Search This Blog

Saturday, June 30, 2018

எப்படி பொருளாதார நிபுணராக ஆகமுடியும்?

"எப்படி பொருளாதார நிபுணராக ஆகமுடியும்?" என்பதுதான்.......
அவர்களுக்காக …..!!! என் நினைவுகளிலிருந்து!!
நீண்ட பதிவு முழுமையாக வாசியுங்கள்!
Facebook நண்பர் Boopal Chinappaவின் இன்றய கருத்தீடு இதற்கு பொருத்தமாக அமைகிறது!!
„முயல்பவனுக்கு தட்டிக்கொடு, இல்லாதவனுக்கு விட்டுக்கொடு, கேட்பவனுக்கு சொல்லிக்கொடு, வாழ்வில் விழுந்தவனை தூக்கிவிடு !! -இது தர்மம்.“
1700ம் ஆண்டுகளில், பொருளாதாரம் என்பது வெறுமனே நாடுகளின் செல்வம் பற்றி படிப்பது என்ற நிலையிலிருந்து, பல படிகளை கடந்து வந்துள்ளது. பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆடம்ஸ்மித் அவ்வாறு கருதினார்.
சுமேரியர்கள் பொருளாதாரத்தைப் பொருள் பணத்தின் அடிப்படையில் உருவாக்கினர்; அதே போல பாபிலோனியர்களும் பொருளாதார அமைப்பை, கடன் மீதான விதிகள்/சட்டங்கள் வரையறைகளில், சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் மற்றும் வணிக முறைகளின் சட்ட விதிகள் மற்றும் தனியுடைமை வரையறைகளில் உருவாக்கினர்.
இன்று பொருளாதாரம் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம், அதேபோல பொருளாதார வரலாறு அல்லது பொருளாதாரப் புவியியல் ஆகியன அடங்கியுள்ளன.
"பொருளாதாரத்தின் உலகம்"
பொருளாதாரம் என்பது, Micro and Macro Economics என்று வகைப்படுத்தப்படுகிறது. Micro Economics , கூட்டுத்திரள் தொகுப்பு நிலையிலான நடத்தையுடன் தொடர்புடையது.
இந்த நிலையில், பொருளாதார வல்லுநர்கள், ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக, வளர்ச்சி, விரிவாக்கம், இணைப்பு மற்றும் ஈட்டுதல் வாய்ப்பு ஆகியவை குறித்து மதிப்பாய்வு மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
அதேசமயம், Macro Economics என்பது, பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக ஆய்கிறது. ஒரு நாட்டின் வரவு மற்றும் உற்பத்தி, அதன் வேலைவாய்ப்பு விகிதம், பணவீக்கம், செலவு போன்ற விவகாரங்கள், Macro Economics கீழ் வருபவை.
இவை இரண்டையும் தாண்டி, Development Economics என்ற பிரிவு, சமீப ஆண்டுகளில் பிரபலமடைந்து வருகிறது. பொருளாதார நிபுணர்கள் என்பவர்கள், NGOக்கள், ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள்(Government, Finance Ministry, Central Bank) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய தரவுகளை சேகரித்தல், அந்த விஷயத்தைப் பற்றிய போக்கை ஆய்வுசெய்து ஒரு தீர்வை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக, பொருளாதார நிபுணர்கள், மேற்கண்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
"பொருளாதார அளவீடுகள்"
தேசத்தின் பொருளாதாரத்தின் நடவடிக்கையை அளவீடு செய்ய எண்ணற்ற வழிகளுள்ளன. இத்தகைய பொருளாதார நடவடிக்கையை அளவீடு செய்யும் வழிமுறைகளில் உள்ளிட்டவை:
நுகர்வோர் செலவு, வெளிநாட்டு நாணய பரிமாற்று விகிதம், உள்நாட்டு மொத்த உற்பத்தி, மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, பங்குச் சந்தை, வட்டி விகிதங்கள், தேசிய கடன், விலையுயர்வு விகிதம், வேலைவாய்ப்பின்மை, வர்த்தகச் சமநிலை.
"ஒரு பொருளாதார நிபுணராக உருவாதல்"
பொருளாதார நிபுணர்கள், பொதுவாக, பொருளாதாரம் அல்லது துணைநிலை பொருளாதாரம் அல்லது சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றவராக இருப்பார்.
ஜரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, ஒருவர், Econometrics, Micro Economics அல்லது Macro Economics ஆகிய ஏதேனும் ஒன்றில் விசேட படிப்பாக செய்திருக்கலாம். அதேசமயம், வெளிநாட்டில், Industrial economics, Game theory, Applied economics, Financial economics மற்றும் International Business போன்ற விசேட துறைகள் பிரபலம்.
ஏன் பொருளாதார படிப்பை தேர்வுசெய்ய வேண்டும்?
ஒரு பாடமாக, பொருளாதாரம் என்பது சர்வதேச பயன்பாடு கொண்டது. பொருளாதார வல்லுநர்கள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள். அவர்கள், உலக விவகாரங்கள் குறித்து up-to-date நிலையில் இருக்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள், ஒரு நல்ல நிதி திட்டமிடுநர்களாகவும் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில்...
Economics படிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள், அத்துறையில் சாதிக்க, அதிகமாக படிப்பது அவசியம். அது மாணவராக இருக்கும்போதும் சரி, அந்த காலகட்டத்தை கடந்துவிட்டபிறகும் சரி.
பொருளாதாரப் படிப்பு என்பது, உயர்நிலைக் கல்வி அளவில் அதிகம் கணிதம் தொடர்பானது. எனவே, எண்கள் மீது ஆர்வம் இல்லாதவர்கள், இப்படிப்பை அனுபவிக்க முடியாது. இத்துறையில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர்கள், தங்களின் முதல் பணி வாய்ப்பை பெறுவது சற்று கடினமாக காரியம்தான். ஏனெனில், இத்துறையின் பட்டதாரி, தன்னை ஒரு தொழில் நிபுணராக மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. பணி நேரங்கள் சில சமயங்களில் மிக அதிகமாக இருக்கும். மேலும், இந்த வகைப் பணியானது, வெறுமனே அலுவலகத்தில் இருப்பது மட்டுமாகாது. மாறாக, பயணம் செய்தல் மற்றும் களப் பணி ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்கலாம்.
இத்துறை தொடர்பான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதால், ஒருவர் தனக்கான நல்ல பணியைப் பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஒவ்வொரு நிறுவனத்திற்கு பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், குறைவான எணணிக்கையில் மட்டுமே. எப்போது தேவை இருக்கிறதோ, அப்போது மட்டுமே Economist பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். மேலும், தற்போதைய நடப்பு நிகழ்வுகளைக் கொண்டு, எதிர்கால சூழல் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஒரு Economist மதிப்பிடுவார்.
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் தருணத்தில், சிறந்த பொருளாதார நிபுணரின் தேவை இன்றியமையாததாக இருக்கிறது.
பணி வாய்ப்பு துறைகள்:
வங்கியியல், Finance, Marketing, Business, Politic Accountancy, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், Governments
தேவையான திறன்கள்:
கூர்மையான பகுப்பாய்வு மற்றும் கணித திறன்கள், சிறப்பான கவனம் மற்றும் ஆர்வம் இருப்பதோடு, நிறைய படிக்கக்கூடிய மனப்பக்குவமும் இருக்க வேண்டும்.
பொருளாதார படிப்பிற்கு பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள்:
Stanford University, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் – பிரிட்டன், ஹாவர்டு பல்கலைக்கழகம் - அமெரிக்கா., University of Oxford, Yale University, University of Cambridge, National University of Singapore, University of Toronto, ETH Zurich - Swiss Federal Institute of Technology, University of Amsterdam, Ludwig-Maximilians-Universität Germany, Rheinische Friedrich-Wilhelms-Universität Bonn, Germany இப்படிப் பல.
பலருக்கும் நான் பதிவேற்றும் படங்களை பார்த்ததும் ஏளனச் சிரிப்பும், நகைப்பும், மலினப்படுத்தும் கருத்தீடலும்.... ஏதோ உலகம் சுற்றுவதான நினைப்பும் தான் தோன்றும். பலர் நேரடியாகவே கூறுவதுண்டு. அவர்களது அறியாமையால் நான் கோபப்படுவதுமுண்டு!!
இவையனைத்தையும் கடந்துதான் எனது தொழில் சர்வதேச ரீதியாக செய்யமுடிந்திருக்கிறது. எனது திறமையில் இவ்வளவு நாடுகள் நம்பிக்கை வைத்து என்னோடு ஒத்துழைக்கிறார்கள் என்றால் எனது இந்த கல்வி, அறிவு, செயற்திறன், அரசியல், பொருளாதார சமூக ஆளுமை, ராஜதந்திரங்களே.
இன்னும் பலவற்றை சமூகங்களிடம் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் நான் என்றும் மாணவனேயொழிய நிறைவுபெற்ற நிபுணனாக இருக்கமுடியாது.
அதேபோல் உங்களிடம், உங்கள் பிள்ளைகளிடம் இருக்கும் கணிதத் திறமையை, உங்களின் சமூக அறிவுடன் ஒருங்கிணைத்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு உங்களால் திறம்பட பங்களிப்பு செய்ய முடிந்தால், சமூகம் உங்களைப் போற்றும். என் இனத்தின் வாழ்வு சிறக்கும்.
- புலோலியூரான்-

