Search This Blog

Wednesday, July 20, 2016

Kabali film




 
 மலேசிய வாழ் தமிழர்களில் பெரும்பான்மையானவர்களான தோட்ட கூலித் தொழிலாளர்களின் கதையை பேசும் கபாலியை புரிந்துகொள்ளவேயென்று .
காலம் காலமாக ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் பின் உலகமயமாக்கல் , மலிவான செயற்கை ரப்பர் உற்பத்தி தொழிற்நுட்பம் , இயற்கை ரப்பரின் விலை வீழ்ச்சிக்கு பின் நிகழ்ந்த தோட்ட துண்டாடல்கள் காரணமாய் வேலை இழந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் . அவர்களில் சிலர் தாயகமான இந்தியாவிற்கு திரும்பினாலும் பெரும்பாலானோர் தங்கள் தாய்மண்ணான மலேசியாவிலே தங்கினர் . காலங்காலமாய் தோட்ட வேலைகளில் மட்டுமே ஈடுபட்டவர்கள் மாறிப்போன உலக பொருளாதாரம் காரணமாக பெரும் படிப்போ , வாழ்க்கையை ஓட்ட தொழிலோ தெரியாமல் பெருநகரங்களில் வந்து தஞ்சமடைந்தனர் .
பொதுவாய் இந்திய தமிழர்களுக்கு ஒரு எண்ணம் , அதாவது வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் செல்வந்தர்கள் என . அது தான் மலேசிய தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை புரிந்துகொள்ளாதபடிக்கு செய்கிறது . மலேசியாவில் இந்தியர்கள் இரண்டாம் தர குடிமகன்களாகவே நடத்தப்படுகிறார்கள் . மலேசிய அரசாங்கம் 'பூமி புத்திரர்கள்' என்னும் கொள்கையை பின்பற்றுவதால் , கல்வி மற்றும் வேலைவாய்ப்பினில் மலாயா மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது . அதே நாட்டின் குடிமகன்களான மலேசிய சீனர்களுக்கு மலேசிய தமிழர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட வருகிறது இன்று வரை . இதில் சீனர்கள் அந்நாட்டின் பொருளாதாரத்தை தங்கள் வணிகத்தால் கட்டுப்படுத்துவதால் அவர்களை இது பெரிதும் பாதிப்பதில்லை . ஆனால் மலேசிய இந்தியர்கள் , அதிலும் குறிப்பாக தோட்டங்களில் வேலை பார்த்த மலேசிய தமிழர்கள் கல்வி புலம் பெரிதும் இல்லாததாலும் , கல்வி புலம் இருந்தும் மேற்கொண்டு படிக்க வாய்ப்புகள் மறுக்கப்படுவதாலும் திசை மாறிப் போகிறார்கள் என்பதே நிதர்சனம்.
மலேசியா , Golden Triangle என்று சொல்லப்படும் பர்மா , தாய்லாந்து , லாவோஸ் என்னும் நாடுகளுக்கு அருகே உள்ளது . பர்மிய அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் தங்கள் வருமானத்திற்காக கஞ்சா பயிரிட்டு , அதன் வழி போதை மருந்துகளை உற்பத்தி செய்தும் வருகின்றனர் . இவர்களைத் தவிர மற்ற குழுக்களும் போதை மருந்தினை உற்பத்தி செய்து வருகின்றது . அதன் அளவு எத்தகையது என்றால் , உலகின் கணிசமான சதவிகித போதை மருந்துகள் இங்கு தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . தற்பொழுது மலேசியாவே போதை மருந்து உற்பத்தி கேந்திரமாக உருமாறியும் வருகிறது . வேலைவாய்ப்பில்லாத பலர் போதை மருந்து வணிகத்தில் , கேங்களின் (Number Gangs) வாயிலாக சேர்ந்துகொண்டுவிட்டனர் . சமீபத்திய கணக்கெடுப்பு , இக்கேங்களில் 71 % சதவிகித பேர் இந்தியர்கள் என்று கூறுகிறது . இதோடு தான் கபாலி படத்தின் பின் கதையை நாம் புரிந்து கொள்ளவேண்டும் . மலேசிய மக்கட்தொகையில் வெறும் 7 முதல் 9 சதவிகிதமே இருக்கும் மலேசிய இந்தியர்கள் எவ்வாறு கேங்களில் 71 % சதவிகிதம் இருக்கிறார்கள் என்பதை ஆராய ஆரம்பித்தால் மலேசிய இந்தியர்களும் அவர்களுள் பெரும்பான்மையான மலேசிய தமிழர்கள் படும் அல்லல்களும் விளங்கும் . இந்த புரிதல் இருந்தால் , கபாலி படத்தின் கடைசி சீனில் மாணவர்கள் பேசும் உரையாடல் தெள்ளென விளங்கும் . இந்தியர்கள் தங்கள் தோலின் நிறத்தால் , இந்தியர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஒதுக்கப்படுவதையே பேசுபொருளாக கொண்டிருக்கிறது இத்திரைப்படம் . அதோடு எவ்வாறு ஒடுக்கப்பட்ட நிலையினிலும் மலேசிய தமிழ் சமூகத்துள் சாதி , வர்க்க பாகுபாடு தலைவிரித்து ஆடுகிறது என்ற அரசியலையும் பேசுகிறது .
