Search This Blog

Tuesday, December 12, 2017

அரசியல் உரிமை

இந்த எண்ணக்கரு தொடர்பில் நிறைய வாதப் பிரதிவாதங்கள் உண்டு பெரும்பாலும் அரச அலுவலர்களது வாய்களில் நர்த்தனமாடும் வார்த்தையாக காணப்படும் எண்ணக் கருவானது உண்மையில் அரசியலுடன் தொடர்புடைய கட்சிகள், நபர்களிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பதை தவறு என்பதனை குறித்து நிற்கின்றது.
ஒரு பொது மகனாக மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு அவ்வகையில் நானும் எனது கருத்துக்களை இங்கு முன் வைத்துக் கொண்டிருக்கின்றேன் எனது பதிவுகள் எந்த ஒரு கட்சிக்கோ நபருக்கோ ஆதரவானவை அல்ல மாறாக சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய வகையில் மக்களது சிந்தனை மற்றும் செயல்களில் மாற்றம் வர வேண்டும் என்பதே அவா...
தற்பொழுது இலங்கையில் முற்று முழுதாக வட்டார முறையான தேர்தல் முறைமையாக காணப்படவிட்டாலும் பெருமளவில் வட்டாரமுறையை சார்ந்ததாக காணப்படுகின்றது எனவே தங்களது பிரதேசத்திற்கு சேவையாற்றக் கூடிய நபரை தெரிவு செய்வதற்கு இத் தேர்தல் முறைமை வழி சமைத்துக் கொடுத்துள்ளது..
இங்கு வாக்களிக்க தகுதியுடையவர்கள் பின்வரும் இரண்டு விடயங்கள் தொடர்பில் கடப்பாடுடையவர்கள்...
1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கை கட்டாயம் செலுத்துவதற்குரிய கடப்பாடு
(தனது வாக்கை செலுத்தாது கடமையிலிருந்து தவறியவராவதுடன் பிழையான தெரிவுகள் தெரிவு செய்யப்படுவதற்கு காரணமானவராகவும் ஜனநாயகத்தை மறுதலிப்பவராகவும் அமைவார்)
2. வாக்காளர்கள் சரியான நபரை தெரிவு செய்தல்.
பெரும்பாலும் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்வதற்கு பலர் முனைவர் எனினும் பகுத்தறிவுள்ளவர்கள் என்னும் எடுகோளின் அடிப்படையில் மக்கள் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் சரியான பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டியது அவசியம்
1. தான் தேர்தலில் போட்டியிடும் பிரதேசம் தொடர்பான குறிப்பிடத்தக்க அறிவு (பிரதேச அமைவு, காணப்படுகின்ற வளங்கள், மக்களது அடிப்படை பிரச்சனைகள், பொதுவான விடயங்கள் தொடர்பான அறிவு)
2. தான் போட்டியிடுகின்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டால் மக்களுக்கு எவ்விதமான சேவை செய்யலாம் என்பது தொடர்பான குறிப்பிடத்தக்க அறிவு (குறிப்பாக ஒருவர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவாராயின் பிரதேச சபை சட்டம், அப்பிரதேச சபை வருமானம், வளங்கள் பற்றிய அறிவு நிறைந்து அவற்றின் அடிப்படையில் சேவையாற்றக்கூடிய வகையில் குறிக்கோள்கள் அமைய வேண்டும் அதை விடுத்து பிரதேச சபைக்கு போட்டியிடும் நபர் தான் வெற்றி பெற்றால் பிரதேச சபை மூலம் பிரதான 'அ' வகை வீதிகளை புனரமைப்பேன் என்பது கேலிக்கூத்தாகவே அமையும் ஏனெனில் அது பாராளுமன்ற, அமைச்சரவை தீர்மானங்களுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றமை ஆகும் ஆயினும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவ்வாறான கோரிக்கையை அரசிற்கு விடுக்கலாம் அது தொடர்பில் கூறி அவர் மக்களை பிழையாக நடாத்த வேண்டிய அவசியம் இல்லை)
3. மேலும் தனது பிரதிநிதித்துவத்தால் மக்களிற்கு சேவையாற்றக்கூடிய வகையில் வெளி வளங்களை பெற்றுத் தரக்கூடிய ஆற்றல் ( பிரதேச சபை உறுப்பினராயின் மாகாண சபை மூலம் நிதி, வளங்களை பெற்று பிரதேசத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய ஆற்றல்)
பெரும்பாலும் மக்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தங்களது ஆதரவை தெரிவிக்கும் பண்பு காணப்படுகின்றது விகிதாசாரமுறைமைக்கு இது ஓரளவு பொருந்தினாலும் வட்டார முறையைப் பொருத்த வரை பிரதிநிதி மற்றும் அவரது பிண்ணனி முக்கியமாக உள்ளது
நீங்கள் ஆதரவளிக்கும் நபர் சமூகத்தில் உயர் தொழிலில் உள்ளவராக நற்பண்புகள் நிறைந்தவராக காணப்படலாம் ஆனால் அவர் வினைத்திறமை அற்றவராக அடையாளம் காணப்பட்டவராயின் அவரை தெரிவு செய்வதனால் பயன் ஏது?
நீங்கள் குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கின்றீர்கள் அதன் பிரதிநிதிக்கே ஆதரவளிக்க வேண்டும் எனக் கடப்பாட்டுடன் திகழ்கின்றீர்கள் என வைத்துக் கொள்கின்றோம் அவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துபவர் வினைத் திறமை அற்றவராகவோ அல்லது சமூக விரோதியாகவோ காணப்படின் நிலையைச் சற்று சிந்தித்து பாருங்கள் கடந்த கால கசப்பான அனுபவங்களினால் தான் மேற்கூறிய கருத்தை கூற வேண்டியுள்ளது கடந்த காலத்தில் A என்ற கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய X என்ற நபர் தான் தவிசாளராக இருந்த சபையில் தற்காலிக ஊழியராக இருந்த பெண்ணை நிரந்தரமாக்க பாலியல் லஞ்சம் கேட்டு நியமனத்தை இடை நிறுத்தி கௌரவ ஆளுநர் தலையீடு செய்த வரலாறுகள் உண்டு...
எனவே அன்பார்ந்த மக்களே பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொழுது சரியான பிரதிநிதியை தெரிவு செய்யுங்கள் ஏனெனில் மக்களின் அறிவின் அடிப்படையிலேயே அவர்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளும் அமைவர், கட்டாய வாக்களிப்பின் மூலம் ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எமக்குண்டு சிந்தித்துச் செயல்படுங்கள் நாளை_நமதே.

Thanks 
Pragash Sinnarajah

No comments:

Post a Comment