Search This Blog

Wednesday, June 22, 2016

Genghis Khan ஜெங்கிஸ்கான் (கி.பி.1162-1227)


நாடுகளை வெற்றி கொள்வதில் மாபெரும் சாதனைகளைப் புரிந்த மாவீரர் ஜெங்கிஸ்கான் 1162 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சிறிய மங்கோலிய பழங்குடியின் தலைவராக இருந்தார். அவர் தமக்குப் போட்டியாக இருந்த தெமுஜின் (Temujin) என்ற மற்றொரு பழங்குடித் தலைவனைத் தோற்கடித்தார். இந்த வெற்றியின் நினைவாக அவர் தம் மகனுக்கு தெமுஜின் என்று பெயர் சூட்டினார். தெமுஜின் 9 வயது சிறுவனாக இருந்தபோது, அவரது தந்தையை ஒரு போட்டி பழங்குடியைச் சேர்ந்தவர்கள் கொன்று விட்டனர். இவரது குடும்பத்தில் உயிர் பிழைத்திருந்தவர்களின் உயிருக்கும் ஆபத்து நிலவியது. அதனால் அவர்கள் சில ஆண்டுகள் ஒளிந்திருக்க வேண்டியிருந்தது. இவ்வாறு தெமுஜினைப் பொறுத்தவரையில் அவர் இன்னும் பல கொடுந் துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு போட்டிப் பழங்குடியினர், ஒரு தாக்குதலின் போது தெமுஜினைப் பிடித்துச் சென்றனர். தெமுஜின் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அவருடைய கழுத்தில் மரவளையம் ஒன்றை மாட்டி வைத்தனர். இவ்வாறு, நாகரிக வாடை சிறிதும் இல்லாமலிருந்த ஒரு வறண்ட நாட்டில், கல்வியறிவில்லாத ஒரு கைதியாக, உதவிபுரிவார் யாருமின்றி, கரைகாண முடியாத பெருந்துயரக் கடலில் ஆழ்ந்திருந்த தெமுஜின், உலகிலேயே மிகவும் வல்லமை வாய்ந்த ஒரு மனிதராக உயர்ந்தார்.



தெமுஜின் தம்மைச் சிறைப் பிடித்து வைத்திருந்தவர்களிடமிருந்து எப்படியோ தப்பினார். அதன் பின்னர் இவருடைய வட்டாரத்தில் இவரது பழங்குடிக்கு நெருங்கிய உறவுடைய ஒரு பழங்குடியின் தலைவரும் இவருடைய தந்தையின் நண்பருமாகிய தோக்ரில் (Toghril) என்பவருடன் நட்புக் கொண்டார். பல்வேறு மங்கோலியப் பழங்குடிகளிடையே பல ஆண்டுகள் ஒருவரையொருவர் அழிக்கும் உட்பகைப் போர்கள் நடந்தன. அந்தப் போர்களில் தெமுஜின் ஒவ்வொன்றாக வென்று, படிப்படியாக முன்னேறி உச்ச நிலையை எய்தினார்.
மங்கோலியப் பழங்குடியினர் நெடுங்காலமாகத் திறமை வாய்ந்த குதிரை வீரர்களாகவும், கொடூரமான போர்வீரர்களாகவும் விளங்கினர். வரலாறு நெடுகிலும், அவர்கள் வடக்குச் சீனாவிற்குள் பலமுறை படையெடுத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், தெமுஜின் எழுச்சிக்கு முன்பு இந்தப் பல்வேறு பழங்குடிகள் தங்களுக்குள் போரிடுவதிலேயே தங்களின் பெரும்பாலான ஆற்றலை வீணடித்து வந்தனர். தெமுஜின் தம்முடைய இராணுவத் தந்திரம், அரசியல் செயலாண்மைத் திறம், ஈவிரக்கமற்ற கொடூரம், மகத்தான அமைப்புத் திறம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிதறுண்டு கிடந்த இந்தப் பழங்குடிகள் அனைத்தையும் தமது தலைமையில் ஒரே கொடியின் கீழ் ஒற்றுமைப்படுத்தினார். 1206 ஆம் ஆண்டில் மங்கோலியப் பழங்குடிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருங்கு கூடி தெமுஜினை ஜெங்கிஸ்கான் எனப் பிரகடனம் செய்தனர். ஜெங்கிஸ்கான் எனப் பிரகடனம் செய்தனர். ஜெங்கிஸ்கான் என்றால் அகிலப் பேரரசர் (Universal Emperor) என்று பொருள்.

