Search This Blog

Sunday, April 19, 2020

'தெரிந்த மருந்துகள் தெரியாத விளைவுகள்' புத்தகம்

கடற்கரய்
கொரோனா வைரசை மட்டும் அல்ல எந்த வைரசையும் அழிக்க முடியாது என்கிறது 'தெரிந்த மருந்துகள் தெரியாத விளைவுகள்' புத்தகம். 
இந்தப் புத்தகம் புதிய ஆராய்ச்சிகளை சொல்லவில்லை. ஆனால் அமைதியாக பல அடிப்படை பச்சை உண்மைகளைக் கூறுகிறது. ஒரு வைரசை தடுக்க முடியுமே ஒழிய அழிக்க முடியாது என்பது அந்த ரகம்தான்.
காலை மருந்தை மாலையில் சாப்பிடலாமா? ஆகாரத்திற்கு முன் கொடுத்த மாத்திரையை பின் சாப்பிட்டால் என்னவாகும்? மரு எப்படி வருகிறது? மாத்திரையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா? டீயுடன் சேர்த்து மாத்திரையை எடுத்துக் கொள்வது சரியா? இ வைட்டமின் ஏறினால் என்னவாகும்? ஈ கோலி பாக்டீரியா எத்தனை பெரிய ஆபத்து? மருத்துவர் உரிமை என்ன? நோயாளி கடமை என்ன? கோழிக்கறியிலும் வைரஸ் உண்டு? இப்படி பக்கம் பக்கமாக எழத வேண்டியதை எட்டு வரியில் எழுதி நகர்கிறார் இந்த டாக்டர்.
பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைப் பார்ப்பதைப் பலர் தவிர்ப்பார்கள். இந்தப் புத்தகத்தைப் படித்தால் ரவிக்குமார் என்ற மருத்துவரைப் பார்க்க துடிப்பார்கள். அதற்கான வீரியம் இந்த நூலில் விதையாக உள்ளது.

No comments:

Post a Comment