Search This Blog

Tuesday, October 9, 2018

விசம்...........


அலங்கரிக்கப்பட்ட
கழிவுகளை
கவர்ந்திழுக்க்கிறது
கண்கள்.

தேவையானவை
தேவையற்றுப்போக
தேவையற்றவை
தேவையாகிப்போனது
எனக்கு.
என்
உயிரணுக்கள்
ஒவ்வொன்றுக்குள்ளும்
ஒளித்து வைக்கப்படுகிறது
விசம் .
காலை
அருந்தும்
தேநீருடன்
ஆரம்பிக்கிறது
என்
அழிவு.
நஞ்சுகளை
தின்று தின்றே
நகர்கின்றன
என்
நாட்கள்
விசத்தையும்
கொடுத்து
விசம் முறிக்க
மருந்தையும்
கொடுத்து
என்னிடம்
வெற்றிகொள்கிறது
வியாபாரம்.
என்
கடைசி
மூச்சைக்கூட
முதலாளிகள்தானே
முடிவு செய்கின்றனர்
பஞ்ச
பூதங்களையும்
பாழாக்கிவிட்டு
நஞ்சை
வேளாண்மை
செய்கிறது
விஞ்ஞானம்.
இயற்கையின்
கதவுகளை
மூடிவிட்டு
இரசாயனங்களுக்குள்
இழுக்கப்படுகிறேன்
நான்.
முப்பாட்டன்
காலத்து
முறைகளையெல்லாம்
மூட்டிகட்டிவிட்டு
கண்ட கண்ட
கன்றாவிகளுக்குள்
கரைந்துவிடுகின்றேன்
நாளும்.
எழுபது
வயதில்
வரவேண்டியவை
எல்லாம்
ஏழு வயதிலேயே
வர
நாற்பது
வயதுக்குள்ளாகவே
நரகத்துள்
விழுகிறேன்.
வீதிக்கொரு
வைத்தியசாலை
வீட்டுக்கொரு
மருந்தகம்....
அனுபவிக்கப்போகிறது
அடுத்த
தலைமுறை.
ஆரோக்கியவான்களை
இனி
அகராதியில்
மட்டுமே
பார்க்கலாம்.....
Sivaratnam Navatharan

No comments:

Post a Comment