Search This Blog

Monday, November 9, 2015

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ NILAVU ORU PENNAAKI...... from Film: Ulagam Sutrum Vaaliban (1973)...


நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீர் அலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு களமாக போர்தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழிவிழுந்த கன்னத்தில் 
தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள்தானோ
பவளமென விரல்நகமும் பசும்தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கிவரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாகா வாய்மொழி தான் மலர்ந்தவளோ
செந்தழலின் ஒளிஎடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த பெண் உடலை என்னவென்பேன்
மடல் வாழை துடை இருக்க மச்சமொன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமையெல்லாம் முழுமைபெற்ற அழகியென்பேன்
நன்றி: வாலி

No comments:

Post a Comment