Search This Blog

Wednesday, November 11, 2015

ஒரு பெண்

ஒரு பெண்
தன்னுடைய துயரத்தின் சாயல்
மகள்மீது படிவதை
ஒருபோதும் விரும்புவதில்லை

மகளின் விருப்பங்களைச்
சாத்தியப்படுத்தவே
ஒவ்வொன்றையும்
தேடிக்கண்டடைகிறாள்
முந்தின பருவத்தில்
அவளின் உள்ளிருந்து தெறித்துப்
பரவிய வெளிச்சத்தை
புதிய நிறத்தில்
மகளிடம்
உணர்த்திவிட விழைகிறாள்
அதனாலேயே
கதகதப்பை உணர்ந்தபடி உறங்குகிற
மகளின் கையை விலக்கி
பணியிடம் கிளம்புகிறாள் பெண்.
Courtesy - painting: Rajesh Shah
Sakthi Jothi

No comments:

Post a Comment