Search This Blog

Wednesday, September 18, 2019

கடித்த நாயைத் திருப்பிக் கடித்து

ஜப்பானும், ஜேர்மனியும் யுத்தத்தில் நிர்மூலமாக்கப்பட்ட பிறகு அந்நாட்டு மக்கள் எவரும் கடித்த நாயைத் திருப்பிக்கடித்து விட்டே மறுவேலை என கிளம்பவில்லை!
மாறாக பொருளாதாரத்தை_நிமிர்த்தவே_போராடினார்கள். பொருளாதாரத்தால் எதிரியுடன் சமகதிரையுடன்_உட்காந்திருந்து பேரம்பேசுவதே உண்மையான வெற்றி என அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.
விளைவு??
1.தோற்கடித்தவர்களின் வாகனங்களைவிட முதற்தர வாகனங்களை உலகுக்கே ஏற்றுமதி செய்தார்கள்.
2.எதிரிகளே அசந்துபோகும் தொழில்னுட்பங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்
3. சரிக்குச்சமன் உலக அரங்கில் தோற்கடித்தவர்களுடன் வலம் வந்தார்கள். சில இடங்களில் சற்று மேலே எனலாம்.

இன்னும் பல.
அவ்வளவும் எண்ணி 20 வருடங்களில்!

ஆனால்_நாம்?????
1. திருப்பிக்கடிக்க வெறிபிடித்து அலைகிறோம்.
2. கடித்துவிட்டால் வெற்றி என மாயையில் மிதக்கிறொம்.
3.மாறிவந்த உலக ஒழுங்கில் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்
4. பொருளாதாரத்தின் மீள்கட்டுமானம் பற்றி எவ்வித அக்கறையும் இல்லை.
5. நிவாரணம் வாங்கி சாப்பிட மனதை பழக்கப்படுத்தியாயிற்று.
6. உற்பத்தியைபற்றி அக்கறை இல்லை. எல்லாவற்றையும் எவனிடமாவது கொள்பனவு செய்வதில் பெருமை வேறு!
7. உசுப்பேற்றல்களுக்கு_இன்னும எடுபடுகிறோம்.
8எல்லாவற்றிற்கும். அடுத்தவன்மேல்_பழி போடுகிறோம்.
9. எவனாவது ஒருவன் இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு எழும்பினால் அவனை மடையன் என்று முத்திரை குத்தி அமர வைக்கிறோம்
10. பொருளாதாரம் நிமிர எல்லாமே சரியாகும் என்ப்தை ஏற்றுக்கொள்ளமறுக்கிறோம்.

11. ஒன்றுமில்லை என்று தெரிந்த பிறகும் அரசியல் வாதிகளை நம்பிக்கிடக்கிறோம்..

No comments:

Post a Comment