மேலும் இந்த திரைப்படத்தில் வரும் வன்முறை நிஜமாகவே நிகழுமா , ஒரு கேங் தலைவன் இறந்தால் ஊரில் ஊர்வலம் நடத்துவார்களா என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன . நிஜம் பலநேரங்களில் கற்பனையை விட பயங்கரமாய் இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் (யுடியூபில் funeral for gang 36 என்று தேடி பார்க்கவும்). மேலும் இது போன்ற கேங்களை எவ்வாறு அரசாங்கம் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதற்கு இந்த படமே ஒரு உதாரணம் தான் . முள்ளை முள்ளால் எடுப்பது போன்று கேங்களை ஒன்றுக்கொண்டோடு சண்டையிட்டுக்கொள்ள வைத்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதும் ஒரு வகை நிர்வாக தந்திரமே , உலகம் முழுவதும் .
ஆக , எல்லைகள் கடந்த தமிழ் சமூகத்தின் கதைகளை தமிழ் திரைப்பட உலகம் கவனிக்க ஆரம்பித்ததன் முதற் படி தான் கபாலி . தமிழ் பேசும் மக்கள் இந்தியா தவிர்த்து மலேசியா , சிங்கை , சிறீலங்கா , தென் ஆப்ரிக்கா , மொரீசியஸ் , செய்செல்ஸ் போன்ற நாடுகளில் காலம் காலமாய் வாழ்ந்து வருகின்றனர் . இத்தனை ஆண்டு காலம் நமது மண்ணின் கதைகளான பருத்திவீரன் , தேவர் மகன் , மறுமலர்ச்சி , சின்ன கவுண்டர் , புதுப்பேட்டை போன்ற படங்களை ஆதரித்து வந்த மலேசிய தமிழ் சமூகத்தின் கதையினை நாமும் ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . காரணம் , இந்த படத்தின் அடிநாதமாக இருக்கும் கசப்பான உண்மை , ரப்பர் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களின் கையறு நிலை , அவர்களை நிர்கதியாக்கிய அரசாங்கத்தின் பூமிபுத்திரர் கொள்கை அதனோடு இனம் சார்ந்த ஒடுக்குமுறை .
இது ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் கதையென்பதில் துளியளவும் சந்தேகமில்லை . இத் திரைப்படத்தை காணுவதென்பது நமது சகோதரர்களை , எல்லை கடந்த தமிழ் சமூகத்தை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவே காண்கிறேன் .
ஒரு நிஜ பிரச்னையை , நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்குமுறையை மிக தைரியமாக எடுத்ததற்காகவே ரஜினி அவர்களுக்கும் , பா . இரஞ்சித் அவர்களுக்கும் ஒரு உலக தமிழனாய் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் . இது நாள் வரை நான் அறிந்த இந்த சரித்திரம் இன்று தமிழ் பேசும் ஒவ்வோர் வீடுகளிலும் உலகம் அதிரும் பறையிசையாய் , போர்முரசாய் ஒலிப்பதற்கு வினையூக்கியாய் இருந்த கபாலிக்கு என் நன்றிகள் .
Jeyannathann Karunanithi
கபாலி திரைப்படத்துக்கான சிறப்பு அஞ்சல் உறை விற்பனையை அஞ்சல் துறை தொடக்கியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெளியாகும் ஜூலை 22-இல் தனி விமான சேவைக்கு ஏர் ஏசியா விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, பெங்களூருலிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து பெங்களூருக்கும் "கபாலி விமானம்' மூலம் ரசிகர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதுபோல் கர்நாடக அஞ்சல் வட்டம், சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம் ஆகியன இணைந்து கபாலி திரைப்படத்துக்கான சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளன.

