Search This Blog

Sunday, October 13, 2019

Dr Abiy Ahmed Ali -2019 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமரான அபி அகம்மது அலிக்கு

2019 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமரான அபி அகம்மது அலி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதற்கு காரணம் ஊடக வன்முறை.
இவர் நோபல் பரிசை பெறுவதற்கு நூறு சதவீதம் தகுதியுடையவர்.
எத்தியோப்பியா பெரும் ஆயுத போராட்ட வன்முறையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த வேளையில், 2018 ஏப்ரலில் ஆட்சியை பிடித்தார்.
ஆட்சிக்கு வந்தவுடன், அந்நாட்டில் இருந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்தார்.
அரசியல் கைதிகளை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தார்.
போராடிய ஆயுத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.
அவர்களுக்கு அரசியல் அதிகார பதவிகளை வழங்கினார்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியதிகாரத்தில் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு அரசியல் அதிகாரத்துக்கு போராடி கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில், எத்தியோப்பிய நாட்டு ஆட்சியதிகாரத்தில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி செய்தார்.
இங்கே இந்தியா காஷ்மீர் போல, எத்தியோப்பியாவுக்கும் எரித்திரியா என்ற சிறிய நாட்டிற்கும் நீண்ட காலமாக இருந்துவந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
எரித்ரியாவின் முழு சுதந்திரத்தை அங்கீகரித்தார்.
தனது அண்டை நாடான சூடானில் நடைபெற்ற பிரச்சனையில் தலையிட்டு அங்கு அமைதி நிலவ பெரிதும் காரணமாக இருந்தார்.
பிரேசில் நாட்டில் கார்ப்பரேட் நலன்களுக்காக காடுகள் தீவைத்து எரிக்கபடுகிறது. ஆனால் எத்தியோப்பிய பிரதமர்
சுற்றுச்சூழலை மேம்படுத்த, எத்தியோப்பிய பள்ளிக்கூட பிள்ளைகளை வைத்து ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட செய்தார்.

எத்தியோப்பிய விமான சேவையை உலக தரத்திற்கு உயர்த்தினார்.
இன்று விமான சேவையில் உலகிலேயே சிறந்தது எத்தியோப்பியாதான் என்பது உறுதியாகியுள்ளது.

இதையெல்லாம் தான் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே செய்து முடித்தார்.
The Norwegian Nobel Committee has awarded the 100th Nobel Peace Prize to the Prime Minister of Ethiopia, Dr Abiy Ahmed Ali, for "his efforts to achieve peace and international cooperation" and for his "decisive initiativeto end the long-running military stalemate with neighbouring Eritrea.
was one of the people who nominated Abiy Ahmed - not just for his remarkable achievements, but also for his profound commitment to the cause of peace and friendly relations among nations in the Horn of Africa and beyond.
In the nomination letter, I wrote: "By saving a nation of 108 million people from the precipice of an economic and political explosion, he captured the imagination of his own people, and people across the African continent as an embodiment of hope ... and his messages of peace, tolerance, and love and understanding are being felt far beyond Ethiopia."
Awol K Allo is Lecturer in Law at Keele University, UK.
Thanks, https://www.aljazeera.com

No comments:

Post a Comment