Search This Blog

Showing posts with label Cooking and Recipes. Show all posts
Showing posts with label Cooking and Recipes. Show all posts

Sunday, August 22, 2021

மட்டக்களப்பின் சாப்பாட்டுக்கு பெருமை

 


மட்டக்களப்பின் சாப்பாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் மட்டக்களப்பு வாவிக்கு முக்கியமான இடம் உண்டு. இலங்கையின் எந்தப்பகுதியிலும் காணக்கிடைக்காத ஏராளமான மீன் வகைகள் மட்டக்களப்பு வாவியில் கிடைக்கும்.

அதைவிட முக்கியமானது, ஒவ்வொரு வகை மீனையும் எப்படிச் சமைக்க வேண்டுமென்ற ஸ்பெசல் ரெசிப்பியை மட்டக்களப்புப் பெண்கள் கண்டு பிடித்து வைத்துள்ளார்கள்.
உளுவை மீன் சுண்டல்.
என்ன மீன் சுண்டலா? என்று நினைப்பீர்கள். உளுவை மீன் என்றொரு வாவி மீன். அதைச் சுண்டல் வைத்தால் நாக்கில் சுவை நாளு நாளைக்கு நிற்கும். ஆனால் அதே மீனை வேறு எப்படிச் சமைத்தாலும் நாயும் சாப்பிட ஏலாது.
ஏறுகெழுத்தி மாங்காய் அவியல் என்றொரு ஐட்டம் உள்ளது. இது சாதாரண கெழுத்தி போல அல்ல. மழைகாலத்தில் மட்டும் கிடைக்கும் சினைக்கெழுத்தி. அதை மாங்காய் சேர்த்து கெட்டியான தேங்காய்பாலுடன் சமைப்பார்கள், சும்மா தேவாமிர்தமாய் இருக்கும். அதுவும் அதனுள் இருக்கும் முட்டையைச் சாப்பிடக் கோடிபுண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அப்படியே விரால் என்றால் கெட்டியான குழம்பு, மணலை என்றால் கெட்டிப்பால் சொதி, செத்தலி என்றால் மிளகு அரைத்த குழம்பு, பனையான் என்றால் குழம்பு வரட்டல் என மீன்களின் வரைட்டி போல கறிகளின் வரைட்டியும் அதிகம்.
திரளி, ஒட்டி, ஓரா போன்ற மீன்களை மற்ற இடங்களில் சாப்பிடக்கிடைத்தாலும் அவற்றின் சுவை ஊரில் சாப்பிட்டது போல இல்லையே என ஆராய்ந்தபோதுதான் மற்ற இடங்களில் அவை கடல் மீன்கள் ஆனால் மட்டக்களப்பில் அவை வாவி மீன்கள் என்ற உண்மை தெரியவந்தது. மட்டக்களப்பு வாவிக்கும் கடலுக்கும் நேரடித்தொடர்பு இருப்பதால் நிறைய கடல் மீன்கள் வாவிக்கு இசைவாக்கமடைந்து வித்தியாசமான சுவையுடன் வளர்வது மட்டக்களப்பின் சாப்பாட்டுக்கு சிறப்பாய்இருக்கிறது. மீன்களின் இந்த சுவைமாற்றம் பற்றி ஆராய்வது விலங்கியல் துறை மாணவர்களுக்கு சிறப்பான ஆராய்ச்சியாக அமையும்.
இந்த புவியியல் அமைப்பின் காரணமாக இறால்களும் நண்டுகளும்கூட வித்தியாசமான சுவையுடையவாக கிடைக்கும். மட்டிறால் என்றொரு இறாலைச் சொதி வைத்தால் பத்து வீடு தாண்டியும் மணக்கும். அந்தச்சொதியை மட்டும் கலந்தே 4 பிளேட் சோறு சாப்பிடலாம்.
