Search This Blog

Monday, November 30, 2015

கலியுக கர்ணன் கலைவாணர் சில தகவல்கள் :



என்.எஸ்.கே. ஒரு நாள் இரவு மொட்டை மாடியில் படுத்திருக்கிறார். அப்போது ஒரு திருடன் வந்து மொட்டை மாடியில் குதிக்கிறான். அவனைப் பார்த்து விட்டு மனைவி மதுரம் "யாரோ திருட்டு பய" என்கிறார். என்.எஸ்.கே. எழுந்து பார்க்கிறார். அவன் திருடன் தான். ஆனால் என்.எஸ்.கே தன் மனைவியிடம் இப்படி சொல்கிறார்: "என்னுடன் நாடகத்தில் நடித்தவன்; வாசக் கதவு தாழ் போட்டதால் இப்படி வந்துருக்கான்" எனச் சொல்லி விட்டு அவனுக்கு சாப்பாடு போட்டு பணம் தந்து அனுப்புகிறார். இது தான் என்.எஸ்.கே!
இன்னொரு சம்பவம். இவர் நிறுவனத்தின் கணக்கு வழக்கு பார்த்து விட்டு வருமான வருவாய் அதிகாரி ஹனுமந்த ராவ், கணக்குகளை கொண்டு வந்தவரிடம் "என்னயா நிறைய தர்மம், தர்மம் -னு கணக்கு எழுதிருக்கு. எப்படி நம்புறது?" என்று கேட்க, என்னெனவோ சொல்லியும் அவர் நம்பாததால், இப்படி சொல்லியுள்ளார். "சார் நீங்க வேணா இப்ப நேரா போய் என்.எஸ்.கே யைப் பாருங்க. உங்களை யாருன்னு சொல்லிக்காம, உங்க மகள் கல்யாணத்துக்கு வேணும்னு பணம் கேளுங்க. தர்றாரா இல்லையா பாருங்க" எனச் சொல்ல, அதிகாரி ஹனுமந்த ராவ் அதே போல் போய் ஆயிரம் ரூபாய் பெண் கல்யாணத்துக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தர என்.எஸ்.கே ஏற்பாடு செய்ய, அதைப் பார்த்து விட்டு ஆச்சரியமான ஹனுமந்த ராவ் இப்படி சொல்லி விட்டுக் கிளம்புகிறார்: "ஐயா கிருஷ்ணா, உனக்கு உங்க அப்பா தப்பான பேர் வச்சிட்டார். உனக்கு கர்ணன்னு தான் பேர் வச்சிருக்கணும். பணம் தர்மம் தருவெதேல்லாம் சரி. இனியாவது அதுக்கு ஒரு வவுச்சர் வாங்கிக்குங்க"
கலைவாணர் தன் இறுதிக் காலத்தில் பண வசதி இன்றி மருத்துவமனையில் இருந்தபோது எம்.ஜி.ஆர். அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் பணக் கட்டை அவர் படுக்கைக்குக் கீழ் வைக்க, "ராமச்சந்திரா. பணமா தராம காசா மாத்திக் கொடு. இங்கே இருக்க ஏழைகள் எல்லாருக்கும் அப்ப தான் தர முடியும்" என்றாராம். தன்னைப் பார்க்க வருவோர் வாங்கி வரும் பழங்கள், ஹார்லிக்ஸ் இவற்றையும் கூட மற்ற ஏழைகளுக்குக் கொடுத்து விடுவாராம் என்.எஸ்.கே.

Kalayar Kovil (British played cruel role in this temple)


Kalaiyar Kovil is a place which is situated in Sivaganga District, Tamil Nadu, India which was ruled by the Maruthu Pandiyar. There is a very large Shiva temple. Kalaiyar Kovil is owned by the family of the Rajah of Sivaganga. It is run by their devasthanam, and a trust of the zamindar family of Devakottai.
A lofty Rajagopuram (150 feet) and an imposing Teppakkulam tank (with a mandapam) named Aanai madu adorn this shrine. Airavatam the elephant of Indra is said to have created this tank. There are three shrines in this temple associated with the three functions of creation, preservation and completion. The presiding deity lord shiva is called as Kaaleeswarar, Someswarar, Sundareswarar and the Ambal his consort mother Parvathy is called as Swarnambikai, Soundara Nayagi, Meenakshi. Additional to that there are 3 separate shrines for both the male and female deities of famous Shiva temples in a mandapam outside the shrine.
Kalaiyar Kovil derived its name from the Kaleeswarar temple of the place. Kalaiyar is a corruption of the word Kaleeswaran. During the Sangam period, this place was known as Kaanapair as is seen from the 21st verse in the purananooru sung by Iyur moolakizhar, a poet of the Sangam period. In the 9th Century A.D. Saint Sundara moorthy nayanar described the presiding deity in his devotional songs as Kaalai. Since then the deity was known as Kalaiyar, with the Tamil sufix yar added to it denoting respect. The temple came to be known as Kalaiyar Kovil and this was later adapted to the place also.
Kalaiyarkoil was the seat of the kings from very early days. King Vengai Marban ruled over this area during Sangam period. It was the stronghold of rulers of Sivangangai. It was also the seat of the freedom fighters like Muthu Vaduga Natha Thevar and Maruthu brothers.
On 25 June 1772, the Company forces under Col. Joseph Smitt and Cap. Bonjour marched towards Kalayar Kovil. The second king of Sivaganga, Muthu Vaduga Natha Thevar (1750–1772) and Maruthu brothers defended it. Rajah Muthu Vaduganatha Thevar in anticipation of the English invasion made preparation for defence. But Rajah Muthu Vaduganathar with the many of his soldiers fell dead in the kalaiyarkoil battle. The invading English forces plundered Kalaiyarkoil and collected jewels worth 50,000 pagodas. Kalaiyarkoil temple belongs to Sivagangai Devasthanam.
The temple was kept locked and prayers stopped for some time. it was later re opened and substantial repairs and development were done by Devakottai Zamindar. In fact Shree AL.AR.RM.Arunachalam Chettiar, Zamindar of Devakottai took up sanyas from Koviloor and moved to the vedantha madam at kalayar kovil. He was known as Shreelashree Jamindar Arunachala Gnana Desiga Swamigal and his samadhi is in the rear of the madam. Shree Zamindar swamigal, Senior heir of Devakottai Zamindar Shri AL.AR.Ramasamy Chettiar, Shri AL.AR.RM.Arunachalam Chettiar the then Zamindar of Devakottai in succssion had started Devakottai Zamindar Kattalai Endowment after the demise of his father Devakottai Zamindar AL.AR Ramasamy Chettiar (now known as AL.AR.Trust) with a Registered agreement to Sivagangai Devasthanam to conduct special daily, monthly poojas to God Sorna Kaleeswarar and deity Sornavalli Amman.This is performed continuously by his son and his successor AL.AR.Kalairajah Chettiar, then Devakottai Zamindar, thereafter by his son and his legal heir AL.AR.K.Veerappan Chettiar, then Devakottai Zamindar and presently performed by his son and his legal heir in succession AL.AR.K.VR.ChinnaVeerappan Chettiar, Devakottai Zamindar
The Marudhu Pandiyars and many of their family members were captured at Cholapuram they were infamously hanged at same time in the Fort of Tiruppathur (Sivaganga District, Tamil Nadu) on the English month of October 24, 1801. (Maruthu brothers surrendered to British to save the Kalaiyar koil, the fort they hanged was very close to temple) The gave their life for the temple.

