Search This Blog

Saturday, June 27, 2020

மலர்தல்



நிலாவென
நான்
ஒளிர்வதாகக் கூறுகிறாய்
சூரியனாய் இருந்து கொண்டு

என்
நினைவின் அடுக்குகளில்
எத்தனையோ கதைகள்
பொதிந்துள்ளன

நிலா இரவுகள்
அன்று இருந்தது போல்
இல்லை

பால்யம்
கடந்த இந்த இரவுகளில்

பாட்டிகளின்
மரபில்
வந்து போன இளவரசனாய்

ஏழு குதிரைகளில்
நீ
வருகையில்

சூர்யகாந்தியாய்
மலர்கிறேன்

நிலா ஒளிரும் பொழுதிலும் .

Sakthi Jothi

No comments:

Post a Comment