Search This Blog

Saturday, July 30, 2016

மாலை மாற்று!


  
அணியிலக்கண நுால்களில் தொன்றுதொட்டு வழங்கப்படும் சித்திரப்பாடல் மாலை மாற்று ஆகும். ஒரு மாலைக்கு அமைந்த இரண்டு தலைப்புகளில் எதனை முதலாகக் கொண்டு நோக்கினும் அம்மாலை ஒரே தன்மை உடையாதாய்த் தோன்றுமாறுபோல், ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும், முடிவிலிருந்து நோக்கினாலும் அப்பாடலே அமைவதாகும்.
  
ஒருசெயுண் முதலீ ஈரைக்கினும் அஃதாய்
வருவதை மாலை மாற்றென மொழிப
- மாறனலங்காரம்
  
இறுதி முதலாக வெடுத்து வாசிப்பினும்
மதுவே யாவது மாலை மாற்றாகும்
- முத்து வீரியம்
  
ஒரு பாட்டு இறுதியதாய்
இரையினும் அப்பாட்டாதல் மாலை மாற்று
- சுவாமிநாதம்
  
குறட்டாழிசை
  
பூவே! நாமாதே! தா!தா! வா!வா!
வா!வா! தா!தா! தேமா! நாவேபூ
  
விளக்கம்
  
பூவே! என் நாவில் அமர்ந்து கவிகொடுக்கின்ற கலைமகளே! எனக்கருள் புரிய என்னிடம் வருவாய். உன் நாவால் இனிக்கின்ற தேமாச் சொற்களையும், மதுவூறும் மலர்க்கவிதைகளையும் தருவாய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

No comments:

Post a Comment