Search This Blog

Sunday, September 30, 2018

வள்ளுவர் மேல் ஒரு வழக்கு


பழநி சோ முத்துமாணிக்கம்.
அன்று காலை பரபரப்பாகக் காணப்பட்டது அறம்கூறும் அவையம் (நீதிமன்றம்). வெளிநாடுகள் சென்று சுற்றுவதிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த மன்னனும் மன்றத்துக்கு வருவதாகக் கூறினார்கள். அதனால் அமைச்சர்களும் ஒருவித அச்சத்துடன் காத்திருந்தார்கள்.
உலகமெல்லாம் எவருடைய நூலை உலகப் பொதுமறை என்று போற்றுகிறதோ, எவருடைய நூல் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்த ஆன்றோர்மேல் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
மன்ற வாயில்முன் மக்கள் கூட்டத்தின் எழுச்சி முழக்கம் அறங்கூறவையத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.“கைவைக்காதே.. கைவைக்காதே.. கருத்துரிமையின்மேல் கைவைக்காதே! வாழ்க்கைத் தத்துவம் வடித்துத் தந்த வள்ளுவர் மேலே பொய்வழக்குகள் போடாதே! மக்கள் ஆட்சியின் மாபெரும் உரிமை கருத்துரிமை என்பதைக் கவனத்தில் வை! அறிஞர்கள் வாய்க்குப் பூட்டுப் போட்டால் அழியும் ஆட்சி மறவாதே!” என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டு பல்லாயிரம் மக்கள் கையுயர்த்திக் கொண்டிருந்தார்கள்.
காவலர்கள் முன்னும் பின்னும்வர, வள்ளுவர் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். பொங்கியெழும் மக்களைப் பார்த்துத் தலைமைக் காவலர் வெகுண்டார். “எல்லோரும் அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் குறிபார்த்துத் தீ அம்புகளை வீசக்கூடிய வில்மறவர்கள் உங்களைக் கொல்லக் காத்திருக்கிறார்கள்” என்று சீறினார். அப்போதுதான் மக்கள் நாலாபுறமும் சுற்றிப் பார்த்தார்கள்.
எல்லாத் திசைகளிலும் யானைகளின் மேலும் குதிரைகளின் மேலும் அமர்ந்து வில்லும் கவணும் தீப்பந்துகளும் தாங்கிய வீரர்கள் இவர்களைக் குறிபார்த்துக் கொண்டிருந்தார்கள். மன்னரிடம் பரிசாகப் பொற்காசுப் பைகளைப் பெறுவதற்காக, எவ்விதக் காரணமும் இன்றி மக்களை நோக்கித் தீக்குண்டுகளை வீசக் காத்திருக்கிறார்கள்
காவலர்கள்.அமைச்சர்களும் படைப்பிரிவுத் தளபதிகளும் அறங்கூறவையத் தலைவரும் வள்ளுவர் நுழைந்தபோது தன்னெழுச்சியாய் எழுந்து நின்றார்கள். அடுத்த நொடியில், குற்றம் சாட்டப்பட்டவருக்காக எழுந்து நிற்பதை மன்னன் விரும்பவில்லை என்று தெரிந்தவுடன் அனைவரும் விரைந்து இருக்கைகளில் அமர்ந்தனர்.
‘தங்கள் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பதை அறிவீர்களா வள்ளுவரே?’ தலைமை அமைச்சர் அவையின் அமைதியைக் கலைத்தார்.
புன்னகை தவழும் முகத்தோடு பேசினார் வள்ளுவர், ‘என் மீது குற்றச்சாட்டா? அறம்பேச வந்தவர்கள் குற்றவாளி என்றால் இந்த நாட்டில் வாழ்பவர்கள் அனைவருமே குற்றவாளிகள்தாம் அமைச்சர் பெருமானே! இறந்த பின் தான் புலவர்களுக்கு தமிழ் ரத்தினம், தமிழ்க்கடல் என்றெல்லாம் விருது கொடுப்பீர்கள். இருக்கும்போது அவர்களுடைய கருத்துரிமையை மதிக்கமாட்டீர்கள்.குற்றவாளியாக்கிக் களிப்பீர்கள். அது சரி.. நான் செய்த குற்றம் என்ன?‘.
‘நீங்கள் ஒரு தேசத் துரோகி’ அமைச்சரின் வினைக்கு எதிர்வினை பார்வையாளர் மாடத்தில் இருந்து வந்தது. ‘இது நீதியில்லை. முறையும் இல்லை’ உலகமெல்லாம் அன்பு தழைத்தோங்க வேண்டும் என்று குறளைப் படைத்த கோமான்மேல் இப்படியொரு குற்றம்சாட்ட உங்களுக்கு எப்படி மனம் வந்தது மக்கள் குமுறி எழுந்து குரல்முழக்கம் இட்டனர்.’அமைதி.. அமைதி.. வள்ளுவர் மேல் சாட்டப்பட்ட குற்றங்களை அமைச்சர் எடுத்துரைப்பார். பிறகு பேசுங்கள் எது சரி என்று’ மன்னனின் எச்சரிக்கையால் அமைதி அடைந்தனர் மக்கள்.
அமைச்சர் வினாக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார். ‘கடவுள் வாழ்த்தை எழுதியது நீங்கள்தானே?’
வள்ளுவர் விடையளித்தார், ‘அதற்கென்ன ஐயம்?’
“அதில் எந்தக் கடவுளரின் பெயரும் இல்லையே? வாலறிவன், மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்று பெயர் சுட்டாமல் குறிப்பிடுகிறீர்களே, அந்த இரகசியக் குறியீட்டுக்கு என்ன பொருள்? அதன் பின்னணியில் என்ன சதி இருக்கிறது?
வள்ளுவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘கடவுள் பெயரைச் சொல்லிச் சதிசெய்யும் வழக்கம் எமக்கில்லை. அவனுக்குப் பெயரில்லை; வடிவில்லை; நீங்களாக எந்த வடிவத்தையும் வைத்துக் கொள்ளலாம்: எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். அது மக்களின் நம்பிக்கையைப் பொறுத்தது’ என்றார்.
