Search This Blog

Saturday, April 4, 2020

புரிந்து கொள்ளலுக்காக தயாராதல்


கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஒரு சேர வீட்டிலிருந்து என்பது சிம்ம சொப்பனமாகதொரு விஷயம். இதனை அழகான, அர்த்தபூர்வமான முறையில் பயன்படுத்துவோம்.
1. ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் நிலை நிறுத்தி திறந்த மனதுடன் செயல்படுவோம்.
2. வீட்டில் உள்ள வேலைகளை அனைவரும் சேர்ந்து பகிர்ந்து செய்வோம்.
3. ஒன்றாக அமர்ந்து உணவை உட்கொள்வோம், இவ்வேளையில் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் நடைமுறையையும் தினமும் சிறிதளவேனும் நடைமுறைப்படுத்துவோம்.
( பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உரிய ஆலோசனைகள் தொடரும் பதிவுகளில்)
4. செய்திகளைப் பார்ப்பதாயினும் ஏன் திரைப்படம் பார்ப்பதாயினும் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பாருங்கள். இதனால் தேவையற்ற விடயங்கள் தவிர்க்கப்படும் அனைவரின் ரசனைகளும் உணரப்படும்
5. தாய், தந்தையர் இருவரும் சேர்ந்து குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அவர்களுடன் பேசி உரிய வழிகாட்டல்கைளயும் ஆலோசனைகளின் அவர்களின் ஆசிரியர்களை அணுகி திட்டமிடுங்கள்.
(ஆசிரியர்கள் இதற்கு உதவிட முடியும்)
வளமான எதிர்காலத்திற்கான ஒவ்வொருவரின் வகிபாகம் பற்றி வரையறுத்துக் கொள்ள முடியும்
6. அனைவரும் ஒன்றாக இறை வழிபாடு, ஓதல்களை மேற் கொள்ள முடியும் இதனால் அனைவரின் வணக்கங்களும் ஒழுங்கமைக்கப்படும்.
7.வீட்டில் உள்ள அனைவருக்கும் ஓய்வு நேரமொன்று கிடைக்கும் அனைவரும் இணைந்து செயல்படுவதால், மனம் விட்டு பேசுங்கள், பிடித்த, பிடிக்காத விடயங்கள், சங்கடங்கள், ஆசைகள், கனவுகள், இயலுமைகள், இயலாமைகள் பற்றி.
இதனால் தனியாள் திறமைகளை கண்டு கொள்ள முடியும். அதற்கு உதவிட முடியும். அனைவரும் ஓர் பொழுது போக்கை அடையாளப்படுத்தலாம். தொலைக்காட்சி, தொலைபேசியை விடுத்து, புத்தகம் வாசித்து, அதனைப் பகிர்ந்து கொள்ளல், எழுதுதல், சித்திரம் வரைதல், புகைப்படம் எடுத்தல், தையல், கைவினை, தோட்டம் செய்தல், போன்றவை.
8. குழந்தைகளின் கற்றல் விடயங்களை ஒழுங்கமைக்கலாம், அவர்களின் சிறப்புத் தேர்ச்சி, குறைபாடுகள் பற்றி கலந்துரையாடி நிவர்த்தி செய்ய உதவி செய்ய முடியும்.
மேலும் கற்பதற்கானதொரு சரியான இடம் / அறையினை அவர்களின் விருப்பப் படி அமைத்துக் கொடுக்கலாம்.
9.பின்னர் அனைவரும் ஒன்றாய் உறங்க செல்வதன் மூலம் வீண் தொடர்பாடல், நேர வீண் விரயம் போன்றவற்றை தடுக்கலாம்.
இது சரியான சந்தர்ப்பம், அனைவரும் வீட்டில் ஓய்வாக இருக்கின்ற பொழுதை தன்னிறைவான குடும்பத்தினுடாக நாட்டைக் கட்டியெழுப்புவோம் பற்றி சிந்திப்போம்.
பொறுமையாகவும் நிதானமாகவும் செயற்படுவோம்
Mrs.Rifka Rafeek SLAS


No comments:

Post a Comment