Search This Blog

Thursday, January 3, 2019

கதிமாறி ஆடும் ஊசலோ காலம்


காத்திருந்தபோது
காலி அறையில் மாட்டியிருந்த
பழைய
கடிகாரத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்..

சாவி கொடுக்க மறந்தது போல
நேரம் நகரவேயில்லை

சந்தித்தபோது
நிமிர்ந்து பார்க்கவும்
தோன்றவில்லை
பரவசத்தில்
படபடக்கும் மனத்தை
நிதானம்
நிதானமென
சமாதானப்படுத்துகிறது
மணிக்கட்டு
நாடித் துடிப்பு
நினைவிற்கும்
மறதிக்கும் நடுவே
கதிமாறி
ஆடும் ஊசலோ
காலம்

 Sakthi Jothi

No comments:

Post a Comment