இதற்காக, சென்னை, பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை, பெங்களூரு அஞ்சல்தலை சேமிப்பு மையங்களிலும் கபாலி சிறப்பு அஞ்சல் உறை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கபாலி திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை காண விமானத்தில் பயணிக்கும் ரசிகர்களுடன் சிறப்பு அஞ்சல் உறையும் இடம்பெற்றிருக்கும் என அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் திரைக்கு வரஇருக்கும் ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கு உலகம் முழுவதும்  பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கலைப்புலி எஸ். தாணு இயக்கத்தில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கிஷோர் மற்றும் சீன, மலேசிய வில்லன் நடிகர்கள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் புரொமோஷன்களும், படத்தில் இடம்பெறும் காட்சிகள் பற்றிய விவரங்கள் என படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் அறிமுககாட்சி மட்டும் ஸ்லோ மோஷனில் சுமார் ஒன்றரை நிமிடங்கள் வருவதாகவும், அறிமுகக்காட்சியே சண்டைக்காட்சி என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு மாஸ் என்ட்ரி இருந்தால் தியேட்டர் ஆரம்பமே அதிரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படத்தின் விளம்பரம் பாலிவுட் சினிமா மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு இருக்கிறது. ஏன் ஹாலிவுட் என்று கூட சொல்லலாம் விமானத்தில் விளம்பரம் என்பதெல்லாம் இதுவரை யாரும் யோசித்திராத ஒன்று தான். விமானம் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை, பத்திரிகைகள் , டி.வி, இணையதளம், செல்போன் அனைத்திலும் கபாலி மயமாகவே உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ‘கபாலி’ என்ற பெயரை கேட்டாலே குதூகலப்படும் அளவுக்கு இதன் தாக்கம் எங்கும் நிறைந்திருக்கிறது.

இதுமட்டுமல்ல முத்தூட் பின்கார்ப் என்ற நகை அடகுவைக்கும் நிறுவனம் கபாலியின் பெயரில் தங்கம், வெள்ளி காசுகளை வெளியிடுகிறது. கேட்பரிஸ் நிறுவனம் சாக்லேட் விளம்பரம், ஏர்டெல் கபாலி ஆபர் என இன்னொரு பக்கம் அதிரடி காட்டுகிறது. இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் கபாலியை பயன்படுத்தி வருகிறது. கபாலி பொம்மையும் இந்திய மதிப்பில் 1000த்தில் தொடங்கி 5000 வரை விற்கப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’  படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட பிறகு அதன் சாதனைகள் பற்றி பேசப்பட்டது. ஆனால் ‘கபாலி’ திரையிடப்படுவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

‘பாகுபலி’ படம் டிரைலர் ‘யுடியூப்’ பில் வெளியிடப்பட்டது. இதை ஒருகோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் ‘கபாலி’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே இதன் ‘டீசரை’ 2 கோடிக்கும் அதிகமானோர் யுடியூப்பில் பார்த்து விட்டனர்.‘பாகுபலி’ தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழிகளில் வெளியானது. படம் திரைக்கு வந்த பிறகுதான் சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்யப்பட்டது. சீனாவில் ‘பாகுபலி’ வருகிற 22-ந் தேதி தான் திரைக்கு வருகிறது.