மட்டக்களப்பு நண்டு பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லாததால், சின்ன அனுபவத்தை மட்டும் சொல்கிறேன். யாழ் பல்கலைக்கழகம் போன புதிதில், சாப்பாட்டு நேரத்தில் வந்த ஒரு சீனியர், ராகிங் என்ற பெயரில் ஒரு கவிதை சொல்லு என்றார். அப்போது நண்டுக்கறி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
நான் சொன்ன கவிதை,
"நண்டு என்றுதான் சாப்பிடத்தொடங்கினேன்
கடித்ததோ வெறும் வண்டு"
கேட்டவர் மட்டக்களப்புச் சீனியர் என்பதால் தப்பித்தேன்.
நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து டோர்ச் லைட்டும் தென்னை மட்டையும் கொண்டுபோய் கடல் ஓரத்தில் ஓடித்திரியும் ஒரு பிராணியைப் பிடிச்சு பொறிச்சுச் சாப்பிடுவோம். அந்தப்பிராணியைத்தான் நண்டு என மற்ற இடங்களில் ஏமாற்றி விற்கிறார்கள் பிளடி ராஸ்கல்ஸ்.
மற்ற இடங்களில் கிடைக்கும் கடல் மீன்களான அறுக்குளா, சுறாய், சூரை, விழல் என எல்லாம் மட்டக்களப்பிலும் கிடைக்கும். அவற்றை நாம் பெரிதாய்க் கண்டு கொள்வதில்லை.
என்னடா இவன் மீன் பற்றியே கதைக்கிறானே மரக்கறி சாப்பிடுவதில்லையா என யோசிக்கிறீர்களா?
திராய்ச் சுண்டல் என்று கேள்விப்பட்டு உள்ளீர்களா?
வாய்க்கால் ஓரத்தில் மட்டும் வளரும் திராய் என்ற செடி. தேங்காய்ப்பூ போட்டு சுண்டல் வைத்தால் அதோடு மட்டும் ரெண்டு பிளேட் சோறை காலியாக்கலாம்.
குறிஞ்சா இலையின் கசப்புத் தெரியாமல் சுண்டல் வைப்பது மட்டக்களப்பாருக்கு மட்டுமே கைவந்த கலை.
தூதுவளை சம்பல், முடக்கொத்தான் சுண்டல் எல்லாம் மட்டக்களப்புத்தாண்டி எங்கேயும் நான் அன்றாட உணவில் கண்டதில்லை.
கீரை என்றால், மசித்து கூழ் போல் சாப்பிடுவதுதான் மற்ற இடத்தின் வழக்கம். மன்னிக்கவும், மட்டக்களப்பில் அப்படிச் சமைக்க ஏலாது. மண்டூர் கீரையின் தண்டே பெருவிரல் அளவு இருக்கும்.
அதை தேங்காய்பூ கூட்டு அரைத்து சமைத்தால், கீரையின் தண்டையே ராஜ்கிரண் கோழிக்கால் சாப்பிடுவதுபோல ஸ்டைலாக சாப்பிட்டு முடிக்கலாம்.
தண்டுக்காய் கறி என்றொரு ஐட்டம்.
மற்ற இடங்களில் கஜூ கடையிலே வாங்கிச் சமைப்பார்கள். ஆனால் மட்டக்களப்பிலே கஜூவை கொட்டையிலிருந்து ஈர்கிலால் குத்தி பிரஷாக எடுத்து, அதோடு பிஞ்சு முந்திரியங்காயைப்போட்டு வைப்பார்கள் பாருங்கள் ஒரு கறி.....மன்னிக்க, அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னொரு பதிவில் தொடர்கிறேன்.
பதிவு : dr.sivachandran
படம்: ஏறுகெழுத்தி பால்கறி

