Search This Blog

Sunday, May 7, 2017

வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கான முக்கிய காரணி எமது தமிழ் அரசியல்வாதிகள்

வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கான முக்கிய காரணி எமது தமிழ் அரசியல்வாதிகள் என்பதுதான் கவலைக்குரிய விடயமாக உள்ளது. இதில் எனது 5 திட்டங்களும்
1. வடமாகாணத்துக்கான குடிநீர்
2. யாழ் வைத்தியசாலைக்கான பிரத்தியேக சத்திர சிகிச்சைப்பிரிவு
3. முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை
4. கிளிநொச்சி வைத்தியசாலை மகப்பேற்றுப்பிரிவு
5. கிழக்குமாகாண ஜேர்மன் தொழில்நுட்பக்கல்லூரி
அடங்கும். இதுதான் இன்றய யதார்த்தநிலை.
யாராவது எனது கூற்றை மறுப்பவராயின் உங்கள் அரசியல் தலைமைகளை கூட்டிவாருங்கள். பொதுத்தளமொன்றில் பகிரங்கமாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஆதாரங்களோடு!

என்னுடன் முன்னய ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினரும் Rockerfeller குழுமத்தின் மூத்த ஆலோசகரும் இலங்கை நிதி மந்திரியை உத்தியோகபூர்வமாக சந்தித்தபொழுதில் எடுத்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு!!!!





Puloliyuran Yogeesen

1.. நிரந்தரமான அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும்.// தற்போதைய தமிழ் தலைமையின் கீழ் அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்காது
2. அதுவும் நீதி, நிதி, நிலம் போன்ற அதிகாரம் கிடைக்காமல் எதுவுமே செய்ய முடியாது.// இதில் எந்தவொரு அதிகாரமும் தற்போதைய தமிழ் தலைமையின் கீழ் கிடைக்காது
3. உலக நாடுகளின் உதவியோடு ஒரு தீர்வு அமைய எமது தமிழ்தலைவர்களும் மக்களும் உழைத்து வருகிறார்கள்.. /// அந்த உலகநாட்டை ஆட்டிவைக்கும் உரியவர்களுடன்தான் நானும் உள்ளேன். அங்கு எந்த எமது தமிழ்தலைவர்களுமோ மக்களுமோ இல்லை. இருந்தால் அடையாளம் காட்டுங்கள். அத்தோடு என்ன தீர்வு இவர்களிடம் எனச்சொன்னால் நன்று.
4. தமிழ்தலைவர்கள் என்பது மக்களால் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்.// ஓ.... அப்படியா!! மக்களுக்காக வாழப்பிறந்த ஜனநாயக பொதுநலவாதிகள். அப்ப அவர்கள் திருடுவது, அபகரிப்பது, கொலை, சுருட்டுவதெல்லாம் மக்களுக்காக!! சரி சரி. !!
5. 2015 பிறகு தான் தீர்வுக்கான ஆக்கபூர்வமான கருமங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமது தலைவர்கள்.// 2009ல் முடிந்த போர். என்ன தீர்வு முன்வைக்கிறார்கள்? என்ன ஆக்கபூர்வமான கருமங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்?? நீங்கள் அல்லது நீங்கள் குறிப்பிடும் தலைவர்கள் பட்டியலிடட்டும்.
6. எனவே நல்லது நடக்கும் என்று நம்புவோமாக.//// எதுவரை?? கடந்தவாரம்தானே சம் சும் மாவை ஏதோ சூடு சூடாக சீனவெடி விட்டார்களே. அப்ப அது சனத்துக்கு விட்ட சுடுகாத்தா?
7. வெளியில் இருந்து எதையும் பேசலாம். நடைமுறை சிக்கலை கொஞ்சம் உள்ளவாங்க வேண்டிய தேவையுள்ளது. /// இதுவரையில் ஒண்டுமே செய்யாதவர்களின் நொண்டிச்சாட்டு இது. அன்று தொடங்கி இன்றுவரை சிக்கல்இருக்கிறது. இப்ப என்ன புதிய சிக்கல்.
8. இனி வழமையான உங்கள் பாணியில் பொங்குங்கோ.!!!/// பாணி, பொங்குங்கோ எல்லாம் சொம்புகளின் வழி. எனதல்ல
Puloliyuran Yogeesen

No comments:

Post a Comment