Search This Blog

Tuesday, January 17, 2017

Henry & June Movie (Anais Nin’s Diary)

Henry & June is a 1990 American biographical drama film directed by Philip Kaufman, and stars Fred Ward, Maria de Medeiros and Uma Thurman. It is loosely based on Anaïs Nin's French book of the same name, and tells the story of Nin's relationship with Henry Miller and his wife, June.
The film was nominated for Best Cinematography at the 63rd Academy Awards. It is one of three Oscar-nominated films to be released with an NC-17 rating, the other films are Wild at Heart (1990) and Requiem for a Dream (2000).
Paris, France in 1931. Anaïs Nin is in a stable relationship with her husband Hugo, but longs for more out of life. When Nin first meets Henry Miller, he is working on his first novel. Nin is drawn to Miller and his wife June, as well as their bohemian lifestyle. Nin becomes involved in the couple's tormented relationship, having an affair with Miller and also pursuing June. Ultimately, Nin helps Miller to publish his novel, Tropic of Cancer, but catalyzes the Millers' separation, while she returns to Hugo.

இந்தக் கவிதை, பிலிப் காஃப்மனின் “ஹென்றி அன்ட் ஜூன் ” (Henry and June ) என்னும் திரைப்படத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டில் பிரபலமான இலக்கிய ஆளுமைகள் இருவரின் இளம் பிராயத்து வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் இது. இளம் பெண் படைப்பாளியுமான அனைஸ் நின் 1931இல் பாரிஸில் அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி மில்லரைச் சந்தித்தப் பின், சுய தேடலுக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், தனது அனுபவங்கள் அனைத்தையும் டயரிகளில் எழுதுகிறார்! அனைஸின் டயரிகளில் மறைக்கப்பட்ட பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது “ஹென்றி அன்ட் ஜூ” படம்.
தனது டயரிகளின் மூலம் பிரபலமான அனைஸ், பல நாவல்களையும், சர்ரியலிஸப் பாணியிலான ஒரு வசன கவிதையையும் எழுதியுள்ளார்.
-------------
நிர்வாண உடலில் பூசப்பட்ட
ஓவியங்களுக்கு உள்ளேயும்
சுயநிறமிழக்காத முலைகளைப்
பார்த்துக்கொண்டே வருகிறாள் அனைஸ்
எனக்குத் தெரியும்
கனிந்த ராஸ்பெர்ரி பழங்களை விடவும்
இனிமை மிக்கதொரு
அழகியின் முலைகளை ருசித்தவள் இவளென

இரகசியங்கள் ஏதும் மறைக்கப்படாத
நாட்குறிப்பேட்டின் பக்கத்தில்
அவளைப் பற்றி அனைஸ்
இப்படி எழுதி வைத்திருக்கிறாள்

“எனக்குள் தீராத ஒரு கொடுங்கனவு இருந்தது
அப்போதுதான் June
திடீரென இந்நகரத்திற்குத் திரும்பியிருந்தாள்
நாங்கள் தாழிடப்பட்ட ஒரு அறையில் தனித்திருந்தோம்
அப்போது
ஆடைகளை ஒவ்வொன்றாகக் களையத் துவங்கினேன்
அவளது ஆடைகளைக் களையச் சொல்லிக் கெஞ்சினேன்
அவள் இரு கால்களுக்கிடையே
அணைக்கயியலாது கனலும் நெருப்பினைக்
காணவேண்டுமெனச் சொன்னேன்”

கையில் சிரெட்டுடன் படுத்திருந்தாள் ஜூன்
எல்லாப் பருவகாலத்துக் குளிரும் திரண்ட கோளமென கண்கள் அவ்வறையில் நடப்பட்டிருக்க
ஒரு ஆணின் முதுகென
சிகரெட்டில் கனல் இறங்கியபின்
வெளிப்பட்ட புகையின் சுருள் வளையங்களுக்குள்
அனைஸின் முலைகள் பூக்களெனச் சிக்கின
June தன்னிரு குடைக்காளான்களால்
அப்பூக்களை நசுங்கச் செய்தாள்

இதைப்பற்றித் தன் நாட்குறிப்பேட்டில்
“June என்மேல் அசைகையில்
என் உடல் முழுவதையும்
ஆண்குறி தழுவுவதுபோல் உணர்ந்தேன்”
என எழுதினாள் அனைஸ்

புணர்தலுக்குப்பின் பிரிக்கயியலாப் பட்டாம்பூச்சிகளென
இரு ஜோடி உதடுகள் கூடிக் கிடந்ததை
மறக்கவே முடியவில்லை என்னால்

இப்போது ட்ரம்பெட்டின் இசையைக் கேட்கிறேன்
சிறு தொலைவில்
ஹென்றி பெருங்கனவுடன் வருகிறான்
இசையை விடவும் இசைக்கின்ற கலைஞர்கள் அற்புதமென
உடலொரு திசையில் நடக்க
உதிர்ந்த நாவல் பழங்களென அனைஸின் கண்கள் அந்நகரத்துச் சாலையைக்
குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கடக்கின்றன

ஆடையணியவிரும்பாத வெளிச்சமென சிலர்
நிர்வாணமாய் அலையும்
உணவு விடுதிக்குள்ளே
நிரம்பிய மதுக்கிண்ணமென அவள் நுழைகையில்
ரிச்சர்டு இவ்வாறு கூறத் துவங்கினான்

“அவன் என்னிடமிருந்தும் hugoவிடமிருந்தும்
உன்னைத் திருடிக்கொண்டான்
எனது முக்கியமான சில சிந்தனைகளை எடுத்து தனது நாவலில் பதிவு செய்துவிட்டான்
என்னை உன் காதலன் என்றும்
உன் கணவனுக்கு மிகச்சிறந்த நண்பனென்றும் நினைத்துக்கொண்டிருந்தேன்
anais
அவன் கடுமையாகச் சித்ரவதை செய்யக்கூடியவன்
புரூக்லைனிலிருந்து வந்த காட்டுமிராண்டி
என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறான்
வெளியே நண்பனாக நடித்துக்கொண்டு
ஆத்மார்த்தமான நண்பர்களைக்கூட
தன் படைப்புக்கான
கச்சாப் பொருளாகப் பயன்படுத்துகிறான்
இன்னும் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்
எனது வீட்டுக்குள்
இனி புணர்ச்சியில் ஈடுபடக் கூடாது”

ரிச்சர்டு அவ்விடம் விட்டுப் போன பின்
அனைஸின் விருப்பம்
ஹென்றியை விடுதியின் அறைக்குள் அழைக்கிறது

இருண்ட நினைவுகளை வெட்டியெறியப்பட்ட
படச்சுருளெனக் காயும் கம்பளிக்குள்ளே
வெண்ணிற களிமண் தோட்டமெனச்
சரிந்து கிடக்கும் அவள் தேகத்தில்
பறிக்கச் சொல்லி நீட்டிய
ரோஜா மொட்டுக்களை அவன் சுவைக்கிறான்
பின் இருள்விலகாத் தீவின் ஒருவழிப் பாதையில்
அவன் நீரூற்று பாய்ந்து அடங்குகிறது

அக்கணம் ஓயாத trumpetன் ஓசையை அவ்வறையின்
குளிரூட்டப்பட்ட ஜன்னல் மழைத்துளிபோல் நீட்ட
கதகதப்பான நிர்வாணத்துடன் ஓடிச்சென்று
கதவு திறக்கிறாள்.