Wednesday, March 20, 2019

யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் செய்முறை (கூழ் - kool - seafood soup





கூழ் செய்யத் தேவையான பொருட்கள்:

பயிற்றம்காய், பூசணிக்காய், பலாக் கொட்டை

நண்டு, இறால், கணவாய், இரு சிறிய துண்டுகள் பருத்தித்துறைக் கருவாடு
சிறிது அரிசி
பழப் புளி
உப்பு
சிறிது பச்சை ஒடியல் மா ( தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற வைத்து மா கீழே அடைந்தவுடன் தெளிந்த நீரை வடித்து விடவும்).
காய்ந்த செத்தல் மிளகாய், உள்ளி, மிளகு ( மிளகாயை சிறிது நேரம் ஊறவிடவும், முதலில் மிளகை அரைக்கும் இயந்திரத்தில் இட்டு தூளாக்கி பின்பு அதனுள் ஊறிய செத்தல் மிளகாயைப் போட்டு அரைத்து பின்பு அதனுள் உள்ளித் துண்டுகளைப் போட்டு அரைத்து பின்பு சிறிது நீர்விட்டு நன்றாக பசையாக அரைத்து எடுக்கவும்).

செய்முறை:

முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.
இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.)
தண்ணீரில் கழுவிய அரிசி, பயிற்றங்காய்த் துண்டுகளை தேவையான அளவு நீர் சேர்த்து அவியவிடவம். அவை சிறிது அவிந்த பின்பு மரவள்ளி, பலாக் கொட்டை சேர்த்து சிறிது அவிய விட்டு பின்பு பூசணி, கடல் உணவுகள் அரைத்த மிளகாய், உள்ளிப் பசையைப் போட்டு நன்கு அவியவிடவும். பின்பு பழப்புளிக்கரைசல் தேவையான அளவு உப்பு இட்டு நன்றாக கொதித்து எல்லாப் பொருட்களும் அவிந்த பின்பு ஒடியல்மாக் கலவையை இட்டு ஒரு தரம் கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். ஒடியல் மா சேர்த்த பின்பு அதிக நேரம் கொதிக்க விட்டால் கூழ் இறுகி தடித்துவிடும் சுவை குறைந்து விடும். 
சிலர் கடல் உணவுகளில் பெரிய மீன் துண்டுகளும் சேர்ப்பார்கள். ஆனால் நான் இடுவதில்லை. 
மீன் சேர்த்தால் அதன் வாடை கூழிலும், வீட்டிலும் அதிகமாக இருக்கும்.

உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும். கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேசக் கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்கக் கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம், கூழின் காரத் தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

Tuesday, July 11, 2017

ஒடியல் கூழ் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் என்றால் நினைவிற்கு வரும் உணவுகளில் பிரதானமானது ஒடியல் கூழ். நினைக்கும்போதே நாவில் சுவையூறும் யாழ் ஒடியல் கூழ் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
ஒடியல் மா : 1/2 கிலோ
மீன் : 1 கிலோ ( சிறு மீன்கள் உங்கள் விருப்பம்போல்)
நண்டு : 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் மிகவும் நல்லது)
இறால் : 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
நெத்தலி மீன் கருவாடு 100 கிராம்
பயிற்றங்காய் : 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் : 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
அரிசி : 50 கிராம்
செத்தல் மிளகாய் : 15 அரைத்தது
பழப்புளி : 100 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும்.
செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக பசை போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.
இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும். அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.
நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.
உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.
கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேசக் கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் சிக்கக் கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம், கூழின் காரத் தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

Wednesday, May 25, 2016

சிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு ..


1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை
2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா
3. சிதம்பரம் கொத்சு
4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்
5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை
6. கும்பகோணம் பூரி-பாஸந்தி
7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்
8. மன்னார்குடி அல்வா
9. கூத்தாநல்லூர் தம்ரூட்
10. நீடாமங்கலம் பால்திரட்டு
11. திருவையாறு அசோகா
12. கும்பகோணம் டிகிரி காபி
13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா
14. கோவில்பட்டி கடலை மிட்டாய்
15. ஆம்பூர் தம் பிரியாணி
16. நாகர்கோவில் அடை அவியல்
17. சாத்தூர் சீவல்
18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்
21. மணப்பாறை அரிசி முறுக்கு
22. கீழக்கரை ரொதல்அல்வா
23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி
24. பண்ருட்டி முந்திரி சாம்பார்
25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்
26. சாயல்குடி கருப்பட்டி காபி
27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா
28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்
29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி
30. புதுக்கோட்டை முட்டை மாஸ்
31. தூத்துக்குடி மக்ரூன்
32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி
33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு
34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்
35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்
36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..
1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை
உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.
"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்"

Sunday, May 22, 2016

பூண்டு குழம்பு !!


