Search This Blog

Sunday, July 23, 2017

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 Rahu Transit on 18th August, 2017

Rahu Transit In Cancer, Ketu Transit In Capricorn – Transit Dates

On 30th January, 2016, Rahu and Ketu entered the Signs of Leo and Aquarius respectively. They will be entering the Cancer-Capricorn axis on 18th August, 2017 and will stay there till 7th March, 2019. 


ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
பலன்கள்கணித்தவர்:
திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும்.

மேஷம்
குழப்பங்கள், தேவையற்ற பயம், விரக்தி மனதை ஆக்கிரமிக்கும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது போகும். எடுத்த பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதல் அலைச்சல் ஏற்படும். கனவு தொல்லைகளால் உறக்கம் பாதிக்கப்படும். குறிப்பாக மாணவர்கள் தேர்வு நேரத்தின்போது சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும். அதனை தவிர்க்காமல் ஏற்றுக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் இருக்கும். உடன்பிறந்தோர் நலனுக்காக தியாகங்கள் செய்ய நேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற போராட்டம் இருக்கும்.
அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் அவசியம். அசையா சொத்துகள் சேரும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கும். பாகப்பிரிவினை பிரச்னைகள் தீரும். அநாவசிய செலவுகள் கட்டுப்படும். தான தருமங்களுக்கு அதிகம் செலவழிப்பீர்கள். நற்பெயர், புகழ் கூடும். எதிர்பாராத பயணங்கள் உண்டு. மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்பதை தவிர்க்க உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் எச்சரிக்கை அவசியம். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ். சாஃப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பத்திரிகைத் துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.
தொழில் மற்றும் உத்யோகம்: வியாபாரிகள் கூடுதல் முதலீட்டை தவிர்த்து நிதானமாக செயல்படுவது நல்லது. சுயதொழில் செய்வோருக்கு வளர்ச்சிப் பாதை தெரியும். கூட்டுத்தொழில் செய்வோருக்கு கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. தொழிலதிபர்கள் புதிய பங்குதாரர்களை தவிர்க்க வேண்டியது கட்டாயம். மளிகை, கமிஷன் ஏஜென்சி, தரகு, உணவுப்பொருள் விற்பனை தொழில்கள் ஏற்றம் அடையும்.
பரிகாரம்: செவ்வாய், வெள்ளி தோறும் துர்கை சந்நதியில் விளக்கேற்றி வழிபடலாம். நேரம் கிடைக்கும்போது திருவேற்காடு சென்று கருமாரியம்மனை தரிசித்து வர நன்மை உண்டாகும்.
ரிஷபம்
தொழிலில் சங்கடம் இருந்தாலும் நற்பெயர் கிடைக்கும். அனுபவங்களால் முதிர்ச்சி ஏற்படும். விட்டு கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உருவாகும். எதிலும் அவசரத்தை தவிர்த்தால் வெற்றி நிச்சயம். கவனக்குறைவால் இழப்புகள் ஏற்படும். வாழ்க்கை தரம் உயரும். வீடு, வாகனம், மனை ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துகள் சேரும். செயல்களில் அலைச்சல் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொதுக்காரியங்களில் முன்னின்று செயல்படுவீர்கள். திடீர் பிரயாணத்தை தவிர்ப்பது நல்லது. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தாயார் உடல்நிலையில் கூடுதல் கவனம், அனுசரணை அவசியம். ஆன்மிக பணிகளில் நாட்டம் கூடும். உங்களை நாடி வருவோருக்கு உதவி செய்வீர்கள். பொது விஷயங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்த இயலாது போகும்.
திட்டமிட்ட பணிகளை கடைசி நேரத்தில் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் திட்டமிட்டிருந்த வேறு வேலைகள் பாதிக்கப்படும். இதயம், நுரையீரல், மார்பு சார்ந்த நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு உடல்நிலையில் கவனம் அவசியம். மூத்த சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர் சொத்துகளில் இருந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவை எட்டும். குடும்பத்தில் சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். மொத்த வியாபாரிகள் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இரவில் நிம்மதியான உறக்கம் கெடும். தம்பதிகளிடேயே ஒற்றுமை நிலவும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் கல்வியில் சிறக்கலாம். பொதுவாக கேந்திர ஸ்தானத்தில் அசுப கிரஹங்கள் நன்மை தரும். அதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை விளைவிக்கும் வகையில் சிறப்பாகவே அமைந்துள்ளது.
தொழில் மற்றும் உத்யோகம்: வங்கி, இன்ஷ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை சார்ந்த பணியாளர்கள் சங்கடங்களை எதிர்கொண்டாலும் வளர்ச்சி உண்டு. தொழில்நுட்பம், மெக்கானிகல் மற்றும் இதர அறிவியல் துறை பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளோடு கருத்து வேறுபாடும், சுயதொழில் செய்வோரில் பால், கூல்டிரிங்ஸ், மினரல் வாட்டர், தின்பண்டங்கள், பெட்டிக்கடை, சில்லறை வணிகமும் சிறக்கும்.
பரிகாரம்: வியாழன் தோறும் சரஸ்வதி படத்திற்கு பூஜை செய்து வரவும். நேரம் கிடைக்கும்போது கூத்தனூர் சென்று சரஸ்வதியை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள மனத்தெளிவு கிடைக்கும்.
மிதுனம்
