Search This Blog

Saturday, October 3, 2015

உலக இறுதி நாட்களில் ஏற்படும் அடையாளங்கள் என்று நபி முஹம்மது (ஸல்) அவர்கள் குறிப்பிட்டவைகள்.


* அநீதி பெருகிவிடும்.
* பொய் உண்மையாகும்.
* தீர்ப்புகள் நியாயமானதாக இருக்காது.
* மனித உள்ளங்கள் மாசு படிந்திருக்கும்.
* இலேசன விஷயத்திற்கெல்லாம் கொலை செய்வார்கள்.
*
*
* வட்டியைச் சாப்பிடுவார்கள்.
* ஆண்கள் பட்டாடை அணிவார்கள்.
* உறவினர்களை துண்டித்து வாழ்வார்கள்.
* கட்டிடங்களை உயர உயரமாக கட்டுவார்கள்.
* உலக ஆதாயங்களுக்காக மார்க்கத்தை விற்பார்கள்.
*
*
* மழை பொழியாது.
* பூகம்பம் ஏற்படும்.
* சிகப்பு சூறாவளி காற்று வீசும்.
* வானத்திலிருந்து கல்மாரி பொழியும்.
* பாவமான செயல்கள் அதிகமாகி விடும்.
*
*
* பொய்யனை மெய்யனாக ஆக்குவார்கள்.
* மெய்யனைப் பொய்யனாக ஆக்குவார்கள்.
* அவதூறுகள் (வீண்பழிகள் சுமத்துவது) பரவலாகி விடும்.
* மோசடிக்காரர்களை மக்கள் நம்பிக்கையாளர்கள் என நினைப்பார்கள்.
* நம்பிக்கையாளர்களை மக்கள் மோசடிக்காரர்கள் என நினைப்பார்கள்.
*
*
* பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்படும்.
* குர்ஆன் பிரதிகள் அலங்கரிக்கப்படும்.
* மினராக்கள் உயர உயரமாக கட்டுவார்கள்.
* குர்ஆனை ஓதிக் கொண்டே பாவங்கள் செய்வார்கள்.
* தீயவர்களின் சப்தம் பள்ளி வாசல்களில் அதிகமாகி விடும்.
*
*
* திடீர் மரணம் அதிகமாகி விடும்.
* விவாகரத்து (தலாக்) அதிகமாகி விடும்.
* குழந்தைகள் அதிகம் பெற்றெடுப்பதை வெறுப்பார்கள்.
* தகுதி குறைந்தவர்கள், உயர் ரக வாழ்க்கை வாழ்வார்கள்.
* கண்ணியத்திற்குறியவர்கள் வசதி வாய்ப்பின்றி வாழ்வார்கள்.
*
*
* அக்கிரமம் செய்வதை பெருமையாகக் கருதுவார்கள்.
* நம்பிக்கைக்கு உரியவர்கள் கூட மோசடி செய்வார்கள்.
* தலைவர்களும், மந்திரிகளும் பொய்யர்களாக இருப்பார்கள்.
* கூட்டத்தில் இழிவுக்குறியவன் அவர்களுக்குத் தலைவராகி விடுவான்.
* செருப்பில்லாமல் நடப்பவர்கள், ஆடையின்றி இருப்பவர்கள் கூட தலைவர்களாக ஆகிவிடுவார்கள்.
*
*
* பாதுகாப்பு குறைந்து விடும்.
* காவலர்கள் அதிகமாக இருப்பார்கள்.
* மதுபானங்கள் அருந்துவது அதிகரிக்கும்.
* மக்கள் நீதத்தை லஞ்சம் கொடுத்து மாற்றுவார்கள்.
* பொய்யை ஒரு கலையாக சாமர்த்தியமாக நினைப்பார்கள்.
*
*
* இசைக் கருவிகள் அதிகமாகி விடும்.
* இசையைப் போன்று குர்ஆனை ஓதுவார்கள்.
* பாட்டுப் பாடும் பெண்கள், கண்ணியம் செய்யப்படுவார்கள்.
* மக்கள் மிருகங்களின் தோலினாலான ஆடையை அணிவார்கள்.
* எவ்விதம் உயர்ரக ஆடைகளை அணிந்தாலும், அவர்களின் உள்ளங்கள் செத்த பிணங்களை விட, மிக மோசமானதாக இருக்கும்.
*
*
* ஆண்கள் பெண்களைப் போன்று நடிப்பார்கள்.
* பெண்கள் ஆண்களைப் போன்று நடிப்பார்கள்.
* கணவன் மனைவிக்குக் கட்டுப்பட்டு நடப்பான்.
* கணவருடன் மனைவி வியாபாரத்தில் ஈடுபடுவாள்.
* அடிமைபெண் (தனக்கு கட்டளையிடும்) எஜமானியைப் பெற்றெடுப்பாள். (அதாவது பெண் மக்கள் தனது தாயை வேலைக்காரியைப் போன்று வழி நடத்துவார்கள்)
*
*
* தனது தாயை வெறுத்து விடுவான்.
* தனது நண்பனுக்கு கேடு செய்வான்.
* மகன் தந்தையை நோவினை செய்வான்.
* முஸ்லிம் பொய் சாட்சி கூறத் தயாராகி விடுவான்.
* அறிமுகம் உள்ளவர்களுக்கு மட்டும் ஸலாம் கூறுவார்கள்.
*
*
* தங்கம் பயன்பாட்டில் அதிகமாக இருக்கும்.
* வெள்ளி பயன் படுத்துதல் குறைந்து விடும்.
* விலங்கினங்களின் தோலைப் பயன்படுத்துவார்கள்.
* நடக்கும் பாதைகளில் மதுபானங்கள் அருந்துவார்கள்.
* பிற்காலத்தவர் முற்காலத்தவர்களைத் திட்டுவார்கள். சாபமிடுவார்கள்.
*
*
* பொறுமையாளர்கள் அநீதம் புரிவார்கள்.
* ஜகாத் கொடுப்பதை அபராதமாக நினைப்பார்கள்.
* தீனுக்காக அல்லாமல் உலக ஆதாயத்திற்காக கல்வி கற்பார்கள்.
* அல்லாஹ் அல்லாத உலக வஸ்துக்களின் மீது சத்தியம் செய்வார்கள்.
* தொழுகையை மரணிக்கச் செய்வார்கள். அதாவது தொழுகைக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், அதை முறைப்படி நிறைவேற்ற மாட்டார்கள்.
*
*
* குற்றங்களுக்குறிய ஷரீஅத் தண்டனைகள் நிறைவேற்றப் படாது.
* கனீமத் பொருட்களை தங்கள் சொந்தப் பொருள்களைப் போன்று பயன்படுத்துவார்கள்.
* மனிதர்களின் உருவங்களை உருமாற்றம் செய்யப்படும் மற்றும் பல அடையாளங்கள் நிகழும்.
* அமானிதப் பொருள்களை போரில் கிடைத்த (கனீமத்)பொருளைப் போன்று எடுத்துக்கொள்வார்கள்.
* அமானிதப் பொருட்களை வீணாக்கி விடுவார்கள். அதாவது அமானிதப் பொருள்களைக் கொடுத்து வைத்திருந்தால் அதில் மோசடி செய்வார்கள்.


இத்தகைய செயல்கள்(பாவங்கள்) ஏற்படும் போது,
இந்த உலகின் இறுதி நாளை எதிர் பாருங்கள்.
*
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக
ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
*
ஆதார நூல்: - துர்ருல் மன்சூர். பக்கம் :-56.

No comments:

Post a Comment