The Stanford Prison Experiment


Based on the real life experiment of the same name conducted at Stanford University in 1971, The Stanford Prison Experiment is a psychological thriller/drama directed by Kyle Patrick Alvarez and starring Ezra Miller, Tye Sheridan, Billy Crudup, Michael Angarano and Thomas Mann.
Based on real events, Dr. Philip Zimbardo (Crudup) came up with a psychological experiment by simulating a prison environment in the basement of Stanford University's psychology department. 24 male students were selected and randomly assigned the roles of either prisoner or guard for a period of 14 days in order to observe their behavioral changes. Almost immediately the guards start abusing their power whilst the prisoners become more and more indoctrinated, whilst Dr. Zimbardo and his staff soon also start being transformed by the experiment.
A careful recreation of the real-life events which took place in Stanford University in 1971, The Stanford Prison Experiment benefits greatly from a uniformly great cast as well as some serious understated claustrophobic cinematography and a sparse yet highly effective soundtrack. Billy Crudup is fantastic as Dr. Zimbardo who completely gets caught up in his own experiment before finally realising things have gotten way out of control and Ezra Miller and Michael Angarano stand out as the most rebellious prisoner and power abusing guard respectively. The Stanford Prison Experiment premiered at the Sundance Film Festival where it won the Alfred P. Sloan Feature Film Prize and the Waldo Salt Screenwriting Award whilst also being nominated for the Grand Jury Prize. Enormously challenging and intense, The Stanford Prison Experiment is thought-provoking, utterly terrifying and, amazingly, completely based on real events.

Sunday, November 29, 2015

சிவபெருமானின் ஸ்தலங்களின் தகவல் சில


பஞ்சலிங்க சேத்திரங்கள்
முக்திலிங்கம் - கேதாரம்
வரலிங்கம் - நேபாளம்
போகலிங்கம் - சிருங்கேரி
ஏகலிங்கம் - காஞ்சி
மோட்சலிங்கம் - சிதம்பரம்
பஞ்சவனதலங்கள்
முல்லை வனம் - திருக்கருகாவூர்
பாதிரி வனம் - அவளிவணல்லூர்
வன்னிவனம் - அரதைபெரும்பாழி
பூளை வனம் - திருஇரும்பூளை
வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர்
பஞ்ச ஆரண்ய தலங்கள்
இலந்தைக்காடு - திருவெண்பாக்கம்
மூங்கில் காடு - திருப்பாசூர்
ஈக்காடு - திருவேப்பூர்
ஆலங்காடு - திருவாலங்காடு
தர்ப்பைக்காடு - திருவிற்குடி
பஞ்ச சபைகள்
திருவாலங்காடு - இரத்தின சபை
சிதம்பரம் - பொன் சபை
மதுரை - வெள்ளி சபை
திருநெல்வேலி - தாமிர சபை
திருக்குற்றாலம் - சித்திர சபை
ஐந்து தாண்டவங்கள்
காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம்
பஞ்சபூத தலங்கள்
நிலம் - திருவாரூர்
நீர் - திருவானைக்கா
நெருப்பு - திருவண்ணாமலை
காற்று - திருக்காளத்தி
ஆகாயம் - தில்லை
பஞ்ச வில்வம்
நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலங்கம
தீபங்கள் பலவிதம்
திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசை யாக தீப அலங்காரம் செய்வர். அதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். இந்த விளக்குகளில் பலவிதங்கள் உண்டு என்று ஞான நூல்கள் கூறுகின்றன. திருக்கார்த்திகை அன்று வீட்டில் குறைந்த பட்சம் இருபத்தேழு தீபங்கள் ஏற்ற வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆகாசத்திற்கு உரிய இடமான முற்றத்தில் நான்கு விளக்குகளும், சமையல் அறையில் ஒன்றும், நடையில் இரண்டும், பின்கட்டில் நான்கும், திண்ணையில் நான்கும் மாடக்குழியில் இரண்டும், நிலைப்படிக்கு இரண்டும், சுவாமி படத்துக்குக்கீழே இரண்டும், வெளியே யமதீபம் ஒன்றும், திருக்கோலமிட்ட வாசலில் ஐந்தும் என விளக்கு ஏற்ற வேண்டும். ஆனால், இந்தக்காலத்தில் வீட்டின் அமைப்பு தனிப்பட்ட முறையில் இருப்பதாலும், மாடி வீடு மற்றும் அபார்ட்மென்டில் வசிப்பதாலும் மேற்சொன்ன முறைப்படி விளக்குகள் ஏற் றமுடியாததால், வசதிக்கு ஏற்ப இருபத்தேழு தீபங்களை வரிசையாக ஏற்றி பலன் பெறலாம்.
தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும். தீப ஒளியிலிருந்து வெளிப்படும் புகையால் கிருமிகள் நசியும். தீபங்கள் ஏற்றுவதில் பல வகைகள் உண்டு. அவற்றில் சில... தரையில் வண்ணப் பொடிகளில் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது தீபங்கள் ஏற்றுவதை ‘சித்திர தீபம்’ என்பர். அடுக்கடுக்கான தீயத்தட்டுகளில் தீபங்கள் ஏற்றுவதற்கு ‘மாலா தீபம்’ என்று பெயர். வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியிலோ, மாடி வீடாக இருந்தால் உயரமான இடத்திலோ ஏற்றப்படும் தீபத்தை ‘ஆகாச தீபம்’ என்பர்.
இந்த ஆகாச தீபத்தை கார்த்திகை மாதம் சதுர்த்தி திதியில் ஏற்றி வழிபட்டால், எமபயம் நீங்கும். நதிநீரில் தீபங்களை மிதக்க விடுவதை ‘ஜலதீபம்’ என்பர். கங்கை கரையோரங்களில் வாழும் மக்கள் யாத்திரையாகச் செல்பவர்கள் கங்கை நதிக்கு மாலை வேளையில் தீபாராதனை செய்து, வாழை மட்டையின் மீது தீபம் வைத்து, கங்கையில் மிதக்க விடுவார்கள். படகு போன்ற வடிவில் உள்ள தீபங்களை நதிநீரில் மிதக்க விடுவதும் உண்டு. இதனை ‘நௌகாதீபம்’ என்பர்.வீட்டில் எல்லா பகுதிகளிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றுவது ‘சர்வ தீபம்’ எனப்படும்.
கோயில்களின் கோபுரங்கள் மீது தீபங்கள் ஏற்றுவதை ‘மோட்ச தீபம்’ என்று சொல்வர். கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று சிவாலயங்களில் மாலை நேரத்தில் பனை ஓலைகளால் கூடுபோல் பெரிதாக செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி கற்பூரத்தின் ஜோதியில் ஏற்றுவது ‘சர்வாலய தீபம்’ மலை மீது பெரிய கொப்பரையில் ஏற்றப்படும் தீபம் அகண்ட தீபம். இந்த தீப ஜோதியை திருவண்ணாமலை பழனிமலை, திருப்பரங்குன்றம், திருத்தணி மலை ஆகிய பல திருத்தலங்களில் தரிசிக்கலாம். ஒரு பெண் தன் இரு கைகளிலும் விளக்கு ஏந்தி நிற்பது பாவை விளக்கு.
திருமகள், யானைகள் நடுவே உள்ளது ‘லட்சுமி விளக்கு.’ திருமண நிகழ்ச்சியில் மண மேடையில் முகூர்த்தப் பானையில் ஏற்றி வைப்பது குடவிளக்கு.’ கோயில்களில் சுவாமி சந்நதியில் ஒளிர்வது நந்தா விளக்கு.’ வீட்டின் மாடத்தில் மாலை நேரத்தில் ஏற்றி வைப்பது ‘மாட விளக்கு.’ மாரியம்மனுக்குப் பிரார்த்தனை தீபம் ஏற்றுவது ‘மாவிளக்கு.’ விநாயகப் பெருமானுக்கு ஏற்றுவது ‘கொழுக்கட்டை விளக்கு.’ இறைவன் சந்நதி முன் தீபம் ஏற்றி வழிபடுவது மண்ணாலான ‘அகல் விளக்கு.’ வாழைப்பழத்திலும், தேங்காய் மூடியிலும், எலுமிச்சம்பழ மூடியிலும், பூசணிக்காயிலும் விளக்குகள் ஏற்றுவது உண்டு.
இல்லத்திலோ கோயிலிலோ விளக்கு ஏற்றும்போது, கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் துன்பம், நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். மேற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றி வைத்தால் கடன் தொல்லை, சனியின் தாக்கம் விலகும். வடக்கு திசை பார்த்து விளக்கு ஏற்றினால் திருமணத்தடை, கல்வி தடை நீங்கும். மேலும் செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும் நிறைந்து காணப்படும் தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது என்பது விதியாகும்.
குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்: ஒரு முகம் ஏற்றினால் மத்தியப் பலன், இருமுகம் ஏற்றினால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மூன்று முகம் ஏற்றினால் கல்வி கேள்வி களில் குழந்தைகள் விருத்தி காண்பர். நான்கு முகம் ஏற்றினால் இல்லத்தில் சகல பொருட்களும் நிறைந்து காணப்படும்; ஐந்து முகம் ஏற்றினால் பீடைகள் விலகி செல்வ வளமும், உடல்நலமும், நினைத்த காரியங்களில் வெற்றியும் கிட்டும்.
தீப ஒளியில் தீய
எண்ணங்கள், கசப்பான
நிகழ்வுகள் எல்லாம்
கருகி.. மகிழ்வான
தருணங்கள் வாழ்க்கையில்