பெயரை வைத்து இவர் முஸ்லீம் என்று நினைத்து விட வேண்டாம்..
தி மூ ஜின் என்பது தான் உண்மையான பெயர் அன்றைய சீனாவில் உள் நாட்டு குழப்பங்கள் ஏற்பட்டு கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்த சீனா இவரிடம் உதவி கேட்டது
அப்போது இவர் போய் புரட்சியாளர்களை கொலை செய்து அரசிடம் அமைதியாக ஒப்படைத்தார்
அவர்கள் சூட்டிய பெயர் தான் ஜெங்கிஸ்காண் அதாவது மன்னனுக்கெல்லாம் மன்னன் என்பது தான் இதன் அர்த்தம்..
சாப்பாடு தரவில்லை என்பதர்க்காக தனது
அன்னைனையே கொன்று விட்டதாக கூறப்படுகிறது ...
அப்பொழுது ஜெங்கிஸ்கானின் வயது 10.
இந்த உலகத்தில் இவர்கள் போர் செய்து
வெற்றி பெற்ற இடங்களில் உள்ள 700 மில்லியன் டன்
மரங்களை எரித்து அளித்துள்ளனர் ....
உலகத்தில் இன்றும் கூட இராணுவ டெக்னிக்குகளை கையாட இரண்டு கமாண்டர்களின் போர் நுட்பத்தை தன் நாட்டு ராணுவத்திற்கு
கற்று கொடுப்பார்கள் ........
அதில் முதலாமவர் ....
முஹம்மது நபியின் கமாண்டர்
ஹாலீத் இப்னு வலீத் .
இவரின் தனி சிறப்பு
இவர் தனது படை வீரர்களின் உயிரை காப்பற்றி அதே வேளையில் வெற்றியும் பெற்று வருவார் ....
இரண்டாமவர் ஜெங்கிஸ்கான் ..
ஜெங்கிஸ்கானின் தனி தன்மை உக்கிரமாக போர் நடந்து கொண்டு இருக்கும் பொழுது திடீரென்று ஒரு வித சத்தத்துடன் பின்னோக்கி ஓடி விடுவார்கள் ..
எதிரிகள் ஒன்றும் புரியாது சிறுது நேரத்தில் நாம் தான் வெற்றி பெற்று விட்டோம் என்று சந்தோசமடையும் தருவாயில் ...
ஈசல் போல் வந்து உயிரை பறித்து விட்டு செல்லுவார்கள் ..
இவரது ஆட்சி 12 மில்லியன் மைல் போனது ...
மொங்கோளியாவில் இருந்து இன்றைய
ஈரான் வரை
ஈரானில் மட்டும் ஒரு லட்சம் அன்றைய மக்களை கொன்றுள்ளார் ..
அங்கே பிணங்களின் இடையே மலை பொழிந்து பின வாடை எடுத்து தொற்றுநோய் பரவி ஜெங்கிஸ்கானின் படையினர் சிலர் இறந்துள்ளனர்
உடனே தனது நாட்டிற்கு திரும்பினார் ,,
இல்லை என்றால் இன்னும் பல நாடுகளையும் விட்டு...
வைத்து இருக்க மாட்டார் ..
s kalka river என்ற ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி
ஜெங்கிஸ்கானின் இராணுவம் ...
இன்றைய ரஷ்யாவின் இராணுவத்தை விட 4 மடங்கு சக்தி வாய்ந்தது மற்றும் பெரியது ...
