Search This Blog

Monday, March 23, 2020

எந்த ஒரு நோயையும் அணுகக்கூடிய எளிய மருந்து இசை Music Therapy



இசையை வைத்து நோயாளிகளை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறைதான் மியூசிக் தெரபி.
1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு,  போரில் பாதிக்கப்பட்டிருந்த வீரர்கள் சிகிச்சையில் இருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் பல இசை கலைஞர்களை  மருத்துவமனைக்கு வரவழைத்து இசைக்கருவிகளை வாசித்தும், பாடல் பாடியும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினார்கள். அதன் பிறகு,  சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இதை கவனித்த அமெரிக்கர்கள் இசைக்கும் மருத்துவத்துக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய ஆராய்ச்சியில்  இறங்கினார்கள். அறிவியல் ரீதியாகவும் இசை குணப்படுத்தும் திறன் கொண்டது என்பது தெரிந்த பிறகே, மியூசிக் தெரபி  என்ற சிகிச்சை முறையை  உருவாக்கினார்கள்.


Music Therapy is the clinical and evidence-based use of music interventions to accomplish individualized goals within a therapeutic relationship by a credentialed professional who has completed an approved music therapy program.
Music Therapy is an established health profession in which music is used within a therapeutic relationship to address physical, emotional, cognitive, and social needs of individuals. After assessing the strengths and needs of each client, the qualified music therapist provides the indicated treatment including creating, singing, moving to, and/or listening to music. Through musical involvement in the therapeutic context, clients' abilities are strengthened and transferred to other areas of their lives. Music therapy also provides avenues for communication that can be helpful to those who find it difficult to express themselves in words. Research in music therapy supports its effectiveness in many areas such as: overall physical rehabilitation and facilitating movement, increasing people's motivation to become engaged in their treatment, providing emotional support for clients and their families, and providing an outlet for expression of feelings.


நோய்க்கு நேரடி மருந்தாக இது இருக்காது. ஆனால் நோயை குணப்படுத்த பக்கபலமாக இருக்கும். அதனால், இதை காம்ப்ளிமென்ட்ரி தெரபி என்றும்  சொல்வார்கள். மன அழுத்தமும் பதற்றமும் அதிகமாகி விட்ட இன்றைய வாழ்வில் உடலால் வரும் நோய்களைவிட மனதால் வரும் நோய்கள்  அதிகமாகிவிட்டன. ரத்த அழுத்தம் போன்ற உடல் நோய்களுக்கு கூட மனமே காரணமாக இருக்கிறது. கோபம், பொறாமை அதிகமாகி வருகிறது.

இந்த எதிர்மறை விஷயங்களையெல்லாம் தவிர்த்து அமைதியான முறையில், வெற்றிகரமாக ஒருவர் வாழ்வதற்கு மியூசிக் தெரபி பெரிதும் உதவி  செய்கிறது. முதியோர் இல்லங்கள், போதை மறுவாழ்வு மையங்கள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு கூட மியூசிக் தெரபி  நல்ல பலனை கொடுத்து வருகிறது. ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மியூசிக் தெரபி பெரிய உதவியாக இருப்பதைக் கண்கூடாக பார்க்க  முடியும். அதனால் நோயாளிகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் மியூசிக் தெரபி தேவை.

இந்த சிகிச்சையை எப்படி அளிப்பார்கள்?

“ இசையை கேட்க வைப்பது, இசைக் கருவிகளை வாசிக்க வைப்பது, மற்றவர்களுடன் சேர்ந்து பாடுவது, மற்றவர்கள் பாடுவதை கேட்பது என்று இதில்  பல வகைகள் இருக்கின்றன. நோயாளிக்குத் தகுந்தாற்போல் இந்த சிகிச்சை முறைகள் மாறுபடும்.”

கர்ப்பிணிகளுக்கு மியூசிக் தெரபி அளிப்பது நல்லதாமே?

“ கர்ப்பத்தில் இருக்கும் அபிமன்யு கதை கேட்டதாக புராணக் கதை உண்டு. கருவைச் சுற்றியிருக்கும் அம்னியாட்டிக் திரவம் மூலம் கர்ப்பத்தில்  இருக்கும் குழந்தையால் நாம் பேசுவைதை கேட்க முடியும் என்று விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் மியூசிக் தெரபியை  தாய்க்கு அளிப்பதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனுடன் சுகப்பிரசவமாவதற்கும் குழந்தை  ஆரோக்கியமாக பிறப்பதற்கும் மியூசிக் தெரபி உதவுகிறது.



