்சாரி என்ற கதையது. அந்தத் தலைப்பு அவளை ஏதோ செய்தது. அடிக்கடி தலைப்பை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பாள். பெண்கள் நாம் படிக்கும் அதே கதைகளை வேறு விதமாகப் படிக்கிறார்கள் போலும் என்றபடியே உங்களுக்கு கிராவைப் பிடிக்குமா என்று கேட்டார். ஆமாம் என்றபடியே உங்களுக்கு என்று கேட்டேன். இரண்டு கைகளையும் உயர்த்தியபடியே அசலான எழுத்தாளர் என்று சொல்லிச் சிரித்தார். நகுலனின் எழுத்தில் கிராவின் எழுத்து பற்றிய நுட்பமான பதிவு சில இடங்களில் வெளிப்பட்டுள்ளது.
கதவு என்ற கிராவின் கதை அது எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வாசிக்கபட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறது. சமீபத்தில் பிரெஞ்சில் இருந்து வந்த ஒரு ஆய்வாளரைச் சந்தித்தேன். அவர் அந்தக் கதையை தான் பிரெஞ்சில் வாசித்திருப்பதாகவும் அது அற்புதமான கதை என்றும் சொல்லி வியந்தார்.
எழுத்தாளர் என்ற முறையில் தன் மண்ணையும் மக்களையும் இலக்கியமாக்கியதோடு கிராவின் பணி முடிந்துவிடவில்லை. நேரடியான அரசியல் ஈடுபாடும் கொண்டவர் கிரா. இடதுசாரி இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றியவர். சிறை சென்றவர். விவசாய சங்கங்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டுமுறை சிறை சென்றிருக்கிறார்.
அதுபோலவே நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்துப் பாதுக்காக வேண்டும், அது தனிவகை இலக்கியம் என்று பல ஆண்டுக்காலமாக அவர் மேற்கொண்ட முயற்சி தற்போது ஆயிரம் பக்கத்திற்கும் மேலான பெரிய நூலாக வெளிவந்துள்ளது.
அத்தோடு நாட்டுப்புறக்கதைகள் பற்றி ஆய்வு செய்யவும் கற்றுத் தருவதற்காகவும் புதுவைப் பல்கலைக்கழகம் அவரை பேராசிரியர் ஆக்கி கௌரவப்படுத்தியது. நாட்டுபுறக் கதைகளிலும் பாலியல் சார்ந்த கதைகளைச் சேகரிப்பதில் பலரும் முகச்சுழிப்பு கொண்டபோது பாலியல் மனிதனின் ஆதார இச்சை, அதை எதற்காக விலக்க வேண்டும் என்று பாலியல் கதைகளைச் சேகரித்து, அதைத் தனித்த நூலாகவும் மாற்றியவர் கிரா.
இன்னொரு பக்கம் கரிசல் வட்டாரச் சொற்களைத் தொகுத்து அகராதி உருவாக்கியிருக்கிறார். கடித இலக்கியம் என்ற வகையை மேம்படுத்தியது அவரது கடிதங்கள். அழகிரிசாமிக்கும், நண்பர்களுக்கும் அவர் எழுதிய கடிதங்கள் அபூர்வமான இலக்கியத் தன்மை கொண்டவை.
தாமரை, சாந்தி, தீபம் என்று இலக்கிய இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த கிரா விகடனில் எழுதியதன் வழியே பரவலான பொது வாசகர்களைச் சென்று சேர்ந்தார். அது அவருக்கெனத் தனித்த வாசக பரப்பை உருவாக்கியது. இசையிலும் பழந்தமிழ் இலக்கியங்களில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு அலாதியானது. விளாத்திகுளம் சாமிகளிடம் நேரடியாக இசை பயின்றிருக்கிறார். டிகேசியிடம் கம்பராமாயணம் கேட்டு அறிந்திருக்கிறார். இப்படி ஆயிரம் சிறப்புகள் கிராவிற்கு உண்டு.
சென்றஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிராவைச் சந்தித்தேன். கையைப் பிடித்தபடியே அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அவரோடு அவரது பேரன் நின்றிருந்தார். சென்னையில் கணிப்பொறித் துறையில் வேலை செய்கின்றவர். அவரை அறிமுகம் செய்து வைத்து இவன் உங்களைத்தான் விரும்பிப் படிக்கிறான் என்று சொல்லி சென்னையில்தான் இருக்கான், உங்களைச் சந்திக்கச் சொல்கிறேன் என்று சொன்னார். பத்து நிமிசம்தான் பேசியிருப்போம். ஆனால் மனதில் விளக்கிச் சொல்லமுடியாத சந்தோஷம் உருவானது.
மகாகவி தாந்தேயின் கண்ணில் பட்ட புலி ஒன்று அவரது கவிதையின் வழியே நித்தியத்துவம் அடைந்து விட்டது என்று போர்ஹே ஒரு கதையை எழுதியிருப்பார். ஒரு வகை யில் கிராவின் வழியே கரிசல் கிராமங்கள் தன் வாழ்க்கையை எழுதிப் பாதுகாத்து வைத்துக் கொண்டுவிட்டன என்றே தோன்றுகிறது
*****
நன்றி: உயிர்மை