Search This Blog

Wednesday, October 29, 2014

முஸ்லிம் ஹிந்து ஒற்றுமை



இன்று முஸ்லிம்கள் ஹிந்து மக்களுக்கு கோவில் கட்டுவதற்கும் அதற்க்கான மானியம் மற்றும் இடம் கொடுத்ததை பார்க்க இருகின்றோம்.
ஆற்காடு நவாப்புகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளை 16 நூற்றாண்டில் இருந்து 19 நூற்றாண்டு தொடக்கம் வரை ஆட்சி செய்தனர்.
1749-ம் ஆண்டு முகம்மது அலி வாலாஜா என்பவர் .
நவாப் அரசர்களில் மிகவும் முக்கியமான இவரது காலமே நவாப்களின் பொற்காலம் ஆகும்.
இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் விளங்கியது.
இவர் தனது நாட்டின் அனேக பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு இருந்த அனைத்து கோவில்கள்,
மசுதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நன்கொடைகளையும் அளித்தார்.
இவர் 1765-ல் மொகலாய பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.
மிகவும் பிரசித்தி பெற்ற
இன்றைய திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் நகரில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயம்
சென்னையில் மயிலாப்பூரில் உள்ள கபாலிசுவரர் கோவில் திருக்குளம் இருக்குமிடத்தை அவர்களே கொடுத்துள்ளார்கள்.
ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் விழாவில் ஆற்காடு நவாபுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் கோவிலுக்கு தெப்பக் குளம் கட்ட இடம் இல்லாமல் இருந்தது.
உடனே ஆற்காடு நவாபுதான் தங்களுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை கோவிலுக்கு கொடுத்து உதவினார்கள்.
ஆண்டுக்கு 3 நாள் மட்டும் முஹர்ரம் விழாவுக்காக முஸ்லிம்கள் இதனைப் பயன்படுத்துவார்கள். மற்ற நாட்களில் கோவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று வரை ஆற்காடு நவாப் குடும்பத்தினருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அடுத்து திருவல்லிக்கேணி திரு வெற்றீசுவரன் கோவில் கட்ட ஆற்காடு நவாப்தான் இடம் கொடுத்துள்ளார்.
கோவிலின் பராமரிப்புக்காக பல்வேறு மானியங்களும் கொடுத்துள்ளார்கள்.
முக்கியமான விஷயம் என்ன தெரியுமா ?
அந்த நன்கொடை இன்றுவரை தொடர்கிறது.
எவனாலும் பிரிக்க முடியாது
எங்களின் அண்ணன் தம்பி உறவை .
ஒரு ஆச்சர்யம் என்ன தெரியுமா ?
தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் முஸ்லிம் ஹிந்து ஒற்றுமையை வெளிகாட்டும் விதமாக
அன்றைய காலத்தில் முஸ்லிம் வியாபாரிகளின்
சிற்பம் வடிவமைத்து உள்ளார்கள் .
அது இன்னமும்கூட இருகின்றது
ஹிந்து கோவிலில் முஸ்லிம்களின் சிலை

No comments:

Post a Comment