ஆனால் ‘கபாலி’ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மட்டுமல்ல மலாய் மொழியிலும் திரையிடப்படுகிறது. சீன மொழியிலும் வெளியிட இப்போதே ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா விலும் அந்தந்த மொழிகளில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு திரைக்கு வருகிறது.   உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் ‘ரெக்ஸ் சினிமாஸ்’ திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பொருமையை ‘கபாலி’ பெற்றுள்ளது. உலக அளவில் ‘பாகுபலி’ 4 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கபாலி 5 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

பாகுபலி படத்தின் வியாபாரம் ரூ.162 கோடியை தொட்டதாக கூறப்பட்டது. ஆனால் ‘கபாலி’ அதையும் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. ‘கபாலி’ வெளிநாட்டு வினியோக உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.‘பாகுபலி’ படத்தை பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்கள். படக்குழுவினர் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு நடிகர்&நடிகைகள் சென்று ‘பாகுபலி’ யை பிரபலப்படுத்தினார்கள். ஆனால் ‘கபாலி’ படத்துக்காக இந்தியாவில் முதல் முறையாக விமானத்தில் ‘கபாலி’ போஸ்டர் இடம் பெற்றது. ஏர்& ஏசியா விமான நிறுவனம் பல்வேறு சலுகைகளையும்அறிவித்துள்ளது.

இது தவிர தங்க, வெள்ளி நாணயங்கள் வெளியீடு,  தனியார் நிறுவனங்கள் தொலை தொடர்பு நிறுவனங்கள், ஆன்லைன் சேவை நிறுவனங்கள் அனைத்தும் சலுகைகளை அறிவித்து ‘கபாலி’ படத்தை விளம்பரப்படுத்துவதுடன் தங்களுக்கும் விளம்பரம் தேடிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இது எப்போதும், எந்த படத்துக்கும் இல்லாத புதிய யுத்தியாகும்.‘கபாலி’ திரைக்கு வரும் தினத்தை ரசிகர்கள் மட்டுமல்ல, பல்வேறு நிறுவனங்களும், திரை உலகினரும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்து இருப்பதும் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் இந்திய படம் என்றால் இந்திபடங்கள்தான் என்ற நிலை இருந்தது. அதை ‘பாகுபலி’ ஓரளவு முறியடித்தது. இப்போது ரஜினியின்’கபாலி’ படத்தின் மூலம் இந்திய படங்கள் என்றாலே அது தமிழ்படம் தான் என்று வெளிநாட்டினர்  கருதும் அளவுக்கு ‘கபாலி’ புகழ் கொடிகட்டி பறக்கிறது. திரைக்கு வந்த பிறகு மேலும் சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kabali is an upcoming 2016 Indian Tamil-language gangster-drama film written and directed by Pa. Ranjith. The film stars Rajinikanth as the title character, whilst Taiwanese actor Winston Chao, Radhika Apte, Dhansika, Dinesh Ravi, Kalaiyarasan, and John Vijay star in other pivotal roles. Principal photography for the film began on 21 August 2015 in Chennai. While filming mostly occurred in Malaysia, smaller scenes were shot in Bangkok and Hong Kong.The film is slated for release on 22 July 2016.