கயா ஷேத்திரம்


முதலில் பிரயாகை–அடுத்து காசி–மூன்றாவதாக கயாவிற்க்கு வந்து சிரார்த்தம் முடிக்கவேண்டும் காரணம் என்னவென்றால் இல்லங்களில் மூதாதையருக்கு திதி கொடுக்கும்போது அட்சய வடம் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது.அகரம் மத்யம் மூலம் என்றும் கூறப்படுகிறது. அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுறது. இந்த ஆலமரத்தின் மூல வேர் பிரயாகையில் இருக்கிறது. நடுப்பாகம் மத்யம் காசியில் உள்ளது. நுனிப்பாகம் அகரம் கயாவில் உள்ளது. இந்த மூன்று ஸ்தலங்களையும் இந்த ஆலமரம் இணைத்து வைக்கிறது.
கயாவில் சிரார்த்தம்: செய்வதில் உள்ள விசேஷம் பிரம்மனின் வரம் பெற்ற கயாசுரன் என்ற அசுரன் தன உடலைத் தொட்டவர்கள் அனைவரும் சொர்க்கம் சேர வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வேண்டினான். அவரும் வரத்தை தரவே விபரீத பலனாக நல்லவர் கேட்டவர் யாராயிருப்பினும் கயாசுரன் மீது பட்டு சொர்க்கம் அடைந்தனர். அதனால் புண்ணியம் செய்தவர் செய்யாதவர் எல்லாம் ஒன்றாகி விட்டது .அதனால் மகாவிஷ்ணுவை சரணடைந்து தேவர்கள் வரத்தை திரும்ப பெற கோரினர்.
விஷ்ணுவும் கயாசுரன் சிரசில் தமது பாதத்தை வைத்து அழுத்தி பாதாளலோகத்திற்கு அனுப்பிவிட்டார் .விஷ்ணு பாதம் பட்டதால் கயாசுரன் புனிதமாகி விஷ்ணுவிடம் வரம் கேட்டார். உலகில் மகனாகப் பிறந்தவன் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டும். பெற்றோர் காலமான பிறகு அவர்களுக்கு திதி கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும்.
என் சரீரமாகிய இந்த இடத்திற்கு வந்து பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் பதவி அடைய வேண்டி வரம் கேட்டார். அதனால் கயாசுரனின் உடலான கயா புனித ஸ்தலமாக விளங்குகின்றது. பல்குனி நதி, விஷ்ணு பாதம் ஆகிய இடங்களில் இரண்ய சிரார்த்தம், அட்சய வடத்தில் அன்ன சிரார்த்தமும் செய்ய வேண்டும்.

Wednesday, November 25, 2015

Lotus


The lotus is one of the world's most celebrated flowers. From ancient times to the present day, it has featured in folklore, religion and the arts in one form or another. It is a symbol of eternity, plenty and good fortune. The flowers are widely used for ornament and as offerings particularly in Buddhism and Hinduism.
The lotus has great significance in the spiritual life of South Asia. It is a symbol of purity and untarnished enlightenment amid ignorance. Particularly sacred in Hinduism and Buddhism, it represents the concept of primordial birth from the cosmic waters of creation. It is frequently mentioned in the ancient Sanskrit scriptures, where it has many names including padma (pink lotus), kamala (red lotus), pundarika (white lotus) and utpala (blue lotus).
Lotus flowers are also associated with the sun, since they open at dawn and close at dusk. The Rig Veda in around 1500 BC mentions white and blue lotuses and the Atharva Veda compares the human heart with the flower. Twin youths who are gods of dawn, known as the Ashvins, wear blue lotus garlands.
Vishnu is represented with a lotus in his navel because mythology states that a golden lotus emerged from his navel as he lay upon the primordial waters and Brahma sat upon it. A lotus also emerged from Vishnu's forehead and the lotus-hued goddess Lakshmi sprang from it. She is therefore also called Padma and iconography depicts her seated on a fully blooming pink lotus, holding a lotus and being purified by elephants. Vishnu also always carries a lotus in his hand and almost all the gods of the Hindu pantheon are seated on lotuses or carry the flower.
These lotus seats, also known as a kamalasana, and lotus pedestals symolise purity in both Buddhism and Hinduism. In Buddhist mythology lotus flowers are thought to have sprang up with each step the Buddha took. The Buddhas, Bodhisattvas and Taras are often depicted holding a lotus flower or seated upon one.
The lotus embodies divine birth and is also likened to a divine womb. It is part of sexual symbolism in Vajrayana Buddhism where the union of the vajra (thunderbolt) which is hard and penetrative and the soft and open lotus are conceived as the divine embrace of compassion and wisdom.
In yoga, one of the main postures for meditation is known as the padmasana or lotus position. The head is held high and the body adopts a cross-legged seated position. This symbolises reaching above towards pure knowledge while being rooted in the material world of experience.

2,200 Year Old Stunning Mosaics Discovered in Ancient Greek City




Tuesday, November 24, 2015

Drug used to treat cancer appears to sharpen memory


What happens with dementias such as Alzheimer's is that brain cells shrink and die because the synapses that transfer information from one neuron to another are no longer strong and stable. There is no therapeutic treatment available that reverses this situation.
New research published in the Journal of Neuroscience found that a drug - RGFP966 - administered to rats made them more attuned to what they were hearing, able to retain and remember more information, and develop new connections that allowed these memories to be transmitted between brain cells.
The drug being tested in this animal study is among a class known as HDAC inhibitors - now being used in cancer therapies to stop the activation of genes that turn normal cells into cancerous ones. In the brain, the drug makes the neurons more plastic, better able to make connections and create positive changes that enhance memory.
Researchers found that laboratory rats, taught to listen to a certain sound in order to receive a reward, and given the drug after training, remembered what they learned and responded correctly to the tone at a greater rate than those not given the drug.
Scientists also found that the rodents were more "tuned in" to the relevant acoustic signals they heard during their training - an important finding because setting up the brain to better process and store significant sounds is critical to human speech and language.
This hypersensitivity in processing auditory information enabled the neurons to reorganize and create new pathways - allowing more of the information they learned to become a long-term memory, said the author.

