Search This Blog

Thursday, November 17, 2016

Birds with large wings malayalam movie "வலிய சிறகுள்ள பட்சிகள் "




Valiya Chirakula Pakshikal 
(English: Birds with Large Wings) is a 2015 Indian Malayalam film written and directed by Dr. Biju and produced by Dr. A.K. Pillai. It is based on an incident in a small village in Kasaragod in the state of Kerala were thousands of people were infected with fatal diseases due to the effects of endosulfan, a pesticide used to protect cashewnut trees.
The film was shot in Kerala and Canada, and was released in India in December 2015.

Plot

The film is a partly fictional representation of the environmental disaster caused by the use of the pesticide endosulfan in the Kasaragod District of Kerala, India. This disaster was caused by nearly two and a half decades of endosulfan use on government-owned cashew plantations.The film explores the disastrous environmental and public health consequences of the use of the pesticide and the health-related effects that persist to this day.
The film depicts the after-effects of pesticide spraying through the eyes of a photographer. His first visit to the area was during a rainy season in 2001, and his photographs revealed the shocking state of the numerous victims to the world. Endosulfan-induced misery gained worldwide attention as a result of these photographs. When the photographer visited the area again in the summer of 2006, many of the young victims he had photographed during his earlier visit, had died. Even now, children are being affected with strange and debilitating diseases. In 2011, the Stockholm Summit of UN on Persistent Organic Pollutants (POP) recommended a total ban on endosulfan. India was the only country that opposed this decision. A year later, in 2012, the photographer returned to Kasaragod and found that the plight of these victims persisted, and that the survivors continued to suffer.

