Search This Blog

Wednesday, October 31, 2018

முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதிய தமிழ்ப் படைப்புகள்

முனைவர் மு. இளங்கோவன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்ஆய்வாளர் ஆவார். தமிழ்நாட்டில்அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்ககங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சி. முருகேசனார், மு. அசோதை அம்மாள்.

 எழுதிய தமிழ்ப் படைப்புகள்
* மணல்மேட்டு மழலைகள்
* இலக்கியம் அன்றும் இன்றும்
* வாய்மொழிப்பாடல்கள்
* பழையன புகுதலும்
* அரங்கேறும் சிலம்புகள்
* பாரதிதாசன் பரம்பரை
* பொன்னி பாரதிதாசன் பரம்பரை
* பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.)
* நாட்டுப்புறவியல் (வயல்வெளிப் பதிப்பகம்,2006)
* அயலகத் தமிழறிஞர்கள் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
* இணையம் கற்போம் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
* பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு
* செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்
* கட்டுரைக் களஞ்சியம்
* அச்சக ஆற்றுப்படை
* மாணவராற்றுப்படை
* பனசைக் குயில் கூவுகிறது
* விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்(ப.ஆ)
* மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்


பிரத்யேக நேர்காணல் பின்வருமாறு:-
கேள்வி : உங்களுடைய பூர்வீகம் பற்றி கூற முடியுமா?
பதில்      : என்னுடைய பூர்வீகம் தமிழகத்திலுள்ள அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம். அங்கு எனது பள்ளிப் படிப்பை முடித்து, திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியமும், அதே கல்லூரியிலேயே பிறகு முதுகலைப் பட்டமும் பெற்றேன். அதன் பிறகு திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றேன்.
கேள்வி : கல்லூரி நாட்களில் நீங்கள் எழுதிய நூல்கள் யாவை?
பதில்      : எனது கல்லூரி நாட்களில் நான் இலக்கியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். சிறுவயது முதலே தமிழின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த காரணத்தால் ஒவ்வொரு நாளும் மரபுக்கவிதைகள் எழுதும் சூழலை உருவாக்கிக்கொள்வேன்.என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் யாப்பிலக்கணம் பயிற்றுவித்தார்.ஆர்வமுடன் கற்றதால் இயல்பாகப் பாடல் எழுதிய வண்ணம் இருப்பேன். அப்படி ஒரு இலக்கிய சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த போது தான் எனது மாணவராற்றுப்படை உருவானது. அதன் பின்பு  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வின் போது ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் எனது படைப்பு நூல் வடிவம் பெற்றது.
கேள்வி :  ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பு எப்படி உருவானது?
பதில்      : அதற்கு ஒரு காரணம் உண்டு. புரட்சிக்கவி பாரதியாரின் மீதுள்ள பற்று காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டு அவரைப் போலவே கவிதைகள் எழுதியவர் தான் கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன். ஆனால் பாரதிதாசனுக்குப் பிறகு யார்? என்ற கேள்வி என்னுள் எழுந்ததின் விளைவு தான் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற நூல் வெளியிடக் காரணமாக அமைந்தது.
கேள்வி :  தமிழ் மொழியில் உங்கள் பங்களிப்பு?
பதில்      : சங்க நூல்களிலும், நாட்டுப்புறவியல் துறையிலும், தமிழ் இணையத் துறையிலும் கொண்ட ஈடுபாடு காரணமாக, அவைகளை பல தமிழறிஞர்கள் மூலமாக முறையாக படித்து அறிந்து கொண்டேன். அதோடு நான் கற்றுத் தெரிந்து கொண்ட அத்தகைய செவி வழிக் கல்வியை தமிழறிஞர்கள் குரல்களிலேயே ஆவணப்படுத்தியும் வைத்துள்ளேன். ஐம்பெருங்காப்பியங்கள், அகநானூறு, புறநானூறு, ஆற்றுப்படைகள் உள்ளிட்ட பல நூல்களை மின்புத்தகங்களாக உருமாற்றுவதில் எனது பங்களிப்பு உள்ளது.
மேலும் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றிய ஆய்வுக்காக பல ஊர்களுக்கு பயணம் செய்து அங்கு வாழும் பாமர மக்களுடன் பழகி, அவர்களிடமிருந்து பல நாட்டுப்புறப் பாடல்களைக் கற்று அவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளேன். இத்தகைய நாட்டுப்புறப் பாடல்கள் நமது தமிழர்களின் கலாச்சாரமாக இருந்தது  நம் எதிர்கால சந்ததியினருக்கும் தெரியும் வகையில் அவற்றை சேகரித்துள்ளேன்.
அதோடு பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது குறித்து பல வகுப்புகள் நடத்திவருகிறேன். இதன் மூலம் பல மாணவர்கள் பயனடைந்து தற்போது இணையத்தில் எழுதத் தொடங்கியுள்ளார்கள்.
இதுவரை 19 நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளேன். இணையத்தில் 1000 பதிவுகளுக்கும் மேல் தமிழ் மொழியைப் பற்றிய என்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கேள்வி :  பணியாற்றிய இடங்கள் ?
பதில்      : எனது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்து விட்டு, இப்பொழுது புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகின்றேன். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, குவைத் நாடுகளுக்கு ஆய்வுரை வழங்கவும் அவ்வப்போது பயணம் செய்து வருகிறேன்.
கேள்வி :  தமிழ் மொழியில் உங்களது அடுத்த கட்ட பணி?
பதில்      : தமிழ் இலக்கண, இலக்கியம் சார்ந்த பேச்சுக்களை பதிவு செய்வது. உலக அளவில் சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்றவற்றை கொண்டு சேர்க்கும் வகையில் அதை MP3 வடிவில் பதிவு செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
கேள்வி : இதுவரை வாங்கிய விருதுகள்?
பதில்       : கடந்த 2011 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் கையால் இளம் அறிஞருக்கான ‘செம்மொழி’ விருது பெற்றேன்.
(பரபரப்பாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு இடையே செல்லியலுக்காக நேரம் ஒதுக்கி நேர்காணல் அளித்ததற்கு நன்றி! உங்களது பணி மேலும் சிறக்க செல்லியல் சார்பாக வாழ்த்துக்கள்!)
-பீனிக்ஸ்தாசன்

Tuesday, October 30, 2018

Hand Crushing Machine 15th century Catholic Church

This insane, diabolical hand crushing machine was actually used by members of the Catholic Church back in the 15th century to punish those with “greedy hands.” And here we thought it was “idle hands that did the devil’s work”... hate to see what the church would do to a pair of those! Sadly, this contraption isn’t even the tip of the iceberg when it comes to torture devices. Human beings of all cultures and religions have always found the most horrific ways to inflict punishment on others. Thankfully this disturbing little number has been long retired!
thanks
http://www.appbbs.com/unexploredworlds/home/2018/08/the-catholic-church-used-a-hand-crushing-machine-in-the-15th-century-to-punish-those-with-greedy-hands

Church of Saint Mary of Gesu (Baroque, 16-18 centuries). Palermo. Sicily. Italy.