Saturday, June 23, 2018

செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது

Prasanna Ramaswamy

செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது. ஆங்கிலத்திலிருந்து என் மொழிபெயர்ப்பு.
"வாஷிங்டனிலிருந்து ஜனாதிபதி எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக செய்தி அனுப்பியிருக்கிறார்.
வானத்தையோ நிலத்தையோ எவ்விதம் நீங்கள் விற்கவோ வாங்கவோ முடியும்? இது நாங்கள் கேட்டறியாதது. காற்றின் சுத்தத்தையும் நீரின் மினுக்கலையும் எவ்விதம் விற்க இயலும்? இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்கு புனிதமானது. பளபளக்கும் ஊசிக்காட்டின் ஒவ்வொரு சுள்ளியும், ஓசையிடும் சிள்வண்டுகளும். இவையெல்லாமே எங்கள் மக்களின் அனுபவங்களிலும் நினைவுகளிலும் மிகவும் புனிதம் வாய்ந்தவை.
மரங்களினுள்ளே ஓடும் உயிர்த்தன்மையை எங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தத்தை அறிவது போலவே அறிவோம். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். பூமி எங்களின் ஒரு பகுதி. நறுமணமுள்ள மலர்கள் எங்கள் சகோதரியர். கரடி, மான், வலிய பருந்து முதலியவை எங்கள் சகோதரர்கள். மலை முகடுகள், புல்வெளிகளில் உள்ளுறை அமிழ்து, குதிரைக் குட்டியின் கதகதப்பு, மனிதன், எல்லாம் எங்கள் குடும்பம்.
ஓடைகளிலும் நதிகளிலும் சலசலத்து மின்னியோடுவது நீரல்ல; எம் மூதாதையரின் குருதி. நாங்கள் உங்களுக்கு இவற்றை விற்போமானால் நீங்கள் நினைவிலிருத்த வேண்டும் இவற்றின் புனிதத்தை. துல்லியமான நீர் நிரம்பிய ஏரிகளில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு பிம்பமும் எங்கள் மக்களின் வாழ்வியலை, நினைவுகளைச் சொல்கின்றன. நீரெல்லாம் என் அப்பனுக்குத் தகப்பனின் குரலில் முணுமுணுக்கிறது.
நதிகளோ எம் சகோதரர்கள். அவை எம் விடாய் தீர்க்கின்றன. அவை எங்கள் ஓடங்களைச் சுமக்கின்றன. எம் குழந்தைகளுக்கு உணவூட்டுகின்றன. ஆதலினால் எம் நதிகளிடம் ஒரு சகோதரனைப் போல அன்பு செலுத்த வேண்டும்.
உங்களுக்கு இந்த நிலத்தை யாம் விற்போமானால், இந்தக் காற்று எங்களுக்கு விலை மதிப்பற்றது, சூழலின் வாழ்வத்தனையும் அது தாங்குகிறது என்று நினைவிருத்துவீர்களாக. எம்முடைய தாத்தனுக்கு அவனது முதல் மூச்சையும் கடைசி சுவாசத்தையும் இந்தக்காற்றுதான் அருளிற்று, இதே காற்றுதான் எங்கள் குழந்தைகளுக்கு இந்த வாழ்க்கையின் ஆதாரத்தையே தருகிறது. ஒருவேளை உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தைத் தருவோமானால், நீங்கள் அதனைப் புனிதமாகப் போற்றி, நறுமலர்களின் இன்மணம் தோய்ந்த காற்றை மனிதர்கள் அங்கு சுவாசிக்க ஏதுவாக நீங்கள் அந்த நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குக் கற்பித்ததை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் போதிப்பீர்களா? இந்த பூமி நம் தாய் என்றும், எது இந்த நிலத்துக்கு நேர்கிறதோ அது இந்த நிலத்தின் எல்லாப் பிள்ளைகளுக்கும் நேரும் என்றும்?
நாங்கள் அறிந்தவரை, இந்த பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல; மனிதன் பூமியின் உடமை. நம் எல்லோரையும் பிணைக்கும் ரத்தம் போலவே இந்த பூமியில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று. இந்த வாழ்க்கையின் உயிர்க்கூட்டை நெய்தவன் மனிதனல்லன். மனிதன் இந்த பூமியின் உயிரிகளில் ஒரு இழை மாத்திரமே. இந்த பூமிக்கு மனிதன் இழைக்கும் ஒவ்வொரு செயலையும் அவன் தனக்கேதான் இழைத்துக் கொள்கிறான்.
கடவுள் ஒருவரே. பூமியின் மீது நிகழ்த்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் அதன் படைப்புக் கடவுளின் மீது நிகழ்த்தப் படுவதே. உங்களுக்கு இறுதியில் என்னவாகும் என்பது எங்களுக்கு விளங்காப் புதிர்தான். எல்லா எருதுகளையும் கொன்று குவித்த பின், எல்லாக் குதிரைகளையும் அடக்கியபின் என்னாகப் போகிறது? அடர்வனங்களின் பகுதிகளெல்லாம் மனிதக் கூட்டத்தின் மூச்சுக் காற்று படர்ந்தபின், பசுமலைகளின் சிகரங்களை மின்கம்பிகளின் பின்னல்கள் மறைக்கும்போது...செறிந்த காடுகள் எங்கே? அழிந்தன..உயர் வானில் பறக்கும் பருந்துகள் எங்கே? போயே போயின...
அப்புறமென்ன? உயிர்த்திருப்பது இல்லாமலாகி, வாழ்தல் மட்டுமே எஞ்சும்.
கடைசி செவ்விந்தியனும் அவனது கானுயிரோட்டமும் மறைந்தபின், அவன் குறித்த நினைவென்பது அலையாடும் புல்வெளியைக் கடக்கும் மேகத்தின் நிழல் போலான பின் இந்த நதிக்கரைகளும் காடுகளும் இங்கிருக்குமா என்ன? எம் மக்களுடைய உயிர்ப்பு இங்கே எங்கிருக்கும்?
தாயின் இதயத்துடிப்பை உணரும் பிறந்த குழந்தை போல இந்த பூமியை நாங்கள் நேசிக்கிறோம். ஆதலால் இதை உங்களுக்கு நாங்கள் கொடுப்போமானால், நாங்கள் நேசித்தது போல் நீங்களும் இந்த பூமியை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பால் எங்களைப் போலவே கரிசனம் கொள்ளுங்கள். இந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளும்போது அது இருந்த விதமாகவே நீடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனி வரும் சந்ததிகளுக்காக இந்த நிலத்தைப் பாதுகாப்பாக, அதைக் கடவுள் நேசிப்பது போல இந்த நிலத்தை நேசமுடன் வைத்திருங்கள்.
நாங்கள் இந்த நிலத்தின் பகுதி என்பதே போல்தான் நீங்களும். இந்த பூமி எங்களுக்கு விலை மதிப்பற்றது. உங்களுக்கும்தான். கடவுள் ஒருவரே. செவ்விந்தியனோ வெள்ளையனோ ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள் அல்லர். நாமெல்லோரும் ஒருதாய் வயிற்று மக்களே"

