Search This Blog

Tuesday, October 20, 2015

வாசிங்டன் டி சி யில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் நினைவிடம்.

இது வாசிங்டன் டி சி யில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் நினைவிடம்.இந்த சிலை முழுவதும் வெண் கருங்கல்லால் ஆனது.30 அடி உயரமுள்ள இந்த சிலையை வடிவமைத்தவர் பெயர் லேய் ஈக்சின்.வெஸ்ட் பொட்டமாக் பூங்கா எனப்படும் இடத்தில் அமைந்துள்ள,,இந்த நினைவிடத்திற்கு அருகில் தான் லிங்கன் நினைவிடமும்,,ஜெபர்சன் நினைவிடமும் உள்ளது.

1929 ம் ஆண்டு,,ஜனவரி 15 ம் தேதி,அமெரிக்காவின், அட்லாண்டா வில் பிறந்தவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
இவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் என்றால்,,சீனியர் யார்??! இவரின் அப்பா தான்.நம் ஊரில் தாத்தாவின் பெயரை,,பேரனுக்கு வைப்பது போல,,மார்ட்டின் லூதர் கிங் ன் அப்பா,,தன் பெயரான மார்ட்டின் லூதர் கிங் என்பதையே தன் மகனுக்கும் வைத்தார்.குழப்பம் வராமல் இருக்க,,மகனை மார்ட்டின் லூதர் கிங் ஜீனியர் என்கிறோம்.கிறிஸ்தவ பாதிரியாரான,,லூதர் கிங் சீனியர்,,தனக்கு பிடித்த பாதிரியாரின் பெயர்,,மார்ட்டின் லூதர் கிங் என்பதால், அதையே தன் மகனுக்கு வைத்ததாக கூறப் படுகிறது.


கருப்பின மக்களின் விடிவெள்ளி என்றும்,,கருப்பினர்களின் காந்தி என்றும் போற்றப்படும் மார்ட்டின் லூதர் கிங்,,முன்னெடுத்த முதல் போராட்டம் ரோசா பார்க்ஸ் பிரச்சனை.(ஒரு முறை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியம் தலைமையில், பொதிகை தொலைக்காட்சி பட்டிமன்றத்தில் பேசிய போது,,அவர் மூலமாகவே,முதன் முதலாக ரோசா பார்க்ஸ் குறித்து அறிந்தேன்.)
1955 ம் ஆண்டு,டிசம்பர் 1 ம் தேதி,அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில்,,ரோசா பார்க்ஸ் என்ற கருப்பினப் பெண் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது,, ஒரு வெள்ளை யர் அவரை எழ சொன்னார்.ஆப்ரிக்கா,ரயிலில் காந்தி க்கு நடந்ததே,,அதே தான் இங்கும்....கருப்பின துவேசம் அதிகமிருந்த காலம் அது,,கருப்பர்கள் அடிமைகளாக வாழ்ந்த காலம் அது....ரோசா பார்க்ஸ் ,,இருக்கையிலிருந்து எழ மறுத்தார்.நான் பயணச்சீட்டு வாங்கி இருக்கிறேன் , நான் ஏன் என் இருக்கையை விட்டுத் தர வேண்டும் என கேட்டார்.ஒரு கருப்பின பெண் எதிர்த்து பேசியதை,,வெள்ளையர்களால் தாங்க முடியவில்லை. ரோசா பார்க் கைது செய்ய பட்டதோடு,,14 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