அமைச்சரின் முகம் எப்போதும் இப்படி இருண்டு போனதில்லை. வினாக்களை தொடர்ந்தார் .‘பரந்து கெடுக உலகுஇயற்றியான் எனக் கடவுளுக்கே சாபம் கொடுக்கிறீர்களோ? என்ன நெஞ்சழுத்தம் உங்களுக்கு’?
‘பிச்சை எடுத்துத்தான் ஒருவன் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை நாட்டில் நிலவினால் அப்படி அவனைப் படைத்தவன் ஒழியட்டும் என்று கூறினேன். இதில் என்ன தவறு?.
’ஓகோ.. கொலைசெய்யத் திட்டம் போட்டதாக உங்கள்மேல் குற்றம் பதியப்பட்டிருக்கிறது. அறிவீரா?
வள்ளுவர் விடைசொல்வதற்குள், அறநிலையத்துறை அமைச்சர் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். “கடவுள் வழிபாட்டு முறைகளைப் பகடி செய்துள்ளீர்கள். கடவுளுக்காக மொட்டை அடிப்பதையும் தாடி வளர்ப்பதையும் எள்ளி நகையாடி இருக்கிறீர்கள். கற்புடைய பெண்கள் தெய்வத்தைத் தொழமாட்டார்கள் என்கிறீர். தவத்தொடு தானம் செய்பவரைவிட மனத்தோடு வாய்மை உரைப்பவர்கள் தாம் உயர்ந்தவர்கள் என்று கூறித் தவம் செய்பவர்களைத் தாழ்த்துகிறீர்கள். பிறர் சொல்லும் வசைமொழிகளைப் பொறுத்துக்கொள்பவர்கள், உண்ணாநோன்பிருக்கும் துறவிகளைவிடப் பெரியவர்கள் என்கிறீர். தாங்கள் நினைத்ததை எல்லாம் எழுதுவதற்கு இங்கே உரிமையில்லை.பொது அமைதிக்குக் கேடு விளைவித்ததாக உங்கள்மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.”
“அமைச்சர் பெருமானே! ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற குறளையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் என அமைச்சர் பண்பு நலன்களைப் பற்றியும் பாடியிருக்கிறேன். ஆனால் நீங்கள் கனியிருக்கக் காய்கவர்ந்தது போல் பேசுவது எமக்கு நகைப்பையே வரவழைக்கிறது. போகட்டும். கடவுள் நம்பிக்கையின் பெயரால் மடமைகள் பெருகிவிடக் கூடாதே என்ற தவிப்பால் நான் எழுதிய பாக்களுக்கு இப்படி எல்லாம் பொருள் கொள்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை.” வள்ளுவரின் துணிச்சலான பேச்சு மன்னனுக்குச் சினத்தையே தூண்டியது.
வள்ளுவரைப் பார்த்துச் சீறினான். ‘‘மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறியிருக்கிறீர்கள். எம்மை எதிர்த்துப் பேசுவோர்க்கு ஆதரவாகச் செயல்படுகிறீர்களா? எம்மைப் பழிதூற்றிப் பேசினாலும் பொறுத்துப் போகவேண்டுமா? அதுதான் மன்னருக்கு அழகா? காட்சிக்கு எளியனாக இருக்கலாம்; கடுஞ்சொல் கூறாமல் எப்படி இருப்பது? இடித்துரைக்க ஆளில்லாவிட்டால் மன்னன் தானே கெடுவான் என எம்மையே எதிர்த்துப் பேசுகிறீர்களா? மன்னன் கொடியவன் என்று மக்கள் ஏச்சுக்கு ஆளானால், மன்னனுடைய அரசாட்சிக் காலம் விரைவில் முடியும் என்று கூற உமக்கு என்ன துணிச்சல்? மக்கள் நலத்துக்காகவே வரிக்குமேல் வரி போடுகிறோம்.அதை ஏளனம் செய்கிறீர்கள். வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் என்று எம்மை வழிப்பறிக்காரனாகச் சித்தரிக்கிறீர்கள். அப்படி வசூலிக்கும் வரியைக் கொடுக்க முடியாதவர்கள் கண்ணீர் சிந்தினால், அந்தக் கண்ணீரே எம்மை அழித்துவிடும் என அச்சமூட்டுகிறீர்கள். அழக்கொண்ட எல்லாம் அழப்போம் என முழக்கமா இடுகிறீர்கள்? அரசை எதிர்த்துப் பேசுவது பெரும் குற்றமில்லையா? மன்னரோடு பழக வேண்டியவர்கள் அகலாது அணுகாது தீக் காய்வோர்போல் இருக்க வேண்டும் என்கிறீர்களே? நான் என்ன விலங்கா அருகில் இருப்போரைக் கடித்துக் குதற!
‘‘மன்னர் பெருமானே நாடும் மக்களும் நலம் பெறவே குறளை எழுதினேன். எந்தச் செயலைச் செய்தாலும் பிறர் தம்மை எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் என்று எச்சரிக்கவே இலக்கியம் படைத்தேன். மக்களுடைய வாழ்வைக் கெடுக்கிற அனைத்தையும் எதிர்ப்போம். எத்தனையோ திட்டங்களை உங்கள் அரசவையில் அறிவிக்கிறீர்கள். அது செயலுக்கு வருகிறதா என்று நீங்கள் எண்ணித் துணிகிறீர்களா? சரி புலவர்கள், அறங்கூறவையத்தார் ஆகியோர் நல்லாட்சிக்குத் தேவையானவற்றைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுச் செயல்பட மறுக்கிறீர்கள். சொல்லுதல் யார்க்கும் எளிய.. ஆனால் அதைச் செயலாக்க நீங்கள் முனைவதில்லையே? ஏவவும் செய்கலான் தான் தேறான், அதாவது தானும் செய்யமாட்டான்; பிறர் எடுத்துரைத்தாலும் கேட்கமாட்டான் என்று மன்னரைப் பற்றி நான் பாடியது உண்மைதான். நான் பாடியபடி மன்னர்கள் இருக்கிறார்களா?” ஆவேசமாக வள்ளுவர் விடுத்த வினாக்களுக்கு விடைசொல்லத் தெரியாமல் மன்னன் தனக்குள் குமைந்து கொண்டிருந்தான்.‘‘அது சரி வள்ளுவரே, அரசின் திட்டங்களையெல்லாம் எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டே இருக்கிறீர்களே..’’