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய 'கந்த சஷ்டி கவசம்' வீடியோ


நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் புவனேஸ்வரி கவசம் ...


Ruins of temples,sculptural treasure and palaces at Kalinjar fort, Uttar Pradesh


Kalinjar is located in the foothills of the Vindhyan ranges. Approximately 56 km south of Banda, in Uttar Pradesh. It takes its name from the fort which looms large over it. The village is connected by a two- way, all-weather road, which cuts through the landscape and is flanked by large tracts of paddy and mango orchards. Today, the village is a pale shadow of the days when Kalinjar fort was the undisputed seat of power. 
Situated atop an isolated edge of the Vindhyan range (374.9 m), Kalinjar fort has a temple dedicated to Lord Shiva. Also known as Kaal (the destroyer), Shiva belongs to the Hindu triumvirate, along with Brahma (the creator) and Vishnu (the preserver). 
The fort is also mythologically linked to King Bharat after whom India is named. Kalinjar finds mention in the Puranas and the Mahabharata as a sacred location. Historically, the fort has been occupied by King Udyan of Pandu dynasty, the Kalchurias. Pratiharas and Rashtrakutas. However, it was left to the Chandella kings-who built the Khajuraho temples-to turn the fort into their stronghold. 
As you pass through Kalinjar village and walk towards the fort, you can spot remains of the rampart that encircles the village. In the past, access to the village was through four dwars (gates), of which only three-Kamta Dwar, Panna Dwar and Rewa Dwar-remain. The fort can be approached from the steep northern as well as from the motorable southeastern side. The main entrance to the fort is guarded by seven dwars-Alamgir Darwaza, Ganesh Dwar, Chandi Darwaza, Budh-Badra Darwaza, Hanuman Dwar, Lal Darwaza and Bada Darwaza. 
As you reach the crest of the hill, you will see the massive-about a kilometre-long-wide plateau, which was the meeting point for the armies. Inside the fort are Raja Rani Mahal, Chaube Mahal, Rang Mahal and Raja Aman Singh Palace. Most of them have been converted into a museum to house hundreds of stone relics, frescoes, statues, rare sculptures and artefacts recovered from the site. 
The stucco façade of Raja Rani Mahal, which gives the impression of being carved out of marble, is an outstanding example of the craftsmanship of the age. Raja Aman Singh's palace is situated along a huge lake-Kot Tirth. The palace has a huge central courtyard-with two rows of peacock arches. and wide verandahs-and offers from its wide roof, a panoramic view of the Vindhvan range and the scattered ruins of the fort complex. 
Perhaps the most magnificent structure within the fort is the Neelkanth temple. Originally seven storeys tall, only one storey remains intact today. Constructed on a wide. rocky ledge on the northwestern face of the hill overlooking the Kalinjar village, the temple is a glorious example of Indian art. A flight of wide steps cuts from the fort into the rock side and brings one down to this marvellous example of superb craftsmanship. 
Entry into the dark, cavern-like sanctum sanctorum of the temple complex, housing some ninth century carved figures of Lord Shiva, his consort Parvati and son Karthikey besides others, is through a circular maze of elaborately carved pillars. Pillar tops have been carved with kinnars (angels) supporting the beans. Outside, in a pool stands a colossal 18-armed statue of Kaal Bhairav, marvellously cut into the rock face. Dexterously ornamented with a garland of skulls, this 24-ft-high image represents the fearsome aspect of Lord Shiva. Atop the temple is the Swargarohan Kund (pool) with an exquisitely chiselled rock pillar standing in a pooi of water that trickles from the striations in the rocks above. The pillar has stunningly carved statues of Lord Vishnu and his consort, Lakshmi. An engraved stony plaque on another pillar showcases dates, activities and other details of the Chandella period.





























யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.
ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்
ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.
ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
மெசேஜ்க்கு வந்த பதில்கள்
நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??
நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..
நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???
கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
அப்படி போடுங்க அரிவாளை......

Aekam Award Winning Short Film



Monday, November 23, 2015

ஸ்ரீீஆதிசங்கரர் அருளிய "ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம் “ !!!