Tuesday, June 19, 2018

Five Ways to Use Quantum Technology Every Day.


Quantum technology

Quantum technology is a new field of physics and engineering, which transitions some of the properties of quantum mechanics, especially quantum entanglement, quantum superposition and quantum tunnelling, into practical applications such as quantum computing, quantum sensors, quantum cryptography, quantum simulation, quantum metrology and quantum imaging.

The field of quantum technology was first outlined in a 1997 book by Gerard J. Milburn which was then followed by a 2003 article by Jonathan P. Dowling and Gerard J. Milburn, as well as a 2003 article by David Deutsch. The field of quantum technology has benefited immensely from the influx of new ideas from the field of quantum information processing, particularly quantum computing. Disparate areas of quantum physics, such as quantum optics, atom optics, quantum electronics, and quantum nanomechanical devices, have been unified under the search for a quantum computer and given a common language, that of quantum information theory.

The Quantum Manifesto was signed by 3,400 scientists and officially released at the 2016 Quantum Europe Conference, calling for a quantum technology initiative to coordinate between academia and industry, to move quantum technologies from the laboratory to industry, and to educate quantum technology professionals in a combination of science, engineering, and business.



Applications

Sensing

Quantum superposition states can be very sensitive to a number of external effects, such as electric, magnetic and gravitational fields; rotation, acceleration and time, and therefore can be used to make very accurate sensors. There are many experimental demonstrations of quantum sensing devices, such as the experiments carried out by the nobel laureate William D. Phillips on using cold atom interferometer systems to measure gravity and the atomic clock which is used by many national standards agencies around the world to define the second.

Recent efforts are being made to engineer quantum sensing devices, so that they are cheaper, easier to use, more portable, lighter and consume less power. It is believed that if these efforts are successful, it will lead to multiple commercial markets, such as for the monitoring of oil and gas deposits, or in construction.

Secure communications

Quantum secure communication are methods which are expected to be 'quantum safe' in the advent of a quantum computing systems that could break current cryptography systems. One significant component of a quantum secure communication systems is expected to be Quantum key distribution, or 'QKD': a method of transmitting information using entangled light in a way that makes any interception of the transmission obvious to the user.

Computing

Quantum computers are the ultimate quantum network, combining 'quantum bits' or 'qubit' which are devices that can store and process quantum data (as opposed to binary data) with links that can transfer quantum information between qubits. In doing this, quantum computers are predicted to calculate certain algorithms significantly faster than even the largest classical computer available today.

Quantum computers are expected to have a number of significant uses in computing fields such as optimization and machine learning. They are famous for their expected ability to carry out 'Shor's Algorithm', which can be used to factorise large numbers which are mathematically important to secure data transmission.