Development

In June 2015, director Pa. Ranjith announced his third directorial venture, which would follow his previous two films Attakathi (2012) and Madras (2014), with Rajinikanth via Twitter. Rajinikanth had been impressed with Ranjith's work in Madras (2014) and subsequently Rajinikanth's daughter, Soundarya, asked Ranjith to work on a script for her father.Working with Ranjith would make Kabali Rajinikanth's first film with a novel director for the first time since his collaboration with S. Shankar in Sivaji (2007). In an interview with IndiaGlitz, producer S. Thanu revealed that Rajinikanth had personally asked him to produce the Ranjith-directed film. The producer's commercially successful  
Bairavi (1978) was Rajinikanth's first lead role film and the two had not collaborated since.It was speculated that Rajinikanth's role would be based on a real-life mob boss from Chennai. Santhosh Narayanan was confirmed as the film's music composer, continuing his partnership with Ranjith after the latter's previous two films. Ranjith also retained G. Murali, the cinematographer of Madras.
On 17 August 2015, Ranjith announced the title of the film to be Kabali and that Rajinikanth would play the role of Kabaliswaran.The makers of the film had earlier considered using title Kaali, which was the title of Rajinikanth's 1980 film. As that film did not do well in the Tamil Nadu box office at the time, the makers passed on using it for the new film. Another title, Kannabhiran, was also considered but it was later found that the title's rights were already held by director Ameer Sultan for a future film.

Casting

In the film, Rajinikanth plays the role of an aged crime boss. Dinesh Ravi, who played the lead in Ranjith's Attakathi (2012), and Kalaiyarasan, who played pivotal roles in both of the director's previous films, were also confirmed to be part of the film. An important role was offered to Prakash Raj initially, but later it was said that the role was declined due to scheduling issues and John Vijay was cast for the role instead. It was later confirmed that the role of the lead character's wife would be given to Radhika Apte, who was introduced to Tamil films through Dhoni (2012).Dhansika was signed to play a supporting character in the film.

Filming

On 18 August 2015, director Pa Ranjith announced on his Twitter page that principal photography would begin the following week, which was confirmed on 22 August when Behindwoods covered a photo shoot which took place on 21 August at AVM Studios in Chennai. First schedule of the filming started on Vinayagar Chaturthi on 17 September 2015 at the Russian Centre of Science and Cultural in Chennai.



Release

Kabali is expected to be released in Tamil worldwide, along with dubbed versions in Hindi, Telugu, and Malayalam.The film will be simultaneously released in Singapore and Indonesia. Malik Streams Productions and Distribution, a Malaysian media company, will simultaneously release the film in Malay for exclusive screening in Malaysia alongside the original Tamil version. The film will also be dubbed in Thai and Chinese, where talks are under way to simultaneously release the film in Hong Kong and China. Kabali will also premiere at the Le Grand Rex in Paris, France. The satellite rights of the film were sold to Jaya TV.

Marketing

The Malaysian airline, AirAsia became an official partner for Kabali and certain AirAsia planes will be painted with a Kabali theme.The Indian financial company Muthoot FinCorp who is also an official partner of the film produced silver coins embossed with the image of actor as cast in the film. Its teaser trailer was released in April 2016 and went viral in Asia and gained 5 million views in less than 24 hours becoming the most viewed teaser in Asia.By 28 May, the Kabali teaser garnered 20 million views, making it one of the most watched Indian film teasers.

Online piracy issue

On July 19, 2016, three days prior to the film's worldwide release, it was reported that pirated copies of the film were leaked online in various file-sharing sites. The Indian Express reported that although the leaked copies were available only in the darknet, lots of fake links were being circulated in the web. The makers of the film had approached Madras High Court in anticipation of piracy and had requested the authority to ensure that it does not happen. The Times of India reported that the producers of the film were urging the fans of the film not to watch the film online.
CBFC chief Pahlaj Nihalani commented on the issue by saying that the leak had nothing to do with his office in Mumbai and reiterated the fact that Kabali, a Tamil film, was certified by CBFC's Chennai office. He also added that the leak would not have much effect on the film's box office collection.

No comments:

Post a Comment