 கேரளத்தின் குறிப்பிடத்தக்க மாற்று சினிமா இயக்குனர்களில் ஒருவர் டாகடர் பிஜு . இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர் , சமூக ஆர்வலர் , தன் சினிமா சமூகத்திற்கான ஒரு பதிவாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல் படுபவர் . இவரின் படம் "வலிய சிறகுள்ள பட்சிகள் " 2015 ல் வெளிவந்த படத்தை இன்றுதான் பார்த்தேன் . அதிர்ந்து போனேன் . 2002ல் - 2003 ல் நான் எப்படியாவது ஆவணப் படமாக எடுத்து விட வேண்டும் என்று போராடிய விஷயம்தான் இத்திரைப்படத்தின் கதைக்களம் .இதன் பின்னணியில் இருக்கும் அரசியலை இங்கு நான் எழுதவில்லை . ஆனால் அதை மிக தைரியமாக தன் திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குநர்
2002 ம் ஆண்டு ,நான் ஆவணப் படங்கள் எடுப்பதில் மிகவும் தீவிரமாக செயல்பாட்டுக் கொண்டு இருந்த நேரம் . நான் அபபொழுது Down syndrome எனப்படும் குழந்தைகளை பாதிக்கும் குறைபாடுகள் குறித்து , Down Syndrome Association of India வுக்கு ஆவணப் படம் தயாரித்து கொண்டு இருந்தேன் அப்பொழுது .என் கேரள நண்பர் ஒருவர் மாத்ரு பூமியில் வந்த ஒரு கட்டுரையை பற்றி என்னிடம் கூறி இந்த விவரங்கள் குறித்தும் நீங்கள் ஆவணப் படம் எடுங்கள் என்று கூறினார் .
கேரளாவின் காசர்கோடு என்ற பகுதியில் "எண்டோ ஸலஃபான் " எனும் பூச்சிக் கொல்லி மருந்து பயன்பாட்டினால் குழந்தைகள் பலவிதமான குறைகளுடன் பிறந்துள்ளன என்று அந்த கட்டுரையில் குறிப்பிட பட்டு இருந்தது . அதன் பின்னர் இதே செய்தியை இந்தியா டுடே பத்திரிகையும் கவர் ஸ்டோரி போட்டு இருந்தது .நான் மேலும் தீவிரமாக அந்த விஷயம் குறித்து விசாரித்தேன் . பெரும் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன .
வானத்தில் இருந்து கேரளத்தின் காசர் கோடு பகுதியில் இருந்த முந்திரிக்காட்டில் ஆகாய மார்க்கமாக ஹெலிகாபிடரில் எண்டோ ஸலஃபான் என்ற பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப் பட்டுள்ளது . அப்பொழுது மத்தியில் இந்திரா காங்கிரஸ் ஆட்சி நடை பெற்றது . உலக நாடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு விட்ட இந்த மருந்தை இந்தியா சொந்தமாக தயாரித்து பயன் படுத்தி உள்ளது . உலகளவில் இந்தியா எண்டோசல்ஃபானின் மிகப்பெரும் பயன்பாட்டாளராகவும் முக்கிய தயாரிப்பாளராகவும் விளங்குகிறது. மூன்று நிறுவனங்கள் - எக்செல் கார்ப் கேர், இந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ் மற்றும் கோரமண்டல் பெர்டிலைசர்ஸ் ஆண்டுக்கு 4500 டன் மருந்தை உள்நாட்டுப் பயன்பாட்டிற்கும் 4000 டன் மருந்தை வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் தயாரிக்கின்றன
இந்த மருந்தின் வீரியம் என்னவென்றால் , இப்பகுதி பெண்களின் தாய்ப்பாலில் கூட இந்த விஷம் கலந்து விட்டது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது . இங்கு பிறக்கும் குழந்தைகள் , பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி உயிரிழந்தன எண்டோசல்ஃபான் பொதுவாக நீரில் மிகக் குறைந்த கரைதிறன் கொண்டது. இவை முந்திரித் தோட்டங்களில் மேல் தெளிப்பாக இலைகளின் மீது தெளிக்கப்படும் போது அவை கரையாமல் மழை நேரங்களில் அடித்துச் செல்லப்படுகின்றன. மேலும் கேரளாவின் இப்பகுதி அதிக மழை பெரும் பகுதி ஆதலால் அடிக்கடி மருந்து தெளிக்கப்படுவதும் அவை முகடுகளின் வழியே அடித்துச் செல்லப்படுவதும் வழக்கமாக காணப்பட்டிருக்கிறது. இவை அதன் சுற்றுப்புற நீர்நிலைகளில் கரையாமல் அதன் மேல் பரப்பில் மெல்லிய ஏடாக மிதந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் இவை வெறும் கண்களுக்குப் புலப்படுவதில்லை. மேலும் வெயில் நேரங்களில் இவை நீரின் மேல்பரப்பிலிருந்து சாதாரண வெப்பநிலையில் ஆவியாதலுக்கும் உட்படுவதால் சுவாசிக்கும் வளிமண்டலத்திலும் மிதந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நீர்நிலைகளே அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் நீர் ஆதாரம் என்பதால் குடிநீர் மற்றும் உணவிலும் இவை கலந்துவிட்டன. ஆக சுவாசிக்கும் காற்று, மண், குடிநீர், குளம், குட்டை, உணவு என எல்லாவற்றிலும் என்டோசல்பான் கண்ணுக்குத் தெரியாமல் இரண்டறக் கலந்துபட்டுப் போயிருக்கிறது
. மிகக் கொடுமையான இந்த விஷயத்தை நான் ஆவணப்படம் எடுக்கலாம் என்று முயற்சி செய்தபோது இதில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதால் , அப்பகுதியில் படப்பிடிப்பு செய்தால் , மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக காலத்திற்கும் இருக்க வேண்டியது தான் என்று. சில பிரபல பத்திரிகை மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறினார்கள் அந்த அளவுக்கு இந்த எண்டோ ஸலஃபானில் ஊழலும் , பயங்கரமும் குவிந்து கிடக்கின்றது . இதை ஆவணப் படமாக எடுத்து உலக அரங்கில் வெளிப்ப்டுத்தும் ஆசை அப்படியே மனதுக்குள் குழி தோண்டி புதைத்து விட்டேன்.
டாகடர் பிஜு மிகவும் அருமையாக இந்த அதிர்ச்சியான தகவல்களை திரைப்படமாக்கி இருக்கிறார். கேள்விபட்ட படித்த விசயத்தை அதே கனத்துடன் திரையில் காணும் பொது , ஐயோ ... என்று அதிர்ந்த மனம் மீண்டும் யதார்த்த வாழ்விற்குள் வரவே முடியவில்லை . நேற்று இத்திரைப்படம் பார்த்து விட்டு இன்று முழுவதும் என்னால் ஒருவேளையும் செய்ய இயலவில்லை . எண்டோ ஸலஃபோனால் பாதிக்கப் பட்ட காசர்கோடு பிரச்சனை போபால் விஷ வாய்வு கசிவை விட மிகவும் கொடுமையானது . உங்களின் அத்தனை வேலைகளின் நடுவேயும் இத்திரைப்படத்திற்கு நேரம் ஒதுக்கு பாருங்களேன் ப்ளீஸ். 

Thanks
Govindarajan Vijaya Padma

No comments:

Post a Comment