History
Interior of the church.
The Jesuits arrived in Palermo in 1549, and by the late 16th century began building a church adjacent to their mother house (Casa Professa) using a design by the Jesuit architect Giovanni Tristano. The original design called for a single nave with large transepts and several side chapels, but it was changed by the early 17th century, to a more grandiose layout typical of Jesuit architecture. Natale Masuccioremoved the chapels' dividing walls to add two side naves to the central one. The church was consecrated in 1636.
The interior decoration included marble bas-reliefs on the tribuna depicting the Adoration of the Shepherds (1710–14) and Adoration of the Magi (1719–21), by Gioacchino Vitagliano, after designs attributed to Giacomo Serpotta - both reliefs survive. A fresco of the Adoration of the Magi was also added to the walls of the second side-chapel to the right by Antonino Grano in the 1720s. The church also contains a relief of the Glory of St Luke by Ignazio Marabitti.
In 1892, cavaliere Salvatore Di Pietro, former rector of the Casa Professa, philanthropist, prefect of studies at the seminary, and member of the Theological College, of the Academy of sciences, letters and arts and of the Accademia di storia patria, convinced in 1888 the minister of public education, Paolo Boselli, to decree the church a national monument.
In 1943, during the Second World War, a bomb collapsed the church's dome, destroying most of the surrounding walls and most of the wall paintings in the chancel and transepts. These frescoes were replaced during two years' restoration work, after which the church reopened on 24 February 2009 with a solemn mass presided over by Paolo Romeo, archbishop of Palermo, and attended by several Jesuits and civil and military officials.

Friday, October 26, 2018

Indian Freedom is written on Muslim's blood

Famous Writer Mr. Kushwant Singh Says; 

“Indian Freedom is written on Muslim's blood, their participation on freedom struggle were much more than their percentage” There are 95300 freedom fighters names are written in India Gate, Delhi out of that 61945 are Muslims with means 65% freedom fighters are Muslims. Muslims sacrifices for Indian freedom struggle were purposely hidden. 
We brought you few from Indian History for your knowledge! There are tons like this; Every Indian should know this; and teach our children the truth! Please read full and forward to Every Indian you know..... In fact first freedom struggle were by Hyder Ali, and his son Tipu Sultan on 1780s and 1790s Mysorean rockets were the first iron-cased rockets, successfully deployed for military use. Hyder Ali, and his son Tipu Sultan, used rockets and cannons effectively against the British invaders during the 1780s and 1790s. Every one knows Rani Janshi was fought to get kingdom for her adopted child; but how many of us knows Begum Hazrat Mahal; The unsung heroine of the first war of Independence, *She shot the British ruler Sir.Henry Lawrence and defeat British army in a decisive Battle at Chinhat on June 30, 1857. Do you know; Organizer and leader on “First Indian freedom struggle” was Moulavi Ahamadullah Shah. on the war many were killed among them 90% were Muslims! Ashfaqulla Khan was hanged first in a conspiracy against the British Raj on his 27 age Maulana Abul Kalam Azad was an Indian scholar and the senior Muslim leader of the Indian National Congress during the Indian independence movement. On Picketing of liquor shops struggle by Mahatma Gandhi, 10 of them were Muslims out of 19 participant! Last Mogul Emperor Badur Shah was who first strongly fought for Indian freedom which lead to 1857 indepence struggle Rajiv Gandhi wrote Bahadur Shah’s grave: “Although you (Bahadur Shah) do not have land in India, you have it here, your name is alive… I pay homage to the memory of the symbol and rallying point of India’s first war of independence….” M.K.M Ameer Hamza, donated multi million rupees for Indian National Army (INA), he head of Azad library reading propaganda of INA, now living poor in a rented house at Ramanadhapuram Tamil Nadu. Memon Abdul Habeeb Yusuf Marfani, donated almost his entire fortune of Rs 1 crore to the Indian National Army, a princely sum in those days by emptying his entire asset! to Netaji’s INA. Shah Nawaz Khan was an soldier, politician, Chief officer and commander, in the Indian National Army (INA), Netaji's ministry had 19 ministers 5 of them were Muslims Mother Beevimma; a Muslim lady donated over 30 lakhs rupees for Indian freedom struggle. Abul Kalam Azad, Jinnah, Nawab of Bihar are the three who made the plan of receiving independence how! Suraiya thiyabji (a Muslim lady) designed current Indian National Flag No one used holy places for freedom war but Muslims. Muslims used the Masjid for freedom struggle; when Imam was addressing about Indian freedom in Holy Masjid, Utar Pradesh, British Army shot all the Muslims in the Masjid; still you see the dried blood shed of the freedom fighters. Muslims ruled India over 800 years; they didn't steal anything from India as British, Dutch, French did; *Muslims lived there ruled there died there they developed India a civilized country; with tons of knowledge in literature, Architecture, judicial and political structure, government body and management structure, still India uses their management strategy! Tamil Nadu: Ismael Shaheb, Maruda Nayagam, fought against British for 7 continuous year made British a hell fear We all know V.O.C (kapalotiya Tamilzhan) The first Sailor sailed aginst West Indian Company on Indian freedom war; how many of know that Fakkir Muhammed Rawther, was the one who donated the ship!. When VOC was arrested; Muhammed Yaseen has been shot dead by British police on the demonstration to release VOC. Tiruppur Kumaran (“Kodi kata kumaran”) who participated in the Indian independence movement; With Kumaran 7 other participant were arrested; all were Muslims, Abdul Latheef, Akbar Ali, Mohideen Khan, Abdul Rahim, Vavu Shaheb, Abdul latheef and Sheikh baba shaheb <we can write books with 1000s of page on Muslim's sacrifice to Indian Freedom, unfortunately racist hindu dominations on History has hidden these truth and not tought in Indian History book

