Search This Blog

Saturday, April 8, 2017

மாற்றம்

எனது தோலும், சதையும்
சுகத்தில் தோய்ந்தவை அல்ல

எனது ரத்தமும் துடிப்பும்
சமுத்திரத்தை விட ஆழம் குன்றியதும் அல்ல

நம்பிக்கை தரக்கூடிய சொற்களை எழுதினாலும்
எனக்கு அதனால் ஒரு பயனும் இல்லை

உறங்கும்போது வானத்தில் கலையும்
நிறங்களை நான் அறியேன்
எனது நேசத்திற்கு உகந்தவர்களையும்
இவ்வாறு இருக்கும்படி சொல்லுகிறேன்

காலம் கசப்பான தீர்ப்புகளையே எதன் மீதும் எழுதுகிறது
காற்றில் துவங்கி காற்றால் முடிவடைகிற
வாழ்விற்கு இடையில் எல்லாம்
காற்றைப் போலவே அலைகழிகிறது

பூமியின் அடி முதல் வானத்தின் கோள்கள் வரை யாவும்
வரையறுக்கத்தக்கதும், வரையமுடிந்ததுமாய் இருக்கிறது
வாழ்வு தவிர

பேசிக்கொண்டிருக்கும்போதும்
மௌனமாய் இருக்கிறேன் என அறிந்தவர் யாருமில்லை

மாற்றம் வருமெனக் காத்திருப்பதும்
மாற்றத்தை உண்டு பண்ணிக்கொள்வதும்
வீண் என நினைக்கிறேன்

- Composed By Thenmozhi Das
25.08.2008

No comments:

Post a Comment