அது சரியா?
‘‘எதை எதிர்த்தேன் மன்னா?’’
‘‘பனைநிறைந்த காடுகள்; பதனியொடு கள்சுரக்கும்; பருகிமக்கள் இன்பமுற அங்காடி பலதிறந்தோம்; அதை எதிர்த்துக் குரல்கொடுக்க அணிஅணியாய் மக்கள் எழ, வழிவகுத்தது உம் குறள் அல்லவா? கள்ளையும் சூதினையும் பொருட்பெண்டிரையும் சான்றோர் புறக்கணிப்பார்கள் என்று பட்டியல் போட்டீர். கள்ளுண்பார் நஞ்சுண்பார் என்றீர். சான்றோரால் எண்ணப்படாதவர்களே கள்ளுண்பார்கள் என்கிறீர். பனை வளர்க்கும் உழவர்க்கு எதிராகவும் செயல்படுகிறீர்கள். இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கே கேடு விளைவிக்கத் தாங்கள் மக்களைத் தூண்டி விடுகிறீர்கள். உங்கள் செயலுக்குப் பின்னணியில் எதிரிநாட்டு மன்னர்களின் சதி இருக்குமோ என நான் ஐயப்படுகிறேன்.”
‘‘மன்னா எங்களையும் மிஞ்சிவிட்டீர்கள் கற்பனை செய்வதில். மக்களின் அறிவை மயக்கி அவர்களுடைய உடலையும் குடும்பத்தையும் நாட்டையும் கெடுக்கும் மதுக்கடைகள் தான் உங்கள் அரசுப் பெட்டகத்தை நிறைக்கும் என்றால், உங்கள் அறிவின்மேல், பொருளாதாரத் திறமையின்மேல், தொழில் வளர்ச்சிச் சிந்தனையின் மேல் எனக்கு நம்பிக்கைபோய் விட்டது. அவையறிந்து ஆராய்ந்து சொல்லும் பண்பும் திறமும் உங்களிடம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். உழவர்களைப் பற்றி ஏதோ சொன்னீர்களே.. வியர்வை சிந்தி உழைத்தும் வாழ்வில் மேலெழ இயலாமல் வெந்துகொண்டு இருக்கிறார்களே.. அவர்கள் நிலையை என்றைக்குச் சிந்தித்துப் பார்த்தீர்கள்? ஊருணி நீர் நிறைந்தற்றே எனப் பாடினேன். எத்தனை ஊருணிகளை அரண்மனைக் கேளிக்கைக் கூடங்களுக்காகக் காவு கொடுத்திருக்கிறீர்கள்? அரசுக்கு வேண்டிய பெருவணிகப் பெருமக்களுடைய நலனுக்காக, எத்தனை வயல்களைச் சூறையாடி அரசபாட்டையாக ஆக்கி இருக்கிறீர்கள்? மழை வந்தாலும் வேளாண்மைக்கு நீர் கிட்டவில்லை.இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நல்ல நாட்டுக்கு வேண்டியன எனப் பாடினேனே! எத்தனை மலைகளை விழுங்கி உங்கள் சிங்கார மாளிகைகளுக்குள் சிலைகளாக நிறுத்தியிருப்பீர்கள்? தவறுகளைச் சுட்டுவது குற்றமா? எதிரிநாட்டுச் சதியா?’’
வள்ளுவருக்கும் சினம் மூளும் என்பதை மக்கள் அன்று கண்டார்கள்.தலைமை அமைச்சர் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். தீர்ப்புச் சொல்லப் போகிறது அறம்கூறவையம். முன்னரே எழுதிவைக்கப்பட்ட தீர்ப்புகளைச் சொல்வதற்குத் தானே இந்த விசாரணை நாடகம் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள். ‘‘
ஆகவே.. வள்ளுவரின் கூற்றிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், மன்னன் என்ன செய்தாலும் எதிர்க்கிறார். மக்கள் மறந்துபோய் இருக்கும் உரிமைகளை நினைவூட்டுகிறார். மக்கள் அரசுக்கு எதிராகப் பேசும் குற்றத்தை ஊக்குவிக்கிறார். மக்களுக்கு மன்னன் கடவுள் போன்றவன். மன்னனின் எண்ணத்துக்கு எதிராகப் பேசுபவர்கள் இந்த நாட்டின் எதிரிகள். அறிவாளிகள் சிந்திப்பதை மன்னன் தடுக்கவில்லை. அதே நேரத்தில் மன்னன் சிந்திப்பதைத்தான் அவர்கள் சிந்திக்கவேண்டும். மாறாகச் சிந்திப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். அவர்கள் எதிரிநாட்டின் ஒற்றர்களாகக் கருதப்படுவார்கள்...” என்று தலைமை அமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கும்போது...
மடைதிறந்த வெள்ளமென மக்கள் கூட்டம் மன்றத்துக்குள் புகுந்தது. வந்தோருள் இளையோர் சிலர் வள்ளுவரிடம் சென்று அவரைக் காப்பதுபோல் வட்ட அரணாக நின்று கொண்டனர்.கருத்துரிமைக்காகப் போராடும் வள்ளுவரா நாடு கடத்தப்பட வேண்டியவர்? தவறான தீர்ப்புக்கு வழிகாட்டிய இந்த அவையும் கொடுங்கோல் மன்னனும் தான் கடத்தப்பட வேண்டியவர்கள் என்று மக்கள் கூட்டத்தில் இருந்து அலைஅலையாய்க் குரல்கள்.. முழக்கங்கள்..அடுத்தநாள் பழைய அறங்கூறவையம் கலைக்கப்பட்டது. எங்கு நோக்கினும் திருக்குறளோடு இளைஞர் கூட்டம்..!
நன்றி : வண்ணக்கதிர் ,தீக்கதிர் , 30/09/2018