இந்த ஆய்வாளர் சொல்லும் பொழுது ரஷ்யா வல்லரசு நாடாக இருந்தது எனபது குறிப்பிடத்தக்கது ..
உதாரனத்திற்க்கு நம்ம இந்தியா ராணுவம் அமெரிக்க ராணுவம் ரஷ்யா ராணுவம் ஓன்று சேர்ந்தால் எவ்வளவு பலம்
அது தான் அன்றைய செங்கிஸ்கான் இராணுவம் ...
நீங்கள் நம்பினால் நம்புங்கள் ஆனால் வரலாற்றில்
தெளிவாக உள்ளது ..
ஜெங்கிஸ்கான் ஒரு இடத்தை டார்கெட் வைத்து விட்டால் அங்கு போகும் வரை நிம்மதியான ஓய்வு கிடையாது ...
வழியில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் தனது குதிரையின் கழுத்தில் லேசாக கீறி அதன் இரத்தத்தை குடிப்பார்கள் ... தாகத்திற்கு
மற்றும் ஜெங்கிஸ்கான் தமது படையினருக்கு போட்ட மிக முக்கியமான உத்தரவு லட்சக்கணக்கில் இருக்கும் தமது வீரர்கள் யாருமே குளிக்க கூடாது
அவர்கள் குளிக்காமல் இருந்ததால் ஒரு வித துர்நாற்றம் அவர்கள் உடலில் இருந்து வெளிப்படும் ...
இந்த வாடையை உணர்ந்தாலே எதிரி நாட்டு மக்கள் பயப்பட ஆரம்பித்துவிடுவார்கள் ......
எனபது ஜெங்கிஸ்கானின் திட்டம்
அது உண்மையும் கூட இந்த படையினர் பக்கத்துக்கு ஊரில் வந்து இறங்கி விட்டால் அருகே உள்ள ஊருகளுக்கும் வாடை அடிக்க கிளம்பி விடும் ...
மக்கள் கதி கலங்க ஆரம்பித்து
விடுவார்கள் ..
நினைத்து பாருங்கள் லட்சக்கணக்கான படை வீரர்கள் பல ஆண்டுகளாக குளிக்காமல் காட்டு விலங்குகளின் இறைச்சியை தின்றும் மற்றும் வித்யாசமான இனிப்புகளை தின்றும் இரத்தம் போர் கத்தி படையினரின் வித்யாசமான சப்தம்
இவர்கள் நம்மை நோக்கி தான் வருகின்றனர் என்று எந்த அரசனாவது கேள்விப்பட்டாளே பல பேருக்கு பீதியடைய ஆரம்பித்து விடுவார்கள்
உலகத்தில் முதன் முறையாக நடமாடும் கூடார மாளிகை தயார் செய்தது ஜெங்கிஸ்கான் தான் ..
காரணம் தனது நாட்டில் இருந்து பல ஆயிரம் மைல் தள்ளி வந்து விட்ட தமக்கு மாளிகை போன்ற அமைப்பில் கூடாரம் செய்யப்பட்டு அவர்கள் போகும் இடங்களுக்கெல்லாம் அதை கொண்டு போவது வழக்கம் .......
கூடாரம் கிடையாது கூடார மாளிகை....
இப்பேற்பட்ட ஜென்கிஸ்கானை வெற்றி பெற்றவர் வரலாற்றில் ஒரே ஒருவர் மட்டுமே அவரின் பெயர் சுல்தான் அல் அய்யூபி என்ற மன்னர் என்று படித்த நியாபகம் ...
தெளிவாக பெயர் நினைவில் இல்லை ...
இதற்கான காரணம் இவர் அந்த பகுதியில் பிறந்தவர் என்பதால் இவர்களது போர் முறைகளை பற்றி அறிந்து இருந்தார்...