ஆற்றாமை. இயலாமை. முயலாமை


ஆற்றாமை. இயலாமை. முயலாமை. இந்த மூன்று வார்த்தைகளும் முதல்வர் தவிர்ந்த மூவருக்கும் பொருந்தும்.!
திரு சுமந்திரன் அவர்கள் தனக்கிருக்கும் அறிவித்திறமையால் இலங்கை அரசை பாரிய சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளி பல் வகையான அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டு ( குறிப்பாக) காணி விடுவிப்பு. கைதிகள் பிரச்சனை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு இவை அனைத்தும் பெற்று கொள்ள வாய்பிருந்தது...!
ஆனால் அவர் என்றுமே தமிழ் மக்களுக்காக எதையும் செய்தது கிடையாது. தனது தாய்கட்சியான ஐ தே க வை ஆட்சிக்கு கொண்டுவர தமிழ் மக்களை சாதகமாக முன் நகர்த்துவதே அவரின் செயல்பாடாக இருந்ததை யாவரும் அறிவர்...! தமிழ் மக்களுக்காக அவர் இதயசுத்தியுடன் எதையும் செய்ய '' முயலவில்லை..!
இதுவரை.(முயலாமை...! என்ற வார்த்தை இவருக்குரியது.
திரு மாவை சேனாதிராசா இவர் வடிவேலு பானியில் சொல்வதானால் கட்சிக்கு தலைமை பதவியை வகுத்தாலும்! கட்சிக்குள் டம்மி பீஸ்சாகவே உள்ளார். மேயர் பதவியாகட்டும் முதல்வர் பதவியாகட்டும் யாவும் இவர் நினைப்பது போல் நடப்பதில்லை காரணம் பெறும் பதவியை அலங்கரிப்பது மட்டுமே இவர் செயல். அவரின் கடமையை செய்வது சுமந்திரனே.
இவரின் இயலாமையை இவர் உரையாற்றும் கூட்டங்களில் காணலாம். சம்மந்தமே இல்லாமல் முக்கால் மணிநேரம் வெற்றுக் கதிரைகளை பார்த்து உரையாற்றுவதே தனிச்சிறப்பு. விடுதலைக்காக உரிமைக்காக போராடும் சமூகத்தில் இவ்வாறனவர்களை எவ்வாறு வாக்களித்து மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள் என்ற குழப்பம் என்மனதில் அடிக்கடி எழும். இயலாமை இவருக்குரியது.
திரு சம்பந்தன் ஐயா இன்று எம்மத்தியில் வாழும் வயது முதிர்ந்த கற்றறிந்த அரசியல்வாதி மட்டுமல்ல சிறந்த ராஜதந்திரி இருந்தும் என்ன பயன்? தாம் வகிக்கும் பதவியை கூட ஆளும் அரசுக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்தாத விசித்திரமான எதிர்க்கட்சி தலைவர். இத்தனை வருடகால் அரசியலில் இவர் தமிழ்மக்களுக்காக எதையும் சாதித்ததில்லை.
தனது சொந்த தொகுதியில் கூட அவர் நிகழும் அத்துமீறல்களை தடுத்தவருமில்லை. நல்லாட்சியை நிறுவியது தாங்களே என அடிக்கடி மார்தட்டும் இவர் அந்த நல்லாட்ச்சியை கொண்டு வந்த நோக்கத்தை நிறைவு செய்ய தவறியது மட்டுமல்லாது அரசுக்கு வரும் சர்வதேச அழுத்தங்களை வலுவிழக்க அவரும் துணைபோயுள்ளார்.
இந்த நிலையில் அங்கு இன்னும் பதவிக்காக ஒட்டியிருக்கும் திரு செல்வம் சித்தர் அவர்கள் ஒற்றுமை பற்றி வியாக்கீனம் செய்வது வேடிக்கை..! பல எண்ணற்ற போராளிகளை கொண்டிருந்த இயக்கத்தின் தலைவர்களான இவர்கள் தமக்கு கீழ் இருந்த போராளிகளை ஒருமுக படுத்தும் தகுதியை எப்பவே இழந்துவிட்டனர்.
இவர்கள் தலைமை பண்பை பெறுவதற்கு அருகதை அற்றவர்கள்.
இவ்வாறான நிலையில் காலம் காலமாக பேசி வந்த மாற்றணி உருவாகும் வேளையில் இவர்கள் ஒற்றுமை என்ற ஒற்றை வார்த்தையை பிரயோகித்து மீண்டும் தமது தலைமை பதவியை தக்க வைப்பது எதற்காக? தமிழ் மக்களின் நன்மை கருதியல்ல...!
தற்போது எமக்கு தேவையானது நேர்மையான பன்முகதன்மையுடைய தலைமையே...
நீக்கள் ஒற்றுமை பற்றி பேசுவதைவிட உங்கள் தமிழரசுக்கட்சியை முதல்வர் தலைமையில் அணிதிரளும் கட்சியுடன் தமிழ் மக்களின் நலன் கருதி இனைத்துவிடுங்கள்.
நீங்களும் உங்கள் அரசுக்கான ஆதரவை விலக்கிவிட்டு வகிக்கும் பதவிகளை துறந்து முதல்வர் ஆரம்பிக்க உத்தேசித்துள்ள கட்சியுடன் இனைந்துவிடுங்கள். அதுவே நீங்கள் தமிழ்மக்களுக்கு செய்யும் பெரும் உதவியாகும்.!
மாற்றமே விடிவை தரும். வெறுமையை போக்குவோம்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.

Saturday, June 16, 2018

Key skills needed to navigate this world of rapid disruptions.


In the traditional corporate model, strong leaders pursued a singular vision through the strong command of an organization. Today, we live in a time of rapid change, when products and services often become obsolete overnight, and competition includes startups and companies in adjacent industries–the traditional leadership archetypes need not apply.
Instead an entirely new value system is beginning to emerge for the leaders of the future, one that will continue to grow with the rise of new tools like artificial intelligence, robotics, and automation.
“There’s been a transition from thinking about corporations solely as revenues and profits, and thinking about the organization in a more inclusive way,” says Ernst & Young’s (EY) global chief innovation officer, Jeff Wong. “Clearly revenue and profits are still important, but the leading companies are starting to think beyond that.”
Wong adds that while organizations used to select leaders based on relevant management experience, there is now a premium on leaders who demonstrate drastically different skill sets; the ones that experts believe will help organizations navigate a rapidly changing business environment.

1. The Ability To Think Of New Solutions

While leaders of the past were often tasked with executing predetermined strategies, increasing efficiency, and improving preexisting processes, one of the most valuable assets of future leaders is their willingness and ability to create something entirely new.
“We know the world is changing rapidly, we know that change is accelerating, we know that when you look at companies and industries that are evolving rapidly that there will be a series of new opportunities to go after, which will also be a chance to help define the evolution of their industry,” explains Wong.
Wong explains that as industries, processes, and business models are reinvented by disruptive technologies, the most valuable leaders of tomorrow are those that can shape the impact of those changes, rather than react to them.
“They’re leaders who can seek out new opportunities, who can deliver those new opportunities, but can also help redefine their own business into what it needs to be for the future,” he says.

2. Being Comfortable With Chaos

In an increasingly chaotic business landscape, the leaders who thrive are those who work well in unknown conditions.
“There are systems and processes that have been built up from the past that were fantastic for that era, but they aren’t fast or nimble enough to match this pace of change,”says Wong.
Leaders who can demonstrate a level of comfort with the chaos that results from reinventing long-standing processes are better prepared for the challenges that await them in the future, he says.