ஸ்ரீீஆதிசங்கரர் அருளிய "ஸ்ரீசுப்ரமண்ய புஜங்க'த்தின் தமிழ் ஆக்கம் கீழே தரப் பட்டுள்ளது. அதை தினமும் ஸ்ரீசுப்ர மண்யரை மனதில் நினைத்துப் பாராய ணம் செய்து வந்தால், வளமான வாழ்க் கையும் நிலையான செல்வமும் பெற்று நலமுடன் வாழலாம்.
பிள்ளையாய் நின்றே விக்ன
பெருமலை தகர்க்கும் தெய்வம்
தொல்லிறை சிவமாம் சிங்கம்
தொழுதிடும் யானைத் தெய்வம்
வெள்ளை வாரணன் பிரம்மாவும்
விரும்பியே தேடும் தெய்வம்
நல்லருள் உருகணேச
நம் தெய்வம் அருள்வதாக.
திறமிலேன் சிறிதும்; உண்மை
தெரிந்து நற் கவியைப் பாட!
உரைநடை அறியேன்: வார்த்தை
ஒலியோடு பொருளும் தேறேன்!
அறுமுகம் கொண்ட தெய்வ
அறிவே என் உள்ளிருந்து
பொருள் நிறை கவியாய் வந்து
புனிதமாய்க் காட்சி நல்கும்!
மயிலேறி வருவோனாகி,
மனங்கவர் எழிலோனாகி,
பயில் மறைப் பொருளோனாகி
பரந்தங்கு மறைவோனாகி
கயிலையோன் மகனாய், மேலோர்
கருத்தில் வாழ் தெய்வமாகி
தயவினால் உலகம் காப்போன்
தாள் மலர் வணங்குகின்றேன்.
"அடைந்திடும் போதே என்றன்
அலைவாயில் கோவில் தன்னைக்
கடந்தனர் பிறவி என்னும்
கடலினை' என்று காட்டி
இடங்கொண்டங்கினி திருக்கும்
இளையவேல் முருகன் தன்னை
படியெலாம் காக்கும் சக்தி
பாலனைப் போற்றுகின்றேன்!
"கோவிலின் முன்வந்தென்னைக்
கும்பிட்டு வணங்குவோர்க்குத்
தீயவை, கடலின் மீது
திரை தோன்றி மறைவதைப் போல்
மாய்வுறும்' என்று காட்டி
மனிதரைத் தேற்றுகின்ற
தூய நல் குகனை என்றும்
தொழுவேனுள் மலரில் வைத்தே!
கந்தமா மலையின் மீது
காலடி வைத்த போதே
சுந்தரக் கயிலை யேறி
சுக முற்றோர் ஆவரென்று
வந்தவர்க் குரைப்பாரைப் போல்
வடிவேலன் அங்கிருக்கும்!
அந்த நற்றெய்வம் என்றும்
அகமகிழ்(வு) அருள்வதாக!
தண்கடற் கரையின் ஓங்கித்
தவத்தவர் விழைவதாகி
மண்ணவர் பாவமெல்லாம்
மாய்த்திடும் சுகந்தமென்னும்
புண்ணிய மலைக்கு கைவாழ்
பொங்கொளி குகனை அன்பர்
துன்பங்கள் துடைத்தாள் வோனைத்
துதிக்கின்றேன் விருப்பினோடு!
உலகினர் விருப்பமெல்லாம்
உவந்தருள் ஒளிர்பொன் வீட்டில்
மலர் நிறை மணி மஞ்சத்தில்
மகிழ்ந்திருப்பவனைத் தேவர்
தலைவனைக் கார்த்திகையார்
தனயனைக் கோடி சூரிய
ஒளிமிகு வடிவினோனை
உணர்வுடன் தொழுவேன் என்றும்!
ஒலிக்கின்ற சிலம்பினோடும்
ஒப்பிலா அழகினோடும்
சொலிக்குஞ்செந் நிறத்தினோடும்
சுடரும் நின் கமலபாதம்
அளிக்கின்ற அமுதம் மாந்தி
ஆறுமுகத் தேவே என்றன்
உளத்துயர் வண்டு நாளும்
உயரின்பம் அடைவதாக!
பொன்னொளி வீசுகின்ற
புகழ்மிகு பட்டினாலும்
இன்னொலி சலங்கையொட்டி
யாணத்தின் ஏற்றத்தாலும்
மின்னொளி அரை ஞாணாலும்
மேன்மை கொள் நின்னிருப்பின்
தன்னெழில் போற்றி வாழ்வேன்!
சண்முகத் தேவே என்றும்!
தாரகக் கொடியோன் தன்னைத்
தடிந்தவேல் முருகா! இந்தப்
பாரகம் அடங்கக் காக்கும்
பரிவினால் உயர்ந்து வள்ளி
மார்பகச் சாந்தில் தோய்ந்து
மணக்கும் நின் அகன்ற மார்பாம்
சீரகம் தனை வணங்கிச்
சிந்தித்து வாழ்வேன் என்றும்!
மருவிடும் அண்டமெல்லாம்
மலைந்திடச் செய்தும், இந்த்ரன்
செனுநரைத் தேய்த்தும் வேதன்
செருக்கினைத் தீர்த்தும் நன்மை
பெருகிடக் காத்தும் யானைப்
பெருங்கையும் நாண ஓங்கிக்
கருணை செய் நின் ஈராறு
கைகளே சரணம் கந்தா!
அழகனே! நின்றன் கோலம்
அளவிட்டிங் குரைப்பாருண்டோ?
மழைபொழி பருவம் தன்னில்
மங்குலில் வானில், திங்கள்
முழுமையாய் என்றும் ஆறாய்
முளைத்திடின் களங்கமின்றி
எழில்வளர் நின்முகங்கட்(கு)
ஈடாகும் ஒருகால் என்பேன்!
புன்னகை அன்னம் தோன்றப்
புகழ் கடைக் கண்களான
வண்டுகள் இனிதியங்க
வண்சுவை அமுதைச் சிந்தும்
இன்னுதடு இதழ்கள் கொண்டு
எமக்கருள் சிவகுமாரா!
நின்முகக் கமலம் ஆறும்
நேரினில் யான் கண்டுய்ந்தேன்!
அருள் நிறை முருகா! நீண்டு
அகன்ற நின் விழியீராறும்
கருணையைச் சுரந்து நல்கும்
கடல்களே! அவற்றால் என்றும்
வரையிலா தெவர்க்கும் நீதான்
வழங்கும் நின் அருட்பார்வையில்
ஒரு சிறிதென்மேல் பெய்தால்
உமக்கொரு குறையுண்டாமோ?
என்னருள் குமரா! வாழ்க,
இனிது என ஈசனார் தாம்
அன்பொடிம் மந்த்ரம் கூறி
அறுமுறை மோந்தங்குச்சி
இன்புறற் கேற்றவாகி
எழில் ஒளிர் முடிகள் தாங்கி
மண்பொறை கொளும் நின்ஆறு
மலர்தலைக்கென் வணக்கம்!
மணியணித் தோள்வளையால்
மாலையால் குண்டலத்தால்
அணிபெறு கன்னம் தன்னால்
அழகு கை வேலால் அன்போடு
அணிந்திடும் மஞ்சள் பட்டால்
அழகிற்கோர் வடிவன் ஆன
இனியனாம் முருகன், ஈசன்
ஈன்றவன் இருக்க என்முன்!
வருக என் செல்வ என்றே
வாஞ்சையாய்ச் சிவனழைக்க
விரைவில் தாய்மடியை விட்டு
விருப்புடன் சென்ற பால
முருகனை, உவகை பொங்க
முன்னவன் தழுவிக் கொண்ட
சிறுவனைச் சேயோன் தன்னைச்
சிந்தித்து வணங்குகின்றேன்!
பரமன் தன் குமரா! சேனா
பதி! குகா! கந்தா! வேலா!
குறமகள் வள்ளி தன்னைக்
கொண்டவா! குறையில் செல்வா!
அறங்கொல்தாரகனை மாய்த்த
அருளாளா! அடியார்க் கின்ப
வரந்தரும் மயில்மேல் வீரா!
வந்தெனைக் காப்பாய் என்றும்!
அடங்கியே புலன்கள் ஐந்தும்
அறிவற்றுச் செயலும் அற்று
மடங்கிட நினைவும் நெஞ்சில்
மல்கியே கோழை பொங்க
நடுங்கிடும் உடலினின்று
நமனுயிர் பிரிக்கும்போது
தடையிலா தென்முன் வந்து
தயை நிறை குகனே நிற்பாய்!
கொடுமை செய் கால தூதர்
கோபத்தோ டென்முன் வந்து
கடலென ஆர்ப்பரித்துக்
கலங்கிடச் செய்யும்போது
நடுங்கிடேல் என்று கூறி
ஞானவேல் கையிலேந்தி
உடன் எதிர் மயிலில் தோன்றி
உளத்துயர் தீர்ப்பாய் அப்பா!
கருணையங் கடலே! அந்திக்
காலத்தில் வாயடைத்தொன்(று)
உரைக்கவும் மாட்டேனாகி
ஊமையாய்க் கிடப்பேன் அப்போது
இறைவனே! நினைப் போற்றாத
இழுக்கினால் துறந்திடாதீர்!
குறை நீக்கிக் கொள்ள இன்றே
கும்பிட்டேன் வேண்டி வேண்டி!
ஆயிரம் அண்டங்கட்கோர்
அதிபனாம் சூரன் என்னும்
தீயனோடுற்ற சிங்க
முகனும் தாரகனும் எல்லாம்
மாயவே கருணை கொண்ட
மாவீர! என் மனத்துள்
ஏயுமோர் துயர் வீழ்த்தாயேல்
என் செய்வேன்! எங்கு செல்வேன்!
வளர் துன்பச் சுமையால் என்றும்
வாடுவேன் நாயேன் நீயோ
தளர்பவர் தம்மையெல்லாம்
தாங்கிடும் கருணாமூர்த்தி!
மலைமகள் மைந்தா! உம்மை
மறந்து வேறெங்கும் செல்லேன்!
அளியன் நின்னை துதிக்கவொட்டாது
அலைக்குமென் மனநோய் தீர்ப்பாய்!
தீய தாரகனை கொன்றோய்!
திவ்விய இலையில் நின்றன்
நேயமார் நீற்றைக் கண்டால்
நீரிழி(வு) என்புருக்கிப்
பேயொரு குன்மம் குஷ்டம்
பெருகுகாக் கைவலிப்பும்
சாயபைத்தியமே மூலம்
சளிச்சுரம் அனைத்தும் ஓடும்!
கண்ணவன் வடிவே காண்க!
காதலன் புகழே கேட்க!
அன்னவன் சரிதமேவாய்
அன்புடன் உரைக்க; கைகள்
பண்ணுக தொழில வற்கே!
பணிகட்கே உடலம் ஆக!
எண்ணங்கள் எல்லாம் அந்த
எழில் குகனிடமே சேர்க!
அன்புடன் பக்தி செய்வோர்,
அருந்தவ முனிவர்க் கெல்லாம்
இன்பத்தை யருளு தற்கிங்(கு)
எண்ணற்ற தெய்வமுண்டு!
பண்பிலா ஈனர் கட்கும்
பரிந்தருள் புரிவதற்குச்
சண்முக மன்றி வேறு
சாமியான் காணேன் காணேன்!
செந்தில் வாழ் முருகா! என்னைச்
சேர்ந்துவாழ் மனைவி மக்கள்
பந்துக்கள் பசுக்கள் ஆண் பெண்
பலரும் நின் பதமே பற்றிச்
சிந்தித்தல் துதித்தல் யாகம்
செய்தல் சேவித்த லென்னும்
இந்த நற்பணிகளே செய்(து)
இருக்க நீ அருள்வாய் அப்பா!
மாயக்கி ரவுஞ்சம் என்னும்
மலையினைப் பொடியாச் செய்தோய்!
நோயென துடலிற் செய்யும்
நுண்புழு விலங்கு புட்கள்
ஆயவை அனைத்தும் நின்றன்
அயில் வேலால் துளைக்கப்பட்டும்
போயழித்திடுக! இந்தப்
புவியினை தாண்டி அப்பால்!
தெய்வ யானை மணாள!
தேசத்தில் அன்பு மைந்தன்
செய்திடும் பிழையைப் பெற்றோர்
சிந்தையில் பொறுத்தி டாரோ!
உய்வருள் மகேச! நாயேன்
ஒரு சிறு குழந்தை! நீயோ
வையத்தின் தந்தை! என்றன்
வசையெலாம் பொறுத்தருள்வாய்!
கந்தவேள் போற்றி! நீ வாழ்
கடற்கரை தனக்கும் போற்றி!
சந்தமா மயில் தனக்கும்
சக்தி வேலுக்கும் போற்றி!
வந்தனை போற்றி, ஆட்டு
வாகனம் தனக்கும் கோழிச்
செந்திருக் கொடிக்கும்! மீண்டும்
சேவடி போற்றி! போற்றி!
ஈசனார் மகனே வெல்க!
எல்லோர்க்கும் உறவே, வெல்க!
மாசிலாப் புகழோய் வெல்க!
வானுயர் பதத்தோய் வெல்க!
ஆசையோ டன்பர் ஆடும்
ஆனந்தக் கடலே வெல்க!
ஏசிலா இன்பம் ஈவோய்!
என்றும் நீ வெல்க! வெல்க!
போற்றியே குமரன் தன்னைப்
புகழுமிப் புஜங்க மாலை
சாற்றியே வணங்கும் அன்பர்
சன்மார்க்க ராகி, உள்ளம்
ஏற்றிடும் மனைவி மக்கள்
இருஞ்செல்வம் நீண்ட ஆயுட்
பேற்றுடன் வாழ்ந்து கந்தன்
பெரும் பதம் அடைவர் திண்ணம்!
வாழ்க சீரடியாரெல்லாம்.