மனதில் அசாத்திய தைரியம் உருவாகும். அதனால் பிடிவாதம் கூடும். முக்கியமான முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரமாக முடிவெடுத்துவிட்டு பின்பு சிரமத்தினை சந்திக்க நேரலாம். எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை உண்டு. அறிஞர்களுக்கு புதிய உத்வேகம் வரும். எழுத்தாளர்கள் வலிமை பெறுவர். மாணவர்களுக்கு எழுத்து வேகம் கூடும். ஞாபக மறதி தொந்தரவு அகலும். பங்காளிகளின் குடும்பப் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். அந்நிய பெண்களால் பிரச்னை வரும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். முக்கியமான பணிகளை நேரடியாக செய்வது நல்லது. எதிலும் அலைச்சல் கூடும். மனதை ஆக்கிரமிக்கும் தத்துவ சிந்தனைகள் ேபச்சிலும் வெளிப்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். குழந்தைப்பேறு எதிர்ப்பார்பவர்களின் கனவு பலிக்கும். உத்யோக ரீதியாக எதிர்பாராத இடமாற்றம் வரும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும்.
தந்தை உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. உணவில் கட்டுப்பாடு அவசியம். பூர்வீக சொத்துகளில் இழப்புகள் ஏற்படும். பொதுநல சேவைகள், தர்ம காரியங்கள், ஆன்மிகப் பணிகளில் முன்நின்று செயல்படுவீர்கள். அயல்நாட்டுப் பணிகளுக்காக காத்திருப்போருக்கு வாய்ப்புகள் தேடிவரும். சிலா் தொழில் காரணமாக குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்க நேரும். சுகமான வாழ்க்கை தரத்துக்கு குறைவிருக்காது. தாயார் வழி உறவினர்களோடு இருந்த பிரச்னைகள் தீரும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவர். குடியிருக்கும் வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். நவீன வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். தோல், காது, கழுத்து, தோள்பட்டை, மேல்மார்பு பகுதிகளில் பிரச்னைகள் தோன்றலாம் என்பதால் உடல்நிலையில் கவனம் அவசியம். எதிரிகள் பலம் இழப்பர். கடன் பிரச்னைகள் குறையும். மொத்தத்தில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்மையும், பிறருக்கு உதவி செய்யப்போய் சிரமத்தையும் அனுபவிக்க நேரும்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க உள்ளீர்கள். அரசுப் பணியாளர்கள், உத்யோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றத்திற்கு ஆளாவார்கள். சுயதொழில் செய்வோர், தொழிற்சாலை அதிபர்கள் ஆகியோர் தொழிலாளர்களுடன் நிதானமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம். நகை, ஜவுளி, வாசனாதி திரவியங்கள், ஃபேன்சி பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரம்: சனி தோறும் பாம்பின் மேல் பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாள் சந்நதிக்கு சென்று வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்தனை செய்ய பலம் பெறுவீர்கள்.
கடகம்
அறிவுத்திறன் உயரும். பல்வேறு வழிகளில் பொருள்வரவு உண்டு. இந்த நேரத்தினை சாதகமாகப் பயன்படுத்தி சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. அசையா சொத்துகள், தங்க வெள்ளி பொருட்களில் முதலீடு செய்யலாம். ஃபைனான்ஸ், சிட்பண்ட்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் தற்போது பயன் தராது. பேச்சில் கடுமை, தீயசொற்களை தவிர்க்கவும். உஷ்ணத்தால் சரும நோய்கள் தோன்றும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற போராட்டம் இருக்கும். வாக்குறுதிகளை தவிர்ப்பது அவசியம். சிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை உருவாகும். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள், குடும்ப சலசலப்புகள் விலகும். சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்னைகள் விலகும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். அவர்களால் கூடுதல் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பெயரில் அசையா சொத்து வாங்கலாம். குடும்பபெரியவர் ஒருவர் மூலம் குடும்ப பாரம்பரியம் குறித்து அறிந்து கொள்வீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மாணவர்களின் அறிவுத்திறன் கூடி கல்வியில் முன்னேற்றம் காண்பர். கூட்டுப்பயிற்சி வெற்றி தரும். அநாவசிய செலவுகள் கட்டுப்படும். ஆனால் ஆன்மிகம், தான தருமம், புண்ணிய காரியங்கள், அன்னதான செலவுகள் கூடும். முக்கியமாக பண விவகாரங்களில் ஏமாற்றத்தை தவிர்க்க கூடுதல் எச்சரிக்கை தேவை. மனதில் இருந்த விரக்தி, குழப்பம் அகலும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பித்த பாதிப்புகளால் உடல்நிலை பாதிக்கப்படலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அவரது உடல்நிலையில் கவனம் தேவை. சிலர் அலுவல் காரணமாக சிறிது காலம் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும். மொத்தத்தில் உங்களுக்கு சிறப்பான பொருள் வரவு தருவதோடு தான தர்ம விவகாரங்களில் வள்ளலாகவும் மாற்றும்.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம், பணிச்சுமை கூடும். தொழிலதிபர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் தொழில் முன்னேற்றம் இருக்கும். கலைஞர்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமென்ட், இரும்பு, பழைய சாமான்கள் வியாபாரம், ஸ்டேஷனரி, மளிகை சார்ந்த தொழில்கள் சிறப்பான முன்னேற்றம் காணும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரின் ஆலயத்தில் நெய் விளக்கேற்றி சந்நதியை எட்டு சுற்றுக்கள் வலம் வந்து நமஸ்கரிப்பது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது நாமக்கல் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து வரவும்.