உலக நாடுகளிலுள்ள பொதுவான விதி இருண்டு படையினருக்கான மத்தியில் பேச்சுவார்த்தைக்கு வருகின்றன தூதரின் உயிருக்கு பாதுகாப்பு உத்திரவாதம் தருவது
எதிரி நாட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துகின்ற நபர்கள் சாதாரண மனிதராக இருக்க மாட்டர்கள் அப்படிப்பட்ட வீரமும் பேச்சு திறனுள்ள மனிதராக தான் இருக்க வேண்டும்
ஆனால் ஜெங்கிஸ்கானிடம் பேச்சு வார்த்தைக்கு வரும் தூதர் யாராக இருந்தாலும் அவரது கலுத்து தனியாக வெட்டி அவரது நாட்டிற்கே திருப்பி அனுப்ப படும் .
இதை அறிந்த மக்கள் ஜெங்கிஸ்கானிடம் பேசுவதற்கு கூட அலறுவார்கள்..
மற்றும் இவர்களது உணவு முறைகளும் வித்தியாசம் தான்
இந்த ஜெங்கிஸ்கான் படையினரின் ஒரு இனிப்பு உணவை நாம் இன்றும் விரும்பி உண்டு வருகிறோம்
அந்த இனிப்பு வகை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இன்றும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் உண்மையில் அந்த இனிப்பு
இவர்களது தான்
இவர்களது உணவு வகைகளை மிகவும் வித்தியாசமானது
அதில் ஒன்றுதான் குலோப் ஜாமுன்
இது இவர்களது உணவு தான்...
மற்றும் இவர்களை பற்றி கூறும்போது மிகவு‌ம் முக்கியமான ஒன்று குதிரை ஏறுதல்...
எந்த அளவுக்கு குதிரை ஓடுமோ அதே அளவுக்கு இவர்களது தந்திரம் இருக்கும்...
பயங்கர வேகத்தில் ஓடும் குதிரையில் இருந்து எந்த வித பாதிப்பும் இல்லாமல் அதே வேகத்தில் குதிக்க முடியும்...
இன்றும் கூட மங்கோலியர்கள் அதிகமானவர்கள் குதிரை வீரர்களாகவே இருப்பார்கள் இது அவர்களது பரம்பரை பரம்பரையாக வந்த பழக்கம்...
இவர்களது போர் தந்திரங்களிள் ஒன்று தம் எதிரிகளை வைத்து தம்மை பாதுகாத்து கொள்வது..
அதாவது எதிர் நாட்டு ஆண்களை கொலை செய்து விடுவார்கள் அதேசமயம் நல்ல கட்டுமஸ்தானவர்களை பிடித்து வைத்து கொள்வார்கள்
வேறோரு நாட்டிற்கு போகும் போது இவர்களை சங்கிலிகளை கட்டி படையின் முன் பகுதியில் நிறுத்தி விடுவார்கள்...
எதிர் நாட்டு இராணுவம் மங்கோலியர்களை நெருங்க இவர்களை கொலை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்...
முன் வரிசையில் இருப்பவர்கள் தங்கள் பக்கத்து நாட்டவராக இருந்தாலும் வேறு வழியில்லை ....
இப்படி மங்கோலியர்களை சாதாரணமாக நெருங்கி விட முடியாது...
அப்படியே நெருங்கினாலும் அவர்களது வெறி பிடித்த உக்கிர சண்டைக்கு இவர்களால் ஈடு கொடுக்க முடியாது .
இவர் இந்தியாவிற்குள் வரவே இல்லை.
இந்தியாவை எதனால் விட்டுவைத்தார் என்பது இன்றும் கூட புரியாத புதிராகவே உள்ளது ....
ஒருவேளை பக்கத்தில் உள்ள நாடு எப்போது வேண்டுமானாலும் பிடித்து கொள்ளலாம் என்று நினைத்தாரோ என்னவோ ???
இப்படி பட்ட அரக்க குணம் படைத்தவர்களிடம் ஓர் நல்ல குணம் ஒன்று உள்ளது
அது என்ன ?