புத்திர தோஷம்,நாகதோஷம்,பிரம்மஹத்தி தோஷம் பற்றியும், அதற்கான பரிகாரம் !!!



நாகதோஷத்தை நீக்கும்
ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும், குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள். ஒருவர், நாக சதுர்த்தி தினத்தன்று வயலில் ஏர் இறங்கி உழுதார். அப்போது சில பாம்பு குட்டிகள் ஏரில் சிக்கி இறந்துவிட்டன. கோபம் கொண்ட தாய் நாகம், அந்த குடும்பத்தையே கொன்றது.
ஆனால் அவரது ஒரு மகள் மட்டும் தப்பினாள். பக்கத்து கிராமத்தில் வசித்த அவள், தனது வீட்டு சுவரில் நாகத்தின் படம் ஒன்றை வரைந்து அதை பயபக்தியுடன் வணங்கி வந்தாள். இதை கண்ட தாய் நாகம், அவளை தீண்டாமல் மனம் மாறி திரும்பியது. திரும்பும்போது, அந்த பெண்ணிடம், `என்ன வரம் வேண்டும்' என்று கேட்டது.
`நீ தீண்டியதால் இறந்த என் குடும்பத்தினர் மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என்று கேட்டாள் அந்த பெண். தாய் நாகம் மனம் இரங்கி, அந்த குடும்பத்தினரை உயிர்பிழைக்கச்செய்தது. மேலும், நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.
நாகதோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி நாளில், ஏதாவது ஒரு கோவிலில் நாகம் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது. அவ்வாறு செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். இது வரை இல்லாமல் இருந்த குழந்தை பாக்கியமும் கிட்டும். வாழ்க்கையில் அனைத்துவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும்

