Search This Blog

Thursday, June 4, 2015

வெறும் வெற்றுப் 'பெண்ணாய்'!!

நாளை......
நாளை மறுநாள்...
யாராயிருக்கும்??
எவளாயிருக்கும்?
பள்ளியிலிருந்தோ....வேலையிலிருந்தோ....
பக்கத்து வீட்டிலிருந்தோ வருவதாய் சொல்லி
வராமலே போய்விடப் போவது.....
யாராயும் இருக்கலாம்.....!
யாரோ ஒருத்தனின்
பிள்ளையாய்....
யாரோ ஒருத்தனின்
தாயாய்....
யாரோ ஒருத்தனின்
சகோதரியாய்...
எப்படியானாலும் நிச்சயமாய்
பெண்ணாய்....!
என்னையிட்டு....
இந்த நெடிய பாதையை பெரிதும் கடந்து வந்த அன்னையரையிட்டு...
இன்னும் வாழும் ஆயிரமாயிரம் சகோதரிகளையிட்டு...
இன்னமும் ஜனனிக்காத என் மகளையிட்டு....
என் அச்சம் இன்னமும் அதிகரித்தே செல்கின்றது...
ஒவ்வொரு தனித்த பாதையையும்...
பாழடைந்த... இருண்ட இருப்பிடங்களையும்....
அடர்ந்த புதர்களையும்....
கடக்கும் அதே அச்சத்துடன்
ஒவ்வொரு ஆணையும்
கடந்து செல்கிறேன்..
இன்னும் கொஞ்சம் அதிகரித்த இடைவெளியில்
'அவனை'
இருத்தி விலகத்தொடங்குகின்றேன்
அவதாரங்கள் விலக்கி
வெறும் வெற்றுப்
'பெண்ணாய்'!!

No comments:

Post a Comment