என்னென்ன தேவை?
சின்ன வெங்காயம் -100 கிராம்
தக்காளி -1
பூண்டு -50 கிராம்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லித்தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
புளி-தேவையான அளவு
தாளிக்க...
எண்ணெய் -தேவையான அளவு
கடுகு -1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோல் உறிக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிய பின் புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டை போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பின்னர் அதில் தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு மற்றும் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான காரக்குழம்பு தயார்.

Sunday, January 3, 2016

Spicy Thai Chicken Wings


  • 10 Vegan Chicken Wings (Defrosted. We went with the same Chicken Drumsticks from May Wah that we used for the Buffalo Chicken Wingsrecipe, but you can also use Match Vegan Meat's Chicken and put on a Popsicle stick like we did for the Ribs recipe, or even use your favorite vegan chicken product like Gardein or Litelite on a bamboo skewer.)
  • 1/4 Cup Sherry
  • 1/4 Cup Braggs
  • 1/4 Cup Agave Nectar
  • 3 Tablespoons Fresh Cilantro (chopped)
  • 2 Tablespoons Chili Sauce
  • 2 Tablespoons Lime Juice
  • 2 Tablespoons Grated Lime Peel
  • 4 Green Onions (chopped)
  • 3 Cloves Garlic (minced)
  • Olive Oil Cooking Spray

Heat oven to 375.

In a large glass dish or bowl, mix All Ingredients except Vegan Chicken and Cooking Spray until well-blended. Toss in defrosted Vegan Chicken, and with a spoon, make sure the vegan Chicken is completely covered in the Sauce Mix. Marinade for 30 minutes. Depending on how shallow your dish or bowl is, you may want flip the Vegan Chicken a few times to makes sure one side doesn't get more flavor than another.

Spray a glass baking dish large enough to hold your wings with Olive Oil cooking spray. Place marinated Vegan Chicken in the dish. Try to make sure they aren't touching. Pour 1 Tablespoon of the Marinade/Sauce over each Vegan Chicken Wing. Bake uncovered for 30 minutes. Flip Vegan Chicken Wings once half way through baking.

When you serve, put the leftover Marinade/Sauce in a dish to dip in. The fresh Cilantro, Green Onions, Lime Juice and Spiciness are really spectacular and the sauce adds a but more au jus that's messy, but worth it.

Friday, December 25, 2015

திருவாதிரைக் களி ஏன்? செய்வது எப்படி?

திருவாதிரை அன்று ஏன் களி படைக்கிறோம் தெரியுமா?
சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தனார் என்றொரு விறகுவெட்டி வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி, நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

-மாலதி பத்பநாபன்
தேவையானவை: அரிசி - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், தண்ணீர் - இரண்டரை கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் - சிறிதளவு.

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். அரிசியை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அரிசி ரவையில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேக வைக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.
வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் காய வைத்து வடிகட்டி, கொதிக்கவிடவும். கொதிக்கும் பாகில் அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். இது வெந்ததும், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும்.
‪#‎திருவாதிரைக்களி‬ ‪#‎சக்திவிகடன்‬

Saturday, November 7, 2015

தீபாவளி ஸ்பெஷல்: மைசூர் பாகு


தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்,
சர்க்கரை - 2 கப்,
நெய் - 3 கப்,
தண்ணீர் - 1 கப்.
செய்முறை :
* கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும்.
* அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்)
கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.
* அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும்.
* மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட
வேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.