எண்ணற்ற இசைக் கருவிகளின் ஆரவாரத்துடன்
அடங்காத காட்டினின்று புறப்பட்ட வெட்டுக்கிளிகளென
அந்நகர வீதியை
நிர்வாணத்தால் வீழ்த்தியிருந்தார்கள்

திராட்சைப் பழத்தின் மேல்தோல் கிழித்துப் போர்த்தி
அனைஸ் அவ்வழியே நடக்கத் துவங்குகிறாள்

கழுகின் முகமேந்திய நீல உடலொன்று
அவளைப் பின்தொடர்கிறது

புத்தாடை அணிந்த சிறுமியின் கர்வத்துடன்
ஓவியங்களை உடுத்திய மனிதர்கள்
ஏதேன் தோட்டத்து ஆதிக் குகையைத்
தன் நடனத்தில் வரைந்து காட்டி அலைகையில்

முலைகளையே உன்னதமான ஆடையெனக் கருதும்
ஒரு பெண்ணைக் கடக்கிறாள் anais

அப்போதும் நீலவுடல் அவளைப் பின்தொடர்கிறது
தண்ணீரின்மேல் மரக்கட்டைகளை அடுக்கி
இசைக்கும் ஒருவனை
அயராமல் அவள் பார்த்துக்கொண்டிருக்கையில்
தொடர்ந்து வந்த கழுகு முகத்தின் உடல் அவளை
ஒரு நொடியில் வீழ்த்திப் புணர்கிறது

அவள் இனிமையின் விளிம்பில் கண்களைத் தாழ்த்தும்போது
I love you pussy willo என்கிறது அக்கழுகு
முகத்திலறைந்த அவ்வார்த்தையில்தான்
தன்னைப் புணர்வது கணவனென உணர்கிறாள் அனைஸ்

அன்றிரவு அவள் எழுதிய நாட்குறிப்பேட்டில்
“ஹென்றிக்கு எதிரான உணர்வுகளுடன்
முழுமையாகக் கணவனுக்கு என்னைக் கொடுத்தேன்
அந்த அனுபவம் உடல்ரீதியான பேரின்பம்
ஹென்றிக்கு நான் இழைத்த முதல் துரோகம்
இருப்புக் கொள்ளாமல் இருக்குமளவுக்கு
நான் மாறியிருக்கிறேன்
ஏற்பட்டிருக்கும் உற்சாகத்திலும் சாகச உணர்விலும்
இனி முற்றிலும் உண்மையானவளாக இருக்க வேண்டும்
அதே சமயத்தில்
ரகசியமாக வேறொரு மனிதனைச் சந்திக்கவும் விரும்புகிறேன்
பாலுணர்வைத் தூண்டக்கூடிய
அநேகக் கற்பனைச் சித்திரங்கள்
என்னிடம் இருக்கின்றன
எனக்கு அவ்வின்பம் தேவையாகவும்
இருக்கிறது.”

Poetryplay written by - Thenmozhi Das in Tamil
Screenplay Written by - Philip Kaufman in English
Annis written Dairy - in French

■ Thenmozhi Das 1st Experimental Poetry
Written on ..... 01.08.2005
----------------
 


2005 ல் இணை இயக்குநராக பணியாற்றிய காலம் மனதில் திரைக்கதையை விடவும் இனிமை மிக்க கவிதையை / திரைக்கதையை விட காட்சிபூர்வமாய் ஏன் இயற்றக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் வந்தது . எத்தகைய உலகத்தரமான சினிமாவையும் ஒரு கவிதை எளிமையாய் கைக்கொள்ளவும் கடக்கவும் மீறவும் முடியுமா எனப் பரிசோதிக்கத் தோன்றியது .... எனது வாழ்வு இயக்குநராவது அல்ல . கவிதையே எனது வாழ்வு. இதில் நான் என்ன வித்தியாசம் செய்ய இயலும் என நினைத்தேன்.
இக் கவிதை எழுதி முடித்த போது
எத்தகைய கலையையும் விட
"கவிதையே ஆகச் சிறந்த கலை" என -மனம்
உறுதி கொண்டது .
காரணம் கவிதைக்குள் திரைக்கதையை தகர்க்க முடிவது மட்டுமல்ல. .. இசையையும் எழுப்ப முடிகிறது.
ஒரு கவிதை ஒரு திரைக்கதையை விட
எவ்விதத்திலும் குறைந்ததல்ல .

- தேன்மொழி தாஸ்
Cinema - cut to - Poetry

No comments:

Post a Comment