Search This Blog

Monday, June 29, 2020

Doctrine of Ultra Vires (வலுவிகழ்தல் கோட்பாடு )


The object clause of the memorandum of the company contains the object for which the company is formed. An act of the company must not be beyond the object clause otherwise it will be ultra vires and therefore, void and cannot be ratified even if all the member wish to ratify. This is called the doctrine of ultra vires. The expression “ultra vires” consists of two words: ‘ultra’ and ‘vires’. ‘Ultra’ means beyond and ‘Vires’ means powers. Thus, the expression ultra vires means an act beyond the powers. Here the expression ultra vires is used to indicate an act of the company, which is beyond the powers conferred on the company by the objects clause of its memorandum. An ultra vires act is void and cannot be ratified even if all the directors wish to ratify it. Sometimes the expression ultra vires is used to describe the situation when the directors of a company have exceeded the powers delegated to them. Where accompany exceeds its power as conferred on it by the objects clause of its memorandum, it’s not bound by it because it lacks legal capacity to incur responsibility for the action, but when the directors of a company have exceeded the powers delegated to them. This use must be avoided for it is apt to cause confusion between two entirely distinct legal principles. Consequently, here are restricting the meaning of ultra vires objects clause of the company’s memorandum.

வலுவிகழ்தல் கோட்பாடானது நிலைமுறை அதிகார வரம்பு மீறல், நடைமுறை அதிகார வரம்பு மீறல் என வகைப்படுத்தப்படும்.

இதனைத்தவிர சரியான விடயத்தை பொருத்தமான வழியில் பிழையான நோக்கத்திற்காக செய்தலும் வலுவிகழ்தலாகவே கருதப்படும். நியதிச் சட்டத்தின் நோக்கம், அதன் எல்லையை கருதாமல் எடுக்கப்படும் தீர்மானங்கள் முதலாவது வகையாகும்.


இங்கு நியதிச்சட்ட ஏற்பாடுகளின் படி நிர்வாக செயல் செய்யப்பட்டதா என பார்க்கப்படுமே தவிர அச்சட்டத்தை இயற்றிய அதிகார அமைப்பின் அதிகார தன்மை பற்றி கவனத்தில் எடுக்காது.


இந்திய வழக்கொன்றில் மாநில அரசானது தேயிலை பயிரிடுவதற்காக நிலமொன்றை மாற்றிக்கொடுக்க மறுத்தமை நியதிச்சட்டத்தின் நோக்கத்தை அடைவதற்காக செய்யப்படாததால் வலுவிகழ்தல் என கூறப்பட்டது.

அதிகாரசபையொன்று சட்டத்தால் அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படாத துணி சலவை தொடர்பான சேவையை வழங்கியமை வலுவிகழ்தலாகும். பொலீஸ்மா அதிபர் தனக்கு அதிகாரம் வழங்கப்படாத இடமாற்றம் செய்யும் நடைமுறையை முன்னெடுத்தமை வரம்பு மீறலாகும். அனிஸ்மினிக் வழக்குக்கு முன்னர் நியாயாதிக்க எல்லைக்குள் செய்யப்பட்ட தவறுகள் வலுவிகழ்தலாக கருதப்படவில்லை.

இது பதிவேட்டின் முகத்தோற்றத்திலுள்ள தவறுகள் எனும் கோட்பாட்டின்படி (Error of Law on the Face of the Record) கையாளப்பட்டது.


இதன்பின்னர் வந்த வழக்குகளில் அனிஸ்மினிக் விதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வழக்க்கில் நீதியரசர் றீட், கெட்ட நோக்கம், இயற்கை நீதி மீறல், நல்ல நோக்கமெனினும் ஏற்பாடுகளை தவறாக பொருள்கோடல் செய்தல், கட்டாயப்படுத்தப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுக்காமை போன்ற காரணங்களால் வலுவிகழ்தல் ஏற்படுமென கூறினார்.

இதன்படி நியாய சபைகளின் நியாயாதிக்கற்திற்குள் இடம்பெறும்; தவறுகள் வலுவிகழ்தலாகும். கீழ் நிலை நீதி மன்றங்களின் நிலை தொடர்பாக வழக்குகளில் முரண் நிலை காணப்படுகின்றது.

ஆனால் உயர்நிலை நீதி மன்றங்களின் நியாயாதிக்கற்திற்குள் விடப்படும் தவறுகள் மீளாய்வு மூலம் சீர்செய்ய முடியாது. நியதிச்சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே மேன்முறையீடு செய்யமுடியும்.

கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென நியதிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போது அதனை கவனத்தில் எடுக்காத நிலையில் நடைமுறை அதிகார வரம்பு மீறல் நிகழும்.


கல்வி ஆணைக்குழுவால் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்ட அறிக்கையை கருத்திலெடுக்காமல் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட தீர்மானமானது வரம்பு மீறலாகும். சம்பள உயர்வுக்காக செய்யப்படும் மதிப்பீட்டு முறைமை சரியான செயன்முறைகளை பின்பற்றி தயாரிக்கப்படாமையால் வெற்றாக்கப்பட்டது.


கையளிப்பு செய்யப்பட்ட சட்டவாக்கம் வலுவிகழ்ந்ததா என தீர்மானிக்க நீதிமன்றமானது சட்டவாக்கத்தின் பின்னணி, பாராளுமன்ற மன எண்ணம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செழுத்தும். கையளிப்பு சட்டவாக்கமொன்றின் வலிதுடைமை தொடர்பில் முடிவெடுக்க சில சட்டக் கொள்கைகளை விருத்தி செய்துள்ளது.

வரிவிதிப்பு, நீதிமன்றத்ததை நாடுவதற்கான வழிவகைகள், மீள் கையளிப்பு, பின்னோக்கியாழும் சட்டம், நிச்சயத்தன்மை, நியாயபூர்வ தன்மை, முரண்பாடு, முறையற்ற நோக்கம் போன்ற கொள்கைகளே அவையாகும்.


நிர்வாகச் சட்டத்தின் அடுத்த முக்கிய கோட்பாடாக கருதப்படுவது இயற்கை நீதிக் கோட்பாடாகும். இது நடைமுறை அதிகார வரம்பு மீறலுடன் தொடர்புபட்டது. இருபுறம் கேட்டல் விதி, பக்கச்சார்புக்கு எதிரான விதி எனும் இரு முக்கிய கொள்கைகளை உள்ளடக்கியது.

https://tamilbreakingnews.com/

https://www.lawteacher.net/

No comments:

Post a Comment