Thursday, October 25, 2018

New ways of sucking greenhouse gases from the atmosphere


A growing amount of research concludes it will be nearly impossible for the world to avoid a dangerous 2 ˚C rise in global temperatures merely by cutting greenhouse-gas emissions, given the concentrations already in the atmosphere and the slow pace at which nations are shifting to clean energy. At this stage, the UN’s climate change panel and other institutions have said various methods of capturing and storing carbon dioxide will be required as well.
The problem is that scientists and companies haven’t yet figured out a way to do so economically at anywhere near the scale required.
“It’s time to invest and avidly pursue a new wave of technological solutions to this problem—including those that are risky, unproven, even unlikely to work," Y Combinator said in an announcement on Tuesday. “It’s time to take big swings at this.”
Several startups, including Climeworks and Carbon Engineering, have raised money and built facilities to capture carbon dioxide directly from the atmosphere. But Y Combinator highlighted four even earlier-stage approaches to removing greenhouse gases where it would be willing to fund startups or potentially nonprofit research.
They include using an electrochemical method to accelerate the natural process of mineral weathering, which pulls carbon dioxide out of the atmosphere and oceans; creating genetically engineered phytoplankton that can use photosynthesis to capture and store carbon dioxide in the ocean; artificially flooding deserts to create oases that can support phytoplankton for the same purpose; and engineering enzymes that can efficiently capture and store carbon, and then be disposed of or used to create other products.
Y Com is open to funding other ideas in the space as well. But it's strange that the firm has zeroed in on technologies that are particularly far-fetched in a field where even the most advanced ideas, notably direct-air capture or bioenergy with carbon capture and storage, still face enormous economic and technical hurdles.
Given the rising risks of climate change, and the muted public policy response so far, it’s crucial to support research into areas that could potentially address the dangers the world faces.
But there’s a separate question of whether such ideas have reached a point yet where it makes sense to create a for-profit venture that could face commercial pressures to deploy solutions before their environmental risks and benefits have been adequately explored. Intertwining profit motives with audacious proposals—like flooding deserts—is also sure to complicate what’s already an incredibly intense public debate over the use of these technologies.
It's "good to see private capital support high risk but potentially high impact 'outside the box' ideas," said Noah Deich, executive director of Carbon180, an Oakland, California-based group promoting research into carbon recycling, on Twitter. "But the 'move fast and break things' Silicon Valley mindset [is] misaligned with ideas that could have the large community and/or ecosystem impacts."
There have been tensions in the past. In 2012, a California entrepreneur involved in carbon offset markets sparked international controversy by dumping iron dust into the Pacific Ocean in an effort to promote plankton growth, in contravention of scientific protocols.
As a Nature article noted last year, researchers have carried out 13 major studies exploring the use of iron fertilization since 1990, but have struggled to show how much carbon dioxide it actually sequesters. Some scientists do worry, however, that it can adversely impact ocean ecosystems by spawning toxic algal blooms.

Cecile G. Tamura

ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!


பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன்.
நான் இங்கு யாரையும் குறை கூறவில்லை. கீழே வாசித்து பாருங்கள்.
* அவர்களுக்கு சாதாரண வாழ்க்கை வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
பெருந்தோட்டங்களில் சுமார் 9.5 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

* கம்பனி உரிமையாளர்கள், தோட்ட உயர் அதிகாரிகள், தேயிலை ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்களின் வீடுகளையும் தொழிலாளர்களுடைய வீடுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
நாளாந்தம் 450 ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கின்றது. உங்களுடைய வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது 450 ரூபாவால் என்ன செய்ய முடியும்?

* இலங்கையில் 40% சிறுவர் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களை சேர்ந்தவர்கள்.
* 14 310 தற்காலிக வீடுகள் இருக்கின்றன. 83 960 பேர் வீடுகள் எதும் இல்லாது வாழ்கிறார்கள் (உறவினர்கள் வீடுகளில்).
* பெருந்தோட்ட மாணவர்களில் 29% மாத்திரமே க.பொ.த.சாதாரண தரத்தில் 6 பாடங்கள் சித்தியடைகின்றார்கள். எவ்வித பயிற்சி, கல்வி தகைமை இல்லாமல் ஆண்டுக்கு 5000 - 6000 மாணவர்கள் தொழிற்சந்தைக்கு உள்வாங்கப்படுகின்றார்கள்.
* சாதாரணமாக நகரத்தில் வசிக்கும் குடும்பத்தினர் மாதாந்தம் 1.7kg கோதுமை மாவை உட்கொள்கின்றனர். கிராமங்களில் அது 1.8 kg ஆக இருக்கின்றது. ஆனால் பெருந்தோட்டங்களில் ஒரு குடும்பம் 12 kg கோதுமை மாவை உட்கொள்கின்றது. குறிப்பாக தேங்காய் இல்லாத ரொட்டியும் வெங்காய சம்பலையுமே உட்கொள்கின்றார்கள்.
* பெருந்தோட்டங்களில் பிறக்கும் குழந்தைகளில் 36% குறைந்த எடையுடனே பிறக்கின்றன.
* குறிப்பிட்ட வயதில் தேவையான உயரமோ எடையோ இல்லாமல் 25% வாழ்கின்றனர். 5 வயதுக்கு குறைவானோரில் 25% மானோருக்கு மந்தபோசனம் உள்ளது.
* கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் 64% கணித பாடத்திலும் 74% ஆங்கில பாடத்திலும் 67% விஞ்ஞான பாடத்திலும் 34% தாய்மொழி தமிழிலும் சித்தியடைவதில்லை.
* நாடு முழுவதும் 28 900 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்குகின்றபோதிலும் பெருந்தோட்டப்பகுதியை சேர்ந்தோர் 120-150 பேர் வரை மாத்திரமே உள்வாங்கப்படுகின்றனர். அவர்களில் 65% லயன்களில் வாழ்வோர் அல்லர்.
* இரத்தினபுரி மாவட்டத்தில் உயர் தரத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கொண்ட ஒரு தமிழ் பாடசாலைக்கூட இல்லை.
* பெருந்தோட்ட மக்களின் கலை கலாசாரங்களை பேணக்கூடிய அல்லது பாதுகாக்கக்கூடிய வகையில் எந்தவொரு புத்துருவாக்கமும் இடம்பெறுவதில்லை. தமிழ் மக்கள் என்பதால் அல்லது சிறுபான்மை மக்கள் என்பதால் அரசாங்கம் இவற்றை முடக்குகின்றதா?
* கடந்த காலங்களில் தொண்டமானின் சுயநலத்திற்காக தனிப்பட்ட தேவைகளுக்காக பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திகள் எதுமே இடம்பெறவில்லை. தொண்டமான் பவுண்டேஷன் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அது எதற்காக? அது அரசாங்க நிறுவனமா? அரசாங்க அதிகார சபையா? அல்லது திணைக்களமா? அந்த நிறுவனத்தில் தொழில்புரிவோர் கட்சி நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றனர். வருடாந்தம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்றது. கடந்த 9 வருடங்களில் ஒதுக்கப்பட் 1800 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது?இங்கே தொழிலாளி 450 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டு இருக்கும்போது, தொண்டமானால் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்மணிக்கு 3.5 இலட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது.
-இராமானுஜம் நிர்ஷன்-