3. An Understanding Of Technology

While the leaders of the future won’t necessarily need to be the ones writing code, experts suggest that they will at least be required to demonstrate a robust understanding of the capabilities, applications, and future potential of emerging technologies.
“Information technology is moving from more of a supporting role that creates efficiency to a differentiating role that will increase effectiveness,” says Guo Xiao, the president and CEO of ThoughtWorks, a global technology consultancy. “Corporations are taking tech more and more seriously, regardless of what industry they’re working in.”
Xiao explains that industries as diverse as retail, agriculture, and manufacturing are increasingly naming technology experts to their advisory boards, while adding more C-level positions in the information and technology space. These efforts, he explains, are in recognition of the fact that technology needs to drive core business functions in order for companies to remain competitive.
“IT staff are now sitting in the center of innovation teams, because the company understands that with ever-changing technologies their business models are facing opportunities to be disrupted or evolved,” he says.

4. High Emotional Intelligence

In a future that incorporates more artificial intelligence in the workplace, leaders who are emotionally intelligent will ultimately thrive.
“If you think about the assembly line in a very hierarchal organization, it was about measurement and control,” explains Accenture’s chief technology and innovation officer, Paul Daugherty. “Then we moved to the second generation of management, which was still about control over sequential processes.”
As part of management’s ongoing evolution that military-like control over subordinates has gone from a key leadership value to a competitive disadvantage, suggests Daugherty.
As technology becomes more ubiquitous in business processes, organizations have become flatter and less hierarchal, he explains. “As you have work processes evolving more organically, it’s going to be driven by leaders that understand and invest in people.”
Daugherty points to five traits of successful future business leaders, each emphasizing traits that cannot be replicated by artificial intelligence anytime soon. They include accountability, transparency, fairness, honesty, and an ability to design systems and processes for humans. 

5. The Ability To Work With People and Technology Together

With the increasing influence of technology on businesses both within and beyond the tech industry, the most effective leaders of tomorrow will understand how to delegate between humans and machines in a way that maximizes the capabilities of both.
“The obligation of leaders is to step back and look at not just how you apply AI to the business, but how you change a process,” says Daugherty. “Look at the roles that people play in that process and apply technology that optimizes the value of the people in those roles.”
While some look at emerging technologies with fear and anxiety, the most future-ready leaders are excited to integrate them into their workforce, explains Wong.
“The best leaders love the benefits of the two working together,” he says. “They love AI, they love bots, they love anything that makes them better, helps them make better decisions, and helps them see things more clearly.”
Thanks  Jared Lindzon ,Cecile G. Tamura


சொல் உலகம் (ஸப்த பிரபஞ்சம்),பொருள் உலகம் (அர்த்தப் பிரபஞ்சம்)

உலகமானது சொல்வடிவம், பொருள் வடிவம் என்று இரண்டு வகையாக உள்ளது.
சொல் உலகம் //ஸப்த பிரபஞ்சம்// என்றும்,
பொருள் உலகம் //அர்த்தப் பிரபஞ்சம் // என்றும் அழைக்கப்படும்.
சொல்உலகம் எழுத்துக்களை உறுப்புகளாகக் கொண்ட சொற்களாகும்.எழுத்துக்கள்,
வர்ணம்,
பதம்,
மந்திரம்,
என்று மூன்று வகைப்படும் என்று ஆகமாந்தம் கூறுகின்றது.
இங்கு கூறப்பட்ட எழுத்து, சொல் என்பது எல்லா மொழிகளிலும் உள்ள எழுத்துக்களையும், சொற்க்களையும் குறிக்கும் என்பது சிவாகமங்களின் கொள்கை.
சொல் உலகம் என்ற ஸப்த பிரபஞ்சம் அறிவுக்கு காரணமாய் உள்ளதால் அது சுத்தமாயையின் காரணமாகும் என்பது சித்தாந்த முடிபாகும்.
இந்த சொற் பிரபஞ்சமே, நாம் பேசும்
*//வாக்கு *//எனப்படும்.
இந்த வாக்கு நான்கு வகைப்படும்.
1) சூக்குமை
2) பைசந்தி
3)மத்திமை
4) வைகரி
என்பனவாகும்.
நமது மூலாதாரத்தில் இருந்தும், நாபிக்கமலத்தில் இருந்தும் ஓசை ஒன்று எழும்.அந்த ஓசையை எழுப்பும் காற்றுக்கு
*//உதானன் *// என்று பெயர்.
இவ்வாறு தோன்றும் உதானன் என்ற ஓசையானது, மூலாதாரத்தில் இருந்து எழும்பி,
பரை, பைசந்தி, மத்திமை, வைகரி, என்ற நான்கு நிலைகளில் சென்று நாம் பேசும் வாக்காக உருவெடுக்கின்றது.
இதில் முதலில் வரும்,
சூக்குமை என்பது பரை என்றும், நாதம் என்றும் அழைக்கப்படும்.இவ்வாக்கு காரணநிலையிலேயே அழிவின்றி நிற்பதாகும்.அதாவது, இந்த ஓசை(சப்தம்) தான் உற்பத்தியான மூலாதாரத்திலேய அசைவற்று நிற்க்கும். இதையே சூக்குமை அல்லது பரா வாக்கு என்பர்.
பின் இந்த சப்தமானது உதானன் என்ற வாயுவினால் மேலே எழும்பி வரும்பொழுது நாபீக்கு அருகில் வந்தவுடன், எழுத்துக்களின் வடிவில் நன்கு விளங்கித் தோன்றாது, பொதுப்படையாக தோன்றும்.இதனை பைசந்தி வாக்கு என்பார்கள்.
இதற்க்கு உதாரணம், மயில் முட்டையில் உள்ள நீரின் உவமையை கூறுவார்கள்.அதாவது, மயிலிடம் காணும் நிறங்கள் பலவும், மயில் முட்டையில் தெரிந்தும், தெரியாது இருத்தல் போல என்பர்.
மூன்றாவது வாக்கு மத்திமை.நாபியில் இருந்து எழுந்த வாயுவானது, இருதயம் பக்கம் வந்தவுடன், எழுத்து வடிவில் நன்கு விளங்கத் தோன்றி, இருதயத்தில் இருந்து உதானன் என்ற வாயுவால் உந்தப்பட்டு மிடறு அதாவது கண்டத்தில் நின்று மெல்ல ஒலிக்கும் வாக்காகும்.இது மத்யமா என்று பெயர் பெரும்.
இந்த வாக்கைதான் நாம் உலகவாழ்வில், தொண்டைக்குழி வரை வந்துவிட்டது, வாயில் வரவில்லை என்கிறோம்.இவ்வாக்கு பைசந்திக்கும், வைகரிக்கும் இடையில் நிற்ப்பதால், மத்திமை என்றப் பெயர் பெற்றது.
நான்காவதாக மிடற்றில் நின்ற உதானன் என்ற வாயு, அதாவது எழுத்துவடிவ சொற்க்கள், வாயின் வழியாக "பிராணன் "" என்ற காற்றின் மூலமாக வாய் வழியாக வெளியேறுகிறது.இது வைகரி வாக்கு எனப்படும்.
இந்த வைகரீ வாக்கே நாம் பேசும் சொல்லாகும்.எனவே நாம் பேசும் ஒரு சொல் கடந்து வரூம் நிலை இதுவேயாகும்.இந்த வைகரீ வாக்கே சொல்பவர் செவிக்கும், கேட்போர் செவிக்கும் புலனாவது.
இதில் சொல்பவர் காதில் மட்டும் கேட்பது
"சூக்ஷும வைகரி " என்று கூறுவர்.இது உலகவழக்கில் முனு முனுத்தல் என்பதாகும்.
கேட்போர் செவிக்கும் சொல்பவர் வாக்கு கேட்குமாயின் அது "ஸ்தூல வைகரி "என்று கூறுவர்.இது உலகவழக்கில் சொல்லாடல் என்பதாகும்.
மூலாதரத்தில் இருந்து ஓசையானது வாக்காக மாறும் இப்படிநிலை பற்றிய விபரங்கள் //அந்தணர்கள் ஓதும் வேதங்களில் விரிவாக உள்ளன என்று,
தமிழின் முதல் நூலாகிய தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.அப்பகுதி,
//எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில்தப நாடி
அளபிற் கோடல் "அந்தணர் மறைத்தே "
அஃது, இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுவின்றிசினே //
என்று பாடுகின்றார்.
மூலாதாரத்தில் உள்ள காற்றில் இருந்து தோன்றும் எழுத்துகளும் சொற்களும் படிநிலை கடந்து வாய்வழியாக வாக்குகளாக வெளிப்படும்.இவ்வாறு வெளியாகும் வாக்குகளின் தன்மை, வேதங்களில் ஓதும் முறையாக உள்ள உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம் என்னும் நிலைகளில் அமையும் என்றும் இதன் விவரங்கள் அந்தணர்களின் வேதங்களில் விரிவாக உள்ளன என்பதை "அந்தணர் மறைத்தே " என்று தொல்காப்பியர் சிறப்பித்து கூறுகின்றார்.
தொல்காப்பியம் போற்றும் அந்தணர் வேதம்.
தொல்காப்பியர் காலம் முதலே வேதங்களை போற்றுவது தமிழகத்தில் இருந்துவந்துள்ளது.எனவேதான் பாரதி வேதம் நிறைந்த தமிழ் நாடு என்றார்.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேய சிவம்.