புத்திர தோஷம் பற்றியும், அதற்கான பரிகாரம்
பலன்களையும் பார்ப்போம். ஒருவருக்கு ஜாதகம் கணித்து பலன்களைச் சொல்லும் பொழுது, ஜோதிடர்கள் பதவி பூர்வ புண்ணியனாம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நம்முடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அல்லது கர்ம வினைப்படியே, இந்த ஜென்மத்திற்கான பாக்கியம், யோகம் முதலியன கிட்டும். மனிதனாகப் பிறந்தவன், பிறப்பின் அர்த்தமான சந்ததியைப் பெருக்க வேண்டும். அதனால் தான், திருமணத்தின்போது மணமக்களை வாழ்த்த, `பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க'' என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
பதினாறு பேறுகள் என்பது, பதினாறு வகையான பாக்கியத்தைக் குறிக்கும். இந்த பேறுகள் வாழ்க்கையில், எல்லோருக்கும் கிட்டி விடுவதில்லை. சில கிடைக்கும், சில கிடைக்காது, பதினாறு பேறுகளில் தலையாய பேறாகச் சொல்லப்படுவது புத்திரப்பேறு.
மற்ற பேறுகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, புத்திரப்பேறு கண்டிப்பாக அவசியமானது என்று கருதப்படுகிறது. காரணம், அதுவே மனித வாழ்வின் அர்த்தமாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் அபிராமி பட்டர் கூட `தவறாத சந்தானம் வேண்டும்'' என்று அபிராமியிடம் வேண்டுகிறார்.
திருமணமான 10 மாதத்தில் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து விடுகிறது. சிலருக்கு 2,3 வருடங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது. இன்னும் சிலருக்கு 8,10, 12 ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. சிலருக்கு கர்ப்பம் தரித்தாலும் குழந்தை நிலைப்பதில்லை. இடையிலேயே கருச்சிதைவு ஏற்படுகிறது.
சிலருக்கு குழந்தைப் பேறே கிடைப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்று அலசி, ஆராயும் போது, ஜோதிட சாஸ்திரம் கர்ம வினையைச் சுட்டிக் காட்டுகிறது. அந்த வினைப்படி தான் புத்திர பாக்கியம் கிட்டுகிறது. புத்திர பாக்கியம் கிட்டாதவர். புத்திரதோஷம் உடையவராகக் கருதப்படுகிறார்.
சென்ற பிறவியில் பெற்றோரைக் கொடுமைப்படுத்தியதால் பித்ரு சாபம் ஏற்படுகிறது. இதனால் இப்பிறவியில் பெற்றோரோடும், பிள்ளைகளோடும், அமைதியான வாழ்க்கை வாழ முடியாமல், தனித்து, தவித்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.
இல்லையென்றால் உறவுகளோடு வாழ்ந்தாலும், உதாசீனமும், அவமானமும் அனுதினமும் நடக்கும். உடன் பிறந்தவர்களுக்கு சேர வேண்டிய சொத்து, சுகங்களைத் தராமல், தானே அபகரித்த வாழ்ந்தாலும், அதனால் புத்திர தோஷம் ஏற்படும்.
பூர்வீக சொத்துப் பிரச்சனையில், அதற்கு உரிய உறவுகளுக்கு உரிய பங்கைத் தராமல் போனாலும், உறவுப்பகை, புத்திரர்களால் பகை, அவமரியாதை உருவாகும். இதன் விளைவாக, இப்பிறவியில் தான் பெற்ற பெண், கண்முன்னே வாழாவெட்டியாக வந்த நிற்பதையும், விவாகரத்து பெற்று வாழ்க்கையில் இருந்து விலகி நிற்பதையும் வேதனையுடன் பார்க்க வேண்டிவரும்.
முற்பிறவியில் ஆன்மீக அடியவர்களை, மகான்களை அவமானப்படுத்தியிருந்தால், புத்திர தோஷம் ஏற்பட்டு, பிறக்கும் குழந்தை வளர்ச்சியற்ற குழந்தையாக, ஊனமுற்ற குழந்தையாகப் பிறக்கும். கூன், குருடு, செவிடு போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மந்திர சாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷமும் உண்டு. இந்த தோஷத்திற்கு ஆட்பட்டவர்கள். வாழ்வில் எதிர்மறையான காரியங்களையே செய்வார்கள். வேண்டாதவர்களைப் பழி தீர்க்க பில்லி, சூனியம் வைப்பார்கள். மறந்தும் குலதெய்வத்தை வணங்கி விட மாட்டார்கள்.
இதன் பலனாக அமானுஷய நோய்கள் அதாவது புகழ் பெற்ற மருத்துவர்களுக்கும் புலப்படாத நோய்கள் ஏற்படும். பிள்ளைகள் மூலமாக தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். செய்தொழில் சிறக்காது. செர்ந்த பணம் நிலைக்காது.
அமைதி என்பது மருந்துக்கும் இருக்காது. எனவே புத்திரதோஷம் உள்ளவர்கள், சென்ற பிறவியிலோ, இந்தப் பிறவியிலோ அறிந்தும், அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி, திருந்தி உரிய பரிகாரம் செய்தால், கெடு பலன்களின் கடுமையைக் குறைத்துக் கொள்ளலாம்.
இனி ஜோதிட ரீதியாக புத்திர தோஷத்தை ஆராயலாம். ஜெனன கால ஜாதகத்தின்படி பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது 5-ஆம் இடமாகும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால், ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது.
5-ஆம் இடத்தில் உள்ள பாவக்கிரகங்களை, சுபகிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபக் கிரகங்கள் வேறுபடும்) குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5-ஆம் இடத்திற்கு உரிய கிரகம், பாவக் கிரகங் களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். 5-க்கு உரியகிரகம், 8-இல் மறைந்திருந்தாலும் தோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 5-க்கு உரிய கிரகம், லக்னத்திற்கு 3-இல் இருந்தால் சந்தான தோ`ம் உண்டாகும். 5-க்கு உரிய கிரகம் 6,7,8-இல் 4 இருந்தாலும் புத்திர தோஷம் உண்டு. 12-இல் இருந்தால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், 5-க்கு உரியவன் 3,6,7,8,12- இல் இருந்தால், புத்திரதோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 10-க்கு உடையவன். 8-இல் இருந்தாலும் சந்தான தோஷம் உருவாகும். லக்னாதிபதி புதனாக இருந்து சந்திரன் 10-இல் இருந்து, சுக்கிரன் 7-லிலும், 4-ஆம் இடத்தில் ஏதாவது ஒரு பாவக்கிரகம் இருந்தால், வம்சம் விருத்தியாகாது.
பிரம்மஹத்தி தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள்
பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம்.
பிரம்மஹத்தி தோஷம் பற்றியும், அதற்கான பரிகார பலன்களையும் பார்ப்போம். ஐந்து மகாபாதகங்களைச் செய்பவர்கள் கொடூர நரகத்தில் சிக்கி அல்லல்படுவர். அவர்களோ இப்பூமியில் திரும்ப திரும்ப பிறப்பெடுப்பர் என்று சொல்லப்படுகிறது.
ஐந்து மகாபாதகங்களில், மிகப்பெரிய பாதகமாகச் சொல்லப்படுவது ஒரு தர்ம ஆத்மாவைக் (உயர்நிலை ஆத்மா) கொல்வது. சாதாரணமாக பிரம்மஹத்தி என்ற சொல்லிற்கு பிரம்ம என்றால் பிரம்மன், பிராமணன் என்றும் ஹத்தி என்றால் கொல்லுதல் என்றும் பொருள். பிரம்மனை நோக்கி, தேடிச் செல்பவனை பிராமணன் என்றும் சொல்கிறார்கள்.
பிராமணன் என்றழைக்கப்படுபவன் - பிறப்பினால் அல்ல, தன்னுடைய ஆன்மீக அர்ப்பணிப்பால் உயர்ந்தவன் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மீக ஒளிபொருந்திய தெய்வீக உடலைச் சிதைத்தால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. பிராமணனை (ஆன்மீகவாதியை, தர்ம ஆத்மாவை) கொல்வது பிரம்மஹத்தி தோஷம் என்று சுருக்கமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
