Search This Blog

Sunday, November 19, 2017

ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் (இறப்பு: நவம்பர் 18, 2017)


திருமலை ரீ.பத்மநாதன் அவர்கள் திருகோணமலையில் 1964ம் ஆண்டிலேயே திருகோணமலை இசைக்கழகம் என்ற இச...ைக்குழுவை ஆரம்பித்து இயக்கி வந்தவர்.
இலங்கை வானொலியின் மெல்லிசைப் பாடல்கள் பலவற்றுக்கு இசையமைத்துப் புகழீட்டியிருந்த ஈழத்தின் தலைசிறந்த ஓர் இசையமைப்பாளர் திருமலை பத்மநாதன் அவர்கள்.
ஈழத்தின் மூத்த - புகழ் பூத்த கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் தயாரித்து நடித்த நிர்மலா திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தவர் திருமலை பத்மநாதன். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "கண்மணி ஆடவா .." என்ற பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தது.

அது போல தென்றலும் புயலும் என்ற ஈழத்துத் திரைப்படத்துக்கும் இவரே இசையமைத்திருந்தார்.
இசையில் மண்வாசம் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு தனது பாடல்களுக்கு இசையமைத்து இரசிகர்கள் நெஞ்சங்களில் நிலையான இடத்தைப்பிடித்தவர்.
நிறைவான கர்நாடக,மேலைத்தேச இசைஞானம் உடைய ஓர் ஒப்பற்ற இசைக்கலைஞரை எங்கள் தேசம் இழந்துள்ளது.
எமது ஆழ்ந்த இரங்கல்.
பதிவிட்டவர் : SK Rajen

No comments:

Post a Comment