Sunday, November 1, 2015

பனங்காய்ப் பணியாரம்:-



பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மாச் சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும் சுவையாகவும் இடுக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.
தேவையான பொருட்கள்
01. பனம்பழம் – 02
02. கோதுமை மா – 1/2 கிலோ கிராம்
03. சீனி – 400 கிராம்
04. உப்பு – தேவையான அளவு
05. தண்ணீர் – தேவையான அளவு
06 தேங்காய் எண்ணெய் – 1/2 லீற்றர்
செய்முறை
01. பனங்காயுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் உள்ள பனங்களியை நன்றாகப் பிழிந்தெடுக்க வேண்டும்.
02. அதன் பின்னர் பனங்களியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் சீனி, தேவையான அளவு உப்புச் சேர்த்து, பனங்காயின் பச்சை வாடை போகும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும்.
03. காய்ச்சிய பனங்களி நன்றாக ஆறியதும், கோதுமை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்றாகக் குழைக்க வேண்டும்.
04. அடுப்பில் ஒரு தாச்சியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் அதில் பனங்களிக் கலவைவையை சிறு சிறு உருண்டைகளாகப் போடவேண்டும்.
05. பனக்காய்ப்பணியாரம் பொன்னிறமாக வரும்போது வடித்து இறக்குங்கள்.
06. ஆரோக்கியமான, சுவையான பனங்காய்ப் பணியாரத்தை ஆறவைத்துப் பரிமாறுங்கள்.
குறிப்பு –
பனங்காய்ப் பணியாரத்தை நன்றாக சூடு ஆறிய பின்னர் உண்ண வேண்டும். காரணம் என்னவெனில் பனங்காய்ப் பணியாரத்தை சூடாகச் சாப்பிட்டால் ஒருவித கசப்புத்தன்மை இருக்கும். அதுமாத்திரமல்லாமல் வயிறு சம்பந்தமான நோய்களும் ஏற்படும்.

Tuesday, May 26, 2015

Chocolate Hazelnut Fudge Bars.


Allergen Information: Free of dairy, egg, corn, gluten, yeast
Ingredients: Makes a medium bread pan 9 by 5 inch
1/2 cup coconut milk or other non dairy milk
1.5 oz vegan dark chocolate, 1/3 to 1/2 cup, (1/2 of 3 oz Theo 70% Cacao Dark Chocolate)
3/4 cup Justins chocolate hazelnut butter or plain homemade hazelnut butter
1 tsp vanilla extract
3/4 to 1 cup dates, pitted
Method:
1. Soak the dates in warm water for 10 to 15 mins.
2. Heat coconut milk until almost hot then take off heat. Add chocolate and let sit for half a minute, then whisk to melt.
3. Blend the melted chocolate, nut butter, vanilla, dates until smooth. Taste and adjust sweet, chocolate etc. Blend well. Pour into parchment lined pan. Freeze for 2 hours. Slice and serve or slice and freeze in airtight container.
To make quick Nutella shake: Take 2 to 3 pieces of the fudge or 3 tbsp vegan nutella(chocolate hazelnut butter), 3/4 cup almond milk, sweetener to taste, ice cubes. Blend and serve.
Note: Use any nut butter for variations. Use seed butter to make nut-free. Blend with 2 cups coconut milk to make nutella ice cream.
http://www.veganricha.com/…/chocolate-hazelnut-fudge-bars.h…

Monday, May 18, 2015

RECIPE OF MUTTON PEPPER CHOPS CURRY STYLE



Ingredient Name     Quantity      Unit
pepper powder 1 1/2Teaspoons
butter 1Teaspoons
coriander powder 1Tablespoons
coconut powder 1Tablespoons
red chilli powder 1/2Teaspoons
salt as per tasteTo Taste
curry leaves 7Leaf
Turmeric Powder pinchPinch
Ginger Garic Paste 1Teaspoons
onions 1Cup
Oil 1 1/2Tablespoons
Garama masala 2 eachNumbers
Lamb chops 500Grams
coriander leaves 1Bunch
garam masala podwer pinchPinch







  1. Take Lamb chops wash and keep a side.
  2. Take a presurecooker add oil,garamasalas, chopped onions mix well then add gingergarlic,turmeric,curry leaves,salt to taste,red chilli powder,coconut powder,coriander powder saute little bit then add chops into it mix well and add some water and close with presure cooker lid and cook for 15min.
  3. Once the chops are cooked keep it a side, take a non stick pan add butter, chopped garlic,pepper powder, some more curry leaves and mix well now add the cooked chops to this mixture.
  4. Cook this in very slow flame till it changes colour to brown or till the masala sticks to the chops.Lastly add coriander leaves chopped and garama masala powder.Serve with roti or rice