ரோசா பார்க்ஸ் கைது செய்யப் பட்டதை தொடர்ந்து,,அலபாமா மாகாணத்தில் உள்ள மாண்ட்காமெரி யில்,,கருப்பர்கள் பேருந்து புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகப் புகழ் பெற்ற அந்த போராட்டம் எத்தனை நாட்கள் நடந்தது தெரியுமா.... மிக சரியாக 381 நாட்கள்.எந்த பேருந்தில் ரோசா பார்க்ஸ் க்கு அநீதி இழைக்கப் பட்டதோ,,அந்த பேருந்தை 381 நாட்கள்,40,000 கருப்பர்கள் புறக்கணித்தார்கள்.அந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.அப்போது அவருக்கு வயது 26 மட்டுமே. அந்த போராட்டத்தின் விளைவாக,, 1956, நவம்பர் 13, ம் தேதி,, ரோசா பார்க்ஸ் செய்தது சரி தான் என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மிக சிறந்த பேச்சாளர்.லிங்கன் நினைவிடத்தில் நின்ற படி,,பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்,,i have a dream ( எனக்கு ஒரு கனவு இருக்கிறது) என்னும் தலைப்பில் இவர் பேசிய பேச்சு உலகப் பிரசித்தம்.அந்த பேச்சின் பல வரிகள்,,இந்த நினைவிடத்தில் பொறிக்கப் பட்டுள்ளன.புகைப் படத்தில்,, மரங்களின் அருகே,,பளிங்கு சுவரில்,,அந்த வாசகங்களைப்,, பார்க்கலாம்.

தன் பேச்சாலும்,,தொடர் போராட்டங்களாலும் கருப்பின மக்களின்,,துன்பங்கள் முழுமையாய் நீங்க பாடுபட்ட ,லூதர் கிங்,கிற்கு,,1964 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 35 தான். நோபல் பரிசை பெற்ற பின் அவர் பேசிய பேச்சு,,எல்லோராலும் பாராட்டப்பட்டது.
லூதர் கிங் காந்தியவாதி. காந்தியின் அகிம்சையையே தன் வழியாகக் கொண்டவர்.
கருப்பின மக்களுக்காக போராடியதற்காக,,பலமுறை கைது செய்யப்பட்டவர்,பிரம்பாலும்,,இரும்பாலும் ஆன தடிகளால்,,உடல் முழுக்க விழுப்புண் பெற்றார்.அத்தனையும்,, கருப்பின மக்களின் விடுதலைக்காக, தாங்கிக் கொண்டவர்.
1968, ஏப்ரல் 4 ம் தேதி,, டென்னசி என்ற இடத்தில்,, தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக போராடிய போது,,மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை,,ஜேம்ஸ் ஏர்ல் ரே என்பவன் சுட்டுக் கொன்றான்.(அதற்காக ஜேம்ஸ் ஏர்ல் ரே க்கு 99 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது)
இறப்பதற்கு முந்தைய நிமிடம் வரை,,கடைநிலை மக்களுக்காக குரல் கொடுத்தவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.கருப்பின மக்களின் விடுதலையில்,,லூதர் கிங்,,ரோசா பார்க்ஸ் இருவரின் பங்கும் அளப்பரியது.
அன்றைக்கு ரோசா பார்க்ஸ்,,என் உரிமையை விட்டுத் தர முடியாது என,,மன உறுதியுடன் எழ மறுத்ததால் தான்,,இன்று நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்று கருப்பின மக்கள்,, அவரை,,சிவில் உரிமைகளின் தாய் என போற்றினர்.
I have a dream என்னும் தலைப்பில்,, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பேசிய போது சொன்னார்" என் குழந்தைகள், தோல் நிறத்தால் அல்லாமல்,,குணங்களால் மதிக்கப் படக் கூடிய தேசத்தில் வாழ்வார்கள் என்று எனக்கு ஒரு கனவு இருக்கிறது."
அவர் கனவு பலித்து விட்டது. எந்த அமெரிக்கா,, ஒரு கருப்பருக்கு பேருந்து இருக்கையை கூட தர மறுத்ததோ, அதே அமெரிக்கா வின்,,அதிபர் நாற்காலியை இன்று ஒரு கருப்பர் தான் அலங்கரிக்கிறார்.மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பிறந்த அட்லாண்டா மாகாணத்திற்கு ,,நான் சென்ற போது,Helena அக்கா சொன்னார்,,"அமெரிக்கா ல யாரையாவது நீக்ரோ னு சொன்னா போச்சு,,ஜெயில் தான் " என.இதற்கு தானே,,லூதர் கிங் அத்தனை பாடு பட்டார்.
Sumathi Srri

No comments:

Post a Comment