Search This Blog

Tuesday, November 18, 2014

லீனா மணிமேகலையின் கவிதையொன்று


உன் நாவிடுக்கில்
ஒளிந்திருக்கும் முத்தத்தை
என் பற்கள் படாமல்
திருடும் ஒத்திகையில் இருக்கிறேன்.

மீசைமுடி ஒதுக்கும்போதே
இறுக்கிக் கொள்ளும் உன்
இமைகளுக்குள்
என் இமைகளைப் படர்த்துகிறேன்.

நம் உள்ளங்கைகளுக்குள்
அடங்குகிறது
உடல்கள்.

துள்ளி நிற்கும்
ரோமக்கால்களில்
காலத்தின் மணிகளைக்
கட்டுகிறோம்.

கூடலின் வாசத்தில்
கனமிழந்து
மிதக்கிறது அன்பு.


பிரபலமான நவீன கவிஞர்களில் ஒருவரான
தோழி.லீனா மணிமேகலை, பத்து குறும்படங்களை இயக்கியவர்.

நேரடியாக ஈழ அரசியலைப் பேசுவதால் தமிழ்நாட்டில் வெளியிட முடியாத ‘செங்கடல்’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கிய லீனா, இம் மாதம் அந்தப் படத்தை ஜெனிவாவில் திரையிட இருக்கிறார்.

No comments:

Post a Comment