Search This Blog

Wednesday, February 12, 2020

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எதற்காக ஏன் உருவாக்கபட்டது?


இரு தசாப்த காலமாக கூட்டமைப்பு சரியாக செயல்பட்டதா? ஒற்றுமை என்ற வார்த்தைக்கு மதிப்பளித்து இவர்களுடன் இனைந்த சக கட்சி தலைமைகளின் ஆதங்கங்கள் வேண்டுதல்கள் கோரிக்கைகள் எப்போதாவது உள்வாங்கப்பட்டதா?
பெயரில் மட்டுமே கூட்டமைப்பு முடிவுகள் அனைத்தும் தமிழரசுக் கட்சியின் பின்கதவால் நுழைந்த ஐ தே க ஏஜேன்டால் தான் எடுக்கப்பட்டன. கிஞ்சித்தும் சக கட்சி தலைமைகளின் ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளவில்லை. அனைத்தும் ஏதோச்சதிகாரமாக புறக்கணிக்கபட்டன.
கட்சிகளை புறம்தள்ளியதை விட்டு விடுவோம். மக்களின் மன ஆதங்கத்துக்கு மதிக்களிக்ப்பட்டதா? கிடையவே கிடையாது. சகலதும் அறளை பேர்ந்த முதியவருடன் இனைந்து தனி ஒருவரால் எடுக்கபட்டது.
இவற்றை ஒற்றுமைக்கு ஊறு விழைவிக்க கூடதேன எண்ணிய சுரேஷ் தலைமையிலான அணியினர் உள்ளிருந்தவாறே நீண்ட காலமாகவே கூட்டமைப்பை நிறுவனபடுத்தி கல்விமான்களையும் புலம் பெயர் சமூகத்தையும் இனைத்து பயணிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.
ஏற்றுக் கொள்ளப்பட்டதா?
செவிடன் காதில் ஊதிய சங்காவே போனது.
கடந்த நாலரைவருட கால நல்லாட்சியில் அரசில் அங்கம் வகித்து இவர்கள் பெற்றுத்தந்த நன்மைகளை பட்டியல் இட்டால் வெறும் வார்த்தை ஜாலங்களையே இவர்கள் பெற்று தந்தனர் ?
நாம் இவர்களை உரிமைசார்ந்த பிரச்சனையை பேசவே பாராளுமன்றம் அனுப்பினோம்.
இவர்கள் அதை செவ்வன செய்தனரா? அரசில் அங்கம் வகித்த சமயத்தில் அரசாங்க வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்தனரா?

பெரும்பாண்மை சகோதரர்கள் வடக்கில் இன்று மின்சார சபையிலும் வைத்தியசாலையிலும் பிற துறைகளில் வேலைவாய்பை பெற்றுள்ளனர் அதை தடுக்கமுடிந்ததா? அந்த வேலைவாய்ப்பை ஊரில் உங்களுக்கு குப்பை கொட்டியவர்களுக்கு பெற்றுக் கொடுதீர்களா?
இல்லவே இல்லை. உங்கள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வாயை மூட அவர்களின் பிள்ளைகளுக்கு மங்கள சமரவீரவுடன் பேசி வேலைவாய்பை பெற்றுக் கொடுத்தீர்கள்.
இவர்கள் ஒற்றுமையை குலைக்காதீர்கள் என கூக்குரல் இடுவது தமது பிளைப்புக்கு பங்கம் என கருதியே. மக்கள் நலன் கருதியல்ல. கடந்த காலங்களில் பெரும்பாண்மை மக்கள் கோவித்து கொள்வார்கள் எனக் கூறி தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவியதை மக்கள் அறிவர்.
பல அபிவிருத்தி திட்டங்கள் வெறும் வாய் வார்த்தைகளுடன் நின்றுவிட்டன.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முற்றாக இதிலிருந்து மாறுபட்டது.
மக்களின் உரிமை சார்ந்த விடயம் மட்டுமே பிரதான செயல்பாடாக அமையும் குறிப்பாக கூட்டணிக்குள் உட்கட்சி ஜனநாயகம் பேணப்படும். கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும்.

குறிப்பாக கூட்டமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்த்தோமோ அதை விட சிறப்பாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயல்படும்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.

No comments:

Post a Comment