Phanerozoic and Precambrian

There are differences in the style of collisional orogens between the Phanerozoic and the Precambrian, most notably the appearance of blueschists and ultrahigh pressure metamorphic (UHPM) rocks in the geological record since the late Neoproterozoic, whereas these rocks are absent from older orogens. Understanding collisional orogenesis in the context of present-day values for ambient upper-mantle temperature and radiogenic heat production provides a reference from which to extrapolate back to conditions in the Precambrian. To evaluate differences in the way Phanerozoic and Precambrian collisional orogens develop, a series of experiments were run using a 2-D petrological–thermomechanical numerical model in which the collision of spontaneously moving continental plates was simulated for values of ambient upper-mantle temperature and radiogenic heat production increasing from those appropriate to the present day. Thus, models of modern collisional orogens involving different modes of exhumation of UHPM rocks were extrapolated back to conditions appropriate for the Precambrian. Based on these experiments an increase of the ambient upper-mantle temperature to > 80–100 K above the present-day value leads to two distinct modes of collision that are different from the modern collision regime and for which the terms truncated hot collision regime (strong mafic lower continental crust) and two-sided hot collision regime (weak felsic lower continental crust) are proposed. Some Proterozoic orogens record post-extension thickening to generate counter-clockwise metamorphic P–T paths followed by slow close-to-isobaric retrograde cooling, such as occurred in the Paleoproterozoic Khondalite belt in the North China craton and the late Mesoproterozoic–early Neoproterozoic Eastern Ghats province, part of the Eastern Ghats belt of peninsular India. These orogens have similarities with the truncated hot collision regime in the numerical models, assuming subsequent shortening and thickening of the resulting hot lithosphere. Other Proterozoic orogens are characterized by clockwise looping metamorphic P–T paths and extensive granite magmatism derived from diverse crustal and subcontinental lithospheric mantle sources. These orogens have similarities with the two-sided hot collision regime in the numerical models. Both regimes are associated with shallow slab breakoff that precludes the formation of UHPM rocks. The temperature of the ambient upper-mantle where this transition in geodynamic regimes occurs corresponds broadly to the Neoproterozoic Era.

Wednesday, October 24, 2018

The very first publicly sold bottle of Coca-Cola

It contained around 3.5 grams of cocaine.
Confederate Colonel John Pemberton, who was wounded in the American Civil War and became addicted to morphine, began a quest to find a substitute for the problematic drug. The prototype Coca-Cola recipe was formulated at Pemberton's Eagle Drug and Chemical House, a drugstore in ColumbusGeorgia, originally as a coca wine. He may have been inspired by the formidable success of Vin Mariani, a French-Corsican coca wine. It is also worth noting that a Spanish drink called "Kola Coca" was presented at a contest in Philadelphia in 1885, a year before the official birth of Coca-Cola

Anne Frank (ஆனி ஃபிராங்க்)

உறைந்து போகாமலிருக்குமோ உங்கள் உள்ளம்?


நெதர்லாந்து நாட்டில் ஒரு தொழிற்சாலையை நடத்திக்கொண்டிருந்தவர் ஓட்டோ ஃபிராங்க். யூத இனத்தைச் சேர்ந்தவர். அவரது மகள் ஆனி. வயது 13. யாருக்கும் தெரியாமல் சிறுகதைகள் எழுதிவந்தவள். துறுதுறுப்பான, நகைச்சுவை உணர்வுள்ள பெண் என்று பள்ளியாசிரியர்களிடம் பெயர் பெற்றவள்.

1940ல் ஹிட்லரின் நாஜிப்படை இந்த நாட்டிற்குள் புகுந்து, யூத மக்களைக் கைது செய்து சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பியது.
ஃபிராங்க் குடும்பத்தினர் அவர்களது தொழிற்சாலையின் புத்தக அலமாரிக்குப் பின்னால் இருந்த ரகசிய அறையில் பதுங்கிக்கொண்டனர். நண்பர்கள் சிலர் மரண அபாயத்திலும் துணிந்து இந்தக் குடும்பத்திற்கு ரகசியமாக உணவளித்து வந்தனர். ஆனி அந்த அறைக்குள்ளேயே, தனக்குப் பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த ஒரு டயரியில், வெளியுலகத்தைக் காண முடியாத ஏக்கம் உள்ளிட்ட உணர்வுகளைத் பதிவு செய்து வரலானாள். தனக்குக் கிடைத்த முதல் முத்தம், சர்வாதிகார ஒடுக்குமுறை என்று அனைத்தையும் பற்றி எழுதிவந்தாள்.
விரைவில் அந்த அறையில் ஒரு நண்பரின் குடும்பம் சேர்ந்துகொண்டது. அந்தக் குடும்பத்தின் பீட்டர் என்ற பதின்பருவத்தினன் மீது இவளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. தந்தைக்கு இது பிடிக்காமல் போகும் என்று அஞ்சிய ஆனி, உணர்வுகளை மட்டும் பதிவு செய்தாள். ஆனிக்குக் கிடைத்த முதலாவது, கடைசி முத்தம் பீட்டரிடமிருந்துதான்.
1942ல் அந்தத் தொழிற்சாலையில் நடந்த ஒரு திருட்டு தொடர்பாக சோதனை நடத்திய பாதுகாப்பு அலுவலர், புத்தக அலமாரிக்குப் பின்னாலிருந்த அறையைக் கண்டுபிடித்தார். தகவலறிந்து வந்த ராணுவத்தினர் இரண்டு குடும்பத்தினரையும் பிடித்துச் சென்றனர். 15 வயதுக்குக் குறைந்த குழந்தைகளை நேரடியாக விஷவாயுக் கூடத்திற்கு அனுப்பினர். அப்போது 15 வயதைத் தொட்டிருந்த ஆனியைப் பெரியவர்களோடு முகாமில் அடைத்தனர். அவளுடைய தலை மொட்டையடிக்கப்பட்டு வரிசை எண் பச்சை குத்தப்பட்டது.
தினமும் கொண்டுவரப்படுகிற குழந்தைகள் கண் முன்னால் கொலைக்கூடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதைப் பார்த்து அழுதாள் ஆனி. முகாமின் சுகாதாரமற்ற, மோசமான நிலைமை பலரையும் நோயாளியாக்கியது. ஆனியின் அக்காள் மரணமடைய, சில நாட்களில் ஆனியும். இறந்த தேதி தெரியவில்லை.
1945ல் சோவியத் படைகள் வருகையைத் தொடர்ந்து யூதர்களுக்கு விடுதலை கிடைத்தது. எப்படியோ தாக்குப் பிடித்து உயிர்வாழ்ந்த ஓட்டோ ஃபிராங்க் தனது வீட்டுக்கு வந்தார். குடும்பத்தினர் அனைவரும் செத்துப்போய்விட்டதை அறிந்தார். தனிமை வாழ்க்கையை எப்படித் தொடரப்போகிறோம் என்று கலங்கிய அவரிடம், நண்பர் ஒருவர், அந்த ரகசிய அறையிலிருந்து மீட்கப்பட்ட ஆனியின் டயரியை ஒப்படைத்தார். மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு டயரியைப் பிரித்தார் தந்தை. கண்ணீரில் மூழ்கினார்.
மகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த டயரிக் குறிப்புகளையும் ஆனியின் பிற பதிவுகளையும் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டார். கடந்த ஆண்டுகளில் 65 மொழிகளில் வெளியாகியுள்ள அந்தப் புத்தகம், உலக அளவில் அதிகமாகப் படிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்றாகும். சென்ற நூற்றாண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக ஆனியை அறிவித்து கௌரவித்தது ‘டைம்ஸ்’ பத்திரிகை.
நிலைமைகள் மாறும், அன்பு மேலோங்கும் என்ற நம்பிக்கையை ஆனி வெளிப்படுத்தியுள்ள அந்த டயரியில் உள்ள முக்கியமான வாசகம்: “என்ன நடந்திருந்தாலும், இப்போதும் நான் மக்கள் தங்கள் இதயத்தில் உண்மையிலேயே நல்லவர்கள் என்றே நம்புகிறேன்.”
Kumaresan Asak