சிம்மம்
வாழ்க்கை தரத்தில் பல மாறுதல்கள் உண்டாகும். எதிலும் அதிவேகமாக செயல்படுவீர்கள். ஆனால் கூடுதல் எச்சரிக்கை அவசியம். உறவினர்களால் கலகம், விரோதம் ஏற்படும். உங்கள் தரப்பு நியாயம் எடுபடாமல் போகும். நல்லது செய்யப்போனாலும் அவப்பெயர் வரும். அதனால் கடமையை தவிர மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது அவசியம். தர்ம சாஸ்திரங்களில் நம்பிக்கை தளரும். இதனால் பெரியோர்களுடன் விதண்டாவாதத்தில் ஈடுபடுவீர்கள். நினைத்தவற்றை எளிதாக அடைய மனதை கட்டுப்படுத்துவது அவசியம். சகோதரியால் உபத்திரவங்கள் ஏற்படும். முன்னோர் சொத்துகளில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தோன்றும். புதிய நபர்களை நம்புவது கூடாது. பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கை நல்லது. கவலைகளை மறந்து தைரியத்துடன் மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை தயங்காது செய்வது நல்லது. ஒரு சில விஷயங்களில் தோல்வி உண்டாகும் என்று தெரிந்தே தைரியத்துடன் இறங்குவீர்கள். எதிரிகள் காணாமல் போவார்கள்.
இருப்பினும் நல்லவர் தீயவர்களை அடையாளம் காண்பது அவசியம். மாணவர்கள் கவனச் சிதறலை தவிர்த்து கூடுதல் கவனம் செலுத்தி கல்வியில் முன்னேற்றம் காணலாம். வாழ்க்கைத்துணையின் கருத்துகளை கேட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அவரது உடல்நிலையில் கவனம் அவசியம். அவரது பெயரில் இருக்கும் சொத்துகள் உருமாறக்கூடும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். கூடுதல் அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் குறையும். சிலருக்கு தூரதேச பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துகளில் சிலவற்றை விற்று புதிய சொத்துகள் வாங்குவீர்கள். எந்தச் சூழலிலும் நிதானத்தோடு அனைவரையும் அனுசரித்து செல்வது அவசியம். மொத்தத்தில் வரும் ஒன்றரை வருட காலத்திற்கு நீங்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு இருக்கும். கடுமையான பணிச்சுமையும் இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்கள் தவறுக்கு பொறுப்பேற்க நேரும். மருத்துவம், ராணுவம், போக்குவரத்து துறைகளை சார்ந்தவர்கள் ஏற்றம் காண்பார்கள். ஷேர்மார்க்கெட், புரோக்கர் தொழில், கமிஷன், தரகு, ஏஜென்சீஸ் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். சிறுதொழில் செய்வோர் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம்: வருகின்ற ஒன்றரை வருட காலத்திற்கு பிரதி மாதம் வருகிற உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று அருகிலுள்ள பெருமாள் கோயிலில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும். நேரம் கிடைக்கும் போது திருப்பதி ஸ்ரீநிவாஸ பெருமாளை தரிசிக்க சஞ்சலம் நீங்கும்.
கன்னி
மன சஞ்சலம் இருந்தாலும் அச்சம் அகலும். தைரியத்தை இழக்காமல் செயல்படுவீர்கள். எதிலும் அலைச்சல் கூடும். அனுபவப் பாடம் கிட்டும். வேலைபளு கூடும். இன்னல்கள், இடம் விட்டு இடம் மாறுதல் இருக்கும். வீடு, வண்டி, போன்ற சொத்துகள் இருந்தாலும் அதனை சரியான நேரத்திற்கு அனுபவிக்க இயலாது போகும். அநாவசிய செலவுகள் அதிகரிக்கும். சம்பாத்யத்தை சேமிப்பது அவசியம். யோசிக்காமல் செய்யும் முதலீடுகளில் நஷ்டம் ஏற்படும். இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை நல்லது. முக்கிய தருணத்தில் பயத்தால் முன் வைத்த காலை பின்வைக்க நினைப்பீர்கள். இதனால் இழப்பு நேரும். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை ஆராய்ந்து செயல்படுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையான உழைப்பு தேவை. எழுத்து வேகம் கூடும்.
நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். அறிவியல் துறை ஆய்வாளர்களுக்கு ஓய்வு நேரம் குறையும். தொழிலில் பெருத்த முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது. அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல நேரும். ஒரு சிலருக்கு அயல்நாட்டு பயணம் உண்டு. எதிரிகள் காணாமல் போவர். படிப்படியாக கடன் பிரச்னைகள் குறையும். நீண்டநாள் வியாதிகள் குணமடையும். உடல் ஆரோக்யம் பெறும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம். கனவு தொல்லையால் உறக்கம் கெடும். சிலர் செய்யும் வேலையில் இருந்து வெளியேறி சுய தொழில் செய்யும் நிலை உருவாகும். எதிலும் மற்றவர்களை சார்ந்திருக்காது தனித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். மொத்தத்தில் ராகு சிரமத்தை தந்தாலும் கேது நற்பலன்களை தருவார். எது எப்படியாகினும் வரும் ஒன்றரை ஆண்டு காலம் சிறந்த அனுபவ அறிவு தருவதாக அமையும்.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு வரும். காவல்துறை, ராணுவம், தொழிற்சாலை, போக்குவரத்துத்துறை, மருத்துவம், நீதித்துறை பணியாளர்களுக்கு பணியில் கூடுதல் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடும்போது மிகுந்த கவனம் அவசியம். ஷேர் மார்க்கெட், புரோக்கர், கமிஷன் ஏஜென்சீஸ் தொழிலில்உள்ளவர்களுக்கு நிதானம் கட்டாயம்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சுதர்ஸனர் சந்நதியில் விளக்கேற்றி, 18 பிரதட்சணம் செய்யலாம். நேரம் கிடைக்கும்போது கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்துக்கு சென்று பெருமாளை சேவிக்க சிரமங்கள் குறையும்.