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் என்று கூறப்படும்
சைவத் திருமுறைகள் , பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்
சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
1. முதல் திருமுறை ( சம்பந்தர் அருளியது)
2. இரண்டாம் திருமுறை ( சம்பந்தர் அருளியது)
3. மூன்றாம் திருமுறை ( சம்பந்தர் அருளியது)
4. நான்காம் திருமுறை ( அப்பர் அருளியது)
5. ஐந்தாம் திருமுறை ( அப்பர் அருளியது)
6. ஆறாம் திருமுறை ( அப்பர் அருளியது)
7. ஏழாம் திருமுறை ( சுந்தரர் அருளியது)
8. எட்டாம் திருமுறை ( திருவாசகம் ,
மாணிக்கவாசகர் அருளியது)
9. ஒன்பதாம் திருமுறை (ஒன்பதின்மர் அருளியது)
10. பத்தாம் திருமுறை ( திருமூலர் அருளிய திருமந்திரம்)
11. பதினொன்றாம் திருமுறை (சிவனடியார் 12 பேர் அருளியது)
12. பன்னிரண்டாம் திருமுறை ( சேக்கிழார் அருளிய பெரியபுராணம்)
10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
சிவாயநம
அன்பே சிவம்


12 ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் 2018 ,Guru Peyarchi 2018 to 2019 -

குருப்பெயர்ச்சி..அனைவர் வாழ்விலும் எல்லா நலன்களும் பலன்களும் கிடைக்க பெற்று நோயற்ற வாழ்வும் குன்றா செல்வமும் மங்கா புகழும் கிடைக்கபெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வாழ்க வளமுடன்
விசாகம் நட்சத்திரத்தில்: அக்டோபர் 11, 2018 7:39 AM முதல் அக்டோபர் 27, 2018 12:11 PM வரை [விருச்சிக ராசி]
அனுஷம் நட்சத்திரத்தில்: அக்டோபர் 27, 2018 12:11 PM முதல் டிசம்பர் 27, 2018 3:03 AM வரை [விருச்சிக ராசி]
கேட்டை நட்சத்திரத்தில்: டிசம்பர் 27, 2018 3:03 AM முதல் மார்ச் 27, 2019 11:44 AM வரை [விருச்சிக ராசி]
மூலம் நட்சத்திரத்தில்: மார்ச் 27, 2019 11:44 AM முதல் ஏப்ரல் 10, 2019 10:31 PM வரை [தனுசு ராசி]
மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாக: ஏப்ரல் 10, 2019 10:31 PM முதல் ஏப்ரல் 25 2019 9:53 AM வரை [தனுசு ராசி]
கேட்டை நட்சத்திரத்தில் வக்கிரமாக: ஏப்ரல் 25 2019 9:53 AM முதல் ஆகஸ்ட் 11 2019 7:08 PM வரை [விருச்சிக ராசி]
கேட்டை நட்சத்திரத்தில், ஆகஸ்ட் 11, 2019 7:08 PM முதல் நவம்பர் 4, 2019 5:29 PM [விருச்சிக ராசி]
மீனா ராசி, ரிஷப ராசி, கடக ராசி, துலா ராசி மற்றும் மகர ராசிக்காரர்கள் மிகவும் நல்ல பலன்களை அனுபவிப்பர்.
மேஷ ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, விருச்சிக ராசி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மோசமான முடிவுகளை சந்திக்க நேரிடும்.
சிம்ம ராசி மற்றும் கும்ப ராசிக்காரர்கள் கலவையான முடிவுகளை அனுபவிப்பர்.
குறிப்பாக துலா ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியின் போது பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.


What Colors Birds do See

What Colors Birds See

Birds see more colors than humans in several ways. Not only are birds able to perceive familiar colors as well as parts of the ultraviolet spectrum that are invisible to human eyes, but they also have better visual acuity to determine subtle differences between similar shades of color, gradations that humans are not able to discern.
The cells in the eye responsible for color detection – cones – are positioned in the retina, and birds have four types of cones rather than the three humans have. The exact number of cones varies in each bird species but is typically higher than humans and other mammals.

Diurnal birds that are active during the day have the best color sense. Perceiving different colors is less crucial for nocturnal birds, and many birds that are most active at night have a greater number of rod cells in their eyes instead, which allows them to capture more light and see better in low light conditions, though they may not see colors as clearly.
Why UV Light Matters
Being able to see UV light is a crucial aspect of how birds see color. For decades, ornithologists assumed that birds saw colors the same as humans, and many aspects of bird behavior were not able to be explained until birds' sensitivity to UV light was realized.
The ability to see ultraviolet light changes the perception birds have of many objects, even though humans may not see those differences.


Food: Some berries and other fruits have waxy coatings that reflect UV light, making them stand out vibrantly against green foliage. Birds can see the fruit much more clearly, making foraging much easier. Some insects also reflect UV light, and certain flowers will as well, giving birds a distinct advantage for finding those food sources.
Prey: Raptors use UV light to track prey, since the urine splashes and trails that voles, mice and other rodents use to mark their territory are brilliantly visible in ultraviolet light. This allows raptors to determine exactly where prey is located for more efficient hunting, even when the prey may not be visible itself.
Plumage: Species that may not appear dimorphic to humans may actually look very different in UV light. Male blue tits, for example, have a prominent crown seen under UV light, though the genders look similar to humans. Birds have no difficulty telling the difference, and can use those UV markings to help select mates, defend a territory or tell individual birds apart.
Eggs: Some brood parasite eggs, despite having similar visible colors and markings, look very different from host bird eggs under UV light, giving birds the ability to tell when an egg is not their own and allowing them to reject the interloper. While not all species that host brood parasites will reject unwanted eggs, the UV pattern may be a factor for those that do.
Wavelength Filtering

Not only can birds see ultraviolet light, but they see visible colors more distinctly than humans can. Each cone in a bird's eye has a drop of oil in it that selectively filters out certain colors, giving birds greater sensitivity to different color shades.

This allows birds to more easily see contrasts in their surroundings, perhaps seeing through the camouflage of prey or other birds, for example. This type of filtering or polarization is also useful for pelagic birds, allowing them to see deeper into the water than previously believed, which can help them find suitable food sources and prey.


