Search This Blog

Thursday, May 18, 2017

நினைவுகள் புதைக்கப்படாமலே நீறுபூத்துக் கிடக்கிறது!

ஈரம் அறியாத ஈனர்களுக்கு
இன்னமும் குடைபிடித்துக்கொண்டு
எப்படி உங்களால் எங்கள் சிதைந்த உடல் வடித்த ஊனத்தின் மேல் நின்று
மௌனிக்கமுடிகிறது?
...
இரத்தம் காய்ந்த வடலிகள்
இன்று இளம்பனைகளாய்
காலம் அவற்றின் கறைகளைக் கழுவியபோதும்
காதுகளில் இன்னமும் ஓலங்கள் கேட்டபடியே!

புதைந்துபோன சிதைவுகளோடு
நினைவுகள் புதைக்கப்படாமலே
நீறுபூத்துக் கிடக்கிறது!


எங்கள் வலிகளைத்தோண்டி தோண்டி
உங்கள் வாய்ப்புகளை தக்கவைத்ததுபோதும்

கிழக்கில் விழுந்த சூரியனின் உதயத்துக்காய்
ஆவிகளாய் நாம் அலைந்துகொண்டிருக்கிறோம்
மேற்கு நோக்கி உங்கள் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டிருங்கள்
பல்லிழித்தபடிக்கு!

Sivabalasundran Ambalavanar

No comments:

Post a Comment