Tuesday, June 5, 2018

'பல் கலைக் கழகம்'-University


Rajeswary Balasubramaniam

18.5.18,முள்ளிவாய்க்கால் நினைவு நாளன்று, நான் லண்டனிலிருக்கவில்லை. உலகத்தின் மிகப் புராதான தீவுகளில் ஒன்றான 'மால்ட்டா'வுக்குச் சென்றிருந்தேன்.
பத்தாயிரம் வருடங்களுக்கு மேலான சரித்திரத்தைக் கொண்ட அந்தத் தீவில் பிரயாணங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது,இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது படித்துக் கொண்டிருந்தேன்.

இன்று,'மனிதப் பேரவலம் ஒன்றை நினைவு கூரும் இடத்தில் இன்னொரு பேரலவத்தை அரங்கேற்றம் 'வல்லமை'தமிழர்களுக்கு மாத்திரம்தான் உண்டு' என்ற ப.தெய்வீகனின் வார்த்தைகள் நெஞ்சில் நெருப்பாய்ச் சுட்டன. (தேனியில் வந்த கட்டுரை).

அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சிகளில் திருகோணமலை, மட்டக்களப்புப் பிராந்தியத்தைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளக் கூடாது' என்ற கட்டளையும் அங்கு பிறப்பிக்கப் பட்டதான செய்திகளும் வந்து விழுந்தபோது எனக்கு வந்த அதிர்ச்சியையும் துயரையும் விளங்கப்படுத்த எந்த வார்த்தைகளும் கிடைக்கவில்லை.

முப்பதாண்டு போரில்,கிழக்குவாழ்; தமிழர்கள் உயிர், உடமைகளை இழக்கவில்லையா, ஆயிரக் கணக்கில் போராளிகளாக வீரமரணத்தைத் தழுவிக் கொள்ளவில்லையா?காணாமற்போன தங்கள் குழந்தைகளை, கணவன்மாரை, சகோதரங்களைத் தேடி அவர்கள் கதறுவது யாழ்ப்பாண மாணவர்களின் புலன்களை எட்டவில்லையா, கிழக்கிலுள்ள,(முக்கியமாக அம்பாரை மாவட்டத்திலுள்ள) 48;.000 விதவைகளின் அவல நிலை முள்ளியாவளை நினைவு நாளில் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த கறுப்புச் சட்டை வீரர்களின் கருத்துக்களில் பதிந்திருக்கவில்லையா?

எனக்குள் வந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்குப் பதில்களை யாரிடம் எதிர்பார்ப்பது?
'பல் கலைக் கழகம்' என்பது ஒரு மாணவன் குறிவைத்துச் செல்லும் பாடத்தில் மட்டுமல்லாது பல உயர்நிலைக் கல்விகளின் ஒன்றுகூடலின் சங்கமத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டு பல்லறிவு பெறும் கழகம் என்பதுதான் எனது அனுபவம்.

1985ம் ஆண்டு,நான் லண்டன் திரைப்படக்கல்லுரி மாணவியாக,பலதரப்பட்ட மாணவர்களுடன் எனது வாழ்க்கையின் 'இரண்டாம்' கட்ட மேற்படிப்புக்குச் சென்றேன். ஏற்கனவே எனது வாழ்க்கையிற் பெரும்பாலான காலம் முற்போக்கு சிந்தனைகளால் சீரமைக்கப் பட்டிருந்ததால்,திரைப்படக் கல்லூரிக்குச் சென்றதும் அங்கு காணப்பட்ட'சமுதாய,திரைப்பட புரட்சிகர' சூழ்நிலை' என்னை ஆச்சரியப் படுத்தவில்லை.