158 வருட ஐபிசி 497 ரத்து.. பெரிய விசேஷல்லாம் ஒன்னுமில்ல...*Fight Against the Constitution IPC 497 & 377* in India


Su Po Agathiyalingam
LGTBQ ,497
இந்த இரண்டு தீர்ப்பையும் மிகச்சரியாக புரிந்து கொள்ள நான் சட்டமொழி தெரிந்தவனல்ல . ஆயினும் ஒன்றை உறுதியாகச் சொல்ல இயலும் பாலின தேர்வு ,விருப்பம் ,உறவு இவை குறித்த பஞ்சாக்கப்பார்வை உடைத்தெறியப்பட வேண்டும் .
இவை எதுவும் சமூகத்துக்கு புதிதல்ல .காலம் காலமாய் ஒரு பகுதியினரிடம் இருந்து வருவதே . புரியாமையால் வெறுப்பை உமிழ்ந்தோம் . இனி அவ்வாறின்றி அவர்கள் உணர்வுக்கும் மதிப்பு கொடுங்கள் என்பதே தீர்ப்பின் சாரம் .
கொலை ,தற்கொலை எல்லாம் தீர்வல்ல .அவரவர் பிடித்தவரோடு பிடித்தமாதிரி வாழ வழிவிடுக என்பது சரிதானே !
இதன் பொருள் சமுதாயம் மொத்தமும் இனி இப்படித்தான் போகவேண்டும் என்பதல்ல .பெரும்பாலோர் வழி இப்போது போலவே குடும்ப உறவில் திழைக்கும் . ஒரு சிறு பகுதியினர் வேறுமாதிரி வாழத்தலைப்படுவர் .அதனை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்க !
பண்பாடு ,ஒழுக்கம் என்றெல்லாம் கூப்பாடு போடுவதும் ;அந்த முகமூடிக்குள் புகுந்து எல்லாம் கெட்டுப்போச்சு எனக் கூச்சலிடுவதும் அபத்தம் .
வேடிக்கை என்னவெனில் முற்போக்கு பேசும் பலருமே இதில் தடுமாறுவது பரிதாபமாக இருக்கிறது .
ஒரு செய்தி : கார்ப்பரேட் நலம் ,பிராமணிய நலத்துக்கு எதிராக எந்தத் தீர்ப்பையும் நீதிமன்றம் ஒருபோதும் வழங்கிவிடாது என்கிற உறுத்தும் உண்மையை ஒரு போதும் மறந்துவிடாதீர் !
திரு சாலமன் பாப்பையா அவர்களின் பதிவு...
*//தன் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால் அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா..//*
20 வயது தொட்ட பிறகும்கூட காதலைப் பற்றிய தெளிவு இல்லாமல் காமச் சகதியில் வழுக்கி விழுந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு, விழிப்புணர்வு தர யோக்கியதை இல்லை. ஆனால்,
வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் யாரோடும் பாலுறவில் ஈடுபடலாம் என்று தீர்ப்பளிக்க முடிகிறது. இந்தத்
தீர்ப்பு அவர்கள் ஒழுக்கம் கெட்டு அலையவும் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளவுமே பயன்படப் போகிறது. அதைத் தாண்டி ஒரு பயனும் இல்லை.
வயதுக்கு வந்தோர் யாரும் யாரோடும் உறவு கொள்ளலாம் அது அவர்கள் உரிமை என்பது சட்டமானால், பிள்ளையைப் பெற்றவர்களுக்கு அவர்களைக் கேள்வி கேட்க என்ன அதிகாரம் இருக்கிறது?

தன் மகளோ மகனோ எவனோடும் எவளோடும் சுற்றிவிட்டு வந்தாலும் தாய்தகப்பன் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறதா நீதி மன்றம்?
இதைப் பெற்றவர்கள் ஏற்கப் போகிறீர்களா?
படிக்கும் வயதில் சாட்டிங் டேட்டிங் என்று ஊர்மேய்ந்து கொண்டு சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், உங்களுக்குத் தேவைப்பட்டால், விருப்பம் இருந்தால் உடலுறவே கொள்ளலாம் என்பது தலைமுறைகளை நல்வழிப்படுத்தவா படுகுழியில் தள்ளவா?
கல்யாணம் ஆன ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டவரோடு உறவு கொள்வதற்கு ஏன் கல்யாணம் செய்ய வேண்டும். அப்படியே பிடித்தவர்களோடு போகலாமே. தினம் தனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று கணவன் போவான். மனைவி கேட்பதற்கில்லை.
தினம் ஒருவனைப் பிடித்திருக்கிறதென்று மனைவி விபசாரமும் செய்யலாம். கணவனும் கேட்பதற்கில்லை. என்றால் அதென்ன வீடா, குடும்பமா?. அல்லது விபசார விடுதியா?
வீடுகளை விபசார விடுதிகளாக்கிப், பெண்களை விபசாரிகளாக்கி, ஆண்களை மேலும் ஒழுக்கம் கெட்டலைய வைப்பதுதான் நீதித் துறையின் நோக்கமா?
கணவன் இருக்க, அடுத்தவனைப்
பிடித்திருக்கிறதென்று எத்தனைப் பேரோடும் உறவு கொள்ளும் பெண்ணுக்குத் தனது கணவன் தன் கண்முன்னால் செத்தாலும் இழவுக்குக் கண்ணீர் வருமா? பெற்ற பிள்ளைகளிடம் இனிப் பாசம் வருமா? அன்பே அங்கு அற்றுப் போய்விடில் குடும்ப வாழ்க்கை இனிக்குமா? இருக்குமா?
இந்தத் தீர்ப்பையும் ஏதோ புதுமை என்றும், எதுவும் தப்பாகச் சொல்லவில்லை நுணுக்கமாகப் பார்க்கவேண்டும் என்றும் ஆதரவளிப்பவர்கள், அவர்கள் மனைவிகளையும் சகோதரிகளையும் அடுத்தவரோடு படுக்க அனுப்பிவிட்டு விவாதம் நடத்தட்டும்.
மனைவி மீது உரிமையில்லை. பிள்ளைகள் மீது உரிமை இல்லை. சகோதரிகள்மீது உரிமை இல்லை என்றால், எதன் மீதுதான், எவர் மீதுதான், எவருக்குத்தான் இங்கு உரிமை இருக்கிறது?
விருப்பப்பட்டால் வயதுக்கு வந்தவர்கள் யாரோடும் உறவு கொள்ளலாம் என்று அங்கீகரிக்கப் பட்டுவிட்ட நாட்டில், பெண்கள் இனி எப்படிப் பார்க்கப் படுவார்கள்? எப்படி நம்பப் படுவார்கள்?
இது தப்பென்று தட்டிக் கேட்க கணவன், மனைவி, பெற்றோர்கள் உண்டு என்ற நிலையிலேயே ஆயிரம் அவலங்கள் நடந்த நாட்டில் இனி தப்பில்லை அதைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றாகிவிட்டால், யார் யாருக்குக் கட்டுப்பட்டு ஒழுங்கு வாழ்க்கை வாழப் போகிறார்கள்? கேட்க உரிமை இருந்த போதே நல்ல மனைவிகளும் சந்தேகத்திற்கு உள்ளாகி எத்தனையோ குடும்பங்கள் சிதைந்திருக்க, இனி அது அவரவர் சுதந்திரம் என்ற பிறகு எத்தனை உத்தமமான பெண்கள் வாழ்க்கையை இழக்கப் போகிறார்களோ!
காதல், கணவன், குழந்தை குடும்பம் என்ற அழகான வாழ்க்கை வேண்டும் என்று உண்மையாய் விரும்புகிறவர்களுக்கும் இனி அந்த வாழ்க்கை கிடைக்குமா அல்லது கிடைத்தாலும் நிலைக்குமா?
பொது வெளியில், இதிலென்ன இருக்கிறது அதுவும் ஓர் உணர்ச்சிதானே விருப்பம்தானே என்று யாரும் பேசலாம். அப்படிப் பேசும் யாரும் தம் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால்
அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா என்று கூறும் அல்லது, அவனை தன் வீட்டுக்கே அழைத்து மனைவியின் உடம்புப் பசியை ஆசையை தீர்த்து வைக்கச் சொல்லி கட்டிலுக்கு அவனை அனுப்பி அழகு பார்க்கும் மனோதிடம் உள்ளதா?
குடும்ப வாழ்க்கை என்றான பிறகு, தனி மனித உரிமை எங்கே இருக்கிறது? கணவன் தவறாகப் போனால், மனைவி குழந்தைகள் வாழ்க்கைச் சீரழியாதா? மனைவி தவறாகப் போனால் கணவன் பிள்ளைகள் வாழ்க்கை கெடாதா? தன்னுடைய எந்தச் செயலின் எதிர் விளைவுகள் அடுத்தவரைப் பாதிக்காதோ அதுவே தனி மனிதச் சுதந்திரம். மற்றதெல்லாம் வரம்புக்கு உட்பட்டது என்பது நீதித் துறை அறியாதா?
பெண்ணின் ஒழுக்கக் கேட்டை விமர்சித்து ஓரெழுத்தெழுதினால் கொந்தளிக்கும் பத்தினிகள் என்னிடம் கோபிப்பதில் நியாயமில்லை. ஏதோ ஒட்டுமொத்த பெண்களும் விபசாரிகள்போல் எண்ணி யாரும் யாரோடும்
படுத்துக் கொள்ளுங்கள் என்று தீர்ப்பளித்துள்ள நீதித் துறைமுன் கோபப்படுங்கள் அத்தனைக் கற்புக்ககரசிகளாக நீங்கள் இருந்தால்!
வயதுக்கு வந்த யாரும் யாரோடும் விரும்பினால் படுக்கலாம் என்பது இந்து மக்களுக்கான சட்டமா இல்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? இதை இஸ்லாத்தும் கிறித்துவமும் இந்து மதமும் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா?
பாலியல் சுதந்திரம் எல்லோர்க்கும் உண்டு யாரும் யாரோடும் புணரலாம் எனில், இது இரத்த சம்பந்தமுள்ள உறவுகளுக்கும் பொருந்துமா? ஏனெனில், மேல் நாட்டுக் கலாசாரம் மற்றும் ஆபாசப் படங்களைப் பார்த்தும், குடும்ப உறவுகளுக்குள்ளேயே பாலுறவு கொள்ளும் வேட்கை பெருகி(incest sex) வெறியாகி மகளையே தகப்பனும், மருமகளையே மாமனாரும், சகோதரியையே சகோதரர்களும், சகோதரி கணவன், சகோதரன் மனைவியோடே புணர்ச்சியிலும் கற்பழிப்பிலும் ஈடுபடுவது எப்போதோ தொடங்கிவிட்ட நிலையில், இந்தத் தீர்ப்பு, இப்படியும் உறவு முறை பாராமல் உறவாட உரிமை அளிக்கிறதா?
தீர்ப்பு திரும்பப் பெற்றே ஆக வேண்டும். இல்லையேல் நீதி மன்றங்கள் செங்கல் செங்கல்லாகப் பிரிக்கப் படவேண்டும் அதுவே முடிவு.
தன் குடும்பம், பிள்ளைகள், மனைவி, கணவன், சகோதர சகோதரிகள் ஒழுக்க வாழ்வு வாழ்ந்து உயரவேண்டும் என்று விரும்புகிறவர்களும்,
காலம் காலமாக தன் இனம் தன் மதம் கட்டிக்காத்த அழகான நெறி மிக்க வாழ்க்கை முறை சிதைந்து போக அனுமதிக்க முடியாது என்று நினைப்பவர்களும் மற்றும்
ஒவ்வொரு இந்திய குடிமக்களும் இந்தத் தீர்ப்புக் எதிராகப் போராடுவார்கள். இல்லையேல், நாடும் வீடும் மக்களும் எதிர்காலச் சந்ததிகளும், நாம் காத்த பண்பாடும், மத ஆன்மிக தெய்வக் கோட்பாடுகள் சகலமும் நம் கண்முன்பே சரிந்து விழுவதைப் பார்க்க வேண்டியவர்கள் ஆவோம்!

158 வருட ஐபிசி 497 ரத்து.. பெரிய விசேஷல்லாம் ஒன்னுமில்ல...
மாற்றான் மனைவியுடன் ஒருவன் உறவு கொண்டால் அவனுக்கு மட்டுமே ஐந்தாண்டு சிறை.. பெண்ணை தண்டிக்க முடியாது..இதுதான் ஐபிசி 497 செக்சன் சொன்னது..
''இருவர் சேர்ந்து செய்யும் தவறில் ஆணை மட்டும் தண்டிப்பது சரியில்லை.. பெண்ணையும் தண்டிக்கவேண்டும். அல்லது இருபாலரையும் தண்டிக்கக்கூடாது'' என்று நீண்ட காலமாக நடந்த வந்த விவாதம்....
இப்போது தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என்று
சொல்லி 497 பிரிவையே செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்டது.
உடனே நம்ம ஆட்கள் கள்ளக்காதல் கிரிமினல் குற்றமல்ல.. எவன் பொண்டாட்டிகூட யார் வேண்டுமானாலும் போய் படுத்துக்கலாம், யாரும் ஒன்னும் கேக்கமுடியாது என்ற ரீதியில் பொங்கி வருகிறார்கள்..அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை.
திருமண பந்தத்திற்கு வெளியேயான உறவு கிரிமினல் குற்றமல்ல என்று சொன்ன அதே நீதிமன்றம்தான், இந்த மாதிரி, படுக்கையை மாத்தி போடுறது தெரிஞ்சா அதை வெச்சே கணவனோ, மனைவியோ டைவர்ஸ் கேக்கலாம்னு தெளிவா சொல்லியிருக்கு..
என்னமோ இந்த தீர்ப்பால இனிமே கள்ளக்காதல் வெள்ளமா பெருக்கெடுத்து ஓடும்ற மாதிரி சமூக அக்கறை காட்டி நெஞ்சை நக்கறா மாதிரி சீன் போட ஆரம்பிச்சிட்டாங்க.. பொங்கறவங்க வீட்ல, ''இது மாதிரி கள்ளக்காதல் நடக்கும்னு பயமா இருக்கா''?ன்னு கேட்டுப்பாருங்க..
அடிச்செருப்பால‘ எங்க குடும்பம் ஒன்னும் அப்படிப்பட்ட மட்டமான குடும்பம் இல்லேன்னு சீறிக்கிட்டு பதில் வரும்.. அதையேத்தான் நாங்களும் சொல்லவர்றோம்.. எல்லார் குடும்பமும் கௌரவமான குடும்பம்தான்..
பொண்டாட்டி, புருஷன், அப்பன், அம்மா, புள்ள, பொண்ணு, அக்கா, தங்கச்சின்னு குடும்பத்துல இருக்கிற எல்லா உறவும் தப்பு செய்யவே மாட்டாங்கன்ற நம்பிக்கையிலதான் எல்லாருமே வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்காங்க..
ஊர்ல எல்லா கடைகளிலும் பல பொருட்களோடு விஷமும் விக்கறாங்க..அதுக்காக எல்லாருமே அத வாங்கி குடிச்சிகிட்டு செத்துக்கிட்டேவா இருக்காங்க? போய்ச் சேரணும்ன்னு விரும்பறவங்கதான் வாங்கி குடிக்கப்போறாங்க..அப்படிதான் குடிப்பேன் என்றால் நாண்டுக்கிட்டு சாகட்டும்ங்கிறேன்....
போங்க பிரதர் போங்க, போய் புள்ளை குட்டியை படிக்கவைங்க......; Vasu Srinivasan



Wednesday, September 26, 2018

Galileo's Original Telescope

Galileo's Telescopes. The basic tool that Galileo used was a crude refracting telescope. His initial version only magnified 8x but was soon refined to the 20x magnification he used for his observations for Sidereus nuncius. It had a convex objective lens and a concave eyepiece in a long tube

Tuesday, September 25, 2018

மகாலய பக்ஷ பிதுர் வழிபாடு ...


புரட்டாசி மாதத்தில் சூரியன் அமரபக்ஷம் (பௌர்ணமி முதல் அம்மாவசை வரை கன்னி ராசியில் நுழையும் காலத்தில் பிரவேசிப்பது மகாலயம் எனப்படும்
அட இன்று புரட்டாசி 8 தேதி ஆகிறது இன்றுதான் சூரியன் கன்னி ராசிக்குள் 1 ஆம் தேதியே நுழைந்து விட்டானே என்று பலர் கேட்பது புரிகிறது ..