Compaction and Cementation


Compaction is the process in which sediment is squeezed and in which the size of the pore space between sediment grains is reduced by the weight and pressure of overlying layers.


Cementation is the process in which sediments are glued together by minerals that are deposited by water.

புற்று நோய் செல்களை அழிக்க புதிய சிகிச்சை

வைட்டமின் சி மற்றும் ஆன்டிபயோடிக் கலவை புற்றுநோய் செல்களை அழிக்க உதவக்கூடியது என்று புதிய ஆய்வில் தெரிந்துள்ளது. மேலும், இந்த கலவை புற்றுநோய் திரும்ப வராமல் தடுக்கவும், அதற்கான மருத்துவத்தை வாழ்நாள் முழுவதும் தொடர்வதை தவிர்க்கவும் உதவக்கூடியது என்று வெளியிட்டுள்ளது.
ஆய்வின் முடிவில், புற்றுநோயை குணப்படுத்த தற்போது உதவக்கூடிய 2-டிஜி முறையை விட வைட்டமின் சி மற்றும் ஆன்டிபயோடிக் கலவை 100 மடங்கு சிறந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
லண்டன் சல்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரிமருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு இணை-ஆசிரியர், பேராசிரியர் மைக்கேல் லேசானி மற்றும் சக ஊழியர்கள் அண்மையில் தங்கள் கண்டுபிடிப்புகளை பத்திரிகை ஒன்றில் வெளியிட்டனர்.
ஸ்டெம் செல்கள் என்பது ஒரு செல்லின் வகையை மாற்றியமைக்கும் திறன் கொண்டது. மேலும், ஆய்வுகள் கூறுவது என்னவென்றால் புற்றுநோய் செல்களும் ஸ்டெம் செல்களை போன்று மற்ற செல்களை புற்றுநோய் செல்களாகவோ அல்லது புற்றுநோய் கட்டிகளாகவோ மாற்றவைக் கூடிய ஆற்றலை கொண்டது என்று குறிப்பிடுகிறது.
எனவே, புற்றுநோய் ஸ்டெம் செல்களை அடையாளம் காணவும், அழிக்கவும் புதிய சிகிச்சை முறைகள் அவசியமானவை என்று பேராசிரியர் லிசந்தி மற்றும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் ஸ்டெம் செல்களை அழிக்கும் புதிய முறைகள் பற்றி கண்டறிந்துள்ளனர்.
புற்றுநோயை அழிக்க உதவும் வைட்டமின் சி :
இந்த ஆண்டு வெளிவந்த அறிக்கையில், பேராசிரியர். லிசந்தி மற்றும் குழுவின் மற்றொரு ஆய்வில், வைட்டமின் சி திறம்பட புற்றுநோய்களை எவ்வாறு தாக்குகிறது என்பதை வெளியிட்டிருந்தனர். இது குறித்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், டாக்ஸிசைக்ளிங் என்னும் முகப்பரு, நிமோனியா மற்றும் நோய் தொற்றுகளுக்கு உபயோகிக்கும் ஆன்டிபயோடிக்கை புற்றுநோய் ஸ்டெம் செல்களில் 3 மாதங்களுக்கு அளித்தனர்.

ஆன்டிபயாடிக் “வளர்சிதை மாற்ற நெகிழ்வுத்தன்மையை” தூண்டுகிறது என்று இந்த ஆய்வு குழு விளக்குகிறது. அதாவது, இது எரிபொருள் ஆதாரங்களை உயிர்வாழ்வதற்கான வழிகளாக மாற்றும் செல்களின் திறனைத் தடுக்கிறது. இதன் முடிவாக அந்த செல்கள் ஆற்றலின் ஒரு ஆதாரமாக குளுக்கோஸைக் கொண்டிருக்கும். ஆனால் ஆன்டி-பயாடிக்குடன் வைட்டமின் சி-யை எடுக்கும் போது, அது புற்றுநோய் ஸ்டெம் செல்களில் இருந்து க்ளுக்கோஸை நீக்கி, அந்த செல்களை அழித்துவிடும்.
இந்த சூழ்நிலையில், வைட்டமின் சி கிளைகோலைஸிஸின் தடுப்பானாக செயல்படுகிறது. இது மைட்டோகோண்ட்ரியாவில் எரிபொருள்களை உற்பத்தி செய்யும் செல்களின் ‘பவர் ஹவுஸ்’ ஆக செயல்படுகிறது என்று, சல்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரிமருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இணை ஆசிரியரான டாக்டர் ஃபெடரிகா சோட்ஜியாவை விளக்குகிறார்.
2 டிஜியை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த புதிய தெரபி
முந்தைய ஆய்வில் புற்றுநோய் ஸ்டெம் செல்களை அழிப்பதில் 2 டிஜியை விட, வைட்டமின் சி உபயோகிப்பது மட்டும் 10 மடங்கு சிறந்ததாக கண்டறியப்பட்டது. ஆனால், அத்துடன் டாக்ஸிசைக்கிளினை சேர்க்கும் போது 100 மடங்கு சிறந்தது என்பது தெரியவந்துள்ளது.

“புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வைட்டமின் சி மற்றும் நச்சல்லாத கலவைகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான சான்று” என பேராசிரியர் லசந்தி தெரிவிக்கிறார்.
Thanks http://daily1tips.com/

Friday, October 19, 2018

A to Z of Fear

While not comprehensive, this phobia list offers a glimpse of the many phobias that can have a serious impact on an individual's life. As you may notice while you browse through this list, most specific phobias fall into one of four major categories: fears of the natural environment, fears related to animals, fear related to medical treatments or issues, and fears related to specific situations.
One important thing to remember is that virtually any object can become a fear object. The names of specific phobias are often formed as nonce words, or words coined for a single occasion only.
These names themselves are often formed by taking a Greek prefix that represents the fear object and adding the -phobia suffix.
Because of this, any attempt for form a completely exhaustive list of phobias would simply be an exercise in futility. Any list of phobias could grow with the addition of newly coined terms for previously unnamed specific phobias.
While listing all of the phobias that may exist is not possible, it can be helpful to look through a list of some of the more commonly described phobias. As you can see by looking at this list, almost any object or situation can become the source of fear.