தினமும் 30 நிமிடம் பாட்டு கேளுங்கள்..!
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் இசையைக் கேட்பது இதயத்திற்கு நல்லது என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
என்ன மோசமான மனநிலையில் இருந்தாலும் பிடித்த பாடல்களை கேட்டால் மனநிலை ஓரளவுக்கு சரி ஆகிவிடும் என்று கூறுபவர்கள் பலர். அவ்வாறு இந்த உலகில் இசைக்கு அடிமையானவர்கள் ஏராளம்.
இந்நிலையில் இசை குறித்து மேற்கொண்ட ஆய்வில், பல ஆச்சரியத்தக்க தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதில் குறிப்பாக முதல்முறை மாரடைப்பு வந்தவர்கள் தொடர்ந்து தினமும் இசையை கேட்கும் பட்சத்தில், அவர்களுக்கு அடுத்து மாரடைப்பு வராது என்று தெரிய வந்துள்ளது. மேலும் எந்த ஒரு நோயையும் அணுகக்கூடிய எளிய மருந்து இசை என்றும் அதனால் நோயாளிகள் அனைவருக்கும் ‘மியூசிக் தெரபி’ வழங்க வேண்டும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
ஏனென்றால் ‘மியூசிக் தெரபி’ -க்கு பெரிதாக முயற்சி எடுக்கத் தேவையில்லை. எளிதானது, மலிவானது. நோயாளிகளுக்கு சிகிச்சையின்போதும், அவர்கள் வீட்டில் ஓய்வு எடுக்கும்போது மனதுக்குப் பிடித்த இசையை கேட்கச் செய்யலாம் என்றும் இதன் மூலமாக மன மற்றும் உடல் ரீதியாக அவர்களது நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, செர்பியாவில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட 350 நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் உறுதி ஆகியுள்ளன.

மியூசிக் தெரபி சிகிச்சையைப் பெறும் நோயாளிகள் முதலில் தங்கள் உடல்நிலை, மனநிலைக்கு ஏற்ற இசையைத் தேர்ந்தெடுக்கின்றனர். தினமும் 30 நிமிடங்கள் ஒரே விதமான இசையை கேட்டனர். சுமார் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நேர்மறையான முடிவுகள் பெறப்பட்டன.
நோயாளிகள் கவலை, வலி​ குறைந்ததாக உணர்ந்ததுடன், எளிமையாக சிகிச்சையை பெற்றதாக உணர்ந்தனர். மருத்துவ சிகிச்சையை விட பலருக்கு இசை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும், ஏற்கனவே ஒருமுறை, இரு முறை மாரடைப்பு வந்தவர்கள் பெரும்பாலானோருக்கு அடுத்த முறை மாரடைப்பு வரவில்லை.
ஒருவரின் மன அழுத்தத்தை குறைக்க இசையே சிறந்த வழி என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்புக் குழந்தைகள் அல்லது ஸ்பெஷல் சில்ட்ரன் என்று ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு 13 வருடங்களாக இசையைப் பயன்படுத்தி அவர்கள் திறமையை வெளிக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் லட்சுமி மோகன். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வகுப்புகள் நடத்தி வருகிறார். சென்ற ஒரு வருடமாக சௌமனஸ்யா அறக்கட்டளை ஒன்றை இதற்காகவே உருவாக்கியுள்ளார். அவரைச் சந்தித்தோம்: 

 "முன்னைவிட என் மகனிடம் இப்போது பொறுமை அதிகமாகத் தெரிகிறது. வெளியே ஹோட்டலுக்கோ, மாலுக்கோ போனால் அவனை எளிதாகக் கையாள முடிகிறது' என்று அதிகத் தீவிரமான பையனைப் பற்றி பெற்றோர் தெரிவித்த கருத்து இது.
சங்கராபரணம், சாருகேசி, கல்யாணி போன்ற ராகங்களில், ஒரே மாதிரியான வார்த்தைகளில் பஜன்கள் பாடும்போது, இவர்களின் நடவடிக்கை ஒழுங்குபடுவதாகக் கூறும் லஷ்மியிடம் 3 வயது முதல் 45 வயது
வரையிலான ஆட்டிசப் பாதிப்புடையவர்கள் சங்கீதப் பயிற்சி பெறுகிறார்கள்.
பயிற்சி பெறும் அனைவரும் வெவ்வேறு வயதில், வெவ்வேறு வகையிலான குறைபாட்டுடன் இருந்தாலும், இசை அவர்களை ஓர்
இடத்தில் நிறுத்துகிறது. கவனத்தைக் குவிப்பது, தனக்கான வேலைகளை முடிந்தவரையில் தானே செய்துகொள்ளவைப்பது போன்ற முன்னேற்றங்கள்,
இசை சிகிச்சையால் சாத்தியப்படுவதை நிரூபித்திருக்கிறார் லஷ்மி மோகன்.



எனவே, தினமும் சிறிது நேரம் இசையை ரசிப்பதன் மூலமாக உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment