Search This Blog

Saturday, May 27, 2017

ஆண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கூறுவதை தெரிந்துக் கொள்வோம்.



தலை
ஆண்களின் தலையானது உயர்ந்தோ அல்லது பருத்தோ இருந்தால், அதிக செல்வம் இருக்குமாம்.
தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் அது தரித்திரமாம். தலையின் பின்பகுதி புடைத்திருப்பின், அவர்கள் அறிவாளியாக இருப்பார்களாம்.
நெற்றி
உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷ்டம் உண்டாகும்.
நெற்றியில் ரேகை இல்லாமல் இருந்தால், அவர்களின் ஆயுள் குறையும். நெற்றியில் அதிக வியர்வை ஏற்பட்டால், அது அதிர்ஷடமாம்.
கண்கள்
ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால், அவர்கள் உலகை ஆள்வார்கள். கோழி போன்று முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின், அது அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.
மூக்கு
உயரமாக நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின், அது தரித்திரமாம்.
வாய்
அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர்.
அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காண்பவர்களாக இருப்பார்கள்.
உதடு
உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷ்டம் நிலைத்திருக்கும். கழுத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்குமாம். தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு.
தோள்கள் தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் முடி அதிகம் இருந்தால் நினைத்த காரியம் நடக்காது.
நாக்கு
நீளமான நாக்கு இருப்பின் அவர்கள் சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின், அவர்கள் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷ்டமாம்.
காது
காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின், அது அதிர்ஷ்டமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் அது துரதிர்ஷ்டமாம்.
கைகள்
நீளமான, சீரான பருமன் உடைய கைகளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்பக் கூடாது.
கைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பின், அவர்கள் பாவிகளாக இருப்பார்களாம்.
கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின், அவர்கள் செல்வந்தன் ஆவான். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு.
மார்பு
ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் எடுப்பாகவும் இருப்பின், அவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள். அதுவே ஆணின் மார்பகங்களில் அதிக முடி இருப்பின், அவர்களுக்கு பாலுணர்வு அதிகமாக இருக்குமாம்.
கால்கள்
கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவார்கள். கால்கள் குட்டையாக இருப்பின், அது தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால், நன்மைகள் பெருகும்.
கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின், அவர்கள் அதிக புகழுடன் வாழ்வார்கள். ஆனால் பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகி இருந்தாலும், அதிக வறுமை வாட்டுமாம்.

சாமுத்திரிகா லட்சணம் படி ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று கூறுகிறது. 

No comments:

Post a Comment