Wednesday, October 17, 2018

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை


-சுந்தர ராமசாமி
இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுதான் கூர்மையான பொறிகளை நாம் பெற்றிரு ந்தாலும் கூட, நம்முடைய கவன வட்டங்கள், நம்முடைய அறிவு வட்டங்கள், நம்முடைய அனுபவ வட்டங்கள் மிகக் குறுகிய எல்லைகளிலேயே இயங்குகின்றன. தொலைதூரம் என்னால் பார்க்க முடியாது. தொலை தூரத்தில் இருக்கக்கூடிய வாசனையை என்னால் நுகர முடியாது. என்னுடைய அனுப வங்கள் எனக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அந்த அளவு அவை என்னிடம் மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்குக் கூட எனக்குப் பிறருடைய அனுபவங்கள் தெரியாது. ஆகவே இந்த வாழ்க்கையின் அகண்ட காரமான தன்மையையும், இந்த வாழ்க்கையில் பூமிப் பந்தில் ஒரு எறும்பு ஒட்டிக் கொண்டு இருப்பது போல் இருக்கக்கூடிய என்னுடைய நிலையையும் நினைத்துப் பார்க்கும்பொழுது பிறருடைய வாழ்க்கை சார்ந்த உண்மைகளையும் பிறருடைய வாழ்க்கை சார்ந்த சாராம்சங்களையும் சத்தான பகுதிகளையும் தெரிந்துகொண்டு அதன் மூலம் இந்த முழு வாழ்க்கையைப் பற்றி , இந்த வாழ்க்கையின் பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இதுதான் வாசிப்பின் தேவையை வற்புறுத்தக் கூடிய காரணமாக அமைகிறது.
பொதுவாகத் தமிழ் மக்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பது என் எண்ணம். நான் அவர்களுடைய புத்தகங்களைப் படித்ததன் மூலம் அறிந்து கொண்ட சில விஷய ங்கள், சமூக வாழ்க்கையில் நான் அவர்களுடன் பழகும் போது எனக்குக் கிடைக்கக்கூடிய செய்திகள் ஆகியன பெரும் பாலும் தமிழ் மக்கள் தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இது மிகக் கொடு மையான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் நான் இதை எடுத்துக் கூறும்போது தங்க ளுக்குத் தாழ்வு மனப்பான்மை எதுவும் இல்லை என்ற தோர ணையில் அவர்கள் பல வாதங்களை முன் வைப்பதை நான் கண்டிருக்கிறேன். அந்த வாதங்களின் சாராசம்களை நான் ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தாழ்வு மனப்பான்மை நோய் கொண்டவர்கள் மட்டுமல்ல, தாழ்வுமனப்பான்மையை மறுக்கக்கூடிய நோயும் கொண்டவர்கள்; ஆக இரண்டு நோய்கள் கொண்டவர்கள் என்ற முடிவுக்கு நான் வர முடிந்தது.
ஒரு இனம் ஏதோ ஒரு காலகட்டத்தில் தாழ்வு மனப்பான்மை க்கு ஆட்படுகிறது என்பது மிக மோசமான, அருவருக்கத் தகுந்த, அல்லது வெட்கப்பட தகுந்த ஒரு விஷயமல்ல. ஆனால் ஸ்தி யைப் பற்றி - நாம் இருக்கும் நிலையைப்பற்றி - உணராமல் இருப்பது, தன்போதம் இல்லாமல் இருப்பது, சுயபோதம், சுய அறிவு இல்லாமல் இருப்பது, சுய கணிப்பு இல்லாமல் இருப்பது என்பது மிக மோசமான விஷயம். இதற்கான காரணங்கள் இந்த இனத்திற்கு - மிக செழுமையான பாரம்பரியம் கொண்ட இந்த இனத்திற்கு, தொல்காப்பியத்தைத் தோற்றுவித்த இந்த இனத்திற்கு அல்லது வள்ளுவர், கம்பன், பாரதி போன்ற மிகப் பெரிய கவிஞர்கள் வாழ்ந்த இந்த இனத்திற்கு, சிற்பக் கலையில் மிகுந்த வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு, கட்டிடக் கலையில் மிக வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு ஒரு காலத்தில் கடல்மீது மிகுந்த ஆட்சி கொண்ட இந்த இனத்திற்கு - ஒரு மொழியை இரண்டாயிரம் வருடங்களாக செம்மையாகத் தக்க வைத்துக் கொண்டு, இன்று தோன்றும் கருத்துக்களைக்கூடத் தெளிளத் தெளிவாக சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு மொழியைக் காப்பாற்றி வரும் ஒரு இனத்திற்கு - ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை ஏன் 200 வருடங்களாக ஏற்பட்டது என்பதை எனக்குச் சொல்ல தெரியவில்லை. அதைப்பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
கேள்வி :மு.வ. ஒரு படைப்பாளி இல்லை என்றீர்கள் ? அதற்குக் காரணம் கூற முடியுமா ? அப்படியென்றால் ஒரு படைப் பாளிக்கு இருக்க வேண்டிய தகுதிகளை மதிப்பீடு செய்யுங்களேன் . . . ?
பதில் :இதற்கு முன்னால் இல்லாமல் இருக்கக்கூடிய ஒன்றைச் செய்து காட்டக் கூடியது தான் படைப்பு. அது தான் அதன் அடிப்படையான பொருள். இவர் ஒரு நாவல் எழுதி இருக்கிறார். நாவல் என்றால் அது முற்றிலும் புதுமையானதாக இருக்க வேண்டும். நம் மொழியில் இருக்கக்கூடிய ஒன்றையோ பிற மொழிகளில் இருக்கக்கூடிய ஒன்றையோ நகல் செய்ததாக இருக்கக்கூடாது. இந்த படைப்பு ஒருவன் வாழ்க்கையை சுயமாக எதிர் கொள்ளுவதன் மூலம் - அந்த எதிர்கொள்ளு தலிருந்து பெறக்கூடிய அனுபவங்களைச் சார்ந்து - அந்த அனுப வங்களின் சாராம்சம் என்ன என்ற agonyியிலிருந்து, வேதனையிலிருந்து - படைப்பு தோன்றுகிறது.
மு.வ. அவருடைய நாவல்களில் தமிழ்ச் சமுதாயம் அவருக்கு முன் அறிந்திராத எந்த அனுபவத்தையோ அல்லது கருத்து க்களையோ முன் வைக்கவில்லை என்று கருதுகிறேன். அவர் கூறிய கருத்துக்கள் காலம் காலமாக தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர்கள் கூறிய - அதிகமும் வள்ளுவர் கூறிய - கருத்துக்களே ஆகும். இந்தக் கருத்துக்களின் கூட்டுத் தொகுப்பு ஒரு படைப்பாகாது. படைப்பும் சமூக இயல் சார்ந்த நூல்களும் அடிப்படையில் வேறானவை. திருக்குறள் ஒரு நாவல் அல்ல. காரணம் அது வாழ்க்கையைப் பற்றி ஒரு கவிஞர் கண்டடைந்த முடிவான கருத்துக்களைக் கூறுகிறது. வாழ்க்கையின் அனுபவ ங்களைப் பற்றியோ அந்த அனுபவங்களி லிருந்து இந்தக் கருத்து நிலைக்கு வந்து சேர்ந்த பயணங்களைப் பற்றியோ அந்த நூலில் எந்தத் தடயமும் இல்லை.
ஆக, இரண்டு விதமான நூல்கள் இருக்கின்றன. ஒன்று படைப்பு சார்ந்த நூல்கள். மற்றொன்று ஒரு துறை சார்ந்த - விஞ்ஞானம் அல்லது சட்டம் அல்லது மதம் அல்லது அறவியல் போன்ற துறை சார்ந்த - நூல்கள். இவற்றிற்கு அடிப்படையான வேற்றுமை: ஒன்று அனுபவம் சார்ந்து இயங்குகிறது. அதில் முற்றான முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படவில்லை. வாழ்க்கையைப் பற்றிய கவனங்கள் கொண்டு வரப்படுகின்றன. வாழ்க்கை சார்ந்த மிக மேலான அனுபவங்கள் தேக்கப்படுகின்றன. மற்றொன்றில் முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படுகின்றன. இந்த முடிவான கருத்துக்களை வற்புறுத்திய ஆசிரியராகத்தான் மு.வ.வை எடுத்துக் கொள்கிறேன். மாறாக வாழ்க்கையைச் சார்ந்த அனுபவங்களை அவர் முன் வைத்தார் என்று என்னால் கூறமுடியவில்லை. அதனால் ஒரு படைப்பாளியாக அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கேள்வி :இன்றைய கலாச்சார வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக எதைச் சொல்ல முடியும் ?
பதில் :முக்கியமான காரணம் தமிழ் நாட்டில் போலிகளுக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரம் என்று சொல்லலாம். ஒரு சமுதாயத்தில் எல்லா தரத்தைச் சார்ந்த மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்த மக்கள் மட்டும் வாழக்கூடிய சமுதாயம் என்று எதுவுமே இல்லை. செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு தரத்தைச் சார்ந்த செயல்பாடுகள் ஒவ்வொரு சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும். மிக உயர்வானதும் இருக்கும்; நடுத்தரமானதும் இருக்கும். மிகக் கீழானதும் இருக்கும். ஆனால் ஒரு விவேகமான சமூகம் உயர்வான செயல்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. அதைப் போற்றுகிறது. பாராட்டுகிறது. இரண்டாம் பட்சமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மூன்றாம் பட்சமான அல்லது முப்பதாம் பட்சமான செயல்பாடுகளைக் கண்டிக்கிறது. இதன் மூலம் மதிப்பீடுகளை ஒரு விவேகமான சமூகம் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. எனவே இந்தச் செயல்பாடுகள் இருப்பது வீழ்ச்சிக்கு காரணம் அல்ல. தரக்குறைவான செயல்பாடுகள் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. தரக்குறைவான காரியத்துக்கு நாம் கொடுக்கக் கூடிய சமூக அங்கீகாரம் சமூக மதிப்பு வீழ்ச்சியினுடைய அறிகுறி என்று நான் கருதுகிறேன்.
மூன்றாம்தர எழுத்தாளரை முதல் தரமான எழுத்தாளராக ஒரு சமூகம் கருதுமென்றால், பல்கலைக்கழகம் கருதுமென்றால், அறிவாளி வர்க்கங்கள் கருதுமென்றால், அரசாங்கம் கருதுமென்றால், அரசியல்வாதிகள் கருதுவார்கள் என்றால் அந்த சமூகம் விவேகமான மதிப்பீடுகளை, அளவுகோல்களை இழந்து விட்டது என்றுதான் அர்த்தம். மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கக்கூடிய ஒரு சமூகத்தில் மிக மோசமான நடிகர்களை மிகச் சிறந்த நடிகர்களாக ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்றால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த அறிவாளிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்றால், நடிப்பைச் சார்ந்த அளவுகோல் முறிந்து போகிறது என்று அர்த்தம். இதுபோன்ற ஒரு வீழ்ச்சி தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் பிற துறைகள் சார்ந்தும் மூன்றாம் தரமானவற்றை முதல் பட்சமாக முன் வைக்கும் காரியம், முதல் பட்சமானவற்றை முற்றாக நிராகரித்து விடும். இந்த இரண்டு காரியத்தையும் இந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருகிறது. ஆகவே இது ஒரு பெரிய வீழ்ச்சி என்று நம்புகிறேன்.
கேள்வி :இந்த நூற்றாண்டில் தமிழில் மிகச்சிறந்த கலைஞர்கள் யாவர் ?
பதில் :இந்த நூற்றாண்டில் மிகச் சிறந்த கலைஞர்களாக நான் இருவரை மதிக்கிறேன். ஒருவர் பாரதி. மற்றொருவர் புதுமைப்பித்தன். இவர்களின் புத்தகங்களையேனும் மாணவர்கள் முழுமையாகப் படிக்க வேண்டும். இந்த அனுபவங்களுக்கு அவர்கள் ஆளானால் அதுவே பெரிய விஷயம். ஒரு முக்கியமான விஷயம். இதை ஆரம்பமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டுள்ள முக்கியமான மற்ற புத்தகங்களைப் படிக்கலாம். சிறந்த புத்தகங்கள் ஏராளமாகத் தமிழில் இருக்கின்றன. அவற்றை நீங்கள் படித்துப் பார்ப்பது அவசியமென்று நம்புகிறேன். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நூறு புத்தகங்களையேனும் குறைந்தபட்சம் படிக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகங்களை நீங்கள் சுலபமாகப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பான்மையான புத்தகங்கள் உங்கள் நூல் நிலையங்களில் இருக்கக் கூடியவைதான். எந்தவிதமான கஷ்டத்துக்கும் நம்மை ஆட்படுத்தாமல் மிகப் பெரிய செல்வங்கள் நம்மை வந்தடையக்கூடிய ஒரு வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். அந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி :படைப்பாளிகளில் இரண்டாந்தர படைப்பாளியை எந்த அளவுகோலை வைத்து மதிப்பிடுகிறீர்கள் ?
பதில் : இப்போது பல்வேறு வகைப்பட்ட அளவுகோல்கள் இருக்கின்றன. முக்கியமாக ஒரு அளவுகோல் ஒரு படைப்புக்கும் காலத்துக்குமான உறவு. ஒரு எழுத்தாளன் அவனுடைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நவீன மனிதனாக இருக்க வேண்டும். அவனது உடல் இன்று வாழ்கிறது என்ற காரணத்திற்காக அவனை இந்த நூற்றாண்டு மனிதனாகக் கருதி, கருத்துலகம் சார்ந்து, அனுபவ உலகம் சார்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
இன்று வந்து கொண்டிருக்கிற பெரும்பான்மையான புத்தகங்களும் படைப்புக்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவை. ஆக ஒரு படைப்பாளிக்கும் இந்த காலத்திற்கும் இருக்கக்கூடிய உறவு நிலை காலத்தால் அவன் பெற்ற பாதிப்புகள், அந்தப் பாதிப்புகள் மூலம் தன்னை நவீன மனிதனாக அவன் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிறைவு, இவைதான் படைப்புக்கு அடிப்படையான கூறுகள் என்று நினைக்கிறேன். இதைச் சார்ந்து பல்வேறுபட்ட கூறுகள் இருக்கின்றன. மொழியை அவன் எப்படிப் பயன்படுத்துகிறான் ? சிக்கனமாகப் பயன்படுத்துகிறானா ? மொழியை விரயம் செய்கிறானா ? மிகப்பெரிய அனுபவங்களை அவனால் அறிய முடிகிறதா ? பல்வேறுபட்ட அர்த்தப் பரிமாணங்களை அந்த படைப்புக்களால் தர முடிகிறதா ? உண்மையென்று முற்றாக நம்பக்கூடிய, நம்பச் செய்துவிடக்கூடிய ஒரு கற்பனை வளத்தை அவன் கொண்டிருக்கிறானா ? மீண்டும் மீண்டும் அந்தப் படைப்பை அணுக வேண்டும் என்ற வற்புறுத்தல் அந்த படைப்பு நமக்குத் தருகிறதா ? நம்முடைய கவனத்தை முழுமையாக அந்தப் படைப்புக் கேட்டு நிற்கிறதா ? அல்லது அரைத் தூக்கத்திலேயே அந்தப் படைப்பைப் படிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறதா ? என்பது போன்ற பல்வேறுபட்ட அளவுகளை வைத்து உயர்ந்த படைப்புக்கும் இரண்டாம் பட்சப் படைப்புக்குமான வேற்றுமைகளைக் கண்டு கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
[நாகர்கோவில் தெ. தி. இந்துக் கல்லூரி முதுகலை வணிக இயல் துறை பேரவைத் தொடக்க விழாவில் பேசியது - 28.10.1988]
(இவை என் உரைகள் நூலிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்)
நன்றி : இவை என் உரைகள்-சுந்தர ராமசாமி-காலச்சுவடு பதிப்பகம்

Amazing Vedic architecture photo series

 Durga as MahishasuraMardini on Rangmandapa pillar of Sun Temple, Modhera(Gujrat). Built by Maharaja Bhimdeva of Solanki Dynasty. Credit :AIIS, Center for Art and Archaeology.

Galileo’s Drawings - The First Realistic Depictions of the Moon in History (1610)


Wednesday, October 10, 2018

View of majestic Kailasha Temple

View of majestic Kailasha Temple, Ellora caves Temple Complex The great VishwaKarmans who created this marvel The great Shiva Temple was excavated vertically from top to bottom.Source: Indian Truth Real Truth

Tuesday, October 9, 2018

100 years complete of shirdi Sai baba | 18-10-2018 Thursday samadhi day ...

சேகுவேரா நினைவுத் தினம் இன்று

‘‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. அவருடைய நினைவுத் தினம் இன்று .

கியூபா விடுதலையடைந்து காஸ்ட்ரோ அதிபர் ஆனபிறகு, ‘சே’ விவசாயத் துறையின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கியூபா தேசிய வங்கியில் தலைவராக நியமனம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு உயர்ந்தார். பின், தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவ்வளவு பதவிகள் வகித்தபோதும் எப்போதும் தன்னை ஒரு சராசரி குடிமகனாகவே நினைத்து விவசாயம் செய்துவந்தார். சேகுவேராவுக்கும் ஃபிடலுக்கும் இடையே யுத்தத்துக்கு முன்னும், பின்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர்.
‘‘அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை, ஒரு மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக தன்னால் வேரறுக்க முடியும்’’ என்று ஒருமித்த மனதோடு நம்பினார். கியூபாவுக்கு ஆயுதங்கள் தருவதாக ரஷ்யா சொன்னபோது, ‘‘ரஷ்யாவின் ஆயுதங்கள் கியூபாவில் இறங்கினால், அவைகள் அமெரிக்காவின் பெருநகரங்களைக் குறிவைக்கும்’’ என்று தைரியமாகச் சொன்னார் ‘சே’. இதற்குக் காரணம், கியூபா மீது அமெரிக்கா போட்ட பொருளாதாரத் தடையே ஆகும். அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்று, நேர்காணலுக்காக ‘சே’வை அழைத்தது. அதில், ‘‘அமெரிக்கா ஒரு ‘கழுதைப்புலி.’ அதன், ஏகாதிபத்தியத்தை நான் அடியோடு கருவறுப்பேன்’’ என்று அமெரிக்க மண்ணிலேயே கம்பீரமாக கர்ஜித்தார்

‘‘ ‘சே’வைச் சுட்டுக்கொல்ல வேண்டும். யார் அந்தக் காரியத்தை செய்கிறீர்கள்’’ என்று கேட்டபோது, ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அந்தக் கொடும்செயலைச் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறான். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘சே’, ‘‘மண்டியிட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது எவ்வளவோ மேல்’’ என்றார். ஆனால், அந்த ராணுவ வீரனோ, ‘சே’ வை ஒரு கோழைபோல் கொல்வதற்குத் தயாரானான்.
‘‘கடைசி நிமிடத்தில்கூட என்னை நிற்கவைத்துச் சுடுங்கள்’’ என்றார் ‘சே’. ஆனால், அந்தக் கோழையோ ‘சே’வின் பார்வையைக்கூட நம்மால் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலோ என்னவோ, அந்த மாவீரர் சொன்னதை அலட்சியப்படுத்தினான்.
“கோழையே... நீ சுடுவது ஒரு ‘சே’வை அல்ல. ஒரு சாதாரண மனிதனைத்தான்” என்று இதயம் கிழிக்க, கண்கள் மின்ன தன்னுடைய கடைசி வார்த்தைகளை உமிழ்ந்தார் ‘சே.
“விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது’’ என்பதே அவர் அடிக்கடி சொல்லும் முழக்கம். ஆம்... அவர் அழிக்கப்படவில்லை. ‘சே’ எனும் சொல்லாக வாழ்ந்துகொண்டிருக்கிறார், மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த .
Chandran Veerasamy