பிராமணனைக் கொன்றால் மட்டுமல்ல, குருவைக் கொன்றவன், குரு பத்தினியை அடைந்தவன். பெற்ற தாயைக் கொன்றவன், பெண்களைக் கொடூரமாகச் சிதைப்பவன், தங்கம் திருடியவன் ஆகியோருக்கெல்லாம் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இந்த தோஷம் ஏற்பட்டால், வாழ்க்கை என்பது நரகமாக, சித்ரவதைக் கூடமாகவே அமையும், துன்பம் என்றால் அப்படியொரு துன்பத்தை அனுபவிப்பார்கள். அதுவும் தனது கடைசிகால வாழ்க்கையில் அவர்கள் படும் அவலத்தைக் காண சகிக்க முடியாது.
பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும். லக்னத்திற்கு 4-ஆம் இடத்தில் பாவிகள் இருந்து, 6,8. 12- இல் சுபக்கிரகங்கள் இருந்தாலும். பிரம்மஹத்தி தோஷம் உண்டு. அதாவது ஜாதகர் முன்ஜென்மத்தில் மிகப்பெரிய பாதகத்தைச் செய்திருப்பார் என்று சாஸ்திரம் சொல்கிறது.
ஒருவரின் ஜனன கால ஜாதகப்படி, லக்னத்திற்கு 5,8,9-ஆம் வீடுகளுக்கு அதிபதி பாவியாக இருந்தாலோ அல்லது பாவியர்களுடன் இருந்தாலோ பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். தோஷத்தின் வெளிப்பாடாக ஜாதகருக்கு ஏதாவது ஒரு கொடிய நோய் வரலாம்.
சந்ததி இருக்காது. மணவாழ்க்கை இனிக்காது. ராகு தங்கிய வீட்டிலிருந்து 5,9-ஆம் இடங்களில் சனியும், வியாழனும் சேர்ந்து இருந்தாலும் சண்டாளன் ஆவான். சனியும், வியாழனும் சேர்ந்திருப்பது நல்லதல்ல. சனி, வியாழன் சேர்க்கையும் ஒரு பாதத்தில் அல்லது 10 டிகிரிக்குள் இருக்க வேண்டும்.
பிரம்மஹத்தி தோஷ சம்பவங்கள்
சிவன்:- பிரம்ம தேவனின், ஐந்து தலைகளில் ஒன்றை, சிவபெருமான் கிள்ளி எறிந்தார். கொய்த தலையை, கையில் எடுத்துக் கொண்டு அலைந்தார். இறுதியில் கண்டிïர் திவ்விய தேசத்தை வந்தடைந்தார். ஸ்ரீமன் நாராயணனை வணங்கி, புஷ்கரணையில் மூழ்கி எழுந்தார்.
கையில் ஓட்டியிருந்த கபாலம் நீங்கியது. சிவபெருமானப் பீடித்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த இடம் சாப விமோசன பூமியாகக் கருதப்படுகிறது. அங்குள்ள புஷ்கரணியும், கபால தீர்த்தமாகப் போற்றப்படுகிறது.
இந்திரன் : ஒரு முறை, இந்திரன் விருத்ரசூரனை அழித்து விட்டான். இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. விருத்ரன், ஒரு பிராமணன் என்பதினால் தான். இந்திரனையும் பிரம்மஹத்தி தோஷம் சுற்றி வளைத்தது. தோஷத்தைப் போக்க இந்திரன் திருப்புளியங்குடி திவ்ய தேச தீர்த்தத்தில் நீராடினான். பூமிபாலரையும் வழிபட்டான். பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
ராமாயணம் : -ராமாயண காவியத்தில், தசரதருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் எப்படி ஏற்பட்டது என்பது விளக்கப்பட்டுள்ளது. தசரதர், தனது இளம் வயதில் காட்டில் வேட்டையாடும்போது, கண் தெரியாத பெற்றோரைக் காப்பாற்றி வந்த ஓர் அந்தணனை அவன், தனது குடத்தில் தண்ணீர் எடுக்கும் ஓசையை வைத்து, யானை என நினைத்து, அம்பெய்திக் கொன்றுவிட்டார்.
அவருக்கு இடையில் ஏற்பட்ட இன்னல்களை வைத்து, அந்தணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. ராமரும், வேதம் அறிந்த, கலைகள் கற்ற இராவணனைக் கொன்றதற்காக, சேதுசமுத்திரக்கரையில், தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க `மணல் லிங்கம்'' வைத்து பரிகாரம் செய்ததாக இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரத்தலங்கள்
பிரம்மஹத்தி தோஷ ஜாதகர்கள், தங்களது பாவத்தைக் கழுவ, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்மூர்த்தி தலங்களுக்குச் சென்று வழிபடலாம். மூம்மூர்த்திகளும் சேர்ந்து காட்சிதந்து அருள்புரியும் திருச்சிக்கு அருகே உள்ள உத்தமர் கோயில். கொடுமுடி, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய ஆலயங்களிலும் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் ஆலயத்தில், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சன்னிதிக்குச் சென்று சக்கரத் தாழ்வாரை வழிபட்டால் பாவங்கள், பாதகங்கள் நீங்கும். திருநள்ளாறு சென்று நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டும் தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம்.
திருப்புல்லாணி அருகே தேவிபட்டணத்தில் நவபாஷாணம் என்றழைக்கப்படும் சமூத்திரக் கரையில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக்கிரகத்தை வழிபட்டு, பாவ நீக்கம் செய்து கொள்ளலாம். கலியுகத்தில், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட ராமேஸ்வரம், மிக முக்கிய தலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தம் உட்பட, அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, சங்கல்ப பூஜை செய்ய வேண்டும். ராமேஸ்வரத்திற்கு வீட்டிலிருந்து, நடைபயணம் செய்தால் மிக நல்லது.
பரிகார நடைமுறைகள் : - பரிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி, சேர்ந்து செய்ய வேண்டும். குழந்தைகளையும் சேர்த்துத்தான் பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் போது திருநீறு, திருமண், சந்தனம் அணிய வேண்டும். முழு நம்பிக்கையோடு ஈடுபாட்டோடு, ஒற்றுமையோடு பரிகாரம் செய்ய வேண்டும்.
வேதம் கற்றறிந்தவர்களுக்கு, ஆன்மீக அன்பர்களுக்கு தானம் செய்ய வேண்டும். சூரியன், உச்சிப் பொழுதிற்கு வருவதற்கு முன்பாகவே, பரிகாரங்களைச் செய்ய வேண்டும். மாலை, இரவு நேரங்களில் தெய்வ வழிபாடு செய்யலாமே தவிர, பரிகாரங்களைச் செய்யக் கூடாது.
விதிவிலக்காக அந்திக்குப் பிறகு செய்யக் கூடிய சில வழிபாடுகள், படையல்கள், பரிகாரங்களைப் பற்றியும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பரிகார பூஜையின் போது குடம், சொம்பில் தீர்த்தம் வைப்பர், பூஜை முடிந்த பின் அந்தத் தீர்த்தத்தைக் குடிப்பர்.
மீதமுள்ள தீர்த்தத்தை வீட்டில் உள்ள கிணற்றில் கொட்டலாம். வீட்டில் கிணறு இல்லாவிட்டால், அடுத்தநாள் காலையில் பாதுகாப்பாக வைத்திருந்து, தலையில் ஊற்றிக் குளிக்கலாம், எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டின் குளியல் அறையிலோ, சாக்கடையிலோ கொட்டி விடக் கூடாது. சுக்கில பட்சம் மற்றும் வளர்பிறை நாட்களில் செய்யும் பரிகாரம் சிறப்பானது.
கிரகத்தின் ஜனன மாதம், கிரகத்தின் கிழமை, கிரகத்தின் நட்சத்திரம் ஆகியன ஒன்று சேர்ந்த நாளாக இருந்தால், அது மிக மிக பரிகாரம் செய்ய உகந்த நாளாகும். புதனுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், புதன், சிம்மத்தில் இருந்தால், சூரியனுக்குரிய ஞாயிறு அன்று செய்வது நல்லது.
ஜென்ம நட்சத்திரம் வரும் காலத்தில், சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் ஜென்ம நட்சத்திரமே சிறப்பானது. சுபமான காரியங்களுக்கு வளர்பிறையும் அதிகத் துன்பம் கொடுக்கும் விஷயங்களுக்கு கிருஷ்ணபட்சத்திலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்வதற்கு உகந்த இடங்களாக - குளக்கரை, ஆற்றங்கரை, கடற்கரை, சிவன், விஷ்ணு ஆலயங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
இருக்கும் வீட்டில் செய்யக் கூடியவைகள்- கணபதி ஹோமம், சுதர்சனஹோமம், நவக்கிர ஹோமம் மற்றும் லட்சுமி நாராயணபூஜை ஆகியனவாகும். பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள், உரிய பரிகார பூஜை செய்து, தோஷம் நீங்கி, அனைத்து வளங்களும் பெற தேவி ஸ்ரீ கருமாரியம்மன் அருள் புரிவாள்.