நானும் எனது சக மாணவர்களும்;,80ம் ஆண்டுகளில் லண்டன் தெருக்களில் தென்னாபிரிக்க வெள்ளையாதிக்கத்துக்கு எதிராக மோதியலைந்த பல்லாயிரம் பிரித்தானியப் பொது மக்களுடன் எங்களையும் பிணைத்துக் கொண்டோம்;. எங்களது முதலாவது' டாக்குயமென்டரி' தென்ஆபிரிக்க வெள்ளையாதிக்கக் கொடுமையை எதிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது.

அதைத் தொடர்ந்து,இலங்கைத் தமிழர் படும் அவலத்தை முன்னெடுத்து, 'எஸ்கேப் புறம் ஜெனசைட்' என்ற 'டாக்குயுமென்டரியைத்' தயார் செய்தேன்.
இலங்கையிலிருந்து உயிர் தப்பியோடிவரும் தமிழர்களுக்காக,' தமிழர் அகதி ஸ்தாபனம், தமிழர் அகதிகள் வீடமைப்பு' போன்ற ஸ்தாபனங்களை பிரித்தானிய தொழிற் கட்சியின் உதவியுடன் நிறுவி அதன் தலைவியாகவிருந்து என்னால் முடிந்த உதவிகளை எங்கள் தமிழ் மக்களுக்குச் செய்தேன். இந்தியா சென்று,இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களைப் பற்றிய புகைப்படக் கண்காட்சியை லண்டனில் நடத்தினேன். இவையத்தனையும் நான் மாணவியாக இருந்த காலத்தில் எனது சமுதாயத்திற்காகச் செய்த கடமைகள்.

அப்போது லண்டனுக்கு அகதிகளாக வந்த தமிழர்களில் நான் ஒரு கிழக்கிலக்கிங்கைத் தமிழரையும் சந்திக்கவில்லை. எனக்கு.வடக்கு கிழக்கு, என்ற பிராந்திய உணர்வு ஒரு நாளும் இருந்ததில்லை. மனித நேயம்தான் எனது தாரக மந்திரம்.

இன,மத,நிற,வர்க்க பேதமற்ற மாணவர்களில் ஒருத்தியாக பன் முகத் திறமைகள்; கொண்ட மாணவர்களுடன் லண்டனில் என்னைப் பிணைத்துக் கொண்டபோது, 1960ம்-70ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் முன்னெடுத்த பல முற்போக்கு சிந்தனைகள் என் மனதில் நிழலாடின.

1960-ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து,அமெரிக்கரின் கொடிய போர்த் தந்திரங்களால் வியட்நாமிய மக்கள் கொடுரமாக் கொலை செய்யப்படுவதை எதிர்த்து கொழும்பு பல்கலைக் கழக மாணவர்கள மட்டுமல்லாது இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள்,பல்லாயிக் கணக்காகத் திரண்டு கொழும்புத் தெருவிலிறங்கிப் போராடியதால் போலிசாரின் தடியடிக்கு ஆளாகினார்கள்.

அதே கால கட்டத்தில் 1967ல் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகக் கோயில் திறக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த போராட்டத்தில், கொழும்பிலிருந்தும் கண்டி பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான முறபோக்கு,இடதுசாரி தமிழ்மமாணவர்கள், மாவிட்டபுரம் சென்று ஒடுக்கப் பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காகப் போரடினார்கள்.(எனது 'ஒருகோடை விடுமுறை'நாவல் வாசித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்)

அக்கால கட்டத்தில்,யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மனித உரிமைப் போராட்டத்தில்,முற்போக்கு இலக்கியப் பாதையில்,சமூகவளர்ச்சி சிந்தனைகளில் தனது முத்திரையைப் பதித்துக் கொண்ட ஒரு பெரும் தகமையுடன் இலங்கையில் கௌரவம் பெற்றிருந்தது. அதற்குக் காரணம் அக்காலத்தில் அங்கு செயற் பட்ட வடபுலத்தின் தலைசிறந்த முற்போக்குவாதிகளில் ஒருத்தரான,திரு.மு. கார்த்திகேசு' மாஸ்டரின் மாணவன் கலாநிதி கைலாசபதி போன்றவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டிகளில் ஒருத்தராகவிருந்ததாகும்.

'பல் கலைக் கழகம்' என்ற 'பன்முறைத் தகமையின் ஆளுமையின்; தார்ப்பரியத்தைச் செயலிற் காட்டிய சிறந்த கல்விமான்களுடன் வளர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களா இன்று 'தமிழர்களுக்கான ஒரு பொது நினைவு நாளில்' இவ்வளவு கேவலமான பிராந்திய வெறியுடன் நடந்து கொண்டார்கள்?

இந்தச் செய்தியைச் சீரணிக்க முடியாமல் எனது நெஞ்சம் பதறுகிறது. இவர்களை இப்படி ஒரு குறுகிய வழியில் செயற் படுத்துபவர்கள்யார்?

இன்று இலங்கைத் தமிழ் மக்கள்,தமிழ் மக்களின் வாழ்வாதரத்தை மேன்படுத்தும், தமிழர் சமூகத்தை வளம் படுத்தும், இளம் தலைமுறையை நல்வழிக்கு இட்டுச் செல்லும் ஒரு நேர்மையான அரசியற் தலைமையின்றித் தவிக்கிறார்கள். தமிழ்த் தலைவர்கள் என்று தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு பதவிக்கு வருபவர்களுக்கு,' மக்களால் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்றவாதியின் கடமைகள்' என்னவென்ற ஒரு கோட்பாட்டின் விளக்கம் தெரியாது.

1948ம் ஆண்டு தொடக்கம் 'தமிழ்ப் பிரச்சினை' என்ற ஒரு கருத்தை முன்வைத்து பதவிக்கு வரும் மேல்மட்டத் தலைவர்கள் சாதாரண தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், தமிழ் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கும், அதன்பின் 'தமிழர் பிரச்சினை' சொல்லி பதவிக்கு வரமுடியாது என்ற தெரியும்.அதனால் தங்கள் வசதியான வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ள எப்படியும் ஏதோ ஒரு வழியில் தமிழர் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்

அந்தப் பிரச்சினைகளைத் தொடர அவர்களின் பாவிப்பு ஆயுதங்களாக, சாதி, சமயம்,பிராந்திய ,இனவெறிகளைத் தூண்டிக் கொண்டேயிருப்பார்கள்.அவற்றைப் பாவித்துத் தங்கள் சொகுசு வாழ்க்கையை, தமிழ் மக்களின் எதிரி என்று அவர்களால்ச் சுட்டிக் காட்டப் படும் இலங்கை அரசின் பாதுகாப்புப் படையின் உதவியுடன் தொடர்ந்த கொண்டிருப்பார்கள்.

