Search This Blog

Sunday, April 19, 2020

வாழ்க எம்ஜியார் புகழ்

1987 டிசம்பர் மாதம் தன் மகள் திருமண உதவி கேட்டு நன்கு அறிமுகம் ஆன கழக தொண்டர் கணபதி என்பவர் தன் மகள் திருமண உதவி கேட்டு தலைவரிடம் அவர் இல்லத்தில் மனு ஒன்றை கொடுக்க.
தலைவர் அதை படித்து பரிசீலித்து அவரை மீண்டும் அழைத்து உன் மகள் திருமணத்தை 1988 ஜனவரி மாதம் பொங்கல் முடிந்து 18 ஆம் தேதி வைத்துக்கொள்...நானே வந்து நடத்தி வைக்கிறேன் என்று சொல்ல...
கணபதியின் கெட்ட நேரம் தலைவர் அந்த மாத இறுதியில் நம்மை விட்டு மறைய கணபதி நொறுங்கி போகிறார் மனதளவில். தலைவர் மறைவு ஒரு புறம் தன் மகள் நிலை குறித்து மறுபுறம்.
அடுத்த சிலநாட்கள் செல்ல முதல்வர் அன்னை ஜானகி எம்ஜியார் அவர்களிடம் இருந்து தொண்டன் கணபதிக்கு அழைப்பு வர.
அங்கே வீட்டுக்கு போன கணபதிக்கு.....நீங்கள் குறித்த படி உங்கள் மகள் திருமணம் ஜனவரி 18 இல் நடக்கட்டும் நான் அல்லது நம் குடும்பத்தில் ஒருவர் வந்து நடத்தி வைக்கிறோம் என்று சொல்ல.
தன் மகன் ராஜ ராஜன் உடன் தோட்டத்துக்கு வந்த கணபதிக்கு நடப்பது கனவா அல்லது நிஜமா என்று புரியாமல் அம்மா நீங்கள் எப்படி வர முடியும் தலைவர் இறந்து நாட்கள் ஆக வில்லையே என்று கேட்க...
அதை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் உங்கள் ஏற்பாடுகள் நடக்கட்டும்.....அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அவர் தன் கைப்பட எழுதிய ப்ரோக்ராம் டைரியில் .
ஜனவரி 1988....18 அன்று கணபதி வீட்டு திருமணம்....அவருக்கு செய்யவேண்டிய உதவிகள் பணம்..பட்டு புடவை..நகைகள் எல்லாம் பற்றியும் எழுதி வைத்து இருக்கிறார்...அதன் படி உங்கள் மகள் திருமணம் நடக்கும் என்று சொல்ல.
அதன் படி அவர் மகள் திருமணம் அருமையாக தலைவர் கொடுத்த சீதனங்கள் உடன் நடந்து முடிந்தது.
அன்னை ஜானகி அம்மா அவர்கள் கலந்து கொள்ள இயலாமல் தலைவர் குடும்பத்தில் ஒருவர் முன் நின்று அந்த திருமணம் நடந்து முடிந்தது.
இருக்கும் போது தொண்டனுக்கு உதவாத அரசியல்வாதிகள் கொட்டி கிடக்கும் இந்த நாட்டில் இறந்தும் அவருக்கு உதவ உயில் போல எழுதி வைத்து விட்டு சென்ற தலைவரை நினைத்து மகிழ்வதா....அதை மறைக்காமல் மறுக்காமல் அந்த சோக சூழலில் கூட அந்த தொண்டனுக்கு உதவிய அன்னை ஜானகி அவர்களை நினைத்து மகிழ்வதா. முடிவை உங்கள் வசமே விட்டு விடும்....
வாழ்க எம்ஜியார் புகழ்
நன்றி...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி

No comments:

Post a Comment