Search This Blog

Tuesday, July 18, 2017

குவைத் பெண் கவிஞர் ஸுஆத் ஸுபாஹ் கவிதைகள்!


~~~~~~~~~~~~~~~~~~~~~~
"நான் குவைத்தின் மகள்...
மணலுக்கு மேல் தூங்கும்
இந்தக் கரையின் மகள்
அழகிய மான் போல...
என் கண்களில்
இரவின் நட்சத்திரங்கள் வெளியாகி
சந்திக்கின்றன

பேரீச்ச மரங்களும்..
இங்கிருந்து தான்...

என் பாட்டன்மார்கள் அனைவரும்
கடலுக்குப் போனார்கள்...
அசாத்தியமானவற்றைச் சுமந்து
திரும்பி வந்தார்கள்

நான் குவைத்தின் மகள்...
என் உள்ளம் காய்ந்ததாயிருப்பது
சாத்தியமானது தானா..

மரத்தினாலான குதிரை போல?...
உணர்ச்சியற்று...
மரத்தினாலான குதிரை போல?

என் வளர்ச்சியை அழித்து விடுவது
அரபியருக்கு சாத்தியமானதா?

அரபிக்கடலிலிருந்து குடித்த
பேரீச்சமரம் என் உடல்...
என் சுயத்தின் பக்கத்தின் மீது
வடிவம் கொண்டது

எல்லாத் தவறுகளும்
கவலைகளும்
அரபியரின் நம்பிக்கைகளும்"
(...)

"என் நண்பனாகி விடு...
என் நண்பனாகி விடு...
அமைதியின் துறைமுகத்திடம்
தேவையானவள் நான்

காதல் கதைகளாலும்
வேதனைச் செய்திகளாலும்
சோர்வடைந்தவள் நான்...

பெண்ணை கொலுமண்டபத்தின்
சிலையெனக் கருதும் இந்தக் காலத்தினால்
சோர்வடைந்தவள் நான்...

எனவே என்னைச் சந்திக்கும் போது நீ பேசு...
என்னைச் சந்திக்கும் போது நீ பேசு...

கீழைத்தேய ஆண்
ஒரு பெண்ணைச் சந்திக்கும் போது
ஏன் பாதிப் பேச்சை மறந்து விடுகிறான்?

அல்வாத் துண்டையோ புறாக்குஞ்சுகளையோ தவிர
அவளிடம் வேறெதையும்
ஏன் பார்க்க மறுக்கிறான்?

அவளின் மரங்களில்
ஆப்பிளைப் பறித்து விட்டு
ஏன் தூங்கிப் போகிறான்?"
(...)
"என் கவிதையால்
கண்ணியத்தின் சுவற்றை
உடைத்து விட்டேன் என்று கூறுகிறார்கள்...
ஆண்கள் தான் கவிஞர்கள்

இந்தக் கூட்டத்தில் இனி எப்படி
கவிதாயினி தோன்றுவாள்?!...
சிரிக்கவும் செய்கிறேன்...
சிரிக்கவும் செய்கிறேன்

அர்த்தமற்ற இந்த அனைத்தையும்...
நட்சத்திரங்களின் போர்க்காலத்தில்
பெண்களை உயிரோடு புதைக்க
விரும்பிக் கொண்டிருப்போரை
கேலி செய்கிறேன்

என் சுயத்தைக் கேட்கிறேன்...
ஆண்களின் பாடல் ஹலால்
ஆவது எதற்காக

பெண்களின் குரல்
கீழ்த்தரமானதாகி விட்டதா?

ஆச்சரியமான இந்தச் சுவர்களை
ஏன் நிறுத்தி வைக்கிறார்கள்...
வயல்களுக்கும் மரத்திற்குமிடையில்...
மேகங்களுக்கும் மழைக்குமிடையில்

பெண்மானுக்கும் ஆணுக்குமிடையில்
இருப்பது தான் என்ன?"

மொழியாக்கம்: Musthafa Qasimil
"إنني بنت الكويت ... بنت هذا الشاطئ النائم فوق الرمل
كالظبي الجميل ... في عيوني تتلاقى أنجم الليل
وأشجار النخيل .. من هنا...
أبحر أجدادي جميعاً ... ثم عادوا يحملون المستحيل
إنني بنت الكويت ... هل من الممكن أن يصبح قلبي يابساً ..
مثل حصان من خشب ؟ ... بارداً... مثل حصان من خشب ؟
هل من الممكن إلغاء انتمائي للعرب ؟
إن جسمي نخلة تشرب من بحر العرب ... و على صفحة نفسي ارتسمت
كل أخطاء ، و أحزان ، و آمـال العرب."
(...)
"كن صديقي... كن صديقي ... فأنا محتاجةٌ جداً لميناء سلام
وأنا متعبةٌ... من قصص العشق وأخبار الغرام
وأنا متعبةٌ... من ذلك العصر الذي يعتبر المرأة تمثال رخام
فتكلم حين تلقاني... تكلم حين تلقاني...
لماذا الرجل الشرقي ينسى حين يلقى امرأة نصف الكلام؟
ولماذا لا يرى فيها سوى قطعة حلوى وزغاليل حمام؟
ولماذا يقطف التفاح من أشجارها ثم ينام؟"
(...)
"يقولون أني كسرت بشعري جدار الفضيلة ... وأن الرجال هم الشعراء
فكيف ستولد شاعرة في القبيلة؟! ... وأضحك... وأضحك
من كل هذا الهراء ... وأسخر ممن يريدون في عصر حرب الكواكب، وأد النساء!
وأسأل نفسي... لماذا يكون غناء الذكور حلالاً
ويصبح صوت النساء رذيلة؟
لماذا يقيمون هذا الجدار الخرافي ... بين الحقول وبين الشجر ... وبين الغيوم وبين المطر
وما بين أنثى الغزال وبين الذكر؟"

Thanks 
Kutti Revathi

No comments:

Post a Comment