இது நாம் பலமுறை சொன்ன மாதிரி எல்லா பண்டிகையும் சந்திர மாசம் , பௌர்ணமி அன்றுதான் ஆரம்பிக்கும் , அதில் இருந்துதான் பண்டிகைகள் நிர்ணயக்க படும் .
வீட்டில் இருக்கும் பஞ்சாங்கத்தை எடுத்து கிரக பாத சாரங்கள் என்று ஒரு பக்கத்தில் ஒவ்வொரு கிரகமும் என்று எந்த நக்ஷத்திரத்தில் இருக்கு என்று போட்டு இருக்கும் அதில் ஒரு 7 or 8 தமிழ் மாதத்தில் தேதியில் கன்யாயன, துலாயன என்று போட்டு இருக்கும் .. அதுதான் சந்திர மாச ஆரம்பம் !!! (அன்று பௌர்ணமியாக இருக்கும் !!)
12 சூரிய ராசிகளில் இந்த மாதம் 6 வது .. சரிபாதி , உத்திர நக்ஷத்திர நான்காம் பாதத்தில் சூரியன் நுழைந்து சந்திரன் பூரணமாக பூரட்டாதி நக்ஷத்திரத்தில் (180* ) எதிர்புறம் நிற்கும் பொது
சந்திர உலகமாம் நமது பிதுர் உலகம் , வெறும் பொருளால் (material world) ஆனா பூமிக்கு நெருக்கமாக வருவதாக நம் முன்னோர்கள் கணித்தார்கள்
மனிதர்கள் பிறக்கும் போது பிறந்தநாளை நக்ஷத்திரகள் கொண்டு அளப்போம் , ஆனால் இறப்பை திதி (இது சந்திரனின் ஓட்டமான பௌர்ணமி அம்மாவசை கால அளவு ) கொண்டு அறிகிறோம் .
நம் முன்னோர்கள் இறந்தவர்கள் பிதுர் உலகையும் சந்தரனையும் இணைத்து அறிந்தார்கள்.
மனிதர்கள் பல பிறவிகள் எடுக்கிறார்கள் என்பதை சனாதன தர்மம் அறிவிக்கிறது ..
மனிதன் முக்கியமாக பிறக்கும் போது மூன்று உடலை பெறுகிறான் ..
பொருள் உடல் (physical body) சூக்ஷும சரீரம் (astral body) , இதை சார்ந்து இருக்கும் ஜீவன் (கர்மத்தால் சூழப்பட்ட சுத்த சத்துவமான ஆன்மா ) இதை காரண சரீரம் என்கிறார்கள் (பாவ புண்ணி யத்தின் காரணமாக பிறப்பு என்பதால் )
இதில் ஜீவன் தனது பாவ புண்ணியங்களை சுமந்து பல பிறவிகளை எடுக்கும் !!
உடல் மற்றும் சூக்ஷும சரீரம் , இறப்பிற்கு பிறகு ..... உடல் பூமியில் அழிக்கப்படும் (எரியூட்டி , புதைத்தும் ) சூட்சுமம் சரீரம் .. இதில்தான் நமது அறிவு ஆற்றல் திறமை (இது அந்த பிறந்த குடும்பத்தின் DNA ) மறுபடி பிதுர் உலகமாம் சந்திர உலகை சென்று அடையும்
நான் முன்னமே எழுதி இருப்பது போல இந்த சூக்ஷும சரீரம் ரஜினி பாட்சா பட டிரஸ் போல அந்த சினிமா கம்பெனி ஆபீசில் மட்டுமே இருக்கும் ... அதாவது பிதுர் உலகில் இருக்கும் , அந்த சினிமா கம்பெனி வேறு ஒரு படத்தில் சில பல மாற்றங்கள் செய்து வேறு படத்தில் பயன்படுத்தி கொள்வர் ..
உங்க தாத்தா இப்படிதான் அருமையா இங்கிலீஷ் பேசுவார் என்று உங்க பாட்டி சொல்வதை போல .. முழுமையாக இருக்காது.
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஆத்மக் கடன், தெய்வக் கடன், பித்ருக் கடன் என்று மூன்று கடமைகள் உண்டு. பித்ருக் கடன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஆத்மக் கடன், தெய்வக் கடன், பித்ருக் கடன் என்று மூன்று கடமைகள் உண்டு.
தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும், சுற்றத்தாருக்கும், உறவினர்களுக்கும், சமுதாயத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள் ‘ஆத்மக் கடன்’ என்றும், தனது குலதெய்வத்திற்கும், விருப்ப தெய்வத்திற்கும், கோவில்களில் இருக்கும் தெய்வங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் ‘தெய்வக் கடன்’ என்றும், தன் குலத்தில் மறைந்த மூதாதையர்களுக்கு ஆண்டுதோறும் செய்யப்படும் சிரார்த்தங்கள் ‘பித்ருக் கடன்’ என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மூன்று கடன்களில் பித்ரு கடன் தான் மிக முக்கியமானது. நம்முடைய உடலையும், உயிரையும் கொடுத்தது நமது பெற்றோர். எனவே ஒவ்வொருவரும், தனது தாய்- தந்தை இறந்த பிறகு, ஒவ்வொரு வருடமும் அவர்கள் இறந்த திதியன்று சிரார்த்தம் செய்ய வேண்டும். ‘சிரார்த்தம்’ என்ற வடமொழிச் சொல்லுக்குச் ‘சிரத்தையுடன் மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் செயல்’ என்பது பொருளாகும்.
சிரார்த்தம் என்பது முன்னோர்களை வழிபடல், முதியோரை மதித்தல், தன் பிறவிக்கும், மரபு வழியினருக்கும் முதல்வர்கள் ஆனவர்களைப் போற்றுதல் என்று பொருள்.
நன்மை தரக்கூடிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய பித்ரு செயல்கள் யாரை நினைத்துச் செய்கின்றோமோ, அவர் பித்ரு உலகில் இருக்கலாம் அல்லது தேவ உலகில் இருக்கலாம். இல்லை, பூலோகத்தில் நமக்கு அருகிலேயே கூட இருக்கலாம்.
அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ அல்லது உயர்ந்ததாகவோ இருக்கலாம்.
நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் சிரார்த்தம்,
அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும். தாழ்ந்த நிலையில் இருந்தால், அவர்களின் நிலை உயர உதவும்.
மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இவ் உலக துன்பம் தீர உதவும். எனவே, பித்ரு காரியங்களை ஒவ்வொரு வரும் கடமையாகச் செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
ஆயுள் முடிந்து போன நமது முன்னோர்கள் பரவுலகத்தில் அல்லது பித்ரு உலகத்தில் வாழ்கிறார்கள்.
அவர்கள் வசுமித்திரர்கள், ஆதித்யர்கள் என்ற பிரிவில் அடங்குவார்கள். உடல் அழிந்தாலும் பிரேத நிலையில் குறிப்பிட்ட காலம் இருந்து, தங்களது வாரிசுகள் செய்யும் நற்செயல்களால் பிரேத தோஷம் நீங்கப் பெற்று, தங்களது பூரண அன்பையும் நம் மீது காட்டலாம்.
இறந்து போன ஒருவருக்காக அவரது மகன், பேரன், சகோதரன் முதலானவர்களும் அவர்களின் சுய கோத்திரத்தில் பிறந்த ஏழு தலைமுறையினரும், கோத்திரம் மாறிய பெண் வழி மரபுரிமையினரும் சிரார்த்தம் செய்யலாம்.
சரி .. இதை படிக்கும் உங்களுக்கு அறிவு ஆற்றல் மற்றும் சுக வாழ்வு குடுத்து நடிக்க வைத்து கொண்டு இருக்கும் அந்த சினிமா கம்பெனி முதலாளி (பிதுர் உலக பெயர் அறியா தலைமைகள் ) உங்கள் வீட்டுக்கு வரும் பக்ஷம் (15 நாட்கள் )
கண்ணாடியில் நம்மை பார்த்தும் , நாலு பேரு நம்மை ஒரு செயலுக்கு பாராட்டும் பொது பெருமைப்படும் அனைத்தும் அந்த பிதுர்களையே முழுமையாக சாரும் !!!
எனவே .................. வேலை குடுத்து உடை குடுத்து சோறு போட்டு புகழ் வாங்கி குடுக்கும் முதலாளி முன்பு எப்படி நடக்க வேண்டும் என முடிவு எடுத்து கொள்ளுங்கள்

Monday, September 24, 2018

Enterprise Sri Lanka program government approved several loans with low interest and no interest


Under Enterprise Srilanka program government approved several loans with low interest and no interest for developing the individual & country.

People can request particular loans from banks for business, self-employment, farming, tourism, fisheries, solar penal installation, graduate loans, high studies,...

Please talk to nearest banks and get loans than getting high-interest loans from finance institutions & banks.

I hope many of our people not aware of this program.