செங்கிஸ்கான் படையினரிடம் உள்ள நல்ல குணம் பெண்கள் விஷயத்தில் சரியாகவே நடந்து கொண்டனர்
என்கிறது வரலாறு
கற்பழிப்பு இதெல்லாம் ஜெங்கிஸ்கான் படையில் கிடையாது
ஆனால் ஒன்று உண்டு
ஆரம்பத்தில் இவர்கள் ஒரு நாட்டை பிடித்துவிட்டால் அங்கே தீயிட்டு தீக்கிரையாக்கி விட்டுத்தான் அடுத்த நாட்டிற்கு புறப்படுவார்கள்...
பின்னூட்டத்தில் சிலரது கமெண்ட் தவறாக உள்ளது அதில் ஒன்று மொங்கோலியர்கள் தான் முகலாயர்கள் என்பது
முகல் சாம்ராஜ்யம் வேறு ஆப்கானியர்கள் எதிர்புகளாலும் அருகே இருந்து மொங்கோலியர்கள் தந்திரங்களை பார்தமையாலும் மொங்கோலியர்களை அவர்களை தாண்ட விடாமல் தடுத்து விட்டனர்...
செங்கிஸ்கான் இந்தியாவிற்குள் வராமல் இருக்க மிக முக்கியமான காரணம் ஆப்கானிய மக்கள் தான்....
ஆனால் ஒன்று உள்ளது
செங்கிஸ்கான் இறப்பிற்கு பின்னர் முழு உலகமும் மங்கோலிய மக்களை பலி வாங்கியது அதாவது சீனா ரஷ்யாவை வைத்து...
இவர்கள் இன்று தஜிகிஸ்தான் துர்க்மெனிஸ்தான் பகுதிக்கு உயிருக்கு பயந்து நாடோடிகளாக சென்றனர் என்பதும் வேதனை
இன்றைய தஜிகிஸ்தான் பகுதியில் மொங்கோலியர்கள் இருக்கிறார்கள்..
இதை அறிந்து கொண்ட இன்றைய சமூகமும் இவர்களை சீண்டிகொண்டே தானிருக்கிறது....
போராட்டங்கள் தான் இவர்களது வாழ்க்கை இவர்களுடைய மூதாதையர் செய்த செயலுக்கு இவர்கள் பலி வாங்க படுகிறார்கள்...
இதிலிருந்து ஒருவர் மூலம் பிறந்தவர் தான் பாபர் என்றும் சில வரலாறு உண்டு...
இதன் உண்மை தண்மை சரியாக தெரியவில்லை....
காரணம் சிலர் இது பொய்யான வரலாறு என்றும் கூறியுள்ளார்கள்..
இப்பேற்பட்ட ஜெங்கிஸ்கான் இறந்தது யாருக்குமே தெரியாது ???
எப்படி இறந்தார் என்று யாருக்குமே தெரியாது ...
ஆனால் அவர் இறந்த பிறகு 40 குதிரைகள் 40 கன்னிப்பெண்களை பலியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதாக வரலாறு உண்டு
அது மட்டுமின்றி 2000 கைதிகளை பலியிட்டதாகவும் வரலாறு உண்டு ஆனால் இதன் உண்மை தன்மை எனக்கு சரியாக தெரியவில்லை
சில நூற்களில் 2000 என்பது பொய் என்றும் எழுதியுள்ளார்கள் ...
ஆனால் 40 கன்னி பெண்கள் சாகடிக்கப்பட்டது உறுதி ..
இப்போது புரிகிறதா ? மங்கோலியா ஏன் உலக நாடுகளின் மறைமுக ஒதுக்கி வைப்பை.....
உலக நாடுகளுக்கு இவர் கொடூரமானவராக இருந்தாலும் அவர்கள் நாட்டிற்கு ஜெங்கிஸ்கான் ஒரு வரலாற்று நாயகன்....
ஒரு சாதாரண கிராமத்தான் உலக நாட்டு மன்னர்களை கதி கலங்க வைத்தார் என்பது சாதாரண விஷயமல்ல
இவருக்கு பிறகு அந்த மக்களுக்கு நிறையவே கொடுமைகள் நடந்தது என்பதையும தெரிந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment