Search This Blog

Wednesday, February 13, 2019

மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்.



மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- சாந்தனுவாய்....
சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்......
- கங்கை மைந்தானாய்..

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
- பாண்டுவாய்....


ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு
- குந்தியாய்...

குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
- திருதராஷ்டிரனாய்....

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்
- கௌரவர்கள்...

பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே
- துரியோதனனாய்...

கூடா நட்பு, கேடாய் முடியும்
- கர்ணனாய்...

சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்
- பாஞ்சாலியாய்..


தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்
- யுதிஷ்டிரனாய்.....

பலம் மட்டுமே, பலன் தராது
- பீமனாய்....

இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
- அர்ஜூனனாய்....

சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது
- சகாதேவனாய்..

விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது
- அபிமன்யூ

நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
- கண்ணனாய்....

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம்.

- சித்தர்களின் குரல்.

No comments:

Post a Comment