Search This Blog

Wednesday, April 6, 2016

மனத்தைத் திறக்கும் குரலின் மகத்தான ஒளியில்

அந்தப்பாடலை
முதன்முறையாகக் கேட்கிறீர்கள்
சொல்லபோனால்
அந்த மொழியை
தன்னுடைய
காதலைச் சொல்கிறாளா
காதலின் வழி உணரும்
துயரைச் சொல்கிறாளா
அறியவியலா அந்த வரிகளினூடே
இணங்கி வழிகிற
பெண் ஒருத்தியின் குரலில்
உங்களுடைய மனம் திறக்கத் தொடங்குகிறது
அந்தக் குரல்
மழை பொழிந்த
இளமையை மீட்டெடுக்கிறதா
கதறியழுத மறக்கவியலாத கணத்தின்
நினைவை அழைத்து வருகிறதா
என்பதையெல்லாம்
ஒருபோதும் ஆராயவேண்டாம்
நிகழில்
மூடியிருக்கும் மனத்தைத் திறக்கும்
குரலின் மகத்தான ஒளியில்
நனைந்திருப்பதைத் தவிர
இந்தத் தனிமையின் இரவில்
வரமேதும் இல்லை. 
Sakthi Jothi

No comments:

Post a Comment