துலாம்
வாழ்க்கை தரம் முன்னேறும். மனதில் நற்சிந்தனைகள், நல்ல எண்ணங்கள் தோன்றும். சாஸ்திர, சம்பிரதாயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சிறந்த ஞானம் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடி வெற்றி நிச்சயமாகும். நினைத்தவற்றை செயல்படுத்துவதில் வேகம் கூடும். பல்வேறு வழிகளில் வரவு கூடும். சேமிப்புகள் உயரும். அசையா சொத்துக்கள் சேரும். பிரபல்ய யோகத்தினைப் பெறும் உங்களுக்கு ராகுவின் இணைவு கூடுதல் வலிமை சேர்க்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு மிகுந்த பிரபலம் அடைவீர்கள். நல்ல யோகம் உடைய ஜாதகர்களுக்கு உயர்பதவியில் உள்ளோருடன் தொடர்பு கிட்டும். கவுரவம் உயரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைகள் விலகி ஆதாயம் தரும். பாகப்பிரிவினை சாதகமான பலன் தரும். அயல்நாட்டுப் பிரயாண வாய்ப்பு உண்டு. முக்கிய பிரச்னைகள் பெண்களின் உதவியால் தீர்வடையும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.
நிலுவையில் இருந்த வழக்குகள் விரைவில் முடியும். கடன் சுமை காணாமல் போகும். பாக்கிகள் வசூலாகும். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். வீண் கற்பனை, பயத்தால் இழப்பு ஏற்படும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிப்பதோடு சமூக சேவையிலும் நாட்டம் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் கவனம் அவசியம். அவர்களது உடல்நிலையை கண்காணிப்பதோடு மன நிலையிலும் அதிக அக்கறை தேவை. உங்களது ஆலோசனைகளும், அரவணைப்பும் அவர்களுக்குத் தேவைப்படும் நேரம் இது. ஆன்மிகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். கேளிக்கை, கொண்டாட்டங்களில் நாட்டம் குறையும். மொத்தத்தில் கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் பெறுவதால் வரும் ஒன்றரை ஆண்டு காலத்தில் முன்நின்று செயல்படும் எல்லா விஷயங்களிலும் சிறப்பான வெற்றி காண்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்கள் முக்கியத்துவம் பெறுவர். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரித்து பன்மடங்காக பெருகும். சுய, சிறுதொழில்கள் சிறக்கும். விவசாயம், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் வெளிநாட்டு தொடர்பு வியாபாரிகள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள், சமையல் கலைஞர்கள், மருத்துவ, நீதித்துறையினர், ஆசிரியர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது.
பரிகாரம்: வெள்ளி தோறும் அருகிலுள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று விளக்கேற்றி வழிபடலாம். நேரம் கிடைக்கும்போது சமயபுரம் சென்று மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்து வணங்க வளம் காண்பீர்கள்.

விருச்சிகம்
குழப்பங்கள் அகலும். ஞானம் கூடும். எதிர்பாராத பிரச்னைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். நுணுக்கமான விஷயங்களை எளிதில் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உதவி செய்ய இயலாது போகும். சுற்றத்தார் மத்தியில் அவப்பெயர் ஏற்படும். பிரச்னைகளை களைய நல்லவர் தீயவர்களை அடையாளம் காண்பது அவசியம். வேலைபளுவால் களைப்பு இருக்கும். பெண்களுக்கு வயிற்றுவலி, ரத்தப்போக்கு பிரச்னைகள் தோன்றும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு உடல்நிலையில் தீவிர கவனம் அவசியம். மாணவர்கள் கல்வியில் தேக்க நிலை இருக்கும். செய்முறை தேர்வில் மதிப்பெண்கள் கிடைத்தாலும் எழுத்துத் தேர்வில் சுணக்கத்தை தவிர்க்க கூடுதல் பயிற்சி தேவை. அரும்பாடுபட்டு உழைத்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற முடியும். நண்பர்களால், பயணத்தால் ஆதாயம் உண்டு.
புதிய முயற்சிகள் வெற்றி தரும் என்றாலும் கூடுதல் கவனத்துடன் இறங்குவது அவசியம். வாழ்க்கைத்துணையின் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். உங்களது ஆலோசனைகள் அவரை திறம்பட வழிநடத்தும். வாழ்க்கைத்துணையின் பேரில் அசையா சொத்துக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். நண்பர்கள் வாழ்க்கை தரம் உயர உதவுவீர்கள். ஏதேனும் ஒரு வழியில் எடுத்த செயல்களில் காரியவெற்றி சாத்தியமாகும். இக்கட்டான சூழலில் விவேகமான செயல்பாடுகளால் பெருமை தரும். இதுநாள் வரை பொறுமையுடன் இருந்து வந்த நீங்கள் தற்காலத்தில் தொழில்முறையில் அதிக கவனம் செலுத்தி சிறப்பான நற்பலன்களைக் காண உள்ளீர்கள். மொத்தத்தில் இந்த ராகுகேதுப் பெயர்ச்சியினால் இதுவரை கண்டிராத புதிய வளர்ச்சிகளைக் காண்பதன் மூலம் வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேறிச் செல்வீர்கள்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலில் பணிச்சுமை அதிகரித்தாலும் தனப்ராப்தி உண்டு. நற்பலன்கள் ஏற்படும். போட்டியாளர் மத்தியில் திறம்பட செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஞானம் மேம்படும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். பணிகளை சிறப்பாக முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்பு உண்டு. தொழிலதிபர்களும், வியாபாரிகளும் யுக்தியை மாற்றி செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
பரிகாரம்: காலின் கீழ் நாகம் உள்ள முருகப்பெருமான் படத்திற்கு பூஜை செய்வது நல்லது. செவ்வாய் தோறும் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு சென்று வாருங்கள். நேரம் கிடைக்கும்போது மருதமலைக்குச் சென்று பாம்பாட்டி சித்தரால் பூஜிக்கப்படும் வேலவனை தரிசிக்கவும்.
தனுசு
எடுத்த செயல்களில் நற்பலன்கள் ஏற்படும். அலைச்சல் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். இந்த முதலீடு எதிர்கால சந்ததிக்கு உதவும். பாட்டன் வழி சொத்துகள் வந்து சேரும். தான, தருமங்களில் ஈடுபாடு கூடும். ஆசை அதிகரிக்கும். அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவது அவசியம். ஆர்ப்பாட்டமில்லாமல் சேமிப்பில் ஈடுபடுவது நன்மை தரும். ஆன்மிக நாட்டம் கொண்டிருக்கும் உங்கள் சந்தேகங்களைப் போக்க ஞானி ஒருவருடனான சந்திப்பு நிகழும். பெற்றோர் மற்றும் வாரிசுகள் உடல்நிலையில் கவனம் அவசியம். முன்னோர்களுக்கு செய்ய விடுபட்டிருந்த காரியத்தை முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். அலுவலக காரியமாக செல்லும் பிரயாணங்களில் ஆதாயம் காண்பீர்கள். வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கை நல்லது. குறுக்கு வழியில் முன்னேற நினைப்பதை தவிர்க்கவும். வாழ்க்கை தரம் உயரும்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அநாவசிய இழப்புகளை தடுக்கும். மனோ தைரியத்துடனும், திடமாக செயல்படுவீர்கள். கற்பனையை நடைமுறைப்படுத்துவீர்கள். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். வாகனப்பயணம் பயன் தரும். எதையும் ஆரவாரமின்றி செய்வது அவசியம். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். ஆனால் கூட இருந்தே குழி பறிப்பவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் மனவிருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மொத்தத்தில் ராகுவின் அருளால் பரம்பரைப் பெருமையை காப்பதோடு எதிர்கால சந்ததியினரின் நலம் காக்க சொத்து சேர்க்கையிலும் ஈடுபட உள்ளீர்கள்.
தொழில் மற்றும் உத்யோகம்: சுயதொழில் செய்வோருக்கு லாபம் உண்டு. தொழிலில் பல்வேறு இடைஞ்சல்களை தாண்டி முன்னேற வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அடிக்கடி தற்காலிக பணி இடமாற்றம் இருக்கும். ஒரு சிலர் பதவி உயர்விற்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் நாட்டம் கொள்வார்கள். வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்ய அலைய வேண்டியிருக்கும். மொத்தத்தில் கஷ்டப்பட வேண்டிய நிலை உண்டாகுமே தவிர, நஷ்டப்பட வேண்டியிருக்காது.
பரிகாரம்: பிரதி மாதம் ஸ்வாதி நக்ஷத்ர நாளன்று நரசிம்மரை வழிபட்டு வர மன சஞ்சலங்கள் அகலும். நேரம் கிடைக்கும் போது சோளிங்கர் சென்று யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் தரிசிக்க மனத் தெளிவு கிட்டும்.

மகரம்
சங்கடங்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம். வரவு தடைபடும். அநாவசிய செலவுகள் அதிகமாகும். பொருளாதார சிக்கல் இருக்கும். பேச்சில் எச்சரிக்கை, கவனம் கட்டாயம். குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்னை, கருத்து வேறுபாடு உருவாகும். நினைத்த காரியம் இழுபறி தரும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உங்கள் தவறுக்கு அடுத்தவர்களை குறை கூறுவீர்கள். ஞாபக மறதியால் அல்லல்பட நேரிடும். சந்தேகத்தால் பிரச்னைகள் உருவாகும். நேசிப்பவர்களும் உங்களை விட்டு விலகி செல்லும் சூழல் உண்டாகும். விருப்பமான உணவுகளை உட்கொள்ள இயலாது போகும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் முன்னேறும். அவர்கள் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மற்றும் வாரிசுகளின் பெயரில் சொத்து சேமிப்பில் ஈடுபட தடை ஏதும் இருக்காது. உங்கள் பெயரில் இருக்கும் கணக்கில் சேமிப்பு உயராமல் போனாலும், உங்களைச் சார்ந்தவர்களின் சொத்து மதிப்பு உயரும்.
மருத்துவ செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடல்நிலையில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. சிலருக்கு நெருப்புக்காயம் தோன்றும் வாய்ப்பு உண்டு. பெண்கள் சமையல் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் கல்வியில் முன்னேற கடின உழைப்பு தேவை. அறிவாளிகளாக இருந்தாலும் கூட ஞாபகமறதிக்கு ஆளாவீர்கள். மனம் அலைபாய்வது, வீண் குழப்பம் உண்டாகும். மருத்துவ உயர்கல்வி மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், விலையுயர்ந்த பொருட்களை வங்கி லாக்கர்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது கட்டாயம். அநாவசிய பிரச்னைகளை தவிர்க்க வீண் வாக்குவாதத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ராகு, கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சுமாரான பலன்களையே தரும் என்பதால் பெயர்ச்சி நாளன்று (08.01.2016) ஆலயத்திற்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழில்அதிபர்கள், சுயதொழில் செய்வோர் சோதனைகள், தடைகளை தாண்டி எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயலில் இறங்குவது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு பொறுமை கட்டாயம். கெமிக்கல்ஸ் துறையில் பணி புரிபவர்கள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
பரிகாரம்: ஞாயிறு தோறும் ராகு காலத்தில் அருகிலுள்ள அம்பிகை ஆலயத்தில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரத்திரத்தை பாராயணம் செய்து வரவும். நேரம் கிடைக்கும்போது சென்னை பூக்கடை பகுதியில் உள்ள காளிகாம்பாள் ஆலயத்தில் அர்ச்சனை செய்து அம்பிகையிடம் பிரார்த்தனை செய்யவும்.
கும்பம்
எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தோன்றும் தடைகள் உங்கள் முயற்சிகளின் வேகத்தை குறைக்கும். சிறுசிறு பிரச்னைகளுக்குக் கூட துவண்டு போகும் வாய்ப்பு உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அதிக ஈடுபாடின்மை தோன்றும். சஞ்சலங்களைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண முயல்வது அவசியம். எதிலும் விட்டு கொடுத்து செல்வீர்கள். குடும்பத்தில் குழப்பத்தால் பிரச்னைகள் வரும். தான, தருமங்களில் ஈடுபாடு அதிகரித்து கையிருப்பு கரையும். பொருளாதார நிலை உயர கூடுதல் முயற்சி அவசியம். அதே நேரத்தில் வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்களை பாதுகாக்கும். குடும்ப விஷயங்களிலும், பண விவகாரங்களிலும் அவரது கருத்துக்களோடு ஒத்துப்போவது நல்லது. தொழில் முறையில் தூரதேச பிரயாணம் செல்லும் வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் சேர்க்கை உருவாகும். பெண்களால் ஏற்படும் அவமானத்தை தவிர்க்க முன்பின் தெரியாத பெண்களிடம் எச்சரிக்கை அவசியம். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.
வீட்டில் விருந்தினர்கள் வருகை இருக்கும். அவர்களால் குடும்பத்தில் கலகலப்பு கூடும். புதிய நட்பு, பழைய நட்பில் விரிசலை தோற்றுவிக்கும். புதிய நண்பர்களிடம் கூடுதல் எச்சரிக்கை தேவை. ஏற்கெனவே உடல்நிலை பலவீனமாக உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் தீவிரமாக உடல்நிலையை கவனித்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியமாக உள்ளவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. முன்னோர்களின் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும். குடும்பப் பெரியவர்களுடனான கருத்து வேறுபாடு நீங்கும். இந்த ராகு, கேது பெயர்ச்சியில் கேதுவால் சிரமத்தையும், ராகுவால் அனுகூலத்தையும் காண உள்ளீர்கள். நன்மையோ, தீமையோ, எதுவாக இருந்தாலும் ராகு சற்று கூடுதலாக தர வல்லவர். கேது உள்ளதைக் கெடுப்பவர். ராகுவின் துணையிருப்பதால் சமயோஜிதமாகச் செயல்பட்டு வெற்றி காணுவீர்கள்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருந்தாலும் பெரிய முதலீடு நஷ்டத்தை ஏற்படுத்தும். கூட்டுத்தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், இரும்பு, மருந்து வியாபாரம், செயற்கை உர தயாரிப்பாளர்கள் முன்னேற்றம் காண்பர். உத்யோகஸ்தர்கள் கவனத்தை சிதற விடாமல் இருப்பதும், உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வதும் அவசியம். தொழிற்சாலைகள், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையில் பணியாற்றுவோருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பதவி உயர்வு கிட்டும்.
பரிகாரம்: தினமும் காலையில் விநாயகப் பெருமானை மானசீகமாக வணங்கி வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள வளம் உண்டாகும்.
மீனம்
அமைதியான சூழலை விரும்பும் உங்களது சஞ்சலங்கள், குழப்பங்கள் நீங்கும். மதிப்பு, மரியாதை உயரும். புகழ் கூடி நற்பலன்கள் ஏற்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு, திருமணத்தடை அகலும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். சுபசெலவினை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதார நிலையும் முன்னேற்றம் காணும். வளர்ச்சிப் பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். அநாவசிய செலவுகள் முற்றிலும் குறையும். சேமிப்பு உயரும். சத்ரு ஜெயம், கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுதல், ரோக நிவாரணம் போன்ற நற்பலன்கள் கிட்டும். நெடுநாள் ரோகத்திலிருந்து விடுபடும் அதே நேரத்தில் கொழுப்புத் தொந்தரவு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வீண் வம்பு விவகாரங்களை தவிர்க்க சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் மிகுந்த கவனம் தேவை. இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்திகூர்மை வெளிப்படும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வீர்கள். பேச்சில் இனிமை, நகைச்சுவை கலந்திருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வாகனத்தை புதிதாக மாற்றுவீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும். பெற்றோர் மற்றும் வாரிசுகளின் உடல்நிலையில் சற்று கூடுதல் கவனம் நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல், மன நிலையில் அதிக அக்கறை அவசியம். தம்பதியருக்குள் விட்டு கொடுத்துச் செல்வது அவசியம். வாழ்க்கைத்துணையின் உறவினர்கள் உங்கள் உதவி நாடி வரக்கூடும். மாணவர்களின் கல்விநிலை உயர்வடையும். ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வில் வெற்றி காண்பார்கள். பொதுவாக மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு, கேது பெயர்ச்சி கெடுபலன்களை விட நற்பலன்களையே அதிகமாகத் தரும் என்பதில் ஐயமில்லை.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழில் ரீதியாக ஓய்வில்லாமல் செயல்பட வேண்டியிருக்கும். செய்தொழிலில் லாபம் கிடைக்கம். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். கலைத்துறையினர் போட்டியான சூழலை சந்திக்க நேரும். ஆசிரியர்கள், வேத விற்பன்னர்கள், வழக்கறிஞர்களுக்கு வாக்குவன்மையால் நற்பெயர் கிட்டும். வெளிநாட்டு உத்யோகத்திற்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: அவ்வப்போது அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை சென்று நாகாபரணத்துடன் கூடிய அருணாச்சலேஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள நன்மை உண்டாகும்.

மறுபதிவு
மகிழம்பாடி பாலவசந்த்

Rahu-Ketu Transit 2017 – Major Breakthroughs To Take Place?

After planet Saturn, Rahu and Ketu take the longest time to complete their transit in one Sign. Thus, both these shadowy malefic planets have an extremely significant impact on our life trends. Both these planets are the representatives of our Karma and deliver results exactly as per our deeds; while Rahu signifies our future, Ketu denotes our past. When planets as important as these change Signs, major transformations take place in the world as well as in various areas of our life. 

Unpredictable, sudden and unexpected – these are some of the ways in which both Rahu and Ketu function. When both these planets are operating, change will take place when you least expect it. Opportunities will come, when you are least prepared for them. All this enables us to go ahead and act on the basis of our instincts and to act immediately. 

Rahu and Ketu – The Evergreen Villains Or Cosmic Agents Of Change? 

Rahu and Ketu are mostly considered as ruthless planets, which are out there to wreak havoc in our lives and to increase our problems. But, we should understand that both these planets are the chosen ones, the divine forces which have been assigned the role of delivering results exactly in accordance to one's karma and attitude. They do not do anything without a valid reason and logic. 

If both these planets are making your face troubles and complications, then it is because you may have committed some sinful or wrong deeds in the past birth/s. It is said that “Change is the only constant.” But, who ensures that change takes place? Who ensures that we are able to experience new and better things? Who ensures that we get rid of the old and monotonous? Think about it. It is Rahu and Ketu. Yes. While Rahu takes us towards the new and modern things, Ketu on the other hand ensures that there is a fine balance and brings and end to the things that are no longer needed in our lives. 

No comments:

Post a Comment