அதற்காக அவர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் யாரையும் எதையும் பாவிக்கத் தயங்க மாட்டார்கள்.இன்று அவர்களின் பகடைக்காய்களாக மாறிவிட்டிருப்பவர்கள் அப்பாவிப் பொது மக்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் என்று பேசிக்கொள்கிறார்கள்..

யூதர்களில் உள்ள இனவாதத்தால், ஹிட்லர் தனது வெறிபிடித்த கொள்கையால் தனது மக்களைத் தவறாக வழிநடத்தியதால் அதன் நீட்சியாக,இரண்டாம் உலகப்போர் வந்து உலகம் பல மோசமான அழிவுகளை முகம் கொடுக்க நேரிட்டது. கடைசியாக ஹிட்லரும் அழிந்து அவனின் நாடும் சிதைந்தது. அவனது மிகப் பெரும் பலமாக இருந்தவர்கள் மாணவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று,பலநாடுகளில் பணபலத்தால் படடோபமாக வாழும் சில புலம் பெயர் தமிழர்கள், 'தமிழர்' பெயர் சொல்லி மேடையேறவும், பிரமுகர்களாக வலம் வரவும் அப்பாவி இலங்கைத் தமிழர்களைப் பணயம் வைத்து விளையாடுவதை இலங்கைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.
சில புலம் பெயர் தமிழர்கள்,தங்கள் பிள்ளைகளுக்கு உயர்படிப்பை வழங்கிக்கொண்டு, தாய்நாட்டில் வளரும் இளமனங்களில் விஷவிருட்சத்தை வளர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

புலம் பெயர் தமிழர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களில் உண்மையான அக்கறை வைத்தால், சிதைந்துபோன இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தவும், கல்வித்துறையில் மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஈடாகப் போட்டிபோட்டு உலகதரத்தில் பெருமைபெற முடியும். ஆனால் சுயநலம் பிடித்த இலங்கைத் தமிழ்த் தலைவர்களும், மற்றவர்கள் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் சில புலம் பெயர் ;சாடிஸ்ட்' தமிழர்களும் சட்டென்று உணர்ச்சி வயப்படும் இளவயதினரைத் தங்கள் தேவைகளுக்குப் பாவித்து விட்டுத் தூக்கியெறிவார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக,மாணவர்களே தயவு செய்து உங்கள் பல்கலைக்கழகத்தின் பாராட்டுக்குரிய பழைய சரித்திரத்தை ஒரு தரம் புரட்டிப் பாருங்கள். இலங்கையில் முற் போக்குத் தமிழ் சிங்கள மாணவர்கள், அமெரிக்க-வியட்நாம் போருக்கும் யாழ்ப்பாணத்தில் சாதிக் கொடுமைக்கும் குரல் எழுப்பிய அதே காலகட்டத்தில்,1968ம் ஆண்டு பாரிசில் நடந்த மாணவர்களின் புரட்சியால் நடந்த பல முன்போக்கான மாற்றங்களைப் படியுங்கள்.

உங்களின் கல்வி பலம் மகத்தானது. இளம் வயதுச் சிந்தனை சக்தி மிகப் பிரமாண்டமானது. வளரும் வயதின் அறிவு ஆழம் தெரியாத கடல்போல் மிக மிக ஆழமானது,மனதை நெருடும் தென்றலைப்போல் தௌ;ளிய கருத்துக்களை உங்கள் இளம் மனதில் தாலாட்டக்கூடியது.

தங்கள் சுயநலத்தை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளுக்காக உங்களின் அபரிமிதமான ஆளுமையை மாசுபடுத்தாதிர்கள்.அவர்களுக்காக ஒத்துப் பாடும் குறுகிய அறிவுள்ள ஊடகங்களின் பதிவுகளை 'பல் கலைக் கழக மாணவர்கள்' என்ற பார்வையில் பன்முகத்துடன் அலசிப்பாருங்கள்.

'பல் கலைக் கழக' மாணவர்கள் எதிர்காலத்தின் சமூகக் காவலர்கள், சிந்தனையாளர்கள், சீர்திருத்தவரிகள்.அரசியல் வாதிகள்,ஆளுமையைக் கையிலெடுக்கப் போகிறவர்கள். உங்களின் கையில் பாடப்புத்தங்களையம் கருத்தில் மனித தர்மத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் எதிர்காலக் கருவிகளாகப் பாவிக்கப் பழகுங்கள். இடறுவது தற்செயல்,ஏறுவது முயற்சி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எங்கள் சமுதாயத்தை முன்னேற்ற உங்கள் பணிகள் இன்றியமையாதது.இரண்டாம் உலக யுத்தத்தால் சிதிலமடைந்த ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் தலைநிமிர அந்நாட்டு அரசியல்வாதிகள் மக்களை எந்தவித பேதமுமின்றி ஒன்று சேர்த்து உழைத்தார்கள். ஓரு சொற்ப கால கட்டத்தில்; அவ்விருநாடுகளும்,தொழில் உற்பத்தி,விஞான விருத்திகளில் அபரிமிதமாக முன்னேறியதை நீங்கள் படித்திருப்பீர்கள்.

இலங்கைத் தமிழர்களை ஒன்று சேர்த்து எதிர்கால வளர்ச்சிக்கு அத்திவாரம்போடுவது இளம் தலைமுறையினர் கைகளிற்தானிருக்கிறது. அதை மறந்துவிட்டு,சாதி,மத.பிராந்திய,இன வெறியுடன் பொதுக்கடமைகளில் ஈடுபடுவது மாணவ வாழ்க்கையின் ஆக்க நோக்கைச் சீரழிக்கும். வெற்று வார்த்தைகள் எதையும் கட்டியமைக்கப் போவதில்லை.

பொருளாதாரத்தில்,கல்வியில், மனிதநேயக் கருத்துக்களில் வளர்ந்த மேற்கு நாடுகளில், தனி மனித திறமைக்கு மதிப்புண்டு. தேசியத்தின் வளர்ச்சிக்கு அது உதவுகிறது.வளர்ந்த நாடுகளின் சரித்திரத்தை ஒருதரம் புரட்டிப் பாருங்கள். மக்களின் ஒட்டுமொத்த ஓற்றுமை என்பது அவர்கள் வாழும் சமுதாயத்தின் வலிமையின் அடிப்படைத் தளமாகும். தமிழர்களின் பல்வேறுபட்ட திறமைகளை ஒன்றிணைத்து ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் இளம் மாணவர்களை குறுகிய வழிகாட்டித் தங்கள் தேவைகளுக்குப் பாவிக்கும் அரசியல் சூத்திரங்களுக்கு அடிபணிவது வலிமையற்ற மனவளர்ச்சியின் பிரதிபலிப்பாகும்.